Tag Archives: Bangalore

விஸ்வரூபம் meets Inception

விடியற்காலையில் எல்லோரும் எழுந்து வேலைக்கும் கல்விக்கும் கிளம்பும் நேரத்தில் நான் மட்டும் உறங்குவது பிடித்தமான விஷயம்.

அரை முழிப்பு இருக்கும். அடித்துப் போட்டது போல் தூக்கமும் இருக்கும். என்னை சுற்றி அனைவரும் ஓடிக் கொண்டிருக்க, நான் மட்டும் நின்று நிதானித்து ரசிப்பது போல் இருக்கும்.

அப்படித்தான் இன்றும். அப்பொழுது கனவு அவசியம் வரும். வீட்டில் எல்லோருமாக கிளம்பி பெங்களூர் போகிறோம். நான் பெங்களூரூவிற்கு சென்று இருபதாண்டுகளாகி விட்டது. அதனால் நிறைய மாற்றம். மல்லேஸ்வரம் முழுக்க high rise கட்டிடங்கள். அங்கேதான் என் நண்பர் அழைத்திருக்கிறார்.

அபார்ட்மெண்ட் காப்ளெக்சினுக்குளேயே கோவில் வருகிறது. ஆங்காங்கே பார்வதியும் பரந்தாமனும் வருகிறார்கள். சூட் போட்டர்வர்கள் ஷூ அணிந்தே பரமசிவன் பாதாந்தர விந்தங்களை தொடுகிறார்கள்.

வீட்டைத் தேடுகையில் mall வருகிறது. ஷாப்பிங் செய்ய மனைவி அழைக்கிறாள். Inception மாதிரி அவள்தான் என் கனவை ஆக்கிரமித்து விதைகளை இட்டு வைக்கிறாளோ என சுதாரித்தேன்.