பொதுமையாக்கலுடன் நிறைய பிரச்சினை உண்டு. அதுவே ஒரு பொதுமைப்படுத்தல்தான் என்பதால், அமெரிக்க வாழ் சகாக்கள் குறித்த பொதுக்காரணியாக்கல்:
“It is lamentable, that to be a good patriot one must become the enemy of the rest of mankind” என்கிறார் வால்டேர். இதையே “தான் உண்டு… தன் வேலை உண்டு என்று இருந்தால் சக இந்தியத் தொழிலாளிகளின் எதிராளியாக மாற்றுவது தேஸி மனப்பான்மை” என்று மொழிபெயர்க்கிறேன்.
இருப்பு கொள்ளாமையில் தவிக்கிறார்கள். “அவள் என்ன செய்கிறாள்?” என்று அறிவதை இலட்சியமாக வைத்திருக்கிறார்கள். காசு செலவழிப்பதற்கு அஞ்சாதவர்கள், கஞ்சத்தனத்தைக் கைவிட மறுக்கிறார்கள். பதற்றமும் அச்சமும் நடுத்தர வர்க்கத்தின் குறியீடுகளா அல்லது நடுத்தர வயதின் குறியீடா என குழப்பவைக்கிறார்கள். நொடிக்கு நொடி மாறும் விளம்பரம் போல் குவிமையமின்றி அலைபாய்ந்து வேகமாக தாவிக் கொண்டே பறக்கிறார்கள்.
ஹோட்டலுக்கு சென்றால் tip வைக்காமல் வருவது; பாத்ரூமிற்கு சென்றால் சீப்பை எடுத்து இல்லாத சிகைக்கு அலங்காரம் செய்வது; காபி எடுக்க சென்றால் கூடவே ரத கஜ துரக பதாதிகளை அழைப்பது; உங்களோடு தெலுங்கானா குறித்து காரசாரமாகப் பேசிவிட்டு, நீங்கள் பதிலளிக்க ஆரம்பித்தால் ஃபேஸ்புக் பக்கம் சென்று விடுவது…
இதெல்லாம் இந்தியக் கலாச்சாரமா? தேசிக் கலாச்சாரமா? என்று சீமான் அமெரிக்கா வரும்போது “மக்கள் முன்னால்” விவாதிப்பார்.