Tag Archives: புனைவு

எழுதாத கதைக்கு யார் ஆசிரியர்?

குறுங்கதை மொழிபெயர்ப்பு « அங்கிங்கெனாதபடி

கிட்டத்தட்ட சித்தார்த்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட கதையை ஒத்த சமீபத்திய வாசிப்பு ஒன்றின் சுருக்கம்…

அந்த எழுத்தாளனை யாருமே சீந்தவில்லை. எவருமே அவன் படைப்பை அச்சேற்றாமல் நிராகரிக்கிறார்கள். விலைமாதுவின் துணையை நாடுகிறான்.

அவளோ அவனின் கதையை புகழ்கிறாள். ‘இன்னும் எழுது’ என்பதுடன் நில்லாமல், அவனுடைய கோழிக் கிறுக்கல்களை தட்டச்சுகிறாள். கோர்வையாகக் கொண்டு வருகிறாள். இவனோ எப்போதும் போதையில் இருப்பதால், எழுதித் தள்ளுவதற்கே நேரம் போதாமல், டைப்ரைட்டிய பக்கங்களை வாசிக்காமல் மேலும் மேலும் எழுதுகிறான்.

புத்தகம் கிட்டத்தட்ட தயாரான நிலையில், பதிப்பாளர்களை சந்திக்க, தன் அண்ணன் வசிக்கும் நகரத்துக்கு செல்கிறான். கதையைப் படிக்கும் அண்ணன், தன் பெயரில் வெளிவருவதை விரும்புகிறான்.

தம்பிக்கு போதையேற்றி, மோசமான விபத்தை உருவாக்குகிறான். தம்பியை எசகுபிசகான நிலையில் புகைப்படமெடுத்து, மிரட்டி தன் பெயரை முதன்மை படைப்பாளியாக சேர்த்துவிட செய்கிறான்.

புத்தகம் வெளியாகிறது. புரட்டி பார்க்கும் தம்பிக்கு அதிர்ச்சி. தலைப்பு மட்டும்தான் தான் வைத்தது. உள்ளே இருப்பதெல்லாம், விலைமாதின் அனுபவங்கள். அவளுடைய பணக்கார வாடிக்கையாளர்கள், அவர்களின் விநோத நடவடிக்கைகள், என்று விரிகிறது.

விலைமாதுவே சொந்தப் பெயரில் வெளியிட முடியாத கதையை, தம்பியிடம் இருந்து அபகரித்து பெயர் போட்டுக் கொண்ட அண்ணனின் நிலையை ஒப்பிடும் கதை.

நிஜமாக எழுதியவருக்கு உண்மைப் பெயரை எடுத்துரைக்க முடியாது. நிஜமாக எழுதியதாக நினைத்தவருக்கும் படைப்புக்கும் தலைப்பு தவிர ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. எழுதியாக சொல்லிக் கொள்பவரும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் கிடைத்த வாய்ப்பை பறித்துக் கொண்டவர்.

இந்தப் புத்தகத்தின் பெயர் தெரியாமல் கதை மட்டுமே என்னுடைய வாசக அனுபவத்தில் தங்கியது மீட்சி.

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

சு.தமிழ்ச்செல்வியின் ‘அளம்’ நாவலிலிருந்து (கதிர்)

ஆரம்ப காலத்தில் இப்படித்தான் கடல் கொந்தளித்ததாம். எல்லோரும் உயிர் பிழைக்க எதிலெல்லாமோ புகுந்து கொண்டார்களாம். ஓர் ஆணும் பெண்ணும் மட்டும் தங்களுடைய வீட்டிலிருந்த சுரைக் குடுக்கைக்குள் புகுந்து கொண்டார்களாம்.

உலகத்திலுள்ள மரம் செடி கொடி உயிரினங்கள் மற்ற பொருட்கள் எல்லாம் அழிந்துவிட்டதாம். ஆனால் சுரைக்குடுக்கைக்கு மட்டும் எந்தச் சேதமும் ஏற்படவில்லையாம். வெள்ளம் வடியும் வரை தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருந்ததாம். சுரைக்குடைக்குள்ளிருந்த ஆணும் பெண்ணும் பலநாள் பட்டினியால் குடுக்கைக்குள்ளேயே மயங்கிக் கிடந்தார்களாம்.

வெள்ளம் வடிந்தபோது சுரைக்குடுக்கை ஏதோ இரண்டு பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டதாம். நன்றாக வெயில் எரித்த போது, அந்த வெயிலின் சூட்டால் சுரைக்குடுக்கை வெடித்து அந்த ஆணும் பெண்ணும் வெளியே வந்தார்களாம்.

பாறைகளுக்கு நடுவில் கையில் வேல் வைத்துக் கொண்டு நின்ற ஒரு சாமியின் சிலை மட்டும்தான் இருந்ததாம். உலகத்தில் வேறு எதுவுமே இல்லையாம். அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து அவர்கள் மூலமாகப் பெருகியவர்கள்தாம் மனிதர்கள் என்பது இந்த சனங்கள் அடிக்கடி சொல்லும் கதை.


தொட்டுக்க நகைச்சுவை: ஷாலினி, சென்னை.

‘தாத்தா…தாத்தா… நான் ஒண்ணு கேப்பேனாம்…நீ கரெக்ட்டா சொல்லிடுவியாம்…’

‘என்ன சொல்லு?’

‘ஆமையும் முயலும் நுழைவுத்தேர்வு எழுதிச்சாம். ஆமை 80 % எடுத்துச்சாம். முயல் 81 % எடுத்துச்சாம். ஆனா ஆமைக்குத்தான் ‘காடு‘ பொறியியல் கல்லூரில அட்மிஷன் கிடைச்சுச்சாம்….ஏன்?…சொல்லு’

‘ஆங்….தெரியலையே’

‘நீ ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறப்ப வந்த லெசன்ல முயலுக்கும் ஆமைக்கும் நடந்த போட்டில யார் ஜெயிச்சது?’

‘ஆமை’

‘அதான் தாத்தா…ஆமைக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில அட்மிஷன் கிடைச்சிடுச்சி…இதுகூடத் தெரியலை…சரியான மக்கா இருக்கியே?…’

ஆயுதம் – மனோஜ்: சிறுகதை குறித்த எண்ணங்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இலக்கியச் சிறப்பிதழான “இன்று” தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதையைப் படிக்க மணிகண்டன் பதிவுக்கு செல்லவும்.

படித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:

1. கதை நன்றாக இருக்கிறது. நெடுநாள் தாக்கம் எல்லாம் எதுவும் கிடைக்கிற மாதிரி இம்பாக்ட் இல்லாத ஆக்கம்.

2. ட்ராஃபிக் திரைப்படம் போன்ற சிதறலான சம்பவங்களைக் கோர்க்கும் கதை என்று படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றியது. ஆனால், நிகழ்வுகளில் இருக்கும் ஒற்றுமைகளை, போதனையாக சொல்லிச் செல்கிறது.

3. செர்பியா, ஆப்பிரிக்கா செய்திகளைக் கட்டுரை வடிவில் தரும்போது கூட வாசகனுக்கு உந்துதல் தந்து மேற்சென்று ஏதாவது செய்யத் துடிக்க வைக்க முடியும். இந்தக் கதையில் அதெல்லாம் மிஸ்ஸிங். (படிக்க: Before the War: “Remembering an everyday life in Bosnia: November / December 2007 by Courtney Angela Brkic, from Dissent”).

4.

இரைந்தே கேட்டான். ‘ஹேவ் யு எவர் ஃபக்ட்..’. பிறகு இன்னும் குனிந்து, கை குவித்து சைகையோடு கேட்டான். “இதுவரைக்கும் யாரையாச்சும் பண்ணியிருக்கியா….”.

ஆங்கிலத்தில் எழுதும்போது தெள்ளத்தெளிவாக விழுகிற வார்த்தைகள், தமிழில் வரும்போது சைவமாக மாறுகிறது. இந்த இடம் தவிர பிற இடங்களில் மொழிபெயர்த்தே தரும் மனோஜ், இங்கு மட்டும் ஆங்கிலத்திற்கு தாவுகிறார். செர்பியாவில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் போன்ற இடறல்களை விக்கிப்பிடியாவில் தேடினாலே தவிர்த்திருக்கலாம்.

5. கற்பனைக்கதை எழுதும் கலையின் நோக்கம் பொழுதுபோக்கி மகிழ்ச்சியளிப்பது, செய்தியை மனதில் நிறுத்துவது, மாற்று கண்ணோட்டங்களை ஊடாட விடுவது, உணர்ச்சிகளைப் பகிர்வது என்றால் படித்தால் போரடிக்காத வகையில் செய்தி ஆசிரியரின் குற்றவுணர்வை முன்வைக்கும் சிம்பிளான மதிப்பீடுகள் ஜட்ஜ்மென்ட்டாக முடிவது வாசகனுக்கு சோகமான அனுபவம்.

I met a seducer – Grace Paley

One day a seducer met a seducer
now said one                           what do we do
fly into each other's arms said
the other                           ugh said one                           they turned
stood back to back                           one
looked over one's shoulder                           smiled
shyly                           other turned seconds
too late                           made a lovelier
shy smile                           oh my dear said other
my own dear                           said one

Kirukkal.com – சுப்புடுவிற்கு சுப்புடுத்தனமான விமர்சனம்

அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை

நன்றாக வந்திருக்கிறது. அட்வைஸ் பொழியும் கதை.

முதல் பாதியில் கிடைத்த துள்ளல்; முடிவில் போட்ட சென்டி எல்லாம் பார்த்தால் தமிழ் சினிமா திரைக்கதை மாதிரி இருந்துச்சு.
Host unlimited photos at slide.com for FREE!

ஆங்காங்கே ‘சிக்கி முக்கி நெருப்பே’ என்று ஆண்டிஸ் (ஆண்டஸ் மலையா ஆன்டீஸ் மலையா?) பாடல் ஒன்று போட்டால் முழுப்படமாக்கிடலாம் 🙂

நம்முடைய முந்தைய ஜெனரேஷன் இந்த ‘கடன் வாங்கக்கூடாது / சேமிச்சு வாழணும்; சிக்கனமா இருக்கணும் / வாழ்க்கையே வங்கி சேமிப்பு புத்தகத்தில் இருக்கிறது’ போன்ற கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட, புதிய ஜெனரேஷன் ‘ஸ்டாக் மார்க்கெட்; ஈ-பே; டீல்ஸ்4யூ.காம்’ என்று அவர்கள் மாதிரி ஆகிப் போனதை கல்க்கலா காமிச்சு இருக்கீங்க.

இணைய இதழ்களுக்காவது அனுப்பி வைக்கலாமே. ரொம்ப இயல்பா வந்திருக்கு.


ராட்டடூயி – சிறுகதை

முதல் கதையை விட இது இன்னும் கொஞ்சம் ரசிக்கவைக்கிறது.

வீட்டின் வரைபடம் எல்லாம் காமித்து மிரட்டுகிறார். நம்பகத்தன்மை அதிகம் உள்ள, டிராமாத்தனம் இல்லாத ஆக்கம்.
Host unlimited photos at slide.com for FREE!

லீனியராக சொல்லாமல், பழைய விஷயங்களை இடைச்செருகலாக சாமர்த்தியமாக நுழைப்பது, சமகால விவரணைகள், முடிவு எல்லாமே தூள்.

இப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.

இதே ரேட்டில் கதை எழுதிக் கொண்டிருந்தால், அமெரிக்க பின்னணியில் ‘பிரிவோம்… சந்திப்போம்’ ஸ்டைலில், சுவாரசியமான தேஸி என்.ஆர்.ஐ.யின் வித்தியாசமான ‘மூன்று விரலை’ நாவலாக்கித் தரக்கூடிய நம்பிக்கையை வரவைக்கும் ஆக்கம்.

Host unlimited photos at slide.com for FREE!