Monthly Archives: ஏப்ரல் 2005

Shaanthi Re-opening for Chandhramukhi – Rajni & La…

Shaanthi Re-opening for Chandhramukhi – Rajni & Latha Rajinikaanth with P Vaasu, Jothikaa Posted by Hello

Sneha thru Vikatan 

Sneha thru Vikatan Posted by Hello

Rajni in Chandramukhi 

Rajni in Chandramukhi Posted by Hello

Ship’s Golf 

Ship’s Golf Posted by Hello

நக்கீரன்

nakkheeranbiweekly.com: சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடம் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்வி நிறுவனமும் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வாங்கக்கூடாது என தமிழக அரசின் அரசாணை எண் 31/2005 தெரிவிக்கிறது. அனால், ஆந்த உத்தரவை மீறி தனியார் பள்ளிகள், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குழந்தைகளிடம் பணம் கட்டச் சொல்லி நெருக்கடி தருகின்றன.


இனிய உதயம்: சிவந்த நிலம் :: நிமிர்ந்த வயல்கள் — கிஷன் சந்தர் (தமிழில்: சுரா)

காலச்சுவடு ஏப். 05

Sify.com ::

* கம்யூனிசமும் மலையாளிகளும் :: சக்கரியா
அதிகார நாற்காலிகளுடன் பழகியதோடு கம்யூனிசத்தின் இலட்சியத் தூய்மை காணாமற் போயிற்று. அதை உருவாக்க உதவிய முற்போக்குக் கேரளத்திலேயே அது ஒரு சனாதனப் பிரிவாக மாறியது. கிராமத் தொழிலாளிகளிடமிருந்தும் ஏழை விவசாயிகளிடமிருந்தும் கம்யூனிசத்தின் அக்கறை மாறி, சம்பளக்காரர்களான வெள்ளைக் காலர் ஊழியர்களிடம் மையங்கொண்டது.

* விவாதம்: வகாபியிசமும் சூஃபியிசமும்
சூபிகள் என்று பின்னர் அறியப்பட்ட முஸ்லிம் ஞானவான்கள் இந்தியாவில் இஸ்லாமைப் போதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் வகாபிகள் என்று அறியப்பட்டவர்கள் ஏகத்துவத்தை அதிகமாக வலியுறுத்துவதாகக் கூறிக்கொண்டு சில பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானார்கள்.

* உரைப் பதிவு: கவிதை என்னும் விந்தை :: சுந்தர ராமசாமி
அனுபவம் எப்படிப் படைப்பாக மாறுகிறது? ஏன் அது சில நேரங்களில் ஆற்றல் பெறுகிறது? பல நேரங்களில் ஏன் ஆற்றல் பெறாமல்போகிறது? சில கவிதைகளைப் படிக்கத் தொடங்கியதுமே அது விருப்பமின்மையையும் அலுப்பையும் ஏற்படுத்துகிறது. வேறு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் அவை அலுப்பை ஏற்படுத்துவதில்லை.

* தலையங்கம்: ஜனநாயகத்தைத் துறக்காதீர்கள்
அரசியல் சந்தர்ப்பவாதத்தை ஊக்குவிப்பது, அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்வது என்பவை உடனடியாகச் சில லாபங்களைப் பெற்றுத் தரலாம். ஆனால் அது உருவாக்கும் அரசியல் பண்பாடு ஜனநாயகத்தின் அடிப்படையை அரித்துவிடும். மதவாதத்திற்கான மாற்று, ஜனநாயகமே தவிர அதிகாரத்துவம் அல்ல. இதை இடதுசாரிகளும் காங்கிரசின் ஏனைய கூட்டாளிகளும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

* அகாடமிகளின் விருதுகள் :: அ ராமசாமி
பிராமண எதிர்ப்பு, நவீனத்துவ எதிர்ப்பு என்னும் இரண்டும் கைவரப்பெற்ற ஒரு குழு இப்பொழுது அதிகாரத்திலிருக்கிறது. எனவே அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் குஷி அடைவது நடந்துகொண்டுதான் இருக்கும்.

* தூரிகை மொழி: வண்ணங்களில் ஒளியும் நிலப்பரப்புகள்
அரூப ஓவியங்களில் பொதுவாக நமக்குக் கிடைக்கக் கூடிய அனுபவத்தை ரமேஷின் ஓவியங்கள் தருவதில்லை. அது வேறு விதமான அனுபவம். நமக்குப் பரிச்சயமான ஒரு காட்சியை, அல்லது பல காட்சிகளை, மனத்தில் தோன்ற வைத்து, இந்த ஓவியங்கள் காட்டுவது அவற்றைத்தானோ என்று நம்மை நினைக்கச் செய்யும் தந்திரத்தை ரமேஷ் கையாள்கிறார்.

* பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்
சில வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழலின் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.

* அறிவுஜீவிகளின் ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது?
பெரியார் மீதான மறுவாசிப்பைத் தொடர்ந்து ‘மறுப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளும் கடிதங்களும் இந்து ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்துவதாகவே இருக்கின்றன.

* வெற்றுத் தலைகளின் பெருக்கம் :: களந்தை பீர் முகம்மது
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் வகுத்த நெறிமுறைகளின்படியும் குர்ஆன் வலியுறுத்தும் சமூக ஒழுங்குகளின்படியும் ‘ஒரு முஸ்லிம் நடிகை’ என்கிற சமூக அந்தஸ்து ஒன்று இருக்கவே இருக்காது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான செயல்களைப் புரிந்தபடியே, தான் வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பை ஒருவர் கோரிப் பெறவும் வழியில்லை.

* அதிநுண் நுட்பத்தின் சின்னஞ்சிறு உலகம் :: வெங்கட்ரமணன்
நுண் தொழில்நுட்பத்தில் பொருள்கள் அடிப்படை அலகுகளான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளைக் கொண்டு கட்டியெழுப்பப்படுகின்றன. இந்தச் சின்னஞ்சிறு உலகம் வித்தியாசமானது, தீராத அலைச்சலைக் கொண்டது.

* பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும்
பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும் ஒன்றுக்கொன்று எதிரானதா? அவற்றின் எல்லைகள் என்ன? இரண்டும் சந்தித்துக்கொள்கிற அல்லது மோதிக்கொள்கிற இடம் எது?

* கோணங்கள்: எது அவமானம்? :: கண்ணன்
நரேந்திர மோடி போன்ற ஓர் அரசியல்வாதி தொடர்ந்து பதவியில் இருப்பது நமக்கு அவமானம். இந்த அவமானத்தைப் பல ஆண்டுகளாக சகித்துக்கொண்டிருக்கும் நமது அரசு அமைப்புக்கு அமெரிக்காவின் நடவடிக்கை அவமானமாகத் தெரிவது நகைப்புக்குரியது.

* பத்துக் கவிஞர்களின் பன்னிரண்டு கவிதைகள்

* கலைச்செல்வன்: இன்பமெனச் சில கதைகள், துன்பமெனச் சில கதைகள் :: கண்ணன்
பாரீஸ் ரயில் நிலைய முகப்பில் சந்திப்பதற்கு முன் நான் அவர் குரலைக் கேட்டதில்லை; அவர் கையெழுத்தைக் கண்டதில்லை; முகத்தையும் பார்த்ததில்லை. சில குழப்பங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டோம். நேர்த்தியான உடலமைப்பும் முகவெட்டும் கொண்டவர். நட்புணர்வு மிளிரும் முகம். சந்தித்த சில நிமிடங்களிலேயே மனத்தில் குதூகலம் குமிழியிடத் தொடங்கியது.

* சிறுகதை: நதியின் புன்னகை :: ஜே பி சாணக்யா
மூத்தவளுக்கும் இளையவளுக்கும் ஒரு வயது வித்தியாசமிருந்தது. இளையவள் சென்ற மாதம் பூப்பெய்து இத்தோடு நாற்பது நாள்கள் முடிகின்றன. அவர்களிருவருக்கும் கால்சட்டை போட்டுத் திரியும் அவன்தான் சினேகிதன். மூத்தவளுக்குத்தான் அவனை மிகவும் பிடிக்கும். அவனும் அல்லும் பகலும் அவளோடுதான் இருந்தான்.

* தலையங்கம்: ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு
வெகுஜன இதழ்களின் வாசகர்கள் பலரைத் தீவிர எழுத்தின் பக்கம் திருப்பியதில் இவருக்குக் கணிசமான பங்கு உள்ளது. பலவீனமான அப்பிராணி என்பதாகத் தமிழ்ப் பொதுப் புத்தியில் உறைந்துபோயிருந்த எழுத்தாளன் குறித்த படிமத்தைக் கலைத்து அவனுக்கென்று ஒரு கெüரவத்தை ஏற்படுத்தியதிலும் ஜெயகாந்தனின் பங்கு அளப்பரியது.

* அசோகமித்திரன் – 50: ஒர் உரை, இரு பதிவுகள்
கடந்த பிப்ரவரி 12 அன்று சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை அரங்கில் அசோகமித்திரன் – 50 என்னும் நிகழ்வு நடைபெற்றது. கிழக்கு பதிப்பகமும் கடவு இலக்கிய அமைப்பும் நடத்திய அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுந்தர ராமசாமியின் உரையை இரு வேறு இதழ்கள் பதிவுசெய்த விதம் கவனத்திற்குரியது.

* எதிர்வினை: தலித் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை
எங்கள் கூட்டறிக்கை மூன்று இதழ்களில்தான் வெளிவந்திருந்தது. ஆனால் கூட்டறிக்கையை வெளியிடாத ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட இதழ்கள் அதற்கான மறுப்பறிக்கைகளை மட்டும் வெளியிட்டிருந்தன. இதுவே பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதியினர் பெற்றிருக்கும் மீடியா அதிகாரத்தைக் காட்டுகிறது.

* மதிப்புரை: மாலன் சிறுகதைகள்
இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டவை. இதன் தரம் குறித்த நிச்சயமின்மையே இத்தொகுப்பின் இருப்பிற்கான நியாயம் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது.

* இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட்: சில பழைய நினைவுகள் :: பி ஏ கிருஷ்ணன்
1978ஆம் ஆண்டு. அணியில் பிரசன்னா, சந்திரசேகர், கவாஸ்கர், அமர்நாத் சகோதரர்கள், விஸ்வநாத், வெங்சர்க்கார், காவ்ரி, செüஹான், கிர்மாணி ஆகியோர் இருந்தனர். கபில் தேவ் என்று அதிகம் கேள்விப்படாத ஒரு இளைஞனும் இருந்தான். புறப்படுவதற்கு முன்பே இது ஒரு நல்லெண்ணப் போட்டி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

* மதிப்புரை: ஏ.கே. செட்டியாரின் ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ :: இமையம்
நாமறியாத, நம்ப முடியாத பல அரிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. அவை நம் வரலாற்று அறிவை மறுமதிப்பீடு செய்யக் கோருகின்றன.

* அசோகமித்திரன் சிறுகதைகளினூடே ஒரு பயணம் :: அரவிந்தன்
அசோகமித்திரனின் படைப்புகளில் அங்குமிங்குமாகச் சுமார் 100 பக்கங்களையேனும் படிக்கும் ஒரு வாசகருக்கு அவரது படைப்புலகின் சில முக்கியமான தடங்களை இனம்காண முடியும். தமிழின் முக்கியமான கலைஞர் ஒருவரது படைப்புக் களத்தில் தான் நடமாடுவதையும் இதன் மூலம் உணர்ந்துகொள்ள முடியும்.

* இயற்கை வேளாண்மை குறித்த புரிதலை நோக்கி
எஸ்ஆர்ஐ முறை 19 நாடுகளில், பல்லாயிரக்கணக்கான நெல் விவசாயிகளுக்குப் பரவியிருக்கிறது. பல தேசிய, சர்வதேச மாநாடுகளில் வெற்றிக் கதைகளின் பரிமாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

உயிர்மை – ஏப். 2005

Sify Tamil

* ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
தமிழ் இலக்கியத்திற்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் கூச்சத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதாகவே இருந்து வந்திருக்கின்றன.

* விவாதத்தைத் தொடரலாம்
தொழில் அக்கறையுடனும், கொஞ்சம் சமூகப் பொறுப்புடனும் எடுக்கப்பட்ட சினிமாக்கள் பலவற்றையும் பார்த்து விடுவதும், பேசிக்கொள்வதும் தமிழ் சினிமாவின் பார்வையாளர் உளவியலாக இருக்கிறது. அந்தப் பொது உளவியலில் எந்தவித மாற்றமுமின்றிக் ‘காதல்’ படமும் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதான கூடுதல் அக்கறை இப்படி விவாதிக்கப்படுவதுதான்; காதல் பார்க்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை

* அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு
உயிர்மை இதழில் அசோகமித்திரனுக்கு நடந்த பாரட்டுக்கூட்டம் பற்றிய செய்தியைப் படித்தேன். தமிழிலக்கியத்தின் பெரும்படைப்பாளியாகக் கருதப்படும் ஒருவருக்கு அவரது முதிர்ந்த வயதில், அவரது வாழ்நாளிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட அப்பாராட்டுக் கூட்டத்தில் சுந்தரராமசாமி ஆற்றிய உரையில் இருந்த எள்ளல் தொனி குறித்துப் பலரும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

* தம்பி
பெயர் எம். சரவணகுமார். எம். ஏ., ஆங்கில இலக்கியம்; ஒரு தனியார் கல்லூரியில் வேலை; கரிய திடமான உடல்; கன்னங்கரிய நறுக்கப்பட்ட மீசை. நான் மேஜை மீது முன்னால் சாய்ந்து அவனை உற்றுப் பார்த்தேன். அப்படிப் பார்க்கும்போது நோயாளிக்கு அது ஒரு ஆய்வுப்பார்வை என்று படக்கூடாது.

* எரியும் வீடு
அது ஒரு தேவடியாகுடி என்று துளிகூட சந்தேகம் வராது. பார்த்தால், கோயில் என்று வர்ணித்துவிட முடியாது என்றாலும், அதை ஒரு விடுதி என்றும் கருதிவிட முடியாது. ஷாம்தான் உறுதியாக, என்னை அங்கே அனுப்பி வைத்தார். ‘உனக்கு ஒரு பிரச்சினையும் வராது.

* பெண்களும் அறிவியலும்
பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களைக் கூறமுடியுமா? என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி. ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ், சி. வி. ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் அறிவியலில் பெண்கள் இல்லையா? இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா?

* கலைநயமிக்க மதுக்குவளைகள்
16 ஆம் நூற்றாண்டின்
இறுதி வருடங்களில் ஓர்நாள்
அழகிய மரமஞ்சங்கள் செய்யும் தச்சன் ஒருவனை
கிழக்கிலிருந்து பாயும்
ஒரு நதிக்கரையோர சிறுநகரத்தில்

* கவிதை:மழை உடல் கொண்டவன்
வெயில் ருசித்தவாறு ஐஸ்கிரீம் கடிக்கும்
மழை உடல் கொண்டவன் மீது
சொட்டுச் சொட்டாக உதிர்கிறது
முன்பு பெய்த மழை.

* கடிதங்கள்
யதார்த்தத் தளத்திலிருந்து பாய்ந்து அதிபுனைவைத்தொட்டு மீளும் சிறுகதைகளில் ஒன்றாக ஜெயமோகனின் ‘அறைகள்’ சிறுகதையைக் கூறலாம்

* திரைப்படம் : ப்ளாக்
பாலிவுட் மெய்யாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட அதன் தயாரிப்புகள் மசாலா என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டு பரிகாசத்திற்குள்ளாகின.

* காட்சிகளில் மால்கம் எக்ஸ்
ஆப்பிரிக்க அமெரிக்கத் தலைவரான மால்கம் எக்ஸ் பற்றிச் சற்று அறிந்திருந்தாலும், ரவிக்குமார் அவரைத் தமிழில் வழங்கியபோது கூடுதலாக அறிய முடிந்தது.

* பொன்னகரம்
சேலம் நகரத்தில் ‘தாதுபாய் குட்டை’ அல்லது ‘கிச்சிப் பாளையம்’ என்னும் ஸ்தலநாமம் கொண்ட இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது நள்ளிரவு தாண்டியிருந்தது. அர்த்த ஜாமத்தில் தங்குவதற்கான இடம்தேடி அலைவதில்லை என்ற முன்தீர்மானத்தின்படி, அங்கிருக்கும் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் அடைக்கலம் புகுந்திருந்தேன்.

* லோர்கா எனும் சிற்பி
‘இக்கேனஷியா சாஞ்சஸ் மெஜஸ்’ என்ற வீரன் 1934ஆம் ஆண்டு, காளைச் சண்டையின் இறுதியில் காளையால் குத்தி வீசி எறியப்பட்டு ரத்தக் காயத்துடன் மைதானத்திலே இறந்துபோய்விடுகிறான். அவனது நண்பனும் கவிஞனுமான பிடெரிகோ கார்சியா லோர்க்காவிற்கு விற்குத் தகவல் சொல்கிறார்கள். லோர்கா அதை நம்ப முடியாமல் எத்தனை மணிக்கு நடந்தது என்று கேட்கிறான்

* கடவுளைக் கொல்பவர்கள்
உலகச் சிந்தனை மரபுகள் அனைத்தையும் இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்க முடியுமென்றால் அவை இறைநம்பிக்கை, இறைநம்பிக்கை அற்றவை என்ற பகுதிகளாகப் பிளவுபடும். இறை நம்பிக்கை என்பது எவ்வளவு தொன்மையானதோ அதே அளவுக்கு இறைமறுப்பும் தொன்மையானதே.

* கருப்புக் கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்
‘சிகப்பழகு’ என்னும் புதிய தமிழ்ச்சொல்லொன்று ஒன்று தமிழகத்தில் உலவி வருகின்றது இன்று. வெள்ளைத் தோலுக்கு இப்படியொரு அபத்தமான தமிழ்ப்படுத்தல். சருமத்தை வெளுக்க வைப்பதாகக் கூறப்படும் தைலங்களும், களிம்புகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன

* தேவதச்சன் கவிதைகளில் புனைவும் வனப்பும்
புதுக்கவிதையை இன்னமும் புதுக் கவிதை என்று சொல்லத்தான் வேண்டுமா? நவீன கவிதை என்று சொன்னால் என்ன? இப்படிச் சிலர் கேட்கின்றனர். 1978இல் ‘ழ’ கவிதை ஏடு தொடங்கியபோது நானும் ஆத்மநாமும் இதைப் பற்றிப் பேசினோம். கவிதை என்று சொன்னாலே போதும் என்றே இருவரும் கருதினோம்.

* தேசிய நியாயங்கள் : ‘மற்றவரை வெளியேற்றுவோம்’
சென்ற மாதம், நான் குடந்தையிலிருந்தபோது ஒரு நூல் வெளியீட்டு விழா. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவல் வெளியீட்டைக் கிட்டத்தட்ட ஒரு கட்சி மாநாடு போல நடத்தினார்கள் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியினர்

* ரிச்சர்ட் டி சொய்சா: குதறி எறியப்பட்ட ஆளுமையின் புன்னகை
திடீரென வீட்டு வாசலில் கிறீச்சிட்டு நிற்கும் ஜீப் வண்டி அல்லது ஒரு வாகனம்; அதிலிருந்து வீட்டிற்குள் குதிக்கும் சீருடை அணிந்த, அணியாத அரசினதோ, ஆயுதக் குழுக்களினதோ அடியாட்கள்; அச்சம், இழுத்துச் செல்லப்படுதல், வீட்டிலிருப்பவர்களின் கதறல் இவையெல்லாம் இலங்கையின் யுத்தப் பிரதேசத் தமிழ்ப் பேசும் மனமொன்றிற்குப் பரிச்சயமான ஒரு நிகழ்வு

கணினி புரட்சி

nakeeran: விழாவில் பேசிய நக்கீரன் கோபால்:

“தமிழுக்கு ஒரு புதிய கணினித் தகுதி கிடைத்திருக்கிறது. தமிழை உயர்த்துவதற்காக தாத்தா எட்டடி பாய்ந்தால்… பேரனான நான் பதினாறடி பாய்வேன் என்பதை நிரூபித்திருக்கிறார் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன்…” என்று குறிப்பிட்டார்.

ஹிந்து என்.ராம்… “கலைஞர் தன் தொடக்க காலத்திலிருந்து நடத்திவந்த தமிழ் போராட்டத்துக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மகத்தான வெற்றி இது” என்றார்.

துக்ளக் சோ இவ்விழாவில் மைக் பிடித்தபோது…

“கம்ப்யூட்டரில் தமிழுக்கு புதிய தகுதி கடைத்திருக்கிறது. இங்கே இன்னொரு தமிழ் கம்ப்யூட்டரும் (கலைஞரைப் பார்த்து) உண்டு. அரசியலில் என்று, என்னென்ன நடந்தது. எந்தெந்த பத்திரிகைகளில் என்னென்ன செய்திகள் வந்தன என்பது அந்த கம்ப்யூட்டருக்கு அத்துப்படி. எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இந்த தமிழ் கம்ப்யூட்டரையும் அனலைஸ் செய்யவேண்டும்” என கலைஞரை கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டுப் பேச அரங்கம் எங்கும் பலத்த சிரிப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்… “இந்திய மொழிகளில் மென்பொருள் கருவிகள் முதலில் தமிழில் செய்யப்பட்டதற்காக தயாநிதிமாறனுக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டார்.

விழாவுக்கு வேட்டியில் வந்திருந்த தயாநிதி மாறன்

“இங்கு வந்திருப்பவர்களுக்குத்தான் இந்த இலவச மென்பொருள் கருவிகள் என்பதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தே இண்டர்நெட்டில் ரிஜிஸ்தர் செய்தால் அடுத்த 7 நாட்களுக்குள் இந்த தமிழ் மென்பொருள் கருவிகள் உங்கள் வீடுதேடி விரைந்து வரும்” என்றார்.

தமிழிலேயே ஈமெயில் அனுப்பலாம். தமிழ் சொற்களை கம்ப்யூட்டரிலேயே எழுத்துப்பிழை திருத்தலாம். தமிழ் அகராதியை கணிணியிலேயே பெறலாம் என பல பயன்கள் கொண்ட இவ்விழாவில் இவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும் செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மறுநாள் தஞ்சை தி.மு.க. மாநாடு பரபரப்பிலும் இவ்விழாவிற்கு வந்த கலைஞர்… “இது உலக அளவில் தமிழை கொண்டுசேர்க்கும் முயற்சி” என வாழ்த்தினார்.

அந்த நாள் ஞாபகம்

ஏவிஎம் சரவணன்: ”எப்படி வரும்?” என்று கேட்டார் திரிலோக். ”நீங்க எடுக்கறது படிக்காத மேதை. எமோஷனல் ஸ்டோரி. அதில் சீன்கள்ல எமோஷனைக் காட்டணுமே தவிர, காட்ட முடியுமே தவிர, அங்கே போய் ‘செட்’டோட ரிச்னஸை எப்படிக் காட்ட முடியும்? பீம்சிங் எப்படிக் காட்டுவார்?”

”நெறய செலவு பண்ணி ‘செட்’ போட்டாச்சு. என்ன பண்றதுன்னே தெரியல” என்றார் அப்பச்சி.

ஸ்டூடியோவில் செட் போட்டு அங்கே ஷ¥ட்டிங் முடிந்த பின்பு, அந்த செட்டைப் பிரித்து விடுவதுதான் எங்கள் வழக்கம். அதே செட்டை பிறகு யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை. மெஹர்பான் செட்டைப் பொறுத்தவரை, அதன் ‘ரிச்னஸ்’ஸை படத்தில் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்பச்சிக்கு இருந்தது.

”சரி… இந்தப் படம் முடிஞ்ச பிறகு இந்த செட்டைப் பிரிக்க வேணாம்” என்றார் ”இந்த செட்டுக்குப் பொருந்தி வராப்போல ஒரு கதை ரெடி பண்ணுங்க”

”பொருந்தி வராப்போலன்னா, இதுக்கு சோஷியல் சப்ஜெக்ட்ஸ் சரிப்பட்டு வராது. க்ரைம் த்ரில்லர் தான் பொருந்தி வரும். செட்டுக்கு ஸ்கோப் இருக்கும்” என்றார் திருலோக்.

பூட்பங்களா, பீஸ் ஸால் பாத், கும்நாம், டார்க் பங்களா போன்ற நாங்கள் பார்த்திருந்த படங்களையெல்லாம் மிக்ஸ் பண்ணி, ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை தயார் செய்தோம். அதுதான் ‘அதே கண்கள்!’

டி.என். பாலுவை வைத்து காமெடி ட்ராக்கை மட்டும் தனியாக எழுதினோம். டி.ஆர். ராமண்ணாவிடம் இருந்தவர் பாலு. ‘நான்’, ‘குமரிப்பெண்’ போன்ற படங்களில் பிரபலமான காமெடி ட்ராக்கை எழுதியவர். ஒரே வாரத்தில் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து விட்டோம்.

இந்தப் படத்துக்கு வேதா இசையமைத்தார். இலங்கை வானொலியில் புகழ் பெற்ற மயில்வாகனன்தான், இந்த வேதாவை என் சகோதரர் குமரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

”இவருக்கு இசையமைக்க வாய்ப்புத் தாருங்கள். பாடல்களை இலங்கை வானொலி மூலம் ‘ஹிட்’டாக்கிக் காட்டுவது என் பொறுப்பு’ என்று மயில் வாகனன் உறுதியும் தந்திருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தப் பாடல்களை வானொலி மூலம் ஹிட்டாக்கிக் காட்டுகிறேன் என்று மயில் வாகனன் உறுதி தந்திருந்தாரோ, அந்தப் பாடல்கள் வெளியானபோது அவர் இலங்கை வானொலியில் பணியில் இல்லை. இருந்தாலும் பாடல்கள் யாவும் இனிமை காரணமாக தாமாகவே பிரபலமாயின.

நன்றி: kalki

மந்திரமுகி கதை

அமெரிக்காவில் சொட்டைய கூஜாவின் வீட்டை பழனி வாங்குகிறான்.

சூனியக்காரி மந்திரமுகி இந்த வீட்டில் ஆயிரம் தலைகளை காவு வாங்கியதாக சரித்திரம். கடைசியாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சொட்டைய கூஜா. இதனால் அவளின் ஆஸ்தான கேப்டன் சவுரவ் (கிரிக்கெட் வீரன்) ஓய்வு பெற்றதாக தகன எரிப்பாளர் தாடிவாலா முன்கதை சுருக்குகிறார்.

மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் சொட்டைய கூஜாவின் வீட்டில் உலாவுவதாக வதந்தி. அவற்றை சச்சின் டெண்டுல்கரின் முப்பதடி மட்டை காத்திருப்பதாக ஐதீகம். மந்திரமுகியின் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் சேப்பாக்கம் மைதானம் இன்றும் தெரிகிறது. சேப்பாக்கத்தின் பெவிலியனில்தான் முன்னாள் அணித் தலைவன் சவுரவ் வசித்திருந்தான்.

இந்நாளில் அங்கு டிராவிட் வசிக்கிறார். அவரும் கிரிக்கெட் கேப்டன்தான்.

காவேரியை பழனி காதல் மணம் புரிந்திருக்கிறான். இது பிரிந்திருந்த பழனியின் பழங்குடியில் பிளவை வலுப்படுத்துகிறது. என்றாலும் பழனியின் மொத்த குடும்பமும் அறுபடை வீடுகளுடன் மந்திரமுகி மாளிகையில் குடிபுகுகிறது.

இவர்களுடன் மறைவாணனும் விடுமுறையை பழனியுடன் களிக்க வருகிறார். வீட்டை கவனித்துக் கொள்ள அவுட் ஹவுஸில் பாட்டியும் பேத்தி சச்சுவும் வசிக்கிறார்கள். சச்சுவை சர்ச்சு என்றழைத்து வெறுப்பேத்துவதை கர்ம சிரத்தையாக மறைவாணன் சிறப்புற செய்து வருகிறார். எனினும், சர்ச்சுக்கு… சாரி… சச்சுவுக்கு மரை கழண்டுவிட மறைவாணனிடம் காதல் வந்து விடுகிறது.

‘மறைவாணன் இருக்க மரை கழல்வதேன்’ என்று படம் நெடுக வசனம் இடம் பெறுகிறது.

மற்றவர்க்குள் மனதுக்குள் மறைத்து வைப்பதை மறைவாணன் தன்னுடைய அமெரிக்கப் படிப்பால் உணர்ந்துகொள்கிறார். புகழ்பெற்ற பல மனவியல் பேறாயர்களையும் பேராசிரியர்களையும் மாணாக்கர்களாக வைத்துக் கொண்டவர்.

அக்கம்பக்க குழந்தைகளுக்கு சச்சு வாய்ப்பாடு கற்றுத் தந்து வருகிறார். காலையில் எழுந்தவுடன் ‘ஒரோண் ஒண்ணு… ஈரோன்னு இரண்டு’ என்று தமிழ் நாராசமாக நித்திரையை கஷ்டப்படுத்துவதால், வகுப்புகளை நிறுத்த உத்தரவிடுகிறார் மறைவாணன். பெரிய இடத்து பழனி நண்பனாக இருப்பதால், இது எளிதில் சாத்தியமாகிறது. வாய்ப்பாடுகளைப் படிக்காமல் தான் கழற்றி வைத்த நட்/போல்ட்களை மெக்கானிக் வேலை பார்க்குமாறு அறுவுறுத்தி சிறுவர்களை விரட்டியடிக்கிறார். பொழுதுபோக்கு நின்று போனதால் சச்சுவின் காதல் வலுவடைகிறது. சச்சுவை மேலும் கவருமாறு ‘ஒன் ஒன் சார் ஒண்… டூ ஒண் சார் டூ’ என்று ஆங்கிலப் புலமையை காட்டி நம்மையும் முடுக்குகிறார் மறை.

காவேரிக்கு கர்னாடகமாக அடைந்து கிடக்க போரடிக்கிறது. பக்கத்தில் சென்று காய்ந்து போன மந்திரமுகியின் அறைக்குள் நுழைய ஆசை. ஆனால், புக விட மாட்டேன் என்று தடுத்து வருகிறார்கள். சச்சுவின் உதவியை நாடுகிறார் காவேரி. நண்பனிடம் தனது மதிப்பை உயர்த்த மறைவாணனும் சச்சுவின் உதவியைக் கோருகிறான்.

சச்சுவும் சேவல் பண்னையை பழனியின் மேல் ஏவி விடுகிறாள். மறைவாணன் சேவல்களிடமிருந்து பழனியைக் காப்பாற்றுகிறான். மாம்பழத்தில் விஷம் தோயித்திருப்பதை பழனிக்கு உணர்த்துக்கிறான்.

  • சச்சு பழனியைக் கொல்ல முயன்றது ஏன்?
  • மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் பழனியின் அறுபடை வீட்டாரையும் பிடித்திருக்கிறதா?
  • டிராவிட் நிலைமை என்ன ஆச்சு?
  • ஆயிரம் வீரர்களின் ஆவிகளை மேய்க்க வரவழைக்கப்பட்ட புது பயிற்சியாளர் யார்?

    மந்திரமுகியின் இத்தைகைய புதிய கேள்விகளுக்கு சொட்டைய கூஜாவின் விடையை வெள்ளித்திரையில் காண்க!

    – பாஸ்டன் பாலாஜி