-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Daily Archives: ஜூன் 11, 2004
கேள்வியும் நானே… பதிலும் நானே!
1. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் ப்ளீஸ்.
அது சொன்னால் எனக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து விடுவார்கள். தனியாகக் கேளுங்க சொல்றேன். கொசுறாக நெட்டில் படித்த ஒரு ஜோக்கில் காரெக்டர்களை மாற்றிப் பார்க்கலாம்.
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜெயேந்திரர், ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி மூவரும் குஜால்சாகத் தண்ணியடித்துவிட்டு எக்குத்தப்பாக சிறையில் விழிக்கிறார்கள். தாங்கள் எலெக்ட்ரிக் சேரில் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. ஏன், எதற்கு, எப்படி ஒன்றும் புரியலை.
“நீங்கள் கடைசியாக என்ன கேட்க வேண்டுமோ சொல்லுங்கள்” என்னும் உத்தரவுடன் ஸ்விட்சில் கை வைத்திருக்கிறான் ஒருவன்.
முதலில் ஜெயேந்திரர் “நான் தெய்வங்களை வணங்கியதும், ஸ்லோகங்கள் சொன்னதும் உண்மையானால், நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது.” என்கிறார். என்ன ஆச்சிரியம்… ஸ்விட்ச் திருகினதும் அவருக்கு ஒண்ணும் ஆகவில்லை. அவரின் கடவுள் நம்பிக்கை மெச்சப்பட்டு விடுவிக்கப் படுகிறார்.
அடுத்து ஜெயலலிதா “நான் மதிக்கும் சட்டங்களும், மக்களுக்கு செய்த தொண்டுகளும், உண்மையானால் தர்மதேவதை காப்பாள்.”. இவரையும் எலெக்ட்ரிக் சேர் எதுவும் செய்யவில்லை. தர்மம் தலை காக்கிறது.
கடைசியாக சுவாமி, “அந்த ரெண்டு வொயரையும் சேர்த்து கனெக்சன் கொடுங்கோ… அதுவரைக்கும் யாரும் சாக மாட்டா” என்றார்.
2. சாயாசிங், சதா, கோபிகா, ப்ரியாமணி, அபர்ணா – யார் அடுத்த சிம்ரன்?
சதா – ஓவர் ஆக்டிங் ஜோதிகா.
ப்ரியாமணி – ‘பாலு’ மணம் மாறா லைலா
அபர்ணா – அடுத்த வீட்டுப் பெண் ரோஜா
கோபிகா – மலிவு விலை ஸ்னேஹா
சாயாசிங் – இடுப்பு ஒடிக்கும் சிம்ரன்
3. பின்னூட்டம் கொடுக்கும் உனக்கே, பாரா மாதிரி ஒன்பது கட்டளைகள் கொடுத்துக் கொள்ள முடியுமா?
அ. உங்களுக்குக் காமெண்ட் கொடுத்தார் என்பதற்காக, அவருடைய பதிவில் சென்று எதிர் மரியாதை புரிய வேண்டாம்.
ஆ. RBF, ஈஸ்வரி, ரமேஷ் கார் கொடுத்த வட்டிப் பணம் போல் மறுமொழி கொடுக்காமல், IOB, SBI, BOB போன்ற சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் ஏறும் சொல்ப தொகையாக கொடுத்தாலும், நீடித்த காலத்திற்கு, தொடர்ச்சியாக கொடுக்கவும்.
இ. காலையில் காபியுடன் ஆபீஸ் செல்லும் அவசரத்தில் பேப்பர் புரட்டுவது போல் தலைப்புகளை மட்டும் படித்து விட்டு மறுமொழிய வேண்டாம்.
ஈ. இதுவரை வந்திருக்கும் மறுமொழிகளை மட்டும் பார்த்துவிட்டு நீங்களும் அட்டெண்டன்ஸ் கொடுக்கக் கூடாது.
உ. நீங்கள் ஒரு முறை சொன்னால் பத்து மில்லியன் முறை சொன்ன மாதிரி! அதற்காக ஒரே விஷயத்தை பத்து தடவை பேஸ்ட் செய்து நூறு மில்லியன் முறை சொல்லாதீர்கள்.
ஊ. உங்கள் கிண்டல், நகைச்சுவை, வருத்தம், அங்கதம் எல்லாம் எழுத்தில் வரவேண்டும், முறையே :P, :), :(, 😉 ஸ்மைலி மூலம் வந்தால் எங்கோ மிஸ்டேக்.
எ. ஸ்ரீராமஜெயம், 786, PTO மாதிரி அல்ல ஸ்மைலி பொம்மைகள். கொஞ்சம் கரிசனம் கொடுத்து உபயோகியுங்கள்.
ஏ. வீட்டு வாசலில் நின்று நலம் விசாரிப்பது போன்றவை பின்னூட்டங்கள். ஷேமலாபங்கள், குசலம் விசாரிப்பன போன்றவற்றிற்குத் தனிமடல் போடுங்கள்.
ஐ. ‘தமிங்கிலத்துக்கு மன்னிக்க’, ‘விவரமாக பிறகு என் பதிவில் எழுதுவேன்’, ‘நான் எழுத நினைத்தேன்…’, போன்றவை விஜய்காந்த் படத்தில் வரும் சண்டைக் காட்சியில் யார் ஜெயிப்பார் என்பது போல் ஊரறிந்த விஷயம். மீண்டும் மீண்டும் ரசித்துப் படிக்க முடியாது. தவிர்க்கவும்.
4. ஒட்டக்கூத்தருக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்கிறார்களே… ஏன்?
அது ஒரு பெரிய கதைங்க. குலோத்துங்க சோழ ராஜாவுக்குப் பெண் எடுக்க அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் பாண்டிய மன்னரிடம் தூது போகிறார். அங்கே தன்னுடைய அக்மார்க் குசும்பைக் கொண்டு வஞ்சப் புகழ்ச்சியில் பாண்டியனைத் தாளித்து விடுகிறார். பாண்டிய அரசவைப் புலவர் புகழேந்தியும் சளைக்காமல் எசப்பாட்டில் ஒட்டக்கூத்தரை கவுத்துடறார். ‘சமயம் வரும்போது வெச்சுக்கலாம்’ என்று சிரித்துப் பேசி நிச்சயதார்த்தம் நடந்தேறுகிறது. சோழனுடன் திருமணம் முடிந்தவுடன் பெண்ணுடன் அனுப்பும் சீராகப் புகழேந்தியைக் கேட்க சொல்கிறார். ‘ஆகா… அங்கு பெண்ணை எவ்வாறு நடத்துகிறார்கள் என்று அறிவதற்கு சரியான ஆள்’ என்று சந்தோஷத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார் பாண்டிய ராஜன். அந்தப்புரமே கதி என்று புது மாப்பிள்ளை சோழர் இருக்கிறார். சீதனமாக வந்த புகழேந்தியை சிறையில் தள்ளி குதூகலிக்கிறார் ஒட்டக்கூத்தர். மோகம் முப்பது நாள் கழிந்தவுடன், ராஜாவுக்கும் ராணிக்கும் நடுவில் ஊடல். ராஜாவை அந்தப்புரத்தை விட்டு வெளியேற்றி தாழ்ப்பாள் போட்டு விடுகிறார். சமயம் பார்த்துத் தோழிகளும் ஒட்டக்கூத்தரின் பழிவாங்கலை நினைவுறுத்துகிறார்கள். பாண்டிய அரசி ‘ப்ரேக்கிங் பாயிண்ட்டில்’ இருக்கும்போது ‘அம்மா… குழந்தே’ என்று வாயில் கதவை தட்டுகிறார் ஒட்டக்கூத்தர். கோபத்தின் உச்சியில், மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் எல்லாம் சேர்த்து ‘இரட்டைத் தாழ்ப்பாள்’ போட்டு விட்டதாக வெண்பா-டுகிறாள்.
(புகழேந்தியும் ஒட்டக்கூத்தரும் பாடிய வஞ்சப் புகழ்ச்சி பாடல்கள், சிறையில் இருந்து விடுதலையாகி பாண்டிய குமாரியை சாந்தப்படுத்திய புகழேந்தியின் பாடல் எல்லாம் மரபிலக்கியத்தில் கேளுங்க… சொல்லுவாங்க…!)
5. குறைந்த செலவில் வித்தியாசமான குறும்படம் எடுப்பது எப்படி?
வீட்டில் இருக்கும் உங்கள் மூன்று வயது செல்ல மகனை கூப்பிடுங்கள். ஆன் செய்யப்பட்ட ஹாண்டிகேமை கொடுத்து, ஒரு மணி நேரமாவது – ஊர் சுற்றி, விளையாட சொல்லுங்கள். படத்தொகுப்பை உங்கள் மனைவியிடம் ஒப்படையுங்கள். பிண்ணனிக்கு சிவமணியின் ஃப்யூஷன், எல். சுப்ரமணியத்தின் இசை இரண்டையும் போதிய அளவில் கலக்குங்கள். ‘அனுதினம்’, ‘தரையில் ஒரு தாமிரம்’ என்பது போல் இலக்கணமாய் பேர் சூட்டுங்கள். அருமையான ஆர்ட் ஃபிலிம் ரெடி.
6. Virus, Adware, Spyware, Hackware, இவர்களை நிறுத்துவதற்கு நாதியே கிடையாதா?
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் என்பது போல் இவர்களாய் நிறுத்தாவிட்டால், எதுவும் செய்யமுடியாது. இன்னும் சிலர் நாங்கள் ராபின் ஹுட் என்று வேறு பம்மாத்துகிறார்கள். ‘இராமநாராயணன் படத்தைப் போட்டால் டிவியை ஆஃப் பண்ணு’ என்பது போல் நாம் சிலவற்றை அறிவுறுத்தலாம். இப்போதைய நிலையில், கமல் ஸ்னேஹாவிடம் இதழ் பதிக்க ஆரம்பித்த பின்புதான் விழித்துக் கொண்டு, சேனல் மாற்ற ரிமோட்டைத் தேடுகிறோம். ‘உங்கள் கணினியில் ட்ரோஜன் புகுந்துள்ளார்’ என்றபின் சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினியை துவக்குகிறோம். இதற்கு பதிலாக தீநரி உலாவி, நோட்பேட், ஈ-கலப்பை தவிர வேறு எதையும் என் கணினியில் இயக்காதே என்று நாம் சொல்வதை கேட்டால் போதும். உத்தரவின்றி எதுவும் உள்ளே நுழையாது. இது போன்ற முயற்சியை பலர் ஆரம்பித்துள்ளார்கள். சாம்பிளுக்கு : Antivirus Software Turned Upside Down – Windows Developer Network
7. ஏன் இந்த விபரீத கேள்வி-பதில் பகுதி?
இது என்னுடைய நானூறாவது பதிவு. இது மட்டுமாவது சுத்தமான நெய்யில் வார்த்தது போல் சொந்தமாக எழுதியதாக இருக்கட்டுமே என்னும் ஆர்வக் கோளாறுதான்.
Posted in Uncategorized
பின்னூட்டம் (ரா.கா.கி)
லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்: கதையை விரும்பி படிப்பதற்கு வாசகனின் ஆர்வம், மொழிப்புலமை, வயது, கிடைக்கும் ஓய்வு நேரம், ஆசிரியரின் பிரபலம், படிக்க பத்திரிக்கை கிடைக்கிற வாய்ப்பு, படித்து ஏற்பட்ட தேர்ச்சி, கதையைப் பற்றிய விளம்பரம்.
இப்படி பல காரணங்கள் இருக்கு.
ஆர்வம்: “அந்தப் பொண்ணை விவரிக்கறான் பாரு..சூப்பர்”
ஆர்வமின்மை: “ஆறு பக்கம் படிக்கணுமா?”
மொழிப்புலமைஇன்மை :”டமில் ரொம்ப படிக்கல சார்..பிரெஞ்சு படிச்சேன்.. இதுதான் ‘கா’னாவா?”
வயது: பழம் தின்னு கொட்டை போட்டாச்சு. இந்த வயசுல எனக்கு காதல் கதை வேணுமா சார்?
பத்திரிக்கையின் மெத்தனம்:
இன்றைக்கு பல பத்திரிக்கைகள் போட்டியிலே இயங்கும்போது வரும் கதைகளை நன்கு பரிசீலித்து, வெட்டி ஒட்டி போட சரியான ஆசிரியர் குழு இல்லாத நிலையில், கதை போடுவது ஒரு சடங்காக ஆகிவிடுகிறது.
“ரெண்டு பக்கத்துக்கு எதாவது மேட்டர் வேணுமில்ல, போட்டுத் தொலைங்க”
படித்து ஏற்பட்ட தேர்ச்சி:
வாசகன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன், இல்ல அவனே கதை எழுதறவன்னா, படிக்கறச்சே சீக்கிரம் சலிப்பு வந்திரும்.
“கைநாடியைத் தொட்டவுடனே அவனுக்கு லிவர் கேன்சர் இருப்பது தெரிந்தது”, “சோழன் எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் வந்திருந்தது”, “கூட்டமில்லாத பேருந்தில் ஏறினான் பெரியசாமி” — இதை படிச்ச ஒடனே என்னங்கடா புரூடா விடறானுகன்னு மூடிடுவான்.
ஆசிரியரின் பிரபலம்:
பிரபல ஆசிரியர் சுஜாதான்னா படிச்சுரணும்னு படிப்பான். சரி ஒழிஞ்சு போறது, இரா.முருகன், லாவண்யா இப்படி சில பேரு எழுதினா படிப்பான்.. ஊர் பேர் தெரியாத ஆள்னா சந்தேகம்தான்..
கதையைப் பற்றிய விளம்பரம்: “இந்தக் கதையில எத்தினி தடவை ரஜினின்னு வருதுன்னு சரியா சொன்னா வைரமோதிரம் தருவாங்களாம்”
பத்திரிக்கை படிக்க வாய்ப்பு:
“காப்பி மட்டுமில்ல, குமுதம், விகடன் எல்லாம் நிறுத்தியாச்சு”
“இந்த கதை புத்தகமா ஒனக்கு சோறு போடும்? போய் பாடத்தை படிறா”
ஓய்வு நேரம்: “படிக்கணுனு பாக்கறேன்..ஆபீஸ்ல ஆடிட்..”
“புத்தகத்தை திறந்தேன்…டிவில டிஸ்கவரி சானல்ல முதலை காட்டினான்.”
“எவ்ளொ பெரிசு…மூடிட்டேன், புத்தகத்தை..”
“படிக்க உட்கார்ந்தா கரண்ட் போயிடுச்சு”
படிக்கறதுக்கு இவ்வளவு இடைஞ்சல்……….
இத்தனையும் மீறி இன்னிக்கும் படிக்கறவன் இருக்கான். ராகவன் சொன்னாப்புல ஆசிரியருக்கு கடிதம் போடறான் “சுமதியின் தியாகம் கண்ணில் நீர் வரவழைத்தது”ன்னு. தன் பேராவது பிரிண்டுல வராதான்னு..
ஆனால் முழு கவனத்தோட வாசிக்கறவன் ரெண்டு பேர்தான்..ஒருத்தன் எழுதினவன், இரண்டாவது அதை பத்திரிகைக்கு அச்சுக் கோக்கிறவன்..
சிஃபி ராயன்: இந்தக் கடுதாசி போடறவன் ஒருத்தன் இருக்கான் பாருங்க…. பயங்கர விசேஷமானவன். எனக்குத் தெரிஞ்சு ஒழுங்கா படிக்கற யாரும் கடுதாசியே போடுவதில்லை. படிக்கறதே பெரிசு. இதில கடுதாசி வேறயா?
ஆனால் பத்து பாயிண்டு போல்டில் அயன்புரம் சத்தியநாராயணன், அரவக்குறிச்சி அசோக்ராஜா, ஐயாறு வாசுதேவன் என்று எந்த பத்திரிகையிலேயும் சில பிரஹஸ்பதிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இதிலும் சில விசேஷப் பிரபுக்கள் உண்டு. தினமணியில் கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம் என்றால், வாரப் பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம். இவர்கள் எழுதாத விஷயமே இருக்காது.
1. அனைத்துப் பத்திரிகைகளிலும் கேள்வி கேட்பார்கள்
2. ஆங்கில பத்திரிகை/நாளிதழ்களில் இருந்து சுட்டு துணுக்கு எழுதுவார்கள்
3. காலட்சேபம், கூட்டம் என்று போய் சுவாரசியத் தகவல் என்று பிட் எழுதுவார்கள்
4. அப்புறம் நிச்சயம் வாசகர் கடிதம் எழுதுவார்கள்
வாசகர் கடிதம் பற்றி நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் ஒரு சுவாரசியமான தகவல் சொன்னார். ஒரு பதினைந்து பைசா (இப்போ இன்னா வெல சார்…) தபால் கார்டில் நடுவில் ஒரு போடு போட்டுவிட்டு, மேல் பகுதியில்,
அன்புள்ள ஆசிரியருக்கு
………..தேதியிட்ட இதழில் வெளிவந்த எழுத்தாளர்
…………………கதை பிரமாதம். அற்புதம். இதுபோல்
எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்.
கீழ்ப் பகுதியில்
அன்புள்ள ஆசிரியருக்கு
………………..தேதியிட்ட இதழில் வெளிவந்த
எழுத்தாளர்………………..கதை படு திராபை. எப்படி
இப்படிப்பட்ட கதையைப் பிரசுரிக்கிறீர்கள். இனியாவது நல்ல கதைகளைப்
பிரசுரியுங்கள்.
என்று எழுதி மறக்காமல் ஊர்பெயருடன் தன் பெயரை வேறு வண்ண பால்பேனாவில் எழுதுவாராம்.
இதுவாவது பரவாயில்லை. வேறொரு சுவாரசியம் அப்புறம் சொல்கிறேன். மின் இதழ் வாசகர் கடிதங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?
சொக்கன்: ஆமாம், மின் இதழ்களுக்கெல்லாம் வாசகர் கடிதங்கள் வருகிறதா என்ன ? நம் மின் வாசகர்களெல்லாம் தெய்வத்துக்கு நிகரானவர்களாயிற்றே, படிப்பதே பெரிய விஷயம், இதில மின்னஞ்சல் வேற கேட்குதா என்று கண்களை உருட்டி உறுமுகிறவர்களாயிற்றே!
‘தினம் ஒரு கவிதை’ அனுபவத்தில் சொல்கிறேன் … இணையத்தில் பிரசுரமான எதையாவதுபற்றி அரை பேர் கடிதம் எழுதினால், ஆயிரம்பேர் படித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்,
அதில் எத்தனைபேர் ஊன்றிப் படித்தார்கள் என்பதை பா. ராகவரிடம்தான் கேட்கவேணும்!
Posted in Uncategorized











