Price Comparison for Commodities – ADMK vs DMK Govt

Dinamani.com – TamilNadu Page

பொருள்கள் விலை: ஜெ. ஒப்பீடு

சேலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சியில் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவாக இருந்தது; தற்போது அவற்றின் விலை அதிகரித்து விட்டது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.

அவர் குறிப்பிட்ட விலை விவரம்: (அடைப்புக்குறிக்குள் அதிமுக ஆட்சியில் நிலவிய விலை)

மஞ்சள் ஒரு கிலோ ரூ.50 (ரூ.28)

புளி கிலோ ரூ.50 (ரூ.25)

வெள்ளைப்பூண்டு ரூ.75 (ரூ.50)

துவரம்பருப்பு ரூ.52 (ரூ.28)

உளுத்தம்பருப்பு ரூ.65 (ரூ.25)

கடலைப்பருப்பு ரூ.45 (ரூ.18)

பாசிப்பருப்பு ரூ.55 (ரூ.26)

மைதா ரூ.21 (ரூ.12)

கோதுமை மாவு ரூ.20 (ரூ.12)

ரவை ரூ.22 (ரூ.14)

மொச்சைப்பயறு ரூ.60 (ரூ.25)

காராமணி ரூ.50 (ரூ.25)

தனியா ரூ.45 (ரூ.28)

மிளகாய்வத்தல் ரூ.45 (ரூ.30)

சுண்டல்கடலை ரூ.50 (ரூ.30)

சீரகம் ரூ.125 (ரூ.90)

கடுகு ரூ.30 (ரூ.15)

வெல்லம் ரூ.12 (ரூ.6)

சர்க்கரை ரூ.18 (ரூ.15)

மிளகாய்த்தூள் ரூ.105 (ரூ.55)

பாமாயில் ரூ.50 (ரூ.30)

நல்லெண்ணெய் ரூ.50 (ரூ.38)

தேங்காய் எண்ணெய் ரூ.75 (ரூ.50)

ரீபைண்டு ஆயில் ரூ.55 (ரூ.28)

இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம் என்றார் ஜெயலலிதா.

ரசிக்கும் சீமானே

ஓ…
ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…
ரசிக்கும் சீமானே வா

வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…
ரசிக்கும் சீமானே வா


அன்றும் இன்றும்

  • அன்று: ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். குமாரி கமலா நடனம் ஆடுவார். கனவான்கள் திண்டு சகிதம் அமர்ந்திருக்க சிவாஜி வந்து சேருவார். பாட்டின் முடிவில் சிவாஜிக்கு மயக்க மருந்து தரப்படும்.

    இன்று: நேரு உள்நாட்டு விளையாட்டரங்கத்தில் சினேகா ஆடுகிறார். கலைஞர் இளமையில் எழுதிய பாடலுக்கு புது முலாம் பூசப்படுகிறது. திரையுலகின் மணிரத்னம், அஜீத் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தவிர குறிப்பிடத்தக்க அனைவரும் ஆஜர். பொதுஜனம் லத்திசார்ஜ் வாங்கினாலும், ஆஜர் ஆகிவிடுகிறார்.

  • அன்று: ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?’ என்று வசனம் எழுதினார்.

    இன்று: ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?’ என்று எண்ண வைக்கிறார்.

  • அன்று: கிட்டத்தட்ட நிரந்தர முதல்வராக உள்ள ம.கோ.ரா.விற்கு பாராட்டு விழா எடுக்க பிரபலங்கள் அணுகுகின்றனர். ‘நாங்கள் தற்போது ஆரம்பித்திருக்கும் “சத்துணவு திட்டத்திற்கு”, விழாவிற்கு ஆகும் செலவை கொடுத்து விடுங்க… எனக்கு விழா வேண்டாம்’ என்று நாசூக்காக மறுத்து, பொதுநலத்திற்கும் நிதி சேர்க்கிறார் அன்றைய முதல்வர். (படித்த இதழ்: இதயம் பேசுகிறது)

    இன்று: பக்கத்து வீட்டில் சிகுன் குனியா, அண்டை மாநிலத்தில் டெங்கு என்று நோய்கள் பிரச்சாரம் இல்லாமல் பெருகினாலும், பிரச்சாரத்திற்காக பெருவிழா எடுத்து இளைஞர்களைக் கவரும் ரெகார்ட் டான்ஸ் விழா.

    திரையுலகக் கலைஞர்கள் எடுத்த விழா குறித்த தமிழ்ப்பதிவுகள்:

    1. நுனிப்புல்: நல்லா நடிக்கிறாங்கப்பா!

    2. பினாத்தல்கள்: பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா..

    3. அலசல்: யார் இதை சொன்னாங்கன்னு தெரியுமா?

    4. கில்லி – Gilli » Tamil Cinema felicitates Chief Minister Karunanidhi


    | | | |

  • Flashback – 5 Years Back & Still unanswered Questions

    Dinamani.com – Editorial Page

    என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?

    அ.கி. வேங்கட சுப்ரமணியன்

    மறுபடியும் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. 2001 சென்னை மாநகராட்சித் தேர்தலில் சராசரி வாக்குப் பதிவு சுமார் 35 சதவீதம்தான். சில கோட்டங்களில் 20 – 25 சதவீதம்தான். இந்தக் கோட்டங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கோட்டத்தில் உள்ள மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை. மாநகராட்சி முழுவதிலும் சேர்ந்து முக்கிய இரு கட்சிகளுக்கும் மொத்த வாக்குகளில் சுமார் 10 சதவிகிதமே கிடைத்தது.

    வாக்குப் பதிவின் போது சில கோட்டங்களில் வன்முறையால் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. குறைவான வாக்குப்பதிவுக்கு இந்த வன்முறையும் ஒரு காரணம். பிற்பகலில் வாக்களிக்கலாம் என்று இருந்த வாக்காளர்கள் முற்பகலில் நடந்த வன்முறையைத் தொலைக்காட்சியில் பார்த்த பின்பு வாக்களிக்க வேண்டாம் என்று வீட்டிலேயே இருந்து விட்டார்கள்.

  • “சென்னையில் சில வாக்குச் சாவடிகள் சூறை; அ.தி.மு.க., – தி.மு.க. மோதல்: வாக்குச் சீட்டுக்கள் கிழிப்பு”
  • “தி.மு.க, அ.தி.மு.க பரஸ்பர புகார்”
  • “திருவான்மியூரில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிப்பு; கராத்தே தியாகராஜன், சரத்குமார் வாக்குவாதம்; டி .வி., காமிரா சேதம்; மூன்று வேட்பாளர்கள் தர்ணா”

    மேற்கண்டவை எல்லாம் 17-10-2001 தினமணி நாளிதழில் வெளியான செய்தித் தலைப்புகள்.

    வாக்களிக்கும்போது மட்டுமல்ல, 22.10.2001 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்ற மையங்களிலும் வன்முறை நடந்தது. 23.10.2001 தினமணியில் இதுபற்றி வெளியான செய்தித் தலைப்புகள்:

  • “சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் அ.தி.மு.க வன்முறை – ஸ்டாலின் புகார்”
  • “சென்னையில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் – கருணாநிதி கோரிக்கை”

    இந்தச் செய்தியில் “ஜனநாயகப் படுகொலை செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது RAPE செய்யப்பட்டிருக்கிறது என்றார் கருணாநிதி” என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி ஆட்சி தேவையில்லை. அந்தந்தப் பகுதி மக்களே தங்களுக்குள் ஒரு நல்ல நபரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 152வது கிழக்கு அடையாறு கோட்டத்தில் ஒரு வேட்பாளர் “கிழக்கு அடையாறு குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின்” சார்பில் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. வேட்பாளருக்காக எளிய முறையில் பிரசாரம் நடந்தது; அவருக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் குடிமக்களின் இந்த முன் முயற்சி (initiative) இறுதியில் ஒரு சோக நாடகமாகவே முடிந்தது.

    இந்தக் கோட்டத்தின் வாக்கு எண்ணிக்கை இரவு 9.45க்குத் தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வாக்கு எண்ண மறுத்து தர்ணா செய்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு இரவு சுமார் 1 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

    பிறகு நடந்தது இந்தக் கோட்டத்தில் உள்ள 16 வாக்காளர்கள் சேர்ந்து அளித்த தேர்தல் மேல்முறையீட்டு மனுவில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், முறையாக வாக்குச்சீட்டுகள் எண்ணப்படுவது நடைபெற இயலாத சூழ்நிலை வன்முறையால் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை மையத் தலைமை அலுவலரிடமும், காவல் துறையினரிடம் எவ்வளவோ முறையிட்டும் ஒரு பயனும் கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையை விடியோ படம் எடுக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணை இருந்தும் அது நடைபெறவில்லை.

    நான் அறிந்த வரை இந்தியாவிலேயே வாக்காளர்கள் தேர்தல் மனு தாக்கல் செய்தது இதுவே முதல் தடவை.

    இதைப்போலவே இதர மையங்களிலும், வாக்குச் சாவடிகளிலும் நடந்த அராஜகச் செயலால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களும், தேர்தல் மனு தாக்கல் செய்தனர். சுமார் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

    ஏறக்குறைய ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், அடுத்த நகராட்சித் தேர்தலும் அறிவிக்கப்பட்ட பிறகும், வாக்காளரது தேர்தல் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அதில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மாநிலத் தேர்தல் ஆணையம், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர் ஆகியோர் தங்களது எதிர்மனுவை (Counter) இதுவரை தாக்கல் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டவர் மட்டும் எதிர்மனு தாக்கல் செய்ததாகக் கூறி வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறார்.

    முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் மனுக்கள், மனுதாரர் வருகை தராததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன (Dismissed). இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்ததாகத் தெரியவில்லை.

    இந்தச் சூழலில் பல கேள்விகள் எழுகின்றன.

    * தேர்தல் முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு காலவரையறை கிடையாதா?

    * வாக்காளர்கள் கொடுத்த தேர்தல் மனுவின் மீது மாநிலத்தேர்தல் ஆணையமும் மாநகராட்சியும் எதிர்மனு தாக்கல் செய்யாததற்கு மனுவில் கூறிய சம்பவங்கள் நடைபெறவில்லை என்று அவர்களால் வாதாட இயலாத நிலைதான் காரணமா?

    * வன்முறை நடந்த பொழுது அதைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் அவர்களது தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டபொழுது ஏன் மேல் முறையீடு செய்யவில்லை?

    * சென்ற முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் வாக்குச்சீட்டுகள் முறைகேடாக கையாளப்பட்டதைத் தவிர்த்திருக்க முடியும். இதை ஒரு பாடமாகக் கருதி இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?

    * வாக்கு எண்ணிக்கை மையத்தில் அராஜகம் நடத்தியவர்கள் சொன்னது, “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது நாங்கள் அதைச் செய்கிறோம்”. இப்பொழுது இவர்களும், “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது எங்கள் முறை” என்று சொல்லப்போகிறார்களா?

    * அரசியல் என்பது கட்சிகளுக்கிடையே உள்ள ஒரு போர் விளையாட்டு (War Game). அதில் குடிமக்களின் பங்கு தேர்தலில் ஓட்டுப் போடுவது அல்லது போடாமல் இருப்பது என்பது மட்டும்தானா?

    * முக்கியக் கட்சிகள் முறை போட்டு முறைகேடு செய்தால் யாரிடம் முறையிடுவது?

    * நீதிமன்றத்திலே முறையிட்டால் நீண்ட காலம் ஆகிறது. நீண்டகாலத்திற்குப் பிறகு தீர்ப்பு வந்தாலும் அராஜகச் செயலைச் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகச் சான்று இல்லை. ஜனநாயகப் படுகொலை அல்லது rape செய்பவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா?

    * கட்சிகளுக்குப் பெருத்த பண பலம், (Money Power), படை பலம், (Muscle Power), பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி பலம் (Media Power) இருக்கிறது. இதற்கு மேலும் கூட்டணி பலம் இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தால் அதிகார பலமும் இருக்கிறது. இவ்வளவு பலம் இருந்தும் நேர்வழியில் தேர்தலை நேர்கொள்ளாது வன்முறையிலும், குறுக்கு வழியிலும் அவர்கள் வெற்றி பெறத் துடிப்பது ஏன்? அந்த அளவிற்குப் பதவி மோகமா? அதிகார தாகமா?

    * அப்படியானால்~

    “என்று தணியும் இந்த அதிகார தாகம்?
    என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?”

    இந்தக் கேள்விகளுக்கு விடைகளை சம்பந்தப்பட்டவர்களிடமும் தங்களுக்குள்ளேயும் மக்கள் கேட்க வேண்டும்.

  • Children employed as Campaign Workers in TN Local Elections

    Dinamani.com – TamilNadu Page

    பாடப் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் கட்சிக் கொடிகள்: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறார்கள்!

    மதுரை, அக். 9: குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதே லட்சியம் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கோஷம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் குழந்தைகள் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிவதை எக்கட்சியும் கண்டுகொள்ளவில்லை.

    ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு பணம் கொடுத்து ஆள்களை ஏற்றிவரும் அரசியல் கட்சிகள், தற்போது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தினக்கூலி அடிப்படையில் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.

    காலையில் பள்ளி செல்வதற்கு முன்பும், மாலையில் பள்ளி முடிந்த பின்னர் இரவு 9 மணிவரையும் வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ரூ.30 முதல் 70 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதுதவிர, இடையிடையே டீ, பிஸ்கட், சாக்லேட் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

    சிறார்களைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு குறைந்த அளவே சம்பளம் கொடுத்தால் போதுமானது என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் சிறார்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

    மன ரீதியான பாதிப்பு: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைப் பொருத்தவரை உழைப்புச் சுரண்டல் என்ற கருத்து இல்லாவிட்டாலும், வேறு விதமான பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    “குறிப்பாக, தேர்தல் பணியில் வீடுவீடாகச் செல்லும் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் பீடி, சிகரெட், மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர். அதை வாங்கி வருவதற்கும் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றனர்.

    இது சிறுவர்கள் மனதில் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்து ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எதிர் அணியினர் பற்றி தகாத வார்த்தைகளால் திட்டுதல், வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றை காணும் சிறுவர்களிடம் உடல், மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது குழந்தைகளை மொட்டிலேயே கருகச் செய்யும் செயல்” என்கின்றனர்.

    இந்நிலையில், வீடு, ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 6 மாத சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.10) முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் தேர்தல் பணியில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுப்பது எப்போது?.

    ‘MGR and every other leader paid money to the Electorate’ – Panruti Ramachandran

    Headline News – Maalai Malar

    தாத்தா டி.வி. கொடுக்கிறார் பேரன் சம்பாதிக்கிறார்: தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

    மதுரை, அக். 9-
    முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவரு மான பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரை வந்திருந்தார். அவர் மாலைமலர் நிருப ருக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    இந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட இருக்கிற மாற்றம் பிறர் மரளத்தக்க வகையில் தே.மு.தி.க. வெற்றி பெறும். மதுரை மத்திய தொகுதியை பொறுத்த வரை தே.மு.தி.க. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெறுவது மூலம் தி.மு.க – அ.தி.மு.க.வினரின் நிலையில் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. ஆனால் தே.மு.தி.க. வுக்கு தேர்தல் கமிஷன் மூலம் அங்கீகாரம் தரும் நிலை ஏற்படும்.

    விஜயகாந்த் சொல்லி வரும் கருத்துக்கள் விவசாயிகளையும், படித்த இளைஞர்களையும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

    நான் 1967-ம் ஆண்டிலிருந்து பல தேர்தல்களை பார்த்து வருகிறேன். எல்லா தேர்தல்களிலும் பணம் விளையாடியது உண்டு. ஆனால் மக்கள் பண அடிப்படையில் வெற்றி தோல்வியை தருவது இல்லை என்பதே எனது அனுபவம் ஆகும்.

    கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் தோல்வியை கண்டவர்தான். 1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஜெயலலிதாவும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான். இருக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கி கொள்கிறார்கள். பணம் கொடுப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இருப்பது இல்லை.

    கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தும் கொசுவை ஒழிக்க முடிய வில்லை என்று விஜயகாந்த் பேசி வருகிறார். இதற்கும் காரணம் உண்டு. உள்ளாட்சித் துறை கொசு மருந்து வாங்குகிறது. அதில் லஞ்சம் பெற்று கொண்டு நீர்த்து போன மருந்தை வாங்கி தெளிக்கும் போது கொசுவுக்கு சுகமாக இருப்பதால் அது சாவதில்லை.

    எனவே மருந்து வாங்குவதில் உள்ள ஊழலை ஒழித்தாலே நம்மை எல்லாம் நோய் வாய்ப் பட வைக்கும் கொசுவை ஒழித்து விடலாம். எதிலும் அக்கரையும், நாணயமும் இருந்தால் வெற்றி முடியும். அந்த அடிப்படையில் விஜயகாந்த் சொல்கிறார்.

    கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தி.மு.க-அ.தி. மு.க.வுக்கு ஒரு பபபப என்ற தாகம் மககளிடையே இருக் கிறது. அதை மூப்பனார் முதல் ரஜினிகாந்த் வரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை. புரட்சி கலைஞர் விஜயகாந்த் துணிந்து தனது சொந்த செலவில் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிடுகிறார். ஆகவே மக்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

    ஒரு சர்வேபடி 32 சதவீதம் பேர் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை பிடிக்காதவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் தே.மு.தி.க. பக்கம் வருவதால் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது.

    தி.மு.க. அறிவித்து உள்ள திட்டங்கள் ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கும். வறுமையில் இருந்து அவர்களை விடுவிக்காது. 2 ஏக்கர் இலவச நிலம் போன்ற திட்டத்தை கடந்த 1974-ம் ஆண்டு அர்ஜின்டினா நாட்டில் நிறைவேற்றப்பட்டது. இலவச நிலத்தை 10 ஆண்டு களுக்கு விற்கக்கூடாது என்று ஆணையிடப்பட்டு இருந்தது.

    தற்போது அங்கு நடத்திய சர்வேயில் நிலம் பெற்றவர்கள் எந்த வகையிலும் முன் னேறாமல் ஏழைகளாகவே உள்ளனர். காரணம் அவர் களுக்கு வேறு வழியில் வருமானம் இல்லாததால் வங்கி எதுவும் கடன் கொடுப்பது இல்லை. இதனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. எனவே இங்கும் இலவச நிலம் பெற்றவர்கள் மேலும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

    ஏழைகளின் வறுமையை போக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நல்ல அறிவும் தேவை. எனவே விஜயகாந்த் சொல்வதை போல 25 லட்சம் பேருக்கு டி.வி. கொடுப்பதை விட அவர் களுக்கு வேலை கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். வறுமையும் குறையும்.

    இந்த இலவச டி.வி. கொடுப்பதை நினைக்கும்போது, `தாத்தா அரசு செலவில் கலர் டி.வி. தருகிறார். பேரன் கேபிள் இணைப்பு மூலம் வருடத்திற்கு 300 கோடி வரை சம்பாதிக்கிறார்’ என்று தான் சொல்ல தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன் னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் உடன் இருந்தார்.

    SNEHA – Invite (Oct. 13)

    வெள்ளி மாலை அன்று சென்னை வலைஞர்கள் கலந்துகொண்டு பங்காற்ற நண்பர் அனுப்பிய அழைப்பிதழ்.

    மேலும் விவரங்களுக்கு: அதிகாரபூர்வ வலையகம்

    தேதி: அக்டோபர் 13
    நேரம்: 5:30 மாலை
    இடம்: நாரத கான சபா
    விஐபி: அன்புமணி ராமதாஸ்


    | | |

    Gandhi Jeyanthi – Subramaniya Samy – RSS Sonia – Georgia – US Tamilan

    பேசும் செய்தி

    நன்றி: திண்ணை

    Dei mezzi e dei fini -pensando a Parigi e sfidando il ridicolo-1. காந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம் சட்டத்தை மீறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லோக தளம் கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் அசோக் அரோரா கோரிக்கை விடுத்துள்ளார்.

    அசோக் அரோராவைத் தொடர்பு கொண்டேன். கொட்டித் தீர்த்தார். “காந்தி இறந்த சோகத்தில் நாடே இருள் கவ்வி, சோகத்தில் கவிந்திருக்கும் தினத்தில், தனியொரு மனிதனுக்கு தண்ணியில்லையெனில் இந்த தேசத்தினை அழித்திடுவோம் என்னும் தாபம் உடையவன் நான். கல்யாணம் என்பது துன்பியல் நிகழ்வு. அங்கு மணமக்கள் வருங்காலத்தை நினைத்து மதுவருந்துவது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஆனால், அந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லையே என்பது எனக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது” என்று உணர்ச்சிவசப்பட்டார்.


    splish, splash, i was taking a bath2. திருநாவுக்கரசர்-சுப்பிரமணியசாமி சென்ற சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு ஜெட் ஏர் விமானம் மதுரைக்கு புறப்பட தயாரானது. இதில், சுப்பிரமணியசாமி, சந்திரலேகா உள்ளிட்ட 36 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடிய போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. ஒரு மணி நேர தாமதத்திற்கு பின்பு பாதுகாப்பாக மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

    தோண்டித் துருவி விசாரித்துப் பார்த்துவிட்டேன். சுப்பிரமணிய சுவாமி நிச்சயமாக சொல்லிவிட்டார். விமானம் பழுதானதற்கோ, பயணம் தாமதமாகியதற்கோ தான் நிச்சயம் காரணமல்ல என்று பெருந்தன்மையுடன் சுவாமி மறுத்தவுடன், மூன்று நிருபர்கள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.

    ‘இந்த மாதிரி அசம்பாவிதம் நிகழலாம் என்பதாலேயே நான் அவ்வப்போதுதான் உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன்’ என்று சுப்பிரமணிய சாமி நகர்ந்தார்.


    sleepworking3. ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் பங்கேற்க ம.பி. அரசு ஊழியர்களுக்கு அனுமதியை ஆட்சேபித்து கலாமுக்கு சோனியா கடிதம்: ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் பங்கேற்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநில அரசும் இதே போன்ற உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டில் பிறப்பித்தது. காங்கிரஸ் முறையீட்டை அடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

    இந்த உத்தரவை குறித்து பிறப்பு சான்றிதழ் பெறக் காத்திருந்த அப்பாவிசாமியிடம் கருத்து சேகரித்தோம்: “அரசு ஊழியர்கள் நடவடிக்கையில் இறங்குவார்களா? அவர்கள் எந்தக் காலத்தில் எதைத்தான் நகர்த்தி இருக்கிறார்கள்! ஒரு புழு, பூச்சி மேலே ஊர்ந்தால் கூட, ஒன்றும் அறியாமல் உறங்கும் அப்பாவிகளுக்கு அனுமதி வழங்குவதால் சேதம் எதுவும் விளையாது. இந்த அனுமதிக்கு எதிராக கடிதம் வரைந்ததற்கு பதிலாக, அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வழங்க சோனியா கடிதம் போட்டிருக்கலாம்”.


    4. ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது: ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் உடனடியாக ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலியைத் தொடர்பு கொண்டு பேசினார். ஒட்டுக் கேட்டதில்…

    “நீ அவர்களை உடனடியாக ரஷியாவிடம் அனுப்பியிருக்கக் கூடாது. ஐந்து பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்தும் ஒரு மில்லியன் டாலாராவது ப்யூடினிட்மிருந்தும் கறந்த பிறகே அனுப்பித்திருக்க வேண்டும். போனால் போகிறது… கவலைப் படாதே சகோதரா! இன்றே ஒரு புத்தகம் எழுத ஆரம்பி! நானே தலைப்பு எடுத்துக் கொடுக்கிறேன். ‘வேவு ஓநாய்களும் உள்நாட்டு குள்ள நரிகளும்’ என்று பெயர் வைத்துக் கொள். அமெரிக்கா எப்படி உன்னை மிரட்டியது, அப்கேசியா கலகம் எவ்வாறு புஸ்வாணமானது, ரஷியாவின் அணுகுண்டை ஜார்ஜியா எப்படி கண்டுபிடித்தது என்று ஒவ்வொன்றாக எழுது!”

    அதற்கு மேல் அவர் சொன்ன திரைக்கதை போரடித்ததால், அமெரிக்கா ஒட்டுக்கேட்காமல் இணைப்பைத் துண்டித்து விட்டது. முழுவதும் தர இயலாமைக்கு வருந்துகிறேன்.


    western travelers5. அமெரிக்க விமான நிலையத்தில் தமிழில் செல்பேசியவர் விமானத்தை விட்டு இறக்கிவிடப்பட்டார்: சியாட்டிலில் வசிக்கும் தமிழரை தொடர்பு கொண்டு பேசினோம். அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியான ஸ்பானிஷில் கதைக்காததுதான் ஆதாரமான பிரச்சினை என்றார்.

    “திராவிடக் கட்சிகள் ‘ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்’ செய்ததால், பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை தமிழர்கள் இழந்து வருகிறோம். நான் சந்தேகத்திற்குட்பட்டதற்கு மூல காரணமாக தமிழக ஆட்சியாளர்களைக் குற்றஞ்சாட்டுகிறேன். அவர்கள் மட்டும் ஆளாவிட்டால் தூய தமிழில் பேசி, கைதாகிய பிறகும் ஆங்கிலம் கைகொடுக்காமல், சிறையில் இருந்தே கடிதம் தீட்டி காவியம் படைத்திருப்பேன்” என்று உற்சாகமாக முடித்துக் கொண்டார்.


    | |

    Loyola College Survey: DMK Wins & Rajni or Vijayaganth

    Headline News – Maalai Malar

    உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா மாணவர்கள் கருத்து கணிப்பு

    சென்னை, அக். 6-

    மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை யொட்டி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டது.

    தமிழகம் முழுவதும் `பொது’ பிரிவில் இருந்து `தனி’ பிரிவுக்கு மாற்றப்பட்ட பஞ்சாயத்துக்களில் 25 பஞ்சாயத்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    அது போல மதுரை மத்திய தொகுதிக்குப்பட்ட 15 வார்டுகளில், ஒரு வார்டுக்கு தலா 80 பேர் வீதம் 1260 பேரி டம் கருத்து கேட்கப்பட்டது.

    சிக்குன் குனியா, விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தி.மு.க. அரசின் நலத் திட் டங்களுக்கு அனைத்து கிரா மங்களிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. அ.தி. மு.க.வை பொருத்த வரை அது கிராமங்களில் இன் னும் வலுவாக உள்ளது. சில கிராமங்களில் மற்ற எல்லா கட்சிகளையும் விட அ.தி. மு.க.வுக்கு அதிக ஆதரவு உள்ளது.

    சில கிராமங்களில் விஜய காந்த் கட்சிக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. ஆனால் பல கிராமங்களில் அந்த கட் சிக்கு ஓரிரு இளைஞர்களே உறுப்பினர்களாக உள்ள னர்.

    மதுரை மத்திய தொகுதியில் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தி.மு.க. வேட்பாளருக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 22.6 சதவீத வாக்காளர்களே ஆத ரவு தெரிவித்துள்ளனர்.

    விஜயகாந்தின் தே.மு.தி.க. 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. 45.8 சதவீத ஓட்டு வாங்கி இருந்தது. தி.மு.க.வுக்கு தற்போது 5.4 சதவீத அளவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 38.2 சதவீத ஓட்டு பெற்றிருந்தது. அதில் 15.6 சதவீத ஓட்டுக்கள் மாறுவது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

    விஜயகாந்த் கட்சி கடந்த தேர்தலில் 12.8 சதவீத ஓட்டுக் களை வாங்கி இருந்தது. தற் போது அந்த கட்சிக்கு கூடு தலாக 4.8 சதவீத ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கிராமங்களில் இருந்த பொது தொகுதிகளை தனி தொகுதியாக மாற்றப்பட்டதை மக்கள் எதிர்ப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள் ளது. சுழற்சி முறையால் மக்கள் கசப்புணர்வும், காழ்ப் புணர்வும் அடைந்துள்ளனர். அரசும், அதிகாரிகளும் வேண்டும் என்றே சாதிப் பிரச்சினையை தங்கள் மீது திணித்துள்ளதாக பலரும் நினைக்கிறார்கள்.

    பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் கிராமங் களில், “பெரும்பான்மைமக் கள் விருப்பத்துக்கு எதி ராக தேர்தலை அரசு வலுக் கட்டாயமாக திணிக்கிறது” என்ற மன நிலை மக்களிடம் நிலவுகிறது. கீரிப்பட்டியில் பெரும்பான்மை இனத்த வரிடம் கட்சி ரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது.

    பாப்பாபட்டியில் இரு குடும்பங்களுக்கு இடையே கவுரவப் போட்டி நிலவுகிறது. நாட்டாமங்கலத்தில் மட்டும் தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு எதுவும் இல்லை என்றாலும் இந்த 3 கிராமங்களிலும் பெரும்பான்மை சமூகத்தை பகைத்து கொண்டு வாழ்க்கை நடத்த இயலாது என்ற உள் பயம் தாழ்த்தப்பட்டவர்களிடம் இருப்பது கருத்து கணிப்பின் போது தெரிந்தது.

    ஆய்வுக்குழு பயணம் செய்த கிராமங்களில் சிக்குன் குனியா பரவலாக இருப்பதை கண்டனர். மக்கள் இது பற்றி கூறுகையில்,

    “சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்” என்றனர்.

    2 ஏக்கர் இலவச நிலம் திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக் கப்பட்டு வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது. விலை வாசி உயர்வால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருப் பதை ஆங்காங்கே காண முடிந்தது.

    பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு நிறைய பேர் (16.5) ரஜினியை கூறி உள்ளனர். விஜயகாந்த்துக்கு (10.1) 2-வது இடமே கிடைத்துள்ளது. இந்த தகவல்களை லயோலா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் இன்று நிரு பர்களிடம் வெளியிட்டார்.

    ‘AIADMK is the root cause for Chikun Kunya’ – Krishnasamy

    Dinamani.com – TamilNadu Page

    சிக்குன் குனியா பரவுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

    சென்னை, அக். 6: சிக்குன் குனியா நோய் தமிழகத்தில் பரவுவதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்து அவர் பேசியது:

    தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை தமிழக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார்.

  • கிலோ அரிசி இரண்டு ரூபாய்,
  • விவசாயக் கடன் தள்ளுபடி,
  • இலவச நிலம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
  • திமுக ஆட்சியில்தான் சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஒரு மேம்பாலம் கூட கட்டப்படவில்லை.

    ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2003-ம் ஆண்டு கொசுவை ஒழிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. மாநகராட்சி பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கொசுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கமிட்டி ஒரு நாள் கூட கூட்டப்படவில்லை. ஜெயலலிதா அரசின் குளறுபடியால்தான் கொசு பரவி சிக்குன் கனியா நோய் வந்துவிட்டது.

    இன்றைக்கு திமுக அரசு அதைக் கட்டுப்படுத்தி வருகிறது. கருணாநிதியை யாரும் எளிதில் பார்க்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் பார்க்க முடியாததால்தான் நம் கூட்டணிக்கு வந்துள்ளார்.

    மாநில அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும். அந்த வகையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

  • West Velachery Woes makes them contest the Election

    Dinamani.com – Chennai Page

    மேற்கு வேளச்சேரி பகுதி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் ஒலிக்குமா?

    சென்னை, அக். 6: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 153-வது வார்டில் மேற்கு வேளச்சேரி நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுயேச்சை வேட்பாளராக பாலா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதையடுத்து பிருந்தாவன் நகர் உள்ளிட்ட மேற்கு வேளச்சேரி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒலிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வேளச்சேரியை கிழக்கு வேளச்சேரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதையடுத்து இப்பகுதி மக்கள் நேரடியாக தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர்.

    சென்னை புறநகர்ப் பகுதிகளின் விரிவாக்கம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உருவானது மேற்கு வேளச்சேரி. வேளச்சேரி ஏரியின் ஆயக்கட்டுப் பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உருவாகியுள்ளன. ஏரி அருகில் உள்ளதால் இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என இங்கு குடியேரியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது.

    இப்பகுதி அடைந்து வரும் வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கு வேளச்சேரி 1978-ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    தேர்தலில் போட்டி ஏன்? இணைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அடிப்படை வசதிகள் தொடர்பான எந்த ஒரு திட்டமானாலும் நீதிமன்றம் வரை சென்றுதான் எங்களால் பெற முடிந்தது என மேற்கு வேளச்சேரி குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியது:

    வேளச்சேரியின் மற்ற பகுதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இப்பகுதி தனித் தீவாக உள்ளது. இதற்காக வேளச்சேரி ஏரியின் தெற்கு பக்க கரையை ஒட்டி வேளச்சேரி பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலையும், இங்குள்ள ஏ.ஜி.எஸ். சாலை வழியாக பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தேர்தல் பிரசாரத்துக்காக இங்குவரும் அரசியல் தலைவர்களிடம் இந்த கோரிக்கையை வைக்க இப்பகுதி மக்கள் தவறவில்லை. இந்த இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் அவசியம் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

    காலதாமதம் காரணமாக திட்டத்துக்கான செலவு அதிகரித்ததுடன் இப்பகுதியின் வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமான வேளச்சேரி ஏரியின் கரை உயரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் நலன் கருதி அரசியல் வாதிகள் குறைத்துள்ளனர்.

    ஏரியின் கொள்ளளவு குறைந்ததால் மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் வெள்ள நீரால் இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு மேற்கு வேளச்சேரியின் தேவைகள் குறித்த எங்களின் குரல் மாநகராட்சியில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தோம் என்றார்.

    மேற்கு வேளச்சேரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளச்சேரி பைபாஸ் சாலைக்கு செல்ல நேரடியான சாலை இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது என தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசியல்வாதிகள் உரிய கவனம் செலுத்தாததே இப்பகுதி மக்கள் தேர்தலில் போட்டியிட முக்கியக் காரணம் என்றார் மகாதேவன்.

    20-க்கும் மேற்பட்ட நலச் சங்கங்கள் ஆதரவு: இப்பகுதியில் உள்ள 20-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கங்கள் இம் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலா தெரிவித்தார். இது தவிர இங்குள்ள மூத்த குடிமக்கள் சங்கம், உந்துநர் அறக்கட்டளை, நுகர்வோர் நல அமைப்புகள் ஆகியவையும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன என்றார்.

    சென்னை மாநகராட்சியின் 153-வது வார்டில் மொத்தம் உள்ள 95 ஆயிரம் வாக்காளர்களில் இங்கு மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக இவர்களின் பிரதிநிதிகள் யாரும் அரசியல் கட்சி சார்பில் கூட மாநகராட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேறாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.