Monthly Archives: திசெம்பர் 2003

யாத்ரா மார்க்கம் – புதுமைப்பித்தன் ==============…

யாத்ரா மார்க்கம் – புதுமைப்பித்தன்

====================================

சமீபத்தில் ‘பம்பாய் கிரானிக்கல்’ பத்திரிகையைப் புரட்டிக்

கொண்டிருந்தபொழுது, பிரிட்டிஷ் நாவலாசிரியர்களைப் பற்றி

அமெரிக்க பிரசுரகர்த்தர் சொல்லிய அபிப்பிராயம் என் கவனத்தை

இழுத்தது. அந்த பிரசுரகர்த்தர் பெயர் பெரிஸ் கிரீன்ஸ்லெட்.

அவர் சொல்லுகிறார்:

உங்கள் நாவலாசிரியர்கள் (பிரிட்டிஷ்) திறமைசாலிகள்.

தங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் பேனாவை வளையவைக்கும்

சக்தி பெற்றவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்

அவர்கள் புல் மேயும் ஆசாமிகளாயிருக்கிறார்கள்; அடிப்படையான

விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறதில்லை.

இதற்கு இவர் கூறும் காரணம் விசித்திரமாக இருக்கிறது; ஆனாலும்

அது அவ்வளவும் உண்மை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்

கூறுவதாவது:

பிரிட்டிஷ் விமர்சகர்கள்தான் இந்த நிலைக்குக் காரணம். அவர்கள்

வெகுவிரைவில் திருப்தியடைந்து புகழ ஆரம்பித்து விடுகின்றனர்.

பிரிட்டிஷ் விமர்சகர்கள் உயர்வு நவிர்ச்சிகளையிட்டு அபிப்பிராயம்

கொடுத்த சில நாவல்களைக் கண்ணுற்றேன். அவற்றை என்னால்

வாசிக்க முடியவில்லை.

இதைப் பற்றி படித்தவுடன் நமது புத்தகங்களைப் பற்றி வெளிவரும்

‘மதிப்புரைகள்’ என் நினைவிற்கு வந்தன. தமிழில் வாசிக்கும் பழக்கம்

மிகவும் குறைவு. அதிலும் மதிப்புரை வாசிக்கும் பழக்கம், அம்மதிப்புரைகளில்

குறிப்பிட்ட புத்தக ஆசிரிய – பிரசுரகர்த்தர்களைத் தவிர வேறு யாரும்

கிடையாது என்றால், உயர்வு நவிற்சியில்லா மதிப்புரையின் தூண்டுதலால்

புத்தகம் வாங்கும் பழக்கம் எவ்வளவு அளவில் இருக்கிறது என்பதை

நான் திட்டமாகக் கூற முடியாது. ஆனால் ஒன்று. அவற்றின் உதவியை

நாடுகிறவர்களை ‘நமது’ மதிப்புரைகள் தவறான வழியில் செலுத்தும்

‘ஓர் மகத்தான’ தொண்டு புரிந்து வருகின்றன.

நான் இவ்விஷயத்தைப் பற்றி எனது நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டேன்.

‘புஸ்தகப் பிரசுரமே சிசுப் பருவத்தில் இருந்து வருகிறது; நாம்

கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்றார்.

(கட்டுரை வெட்டப்பட்டுள்ளது…)

புதுமைப்பித்தன்

மணிக்கொடி, 15 ஆகஸ்டு 1937

மணிக்கொடியில் கருத்துப் பரிமாற்றத்துக்கான பகுதி ‘யாத்ரா மார்க்கம்’.

அதில் புதுமைப்பித்தன் எழுதிய குறிப்புகள் இவை.

நன்றி: அன்னை இட்ட தீ (புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத/தொகுக்கப்

படாத படைப்புகள்)

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

பிடித்த பாட்டுக்கள் டெண்டுல்கர்: "ராமன் ஆண்டா…

பிடித்த பாட்டுக்கள்

டெண்டுல்கர்:

“ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!” – முள்ளும் மலரும்

சேவாக்:

“என்னம்மா கண்ணு சௌக்கியமா?” – Mr. பாரத்

கங்குலி:

“ஒண்ணுமே புரியலை…உலகத்தில! என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது!”

டிராவிட்:

“ராஜா என்பார்; மந்திரி என்பார்! ஒரு ராஜ்யம் இல்லை ஆள!” – புவனா ஒரு கேள்விக்குறி

யுவ்ராஜ் / கை·ப்:

“நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க”

ஹர்பஜன்:

“சுற்றும் பூமி சுற்றும்” – டும் டும் டும்

ஜஹீர்:

“நீங்க நல்லா இருக்கோணும்; நாடு முன்னேற”

ஸ்ரீநாத்:

“ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!”

பார்திவ்:

“புது மாப்பிள்ளைக்கு ரப்பரே… நல்ல யோகமடா!” – அபூர்வ சகோதரர்கள்

பங்கார்:

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி” – வைதேகி காத்திருந்தாள்

அகர்கர்:

“ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…” – பதினாறு வயதினிலே

கும்ப்ளே:

“உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம்!” – நினைவே ஒரு சங்கீதம்

மனோஜ் ப்ரபாகர்:

“எல்லாருமே திருடங்கதான்!” – நான் சிகப்பு மனிதன்

கவாஸ்கர்:

“ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவன்தான் மண்ணுக்குள்ளேப்

போன கதை, உனக்குத் தெரியுமா?” – மௌனம் பேசியதே

ரவி சாஸ்திரி:

“கண்டதைச் சொல்கிறேன்; உங்கள் கதையை சொல்லுகிறேன்!” – சில நேரங்களில் சில மனிதர்கள்

வெங்கட்ராகவன்:

“வடிவேலன் மனசுவெச்சான்” – தாய் இல்லாமல் நான் இல்லை

பாய்ஸ் இசை – சில மேற்குறிப்புகள் Secret of Rehm…

பாய்ஸ் இசை – சில மேற்குறிப்புகள்

Secret of Rehman’s வேட்ற்றி is Britney Spears, N’Sync and Remix

of பீட் இட் & his own ‘ஓட்யா’வின் ‘பூக்கும் மலர்கள்’. Not path breaking,

ஆனா certainly youthish and hep, complete with மாரோ kids’ lingo!

மன்னிக்க…

ரொம்ப நேரம் ‘பாய்ஸ்’ எம்.பி3கள் கேட்டதனால், ஆங்கிலமும், தமிழ் போன்ற

இங்கிலீஷ¤ம் மட்டுமே வாயில் வருகிறது. கொஞ்சம் நிலைப்படுத்திக் கொண்டு

தொடர்கிறேன்.

1. அலெ… அலே (எகிறி குதித்தேன்) – கபிலன் – **** / 5

கொஞ்சம் அமைதியாக, தமிழ் தெரிந்தவர்களுக்கும் புரியக்கூடிய

பாடல். யார் இந்த சித்ரா சிவராமன்? ஒழுங்காகப் பாடுகிறார்;

இளசாக சிரிக்கிறார். உதட்டில் அடிபட்டதாலோ என்னவோ

ச்

கவர்ந்த வரி:

வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறி விட்டேன்!

சாதா வரி:

ஒரு விதை இதயத்தில் விழுந்தது;

அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே!

2. பூம் (காதல் இதுதான்) – கபிலன் – – * / 5

திருச்சி லோகனாதனும், எஸ். வரலட்சுமியும் ஆங்கிலப் பாடல்

பாடியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். பழகிப்போன உதித்தைத்

துறந்து, அத்னான் சாமியும், கீச் சர்கமும் குரல் உதிர்க்கிறார்கள்.

சத்தியமாய் புரியவில்லை. boysthemovie.com-இல் வரிகள் கண்டால்

புரிந்து கொள்ள ஐந்து சதவீத வாய்ப்பு இருக்கு. (ஆனால், அத்னான்,

கார்த்திக் மொழியை விட எவ்வளவோ தேவலை)!

கவர்ந்த வரி:

தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்!

ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழலாகும்!

சாதா வரி:

குப்பை மேட்டில் ரோஜாச் செடி பூப்பதில்லையா?

(போனஸ்: அழுகிவிட்ட மாம்பழத்தில் இருவண்டுகள் நாம்தான்!)

3. டேட்டிங் (யாரை கேட்டு) – பா.விஜய் – *.5 / 5

தமிழை வித்தியாசபடுத்த இன்னொரு கண்டுபிடிப்பு ப்ளாசி.

பார்பி குரலோடு கர்னாடக வசுந்தரா தாஸ் வாய்ஸ்.

‘பேட்டை ராப்’ போல இல்லாமல், வித்தியசமான ராப் (முயற்சி).

ஆங்கிலப் பாடல்; தமிழும் இருக்கிறது! (நான் உச்சரிப்பை சொல்லவில்லை).

கவர்ந்த வரி:

ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே…

·ப்ரெண்ட்ன்னு ·புல்ஸ்டாப் வைக்காதே!

சாதா வரி:

கற்க கசடற கற்பவை

கற்றபின் மறக்க செய்வது லவ்வாகும்!

4. கேர்ள்·ப்ரெண்ட் (பால் போல) – பா.விஜய் – **.5 / 5

கார்த்திக், டிம்மி, திப்பு என்று மூவர் பெயர் குறிப்பிட்டிருந்தாலும், என்

காதில் ஒலித்தது ஒரு குரலே! புகழ் பெற்ற வைரமுத்துவின் பெயர்ச்சொல்லும்

அதன் குணாதிசங்களையும், புல்லட் எண் பட்டியலிடும் அடியற்றி கொடுக்கப்

பட்ட பாடல்.

கவர்ந்த வரி:

இணையதளத்தில் கணினி களத்தில்,

மின்னஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே!

சாதா வரி:

பார்பி டால் போல போனி டெய்லோடு தேவை கேர்ள் ·ப்ரெண்டுதான்

5. ப்ரேக் தி ரூல்ஸ் (மாரோ மாரோ) – வாலி – **** / 5

பீச்சில் பார்க்கும் முதல் பார்வையிலேயே மயக்க வைக்கும் பிகினி இளங்கன்னி.

நியு யார்க்கின் தெருக்களில் டப்பாவை வைத்து கலக்கும் ஹிப் ஹாப்; கூட கொஞ்சம்

ஹார்ட் ராக்; பாடல் வரிகளின் போது பாப்; பல genres அனாயசமாகக் கலங்கடிக்கிறது.

கவர்ந்த வரி:

பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு!

பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு!

சாதா வரி:

வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு!

6. சீக்ரெட் ஆ·ப் சக்சஸ் (சகசரிகமே) – வாலி – **.5 / 5

‘மாட்டீ ஓஸே’ என்று ஒரு ரகசியம் பரிபாஷையில் சொல்கிறார்கள்.

அது என்னது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு இன்றே திருட்டு விசிடி

கிடைக்கும் வழியை சொல்வேன்! கர்னாடிக சங்கீதம் தெரியாத பாக்யராஜ்

‘ஓ…’ என்று கத்தியே போட்டியை வெல்வது போல் பாட்டும் ஹிட்.

சாதா வரி:

தப்பான ரூட்டில் சென்று ரைட்டான ரூட்டைக் கண்டோம்.

முரண் வரி:

இந்த இசை சொந்த இசை!?

7. ப்ளீஸ் சார் – ??? – * / 5

மெலடி/ப்ளூஸ் என்றும் யாரும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்பதால்,

இங்கும் பாப்/ரீ-மிக்ஸ் வேலைகள் உண்டு.

8. தீம் ம்யூசிக் – *** / 5

நிறைய டெக்னோ, கொஞ்சம் ட்ரம்ஸ், தொட்டுக்க ஹெவி மெடல்;

படத்தின் மற்ற பாடல்களோடு ஒத்துப் போகிறது.

பாய்ஸ் – இலக்கியம் இல்லாத படைப்பு போல சுவாரசியமான பாடல்+இசை.

அன்புடன்,

-பாலாஜி

சில பழைய மொழிகள் —-> புண்ணியத்துக்குப் பழைய ப…

சில பழைய மொழிகள் —->

புண்ணியத்துக்குப் பழைய புடவை கொடுத்தா,

வீட்டு முன்னாலே போயி, முழம் போட்டு பார்த்தானாம்.

கூரை ஏறி, கோழி பிடிக்கத் தெரியாதவன்,

வானம் ஏறி வைகுண்டம் போறேனான்.

எள்ளுதான் புண்ணாக்குக்காக காயுறதுதான்,

எலிவால் என்னத்துக்குக் காயறது?

எல்லாரும் நெல்லை உலர்த்தினா,

எலி வாலை உலர்த்தியதாம்.

The buzzword seems to be Manushyaputhiran பாஸ்டன்…

The buzzword seems to be Manushyaputhiran

பாஸ்டன் பாலாஜி

அம்மா இல்லாத முதல் ரம்ஜான்

அம்மா இல்லாத

முதல் ரம்ஜான்

நன்றாய் நினைவிருக்கிறது

அம்மாவைப்போலவே.

எல்லா வீடுகளுக்கும்

வெள்ளையடித்த சுவர்களையும்

எங்களுக்கு

ஞானத்தையும் கொண்டுவந்த

ரம்ஜான்.

அதிகாலையில்

குளிக்க எழுப்பிவிடும்

அம்மாவை எழுப்பிவிட

அன்று யாருமில்லை.

தூங்காத இரவை

சூரியன் எடுத்துச் சென்றபின்

எழுந்தோம்.

உலகம் முழுவதற்கும் போதுமான

நிராதரவும், ஏழ்மையும்

எங்கள் வீட்டில்

கப்பிக்கிடந்தது.

பிறரது

இரக்கத்தின் கனத்தை

பொறுக்கச் சக்தியில்லாத

தங்கை

கொடுத்தனுப்பப்பட்ட

எல்லாப் பட்சணங்களையும்

திருப்பியனுப்பிவிட்டு

ஐதீகம் மீறி

எண்ணெய் சட்டி

பற்றவைத்தாள்

தந்தை சாப்பிடாமலே

தொழுகைக்குச் சென்றார்.

அவரைப்போன்றோரின்

காதல்பற்றி

கவிதைகளில் குறிப்பிடப்படுவதில்லை.

சின்னத் தம்பியை

கட்டாயப்படுத்தி

புத்தாடை அணிவித்தோம்.

அம்மா இறந்த இரவில்

‘இனிமேல்

வரவே வராதா ?’

என்றழுத பிள்ளையை

அப்படியே விட்டுவிட முடியாது.

ஆண்டுக்கொருமுறை

தெருவெல்லைகள் கடந்து

வீடுவீடாய்ச் செல்லும்

உறவுக்காரப் பெண்கள்

எங்கள் வீட்டில்

நுழையாமலே கடந்துசென்றனர்.

அம்மா இறந்த மறுநாள்

சாவு பயத்தில்

மெடிக்கல் செக்-அப்

செய்துகொண்டவர்கள்தான்

அவர்கள்.

(அம்மாவுக்கு சாகிற வயசா ?

சாகிறதுக்கு வயசா ?)

நரம்புகளைத் தூண்டும்

மந்திரங்களின் பேரொலியுடன்

தொழுகை ஊர்வலம்

வீதியில் சென்றது.

பாட்டியின் கைகள்

ஏன் அவ்வளவு பயங்கரமாய்

நடுங்கின ?

மூலைக்கு மூலை

சாவு சிரித்தது.

அம்மாவை

நீலம் பாரித்த முகத்துடன்

மீண்டும் தூக்கிவந்து

கிடத்தியதுபோலிருந்தது.

முந்தைய ரம்ஜானில்

இந்த அளவுக்கு

இல்லாமல் போவோம் என

நினைத்திருப்பாளா ?

பண்டிகைகள் கொண்டாடாத

நாத்திகனான நான்

முகத்தை மூடிக்கொண்டு

அழுதேன்.

பின்னர்

வேறு ரம்ஜான்கள் வந்தன.

அதிகாலைக் குளியல்,

வெள்ளையடித்த சுவர்கள்,

வீட்டில் கூட்டம்,

புத்தாடைகளின் நறுமணம்,

அம்மா இடத்தில் அண்ணி.

எல்லாமே

எப்படியோ

சரிக்கட்டப்பட்டு

திரும்பிவிடுகிறது.

ஆனால்,

நானந்த

முதல் ரம்ஜானை

பத்திரமாய் வைத்திருப்பேன்.

ஏனெனில்,

அல்லாவை எதிர்த்து

எங்கள் அம்மாவுக்காக

கொண்டாடப்பட்ட அது.

– மனுஷ்ய புத்திரன்

‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ தொகுப்பிலிருந்து

கொஞ்ச நாளைக்கு புதிய ப்ளாஃகில் பழைய வலைப்பூக்கள் ம…

கொஞ்ச நாளைக்கு புதிய ப்ளாஃகில் பழைய வலைப்பூக்கள் மட்டுமே. படிக்காதவர்கள் படித்துத் துன்பமுறுக.

ஹே ராமும் பாபாவும் ———————— ஹே ர…

ஹே ராமும் பாபாவும்

————————

ஹே ராம்: காதல் இளவரசன் ஆஸ்காருக்காக எடுத்தது.

பாபா: சூப்பர் ஸ்டார் தன் மதிப்பை உயர்த்த எடுத்தது.

ஹே ராம்: கதை ஆரம்பிப்பது 1946.

பாபா: நிஜம் ஆரம்பிப்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.

ஹே ராம்: கதை முடிவது 1999.

பாபா: இனிமேலதான் க்ளைமேக்ஸே.

ஹே ராம்: மொகஞ்சதாரோவுக்கு ஆதாரம் இருக்கிறது.

பாபா: இமயமலைக்கும் உண்டு.

ஹே ராம்: ஆனால், 2000 வருஷம் கழித்து எலும்பு கிடைப்பதெல்லாம் புருடா.

பாபா: சாமி கண்ணைக் குத்திடும்.

ஹே ராம்: முடிவில் பாதாள சாக்கடையில் இறங்குகிறார் சாகேத் ராம்.

பாபா: முடிவில் அரசியலில் இறங்குகிறார் பாபா.

ஹே ராம்: மகாத்மாவை கேவலப் படுத்துவது போல் தோன்றினாலும் முடிவு நெகிழ வைக்கிறது.

பாபா: “பாபாஜி”யை நம்பாதது போல் ஆரம்பித்தாலும்…

ஹே ராம்: தேவையில்லாத கிரா·பிக்ஸ்.

பாபா: (கேரளா சென்றாலும்) அடிதடிக்கு கிரா·பிக்ஸ் தேவைதான்.

ஹே ராம்: கிரீஷ் கர்னாட், சௌகார் ஜானகி, ஓம் பூரி, நாசர் என பலர் வீணடிக்கப்பட்டார்கள்.

பாபா: ரஜினியையும், “ராமகிருஷ்ணணையும்” தவிர மற்றவர்கள்.

ஹே ராம்: பாதியில் வந்த இளையராஜா ஏமாற்றவில்லை.

பாபா: முழுவதுமாக இருந்த ரெஹ்மான் காப்பாற்றவில்லை.

ஹே ராம்: சென்னை, கல்கத்தா, காசி, டில்லி.

பாபா: கோலா வளாகம், பெங்களுர் போதும்.

ஹே ராம்: தோல்விக்குக் காரணம் படம் பாமரனுக்குப் புரியவில்லை.

பாபா: படம் தோல்வியே இல்லை.

ஹே ராம்: ஒழுங்காக மார்க்கெட்டிங் செய்து இருந்தால் ஆஸ்கார் கூட வசப்பட்டிருக்கும் .

பாபா: நிறைய செய்யாமல் இருந்திருந்தால் எதிர்பார்ப்புக்கு

ஏற்றபடி இருந்திருக்கும்.

ஹே ராம்: சரிகாவுக்கு சிறந்த காஸ்ட்யூமர் தேசிய விருது கிடைத்தது.

பாபா: அனுப்பினால் அடுத்த வருஷம் திரைக்கதைக்குக் கிடைக்கும்.

ஹே ராம்: நான் தெரிந்துகொண்டது – அவனவனுக்கு அடி விழும்வரை ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

பாபா: அடி விழுந்து அடுத்தவர்களை கொலை செய்யாமல் இருக்க வேண்டுமானால் காதலிக்காதே; கல்யாணம் செய்யாதே.

ஹே ராம்: நம்பலாம்.

பாபா: நம்புவார்கள்.

மீண்டும் வணக்கம், நமஸ்தே சொல்லி, ‘உ’, 786 எல்லாம் …

மீண்டும் வணக்கம், நமஸ்தே சொல்லி, ‘உ’, 786 எல்லாம் போட்டு ஆரம்பிக்கிறேன்.

Wednesday, August 13, 2003 அடாவடி…

Wednesday, August 13, 2003



அடாவடித்தனமா? ‘எதையும் தாங்கும் இதயமா’? நோ நான்சென்ஸ் நிர்வாகமா?

டாக்டர் புரட்சி தலைவியின் அரசு குறித்த கேள்விகள் இருக்கட்டும். சென்னையின் ஹைட் பார்க்
இடித்ததை எதிர்த்தும்
ஆதரித்தும் பல கருத்துகள் எனக்கும் தோன்றியது. ஆற்ற வேண்டியது எவ்வளவோ இருக்க, எதிர்கட்சிகள் எதிர்ப்பதும்,
ஆளுங்கட்சி ஆதரிப்பதும், நாம் மண்டை காய்வதும் ஏனோ இதை எனக்கு
அலசப்பட வேண்டிய விஷயமாக்கவில்லை.

குமரி அனந்தன் இனி திலகர் கட்டம் என அழைக்க வேண்டும் என்று
அறைகூவ மாட்டார். தினகரனும் வேறு இடத்தைத் தேட வேண்டும்.
ஆனால், சி·பி சொல்வது போல் இன்னும்
தமிழக அரசு இணைய தளத்தில் சீரணி அரங்கம் குறிப்பிடப் படுகிறது.

‘ரமணா’வில் விஜய்காந்த் பிணத்துக்கு வைத்தியம் பார்க்கவைப்பது போல்,
சீரணி அரங்கத்தை அரசிடம் ஹீரோ முன்பதிவு செய்வது மாதிரி காட்சியமைத்து,
நீதிமன்றத்தின் உதவியுடன் கட்டி தரவும் வைப்பது மாதிரி
சங்கரோ, ரஜினியோ படமெடுத்தால் மெய்மறந்து கைதட்டுவேன்.

Posted by Bala Subra on 04:04 PM



LinktoComments(‘1060808678’)

Comment


———————————————

Friday, August 01, 2003



கொஞ்சம் விளம்பரம்… கொஞ்சம் ஆவணப் படுத்தல்…

என்னுடைய முதல் குறுநாவல் தமிழோவியத்தில் வெளிவருகிறது. எப்படி இருக்கு என்று சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

இதுவரை நான்கு பகுதிகள் வந்துள்ளது.

Posted by Bala Subra on 11:04 AM



LinktoComments(‘1059753642’)

Comment


———————————————

Thursday, July 31, 2003



சிலோன் தமிழ்

இலங்கையின் தமிழ் பிரசன்னாவுக்கு பிடிக்குமாம்.

எனக்கும் கூட ரொம்ப விருப்பம். மனதைக் கவரும் சொல்லாட்சி நிறைந்தது.

மதியின் இந்த கட்டுரையை படித்தால் நிச்சயம் நீங்களும் சொல்வீர்கள்.

மதி இன்னும் நிறைய இந்த மாதிரி நடையில் எழுத வேண்டும். தமிழ் வலைப்பூக்கள் மாதிரியே, இலங்கைத் தமிழ்
இணையத்தில் தென்படும் இடங்களையும் தொகுக்கலாம்.

Posted by Bala Subra on 03:27 PM



LinktoComments(‘1059682687’)

Comment


———————————————

Tuesday, July 29, 2003

இருவர் – ஒரு பார்வை

பாஸ்கரும் சதாவும் தலைப்பில் இருக்கும் இருவர்.

சதா: பண வரவு செலவு கணக்கை பார்த்துக் கொண்டே
எழுத்துலகில் கால் வைக்க முயற்சிப்பவன். அவனுடைய
வங்கி சகி ப்ரியா.

பத்திரிகையில் வேர் ஊன்றிய பாஸ்கர், சினிமாவுக்கு தாவ
முயற்சிக்கிறான். பாஸ்கருக்கு கணினித் தாரகை ப்ரீத்தி
என்றால், சிம்ரனின் ரசிகனாய் சதாவுக்கு அனு இருக்கிறாள்.

இவர்கள் சந்திக்கும் நபர்களின் மூலம் வாழ்க்கையின்
வெற்றி அபத்தங்கள், திரை உலக ரகசியங்கள், சமூக
அவலங்கள் விவாதிக்கப் படுகிறது. வணிக பத்திரிகைகள் எவ்வாறு
இயங்குகிறது, ஒரு வெற்றி இயக்குனரின் படத்தின் முடிவில்
ஆறு பாயிண்ட் சாய்வெழுத்தில் வரும் பெயர்களின் பிண்ணனி
என்ன, குறுகிய காலத்தில் ஒளி ஓவியராவது எப்படி போன்ற
செய்முறை விளக்கங்களை கதை மாந்தர்கள் மேலாண்மை
விளக்கங்கள் அடிப்படையில் அள்ளித் தெளிக்கிறார்கள்.

பல இடங்களில் சினிமா, பத்திரிகை உலகங்கள் தோல்
உரித்துக் காட்டப்படுவது, ஆச்சரியக்குறிகளும், ‘நெசமாவா’வும்
சொல்ல வைக்கும்.

சீரியஸ் பிரச்சனைகளை தத்துவ மருந்தாய் ஆராய்ந்து
கொண்டிருந்தாலும், அனுவின் காதல் பகுதிகள் ஜனரஞ்சகமாய்
வந்து செல்கிறது. இன்னொரு தென்றல், ‘பார்த்திபன் கனவு’
மாடர்ன் ஸ்னேஹாவாக ப்ரீத்தி வந்து போகும் பகுதிகள்.

வருடத்துக்கு ரெண்டு ஹிட் கொடுக்கும் இசை சைக்ளோன்
ஆகட்டும், படத்துக்குப் படம் உருகி நடித்து கதாபாத்திரமாகவே
மாறும் புது ஸ்டார் ஆகட்டும், நூறு வித்தியாச படங்கள் கொடுத்த
பிறகும் திருப்தி இல்லாமல் தொலைக்காட்சியிலும் புதுமுகங்களை
அறிமுகபடுத்தும் இயக்குனர் அரசர் ஆகட்டும், கதையின் ஒரு
சீனில் வந்து போகும் மீடியா செய்தி நாயகர்கள் நிஜத்தை நினைவு
படுத்துகிறார்கள்.

தலித் இயக்கங்களின் வளர்ச்சி குறித்து பாராட்டும் சதா, பிராமணீய
எதிர்ப்புக் கொள்கைகளையும், திராவிட கட்சிகளின் மூன்று
மாமாங்க லாவண்யங்களையும் தொடாமல் விட்டது தொக்கி
நிற்கிறது. ஆசிரியர் பல வரலாறு நிகழ்வுகளில் வாசகருக்கு சாம்பிள்
மட்டுமே காட்டிவிட்டு, சக்கையை கழற்றி விட்டு விட்டார்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் மூட் அமைக்க மைலாப்பூர் முதல் வேப்பேரி
வரையிலான சென்னை பேட்டைகளை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார்.
தனியாக ஒரு பகுதியை படித்தால் கூட ஒரு சிறுகதை உணர்வு
கிடைப்பது, நாவலின் பலமா, பலவீனமா என்பதை அறியேன்.

நெடுங்கதைக்காக படிப்பவர்கள் இதை தவிர்ப்பது நலம்.
விகடன் டெலிசீரியலாக அறுபது காரெக்டர், முந்நூறு திருப்பம்
என்று எல்லாம் கொடுத்து குழப்பாமல் செல்லும் நடை. கடைசி
அத்தியாயத்தில் சடக்கென்று ப்ரேக் போட்டு, ‘முற்றும்’ பலகைதான்
மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒட்டாத சியரா லியோன.

சில மேல்தட்டு நபர்கள் வந்து சென்றாலும், வெங்கடேஷ் நடுத்தர
வர்க்கம் என்னும் சூழலை விட்டு இன்ச் கூட நகரவில்லை.
நான் பார்த்த, வளர்ந்த மிடில் க்ளாஸ் தெளிவாக விவரிக்கப் படுகிறது.
உளவியல் காரணங்களுடன் அலசப்படுகிறது. தீர்வுகள்
தீர்மானிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி டாகுமெண்ட்
செய்யப்படுகிறது.

உலகம் விரும்பும் படி வாழ்வதா அல்லது மனம் சொல்லும் படி
வாழ்க்கையை அமைத்துக் கொள்வதா என்னும் இரு தலை
எண்ண வெளிப்பாடுகளே பாஸ்கர் சதாவின் இருவர்.

அசை போட வேண்டிய பகுதி: பிள்ளையார் சதுர்த்தி – அத். 20
சினிமா சான்ஸ் கிடைத்தால் படிக்க வேண்டிய பகுதி: அத். 23

ரசித்த பன்ச் வரிகள்:
1. மக்களுக்குத் தேவை ஜில்லென்ற கனவு. எதார்த்தமல்ல.

2. தேவைக்கேற்ப உப்புமா கிளறும் வேலையைத்தான் அவன்
செய்து கொண்டிருந்தான்.

3. “இதத்தான் நான் மிடில் கிளாஸ்னு சொல்றேன்…
தைரியமா எந்த முடிவும் எடுக்க முடியாம, இது தப்பா அது
ரைட்டான்னு மண்டைய ஒடச்சிக்கற பாரு…”

4. எதுவும் பக்கத்தில் இருந்தால் அதன் சிறப்பு புலப்படுவதில்லை.

5. அர்த்தங்கள் உற்பத்தி செய்யப்படுவன. அந்த அர்த்த நம்பிக்கைத்
தூண்களின் மேல் கட்டப்படும் கோபுரங்களே வாழ்க்கை. இந்த
அர்த்தங்களையும் நம்பிக்கைகளையும் கேள்வி கேட்கும் பழக்கம்
உண்டானதே பெருந்தவறோ?
*————*————*————*————*
இருவர்: ஆர். வெங்கடேஷ்.
மதி நிலையம் – 222 பக்கங்கள் – ரூ. 55/-

*————*————*————*————*

Posted by Bala Subra on 10:11 PM



LinktoComments(‘1059534616’)

Comment


———————————————

Monday, July 28, 2003



நானும் வலைப்பூக்களும்

ஒரு வழக்கமான திங்கள் காலை. பத்து மணிக்கு அலுவலகத்திற்குள்
நுழைந்தவுடன் பார்த்தால், தொலைபேசியின் குரல்மடலுக்கான விளக்கு
மின்னி மின்னி காட்சியளித்தது. செய்தி என்னவென்று போட்டு பார்த்தால்
என்னுடைய பாஸ்; அவசர வேலையன்றை அன்றிரவுக்குள் ‘முடிக்க
முடியுமா’ என்ற அன்பு கட்டளை. அவரை அழைத்து, அந்த வேலையின்
கஷ்டங்களை விளக்கி, வாரயிறுதி வரை வாய்தா வாங்கிக் கொண்டேன்.

ஆசுவாசபடுத்திக் கொள்வதற்காக இணையக் குழுக்கள் பக்கம் தலை
நீட்டினேன். என்னுடைய சனி, ஞாயிற்றின் நிகழ்வுகளை பதிவு செய்து
அனுப்பித்தேன். வேறு சிலரின் குறிப்புகளுக்கு இரண்டு வரி பதில் கொடுத்தேன்.
உள்பேசி குறுகிட்டது. மீண்டும் என்னுடைய மேலாளர்.

‘ஒரு நிமிடம் இங்கு வர முடியுமா?’

சென்றவுடன் அவரும் என்னுடைய வலைப்பதிவில் குடி கொண்டிருந்தார்.

‘இதனால்தான் அவசர வேலை முடிக்க முடியாது என்றாயா?’

என் வேலைக்கு ‘டாட் காம்’ வைக்கும் கேள்வியை முன் வைக்க,
அவற்றை ‘மேட்ச் ·பிக்ஸிங்’கில் மாட்டின கபில் தேவ்வாய் சமாளித்தேன்.

Web Blog எனப்படும் வலைப்பூக்கள், ஒருவரின் தனிபட்ட வலை பக்கம்.
ஒரு சிலர் அனைவருக்கும் திறந்து விடுகிறார்கள்; சிலர் தங்களின்
படைப்புகளை வெளியிட்டுக் கொள்கிறார்கள். சிலர் தாங்கள் மேயும் இணைய
தளங்கள், கண்ணுற்ற படங்கள், கேட்ட செவிவழி வதந்திகள், படித்ததில் பிடித்த
வரிகள், பார்த்த நிகழ்ச்சிகள், எனத் தொகுத்தளிக்கிறார்கள். பலர் தங்களை
படைப்பாளியாகவும், பத்திரிகையாளனகவும், தேர்ந்த விமர்சகராவுமே எண்ணுகிறார்கள்.
அடுத்தவரின் டைரியை படிக்க விரும்பும் அனைவரும், நேசித்து நுழைகிறார்கள்.

நய்பால் போன்ற பலர் டைரி குறிப்புகளை வைத்து சிறுகதை எழுதியுள்ளார்கள்.
அமெரிக்காவில் ‘ரியாலிடி டிவி’யின் மோகம் ஆட்கொண்ட இந்நேரத்தில்,
வலைப்பூக்கள் புகழ் பெறுவது எளிதானது. மற்றவரின் அந்தரங்கங்கள் அறிவது முதல்
குறிப்பிட்ட கருப்பொருட்களில் ஆழ்ந்த அறிவை சீக்கிரம் பெறுவது வரை பல
உபயோகங்கள் உடையது இந்த வலைப்பூ.

வலைப்பூ, தமிழ் இணையக் குழுக்களில் நிறைய காணப்படுகின்றன.
பூக்களாய் இல்லாமல் பல சமயம் அனுப்புபவர்களுக்குக் தோட்டாக்களாக
மாறிய அனுபவங்கள் என் நண்பர்களில் பலருக்கு உண்டு. எங்களுடைய
12டிகூத்தாடிஸ் மடலாடற்குழுவில் பள்ளி தோழி, தனது காதலனின்
குணாதிசயங்களை விவரித்ததை, எங்கள் பக்கங்களுக்குள் தடுக்கி விழுந்த,
fiancee படித்துவிட, நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது.

இணைய உலகில் கிட்டதட்ட முப்பது லட்சம் வலைப்பூக்கள் உள்ளன. இவற்றுள்
தமிழ் வலைப்பூ ஒரு கை விரல்களை நீட்டுவதற்குள் அடங்கி விடும். ஆங்கில
எழுத்தாளர்கள் மிக்கி கௌஸ், ஆண்ட்ரூ சலைவன் போன்றோரின் வலைப்பூக்களுக்கு
இணையத்தில் பலத்த ஆதரவும் எதிர்பார்ப்பும் உள்ளது. அவ்வாறே தமிழ் இணையக்
குழுக்களில் எழுதும் இரா. முருகன், மாலன், போன்றோருக்கும், அவர்கள் எங்கு
வலைப்பூக்கிறார்கள் என்று அறிந்தவர்களிடத்தில் வரவேற்பு உள்ளது. ஆனால்
ஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் சில ஊடகங்களில் எழுதினாலும், முழுமையாக
பயன்படுத்துவதில்லை.

மற்றவர்களின் கவனத்தைக் கவர்வதாற்காகவே பலர் தங்கள் அபிப்ராயங்களையும்,
சிலர் தங்கள் படுக்கையறை விவரங்களையும் அனைவரும் படிக்க அனுப்புகிறார்கள்.
கலை தாகத்துக்காக படம் எடுக்கும் கமலுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள்
இல்லை.

கடந்த வருடத்தில், ஹார்வார்ட், எம்.ஐ.டி போன்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
அதிகாரபூர்வமாகவே வலைப்பூக்க விட்டன. அதிவிரைவில் தினபூமி படிப்பதை
நிறுத்திவிட்டு, வலைப்பூவில் நண்பர்கள் சொல்லும் தகவல்களும், பாதிக்கபட்டவர்களின்
நேரடி அனுபவங்களும் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

தனி மனிதனின் குரல், பாரெங்கும் உரத்து ஒலிக்கக் கூடிய வாய்ப்பை பறை
சாற்றுகின்றன வலைப்பூக்கள். கேட்க வைப்போமா?

-பாலாஜி
பாஸ்டன்

வலைப்பூக்கள் பெயர் ஆக்கம் நன்றி: திரு. மணி மு. மணிவண்ணன்

Posted by Bala Subra on 03:56 PM



LinktoComments(‘1059425700’)

Comment


Tuesday, August 19, 2003 அனு மாலி…

Tuesday, August 19, 2003



அனு மாலிக்-களும் ப்ரியதர்ஷன்-களும்

‘விசில்’ படத்தில் ஒரு பாடல் வரும்.

‘திருடி திருடி சுட்ட பழம்’ ‘வருடி வருடி சுடாத பழம்டா’
‘தடவி தடவி சுட்ட பழம்’ ‘தழுவி தழுவி சுடாத பழம்டா’

விசில் படம் ‘Urban Legend’-இன் FDA சான்றிதழ்
கிடைக்கக்கூடிய 100 சதவிகித மொழி மாற்றம். ஆங்காங்கே “Scream”, “I Know What You Did Last Summer”-உம் சிறிய அளவில் கலந்திருப்பார்கள்.

‘கற்றது பெற்றதில்’ ப்ரமோசன் கொடுக்கையில்,
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ‘ராசநாராயண்’ கதை என்று வக்காலத்து வாங்க மட்டும் வசனகர்த்தா தவறவில்லை.

கமல் அளவு வேணாம். வெளிநாட்டு சரக்கை, லோக்கல் நாக்குக்கு கலந்து கொடுக்க
கமலின் ஒரு துளியை அடைவதற்காகவாவது, அவரிடம் க்ளாஸ் கேக்க வேண்டும்.

Posted by Bala Subra on 04:43 PM



LinktoComments(‘1061329388’)

Comment


———————————————

Monday, August 04, 2003



பொருளாதார மந்த நிலை கட்டுப்படுத்தப்பட்டு விட்டது?

தேசிய பொருளியல் ஆய்வு மையம் ஒரு சுவாரசியமான ஆனால் பயனில்லாத தகவலை
வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார சரிவு நவம்பர் 2001-இல் முடிந்து
விட்டது என்கிறார்கள். விரிவான செய்தியை ஹ¥வர்ஸில் படிக்கலாம்.

எனக்குத் தெரிந்து கணினி தெரிந்த இந்தியர்களுக்கு இன்னும் எளிதில் மாற்று
வேலை கிடைப்பதில்லை. ஜாவா தெரிந்தவர்களும், கற்கால மெயின்·ப்ரேம்
வித்தகர்களும், பச்சை அட்டை இருந்தாலும் இரு வருட காலமாகத் ததிங்கிணத்தோம்
போட்டுக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். ஹெச்-1 பி மக்கள் நிலையோ இன்னும்
கொடுமை.

நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்குப் பஞ்சப்படி, கசையடி பெறாமல் கம்பெனி மாறுதல்
என சில சௌகரியங்கள் இருக்கிறது. விசா மக்களுக்கோ ஓரிரு வாரங்கள் மட்டுமே,
வேலை போனபிறகு ஊர் சுற்ற அனுமதி. அதற்குள் தங்கள் உடமைகளை பொட்டலம்
கட்டிக்கொண்டு கூடுவாஞ்சேரியோ, கீழக்கரையோ வந்து சேர வேண்டியதுதான்.

ராஜ்ஜியத்தில் மும்மாரி பெய்யாவிட்டாலும், அரசர் சரியில்லை என்று சொல்லும் நம்ம
ஊர் பழக்கம் அமெரிக்காவிலும் நிறைய உண்டு. வீட்டில் உட்கார்ந்து தண்ட சோறு
சாப்பிடுபவர்களின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளிலேயே இல்லாத அளவு மிக
அதிகமாக ஆறரை விழுக்காட்டில் இருப்பதற்கும், அதிபர் ஜார்ஜ் புஷ்தான் காரணம்
என்கிறார்கள் எதிர்கட்சிகள்.

‘எனது நீதிபதிகள் மக்களே’ என்ற புஷ், புதிய திட்டம் தீட்டுவதில் புத்தியை
செலவழிக்காமல், அவர்களை அடுக்கு மாடி அங்காடிகளுக்கு சென்று செலவழிக்க
சொல்கிறார். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா நானூறு வெள்ளிகளுக்கு
காசோலை அனுப்பி வைக்கப் போகிறார்கள் புஷ்ஷின் அரசாங்கம். ஏதோ அவசரத்துக்கு
கைமாத்துப் பணமாவது கொடுக்கிறானே என்று அடுத்த வருடம் வரை ஞாபகத்தில்
வைத்திருந்து யானை சின்னத்தில் குத்துவார்களா?

Posted by Bala Subra on 03:48 PM



LinktoComments(‘1060029602’)

Comment




தமிழும் எளிமையும்

“ஹிந்திக்கு எதிராக எனக்கு ஒரு வருத்தம் உண்டு. அது எளிமையாக இருக்க வேண்டும்!
என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கே சில சமயம் விளங்குவதில்லை”
வாஜ்பாய்

நன்றி: இந்தியா டுடே

Posted by Bala Subra on 02:40 PM



LinktoComments(‘1060025925’)

Comment


———————————————

Thursday, July 31, 2003



சொந்தக் கதை சோகக் கதை

என்ன்னுடைய கம்பெனிக்கு நேரம் சரியில்லை. எல்லாம் ஜுபிடர் பெயர்ச்சியினால்தான்
என்று நினைக்கிறேன். மூன்று மடங்கு அதிகம் காசு கேட்பவன் பக்கம்
நியாயம் இருக்கிறதா என்று தீர ஆராயுமாறு நீதிமன்றம் சொல்லி விட்டது!

இந்த ஏலக்குத்தகை குறித்த நிகழ்வுகளைக் காணும் போதெல்லம், ஏனோ Mr. பாரத் படம்
நினைவுக்கு வந்து செல்கிறது. எது எப்படியோ அம்பிகாவுக்கு வேறு வேலையாவது கிடைத்து
இருந்தது. எனக்கும் ஒரு சுபமான தீர்ப்பு, அடுத்த குருப் பெயர்வுக்குள்ளாவது தெரிய வேண்டும்.

Posted by Bala Subra on 03:43 PM



LinktoComments(‘1059684214’)

Comment


———————————————

Thursday, July 24, 2003



பொய் சொன்ன வாய்க்கு (மட்டுமே) போஜனம்

தருண் தேஜ்பால் ஒரு உருக்கமான மின்மடல்
அனுப்பி இருந்தார். டெஹல்காவின் சோகக்கதையை
சுருக்கமாக சொல்லி, சந்தாதாரர் ஆகுமாறு இறைஞ்சி
இருந்தார். சீக்கிரமே ஒரு வாரயிறுதி செய்தித்தாள்
ஆரம்பிக்கிறார்கள்.

ஆரம்பித்த ஒரு வருடத்துக்குள் ராணுவ பேர அம்பலம். அங்கு ஆரம்பித்தது
சனிப் பெய்ர்ச்சி. தலித்துகளின் எதிரி; அர்ஜுன் சிங் உறவினர்; காங்கிரஸ்
ஆதரவாளர்; விபச்சாரத்துக்கு துணை போகிறவர்கள் என குற்றம் சாட்டிய
எதிரணி சுறுசுறுப்பான 120 பேரை மூன்றாக குறைத்திருக்கிறார்கள்.

மீரா நாயர், ஷாருக், சோபா டே, என பல பிரபலங்களை ஆதரவு கொடுக்க
வைத்து அக்டோபரில் பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள். ராம் ஜெத்மலானி,
நய்பால், கபில் சிபல், ஷ்யாம் பெனகல் என்று சிந்தனையாளர்களை அடக்கி
ஒரு ஆலோசகர் குழுவையும் அமைத்து இருக்கிறார்கள்.

(‘நேட்சர் பவர்’ விளம்பரத்தின் உதவியுடன்)
‘நல்ல விஷயங்கள் அதிகம் இருந்தால் ஆதரிக்கத்தானே வேண்டும்’?

அடி குறிப்பு:
தமிழில் ஒரு பழமொழி உண்டு:
‘பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது!’

தமிழின் அனைத்து பழமொழிகளையும் பழுது பார்த்து, புது யுகத்திற்கு ஏற்ப
செப்பனிட வேண்டும்.

Posted by Bala Subra on 05:52 PM



LinktoComments(‘1059085096’)

Comment


———————————————

Wednesday, July 23, 2003

ஐந்து வயதிலும் ஆசை வரும்

நான் பள்ளியில் பயாலஜி படிக்காதவன். ஆனால், அப்பொழுதே மாணவர்களுக்குக்
கலவிக் கல்வி பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அறைகூவலிட்டுக்
கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள், ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு,
பாலியல் கல்வி பயிற்றுவிக்கப் பரிந்துரைக்கிறார்கள். முக்கியமாக
பசங்களுக்குக் கற்று கொடுத்தாலே போதும் என்கிறார்கள்.

ஒரு குழந்தை கூச்சப் பட்டுக் கொண்டோ, பயப்பட்டுக் கொண்டோ இருந்தால்
தவறான தகவல்களை கற்றுக் கொள்ளும். அதற்காக, பெரியவங்க விஷயத்தை
புட்டுப் புட்டு வைத்து விட்டால், களங்கமில்லாத இள வயதை இழக்க நேரிடும்.
பெற்றோரே குழந்தைகளோடு நெருக்கமான, சுதந்திரமான உறவை வைத்துக்
கொண்டாலும் இந்த சந்தேகங்களை கேட்டுத் தெளிவார்களா?

ஒரு பெண் ‘எந்த கான்டம் எப்படி உபயோகிப்பது’ என்று தன்னுடைய தந்தையிடம்
கேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்? இருக்க வேண்டும்?
வயசுக்கு வருவது, குழந்தை எப்படி பிறக்கிறது என்பதோடு நிறுத்திக் கொள்ள
வேண்டும்!?

நன்றி: பிபிசி

Posted by Bala Subra on 03:59 PM



LinktoComments(‘1058993903’)

Comment


———————————————

Tuesday, July 22, 2003

இவ்வாறு சொன்னால்?
longitude – நில நிரைக்கோடு

Posted by Bala Subra on 06:01 PM



LinktoComments(‘1058914740’)

Comment




பிரான்சில் ஈ-மெயிலுக்குத் தடா

·பிரென்ச் அரசாங்கம் ‘E-Mail’ என்னும் வார்த்தையை உபயோகிக்கத்
தடை செய்துள்ளது. ஏற்கனவே ‘வாக்மேன்’ நீக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டிலும் இவ்வாறு பலமுறை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ இருக்கும் பலகைகளைத் தமிழ்படுத்துவது;
ரயில் நிலையங்களில் கரி பூசுவது என்று…

பிரான்ஸ் செய்வதால் தமிழர்கள் செய்தார்களா?
தமிழரைப் பார்த்து ·பிரான்ஸ் செய்கிறதா?

(‘கொடி அசைந்ததும் மெட்டில் படிக்கலாம்’)

நன்றி: சிலிகான்.காம்

Posted by Bala Subra on 05:51 PM



LinktoComments(‘1058913687’)

Comment


தமிழ் எழுத்துரு வரவழைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது.
உதவி பக்கத்தில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்?

Posted by Bala Subra on 05:39 PM



LinktoComments(‘1058913494’)

Comment




வணக்கம்

Posted by Bala Subra on 03:55 PM



LinktoComments(‘1058907296’)

Comment