நம்மில் ஒருவன்.. நமக்காக ஒருவன்! – ஷங்கர் பேட்டி


ஆனந்த விகடன்:

“இத்தனை வருட சினிமா அனுபவம் தந்த படிப்பினை என்ன?”

“ரொம்பக் கஷ்டப்பட்டு ‘செட்டில்’ ஆயிட்டோம் என்று நினைத்தால், அது உண்மையில்லைன்னு தெரியுது! ‘செட்டில்’ ஆவது ஒன்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால், நடக்கிறது என்ன?

இந்த வாழ்க்கை கடைசிவரைக்கும் உழைப்பைக் கேட்டுக்கிட்டே இருக்கு. அதுவும் சினிமா… குறைந்தபட்ச தர்மத்தோடு இருக்கிறவங்கதான் நிலைக்க முடியுது. இது நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னு தெரிஞ்சுக்க முடியாத உலகம். ஆனா அந்த ரெண்டு பேருமே கண் முன்னாடி சிநேகமா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுதான் விசேஷம்!”

“விமரிசனங்களை எப்படி எடுத்துப்பீங்க?”

“நல்லாயிருக்குன்னு சொல்லும் போது சந்தோஷப்படறோமே… அதுமாதிரி நெகட்டிவ் விமரிசனம் கேட்கும்போதும் ‘லைட்’டாக எடுத்துக்க வேண்டியதுதான்.

நானே குத்தம் பண்ணியிருக்கலாம். ஆனால், ‘பாய்ஸ்’ படத்துக்கு விகடன் எழுதின விமரிசனம்… தப்பிருந்தா தலையில் குட்டலாம். ஸ்கேலில் ரெண்டு தட்டு தட்டலாம். முட்டிப்போட வைக்கலாம். கத்தியை எடுத்துச் செருகலாமா? அந்தக் காயம் அதிகமாக வலித்தது.

என்னை வளர்த்துவிட்டு, என்னைக் கொண்டாடிவிட்டு, திடீர்னு தோளிலிருந்து தூக்கிப் போட்டால் என்ன செய்வேன், சொல்லுங்க. பரவாயில்லை.. இப்போ அந்தக் காயம் ஆறிவிட்டது!”

ரெண்டு வரி நோட்: இவை மென்பொருள் எழுதுபவர்களுக்குக் கூட பொருத்தமாக பட்டது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.