Kalachuvadu Announcements

காலச்சுவடு விழா + அறிவிப்புகள்


காலச்சுவடு அறக்கட்டளை நடத்தும்

பாரதி – 125
புதுமைப்பித்தன் – 100
சு.ரா. – 75

உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு :: டிசம்பர் 18, 19, 20 தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வை டிசம்பர் 18 அன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் துவங்கி வைக்கிறார்.


| |

Va Vaa Sangam scores Centum

கிரிக்கெட்டில் சதம். சிக்ஸரும் ஃபோருமாய் அடித்துத் தள்ளினால் சீக்கிரமே வந்து சேரும்.

திரைப்படத்திற்கு நூறாவது நாள். வெற்றி விழா எடுப்பார்கள். அல்லது ‘நூறாவது நாள்’, ‘வெற்றி விழா’, என்றே தலைப்பிட்டு கொண்டாடுவார்கள்.

ஆட்சியில் 100 நாள் முடிந்தவுடன், பத்திரிகைகள் அனைத்தும் தங்கள் மதிப்பீடுகளை வழங்கும்.

வேலையில் சேர்ந்து டிரெயினிங் முடிந்து, கணினி கையில் கிடைத்து, திறமையை நிரூபிக்க நூறு தினங்கள் போதும்.

அந்தக்காலமாக இருந்தால் திருமணமாகி நூறு நாள் ஆனால், ‘பொண்ணு குளிக்கறாளா?’ என்று ப்ரெஷர் போட ஆரம்பிப்பார்கள். இந்தக் காலமாக இருந்தால் தேனிலவு கூட முடிந்திருக்காது.

பிறந்த குழந்தைக்கு தலை தூக்கி நின்று விடுவது என்னும் முக்கியமான அடையாளத்துக்கு நூறு நாட்கள்.

விநாயகருக்கு கொழுக்கட்டை பிடித்தால் நூறு. தெய்வங்களுக்கு தேங்காய் உடைத்தால் நூறு.

பூஜ்யத்துக்கு அர்த்தம் சேர்ப்பது ஒன்று.
வாழ்க்கையின் மைல்கல் நூறு.

சங்கத்து சின்னம்ஒற்றை ரூபாயாக எளிதில் லஞ்சம் கொடுக்க வசதியான ரூபாய் நூறு.

அவசர போலீஸ் 100.

நூற்றுக்கு நூறு என்பது கணக்கு பரீட்சையில் சாத்தியம். தமிழில் சாத்தியமில்லை என்பதை முறியடிக்க பிறந்தவர்கள் வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம். பெயருக்கு ஏற்றமாதிரி வருத்தப்படாமல் ஒரு காரியம் செய்து இருக்கிறார்கள். என்னைக் கூப்பிட்டு எழுத சொல்லியிருக்கிறார்கள்.

உஷா சொல்வது போல் வ. வா சங்கத்தில் பாபாவா?- தெய்வமே.. தெய்வமே

வ.வா.ச. நூறாவது பதிவு.


| | |

Creamy Layer – AK Antony – Drunkard MLA – Bank Strike

பேசும் செய்தி – 5 (நன்றி: திண்ணை)

Pumpkin-Citrus Cake1. இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: ‘ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று தொல். திருமாவளவன் கலந்து கொள்ளும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

செல்பேசி சுழன்றது. “வணக்கம். இன்று நான் திமுக அணியில் இருக்கிறேன். பா.ம.க ஆதரவு நிலைப்பாடை அறிய எண் 2-ஐ அழுத்தவும். தற்போதைய குஷ்பூ ‘பெரியார்’ பட கண்டன அறிக்கையை கேட்க எண் 3-ஐ அழுத்தவும். ‘அன்புத் தோழி’ வெளியீட்டுத் தகவல்களைப் பெற எண் 4-ஐ அழுத்தவும். என்னைத் தங்களின் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எண் 5-ஐ அழுத்தவும். என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள எண்-பூஜ்யத்தை அழுத்தவும்” என்னும் தானியங்கி செய்தி வாசித்தது.

ஜீரோவைத் தொட்டவுடன் தொல். திருமா கிடைத்தார். கருத்தை வினவினோம். “மாதத்துக்கு 20,833.33 மட்டுமே பெறுபவர்கள் அவர்கள். இவர்களை எப்படி க்ரீமி லேயர் என்று சொல்லலாம்? திரைப்படம் பார்க்க சென்றால் ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எம்.ஜி.எம் சென்றால் இன்னும் சில ஆயிரங்கள். பாலில் க்ரீமி லேயர் இருக்கும். இவர்களோ கிஷ்கிந்தாவில் ஸ்க்ரீம் மட்டுமே செய்பவர்கள். நான்கு வாரங்கள் கொண்ட மாதத்தில் கேளிக்கைக்கே எல்லா சம்பளமும் செலவழிக்கும் இவர்களின் வழித்தோன்றல்களுக்கு சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது.” என்று பகிர்ந்து கொண்டார்.

Greetings and salutations.2. மத்திய அமைச்சரவையில் ஏ.கே.அந்தோணி கேரளாவுக்கு 2-வது மந்திரி: ஏ.கே.அந்தோணி ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு தற்போதைய முதல் மந்திரி அச்சுதானந்தன் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

‘நமது எம்.ஜி.ஆர்’-ஐப் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மயங்கி விழுந்ததாக விஷயமறியாத வட்டாரங்கள் என்னிடம் சொன்னார்கள். “அம்மாவிற்கு அதிர்ச்சியாகாத செய்திகளைத்தான் ‘நமது எம்.ஜி.ஆர்’ பிரசுரிக்கும். ஆனால், இந்த செய்தி எடிட்டரின் பச்சை மையால் திருத்தப்படாமல் தப்பித்து விட்டிருக்கிறது. அம்மா அயர்ச்சி ஆனவுடன், என்ன செய்தி என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நாங்களும் புரட்டினோம். நமது அண்டை மாநிலத்தார் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டோம்.

ஏகே ஆண்டனியோ காங்கிரஸ். அச்சுதானந்தனோ கம்யூனிஸ்ட். எதிர் துருவத்தைப் பாராட்டலாமா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாழ்த்தியிருக்கிறார்? ‘உள்ளூரில் இருப்பதற்கு பயப்பட்டுக் கொண்டு ஓடி ஒளியும் எதிர்க் கட்சி கரப்பான் பூச்சி’ என்று ரைமிங்காகவோ, ‘ஏற்கனவே மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர்தானே? நாளைக்கே பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டு துண்டுக் கடுதாசி கொடுக்கப் போகும் அரை வேக்காடு’ என்று ஏக வசனமாகவோ வசைமொழியல்லவோ வீசியிருக்க வேண்டும்?

ஆனால், தேசிய அளவில் தன் அரசியல் முதிர்ச்சியை கொண்டு செல்வதற்கு இது ஏற்ற சமயமாக அம்மா கருதுகிறார். கூடிய சீக்கிரமே லல்லு போல் ‘அரசியல் பாடம்’ எடுக்க முயற்சிகளை முனைவார்” என்று வட்டாரம் முடித்துக் கொண்டது.

That's one way to deal3. விஜயகாந்த் பற்றி விமர்சனம்: கண்ணிய குறைவாக இருந்தால் ஜெயலலிதா மீது நடவடிக்கை: சபாநாயகர் பேட்டி: “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு பொறுப்புடன் வந்து செல்கிறார். சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினர் குடித்து விட்டு வருவார் என்று ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது தமிழக சட்டசபையின் ஜனநாயக மாண்பை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழக மக்கள், குடித்துவிட்டு யார் சட்டப் பேரவைக்குள் வருகிறார்கள் எனத் தெரியாமல் எல்லா உறுப்பினர்களையும் குடிப்பழக்கம் உள்ளவர்களாகவே உருவகப்படுத்தி பார்க்கத் தொடங்கியுள்ளனர்.” என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக மக்களைத் தொடர்பு கொண்டோம். விளம்ப ஆரம்பித்தார். “ஆறரை கோடிப் பேர்களும் ஒருமித்த கருத்துடனேயே இருக்கிறோம். விஜய்காந்த் திரைப்படத்தில் நடிப்பதை அப்படியே நிஜ வாழ்வில் நடத்திக் காட்டுவார் என்று நம்புவதைப் போலவே, புரட்சித் தலைவி ‘குடிகாரர்’ என்று சொன்னவுடன், அனைவருக்கும் அந்த வசதி கிட்டுவதாகவும், பயன்படுத்துவதாகவும் நம்புகிறோம். எங்களுக்குத்தான் குடிக்க தண்ணீரும் கிடைப்பதில்லை. காசு கொடுத்து வாங்கும் கோக்கிலும் நச்சுப்பொருள் பாய்ந்து தவிக்க விடுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களாவது வசதியாக, தாகசாந்தி செய்து கொள்பவர்களாக எண்ணினோம்.” வாதம் புரிந்தவரின் தொண்டைத் தண்ணீர் வற்றிப்போனது. நிறுத்திவிட்டார்.

பீட்டர் அல்ஃபோன்ஸ் வந்தார். “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்று நாங்கள் சட்டமன்றத்தைப் பாங்குடன் நடத்துகிறோம். கூட்டணித் தலைவர் கலைஞர் தன்னுடைய பதவிப் பித்தைக் கூறுவார். அதற்கு எதிரணித் தலைவி செல்வி ஜெயலலிதாவும் ஆட்சி மோகத்தை அரங்கேற்றி பதிலளிப்பார். நடுநடுவே நாங்களும் சமயத்திற்கேற்ப புழுதி வாரி தூற்றியும் புகழை வாரி துதிபாடியும் சபை நடவடிக்கையில் பங்கேற்போம்.

எவ்வளவு குடித்தாலும் எங்களுக்கு போதையேறுவதில்லை. குடித்தால்தான் போதையேறும் என்னும் நிலையிலுமில்லை. எனவே தெளிவில்லாமல் பேரவைக்குள் வருகிறார்கள் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்” என்று நிதானமாகவே காணப்பட்டார்.

do-practically-nothing4. அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கலை எதிர்த்து அக். 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வெளிப் பணி ஒப்படைப்பு (அவுட் சோர்சிங்), ப்ரைவடைசேஷன் ஆகியவற்றை எதிர்த்து அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள்.

கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாச்சலத்தை முதலில் பிடித்தோம். “இப்போது கூடப் பாருங்க சார்… நான் ஃப்ரீயாகத்தான் இருக்கிறேன். ‘வெங்கடாசலா…’ என்று ஒரு முறை அழைத்தவுடனேயே கூவிய குரலுக்கு செவி மடுத்தேன். இது எப்படி முடிகிறது? ஏகப்பட்ட பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள். எனக்கு இன்னிக்கே வேலை போனாக் கூட சாகிற வரைக்கும் பென்ஷன் சலுகைகள் உண்டு. உங்க சாஃப்ட்வேரில் agile methodologyன்னு ஜல்லியடிப்பீங்களே… ஒத்த வேலைக்கு நாலு பேரு கணினிய சுத்தி நின்னு கும்மியடிப்பீங்களே! அந்த மாதிரி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க சொல்றோம். தப்பா? ஆஃபீஸ் கம்ப்யூட்டரில் விகடன்.காம் சந்தாவா கட்ட சொல்லி வறுபுத்தறோம்? ஃப்ரீயா கிடைக்கறத மட்டும் படிச்சு, தேமே என்று இருக்கும் எங்களை வீணாக உசுப்பி விட்டிருக்கிறார்கள்”.

அவரைத் தணிக்க முயன்ற அடிப்பொடியை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. ‘வல்லவன்’ டிக்கெட் கிடைத்ததும் வெங்கடாசலம் கிளம்பிப் போனபின், நுழைவுச்சீட்டு வாங்கி வந்திருந்த அந்த கடைநிலை சிப்பந்தியை அணுகினோம். “எனக்கு பயமாக இருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தினால், வங்கி ஊழியர்களின் தேவையை மக்களும் நிர்வாகமும் உணர்ந்து விடுவார்களோ என்னும் கவலைத் தொற்றிக் கொண்டுள்ளது. பணியே செய்யாமல் டபாய்ப்பதை எல்லோருக்கும் புட்டு புட்டு வைத்து, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்ல’ என்பது போல் சிறுபிள்ளைத்தனமாக ஸ்டிரைக் செய்கிறார்கள். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்று வருந்தினார்.


| |

Loosu Penney – Vallavan Inspired

லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே
லூசுப்பையன் உன் மேலதான் லூசா சுத்தறான்
காதல் வராதா காதல் வராதா
என் மேல் உனக்கு காதல் வராதா?

என்னும் பாடல் உல்டா பாடலுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் பொருந்தியது. காதல் என்பதற்கே உரித்தான அடைமொழியான லூசு என்னும் பதத்தை வாங்குபவராக பெண்ணையும் கொடுப்பவராக ஆணையும் கருவாக அமைத்த கவிதை.

முதலில் களத்தைத் தேர்ந்தெடுக்கவும். காட்டாக இந்திய கிரிக்கெட் வீரன். அடைமொழியாக அவுட்.

மட்டைவீரனே மட்டைவீரனே மட்டைவீரனே
மடையன் உன் மேலதான் மப்பா இருக்கறான்
ஆட மாட்டியா ஆட மாட்டியா
என்னிக்காவது உனக்கு ஆட வராதா?

இன்னும் சில முயற்சிகள்:

வாக்குப்பெட்டி வாக்குப்பெட்டி வாக்குப்பெட்டி
வாக்காளன் உன் மேலதான் வாக்கா போடுறான்
மாற்றம் வராதா மாற்றம் வராதா
ஆட்சியிலதான் மாற்றம் வராதா?

ஆட்சென்ஸே ஆட்சென்ஸே ஆட்சென்ஸே
ஆட்பையன் உன் மேலதான் Ad-ஆ போடறான்
காசு வராதா காசு வராதா
ப்ளாக் மேல் எனக்கு காசு வராதா?

சந்திரமுகியே சந்திரமுகியே சந்திரமுகியே
சாந்திக்காரன் உன்னத்தான் ரீலா சுத்தறான்
நிறுத்த மாட்டானா நிறுத்த மாட்டானா
ஓட்டறத என்னிக்காவது நிறுத்த மாட்டானா ?
(தொடர்பான சுட்டி: Voice of Rajinifans :: சந்திரமுகி – 560)

பேப்பர்காரனே பேப்பர்காரனே பேப்பர்காரனே
ப்ளாக்ப்பையன் உன்னத்தான் பேப்பரா புரட்டுறான்
நியூசு கிடைக்காதா நியூசு கிடைக்காதா
ப்ளாகில் போட எனக்கு நியூசு கிடைக்காதா?

இவ்வளவுதாங்க தோணிச்சு. உங்களுக்குத் தோணினதையும் சொல்லுங்க…

லூஸு முயற்சி இல்லாமல், சேரிய முயற்சியைப் படிக்க இங்கு செல்லலாம்: அன்புத் தோழி தயா: –>சுட்டிப்பெண்ணே…


| |

Each week, we provide a cartoon in need of a capti…

Each week, we provide a cartoon in need of a caption. You, the reader, submit your caption below, we choose three finalists, and you vote for your favorite. Finalists for this week’s cartoon will appear online Monday, November 6th, and in the November 13th issue of The New Yorker. Any U.S. resident age eighteen or older can enter.
 Posted by Picasa

21ts Birthday Greetings to Asin

அசின் பிறந்த நாள்.
அகிலமெங்கும் ஆதுரம் அடைந்த அசின் அக்காவிற்கு வாழ்த்துக்கள்.

  • E – T a m i l : ஈ – தமிழ் – 1105 அஸினின் வளைவுகள் (சென்ற வருட வாழ்த்து அட்டை, பதிவு)
  • First Look: Asin’s birthday: இன்றைய தினத்தை 92.7 பண்பலையில் சேவா சக்கர (Seva Chakkara Samajam) சிறார்களுடன் கொண்டாடியிருக்கிறார்.
  • Asin’s 20th birthday plans: இது சென்ற வருடம்
  • கார்த்தியின் கனவுலகம்: அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: நினைவூட்டிய தமிழ் வலைஞர்.
  • Asin Thottumkal – Wikipedia

    ‘எவ்வலையகம் சுட்டாருக்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
    விக்கியகம் சுட்டா மகற்கு’

  • Tamil Actress Asin – அதிகாரபூர்வ வலையகமாமே?

    | |

  • Vijayganth Dialogues – Cricket Betting – MP Gas Leak – Tourist Election Observers

    பேசும் செய்தி – 4 (நன்றி: திண்ணை)

    Do Aana1. “தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார்”: முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் “கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் தோல்வியை கண்டவர்தான். 1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஜெயலலிதாவும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான். இருக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கி கொள்கிறார்கள். பணம் கொடுப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இருப்பது இல்லை.”

    என்னிடம் தனியே சொல்லியிருக்க வேண்டியதை அறிக்கையாகவே விட்டிருந்த பண்ருட்டியாருக்கு தொலைபேச எண்ணியவுடன், நேரிலேயே ஆஜரானார். “சும்மாத்தானே இருக்கிறேன். எதற்கு செல்பேசி செலவு? மதுரையில் தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக 5300 ஓட்டுகள் கிடைத்தது. விஜய்காந்த்தின் ‘பேரரசு’ வெற்றிதான் இதற்கு காரணம். அடுத்த படத்தில் சம்பளம் கூடுதலாகத் தருகிறார்கள். அதன் எதிரொலியை, கணிசமான அளவுக்கு, கவுன்சிலர்களையும், வார்டு உறுப்பினர்களையும் பணம் கொடுத்து பெற்றதன் மூலம் நிரூபித்திருக்கிறோம்” என்றார்.

    பண்ருட்டியாரின் வேட்டிமுனையை பிடித்துக் கொண்டிருந்த விஜய்காந்த்தின் கண்கள் சிவந்தது. “இவருக்கும் இனிமேல் லியாகத் அலிகான் தான் வசனம் எழுதித் தரப் போகிறான். பழுத்த அரசியல்வாதியாச்சே என்று நினைத்தேன். ஆனால், கூட இருப்பவர்களுக்கு பழுத்து விடுவதால்தான் இந்தப் பெயர் வந்தது என்பது இவரின் அறிக்கைகளில் இருந்து எனக்குப் புலப்பட்டது. படம் கெட்டபின் திரை விமர்சனம்; கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம் என்பார்கள்! தேர்தலில் தோற்றபின் உதயசூர்ய நமஸ்காரம் என்பது அரசியல் வாக்கு” என்று கடுப்பானார்.


    Social Security2. இந்தியா-இங்கிலாந்து போட்டி: ரூ.80 லட்சத்துக்கு கிரிக்கெட் சூதாட்டம்: வெறும் எண்பது லட்சம்தானா என்னும் ஆச்சரியத்துடன் உள்ளூர் ஹவாலா ஏஜண்ட்களை அணுகினேன். விரிவாக தங்கள் குறைகளைப் பகிர ஆரம்பித்தார். “தம்பீ… உன் நினைப்பு சரிதான். முப்பது பேர் சம்பந்தப்பட்ட ஆட்டத்தில் ஆளுக்கு 6,000 டாலர் என்னும் ரேட்டு ரொம்ப கம்மி. இப்ப காலம் கெட்டுக் கெடக்கு. பாகிஸ்தானின் அப்துல் கான் அணுகுண்டு தயாரிச்சு மாட்டிண்ட்டான். நார்த் கொரியாவும் சக்ஸஸ்ஃபுல்லா குண்டு போட்டுப் பார்த்துடுச்சு. இப்போதைக்கு ஆஃப்ரிகா மட்டும்தான் ஹாட். மிச்ச மார்க்கெட்டெல்லாம் டல்லடிக்குது. ‘ஹவாலா ஏஜெண்ட்ஸ் அசோசியேசன்’ சார்பா சில கோரிக்கை வெச்சிருக்கோம்.

  • புதுப்படம் ரிலீஸான முதல் வாரம் எம்புட்டு வேணும்னா டிக்கெட் விலை வெச்சுக்கலாம்கிற மாதிரி, ஸ்டார் ப்ளேயர்ஸ் மேல் எவ்வளவு வேணும்னாலும் பெட்டு கட்டலாம்.
  • சுதான், சியரா லியோன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐ.நா. அமைதிப்படை ஒதுங்கிக் கொள்ளணும்.
  • போதை வர்த்தகத்தைப் பெருக்க பள்ளிக்கூடங்களின் கஃபேயிலேயே விற்பனை துவங்கணும்.
  • கென்னத் லே, என்ரான் மாதிரி காசு அடிக்கிறவங்களை அநியாயத்துக்கு, 65 கூட முடியாத சின்ன வயசுல போய் சேர்ந்துடறாங்க; அவங்க நல்லா இருக்க உடல்நல மற்றும் சேமநல திட்டங்கள் ஆரம்பிக்கணும்.

    குறைந்தபட்சமாக இவற்றை நிறைவேற்றாவிட்டால், தோனிக்கும் சேவாகுக்கும் சம்பளத்தை கட் பண்ணிடுவோம்” என்று மிரட்டினார்.


    Abandoned3. 6 கிராமங்களில் விஷவாயு வெளியேறியது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு: மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் உம்ராகஞ்ச் பகுதியில், திடீர் என்று விஷவாயு பரவியது. இந்தவிஷவாயு எங்கிருந்து வெளியேறியது என்பது மர்மமாக இருக்கிறது. இந்த விஷவாயு 6 கிராமங்களுக்கு பரவியதால் 1500 பேர் மூச்சுதிணறல், வாந்தி , மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தகவல் அறிய களத்தில் இறங்கினேன். அப்பொழுதுதான் அச்சுக்கோர்ப்பில் பிழை இருப்பது எனக்குத் தெரியவந்தது. ‘6 கிராமங்களில் விஷவாயு வெளியேறிய செய்தி வெளியானது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு’ என்பதே ஊடக வன்முறையாக திரித்து வெளியிடப்பட்டது தெரியவந்தது. மத்திய பிரதேச அரசைத் தொடர்பு கொண்டு விசாரணையை மேலும் முடுக்கினேன். “இருபத்தி இரண்டு வருடமாக நடத்தும் விசாரணையே முடிஞ்சபாடில்லை. எனவே, நீங்கள் அச்சுப்பிழையை பொருட்படுத்த வேண்டாம்” என்று என் கவலையை துடைத்தெறிந்தார்.

    தீவிர ஆராய்ச்சியின் முடிவில் கோகோ கோலா தொழிற்சாலையில் இருந்து கோக் வழிந்தோடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாக அறியப் பெறுகிறேன். கோக் நிறுவனத்தின் மேலாளர், ‘இனி இவ்வாறு தளும்பல்கள் நிகழாது. பாட்டிலுக்குள்ளேயே கோக் உறையும்!’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.


    4. மத்திய தொகுதியில் வன்முறை நடந்தபோது தேக்கடிக்கு சுற்றுலா சென்ற தேர்தல் பார்வையாளர்கள்: பரபரப்பு தகவல்: தேர்தலை கண்காணிக்கவும், செலவு விபரங்களை கணக்கிடவும் சஞ்சீவ்குமார், மீனா ஆகிய இரண்டு பார்வையாளர்களை மத்திய தேர்தல் ஆணையம் மதுரைக்கு அனுப்பி வைத்தது. அடிதடி நடந்த தேதி சஞ்சீவ்குமார் தன் உதவியாளருடன் விடுமுறை எடுக்காமல் அலுவலக காரிலேயே கேரளாவில் உள்ள தேக்கடிக்கு சுற்றுலா சென்றதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் செலவு கணக்கை பார்வையிட வந்த மீனாவும் அதே நாளில் ராமேசுவரம் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர் செப்டம்பர் மாத இறுதியிலும் இதுபோல ராமேசுவரத்துக்கு சென்று வந்தார்.

    முதலில் சஞ்சீவ்குமாரைத் தொடர்பு கொண்டேன். “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவோம் என்று திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி பேசினார்கள். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு கேரளாவில் ஆட்சி செய்கிறது. மார்க்சிஸ்ட்களுக்குள்ளே முரண்பாடு தரும் ‘இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது’ என்று பா.ம.க. தலைவர் இராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார். இதன் தொடர்பாகத்தான் தேக்கடி சென்று ‘இவர்கள் சொல்வதில் உண்மையுள்ளதா’ என்று யானைகளிடமும் மரஞ்செடிகொடிகளிடமும் விசாரித்தேன்” என்றார்.

    தலைசுற்றினாலும், இரண்டு பாரசிடமாலை முழுங்கிக் கொண்டு மீனாவையும் பிடித்து விட்டேன். “நமச்சிவாய நாமம் வாழ்க; நாதன் தாள் புகழ் வளர்க!! அந்த செய்தித்தாள் முழுமையானத் தகவலைக் கொடுக்கவில்லை. செப்டம்பர் மாத இறுதியில் ராமேசுவரத்துக்கு சென்றது உண்மை. ஆனால், அங்கிருந்து நேரடியாக காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்றேன். காசிக்கு சென்றால் மீண்டும் ராமேசுவரத்துக்கு மீண்டும் ஷேத்ராடனம் செய்ய வேண்டும் என்பதை ஆன்மீக அன்பர்கள் அறிவார்கள். அதன்படியே அடுத்த விஸிட்டாக ராமேசுவரத்துக்கு வந்தேன். நடுவில் வாரணாசிக்கு சென்றதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். இத்தனையும் நல்லபடியாக தேர்தல் நடக்க வேண்டும் என்னும் வேண்டுதலை முன்வைத்தே, சுயலாபநோக்கு ஏதுமின்றி பற்றற்ற முறையில் நிறைவேற்றினேன். தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!” என்று திருநீறு வழங்கினார்.


    | |

  • Games & Minds – Block

    நினைவு கூர்தலை சரி பார்ப்பதற்கான விளையாட்டு. நானும் என் ஆறு வயது மகளும் ஆடுகிறோம். தரையில் உட்கார்ந்து பல்லாங்குழி ஆடுவது போல் கீழே அமர்ந்திருக்கிறோம்.

    முன்னே அட்டையில் விதவிதமான சின்னங்கள். ஒவ்வொரு சின்னமும் இரு முறை இடம் பிடித்திருக்கிறது. எல்லா சின்னமும் மூடியிருக்கும்.

    ஒன்றைத் திறக்க வேண்டும்; அடுத்து இன்னொன்று; இரண்டும் ஒரே சின்னமாக இருந்தால், எடுத்தவருக்கு இரண்டு வாக்கு. மற்றொரு வாய்ப்பும் உண்டு. இரண்டும் ஒத்துப் போகா விட்டால், எடுத்த இடத்திலேயே, காய்களை மீண்டும் வைத்து விட வேண்டும். எதிராளி ஆடத் தொடங்குவார்.

    காலையில் ஏழு மணிக்கு எழுந்த களைப்புடன் என் மகள். அலுவலில் மேலாளர் இல்லாத குறையுடன் ஓய்வெடுத்த புத்துணர்வுடன் நான். முப்பத்தி மூன்றுக்கும் ஆறுக்கும் போட்டியில், இரண்டு முறை ஆறு வயது தோற்று விட்டது. முப்பத்தி மூன்றுக்கு விட்டுக் கொடுக்காமல் வளர்ந்த சுபாவம். சின்னக் குழந்தையோடும் வெற்றிக் கொடி கட்டும் ஆசை. கணினியில் ஆடி பழக்கம். (தேட: கூகிள் :: memory blocks game)

    tha 11105நினைவில் நிறுத்துவதற்கு சூட்சுமங்களை சொல்லித் தரப் பார்க்கிறேன். எவ்வாறு காய்களை எடுத்து அவதானிக்க வேண்டும்? அடுத்தவருக்கு எப்படி துப்புகள் கொடுக்காமல் ஆடுவது? வலதுகை ஓரம், இடதுபக்க நடு, என்றெல்லாம் குறியீடுகள் கொள்ள சொல்கிறேன்.

    இரண்டாவது ஆட்டம் முடிந்தவுடன் என்னிடம் கோரிக்கை வைத்தாள்.

    “அப்பா… இதுவரை இருவரும் வேகவேகமாக அடுக்கியது போல் இல்லாமல், இந்த முறை காய்களை நான் அடுக்கப் போகிறேன். நீ திரும்பி உட்கார்!”

    உள்ளாட்சித் தேர்தல் நினைவுக்கு வந்தது.

    இறுதியாட்டத்தில் சுளுவாக வெற்றி பெற்றாள். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆழ்துயில் பயிலச் சென்றோம்.


    | | |

    Books

    சமீபத்தில் என்னைக் கவர்ந்த சில ஆங்கிலப் புத்தகங்கள்:

    1. The God Delusion: Richard Dawkins: கடவுள், மதம், அறிவியல், சொந்தக் கதை, நல்ல எழுத்து, புரிகிற நடை எல்லாவற்றையும் கலந்து கட்டினால் எப்படி இருக்கும்?

      தொடர்பான சுட்டிகள்:

    2. Not So Funny When It Happened: Tim Cahill: The Best of Travel Humor and Misadventure (Travelers’ Tale)
    3. The Four Agreements: Don Miguel Ruiz: A Practical Guide to Personal Freedom, A Toltec Wisdom Book

      Be Impeccable With Your Word: Speak with integrity. Say only what you mean. Avoid using the word to speak against yourself or to gossip about others. Use the power of your word in the direction of truth and love.

      Don’t Take Anything Personally: Nothing others do is because of you. What others say and do is a projection of their own reality, their own dream. When you are immune to the opinions and actions of others, you won’t be the victim of needless suffering.

      Don’t Make Assumptions: Find the courage to ask questions and to express what you really want. Communicate with others as clearly as you can to avoid misunderstandings, sadness, and drama. With just this one agreement, you can completely transform your life.

      Always Do Your Best: Your best is going to change from moment to moment; it will be different when you are healthy as opposed to sick. Under any circumstance, simply do your best, and you will avoid self-judgment, self-abuse, and regret.

    4. Mountain Man Dance Moves: The McSweeney’s Book of Lists
    5. The Best American Nonrequired Reading 2006
    6. Trivia Lovers’ Lists of Nearly Everything in the Universe: Barbara Ann Kipfer: 50,000+ big & little things organized by type and kind

    | |

    Tamil Nadu Local Body Elections – Civic Poll Resul…

    Tamil Nadu Local Body Elections – Civic Poll Results : Final Tally Posted by Picasa