Tag Archives: எழுத்தாளர்

Writer Sujatha

Thiruppur Krishnan:

“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!


InterviewsTFM Page Magazine – Screen-Turners: Chap 3.1 – Something about Sujatha (Naaz)

தீராநதி – குமுதம்.காம்: “சுஜாதா நேர்காணல்”

Miscellany:

அவருக்கு பிடித்த 10 படங்கள் « Snap Judgment

கல்கி வளர்த்த சிரிப்பலைகள் « Appusami.com

site:www.thinnai.com சுஜாதா – Google Search

Excerpts from his Works:
சுஜாதா « Snap Judgment: என் இனிய இயந்திரா

கண்ணம்மா: சுஜாதாவின் சிறு சிறுகதைகள்: (Six Word Stories)

Sujatha Turns 70 – Katrathum Petrathum: Anandha Vikadan « Tamil Archives

Experiences:

அறுபது அமெரிக்க நாட்கள் (17) « தமிழன் எக்ஸ்பிரஸ் :: டிசம்பர் 25-31, 1996

Bloggers with Sujatha

கில்லி – Gilli » Blog Archive » Meeting writer Sujatha

தேசிகன் பக்கம்: “எழுபத்தொன்று – சுஜாதா”

தேசிகன் பக்கம்: “ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா”

ஒரு அரட்டையும் ஒரு பதிவும் « Snap Judgment

Family & Life:

பிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்

Movie Reviews:

தேசிகன் பக்கம்: வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா

Controversy, Issues, Critiques:

கில்லி – Gilli » Blog Archive » Sujatha’s Short Story & Bloggers’ Reaction

பெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள்

கில்லி – Gilli » Blog Archive » Azhagiya Periyavan, Sujatha & Dalit Ilakkiyam

Book reviews:

PK Sivakumar – கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்

Thinnai: “மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘) – பாவண்ணன்”

Thinnai – ஜெயமோகன்: “தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா: உயிர்மை பதிப்பகம்”

Thinnai: “சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன்”

Homepages:

:: WriterSujatha.com:: Home Page

:: Ambalam :: Tamil Ezine

Sujatha – Wikipedia, the free encyclopedia

சுஜாதா (எழுத்தாளர்) – தமிழ் விக்கி


கணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.
-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்

கேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே?

பதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.


ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
ஆர். விஜி, அரகண்டநல்லூர்

இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?

பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

த. சத்தியநாராயணன், அயன்புரம்.
உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?

சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.


வாக் போகையிலே… – மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா?””ஆமா..”

”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”

”நிறைய எழுதியாச்சே..”

”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!

”எப்பவாவது எழுதக் கூடாதா?”

”எதை எழுதுவது?”

”எதையாவது…”

”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”

”யாராவது..”

”யாரு படிப்பாங்க?”

”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”

”நீங்க படிப்பீங்களா?”

”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.

”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”

Prejudiced generalizations: Gangs, drugs, violence & suicides

(வாய்ப்புக்கும் இடமளித்தமைக்கும்) நன்றி: தமிழ் உலா – என்றென்றும் அன்புடன்், பாலா

தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை

கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.

1995- இல் ‘ஆசை’ படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து ‘சத்தம் போடாதே’வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்…

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.

அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.

இதை மறைக்க இணையம் உதவுகிறது. ‘அந்த நாள் ஞாபகம்’ என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.

அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா… நோ; செய்திகள் – நோ…நோ; அரசியல் – மூச்!

இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.

பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.

மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.

இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி உடைகிறது?

சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe – 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.

பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.

இவற்றைப் பார்த்து புலம்பி ‘எங்கே நிம்மதி? ஏது நீதி?’ என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.

அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:

1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் – அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.

2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.

3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். ‘மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.’ இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.

இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.

மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.

இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:

அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.

தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.

ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.