Category Archives: Uncategorized

சொல்றாங்க சொல்றாங்க

1. முதல்வர் உத்தரவிட்டால் ஆர்யமாலாவை மீட்ட காத்தவராயன் போல் பூட்டிய அறைக்குள் புகுந்து வைகோவைத் தூக்கி வருவேன். – காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் காளிமுத்து (தினமணி)

2. கருணாநிதி முரசொலியில் புதிய மகாபாரதம் எழுதியுள்ளார். அவர் கூற்றுப்படி செல்போனில் கர்ணன் (வைகோ) இந்த சகாதேவனிடத்தில் (காளிமுத்து) பேசியது உண்மைதான். கர்ணன் என்ன பேசினான் என்பதை வெளியிட்டால் போர்க்களத்தைவிட்டு இப்போதே துரியோதனன் (கருணாநிதி) ஓடிவிடுவான். – காளிமுத்து

3. நமக்கு எத்தனை இடங்கள் எனத் தெரியாது. சம அந்தஸ்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கின்றனர். அதனால்தான் இந்த இயக்கம் துளிர்கிறது. சில செய்திகளை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. நிதானமாக நான் காய்களை நகர்த்துகிறேன். இனி மதிமுகவுக்கு வசந்த காலம்தான். – வை.கோ (தினமணி)

4. ஆர்யமாலாவை சிறையெடுத்துச் சென்றதே காத்தவராயன்தான் என்பதுதான் உண்மை. வைகோவை சிறையில் நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாகக் காளிமுத்து கூறியுள்ளார். இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு ஏமாறுகிறவராக வைகோ இருப்பாரா என்ன? – கருணாநிதி

5. எங்களுடைய பொது எதிரி அதிமுக. ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தேர்தலில் தோற்கடிப்பதையே ஒரே குறிக்கோளாக எடுத்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். – ராமதாஸ் (தினமணி)

6. தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். தொகுதிப் பங்கீடு பற்றியும் யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்தும் கூட்டணியின் தலைவர் கருணாநிதி முடிவு செய்வார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். – ராமதாஸ் (தினமணி)

7. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். நூறு வாக்குறுதிகளாவது இருக்கும். இது ரூ. 40 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழக அரசின் நிதி நிலை ரூ. 26 ஆயிரம் கோடிதான். எப்படி இந்த அறிவிப்புகளை நிறைவேற்றப் போகிறார் என்று வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். – ராமதாஸ் (தினமணி)

பாஞ்சாலி – செல்ஃபோன் – கர்ணன்

அஸ்தினாபுரத்துக்கு அங்க தேச அதிபதி கர்ணன் விருந்தினனாக வந்தவன், மதிய உணவுக்குப் பிறகு, களைப்பு மிகுதியால் சற்று கண்ணயர்ந்து விடுகிறான்- அவன் காதோரம் சாய்ந்தும் -தோள் பட்டையில் படிந்தும் இருக்கிற “செல்போன்’’ சற்று சத்தமாகச் சிணுங்குகிறது.

தூக்கக் கலக்கத்திலேயே செல்போனில்; பேசும் விசையை அமுக்கி, கர்ணன் “அலோ’’ என்கிறான்.

மறுமுனையிலிருந்து ஒலி கேட்கிறது-

ஒலி :- நான் சகாதேவன் பேசுகிறேன்-

கர்ணன்:- எந்த சகாதேவன்? (வியப்புடன்) இ.ஆர்.சகாதேவனா? பூலித்தேவன் நாடகத்தில் பூலித்தேவனாக நடித்த சகாதேவன்தானே?

ஒலி :- இல்லையண்ணா- நான் பாண்ட வர்களில் ஒருவன்- நகுலனுக்கும் இளையவன் – சகாதேவன்; பாண்டுவின் கடைசி மகன் அண்ணா!

கர்ணன்:- அண்ணனா? நான் எப்படி உனக்கு அண்ணனாக முடியும்?

சகாதேவன்:- சத்தியமாக நான் உன் சகோதரன் தான் அண்ணா! அம்மா குந்தி தேவி உன்னைப் பார்க்க வந்தார் களே – உண்மையைச் சொல்லி யிருப்பார்களே! குந்தி தேவியின் பிள்ளையல்லவா நீ?

கர்ணன்:- அடடா; தாய் பிள்ளை- அம்மா மகன் சொந்த பந்தமெல்லாம் இப் போது நினைவுக்கு வருகிறதா? யுத்தம் என்றதும் என் தயவு தேவைப்படுகிறது- அன்றைக்கு என்னை சொந்த சகோதரனாக பாவித்து அங்கதேசாதிபதியாக வும் அமரச் செய்தவன்; என் நண்பன் துரியோதனன்! இப்போது அவனைப் பகைத்துக் கொள்ளச் சொல்லி அம்மாவும் தூது வரு கிறார்; நீயும் என் கையில் தாது பார்க்கிறாய்- எல்லாம் அந்தக் கண்ணன் செய்யும் சூது என்பது எனக்குத் தெரியும்….

சகாதேவன்:- கோபிக்காதேயண்ணா; உன்னைப் போன்ற உத்தமர்கள் துரியோத னன் அணியில் இருக்கக்கூடாது- எத்தனையோ கொடையளித்த கை உனது கை- இப்போது எங்க ளுக்கு அதுதான் `நம்பிக் கை’! அதை நீட்டு அண்ணா!

கர்ணன்:- சகாதேவா! போதும் உன் புகழாரம்! நீ தர்மன் மீது கொண்டுள்ள விசுவாசத்தின் அளவும் எனக்குத் தெரியும்!

சகாதேவன்:- தர்மண்ணாவை பேசச் சொல் லவா?…

கர்ணன்:- வேண்டாம், வேண்டாம்- உங்கள் ஐவருக்கும் சேர்த்துத்தான் அம்மா வந்து அழுது புலம்பிக் கெஞ்சிக் கூத்தாடி விட்டுப் போய்விட்டாரே! என் முடிவில் மாற்றமே இல்லை! நான் ஒரு தடவை சொன்னால்…. எத்தனை தடவை சொன்னதாக அர்த்தம் தெரியுமா?…

சகாதேவன்:- தெரியும் அண்ணா- ஒரு நிமிஷம் பாஞ்சாலி பேசணுமாம்-

கர்ணன்:- யார்?….

சகாதேவன்:- அதான்; திரௌபதி-

கர்ணன்:- அதெல்லாம் வேண்டாம்- என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை-

(அதற்குள் செல்போனில் பெண் குரல் கேட்கிறது -)

பாஞ்சாலி:- ஹலோ – நான்தான் பாஞ்சாலி பேசுகிறேன்….

கர்ணன்:- நான் யாருடனும் பேசத் தயாராக இல்லை…

பாஞ்சாலி:- அய்வருக்கும் தேவி அழியாத பத்தினியென்றால்; நீங்கள் பேச மறுப்பது நியாயம்- நான் உண்மை யில் மானசீகமாக கர்ணனாகிய தங்களுக்கும் மனைவியாக எண்ணி இருப்பவள்- நீங்கள் விரும்பாவிட் hலும் நான் அப்படி விரும்பியவள்-

கர்ணன்:- என்ன புதிர் போடுகிறாய் பாஞ்சாலி?

பாஞ்சாலி:- நடந்ததைச் சொல்லிவிடுகிறேன்; கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள்-

கர்ணன்:- எல்லாம் விபரீதமாகத் தெரிகிறது- உம்; சொல்லும்மா!….

பாஞ்சாலி:- பாண்டவர்களுடன் வன வாசம் செய்து வன வனாந்திரங்களைக் கடந்து சென்றபோது- தஞ்சை மண்டலத்தில் “விழுந்த மாவடி” என்ற ஊரில் ஒரு பெரிய மாமரம்! மரத்தடியில் ஒரு முனிவர் கடுந் தவம் செய்து கொண்டிருக்கிறார் – அந்த மாமரத்தில் ஒரே ஒரு குண்டு மாம்பழம் – அதை அருந்த வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உடனே என் கணவர்களில் ஒருவரான அர்ச்சுனன் அம்பு எய்து அந்த மாம்பழத்தைக் கீழே விழச் செய்தார். சப்தம் கேட்டு தவமிருந்த முனிவர் விழித்துக் கொண்டு “ஆகா! நான் எப்போதும் சிரஞ்சீவியாக வாழ்வதற்கு அந்த மாம்பழத்தைச் சாப்பிடக் காத்திருக் கிறேன்; அதற்குள் அதை அடித்துக் கீழே வீழ்த்திவிட்டீர்கள் – இதோ பிடியுங்கள் சாபம்! அந்த மாங்கனி விழுந்தது போல் உங்கள் தலைகளும் வெட்டுண்டு கீழே விழட்டும்!” என்று சாபமளித்துக் கூக்குரலிட்டார்! நாங்கள் பயந்து நடுங்கி, பரந்தாமனை வேண்டி அழைத்து உயிர் பிச்சை கேட் டோம். – பரந்தாமன் சொன்னார் -“நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் ஒளித்து வைத்திருக்கும் ஓர் உண்மையைச் சொன்னால் அந்த மாங்கனி ஒவ்வொரு உண்மைக்குமாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து சென்று – மாமரக் கிளையில் ஒட்டிக் கொள்ளும். அப்படிச் செய்துவிட்டால் முனிவர் சாபத்தை யும் திரும்பப் பெற்றுக் கொள்வார்” என்று கூறினார். உடனே தர்மர், அவர் மனத்தில் மறைத்திருந்த ஓர் உண்மையைச் சொல்லவே, “மாங்கனி”- கொஞ்ச தூரம் மேலே உயர்ந்தது – இப்படி பாண்டவர் ஐவரும் ஆளுக்கொரு உண்மையைச் சொன்னவுடன், அந்தப் பழம், மரக்கிளைக்கு அருகே போய் நின்றுவிட்டது. கிளையில் அது ஒட்டிக் கொள்வதற்கு ஓர் உண்மைதான் பாக்கி!

கர்ணன் :- அந்த உண்மையை யார் சொல்ல வேண்டும்?

பாஞ்சாலி:- நான்தான் சொல்ல வேண்டும் – நான் மறைத்திருந்த உண்மை யென்று ஒன்றைச் சொல்லியும் கூட; மாங்கனி மரக் கிளையில் போய் ஒட்டவில்லை. அப்படியே நின்றது நின்றபடி இருந்தது – அப்போது பரந்தாமன் கிருஷ்ணன் கோபத்துடன் என்னை நோக்கி; “பாஞ்சாலீ! எதையோ மறைத்துப் பொய் கூறுகிறாய் – நீ அந்த உண்மையைச் சொல்லாவிட்டால்; உங்கள் அனைவரது தலைகளுக் கும் ஆபத்து” என்று மிரட்டினார்.

அப்போது மிகவும் பயந்துபோன நான் உண்மையாகவே உண்மை யைச் சொல்லி விட்டேன்… மாங்கனியும் மரத்தில் போய் ஒட்டிக் கொண்டது – மகாமுனி சாபத்திலிருந்து நாங்களும் உயிர் பிழைத்தோம்… கர்ண பிரபூ; அப்படி நான் மறைத்திருந்த அந்த உண்மை என்ன தெரியுமா?

கர்ணன் :- என்ன அது? சொன்னால்தானே தெரியும்…

பாஞ்சாலி:- பஞ்ச பாண்டவர் ஐந்து பேரே அன்னியில் எனக்கு ஆறாவதாகக் கர்ணன் மீதும் காதல் உண்டு என்பதே அந்த உண்மை…

கர்ணன் :- ஓ! அந்த ஊர்ப் பெயர் (முகத்தை “விழுந்தெழுந்த மாவடி” வெறுப்புடன் என்றிருந்து; சுருக்கமாக சுளித்துக் “விழுந்த மாவடி” என்று ஆன கொண்டு) கதை இது தானா? சபாஷ்! நல்ல கதை! நல்ல உண்மை!

பாஞ்சாலி:- இப்போதும் கேட்கிறேன் – உண்மை ஜெயிக்குமா?

கர்ணன் :- உண்மை ஜெயிக்கும் – அதற்கு உதாரணத்தை இங்கேயே இப்போதே கண்டிருக்கிறோம் – ஆனால் பாஞ்சாலியின் ஆசை ஜெயிக்காது – ஜெயிக்கவே ஜெயிக்காது!

பாஞ்சாலி:- சரி; என் ஆசை ஜெயிக்க வேண் டாம் – இந்தப் பாரதப் போரிலா வது, நீங்கள், எங்கள் பக்கம் வந்து உதவலாமே! ஏனென்றால் வென் றிடப் போவது நாங்கள்தான்…

கர்ணன் :- பாஞ்சாலியின் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன் – ஆனால் ஒன்று வெற்றியினால் மட்டும் ஒருவரின் பெயரும், புகழும் நிலைத்திருப்பதில்லை – மகா பாரத யுத்தம் நடை பெற்று முடிந்து – குருட்சேத்திரத்தில் பெருக் கெடுக்கப்போகும் குருதிப் புனலில் இரு தரப்பினரும் மிதந்து – இந்தப் போராட்டம் பற்றிய கதை மட்டும் வாழ்கிறபோது; மனைவியை பணயம் வைத்து சூதாடியவன் தர்மன் என்பதும் – சாவு சதிராடும் போர்க்களத்தில் கூட கொடை கொடுத்த வள்ளல் கர்ணன் என்பதும் அழியாத அத்தியாயங்களாக இருக்கும்…

(பேசிக் கொண்டே கர்ணன் செல்போனை நிறுத்திவிடுகிறான் – பாஞ்சாலியும் – அவளது ஐந்து கணவர்களும் “அலோ” – “அலோ” என்றவாறு செல்போனை அழுத்திப் பார்த்து – பயனின்றி உதட்டைப் பிதுக்கியவாறு நிற்கின்றனர்)

(மீண்டும் “செல்போன்” ஒலிக்கிறது – பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஆவலுடன் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி செல்போனைத் தங்கள் காதுகளில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள்)

(செல்போனில் கர்ணனின் குரல் கேட்கிறது)

கர்ணன் :- ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன் – பாஞ்சாலியும் பாண்டவர்களும் கேட்டுக் கொள்ளுங்கள் – அன்று ‘பாரதப் போர்’ நடந்ததை இப்போது நினைவில் வைத்துக் கொண்டு ஏமாந்து போகாதீர்கள் – அந்தப் போரில் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் ஜெயித்து விட்டீர்கள் – அது வேறு யுகம் – திரேதா யுகமோ, துவாபர யுகமோ ஏதோ ஒரு யுகம்; இது உங்கள் பாஷைப் படி ‘கலியுகம்’! – எங்கள் கருத்துப்படி ஜனநாயக யுகம்! இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ்சாலியின் பசப்புகளுக்கும் இடமில்லை – அவை எடுபடாது – வெற்றி எங்களுக்குத்தான் என்பதை உங்கள் “ஆரூடப்புலி” சகா தேவனிடம் சொல்லி அதையும்… கணித்து வைக்கச் சொல்லுங்கள் – அவன் ‘தூது’ தோற்றுவிட்ட தற்காக என் ஆழ்ந்த அனு தாபத்தை அவனுக்குத் தெரி வியுங்கள்…

(அது கேட்டு பாஞ்சாலியும் பாண்டவர்களும் ஒரே குரலில் “ஆ” என்று அலறுகிறார்கள்)

(கர்ணன் ‘கலகல’வென சிரிக்கிறான்)

உடன்பிறப்பே, அந்தச் சிரிப்பொலியில் நானும் கண் விழித்துக் கொண்டேன். கண்டது பாரதக் கதையின் அடிப்படையிலான கனவு என்றுணர்ந்த துடன் அந்தக் கனவின் முடிவு, களிப்பூட்டுவதாக அமைந்ததால்; அதனை உனக்கும் சொன்னேன். நீயும் விழித்துக் கொள்; விடியப் போகிறது!

அன்புள்ள,

மு.க.

நன்றி: முரசொலி : – கலைஞரின் உடன்பிறப்புக்குக் கடிதம்

http://www.murasoli.in/2006/kaditham/2k60211k.htm

பாமகவின் தமிழ் செய்தித்தாள்

பாமக ‘தமிழ் ஓசை’ என்ற பெயரில் ஒரு செய்தித்தாளை வெளியிட இருக்கிறது; தொலைக்காட்சி சானல் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கிறது என்று கட்சித் தலைவர் GK மணி கூறினார்.

செய்தித்தாள் நடுநிலையுடன் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

(தகவல்: நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்)

சொல்றாங்க சொல்றாங்க

1. தமிழகத்திலும் புதுவையிலும் பாமக தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. தமிழகத்திலும் புதுவையிலும் பாமக இப்பொழுது மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கும். – அன்புமணி

2. திமுகவுடன் ஞாயிற்றுக்கிழமையன்று ஆலோசனை நடத்தினேன். விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. – ராமதாஸ்

3. நாம் போகி கொண்டாடுகிறோம். அழுக்கைப் போக்கிவிட்டு பொங்கல் கொண்டாடுகிறோம். அதேபோல தரமற்ற ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். – கருணாநிதி

4. தமிழகத்தில் கட்சி வளர்ந்துள்ளது. எனவே அதிகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று திமுகவை வற்புறுத்துவோம். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன்

5. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழ் தேசியக் கட்சி அறிவித்துள்ளது. (யாருக்காவது இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்று தெரியுமா?)

தலீவர் சொன்னாருங்க….

கேள்வி: தற்போதைய ஆளுங்கட்சியை நீங்கள் கடுமையாக விமர்சிப்பதில்லையே? ஏன்?

பதில்: நான் அவர்களை விமர்சித்தால் அது மற்றவர்களுக்கு வாய்ப்பாகி விடாதா? அவர்கள் நன்றாகவே ஆட்சி நடத்தினாலும் நான் பாராட்டிவிட முடியாது.அவர்களை பாராட்டிவிட்டு நான் எப்படி எனக்கு ஓட்டு கேட்டு செல்லமுடியும்?

“புரட்சிகலைஞர்” விஜயகாந்த் பேட்டி (குமுதம்)

நாம்:
1.என்ன சொல்ல வர்றார்? இவரே விமர்சித்தால் யாருக்கு வாய்ப்பாகிவிடும்? இவர் என்ன 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறாரா?

2.அப்புறம் எதிர்கட்சியை ஏன் விமர்சிக்கிறார்?அவர்கள் ஆட்டோ அனுப்ப மாட்டார்கள் என்றா?

3.அப்புறம் எதுக்கு தனிக்கட்சி?அம்மா கட்சியில் சேரவேண்டியது தானே?

4.ஓகோ..அழைப்பு வரவில்லையோ? நாம் ஏற்கனவெ சொன்ன நாலு சீட்டை நினைத்துக்கொள்ளவும்.இவருக்கு, மனைவிக்கு, மச்சினனுக்கு மற்றும் ரசிகர் மன்ற தலைவருக்கு…

சொல்றாங்க சொல்றாங்க

1. ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன். ரேஷன் பொருள்கள் வீடுதேடி வரும். மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் தொடங்கப்படும். – விஜயகாந்த்

2. ‘வந்தாரை வரவேற்கத் தயாராக இருக்கிறேன்’ என இதர அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருப்பது ‘இருட்டில் செல்பவன் பயந்து பாட்டுப்பாடிச் செல்வதுபோல இருக்கிறது.’ – வாசன்

3. சட்டத்தின்படிதான் வைகோ கைது செய்யப்பட்டார். காஞ்சி சங்கராச்சாரியார் எப்படிக் கைது செய்யப்பட்டாரோ அப்படித்தான் வைகோவும். சட்டத்தின் முன் நண்பர்கள், எதிரிகள் என்றெல்லாம் பாரபட்சம் இல்லாமல், எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை வைகோ கைது. – காளிமுத்து

4. முதல்வர் பதவிக்கு என்னை பத்திரிகைகள்தான் முன்னிறுத்துகின்றன. – மு.க.ஸ்டாலின்

5. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்று மார்ச் 6-ம் தேதி முடிவு செய்வோம். – பாஜகவின் வெங்கையா நாயுடு

(காமெடி நாளையும் தொடரும்)

Automatic Distillation of Structure (ADIOS)

Addicted to blogs…
Pausing for thought!

பெருமாள்முருகன்

நிராகரிப்பின் உந்துதல் – பெருமாள் முருகன்

விமர்சனத்திலோ ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலோ ஈடுபடுவது என் மனத்துக்கு உகந்த காரியமல்ல. தமிழ்ச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகவும் என் தொழில் நிமித்தம் கல்விப்புலம் சார்ந்தவனாக இருப்பதாலும் விமர்சனம், ஆய்வு ஆகியவற்றில் சிலவேளைகளில் ஈடுபடுகிறேன். வாசிப்பினால் உருவாகும் கருத்தொன்றை நிறுவுவதற்குத் தர்க்கங்களை உருவாக்குவது, அதற்கு ஆதாரமான சான்றுகளைப் பலவிதமாகத் தேடித் தொகுப்பது முதலிய செயல்கள் எனக்கு எரிச்சலையும் சலிப்பையும் உண்டாக்குகின்றன. நிறுவ வேண்டியிராமல் கருத்தொன்றை மனவெளியில் உலவவிட்டுத் திரிவதில் கிடைக்கும் சந்தோசம், நிறுவுவதில் இல்லை.

தமிழ்ச் சூழலில் விமர்சனங்கள், ஈடுபடுபவரின் புலமையை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றனவே தவிர, வாசகருக்கு என்ன விதத்தில் பயன்படுகின்றன என்னும் கேள்வி எனக்குள் தொடர்ந்து இருந்து வருகின்றது. படைப்பை நோக்கி ஈர்ப்பது, படைப்பு குறித்த பார்வை உருவாகத் தூண்டுவது, படைப்புக்குள் பொதிந்துள்ள நுட்பமான அரசியலை வெளிப்படுத்துவது ஆகியவை விமர்சனத்தின் நோக்கமாக இருக்கும்பட்சத்தில் வாசகருக்கு அவை பயன்படக்கூடும். ஆனால் இங்குப் படைப்பு இரண்டாம்பட்சமானதாகவும் படைப்பாளியின் சார்புகள் முதல் நிலையினவாகவும் கொள்ளப்பட்டு விமர்சனச் செயல்பாடுகள் நிகழ்கின்றன.

படைப்பாளியை ஏதாவது ஒரு குழுவுக்குள் வலுக்கட்டாயமாக நிறுத்தும் வேலையை விமர்சனங்கள் செய்கின்றன. படைப்பாளி, விமர்சகர்களைச் சார்ந்தோ இதழ்க் குழுவைச் சார்ந்தோ இயங்க வேண்டியவர் என்னும் பார்வை வலுவாக இங்கே இருக்கிறது. தம்மை அதிகார பீடமாகக் கட்டமைத்துக் கொள்ள முயல்பவர்கள் எல்லாவற்றையும் இரண்டாக பிரித்துவிட முயல்கிறார்கள்.

ஒன்று தம்மைச் சார்ந்தது; மற்றொன்று, தமக்கு எதிரானது. எதிரான ஒன்று பருண்மையாக இல்லாவிடினும் ஒன்றைக் கற்பிதம் செய்துகொள்வதன் மூலமாகத்தான் தாம் இயங்க முடியும் என்னும் பரிதாப நிலை பரவலாகக் காணப்படுகிறது. படைப்பாளிக்குச் சுயமான பார்வை உண்டு அல்லது சுயமான பார்வையை நோக்கிய செயல்பாடுகளே படைப்புகள் என்னும் நோக்கு, விமர்சனத்தின் அடிப்படையாக அமையவேயில்லை. படைப்பை மையமாக வைத்து படைப்பாளியைச் சுயசிந்தனை கொண்டவராகக் காணும் போக்கு நிச்சயமாக இங்கு இல்லை. ஆகவே படைப்பாளி தன்னை நிலைநிறுத்தப் படைப்பல்லாத செயல்களிலும் ஈடுபட நேர்கிறதோ என்னும் சந்தேகம் எனக்கிருக்கிறது.

விவாதங்களை உருவாக்கும் முயற்சிகளே எதிரான செயல்பாடுகளாக அறியப்படுவதை எப்படி விளங்கிக் கொள்வது?

இந்தச் சூழல்கள் பூதாகாரமாகப் பெருகி என் மனத்தைத் தாக்கும் போது எரிச்சலுற்று, இனிமேல் கட்டுரைகளே எழுதுவதில்லை என்னும் முடிவுக்குச் செல்கிறேன். செயல்படாமல் இருக்கவேண்டும் என்பதே நம் சூழலின் எதிர்பார்ப்பு. செயல்பாடுகளை முடக்கும் ஏராளமான வழிகளை நம் சமூகம் வைத்திருக்கிறது. முன் அனுமானங்கள் பலவற்றை உருவாக்கிக் கொள்கிறது. உள்நோக்கங்களைக் கற்பிக்கிறது. மிகச் சாதாரண விமர்சன வரி ஒன்றைச் சதியாகப் பெருக்கிக் காட்டிப் பதற்றம் உருவாகச் செய்கிறது. வரிகளைப் பிடித்துத் தொங்கும் மனோபாவம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

எதையும் சொல்லாமலே நழுவிச் செல்லும் பாவனைகளே பலருக்கும் பிடித்திருக்கின்றன. எனக்கு இவற்றிலெல்லாம் உடன்பாடில்லை.

ஏன் நம் சமூகம், பெரும் சதிகளை உணராமல் அவற்றை ஆதரவாகக் கண்டு ஆர்ப்பரிக்கின்றது? அவசியமான செயல்பாடுகளைச் சதியாகக் கருதிச் சதேகம் கொள்கின்றது? இந்தச் சமூகத்திற்குப் பிம்பங்கள் மீது அப்படி என்ன மாறாத பிரியம்? பிம்பங்களை உருவாக்குவதிலும் உருவாகிய பிம்பங்களைக் கவனமாகக் காப்பாற்றுவதிலும் எதற்காக இத்தனை அக்கறை? சின்ன விமர்சனத்தினால் தகர்ந்துவிடக்கூடியது ஒரு பிம்பம் எனில், அதனை எதற்காகப் பற்றியணைத்து வைத்திருக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை.

என் செயல்பாடுகள் மீது தொட்ர்ந்து அவநம்பிக்கையை உருவக்கிக் கொண்டே இருக்கிறது என் மனம். அது, போதாமையினால் தோன்றுகிறதா எதிர்பார்ப்பினால் உருவாகிறதா என்பதை என்ன்னால் கண்டுணர முடியவில்லை. ஆகவே நிராகரிப்பின் உந்துதல் என்று இக்கட்டுரைகளைச் சொல்லலாமா? தெரியவில்லை.

துயரம் துயர நிமித்தமும் – பெருமாள்முருகன்
காலச்சுவடு – ரூ. 75.

அனேக தமிழ் நூல்களில் காணக் கிடைக்காத பொருளடைவு (Index), பயன்பட்ட நூல்கள், குறிப்புகள் (Reference) மற்றும் வெளியீட்டு விவரங்கள் பயன்மிக்கவை. சுவாரசியத்தையும் கூட்டுகிறது.

பெருமாள் முருகன் 1966-இல் பிறந்தார். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர்.

இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார். அரசு கலைக்கல்லூரி ஒன்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவருடைய இரண்டு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல் முற்றம் (Current Show, 2004); கூளமாதாரி (Seasons of the Palm, 2004).


மனைவி – பி எழிலரசி
மகள் – இளம்பிறை
மகன் இளம்பரிதி

பெருமாள்முருகனின் ‘நீர் விளையாட்டு’ என்னும் சிறுகதை 2000ஆம் ஆண்டு கதா பரிசு பெற்றது.

நஞ்சுண்டன்: தமிழ்க் கல்வித் துறையிலிருந்து படைப்பாற்றலின் வீச்சோடு பெருமாள்முருகனின் ஆரோக்கியமான குரல் கேட்கிறது. இலக்கியம் தொட்டுச் சுடுமண் சிற்பங்கள் வரை சமூகம் சார்ந்த அக்கறையுடன் தன் கருத்துக்களை இக்கட்டுரைகளில் முருகன் தெளிவாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்துள்ளார். பெண் படைப்பாளிகள் மீது முருகனுக்குள்ள கரிசனையோடு அக்ராதியியலில் இவரது புலமையும் துல்லியமாக இத்தொகுப்பில் வெளிப்படுகிறது. தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முன் தீர்மானங்களின்றிப் பிறர் படைப்புகளை அணுகியுள்ள முருகன், பதற்றப்படாமல் எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆசிரியரின் பிற நூல்கள்

  • ஏறுவெயில் – நாவல் : 1991
  • நிகழ் உறவு – கவிதை : 1992
  • நிழல் முற்றம் – நாவல் : 1993
  • திருசெங்கோடு – சிறுகதை : 1994
  • கூளமாதாரி – நாவல் : 2000
  • நீர் விளையாட்டு – சிறுகதை : 2000
  • கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் – கவிதை : 2000
  • ஆர் சண்முகசுந்தரத்தின் படைப்பளுமை – விமர்சனம் : 2000
  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி : 2000
  • கொங்குச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் : 2001
  • தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் : 2002


    | |

  • சொல்றாங்க சொல்றாங்க

    1. வந்தாரை வரவேற்கக் காத்திருக்கிறேன் – ஜெயலலிதா

    2. நூறு தொகுதி தந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது – மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ மகேந்திரன்

    3. இது உங்கள் பாஷைப்படி கலியுகம். எங்கள் பாஷைப்படி ஜனநாயக யுகம். இந்த யுகத்தில் கிருஷ்ணனின் சூழ்ச்சிகளுக்கும் பாஞ்சாலிகளின் பசப்புகளுக்கும் இடம் இல்லை. அவை எடுபடாது. வெற்றி எங்களுக்குத்தான். – கலியுகக் கர்ணன் (வைகோ) சொல்வதாகக் கருணாநிதி கண்ட கனவு

    பாவம்; வைகோ பேசாமல் இருக்க அவருக்காக கருணாநிதியே பேசிவிடுகிறார். இப்படியே போனால் வைகோவுக்கு பதிலாக கருணாநிதியே தேர்தலில் நின்றுவிடுவார். “நான் ஜெயித்தால் என்ன, நீ ஜெயித்தால் என்ன? எல்லாமே ஒன்றுதானே தம்பி…”

    செல்லாத வாக்கு

    தலைப்பு நன்றாக வைத்துவிட்டேன். எழுத மேட்டர் கிடைக்கவில்லை. எனவே, வாரயிறுதிக்கான பட்டுவாடாக்கள்

  • தமிழகத் தேர்தலுக்காக (உருமாற்றிய) சில கிராஃபிக்ஸ்:

  • தமிழகமும் நட்சத்திரங்களும்:

  • கடந்த வார செய்திகளை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று சோதித்துக் கொள்ளுங்கள்: பிபிசி

    எனக்கு இரண்டே இரண்டுதான் சரியாகத் தெரிந்திருந்தது!

  • இங்கிலாந்து நிகழ்வுகளுக்கான இந்த வாரக் கேள்விகளும் ரெடி: நான் பெற்ற மதிப்பெண் – அதே ரெண்டு.

  • ஊழலில் திளைத்த நாடுகளை சிறு குறிப்பாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கிறது.

  • முதலாம் வகுப்பு படிக்கும், ஆறு வயதுப் பையன் ‘கதை நேர’த்துக்காக எல்லாரும் சீட்டு பிடிக்கும் அமளி துமளி நடுவே, பள்ளிக்கூட தோழியின் இடுப்பைத் தொட்டது ‘பாலியல் துன்புறுத்தலா’? அல்லது ‘விளையாட்டு சிறுவனின் அறியா செய்கையா’?

  • ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்தது இது: பாத்ரூமில ஃப்ரென்ச் கிஸ் அடிக்க சில மாணவர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்னும் ஒருவன் தன் ஆண்குறியை சிறுவனின் வாயில் நுழைக்கப் பார்த்திருக்கிறான். பாதித்தவர்கள் சில நாள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். பாதிக்கப் பட்டவன் வேறு பள்ளியை நாடுகிறான். (இப்பொழுது மீண்டும் முந்தைய கேள்வியையும் சம்பவத்தையும் படிக்கலாம்).

    | |