* அத்திரி ரிஷி போன்றோர் பெரிய மகானாக நிறுவப்பட்டிருக்கிறார். மும்மூர்த்திகளையே பச்சிளம் பாலகராக்கிய அனுசூயாவின் கணவர் என்பதால் முக்கியமான ஆளாக சொல்லப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்டவரே பிறப்பை இழிவாக்கி வாதங்களில் வென்றது
* ஏகாதசி விரதம் என்றால் ருக்மாங்கதன் ராஜா கதை நினைவிற்கு வரும். அவருக்கு இப்படி ஒரு பின்னணி
* கிருச்சமதர் என்றால் ஏதோ கிறித்துவ போதகரின் பெயர் போல் தோன்றுகிறதே!
அவசர உலகம். பாத்ரூம் போகிற அவசரத்தில் செல்பேசியில் இலக்கியம் படிக்கும் தலைமுறை. மூணே மூணு நிமிஷத்துக்குள் கதை சொல்லுங்க பார்ப்போம்னு போட்டி வைத்திருக்கிறார்கள்.
பாத்ரூமுக்குப் போய்விட்டு துர்நாற்றமடிக்கிறதே என்று அங்கலாப்பதையொத்து அமெரிக்காவில் கல்லூரி மாணாக்கர்கள் லூட்டி அடிக்கிறார்களே என்று பயமுறுவது. இது தொலைக்காட்சித் தொடர்.
போதை மருந்து சகஜமாகப் புழங்குவதையும் கூட்டணியாக உடலுறவு வைத்துக் கொள்வதையும் தற்பால் விழைவை புகட்டுவதையும் பதின்ம வயதினரின் போட்டா போட்டி குடியையும் காட்சியாக்கி இருக்கிறது.
எம்.டி.வி. எப்பொழுதுமே அடுத்த கட்டம். மடோனாவின் வெளிப்படையான ஆடை; வீடியோவில் பலான உறவு; ரியாலிடி நாடகங்களில் வன்முறை; என்று தொடர்ச்சியாக அமெரிக்காவை துகிலுரித்து காண்பிப்பதன் அடுத்த கட்டம் இந்த டீனேஜ் சீரியல்.
ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிக்கும் மேற்கத்திய உலகிற்கு இன்னொரு தலைவலி. நிஜ மனிதர்களை நீக்கிவிட்டு ஹாலாகிராம் உருவங்கள் அவர்களின் இடத்தைப் பிடிக்க ஆரபித்திருக்கின்றன.
24 மணி நேரம் ஆனாலும்… சொன்னதையே சொல்கிறது. எவ்வளவு தடவை கிளிப்பிள்ளை மாதிரி ரிபீட் செய்தாலும், முகஞ்சுளிக்காமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. உள்ளே கூட நுழைந்து வரலாம்.
புனிதப் பசு என்று ஏதாவது உண்டா? ஜெயமோகனோ சுந்தர ராமசாமியோ ஜாதியைக் குறித்து எழுதினால் பொங்கி எழுவது போல் திபெத் போராட்டத்தை இழிவு செய்கிறார்கள் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde