Tag Archives: ஊடகம்

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி

டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது!

ஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


மாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது

ஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.


தட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது

வெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது!

'அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்' – செய்தித் தொகுப்பு

1. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவதே உலகெங்கிலுமுள்ள மக்களின் விருப்பம்-பி.பி.சி :: தமிழ்செய்தி

ஒபாமாவின் தந்தையின் பிறப்பிடமான கென்யாவில் ஒபாமாவுக்கு 82 சதவீதமான ஆதரவும் இந்தியாவில் 9 வீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

2. ஹெச்.2-பி விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ஒபாமா ஆதரவு! :: வெப்துனியா

அமெரிக்காவில் வேளாண் துறை அல்லாத மற்ற துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறைகளில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாடுகளில் இருந்து ஹெச்.2-பி விசா மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

3. அமெ‌‌ரி‌க்க ‌நி‌தியை பா‌கி‌ஸ்தா‌ன் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக பய‌ன்படு‌த்து‌‌கிறது: ஒபாமா கு‌ற்ற‌ச்சா‌‌ற்று! :: வெப்துனியா

தீ‌விரவா‌த‌த்து‌க்கு எ‌திரான போரு‌க்காக அமெ‌ரி‌க்கா, பா‌கி‌ஸ்தா‌னு‌க்கு 10 ‌பி‌‌ல்‌லிய‌ன் டால‌ர் நி‌தி அ‌ளி‌‌த்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அரசு அ‌ந்த ‌நி‌தியை பய‌ன்படு‌த்‌தி இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக போரு‌க்கு த‌ன்னை தயா‌ர் படு‌த்‌தி வரு‌கிறது எ‌ன்று கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

4. இந்தியாவுடன் நிரந்தர உறவு: அமெரிக்க குடியரசு கட்சி விருப்பம்! :: வெப்துனியா

இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் குடியரசுக் கட்சியின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது

5. தட்பவெப்ப நிலை : ஒபாமா, மெக்கைனுக்கு ஐ.நா. வலியுறுத்தல் :: யாஹூ

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களை (கரியமில வாயு உள்ளிட்டவை) வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் முக்கியத்துவம் பெறுகிறது என்ற அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கும் அந்நாடு, புவி வெப்பமடைதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமா அல்லது ஜான் மெக்கைன், தற்போதையை நிலையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வகையில் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பான் கி-மூன் வலியுறுத்தியுள்ளார்.

6. ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு :: கூடல்

பராக் ஒபாமாவிற்கு ஜார்ஜ் ஹூசைன் ஓனியான்கோ ஒபாமா என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு இப்போது 26 வயது ஆகிறது. இவர் இப்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் புற நகர் பகுதி ஒன்றில் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஜார்ஜ் ஒபாமா வேறு ஒரு மனைவிக்கு பிறந்தவர் என்று இத்தாலியின் வேனிட்டி பேர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தான் இரண்டே முறை தான் பராக் ஒபாமாவை பார்த்ததாகவும், 5 வயதாக இருக்கும் போது ஒருமுறையும், கடந்த 2006 ம் ஆண்டு பராக் ஒபாமா நைரோபிக்கு வந்திருந்த போது ஒருமுறையும் மட்டுமே பார்த்ததாக ஜார்ஜ் ஒபாமா கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி தாளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

7. சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப.சிதம்பரம் :: மாலைச்சுடர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மேடாலின் கே.ஆல்பிரைட் அழைப்பினை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் அமெரிக்கா பயணமானார்.

8. யுஎஸ் மீது புதின் தாக்கு :: மாலைச்சுடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பலனடையும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவர் ஜார்ஜியா பிரச்சனையை கிளப்பி இருப்பதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைனை குறி வைத்து இவ்வாறு கூறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

9. ஒபாமாவை கொல்ல சதி :: மாலைச்சுடர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 750 அடி தொலைவில் இருந்து ஒபாமாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்'

தமிழ் பிபிசி:

நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.

சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் இருக்கின்றார்.

இது ஒரு மாபெரும் கூட்டணி என்றும், இது அமெரிக்காவில் மாற்றங்களை கொண்டு வரும் என ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரங்கள் சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.


தினத்தந்தி

இந்தியாவுக்கு ஆதரவானவர் : ஜோசப் பிடன், இந்திய அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். தனது கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை நிறுத்துவது என்று ஒபாமா பல நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.

  • கிளிண்டனின் மனைவி ஹலாரி,
  • இந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில், டெலாவரே மாகாண செனட் உறுப்பினர் ஜோசப் பிடனை, தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா தேர்வு செய்துள்ளார். ஜோசப் பிடனின் வயது 65. அவர் தற்போது செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவராக இருக்கிறார். இவர் முதல்முறையாக 1972-ம் ஆண்டு செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29. தற்போது 6-வது தடவையாக செனட் உறுப்பினராக இருக்கிறார். செனட் சபையில் பல்வேறு கமிட்டிகளில் பதவி வகித்துள்ளார். இவர் வெளியுறவு கொள்கை மற்றும் ராணுவ கொள்கைகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

இந்த கொள்கைகளில் ஒபாமாவுக்கு அனுபவம் இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, ஜோசப் பிடனின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவரை ஒபாமா தேர்வு செய்துள்ளார்.

ஜோசப் பிடன், ஏற்கனவே கடந்த 1988-ம் ஆண்டிலும், இந்த ஆண்டிலும் அதிபர் பதவி வேட்பாளர் ஆவதற்கு முயன்றார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பை பெற்றுள்ள அவர், டென்வரில் நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில், 27-ந் தேதி உரையாற்றுகிறார்.

ஜோசப் பிடன், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், ஜான் கெர்ரி, சக் ஹகெல் ஆகிய செனட் உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இடதுசாரிகளின் ஆதரவு வாபசையும் மீறி, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதை அறிந்து, அவரை பாராட்டினார்.

இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவுவது, அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும் என்ற கருத்துடையவர், ஜோசப் பிடன். இந்திய அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க பாராளுமன்றத்தில் இறுதி ஒப்புதலுக்கு வரும்போது, இவர் அதற்கு ஆதரவாக உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்: அறிவித்தார் ஒபாமா:

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.


தினமணி

ஜனநாயகக் கட்சி யு.எஸ். துணை அதிபர் வேட்பாளர் ஜோசப் பிடன்

வாஷிங்டன், ஆக. 23: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா, துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பிடன் (65) என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரிப்பவர் ஜோசப் பிடன். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற இவர் மிகவும் உதவியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டபோதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் உறுதியை சமீபத்தில் ஜோசப் பிடன் பாராட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் துணை அதிபராக ஜோசப் பிடன் தேர்ந்தெடுக்கப்படுவார்.


Thatstamil.com
Joseph Biden is Obama’s running mate, ஓபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் ஜோசப்:


Webdunia.com

அமெ‌ரி‌க்க துணை அ‌திப‌ர் வே‌ட்பாளரை தே‌‌ர்‌ந்தெடு‌த்தா‌‌ர் ஒபாமா!: டெ‌ல்லோவா‌ர் சென‌ட்ட‌ர் ஜோச‌ப் ‌பிடேனை‌ பரா‌க் ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளா‌ர்.

துணை அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் போ‌ட்டி‌‌க்கு தே‌ர்‌ந்தெ‌டு‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று கருத‌ப்ப‌‌ட்ட இ‌‌ன்டியான சென‌ட்ட‌ர் இவ‌ா‌ன் பயா, ‌வி‌ர்‌ஜியானா கவ‌ர்ன‌ர் ‌டி‌ம் கெ‌ய்‌ன் ஆ‌‌கியோரை ‌பி‌ன்னு‌‌க்கு‌த் த‌ள்‌ளி‌‌‌வி‌ட்டு, 65 வயதாகு‌ம் ‌பிடே‌ன்-ஐ ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

‌சென‌ட் அயலுறவு ந‌ட்பு குழு‌த் தலைவரான பிடே‌ன் கட‌ந்த 1972 ஆ‌ம் ஆ‌ண்டு தனது 29-வது வய‌தி‌ல் முத‌ல் முதலாக அ‌ந்நா‌ட்டு பாராளும‌ன்ற‌த்து‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


மேலும் :: Google செய்திகள்

Feedback: Closed group vs Wider societies – Bane of Tamil Blogodom

உரிமை துறப்பு: வெங்கட் பதிவோடு உடன்படுகிறேன்.

மறுமொழி மட்டுறுத்தல், ட்ராக்பேக் தடுத்தல், பூங்கா எடிட்டோரியல் எல்லாமே மச்சியவெல்லித்தனமாக இருக்கிறது என்பது வெளிப்படை. எனினும், அதற்கும் (Garrett Mattingly: The Prince: Political Science or Political Satire?) மாற்றுக்கருத்து இருக்கிறது. அது போல், பின்னூட்டங்களுக்கான கேள்வி…

1. —எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம் ஆசிரியர் அடிக்கோடிட்டு சினிமா என்று எழுதுவார் என்று நம்பமுடியவில்லை.—

ஏன்? ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர், இப்படித்தானே மாற்றிப்போட்டு பதிவெழுதுகிறார்? தமிழ்ச்சொல்லின் அர்த்தம் நேரடியாக (எளிமையாக) விளங்கிக் கொள்ள முடியாமல் போவதினால், அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தை சொல்லப்படுகிறது.

குமுதம் ஆசிரியர் சாட்சி சொல்ல வரப்போவதில்லை. Inductive logic படி, இது வரை ஞாநி எப்படி எழுதியிருக்கிறார்? தீம்தரிகிட (Dheemtharikida | Gnani) இதழ்களில் ஸ்டைல், லேட்டஸ்ட் போன்றவை தென்பட்டாலும் குமுதத்தில் வெளியான அளவு நெருடவில்லை.

ஆசிரியர் கைங்கர்யமா, ஞாநியின் விருப்பமா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

2. —வருகின்ற எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.—

நிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன் 🙂

அதாவது, பொதுமைப்படுத்திவிடமுடியாது.

அதுவும், இன்னொருத்தர் எழுதியதை அனுமதித்தால்

  • ‘இந்தக் கருத்துக்கு மட்டுறுத்தியவர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்னும் குற்றச்சாட்டு;
  • ‘அவதூறாக இருக்குமோ?’ என்று நிறுத்தி வைத்தால், ‘கருத்து சுதந்திரம் பறிபோகிறது!”

இந்தப் பதிவுடன் எப்படியோ சம்பந்தப்படுத்தி, இங்கே என்னைப் பற்றி அவதூறாக அனானியாக ஒருவர் எழுதினால்,

  1. அ) தணிக்கை செய்து வெளியிடுவீர்கள்
  2. ஆ) முழுமையாக நிராகரித்துவிட்டு, ‘மன்னிக்கவும்… உங்கள் மறுமொழி சரியில்லை’ என்று பொதுவில் சொல்வீர்கள்.
  3. இ) முழுமையாக நிராகரித்துவிட்டு, எதுவும் சொல்லமாட்டீர்கள்
  4. ஈ) அப்படியே வெளியிடுவீர்கள்
  5. உ) அதன் பிறகு நான் அதை கண்டித்தால், குறிப்பிட்ட அநாகரிகமான பதிலை நீக்குவீர்கள்
  6. ஊ) மீண்டும் ஒரு மறுமொழி (இது வேறு ஐ.பி.; இன்னொரு தாக்குதல்; மீண்டும் (அ) விற்கு செல்லவும்; ஒவ்வொரு பதிவிலும் இந்த சுழற்சி தொடர்ந்தால்?)

என்னைப் போன்ற அதிகம் அறியப்படாத பதிவர் என்றால், இந்த மாதிரி எங்காவது பேர் வந்தாலே பெருமிதம் அடைந்து மகிழ்வார்.

ஆனால், ரஜினி, அண்ணா, சானியா மிர்சா போன்ற பொருத்தமான புகழ் பெற்றவர்களை நோக்கிய வசவுகளையும் இணையப் பெருசுகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

சுருக்கமாக… தாவு தீர்ந்துரும்.

இந்த மாதிரி செய்து கொண்டே அலுவலிலும் நாட்டம் பயில இயலுமா?

3. —என், அருள்செல்வன், சன்னாசி, இன்னும் பலரின் வலைப்பதிவுகளில் எத்தனை முறை மட்டுறுத்தி பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன?—

இந்தப் பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் / எவ்வளவு பேருக்கு புரிகிறது?

அருள்செல்வன் கருத்துப்படங்கள் விளங்குவதில்லை; சன்னாசி கவிதைகள் புரியவில்லை. அறிவியல் குறித்து லாஜிக் (தமிழில் என்ன சொல்லோ? விக்சனரி ‘அறிவுப்பூர்வமான’ என்கிறது – எனக்கு இது பொருத்தமாக தெரியவில்லை) உடன் எழுதினால் ஆக்ரோசமாக விவாதம் செய்ய என்ன இருக்கிறது?

ஈழம், பார்ப்பனீயம் போன்றவற்றில் உத்தம நிலையை (பொலிடிகலி கரெக்ட்) முன்வைத்து எழுதினாலோ, முகமிலியாக எழுதினாலோ நீங்கள் சொல்வது பொருத்தம். கலகக்குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பினால் கல்லடி கிடைப்பது சகஜம்தான் என்று வைத்தியசாலைக்கு பக்கத்தில் வலையகத்தை நடத்துவது சாத்தியமா?


சன்னாசிக்கு—டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை.—

தட்ஸ்தமிழில் கூட மறுமொழி வசதி இருக்கிறது. சினிமா கிசுகிசுவாகட்டும்; அரசியல் செய்தியாகட்டும்; இந்த மறுமொழி ஒவ்வொன்றுமே, Platonic பண்புகளை வலியுறுத்தி சகலவிதமான NC-17 தரச்சான்றிதழுடன் உலா வருகின்றன.

இங்கேல்லாம் பிரச்சினையே இல்லை.

ஆனால், சில நூறு பதிவர்கள். அனைவரின் இடுகைகளும் படிக்காவிட்டாலும் ‘சூடான பதிவு’ படிக்கப்பெறுகிறது; பதில்கள் கண்காணிக்கப்படுகின்றன. (மின்னஞ்சலிலேயே பதிலுக்கு வந்த பதில்கள் வந்துசேருமாறு வோர்ட்பிரெஸ் முதல் ப்ளாக்ஸ்பாட் வரை வசதி இருக்கிறது!)

ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா? அல்லது அதற்காக ஜென் தத்துவம் பயில வேண்டுமா?


—-டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, —-தொழிலுக்கொரு வேலையை வைத்துக் கொண்டு இயங்கும் தமிழ்ப்பதிவுகளையும் லாப நோக்கில் இயங்கும் ஆங்கில இதழ்களையும் எப்படி ஒப்பிடலாம்?

—-என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. —-

ஆங்கிலம் போன்ற பரவலாக வலைப்பதிவுகள் இயங்கும் இடங்களில் லட்சக்கணக்கில் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மறுமொழிகள்.

கருக்கலைப்பு குறித்த பதிவு என்றால் தீவிர சார்புடைய ஒரு அணியில் இருந்து சில நூறு பேரும், எதிர்த்தரப்பில் இருந்து இன்னொரு நூறு பதில்களும் பதிவுகளும் விழுகிறது. விவாதம் அமைகிறது.

ஜெயமோகன், பாரா போன்றவர்களுக்கும் இந்த மாதிரி பரந்துபட்ட களம் அமைய தற்போதைய சூழல் உகந்ததாக இருக்கிறதா?

இவரின் பதிவின் கருத்தை வலியுறுத்தி பேசினால், ‘அடிப்பொடி’ என்று பட்டமிடும் நிலையும், குறுகிய குழு (எல்லா விவாதத்திலும் பங்குபெறும் நாலைந்து பேர் கொண்ட சபையில் — நூறு பேர் வாசகர்) என்னும் சூழலும் உள்ள இடத்தில் உருப்படியான எழுத்தையும் என்னைப் போன்ற சிலரே திசை திருப்புமாறு அமைந்து விடாதா?

ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா?

—-நேரடி மனிதத் தொடர்புகளைத் தாண்டிய கருத்து விவாதங்களுக்கு பழம்பெருச்சாளிகள் தயாரில்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம் —-

இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

—-ஆற்றில் மணல் எடுக்க வரும் லாரிகள் மாதிரி ஒரு பெரிய லாரி ஊர்வலமே வருகிறது!!—-

எப்படி இவ்வாறு ஒப்புமை செய்கிறீர்கள்?

எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன் ஏற்கனவே பதிவு வைத்திருந்தார். ‘எதிர்த்த வீட்டுக்காரர் E550 வாங்கியிருக்கார்…’ என்னும் தொற்றுவியாதியாகவோ ஒரு சிலர் வந்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் வேண்டுமானால், நீங்கள் சொல்வது சரி!

டைம், எகானமிஸ்ட் என்று கண்டங்கள் தோறும்; டைம்ஸ், ப்ராஸ்பெக்ட் என்று தினசரி/வார/மாதாந்தரிகள் தோறும்; முன்னாள் பத்திரிகையாசிரியர், இன்னாள் தொலைக்காட்சி நடத்துனர் என்று எல்லாரும் மொய்க்கிறார்கள்.

தமிழில் உங்கள் லாரி ஊர்வலத்தில் யார் யார் இருக்கிறார்கள்?

—-கோமாளிகளால் எந்த இடத்திலாவது கையெழுத்துப் போடாமல் விட முடிகிறதா?—-

இதைக் கூட விளக்கினால் பயன்பெறுவேன். முகமிலியாக எழுதுவது மட்டும்தான் உயர்ந்ததா? இருபது இடுகைகள் இட்டவுடன் அந்தப் பதிவை மூடிவிட்டு புதியதாக வேறொரு பெயரில் இன்னொன்று துவக்க வேண்டும் என்று இந்தக் கருத்தை புரிந்து கொண்டிருக்கிறேன்.

—-ஹிப்போக்ரஸி தான் பிரச்னையே. பின்னூட்டப் பொட்டியை மூடிவிட்டு எழுதுங்கள் என்று ஒரு அறிவுரை.—-

“A sadist is a masochist who follows the Golden Rule.” என்பது போல் இருக்கிறது.

தன்னைத்தானே அடித்துக் கொள்வது தனக்கு சுவாரசியமாக இருக்கிறது என்பதற்காக அனைவரையும் சவுக்கால் அடிக்க சொன்ன மசாக்கிஸ்ட் கதை போல் இருக்கிறது.


உதவிய புத்தகம்: Joculor, Ergo Sum (May-June 2007)


—பின்னூட்டப் பெட்டி என்றாலே குப்பைக் கூடை என்று எல்லோரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை—நாலைந்து தடவை எழுதிய பிறகு சொன்னதையே திருப்பிச் சொல்லுதல், பொருத்தமற்ற அல்லது அதிர்ச்சியடைய வைக்கும் ஒப்புமைப்படுத்தல் (சாடிஸம் மஸோக்கிஸம்), தடாலடி முடிவுரை (முழுவிதண்டாவதம் என்னும் கணிப்பு) போடுதல், தீர்ப்பு விதித்தல் (ப்ராக்ஸியாகப் பெற) என்று ஆகுவதால் இப்படிப்பட்ட எண்ணம் எழுந்திருக்கலாம் 😉


தேடுபொறிகளில் பக்கத்திற்கான மதிப்பெண் உயர, ‘சுட்டும் உரல்கள்’ மிக மிக அவசியம்.உதாரணத்திற்கு கூகிளின் வரிசைப்பட்டியலில் (PageRank – Wikipedia, the free encyclopedia) சில வலையகங்கள் ஆறு மதிப்பெண் பெற்றிருக்கும். அதே மாதிரி விஷயகனம் கொண்ட இன்னொரு வலையகத்திற்கு, ஐந்துதான் கொடுத்திருப்பார்கள்.SEO சூட்சுமமாகக் கூட இந்த மாதிரி பின்னூட்ட பெட்டி மூடுதலை நோக்கலாம்!

சன் டிவியில் மீண்டும் பார்த்த ‘சபாஷ் மீனா’ இரண்டு தடவை தேய்ந்து போன பேழையாக திரும்ப திரும்ப சொற்றொடர்களை சொல்லிப் படுத்தியது… அந்த மாதிரி ஆகும் ஆபாயம் உணர்ந்தாலும், நான் அறிந்தவரை தொகுப்பு.

—இந்த மாதிரி அவதூறுகளை முன்னே பின்னே பார்த்திராதவர்கள் இங்கே வந்து ஏதோ பச்சைப்பிள்ளை மாதிரி சிரமப்படப்போகிறார்கள் என்று ஏன் முன்னேற்பாடாகச் செய்யவேண்டும்? அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? —

1. எனக்கு அவசியம் சொல்லவேண்டுமானால், சொல் (தனிமடல்).

உலகத்திற்கு அவசியம் உன்னுடைய கண்டனங்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டுமானால், எழுது (தனிப்பதிவு). [என்னுடைய முதுகின் மேல் ஓசி சவாரி கேட்காதே!]

2. ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்பட்டார்கள். [வல்லவனுக்கு வில்லி 🙂 ]

நன்றி!


சன்னாசி…
—மேலே சொன்னது உங்கள் கருத்தா? ஆமெனில், உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை முதலில் மூடுங்கள்.—இது எனக்காக சொல்லிக் கொண்டது அல்ல.

இங்கேயே கூட சின்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்…

ஜமாலன் – வலையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றிகள்!

என்று ‘பெரிய’ ஆளுக்கு பதில் சொல்லி சுருக்கமாக நன்றியோடு முடித்து கொள்ளும் வெங்கட்

நீங்கள் மேலே எழுதியிருப்பதெல்லாமே முழுவிதண்டாவதம்

என்று எனக்கு மாறிவிடுகிறார்.

மனித இயல்புதான். வெங்கட் தவிர நேற்று புதிதாக ஆரம்பித்த அனானி ‘ஜெமோவும் பாராவும் எஸ்ராவும் இன்ன பிறரும் பிறருக்கு பயந்து பின்னூட்டத்தை மூடியிருக்கிறார்கள்’ என்று அனுமானித்திருந்தால் எனக்கு இவ்வளவு ஆர்வமாக கேள்வி எழுந்திருக்காது.

வெங்கட்டின் பதிவில் கவர்ந்த கருத்துகளில் சில…

  • மின்வடிவத் தகவல்கள் உயிரூட்டமானவை.
  • துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.

அலகிலா விளையாட்டு: “அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.”

என்பதுதான் என் கட்சி

வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்

தமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஏன்?

  • ஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)
  • தினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்!
  • பதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.

மாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.

நிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.

  1. தமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)
  2. ஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது
  3. குமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்
  4. தமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்

ஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.

‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது? நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.

குமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா? அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.

மொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

இன்றைய உலகம் & சுதந்திரம் & தணிக்கை – சிந்தனை

1. ‘அடுத்த வீட்டுக்கு ஆலோசனை திட்டம்‘: தம்பி கொசொவோ சுதந்திரம் அறிவித்ததை, அண்ணன் துருக்கி வரவேற்றிருக்கிறது. சூட்டோடு சூடாக, துருக்கிக்குள் இருந்து விடுதலை கோரும் குர்துக்களை தீர்த்துக் கட்ட, சுதந்திர நாடான இராக்கிற்குள் புகுந்து, தன்னாட்சி உரிமை கொண்ட குர்துக்களை ஓட ஓட அடித்துக் கொல்கிறது.

வாக்களிப்பதற்கு முன் படிக்க வேண்டிய பத்திகள்:

2. ‘பெரியவர்கள் சொற்படி நட‘: இராஜீவ் காந்தியின் சார்க் நாடுகள் கூட்டமைப்பு பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால், ஈழ விடுதலைக்கு இந்தியா இன்னும் பெரிய அளவில் உதவியிருக்கும். தான் உள்ளிருக்கும் நாட்டை விட, ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பினால் போதும்; நாடோ-வில் நம்பிக்கை வைத்தோர் தனி நாடாக்கப் படுவார்.

3. ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா‘ – முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், அதே தாடியை வளர்த்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக தாடியை மாக்-3 அமெரிக்க கத்தி பதம் பார்த்து விட, 76 வயது இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கி விட்டார்.

4. ‘வெற்றித்தலைவர் ≡ தலைசிறந்த நடிகர்‘: குருதிப்புனல் திரைப்பட வசனத்தில் வரும் ‘‘தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிப்பது’, எனபதற்கேற்ப நடந்த முதல் நடவடிக்கை.

  • இணையமே எங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் நடித்ததை நம்பி, கிட்டத்தட்ட மொத்த உலகத்திற்கும் யூ-ட்யூப் எட்டாதவாறு செய்து காட்டியது. இந்தியர்களும் சில வலையகங்களை சென்சார் செய்ய முயற்சித்தார்கள்; பாக்கிஸ்தானும் முயற்சித்திருக்கிறது. என்னவாக இருந்தாலும், பக்கத்து நாட்டுக்காரர்கள் அதிபுத்திசாலிகள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  • அலபாமா: தணிக்கை செய்வதாக சொல்லி செய்தால்தானே பிரச்சினை… ‘சிலபல தொழில்நுட்பக் காரணங்களால் உங்களின் வாய் இறுக்கக்கட்டப்படுகிறது’ என்று மென்மையாக, நாகரிகமாக சொல்லத் தெரிந்தால், அவர்களுக்குப் பெயர் அமெரிக்கா. குடியரசுக் கட்சிகளின் சேட்டையையும், ஜனாதிபதி புஷ் பரிவாரத்தின் எதிர்க்கட்சி அடக்குமுறைகளையும் ஒளிபரப்ப, உள்ளூர் கேபிள் கன்னல் இப்படித்தான் நாசூக்காக இருட்டடிப்பு நடத்தியிருக்கிறது. இந்த மாதிரி ஒரு மாநிலத்தின் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் குடியரசு நாயகர்களிடமே கைவசம் இருப்பதற்கு ஜான் மெகெயின் போராடி வருகிறார்.

தென்றல் இதழ்: அமெரிக்க அதிபர் தேர்தல் '08 – சுந்தரேஷ்

தென்றல் (இலவசம்) பதிவு செய்தால், இணையத்தில் படிக்கலாம். முழுக் கட்டுரையில் இருந்து விவாதிக்கத்தக்க கருத்துகள் சில:

  • மைக் ஹக்கபீ சதர்ன் பாப்டிஸ்ட் பிரிவைச் சார்ந்த ஒரு மதத்தொண்டர். (இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பாப்டிஸ்ட் சர்ச்சின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் கிறிஸ்தவத் தனிநாடு கேட்டு போராடி வருவது தெரிந்திருக்கலாம்). எவாஞ்சலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெற்றவர். அதே சமயம் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்பவர்களுக்கு மிக ஆதரவானவர்.
  • பல பிரச்சினைகளில் தெளிவாகக் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் ஹிலாரி பராக் ஒபாமாவை விடக் கறுப்பின மக்களுக்கு இணக்கமானவராகத் தெரிகிறார்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் தொழில் துறை, அவுட்சோர்சிங், அணுசக்தித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரிபப்ளிகன் கட்சி இந்தியாவுக்கு பாதகமில்லாத நிலையை எடுத்து வந்துள்ளது. டெமக்ராட்டிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாடு மறுபரிசீலனைக்கு உள்ளாகலாம்.