விமான விபத்து – கிஷ்


சென்னை ஆன்லைன்: கிஷ்: “அமீரகத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்லாமல் இருப்பவர்களுக்கு கிஷ் தீவு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில்

இந்தியாவிலேயே இருந்துவிடாமல், விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஏராளம் பேர். முதலில் விசிட்டில் வந்து, பின் employment visa பெறும் நபர்களுக்கும் பேருதவியாய் இருப்பது கிஷ் தீவுதான். பதிநான்கு நாள்களிலும் விசிட்விசாவோ employment visaவோ கிடைக்கப்பெறாதவர்கள் பத்திரமாய் கிஷ்விமானதளத்திற்கு அனுப்பப்படுவார்கள். கிஷ் செல்வதற்கான இன்னொரு காரணம், கிஷ் செல்ல விசா வாங்கவேண்டியதில்லை என்பது.” என்று பிரசன்னா எழுதித்தான் கிஷ் மகாத்மியம் அறிந்து கொண்டேன்.

‘வெற்றி கொடி கட்டு’ கனவுகளுடன் கிஷ்ஷில் இருந்து ஷார்ஜாவுக்குப் திரும்பிக் கொண்டிருந்த நாற்பத்தி நான்கு பேர்கள் விமான விபத்தில் இறந்து விட்டார்கள். இருவர் மட்டுமே உயிருக்குப் போராடி வருகின்றனர். பன்னிரண்டு இந்தியர்களும், ஒரு பங்களாதேஷியும் இறந்துள்ளார்கள்.

ஹரன்பிரசன்னா கிஷ்ஷை வைத்து ஒரு கதையும் எழுதியுள்ளார்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.