Tag Archives: விமர்சனம்

வார்த்தை :: மே மாதம் – சிவிறுதல்

இது முதல் மாத அறிமுகம்: வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)

சென்ற மாத ‘வார்த்தை’க்கு மதிப்பெண். இந்த மாதம் நச்சுன்னு சில வரிகளில் அறிமுகம்:
(குறிப்பிடத்தக்க, தவறவிடக்ககூடாத இடுகைகள் தடிமன் செய்யப்பட்டிருக்கின்றன)

வியனுலகு அனைத்தையும் அமுதென நுகர்வோம் – தலையங்கம் :: பிகேசி

அச்சு ஊடகங்களில் அதிகம் எழுதாத குறைந்தது எழுவர் எழுதியிருந்தனர்… முன்னோடி பத்திரிகைகளின் சாயல் தெரிகிறது என்று சிலர் சொன்னார்கள்.

இணையத்தில் இருந்து சிலரை அறிமுகம் செய்துவைத்தாலும் அவர்களும் வலைப்பதிவுகளுக்கேயுரிய எந்தவித மாற்றமும் இல்லாமல் அறிமுகமாவது பொம்மரில்லுவை சந்தோஷ் சுப்ரமணியம் ஆக்கியது போல.

கடிதங்கள்

மாற்று சிந்தனைகளை முன்வைக்கவில்லை

ஜெயகாந்தன் பதில்கள்

குசேலன் படத்தில் பத்து நாயகிகளோடு சூப்பர் ஸ்டார் மட்டும்தான் நடனம் ஆட வேண்டுமா? அயிட்டம் பாட்டு

ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் – கே.எம். விஜயன்

வக்கீலய்யாவின் குறையைப் போக்குகிறது.

நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் – முருகபூபதி

ஏதாவது புதிய நிரலி ப்ராஜெக்ட் ஆரம்பிப்பதற்கு முன் வார்ப்புருவில் சில கோப்புகளைக் கேட்பார்கள் – இங்கே ஆசிரியர் வார்ப்புருவுக்குள் ஆயிரம் வார்த்தைகளில் ஆஸ்திரேலியாவும் தமிழும் வருங்காலமும் என்கிறார்.

பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள் – கே. பாலமுருகன்

மிக மோசமான தொனியில் செய்துகாட்டிக் கிண்டல் அடிப்பதையும் எவ்வளவு சாதாரணமாக நமட்டுச் சிரிப்புடன் கடந்து விடுகிறான். கடந்து செல்லுதல் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? இவன் கிறுக்குத் ‘தேவனாகத்தான்’ இருக்க முடியும். கிறுக்கனாக இருந்தால்தான் இவர்களைக் கடக்க முடியும்

சிறுகதை என்பது episodic ஆக இருக்கும். இதில் novelistic தன்மைகள் எட்டிப் பார்த்தாலும் புரியாத பாஷை படத்தின் துணையெழுத்தை மட்டும் படித்து விட்டு திரைக்காட்சியைத் தவறவிட்ட அயல்தன்மை.

தமிழில் தேவாரம்: பின்தொடரும் நிழல்கள் – வெளி ரங்கராஜன்
ஐபிஎல் கிரிக்கெட் குறித்து context sensitive ஆக பதிவிட வேண்டும் என்னும் ஆர்வத்தில் ஊக்கமாதுக்களையும் பார்வை நங்கையரையும் மட்டும் சாடிப் பதிவிடுவது போல் ஜாதி, சிதம்பரம் என்று திசை மாறி தடுமாறாமல் ஆட்டத்தைக் குறித்தும் செல்போக்குகளைக் குறித்தும் எளிமையான வரலாற்று அலசல்.

ஆர்தர் சி. கிளார்க்: அறிவியல் புனைவும் முன்னோக்கிய பார்வையும் – துகாராம் கோபால்ராவ்

பல்வேறு இலக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் எதுவுமே தமிழில் வருவதில்லை. வருவதும், மொழிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன. இவற்றுக்கான ஊற்றுத்தளம் இங்கே இல்லை. முயல்பவர்களுக்கு பிரசுரிக்க தளம் இல்லை. படிக்கும் வாசகர் வட்டம் இல்லை. ஐந்து கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் இதற்கு ஆயிரம் பிரதிகள் கூட அச்சடித்து விற்கும் பத்திரிகைகள் இல்லை

நீங்கள் வார்த்தை வாங்குவதற்கான காரணம் #1

கார்ட்டூன்: துக்கா
பாலபாரதி கட்டுரை அனுபவமாக விவரித்ததை எளிமையான அணுகக் கூடிய கருத்துப்படமாக்குகிறார்.

அரவக்கோனின் இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்: புத்தக விமர்சனம் – மோனிகா
சன் டிவி தயாரிக்கும் படத்தை, டாப் 10 இல் முதலிடம் கொடுத்து 25 வாரம் சுரேஷ் விமர்சிப்பார். ஆனால், எனி இந்தியன் வெளியீட்டை, எனி இந்தியன் வெளியீடே நிறைகுறைகளை முழுமையாக அலசுவது வரவேற்கத்தக்க ஆச்சரியம்!

யுகசந்தி – சுகா

மலையாளிகள் வாழ்க்கையிலிருந்து படம் எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த மாதிரியான உணர்வு எப்போது வரப்போகிறது என்றெல்லாம் புலம்பினேன். பொறுமையாக நான் சொல்வதைக் கேட்ட பாலு மகேந்திரா “நீ ஜேகேயோட ‘மௌனம் ஒரு பாஷை’ படித்ததில்லையா” என்று கேட்டார்.

சென்றவாட்டி சுகாவிற்கு சொன்ன அதே கருத்துதான் இந்தவாட்டியும்.

உயிர்சுழி – சுப்ரபாரதி மணியன்
பாலமுருகன் pretentious ஆன ஆக்கம் கொடுத்து வாசகனை டிம்பக்டூவுக்கு அனுப்பி வைத்ததற்கு நேர்மாறான அனுபவம். விறுவிறுப்பு, பதைபதைப்பு, இருண்மை என்று கவிதை போல் விரிந்தாலும் திகிலும் சுவையும் மீள்வாசிப்பிலும் தொடரும் சுழி.

வார்த்தை இதழை வெளியீட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

சர்வாதிகாரத்தை விட கொடுமையானது ஜனநாயகம். (பலத்த கைதட்டு)… யாராவது அமெரிக்காகாரன் வந்து அடக்கினால்தான் சரியாக இருக்கும்…. இலக்கியவாதிகள் பொறுமையில்லாதவர்கள் அல்ல. அவர்களுக்கு எங்கே செல்லுமோ அங்கே அவர்கள் எல்லாம் செய்வார்கள். செல்லாத இடமும் அவர்களுக்குத் தெரியும்.

எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது – வ. ஸ்ரீனிவாசன்

சலிப்புக்கு மாற்றாக அமைவது என வ.ஸ்ரீனிவாசனின் பத்தியையும் சொல்லலாம். குறுங்கட்டுரைகளைப்போலவே வணிக இதழில் இடமில்லாமல் சிற்றிதழாளர்களால் கவனிக்கப்படாமல் தேங்கிப்போன ஓரு எழுத்துத்தளம் இது. பத்தி என்பதன் சிதறுண்ட வடிவமும் மொழிவிளையாட்டுகளும் நகைச்சுவையும் …சரியான உதாரணம் ஸ்ரீனிவாசனின் கட்டுரை.

முதல் இதழில் கலக்கிவிடுவது எளிது. இரண்டாவது ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தி ஜெமோ சொல்வது போல் தோனி ஆகியிருக்கிறார்.

நிழலின் குரல் – ஜெயந்தி சங்கர்
முந்தைய சிறுகதைகளை விட இதில் அனுபவம் மேலும் ஒன்றவைத்து கேள்விகளை தேக்கி உள்விவாதங்களை எழுப்புகிறது. ‘ஒவ்வொரு கதைக்கும் அதன் பௌதிக அளவைச் சாராத சந்தம்/கதி/லயம் இருக்கிறது‘ என்று சென்ற கட்டுரையில் வ.ஸ்ரீ சொல்லியது போல் அப்பாவின் பதில் அதிகப்பட்டு இருப்பதை தவிர்த்து தணிக்கை செய்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

அமெரிக்கா என்றொரு அற்புதம் (ஒரு தேர்தல், ஒரு மதத்தலைவர், ஒரு திரைப்படம்) – கோபால் ராஜாராம்

முன்தொக்காக வந்திருந்த லூயிஸ் கரோல் குறிப்பு பிடித்திருந்தது. மற்றபடிக்கு தமிழக டம்மீஸ்களுக்கான அமெரிக்க ‘க.பெ.’

ஏ.ஜே.பி. தைலர் எழுதிய மார்க்சியம் ஒரு மீள்நோக்கு – தமிழில்: மணி வேலுப்பிள்ளை
ஜார்ஜ் புஷ் பேசினால் என்ன சுவைக்கப் போகிறது என்று அசிரத்தை கலந்த அலட்சியத்துடன் ஆரம்பித்தாலோ என்னவோ ஆச்சரியப்பட வைக்கிறது.

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச. குப்புசாமி

பாடலில் இருந்த சொல்லின்பம் அத்தகையது போலும். இவ்வாறுதான் வாழ்க்கையைப் பற்றி அர்த்தப்படுத்திக் கொள்ள நேர்கிறது! இப்படியெல்லாம் கூட அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றால், அப்புரம் வாழ்ந்துதான் என்ன பயன்?

கலாம் முதல் ஒபாமா வரை தாரக மந்திரமாக்கும் நம்பிக்கை முதல் உறுதிமொழி வரை ஊக்கமருந்தாக்கும் வித்தையை வித்தையில்லாமல் உள்ளது உள்ளபடி பகிரும் பாங்கு.

படிக்காத மேதை – புத்தக வாசமில்லாத விமர்சகர்

கரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்று சன்னாசி பதிவெழுதியிருக்கிறார்.

மேற்கோளாகக் கொஞ்சமே கொஞ்சம்:

அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் – எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது – உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு – எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே.

இப்பொழுது இதற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று உங்களைப் பணித்தால் எப்படி ஆரம்பிப்பீர்கள்?

முதலில் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.

‘பால்சாக்’கின் Lost Illusions நாவலின் நாயகனிடம் அவன் நண்பன் சொல்வதை வேதமாக வைத்துக் கொள்ளவும்:

ஒரு நாவலைக் கூட தவறவிடாமல் படித்துவிடுவாள் என்னுடைய காதலி. என்னிடம் விமர்சனத்திற்காக வரும் புத்தகத்தை அவளிடம் கொடுப்பேன். ‘நாவல் ரொம்ப போர்’ என்று அவள் சொன்னால்தான், நான் படிப்பேன். முடிந்தவரைக்கும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதுவேன்.

அடுத்ததாக அடிக்கடி சொல்லப்படும் வாசகம் “the author is dead”. இதை நம்ப வேண்டாம் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதியாக்கியுள்ளன. ஜெயமோகன் என்றால் வாசிக்கமாட்டேன் என்பது போன்ற சமகால நிகழ்வுகளும் இந்தக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்க வைக்கிறது.

ஐஸ்க்ரீமுக்கு சாக்லேட் சாஸ் ஊற்றுகிறோமா அல்லது ஸ்ட்ராபெர்ரி ரசம் தெளிக்கிறோமா என்பதைப் பொறுத்து சுவை மாறும். ஆசிரியர் பெயர் என்ன வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து விமர்சனம் வேறுபடும் என்பதற்கு டேவிட் லாட்ஜின் ‘Changing Places: A Tale of Two Campuses‘ நூலை துணைக்கழைக்கலாம்.

வகுப்பறையின் முதல் நாளில் ஆசிரியரால் அறிமுகமாக்கப்படும் ஒரு விளையாட்டு:

  • நீங்க இதுவரைக்கும் வாசிக்காத புத்தகத்தை நினைச்சுக்குங்க…
  • நெனச்சாச்சா?
  • இப்ப வகுப்பில் யாரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்காங்களே, உங்களுக்கு ஒரு மதிப்பெண்

இதுதான் விளையாட்டு. வெட்கப்படவைத்து ‘அது கூட வாசிக்காதவரா!?’ என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி ‘முதல் ரேங்க் வாங்கணும்!’ என்று துடிப்பவர்களுக்கு தர்மசங்கடப்படவைக்கும் ஆட்டம்.

முதலிடம் பெற வேண்டுமானால், தன்னுடைய அறியாமையை போட்டுடைக்க வேண்டும். ‘காந்தியின் சுயசரிதை‘யை நான் படித்ததில்லை என்று சொன்னால், நிச்சயம் மற்றவர்கள் ‘நான் வாசித்திருக்கிறேன்‘ என்று சொல்லப் போவதால், நிறைய மதிப்பெண் அள்ளலாம். ஆனால், ‘காந்தியக் கூட படிச்சதில்லையா‘ என்னும் ஏளனம் வந்தே தீரும்!

தமிழர்களிடம் மற்றவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய, ஆனால் தான் பார்த்திராத திரைப்படம் என்று போட்டி வைத்து வாசிப்பு போதாமையை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கலாம்.

டயலாக் விருமாண்டி நேரம்: படிக்கலன்னு சொல்லிடறவன் வீரன்; படிக்காதவனப் படிக்க வக்கிறவன் மனுசன்!

இதில் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட புத்தகம் அல்லது ஆசிரியர் எவ்வளவு தூரம் புகழடைந்திருக்கிறார் என்பதை புறங்கையால் தள்ளக்கூடியவரா என்பதையும் பொறுத்து — இலக்கியத்தரமாக இருக்கிறதா அல்லது வெகுசனத்தரமாக இருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் கிழிக்கலாம்.

கடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose‘ பயன்படும்.

வாடிகனுக்குள் மிக மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. ஏதாவது தேவை என்றால் மனுப் போட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து, ஐம்பது கிலோமீட்டர் எட்டி நின்று வாங்கிக் கொண்டு போகலாம். அந்த மாதிரி ஓரிடத்தில் கதை நடக்கிறது. வடக்கு இத்தாலி. மர்மமான முறையில் சாவு. பினங்கள் குவிகிறது. யார் கொன்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

டேன் பிரௌனின் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் ராஜேஷ்குமார் வகையறா என்றால், இது பின் நவீனத்துவ உம்பர்ட்டோ இகோ வகையறா.

எதற்காக எல்லாம் கொல்லப்படுகிறார்கள்? இரகசியமாகப் பாதுகாக்கப்படும் புத்தகத்தை கண்டடைந்தவர்கள் எல்லாருமே இறந்திருக்கிறார்கள். எப்படி இறந்தார்கள் என்பதும் மர்மம். ஆனால், நூலைத் தொட்டவர்கள் பரமபதம் அடைந்து விட்டார்கள்.

நாவலின் இறுதிக் காட்சியில் ஹீரோவுக்கும் நம்பியார் போன்ற வயசான வில்லனுக்கும் இடையே விவாதம். தாத்தாவாகிப் போன பாதுகாவலருக்கு கண் பார்வை முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அவ்வளவு கடும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தகம் ‘நகைச்சுவை’யின் ரசங்களை விவரிக்கும் அரிஸ்டாட்டிலின் அங்கத இலக்கிய ஆய்வு.

புத்தகத்தை தவமாய் தவமிருந்து தேடல் முடிவில் பெற்றவர்கள் — எப்படி இறந்தார்கள்?

இப்பொழுது பழசாகிப் போன டெக்னிக். தாள்களில் விஷம் தோய்ந்திருக்கிறது. பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், நாக்கில் எச்சில் தொட்டுக் கொள்ள, விடமேறி மர்ம மரணம் அடைந்திருக்கிறார்கள்.

பலான படத்தை டவுன்லோடும் அவசரத்தில் வைரசைக் கொண்டு வந்த கதையாக, முந்தைய வாசகர்கள் அனைவரும் முட்டாளாக கையுறை அணியாமல் புத்தகத்தை புரட்டியிருக்கிறார்கள். ஹீரோ அதி புத்திசாலி. கையுறை அணிகிறார். என்றாலும், புத்தக ஓரங்கள் கையுறையையும் சிராய்த்து கிழிக்கின்றன. பக்கங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை, புரட்டக் கூட இயலாமல், அந்த நூலில் என்ன எழுதியிருக்கிறது, யார் எழுதினார்கள் என்பதைப் பார்க்காமலே, படிக்காமலே உணர்ந்து கொள்கிறார் ஹீரோ!

நீண்ட நெடுங்காலமாக காவல் காக்கும் வயதான மூத்த முனிவரும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. எங்கே புரட்டினால், பகிடியும் நக்கலும் தன்னையும் தொற்றிக் கொண்டு, தானும் இறை நிந்தனையில் இறங்கிவிடுவோமோ என்னும் அச்சம். நையாண்டியில் திளைத்து கேளிக்கை, கொண்டாட்டத்தில் விழுந்து விடுவோமோ என்னும் பயம். அவரும் புத்தகத்தைப் படிக்காமலே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

வாசிக்க விழைந்தவர்களையும் தீர்த்துக் கட்டி, இமேஜைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

ஹீரோவோ முதற்பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு, கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் அனுமாணித்து விடுகிறான். ஹீரோவும் வில்லனும் இருவேறு நூல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அத்தியாயம் கூட வாசிக்காமலேயே தங்கள் அனுபவங்களை வைத்து, இட்டுக் கட்டி விவாதம் நடத்துகிறார்கள்.

விமர்சகரின் வேலையும் இதுதான்.

கட்டாங்கடைசியாக, இவ்வளவு ஆராய்ந்து அனுபவித்து புகழ்ந்து விதந்தோந்து விமர்சனம் எதற்காக எழுதுகிறோம் என்பதை ஆஸ்கார் வைல்ட்-டின் ‘படிக்கலாமா? வேண்டாமா’ என்னும் கட்டுரையில் இருந்து உணரலாம்:

சிறந்த நூறு புத்தகங்களை தேர்ந்தெடுக்குமாறு என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வசதிக்காக மூன்று பிரிவாக பிரித்துக் கொள்கிறேன்.

1. சுயசரிதை, சரித்திர நூல்கள்.
2. மீள்வாசிப்பில் புது வாசல்களைத் திறக்கும் மகாகவிகளின் கவிதைகள்; தத்துவபிரக்ஞைகளின் எழுத்துகள்; ஞானிகள் அல்ல!
3. எதை எல்லாம் தொடக் கூடாது என்பதன் பட்டியல்.

படித்தால் பைசா பிரயோஜனமில்லாதது என்பதை விமர்சகர் சொல்லவேண்டும். வாசித்தால் ஊறு விளையலாம் என்பதை உணர்த்துவது முக்கியம். நூறு மோசமான புத்தகங்களின் பட்டியல் வெளியிடுபவருக்கு இந்த உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

சன்னாசியின் பதிவு உட்பட மேலேக் குறிப்பிட்ட எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. எனினும் விமர்சனம் போல் ஒன்று சமைத்தாக்க முடிகிறது. நீங்களும் இப்பொழுது விமர்சனம் எழுதத் தயாரா?

உதவிய புத்தகம்: புத்தக தினம்

உதவிய பதிவு: Literature, Science, and a New Humanities :: Jonathan Gottschall Measure for Measure – The Boston Globe: “Literary criticism could be one of our best tools for understanding the human condition. But first, it needs a radical change: embracing science”

புத்தக தினம்

“If you want to know how I know about every book here, I can tell you! Because I never read any of them.” – நியு யார்க் டைம்ஸ் விமர்சனம்

மாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை.

ரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே? என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்?’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ் கொடுத்த ரோஜெட் சுயசரிதம் என்று ஜாலியாக ஒரு மணி நேரம் ஓடியேப் போனது.

இந்த மாதிரி பேச (அல்லது வலைக்குறிப்பெழுத) என்ன செய்ய வேண்டும்?

சினிமாவிற்கு ஐஎம்டிபி என்றால், நூல்களுக்கு கம்ப்ளீட் ரிவ்யூ.

அவர்கள் மூலமாகக் கிடைத்த பரிந்துரைதான் இன்றைய பதிவுக்கான மேட்டர்: How to Talk About Books You Haven’t Read – Pierre Bayard

நல்ல நிரலி எழுதுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள், பட்டியல் எதற்கெல்லாம் போடலாம், என்று கேட்டால் நீட்டமாக பேச முடியும். படித்த புனைவுகளை ஆராய்ந்து குதறி ‘ஜஸ்ட் எ மினிட்’ ஆக கூகிள் அரட்டையில் மாட்டிக் கொண்டால்? (சமீபத்தில் கப்பி இப்படித்தான் கேட்டு வைத்தார். இந்த மாதிரி அவஸ்தை படுகிறேன் என்று அறிந்த அலுவல்பிராட்டி, என்னுடைய அரட்டை வசதியையே அனைவருக்கும் நீக்குமாறு உத்தரவிட்டு மானத்தைக் காப்பாற்றியுள்ளார்).

புத்தகங்களை நான்காக பிரிக்க சொல்கிறார்: கேள்விப்பட்டது; கேள்வி கூடப் படாதது; மேலோட்டப் பார்வை இட்டது; மறக்கப்பட்டது.

இது அவரின் கணக்கு வழக்கு:
Books he has started but not finished

  • The Man Without Qualities, Robert Musil
  • Ulysses, James Joyce

Books he has only heard others talk about

  • The Aeneid, Virgil
  • Oliver Twist, Charles Dickens

Books he has read but forgotten

  • The Interpretation of Dreams, Sigmund Freud
  • Steppenwolf, Hermann Hesse

Books about which he admits he knows nothing

  • Rhetoric, Aristotle
  • Mémoires, Joachim du Bellay

நானும் போட்டுப் பார்த்தால்…
கேள்விப்பட்டது

கேள்வி கூடப் படாதது

  • விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  • கடல்புறா – சாண்டில்யன்
  • பாழி – கோணங்கி

மேலோட்டப் பார்வை இட்டது

  • குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
  • பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
  • ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

மறக்கப்பட்டது

  • கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
  • பொன்னியின் செல்வன் – கல்கி
  • காதலெனும் தீவினிலே – எஸ்.ஏ.பி.
  • முகமது பின் துக்ளக் – சோ

இந்தக் குறிப்பில் இருக்கும் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. நூலகத்தில் எடுத்து இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். சுருக்கமான அத்தியாயங்கள்; விறுவிறு நடை.

வாசிப்பதே சுகம்; படம் பார்ப்பதே பரமபதம் என்று ஓய்ந்துவிடாமல், ‘எத்துணை காலம்தான் வாசித்து மட்டுமே காலந்தள்ளுவது’ என்று வலைப்பதிவர் போல் துள்ளியெழுந்து சிந்தனைகளை திக்கெட்டும் பரப்ப — எழுதுகோலெடுக்க பணிக்கிறார். எனினும் ரவி ஸ்ரீனிவாசின் நேற்றைய பதிவைப் பார்த்தவுடன் உந்துதல் எழுந்தது… இன்று பதிவிட்டாகிவிட்டது.

முடிப்பதற்கு முன் இன்னொரு மேற்கோள்:

இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ‘Don’t judge a book by its cover’ என்பது போல், ‘Don’t judge a book’s content by its topic’ – ‘Blink’: உள்ளுணர்வுகளை நம்பலாமா?

நீதி
நல்லாப் படிங்க. படிக்க வைங்க. படிச்சதைப் பயன்படுத்துங்க.
Happy to onlook - Cartoons, Comics

வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)

வேகமாக வாசிக்கிறபோதும் சரி. நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை. – பஸ்க்கால்

இணையத்திற்கு அறிமுகமானவர்களிடமிருந்து வரும் இதழ் என்பதாலோ என்னவோ, எனி இந்தியனின் ‘வார்த்தை’ குறித்து நிறைய விமர்சனம்/அறிமுகம்/அனுபவம் எல்லாம் புழங்குகிறது.

முதலில் + கள்:

1. வலையகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக http://www.vaarththai.com/ அட்டைப்படத்தில் பிரதானமாகக் காட்சியளிக்கிறது.

2. ஒவ்வொரு பக்கமாக புரட்டி என்ன இருக்கு என்று தேடாமல் உள்ளடக்கம் உடனே கிடைக்கிறது.

ஒரேயொரு இடர்ப்பாடு: கட்டுரை/கதைகளின் முடிவில் ஏதாவது விநோத சின்னம் இட்டு (§ ♦) ‘முடிஞ்சுடுத்துப்பா’ என்று பாமரர்களுக்கு உணர்த்தியிருக்கலாம்.

பொருளடக்கம்:

1. கேள்வி – பதில்: ஜெயகாந்தன் – 8/10

கேள்விகள் தூள் ரகம். பதில்கள் மாட்டிக் கொள்ளாத பப்படம்.

2. தலாய் லாமா நோபல் பரிசு பேச்சு: துகாராம் – வாசிக்கவில்லை

ஆங்கிலத்தில் கிடைக்கிறதை, அணுகக்கூடிய ஆங்கில நடையில் கிடைத்தால், அசல் மொழிபெயர்ப்பையே வாசித்துவிடுவது பிடித்திருக்கிறது.

3. ஐயம் இட்டு உண்: நாஞ்சில் நாடன் – வாசிக்கவில்லை

படித்துவிட்டு வருகிறேன்

4. சினிமா: செழியன் – வாசிக்க இயலவில்லை (0/10)

நிழல்‘ என்னும் சுவாரசியமான பத்திரிகையில் கூட இந்த மாதிரி ‘well left’ என்னும் டெஸ்ட் மேட்ச் ரம்பங்கள் வந்துவிடுவதுண்டு.

5. மன்மதன்: அ முத்துலிங்கம் – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #1

6. Pygmies – சேதுபதி அருணாசலம் – 10/10

அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தவழுகிறதே… இன்னொரு செழியனோ என்னும் பயத்துடன் அணுகினாலும், சொந்த அனுபவத்தை வைத்து இயல்பான மொழியில் அச்சுறுத்தாத அறிமுகம்.

7. சிறுகதை: எஸ் ராமகிருஷ்ணன் – 10/10

என்னாமா எழுதறாரு… (இணையத்தில்) புனைவு எழுதறவங்க எல்லாரும் ஒரு தபா இந்த மாதிரி கதைங்களப் படிச்சுட்டு கற்பனை குதிரையத் தட்டணும். இவரோடதுக்கு மட்டும் படமெல்லாம் படா ஜோரு. மத்ததுக்கெல்லாமும் இப்படி வரஞ்சிருந்தா தூக்கியிருக்கும்!

8. மலேசியா: ரெ கார்த்திகேசு – 6/10

மலேசியாவின் வரலாறு முழுமையாகக் கிடைக்கிறது. கட்டுரையில் துளி அவசரம் எட்டிப் பார்த்து, சமீபத்திய தேர்தல் முடிவு அலசலுக்கு முழுமையான தெளிவு கிடைக்காமல் பறக்கிறது. நூறு, நூற்றைம்பது ஆண்டு சரித்திரப் பின்னணி தேவைதான் என்றாலும், அதற்குரிய விலாவாரியான சித்தரிப்பு கொடுத்திருக்கலாம்; அல்லது இரண்டு/மூன்று மாதமாக தொடராக முழுமையாக்கி இருக்கலாம்.

9. பாவண்ணன் சிறுகதை – என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்; ஏமாற்றி இருக்க மாட்டார். இனிமேல்தான் படிக்க வேண்டும்.

10. வ ஸ்ரீநிவாசன் கட்டுரை – 10/10

மிக மிக எதார்த்தமான பேச்சுவழக்கு நடை அள்ளிக் கொண்டு போகிறது. தி ஹிந்துவில் ஆரம்பித்து, புது தில்லி வாசத்தைத் நினைவலையாக்கி, சுஜாதாவையும் பேருக்கு தொட்டுக் கொண்டு, புத்தக முன்னுரைகளை காலை வாரி, கத்தாழக் கண்ணால என்று பாப் கல்ச்சரையும் விடவில்லை.

11. Pascal – நாகரத்தினம் கிருஷ்ணா: 8/10

விக்கிப்பிடியா போன்ற பற்றற்ற நடைக்கும் ப்ராடிஜி போன்ற தகவல் சார்ந்த புத்தக வாசத்திற்கும் இடையிலேயான மணம்.

12. (அ) கவிதை – தமிழச்சி தங்கபாண்டியன்: 5/10

செட் தோசை

ஆ) சல்மா: 5/10

கொத்து பரோட்டா

இ) நிர்மலா: 7/10

டாப்பிங் இல்லாத ஊத்தப்பம்

ஈ) பி கே சிவகுமார்: 5/10

Appetizer Platter

உ) வ ஐ ச ஜெயபாலன்: வாசிக்கவில்லை

ஊ) ஹரன் பிரசன்னா: 10/10

கதை நேரம் & நாம் இரண்டுமே தூள் ரகம்

13. புலம்பல்/விண்ணப்பம்: லதா ராமகிருஷ்ணன் – 10/10

நியாயமான கோரிக்கை. ஆனால், சீனாவிற்கெதிராக போராட்டம் நடத்துவது போல் பயனில ஆகாமல் இருக்க வேண்டும்.

14. ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்: பா விசாலம்‘ – புத்தக விமர்சனம்: வே சபாநாயகம் – 9/10

காசா… பணமா? 10/10 கொடுக்கலாம்தான்! வேறு பதிப்பக வெளியீடு எதுவும் கிடைக்காமல், எனி இந்தியன் புத்தகத்துக்கே விமர்சனம் என்பதால்…

15. இசை அனுபவங்கள்: சுகா – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #2

16. வெ. இறையன்பு: சிறுகதை – 1/10

சிறுபத்திரிகை என்று ஏன் வந்தது? சிறுவர்களையும் கவரும் கதை.

17. ஜெயமோகன் சினிமாவில் பணிபுரிய தடா: சட்டம் – கே எம் விஜயன் – 10/10

To the point. அம்புட்டுதான்.

18. இரா. முருகன் – 5/10

டெட்லைன் அவசரத்தில் எழுதியதோ 😦 அல்லது என் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமோ?

19. சுஜாதா: கோபால் ராஜாராம் – அஞ்சலைக் கிழித்து அவசர அவசரமாக புரட்டிய சமயத்தில் உடனடியாக வாசித்தது; அஞ்சலி செலுத்தப்பட்டவருக்கு மரியாதையும்; வாசகருக்கு விஷயதானமும்.

20.சிங்கப்பூர் – தமிழ்: எம் கே குமார் – 7/10

கேள்விகள் ஒவ்வொன்றும் நறுக்கென்று நிமிர வைக்கிறது; ஆனால் சட்டென்று சாதாரணமான சம்பவங்களுடன் சப்பென்று முடிந்து விடுகிறது.

21. மார்க்சியம் – தமிழாக்கம்: மணி வேலுப்பிள்ளை – 5/10

பனியில்லாத பாஸ்டனா? கம்யூனியக் கட்டுரை இல்லாத தமிழ் இதழா?

22. அனுபவம் – பி ச குப்புசாமி: 9/10

சிறுகதைக்குரிய வேகம், விவரிப்பு, சம்பாஷணை; ஆனால், நிறைவில்லாத தன்மை தரும் ஏதோவொன்று இருந்தாலும் மிக சுவாரசியமான இதழாசிரியரின் பகிர்வு.

மொத்தத்தில்: 73%

அமெரிக்கா இல்லை; அரசியல் இல்லை; வித்தியாசம் உண்டு; புதுமுகங்களின் பரிமளிப்பு உண்டு.

வாழ்த்துகள்!

Fitna – Prabhakaran: Movies

ted-rall-koran-quran-mohammed-censor-expression.gif

நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons

தொடர்புள்ள பதிவு: Fitna – தேவையற்ற அச்சுறுத்தல் | Pa. Raghavan

தொடர்பில்லாத பதிவு: குப்பை வலை: பாலாஜி சித்ரா கணேசன்: “‘பிரபாகரன்’ வளர்க! பிரபாகரன் ஒழிக!”

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

ஓல்ட் இஸ் கோல்ட்… புதிதாக சேர்க்கப்பட்ட குறிச்சொற்களுடன்

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.

Dor (நூல்) – விமர்சனம்

நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை. பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.

ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:

  • dor-2006-5b-1_1188030619.jpgஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
  • பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து ‘நடிப்பு வராத பொண்ணு’ போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
  • ‘Dutch courage’ ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது ‘நடக்காது!’ என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
  • வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
  • படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
  • தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; ‘ராத்திரி பத்து மணிக்கு’ என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி…
  • சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே

காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது… இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.

புகைப்படம்: யாஹு

‘உற்சாகம்’ பாடல் கேட்டிருக்கீங்களா?

கேட்டிருந்தாலும் பரவாயில்லை.

இன்னொரு தடவை கேளுங்க. இந்த ஜீவி பிரகாசுக்கு கிடைக்கிற வாய்ப்புகளுக்கு பத்தில் ஒன்றாவது ரஞ்சித் பரோடுக்கு சென்றுவிட எல்லாம்வல்ல இறைவரைப் பிரார்த்திக்கிறேன்.

சுட்ட மொழி – சன்னாசி on ஜெயமோகன் vs விகடன்

தான் புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும், சமகாலத்தின் மிக முக்கியமான, நிராகரிக்க இயலாத ஒரு போக்காக பில்டப் கொடுத்து நிறுவ முயல்வதைப் படிக்கநேர்வது கடுப்பேற்றும் விஷயம்.

பெரியார் குறித்து எழுதியிருந்த வாசகருக்கு எழுதியிருந்த பதிலிலும், பல காலம் முன்பு தங்கமணிக்கு கீதை குறித்து எழுதியிருந்த பதிலிலும், பதிலைத் தொடங்குமுன்பே, ‘இதுகுறித்து நாகரிகமாகக் கேள்வி எழுப்பியதற்கு நன்றி’ என்ற ஆழ்நீரோட்டத்துடன் தான் பதில் தொடங்கியிருக்கும். இதுதான் இந்த சுயபிரஸ்தாப இலக்கிய ஜல்லி லாரி, தனது பிரசங்கத்தைத் தொடங்குமுன்பே தன்னுடன் உரையாடுபவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்ராயம்.

எவ்வளவு நாசூக்கான உத்தி – சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவது அல்ல; விஷ்ணுபுரம் சுஜாதாவைத் தாண்டியது என்ற வெகு தெளிவான பிரக்ஞையோடு, சுஜாதாவின் முன் அதை வைத்து ‘உன்னால் இதற்கு முன்னுரையாவது எழுதமுடியுமா’ என்று தான் அவரைத் ‘தாண்டிவிட்டதை’ பஸ்மாசுரன் போல உணர்த்துவது!! பள்ளியில், நான் சென்ட்டம் நான் சென்ட்டம் என்று பரீட்சைக்குப் பரீட்சை பேப்பரை ஆட்டிக்கொண்டு திரிந்து, நீ எவ்வளவு நீ எவ்வளவு என்று கேட்டுக்கொண்டு திரியும் முதல்பெஞ்சுப் பயல்களின் சல்லித்தனம் போன்றதைத் தாண்டி இதில் வேறேதும் இல்லை.

அங்கதம் என்ற போர்வை போர்த்தினாலும், தன்னை மீறியவர்களுக்கு செக் வைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் உத்தி இது என்பதும், அங்கதத்தை விமர்சனத்துக்காக உபயோகிக்காமல் ஒரு escape/defense mechanismஆக உபயோகிக்கிறவர்கள் கையில் இது கிடைக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பதையும் இதுமாதிரிப் பத்திகளைப் படிக்கும்போது உணரமுடிவது பிறருக்கும் சாத்தியமாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

அவரது பத்திகளின் he said she said anecdotes பெரும்பாலானவை தினமலர் பாணியிலான ‘என்று மக்கள் நினைக்கிறார்கள்‘ பாணியிலானவை என்பதுதான் என்பது என் ஊகம்.

மெக்கென்னாஸ் கோல்டு காலத்து கிழடுகள் (மரியாதைக்குறைவாக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்) எவற்றிடம் அந்தப் படம் பற்றிக் கேட்டாலும் மெக்கென்னாஸ் கோல்டா, அந்த பருந்து(கழுகு) வர்ற சீன் தானே? என்பார்கள் – ரஜினின்னா யாரு, இந்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில பிடிப்பானே, அவந்தானே என்று இங்கே சந்தித்த ஒரு போன தலைமுறை மலையாளி என்னிடம் கேட்டது போல.

இன்றைக்கு சுஜாதாவைத் தனது முன்னோடியாகக் கொண்டிருப்பதை தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரிய புரட்சியாகச் சித்தரிப்பது போல, ஜி.கே.செஸ்டர்டனையும் அவரது ‘Father Brown’ கதைகளையும் போர்ஹேஸ் முன்னோடியாகக் கொண்டிருப்பதையும், புனைபெயரில் ராஜேஷ்குமார் ஸ்டைலில் துப்பறியும் கதைகளை எழுதியதையும் ஒரு ‘புரட்சி’ யாக போர்ஹேஸ் சுயதம்பட்டமடித்து எழுதி நான் படித்ததில்லை!!

  • மண், வேர், வெங்காயம் என்று பேசுபவனை தல்ஸ்தோயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் படித்திருக்கவேண்டும் என்று மடக்கலாம்.
  • குமுதம் விகடன் படித்து வருபவனை, சிறுபத்திரிகைகளில் நடப்பது குறித்த எந்த அறிவுமற்றவர்கள் என்று மடக்கலாம்,
  • கொஸாக்குகளையும் பனியையும் கற்பனை செய்துகொண்டு, ராதுகா பப்ளிஷர்ஸ் புத்தகங்களில் மட்டுமே அபாக்கியமாகத் தனது தொடக்கத்தைக் கொண்டுவிட்டவர்களிடம், அவர்களுக்கு வெகுஜன இலக்கியம், pulp குறித்த புரிதல் எப்படி இல்லை என்று அவனையும் மடக்கி அடிக்கலாம்.
  • பல்ப்பையும் படித்து சிறுபத்திரிகையையும் படித்தவனாக இருந்தால் ஆன்மீக, தத்துவ விசாரமும் விளக்கெண்ணெயும் இருக்க வேண்டும் என்று டபுள் இம்பாக்ட் கொடுக்கலாம்.

வெளிப்படையாகப் பேசாத பாண்டிகளால் ‘காலை’க் கழுவுது என்றுதான் சொல்ல முடியும்; குண்டியைக் கழுவுது என்று வெளிப்படையாகச் சொல்ல வெக்கப்படமாட்டானா பாண்டி?

தனது Order of thingsன் முன்னுரையில், இந்தப் புத்தகத்தைப் படிக்குமளவு முயற்சியெடுக்கும் வாசகன் இதை எப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் என்று நன்றியுடன் கூறுகிறேன் என்னும் எழுத்தாளர்கள் எங்கே, என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள். யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும் என்று எழுதும் இந்த சல்லிப்பயல்கள் எங்கே.

தமிழ் எழுத்தாளர்களின் முதன்முதலில் பாத்டப்பைப் பார்த்தது சுந்தர ராமசாமி வீட்டில்தான் என்றும் ‘பதிந்து’ வைத்துவிட்டால், பொருந்தவேண்டிய இடத்தில் தானாக அது பொருந்திக்கொள்ளும்.

பாண்டிப்பயல்களின் மொழியில் pubic hairக்கு வார்த்தை இல்லை என்று அங்கதப் பத்தி எழுதும் இவரின் ‘மலம்’ கதையில், கதை முழுக்க மலம் மலம் மலம் மலமோ மலம்தான். மருந்துக்குக்கூட ‘பீ’ கிடையாது, பொறவு என்ன? அவ்வளவு அக்கறை இருந்தால் pubic hairக்கு வார்த்தை கேட்ட மூத்த எழுத்தாளருக்கு நாஞ்சில் பாசையில் சிதிமயிர் என்று எடுத்துக் கொடுத்திருப்பதுதானே. ஓ, அதை நாங்களெல்லாம் செய்யமாட்டோம் திராவிட இயக்கத்தில் ஊறி வந்த பாண்டிக்குஞ்சுகள்தான் செய்யும், இல்லையா.

பாண்டிகள்தான் கேவலம். பாண்டிப் படங்களில் நடிக்கும் ஆர்யா என்ற பையனும் கூட ‘பாய்’ பையந்தான் (இன்சைடர் இன்பர்மேசன்). பாண்டிகள் பேரிலிருந்து ஜாதியைக் கழற்றி வைத்துவிட்டார்கள். புதிய தலைமுறை ஜாதியை முற்றிலும் கழற்றப் பார்க்கிறது, அடுத்த தலைமுறையில் மீதி இருப்பதும் காணாமல் போகவேண்டுமென்றுதான் நம்பிக்கை வைக்கவேண்டும்.

கேரளத்தை விட ஜனத்தொகை அதிகமுள்ள தமிழ்நாட்டில் பிரச்னைகளும் அதிகமாகத்தான் இருக்கும். கர்நாடகா ஆந்திராவில், ஏன் கேரளத்திலும் இருப்பது போல ஒன்றிரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்திலா மொத்த மாநிலத்தின் அரசியலும் இருக்கிறது? லிங்காயத்துகள், கம்மாக்கள் ரெட்டிகளைத் தாண்டி ஆந்திரா கர்நாடகாவில் யாருடைய ஆதிக்கமாவது (பிரதிநிதித்துவமாவது) இருக்கிறதா?

கல்லூரியில் படிக்கும்போது தெற்கிலிருந்து வரும் நாடார் பையன்களை பொதுவாக ‘பனையேறி கொட்டை தேஞ்சு போன’ கோஷ்டிகள் என்று இன்னொரு கும்பல் (குறிப்பாக, இதுவுமே ஒரு தென்தமிழகக் கும்பல்) கிண்டலடிக்கும் – ஆக, இதிலுள்ள ‘அங்கத’ உணர்வை ரசிப்போமா நாம்? தோழர்களுக்கு நடுவில் என்றால் சரி, அது தான் கிண்டலடிக்கும் மற்றவனுடனான சௌஜன்யத்தைப் பொறுத்தது. அதைத் தாண்டி, பொதுவில் எழுதும்போது ‘நாடார்கள் பனையேறிப் பனையேறி கொட்டை தேஞ்சுபோன கோஷ்டிகள்’ என்று மற்றொரு தமிழன் எழுதுவதற்கும் ‘கறுப்பர்களுக்கு சாமான் வளர்ந்துள்ள அளவு மூளை வளர்ந்திருக்கலாம்’ என்று ஒரு வெள்ளைக்காரன் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை – இரண்டும் அங்கதம் அல்ல – கேவலமான ரசனை.

சன்னாசி

சுட்ட மொழி – இகாரஸ் பிரகாஷ் on சுஜாதா

சுஜாதா மீது விமர்சனம் வைக்ககூடாது என்பதில்லை. அவருடைய தனிமனித பலவீனங்கள் சார்புகள் அவருடைய எழுத்தில் பிரதிபலித்தது என்பது உண்மைதான். சுற்றி இருக்கிறவர்கள் ரத்தம் சிந்திக்கொண்டிருந்த போது, அவர் தன் மூட்டு வலியைப் பற்றி லட்சக்கணக்கான வாசகர்களிடம் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அந்த பலவீனங்கள் அவருடைய சில பல அச்சீவ்மெண்ட்டுகளை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு முக்கியமான காரணியாக இருந்ததா என்பது, ஆராயச்சிக்குரிய விஷயம்.
ஐகாரஸ் பிரகாஷ்