ஞாபகம் வருதே


தினம் ஒரு திரைப்பாடல் :: thaai sollum uRavai from kanaa kaNdEn

தாய் சொல்லும் உறவை வைத்தே
உலகம் சொந்தம்
தாயுள்ள வரையில்தானே
கிராமம் சொந்தம்

பதினேழு வயசு வரைக்கும்
நீ வாழும் வாழ்க்கைதானே
பாலூத்தும் காலம் வரைக்கும்
கூட வரும்

கடலோர உப்பங்கழியும்
காதோடும் பேசும் அலையும்
ஐநூறு மைல் போனாலும்
தேடி வரும்

கிராமம் தன் மடியில் கட்டி
வளர்த்தது உன்னை
கிராமத்த மடியில கட்டி
போவது என்ன?

சாதி தாண்டியே நட்பும் உறவும்
மலர்ந்தது அங்கே
சமையாத பெண்கள் பார்த்து
மயங்கியது அங்கே

உப்பு மேட்டிலே ஆடி முடித்து
சாய்ந்ததும் அங்கே
ஆகாயம் இழுத்துப் போர்த்தி
தூங்கியது அங்கே

கையோடு அள்ளிய தண்ணி
விரலோடு கசிவது போல
கண்ணோடு நினைவுகள் எல்லாம்
கசிகிறதே

நெல்லிக்காய் அடியில் உள்ள
தித்திப்பாக
வறுமையின் கீழ் லட்சியம் ஒண்ணு
வந்தது அங்கே

தூக்குவாளி தலையில் மாட்டி
கிரீடம் என்றாய்

சொந்த செலவில் சூரியன் வாங்க
ஆசை கொண்டாய்

சொந்த உறவுகள் இலைகளைப் போலே
உதிர்ந்திடக் கண்டாய்
வந்த உறவுகள் வளர்பிறை ஆக
வளர்ந்திடக் கண்டாய்

மனங்கொண்ட கனவுகள் எல்லாம்
மண்பாதைச் சில்லுகளாக
மறுவாழ்வின் வெற்றியைத் தேடி ஓடுகிறாய்

One response to “ஞாபகம் வருதே

  1. hi ..thanks for linking my previous post on TN Engg.colleges.

    Due to turn of events, I posted another one… Pl.hv a look at

    http://dreamstores.blogspot.com/2005/05/oh-be-is-it-part-ii.html

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.