மூன்று தகண்கள் – சொ. மணியன்


சச்சினும் கங்குலியும், சேவாகும் லஷ்மணனும்

கச்சிதமாய் ஆடுகின்ற காய்ஃபும் விழுந்துவிட்டார்

மிச்சமுள்ள எல்லோரும் மீளாத் துயில்கொண்டார்

இச்சகத்தில் நாம்ஜெயிப்ப(து) என்று ?



பகட்டு, அலட்டலுக்குப் பேர்போன பையா,

சிகரெட்டின் தீப்பிழம்பில் சிக்கிச் சிதைந்து,

சகமனிதர் எல்லோரின் சங்கடத்தைச் சேர்த்தாய்,

மிகமோசம் உன்வாழ்வு போ !



மதுவென்ற மாயை மயக்கத்தில் வீழ்ந்து

இதுவல்ல வாழ்க்கை எனப்புரியா காலம்,

அதுகடந்து இன்று அழுதென்ன லாபம் ?

புதுசாய்ப் பிறப்பெடுப்போம் வா.



  • தளை தட்டினால் யாராச்சும் சொல்லுங்க

  • எவராவது எசப்பாட்டுப் போடப் போறீங்களா?

3 responses to “மூன்று தகண்கள் – சொ. மணியன்

  1. முதல் ஐட்டம்தான் தூள்!

  2. இன்னாபா வாத்தியாரு விகடனில வெண்பா பத்தி சொன்னவுடனே ஆளாளுக்கு பொங்கி எழுந்துட்டீங்க. கலக்கு நைனா! (கமா ‘,’ இன்னாத்துக்குமா?)

    -டைனோ

  3. சொ.மணியன் நான் அல்ல 😉
    -வெண்பா அறியா பாலகன்.

Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.