rhizomes&nodes: “நாடெர் எடுத்துள்ள முடிவு குறித்தும் எழுத வேண்டும்.அவர் ஜனநாயக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவையே- ஆனால் இம்முடிவு யார் தரப்பை வலுப்படுத்தும், ஒட்டுகள் சிதறினால் யார் பயனடவார்கள்?“.
தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.
அமெரிக்காவின் ரால்ஃப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் பல மாநிலங்களில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில் ஆல் கோர் தோற்கக் காரணமானவர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.
அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர்: நாடர்.
த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. பஞ்சதந்திரக் காலத்தில் இருந்து சொல்லி வரும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ ஏனோ நினைவுக்கு வருகிறது.
தனது பேச்சாற்றலினால் காங்கோ மக்களை ஓன்று படுத்தி பெல்ஜியத்திடமி¢ருந்து விடுதலை வாங்கித் தருகிறார். 35 வயதில் காங்கோவின் முதல் பிரதமர்…..ஆனால், வெளியேற வேண்டிய பெல்ஜிய அதிகார கும்பலும் அமெரிக்க CIA வும் சேர்ந்து இரண்டே மாதங்களில் லுமும்பாவை பதவியை விட்டுத் தூக்கிவிட்டு, கர்னல் “மொபுட்டு” வை பிரதமராக்குகிறார்கள்..லுமும்பா house arrestல்…. ஒர் மழை நாள் இரவில் லுமும்பா குடும்பத்தோடு காரில் தப்பிக்கிறார்… அவர்களை ஓட விட்டு நாட்டின் எல்லையில் பிடிக்கிறது ராணுவம்…..சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.. காங்கோ நாட்டின் அரசாங்க விழாவில் “மொபுட்டு” லுமும்பாவின் தியாகத்தை மக்களின் முன் புகழ்ந்து கொண்டிருக்கும் போது, மொபுட்டுவின் ராணுவம் லுமும்பாவை காட்டில் வைத்து சுட்டுக் கொல்கிறது……..
). ரசிக்கும்படியான கதைகளை படித்தல் அரிதாகி வரும் தருணங்களில், நான் படித்ததில் 









