
நடிகையில் ஒரெழுத்தை எடுத்துவிட்டால் நகை கிடைத்துவிடும். விளம்பரம் என்னும் வார்த்தைக்கு வியாபாரம் என்னும் வார்த்தை மோனை சந்தத்துடன் அமைந்திருக்கும். நயந்தாரா என்றால் அட்டைப்படம் என்று சென்ற வாரம் காணப்பட்டது. கீழே கல்கி அட்டை கட்டுரை:

அடுத்து 03/12/2015 ஆனந்தவிகடன் அட்டைப்பட கட்டுரை: நயன் நம்பர் 1 – ம.கா.செந்தில்குமார்
தமிழ் சினிமாவின் கோடி லேடி, சிங்கிள் பெண் சிங்கம், ட்ரெண்டிங் பியூட்டி, மாயாவன தேவதை, தனி ஒருத்தி… அவ்வளவும் நயன்தாராதான்!
ஒரு ஹீரோயினாக 10 வருடங்கள் கடந்தும் படபடக்கிறது நயன்தாரா கிராஃப். அடுத்தடுத்து ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ் தட்டியவர். காதல் தோல்விகள், வீண் வம்புகள், உள்ளடி வேலைகள் கடந்தும் ஒரு படத்தின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் நயன். மாஸ் நடிகர்களே நயன் கால்ஷீட்டுக்காக மல்லுக்கட்டுகையில், ‘ரெஜினா’, ‘மாயா’, ‘மஹிமா’, ‘காதம்பரி’… என
சினிக்கூத்து, வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரெஸ் எல்லாம் பார்க்கவில்லை. அங்கும் அவர்தான் இருப்பார் என்பது சம்சயம். ஏன்?

எல்லாப் புகழும் ஜி.ஆர்.டி. தங்க மாளிகைக்கே!

மாநகராட்சி இடத்தையெல்லாம் பல கோடி கமிசன் பெற்று ஜி. ஆர்.டி வாங்கும் போது இந்த மாதிரி, தங்களுடைய பிராண்ட் அம்பாஸ்டரை முன்னிறுத்துவது ஜுஜுபி:
ஜூலை 2012 செய்தி: சென்னை மாநகர மேயருக்கு தொடர்புண்டா? சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராபின்சன் பூங்கா அருகில் சுமார் பத்து கிரௌண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் திமுகவினர் ஆக்கிரமித்து தங்களது கட்சி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இப்போது மீதம் உள்ள இடத்தில எம்சி சாலையை ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செயபட்டிருந்தது. இப்போது அந்த இடத்தை ஜி. ஆர். டி தங்க மாளிகை நிறுவனத்திற்கு லீஸ்கு விட சுமார் ஐந்து கோடிக்கு கமிசன் பெற்று கை மாற்றி விட வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு தலைக்கு ஒரு லட்சம் கொடுத்து விரட்டபடுவதாக தகவல். மேலும் முக்கிய புள்ளி ஒருவருக்கு பதினைந்து கோடி கைமாறப் போவதாக கூறப்படுகிறது. நீதித் துறையின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு கவுன்சிலர்கள் அம்மாவின் உத்தரவையும் மீறி தலா ஐந்து லட்சம் பெற்றுள்ளனர். இதனால் சென்னை மேயரும் பலன் பெற்றிருப்பார என்ற சந்தேகம் வலுத்துள்ளது
இவ்வளவு கோர்த்துவிட்டு, சமீபத்திய நயன் தாரா செய்தியை சொல்லாவிட்டால்… எப்படி?
சமீபத்தில் நயன் – விக்னேஷ் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகியது. மேலும், விக்னேஷுக்கு நயன் அன்பளிப்பாக பி.எம்.டபிள்யூ கார் மற்றும் வீடு ஒன்றை வாங்கி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
தனது பிறந்தநாளை (18 நவம்பர்) முன்னிட்டு, ரோம் நகருக்கு சென்ற நயந்தாரா, அங்கு போப்பிடம் ஆசிர்வாதம் பெற்றார். அவருடன் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தார். அப்படியே நயந்தாராவுக்காக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இயக்குநர் விக்னேஷ், தனது பெயரை விக்டர் என்று மாற்றிக்கொண்டாராம். இந்த பெயர் தேவு நயந்தராவின் சாய்ஸாம்.
பிரபு தேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறிய நயந்தாரா, காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் தனது தாய் மதமான கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்
ஜியார்டி தங்கத்தையெல்லாம் போப்பரசர்தான் விற்கிறாரோ?
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Actress, Ambassodors, ஆனந்த விகடன், ஆபரணம், கல்கி, சினிமா, ஜி ஆர் டி, தங்கம், நகை, நடிகை, நயந்தாரா, நயன், நயன் தாரா, நாயகி, படம், பத்திரிகை, மாடல், விகடன், விற்பனை, விளம்பரம், Brand, Films, Gold, GRT, Heroines, Jewels, Nayan, Nayanthara, Products, Promoters, Stars, Tamils