Monthly Archives: ஜூன் 2005

Cigar Smoking Dr Anbumani – Evils 

Cigar Smoking Dr Anbumani – Evils Posted by Hello

Anneyan shankar on location 

Anneyan shankar on location Posted by Hello

Anniyan shanker with Kunnakudi Vaidhyanaathan 

Anniyan shanker with Kunnakudi Vaidhyanaathan Posted by Hello

Anniyan Censored

Anniyan on Location - Thiagaraja Festivalsify.com: வரும் 17ம் தேதி வெளியாகவுள்ள அந்நியன் படத்துக்குத் தமிழக சென்ஸார் யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. இதுவரை வந்த ஷங்கர் படங்களிலேயே இந்தப் படத்துக்குத்தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்ஸார் சர்டிபிகேட் கொடுக்கப் பட்டிருக்கிறது. “படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள்,”நல்ல மெஸேஜ் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்” என்று ஷங்கரிடம் சொன்னார்களாம். “இதையே பெரிய கிஃப்டாக நினைத்தேன்” என்கிறார் ஷங்கர்.

Anniyan Shankar with Kunnakudi Vaidhyanathanthatstamil: படம் ரூ. 35 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம். போட்ட காசை விட ரூ. 10 கோடியை எடுத்துவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்துக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த வருடம் பெரும் பொருட்செலவில் தயாரான தேவதாஸ் படத்திற்கு ரூ.35 கோடி செலவானதாம். இதற்கு அடுத்து அதிக பொருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 525 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது.

(சந்திரமுகி ரூ. 30 கோடி அளவுக்கு பிசினஸ் ஆனது. 600 பிரிண்ட் போடப்பட்டது.)

குங்குமம் கேள்விகள்

ராஜ்குமார், காரப்பாடி

பலவிதமாக யோசித்து… ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது… எது சார் பெஸ்ட் வழி?

க தியாகராசன், குடந்தை

நாவலர் ‘உதிர்ந்த ரோமம்’; கலைஞர் ‘சிறுபிள்ளை’; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் ‘காலிடப்பா’; சிதம்பரம் ‘வக்கற்றவர்’; ஆனால் இப்படிச் சொல்பவர்?

அ கி வ அசோக்குமார் – கோகிலா, நரிப்பாளையம்

பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி…?

எஸ் அபுதுல்லா அஹமது, நாகூர்

தேசபக்தர்கள் – தீவிரவாதிகள் : ஒப்பிடவும்

சிலந்தியின் பதில்கள் சிலாக்கியமில்லை. தங்கள் பதில்களை வரவேற்கிறேன் 🙂

காங்கிரஸ்

kalki:: மதச்சார்பற்ற நடுநிலை கூட்டணியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வாக்காளர்களுக்கு முன்னிலைப்படுத்தியது; தேர்தல் பிரசாரத்தில் திட்டமிட்டுச் சீராக ஈடுபட்டது; அகௌரவமான விமர்சனங்களுக்கு மோசமான பதிலடிகள் தராமல், கௌரவமாக அவற்றை எதிர்கொண்டது, என்று சோனியா காந்தி தமது நேரத்தையும், சக்தியையும், சிந்தனையையும் வஞ்சனையின்றி காங்கிரஸுக்காகச் செலவிட்டார். தேர்தலில் ஜெயித்த பின்னர், பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, எதிர்கட்சிகளின் வாயை அடைத்தார்!

மக்கள் தமது கட்சிக்கு வாக்களித்தாலும், அந்நிய தேசத்தைச் சேர்ந்த தம்மைப் பிரதமராக ஏற்கத் தயங்குவார்கள் என்ற நல்லறிவு சோனியாவுக்கு இருந்திருக்கலாம். அல்லது எதிர்கட்சிகள் தமது அன்னியத் தன்மையைச் சுட்டிக்காட்ட வழியின்றிச் செய்து விட வேண்டும் என்கிற அரசியல் நோக்கு இருந்திருக்கலாம்…

இந்நிலையில் காங்கிரஸ் கீதத்தில் சில அபஸ்வரங்கள் நாராசமாக ஒலிக்கின்றன:

முதலாவது: செயற்குழு உறுப்பினர்கள், நியமன முறையில் சோனியாவால் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பது.

சோனியா காந்தியே காங்கிரஸின் நியமனத் தலைவர்தான். வேறு போட்டி நியமனங்களே இல்லாமல் தலைவியாகியிருக்கிறார். குடும்பப் பின்னணி – அந்தஸ்து காரணமாகத் தலைமையை எய்தியவர், அப்பொறுப்புக்கான தமது தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உண்மையே. அவ்வாறு வளர்த்துக் கொண்ட பிறகாவது கட்சி செயற்/பொது குழுக்கள், இதர செயல் பொறுப்புகளுக்கு முறையான தேர்தல் நடத்த அவர் தீவிரமாக முனைய வேண்டும். ஆனால் உட்கட்சி ஜனநாயகத்தை உடைப்பிலே போட்டுவிட்டு ‘நியமனத்’ தலைவர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சோனியா.

இரண்டாவது அபஸ்வரம்: “போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் பேரிலான குற்றச்சாட்டுக்கு சாட்சியங்கள் பலமாக இல்லை” என்று நீதிமன்றம் சி.பி.ஐயைக் கண்டனம் செய்து சகோதரர்களை விடுவிக்க, அதை காங்கிரஸ் தனது வெற்றியாகக் கருதி கூப்பாடு போடுவது; குற்றம் சாட்டிய இதர கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுவது…! கூட்டணி ஆதரவுக் கட்சியான சி.பி.ஐ.எம், வழக்கு ஜோடனையின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி அரசு தரப்பை மேல்முறையீடு செய்யக் கோரியுள்ளது.

மூன்றாவது அபஸ்வரம்: ஜமயத் – இ – உலெய்மா – இ – ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் சோனியா காந்தி ஆற்றிய உரை. “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடுகள் இந்தியாவின் இமேஜையே கெடுத்துவிட்டன” என்று பேசியவர், பா.ஜ.க கூட்டணியைப் போலன்றி தமது கூட்டணி இஸ்லாமியர்களுக்காகப் பாடுபடுகிறது என்று பேசியிருக்கிறார். “‘பொடா’ நீக்கப்பட்டதே இஸ்லாமியர்களுக்கு அதனால் விளைந்து வந்த அநீதியைக் கருதிதான்” என்றும் கூறியிருக்கிறார்! போதும் போதாததற்கு, “நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நாங்கள் செயல்படாமலிருக்கலாம்… ஆனால் இன்னும் முயற்சி செய்வோம்” என்று வேறு வாக்களித்திருக்கிறார்! இவை மிக அபாயகரமான வாக்கியங்கள்.

மதச்சார்பற்ற கூட்டணி என்கிற பலத்தில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி கண்டிருக்கிறது. ஜமயத் மாநாட்டில் அரசியல் ஆதாயம் தேடுவதும், பா.ஜ.கவைச் சாடுவதும் எவ்வாறு மதச் சார்பின்மையாகும்?

பொடாவை நீக்கியது சிறுபான்மையினரின் நலன் கருதித்தான். எனில், தற்போது அமலில் உள்ள பாதுகாப்புச் சட்டம் யார் நலன் கருதி உருவாக்கப்பட்டிருக்கிறது?

ஜாக்ஸன் துரை

போகிற போக்கில் சில எண்ணங்கள்:
1. அன்று ஒஜே சிம்ஸன்; இன்று ஜாக்ஸன்.
2. பணம், புகழ் எல்லாம் வந்தாலும், வாழ்க்கையில் ‘தேடல்’ இருந்து கொண்டேதான் இருக்கிறது.
3. புகழ்பெற்றவர்களை — சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றமற்றவர் என்று நிரூபிப்பது இயலாத காரியம்.
4. அமெரிக்காவில் நக்கீரனும் நெற்றிக்கண்ணும் மிஸ்ஸிங்.
5. எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்க, ஊடகங்களும் (நானும்தான் :-), இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் தந்து எழுதுகிறார்கள்.
6. இதன் பிறகும் குழந்தைகள் ‘நெவர்லாண்’டுக்கு அனுப்பப் படலாம்.
7. உண்மை என்ன என்பதை வாக்குமூலம் கொடுத்தாலும், பணம் குற்றஞ்சாட்டியவரைக் கூட சரிய வைக்கும்.
8. ஊருக்கு பெரிய மனிதன், கையைப் பிடித்து இழுத்தால், அனைவரும் வேடிக்கை பார்ப்பார்கள்; கண்டிக்க மாட்டார்கள்.

Micahel Jackson is NOT guilty 

Micahel Jackson is NOT guilty Posted by Hello

The New Yorker – Work Borrow Cartoon 

The New Yorker – Work Borrow Cartoon Posted by Hello

துவக்கு

நெடுமாறன்: தென்றல் படத்தின் மூலம் தமிழ்க் குடமுழுக்கு விழாவைக் காட்டிய ஒரே காரணத்திற்காக இயக்குனர் தங்கர்பச்சான் சொல்ல முடியாத அளவுக்கு அவமானங்களுக்கும் புறக்கணிபிற்கும் ஆளாகியுள்ளார். இளம் இயக்குனர் புகழேந்தி ஈழத்தமிழர் அகதிகள் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்த ‘காற்றுகென்ன வேலி’ என்னும் படத்தை திரையிடுவதற்கே அவர் உச்சநீதி மன்றம் வரை சென்று போராட வேண்டியிருந்தது. தமிழன் என்ற உணர்வோடு உள்ள இயக்குனர்கள் வ.செ.குகநாதன், சீமான், வேலுபிரபாகரன். வெ.சேகர் போன்றவர்களை ஒதுக்கித்தள்ளும் முயற்சி நடைபெறுகிறது.


தளிர்ப்பு – காசி. ஆனந்தன்
இலையுதிர்க் காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல் மேய்ந்த மாடுகள் மரத்தை
இரக்கத்தோடு நோக்கின.
‘உன் இலைகள்
விழுந்துக்கொண்டிருக்கின்றன.
உன்னைப் பார்த்தால்
அழவேண்டும் போல்
இருக்கிறது..’ என்று ஒரு மாடு
தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது-
‘நான் அதைப்பற்றிக்
கவலைப்படவில்லை. புதிய
தளிர்களுக்காக அவை
விழத்தான் வேண்டும்.’
நிமிர்ந்தே நின்றது மரம்.
அது சொன்னது.
‘விழுவதெற்கெல்லாம்
அழுவதற்கில்லை.’


தெளிவு – த. பழமலய்
திருவாட்டியோ
‘குதிரை, குதிரைதான்
கழுதை, கழுதைதான்’ என்பவர்.
நன் மக்களுக்கோ நான்
ஊறிய இடம்
உப்புக்கிணறாம்.
முன்னறி தெய்வங்களின் ஆறுதல்
‘பொசுப்பு இவ்வளவுதான்.’
சுற்றப்பட்டோர் ஏமாற்றம்:
‘கரைசேர்ந்துட்டான்!’
மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
சொல்லவும் செய்கிறார்கள்.
ஒன்றைப் பாருங்களேன்:
‘நானா இருந்தா இப்படி
நடந்து போயிக்கிட்டு இருக்க மாட்டேன்.
கார் வச்சிக்கலாம் நீங்க!’
‘எல்லாம் இருக்கட்டும்
ஒங்கள பத்தி
நீங்க என்ன நெனக்கிறீங்க?’
அதான் கொளப்புறாங்களே!
தெளியவா-?
விடமாட்டார்கள்!

நன்றி: yahoo groups | thuvakku ilakiya amaippu