Category Archives: Uncategorized

இது சாத்தியமா?

இன்னமும் 40 நாட்களில் தெரிந்துவிடும் தமிழகத்தினை யார் ஆளப்போகிறார்கள் என்பது. அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் தற்போதைக்கு நிலை ஆதரவாக இருக்கிறது என்பது குமுதம் சர்வேயில் தெரிகிறது. ஆனாலும், சொல்லமுடியாது. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தப் போது, தி.மு.க தலைமையின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியினை தெரிவித்தார், ஆனாலும், ரஜினி போல, இன்னொரு முறை பிரச்சனைகள் இல்லாமல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான ஒட்டுமொத்த ஆப்பு என்ற கருத்தினையும் முன்வைத்தார். எது எப்படியோ, ஏதோ ஒரு கூட்டணி வரப்போகிறது. ஆனால், முக்கியமாக அந்த கூட்டணி தமிழகத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா என்பதை இப்போது சொல்லமுடியாது.

தமிழக அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாம் கூட்டணி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளும் வீணாய்போயின. ஆக இருப்பதில் ஏதோ ஒரு கூட்டணி தான் வரப்போகிறது. ஆனால், இந்த முறை எந்த கூட்டணி வந்தாலும் அவர்களை பொதுமக்களாகிய நாம் எப்படி தட்டிக் கேட்கப் போகிறோம்.

இன்றளவும் ஒரு குடிமகனாய், என்னுடைய தொகுதி கவுன்சிலருக்கான கடமைகள் என்ன, என்னென்ன கேள்விகளை நான் கவுன்சிலரை எதிர்த்து கேட்க முடியும், என்னுடைய தொகுதிக்கு என்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, அவற்றுக்கான ஆதாரபூர்வமான கணக்குகளை பரிசோதிக்க முடியுமா, என்னுடைய தொகுதிக்கான விஷயங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்க முடியுமா என்று நிறைய கேள்விகள் எழுகின்றன. Accountability இல்லாமல் இருப்பதால் தான் அரசியல்வாதிகளால் ஊழல்கள் செய்யமுடிகிறது. இனியொருமுறை இம்மாதிரி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். மணிரத்னம் படங்கள் போல இண்டர்வேலுக்கு மேல் நான் மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ முடியாது. இந்திய சனநாயக தேர்தல் முறைகளில் நம்பிக்கைகள் இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை கையிலெடுத்துக் கொண்டு எனக்கான, மக்களுக்கான வசதிகளையும், கேள்விகளையும் கேட்டு பெற்றுத்தர என்ன செய்ய முடியும் என்று தான் யோசிக்கிறேன்.

தகவல் அறியும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று நினைக்கிறேன் [?!] எந்த விதமான தகவல்கள என்னுடைய தொகுதி பற்றிய, உறுப்பினர்கள் பற்றிய, எம்.எல்.ஏ, கவுன்சிலர், எம்.பி பற்றிய, திட்டங்கள், அரசு ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் ? இதில் இவை அடங்குமா? ஒரு வாக்காளனை ஒரு கட்சிக்கு ஒட்டுப் போடச் சொல்வது பிரச்சாரம். ஆனால், அவனுக்கும் போதிய அரசியல் அறிவினை கொடுத்தால் கையில் காசு வாங்கிக் கொண்டு, குடம்,சொம்பு, 500 ரூபாய் லட்டு மோதிரம் வாங்கினாலும், நாளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கேள்விக் கேட்க ஏதுவாக இருக்கும். இனியும், இந்திய அரசியல் சட்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, சட்டத்தின் ஒட்டைகளை, மக்களின் அறியாமையினை முதலீடாகக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அவர்களின் வழியிலேயே போய் சட்டத்தினை தெரிந்து கொண்டு கேள்வி கேட்டு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் ஒரே வழி.

1. உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் என்னென்ன ?
2. உங்களுக்கு தெரிந்து அவர்களின் சொத்து மதிப்பு அவ்வளவுதானா. அப்படியில்லையென்றால், ஆதாரங்களுடன், தேர்தல் கமிஷனரிடத்தில் இதை கொண்டு செல்ல இயலுமா?
3. வட்டம், தொகுதி, மாவட்டம் என்ற வரையறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட திட்டத்தின் நகலோ, திட்டத்தினை நிறைவேற்றுபவர்களின் [கவுன்சிலர், கமிஷ்னர், கலெக்டர், காண்ட்ராக்டர்கள் ] பற்றிய தகவல்கள் பொதுவாக தமிழக அரசு இணணயதளத்தில் இருக்குமா?
4. அவ்வாறு இருப்பின், திட்ட மதிப்பீடுகளையும், திட்டகாலம், தொடக்கம், முடிவு, பணி நேரங்கள் பற்றிய விவரங்களை பொதுவாக அறிவிக்க முடியுமா? தொகுதியின் வரவு,செலவு நிதியாதரங்களைக் கொண்டு பாலன்ஸ் ஷீட் தாக்கல் செய்ய நிர்பந்திக்க முடியுமா?
5. எந்த விஷயங்களை ஒரு எம்.எல்.ஏவிடம் நேரடியாக கேட்க முடியும்? எவற்றினை அரசு அலுவலகங்களில் கேட்டு பெற முடியும்? [ஆட்டோ வீட்டுக்கு வராமல்]
6. சட்ட மன்ற தொடர் இல்லாத காலகட்டங்களில் ஒரு எம்.எல்.ஏவின் பணியென்ன?
7. சட்ட மன்றத்தில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ என்ன கேள்விகள் கேட்டார், அதற்கு அவர் பெற்ற பதில்கள் பற்றிய விவரங்கள் இணையத்திலோ, பத்திரிக்கைகளிலோ கிடைக்குமா?
8. ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியே ஆறுமாததிற்கோ, ஒரு வருடத்திற்கோ ஒரு முறை unaudited financial report செய்யும்போது மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு ஏன் வெறுமனே பட்ஜெட் வரவு செலவுகளோடு நிறுத்திவிடுகிறார்கள் ? பொதுமக்களின் பார்வைக்கு ஏன் அரசின் வருடாந்திர/காலாண்டு திட்ட நிதி வரவு/செலவு விஷயங்களை வைக்கக்கூடாது?
9. இவற்றினை சட்டரீதியாக கொண்டு வரமுடியுமா? அப்படியில்லையெனில் இவற்றில் பெரும்பாலானவற்றினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும் ?

அழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். கேள்வி கேட்காமல் நியாயங்கள் கிடைக்காது. அச்சமின்றி கேள்வி கேட்கவும், அதற்கு ஒரு உறுப்பினரை பதில் சொல்ல வைக்கவும் சட்டம் தெரிய வேண்டும். ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய உரிமைகள், கடமைகள் பற்றிய விஷயங்கள் தெரியாமல், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ “புரட்சி” வெடிக்காது. ஆக, வெறுமனே பதிவுகளில் ஜல்லியடிக்காமல், தமிழ்நாட்டின் ஒரு ஏழை வாக்காளனுக்கு நான் என்ன செய்யப் போகிறோம், நம் “அறிவுஜீவித்தனங்களையும், புத்திசாலி கணக்குகளையும்” வைத்துக் கொண்டு ?

இங்கே பதியும் நண்பர்களில் வழக்குரைஞர்கள், சட்டமறிந்தவர்கள் இருப்பின் நான் ஏன் தமிழகம் முழுவது கட்சி சார்பில்லாமல், ஒரு குடிமகனின் உரிமைகளை எடுத்துரைக்ககூடாது. நாளைய தமிழகத்தின் வாழ்வும்,தாழ்வும் நம்மிடத்திலும் இன்னமும் 41/2 கோடி மக்களிடத்திலும் இருக்கிறது. இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்?

CPIM – வேட்பாளர்கள் பட்டியல்

1. சிங்காநல்லூர் – அ. சவுந்தரராசன்

2. சிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன்

3. மதுரை கிழக்கு – என். நன்மாறன்

4. பெரம்பூர் (தனி) – எஸ்.கே. மகேந்திரன்

5. திண்டுக்கல் – கே. பாலபாரதி

6. திருப்பூர் – சி. கோவிந்தசாமி

7. நாகப்பட்டினம் – வி. மாரிமுத்து

8. வாசுதேவநல்லூர் (தனி) – ஆர். கிருஷ்ணன்

9. திருப்பரங்குன்றம் – சு. வெங்கடேசன்

10. திருவட்டாறு – ஆர். லீமாரோஸ்

11. விளவங்கோடு – ஜி. ஜான்ஜோசப்

12. குடியாத்தம் – ஜி. லதா

13. அரூர் (தனி) – பி. டெல்லிபாபு

Varanasi – Visitor Tips

காசி – சில டிப்ஸ்

P1010629

  1. காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்கும் கங்கையில் குளிப்பதற்கும் திடகாத்திரமான உடல்நிலை தேவை. கடைசி காலம் வரை காத்திருக்காமல், காலும் உடலும் ஒத்துழைக்கும் வயதிலேயே காசிக்கு விஸிட் அடிப்பது உங்களுக்கு நல்லது.
  2. விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாஷி கோவில்களுக்கான வழி, ஸ்கூட்டர்களுக்கு right of way கொடுக்கும் சந்து பொந்துகள் நிறைந்தது. ஆங்காங்கே எச்சில் துப்பல், மனித சாணம், மாடு போல் முட்டும் மனிதர்கள், மனிதர் போல் வழிவிடும் கூர்கொம்பு P1010629மாடுகள் கொண்டவை. கொஞ்சம் அலங்காநல்லூர் அனுபவம் இருந்தால் உதவலாம்.
  3. தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை‘ என்று சொல்லுமளவுக்கு வடமொழியை பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  4. கங்கையை அடைய உதவும் படிக்கட்டுகள் வழுக்கும். மற்றவர்களின் கையைப் பிடித்துக் குளிக்க உதவுவதற்குமுன் இன்னொருவரின் உதவியை நாடுவதற்கு கூச்சப்பட வேண்டாம்.
  5. வாரநாசியில் இருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாகவேக் கிளம்பும் P1010629என்பதை அனுசரித்தே திட்டமிடுங்கள்.
  6. சென்னை விமான நிலைய ப்ரீ-பெய்ட் வாடகை வண்டிகளை நாடாமல், குடிமகன்களின் ரதமான ஆட்டோவைப் பிடியுங்கள்.
  7. விமானத்திற்கு செல்வதானால் சாப்பிடாமல் செல்லவும். ‘அந்நியன்‘ அம்பி இருவுள் வாயில் சாப்பாட்டுக்கு தண்டனைக் கொடுப்பார் என்னும் பயத்தாலோ என்னவோ… ஒரு மணி நேரப்பயணத்திற்குக் கூட அறுசுவை கொடுக்கிறார்கள். கூடவே சோமபானமும் கொடுத்தால் முக்தி கிட்டும்.
    P1010629
  8. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று சீஸன். மகேஸ்வரி வேண்டுமானால் நனையலாம். ஆனால், கங்கைப் பெருக்கெடுத்து ஓடுவாள். கொசுறு துப்பு: கறந்த பாலை கங்கையில் கொட்டினால் வெள்ளம் வடிந்துவிடும்.
  9. விடியற்காலையில் சாரநாத் புத்தாவைப் பார்ப்பது நிம்மதியைக் கொடுப்பது போன்ற பிம்பத்தை ஏபடுத்தி விடலாம்.

    P1010629

  10. கயாவில் எச்சரிக்கையாக உடைமைகளைப் பாதுகாக்கவும். பீஹாரில் பொதுவுடைமைக் கொள்கை தீவிரமாக இருப்பதால், ‘பர்ஸ் கயா‘ என்று விட்டுவிடலாம்.
  11. வெளிநாட்டவராக அல்லாமல், திரிவேணி சங்கமம் வரை சென்றுவிட்டு, தலையில் மட்டும் தண்ணீரைத் தெளித்துக் கொண்டு படகில் இருந்தே படம் பிடித்துக் கொண்டிருந்தால், விநோத ஜந்துவைப் பார்ப்பது போல் விமர்சிக்கப்படுவீர்கள்.
    P1010629
  12. திராவிடத் திருநாட்டில் வளர்ந்ததால், வயோதிகர்களுக்கு இருக்கை தராமலோ, முண்டியடித்து தரிசனம் செல்ல முயன்றாலோ, அரிதாகிப் போய்விட்ட உகந்தப் பழக்கவழக்கங்களிலும் குட் மேனர்ஸ்களிலும் பாடம் எடுக்கப்படும்.
  13. பணம் கறப்பதற்காகவே ‘இராமர் ஆலயம்’ கடைகளாக விரிக்கப்பட்டிருக்கும். முக்கிய கோவில்களின் பிரகாரங்களிலும் வழிபாதைகளிலும் நூதனப் பிச்சையாக காசிகயிறு கட்டுவது, நெற்றிச்சாந்து இடுவது, முதுகில் தட்டி அருள்பாலிப்பது, பூச்சூட்டுவது நடைபெறும்.
    P1010629
  14. தங்களின் இரக்கத்தை உழைப்பாளிகளும், தொணதொணப்பிற்கு சுணங்குவதைப் பிச்சைக்காரர்களும், கடவுள் அலட்சியத்தை வியாபாரிகளும், உடல் பருமனை ரிக்சாக்காரர்களும், தெய்வ அவமதிப்பாக எண்ணவைக்கலாம்.

| |

Madras Meetings

சென்னை சந்திப்புகள்

நான்கு சந்திப்புகள் கிடைத்தது. திலகபாமா ஏற்பாடு செய்திருந்த ‘பகிர்வு‘ குறித்து சேரியமாய், விரிவாய் பின்பு எழுத உத்தேசம்.

சனிக்கிழமைதான் சந்திக்க முடியும் என்று அடம் பிடித்தாலும் பா. ராகவன் அலுவலகத்துக்கே வருமாறு சொல்லியிருந்தார். சென்ற முறைக்கு இந்த முறை இரட்டித்திருந்தார். ‘கெட்டிமேளம்‘ நன்றாகப் போகும் சந்தோஷமாக இருக்கலாம். மேஜையில் மருத்துவ மலர்கள், அனுமான் பஞ்சரத்னா, முதல் பதிப்பு 18-வது அட்சக்கோடு, எஸ்.வி ராஜதுரையின் ‘நிலமெல்லாம் இரத்தம்‘ விமர்சனம் தாங்கிய இந்தியா டுடே என்று வெரைட்டியான வலைப்பதிவுக்கான காத்திரமான ரெஃபரன்ஸ் போன்ற புத்தகங்கள்.

வழக்கமான ‘வலைப்பதிவை விட்டுட்டு உருப்படற வழியப் பாருடா‘ போன்ற ஆத்மார்த்தமான வேண்டுகோள்களுக்குப் பிறகு கொஞ்சம் இலக்கிய நிகழ்வுகள், அரசியல் வம்புகள், ‘ரெண்டு’ தொடர்கதை, கிழக்கு பதிப்பகத்தின் பு(து)த்தகங்கள் என்று பேச்சு தொடர்ந்தது.

நீண்ட நாளாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ரஜினி (ராம்கிதான்) தரிசனமும் கிடைத்தது. கடந்த சில வருடங்களில் பலமுறை கற்பகாம்பாள் நகர் அலுவலகம் சென்றிருந்தாலும் பத்ரியையும் இப்பொழுதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். பிஸிக்கு நடுவில் ஒரு சின்ன ‘Hi’, நலம் விசாரிப்புக்குப் பிறகு பாரா-வையும் அவர் வேலையில் முடுக்கிவிட, ஆதவன், ‘சண்டக்கோழி’ எஸ். ராமகிருஷ்ணன் தொகுப்புகள், சில பல சிறுகதைத் தொகுப்புகள், தமிழோவியம் கணேஷ் சந்திராவுக்காக ‘சந்திரபாபு வாழ்க்கை வரலாறு‘ எல்லாம் வாங்கிக் கொண்டு நடையை ஏறக்கட்டினேன்.


சனி மாலை கடும் வெயில் நேரம் கொடுக்கும் சூரியன் டாடா காட்டியபின் அடையாரின் புனிதத்தலமாக ‘ரைஸ் பௌல்’-ஐ அடையாளம் காட்டி கருப்பு சட்டையுடன் வெளியில் காத்திருந்தார் ரோஸா வசந்த். ஒடிசலான தேகம். நேரில் பார்த்தால் 25 வயதுதான் மதிப்பிட முடிகிறது. குரல் மட்டும் கொஞ்சம் வயசை முப்பதுகளுக்குத் தூக்கி செல்கிறது. பாந்தமாக வரவேற்று அங்கதத்துடன் இயல்புக்குக் கொண்டு வருகிறார்.

ஆங்கிலம் கலக்காமல் தமிழ் சரளமாக புரளுகிறது. எல்லாரும் கேட்கும் ‘நீங்க என்.வி. சாப்பீடுவீங்களா?‘ அல்லது ‘Do you take chicken, beef?‘ போன்றவற்றைத் தவிர்த்து ‘நீங்க புலால் உண்பீர்கள் இல்ல?‘ என்று விழுகிறது.

சனி இரவு என்பதால் மதுவரங்கம் நிரம்பி வழிகிறது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் எங்களைக் காத்திருக்குமாறு பணிக்கத் தொடங்கும் வரவேற்பாளனை, இணையத்தில் ஒவ்வாத கருத்தை முன்வைப்போனை இடைமறிக்கும் அதே லாவகத்துடன் தடுத்தாட்கொண்டு, ‘ஐயா… எனக்கு ஆங்கிலம் வராது! தங்களுக்குத் தமிழ் தெரியுமானால் உரையாடுங்கள்; அல்லது தமிழ் தெரிந்தவரை எங்களிடம் அனுப்புங்கள்‘ என்று மெல்லிய சிரிப்புடன், மரியாதை குறையாமல், மரியாதை வரவைக்குமாறு சொல்வது சொந்த வாழ்விலும் சமரசங்களை செய்து கொள்ளாததை அடையாளம் காட்டுகிறது.

நிறையப் பேசுகிறோம். தமிழ்மணத்தின் லிஸ்டிங் போல் ஐந்து விநாடிக்கொருமுறை தலைப்பும் வாதங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே போகிறது. Continous partial attention கொடுத்து வலைப்பதிவர்கள், மனுஷ்யபுத்திரன், சொந்த வாழ்க்கை, ராயல் சாலெஞ்ச், ‘உருப்படாதது’ நாராயணுக்கு வழி, நெத்திலி மீன் என்று சுழல்கிறது.

நிழல்கள் ஹரன்பிரசன்னாவும் ஸ்வஸ்திக் பிச்சைபாத்திரம் சுரேஷ் கண்ணனும் வந்து சேர்கிறார்கள். என்னுடைய இலக்கற்ற கருத்தாடலுக்கு லகான் போட்டு, சுரேஷ் கண்ணன் இலக்கியத்துக்கு கலந்துரையாடலை முன் நகர்த்துகிறார். மரவண்டு கணேஷுக்குத்தான் சிறப்பு நன்றிகளை சொல்ல வேண்டும். இருவரையும் தொலைபேசியில் பிடித்து, சந்திப்புக்கு வரவழைத்த பெருமை மரவண்டு கணேஷையே சேரும்.

நீல. பத்மநாபன், திருநெல்வேலி வீதிகள், ஹேவர்ட்ஸ் 5000, கோவில்களில் பெண்களை கவனித்தலின் உளவியல் அலசல்கள், கோபி மன்சூரியன், நாராயணின் மென்சிரிப்புடன் விடை பெறுகிறோம்.


ஞாயிறு மதியம் மூன்றரைக்கு சந்திப்பதாக சொல்லிவிட்டு நான்கரை மணிக்குத் தலையை காண்பிக்கிறேன். பொறுமையாக சென்னை வுட்லண்ட்ஸ் வாசலில் ஐகாரஸ் பிரகாஷ், நேசமுடன் வெங்கடேஷ், சுபாஷிதம் மதுமிதா, ஒலிக்கும் கணங்கள் நிர்மலா காத்திருக்கிறார்கள். மீண்டும் மரவண்டு கணேஷுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைப் பதிகிறேன். மதுமிதா மற்றும் நிர்மலாவுடன் தொலைபேசி வரவழைத்திருந்தார். அவரும் கவிஞர் ப்ரியனும் சிறிது நேரத்தில் சிறிது நேரத்துக்கு இணைந்து கொள்கிறார்கள்.

மதுரபாரதியின் ‘புத்தம் சரணம்‘ குறித்த வாசக அனுபவத்தை பகிர்கிறார் மதுமிதா. ‘நீங்க எப்படி ‘புத்தம் சரணம் கச்சாமி‘ எழுதறீங்க’ என்று என்னைப் பார்த்து நம்ப முடியாமல் மூன்று தடவை வினவுகிறார். அரசு ஸ்டைலில் ‘ஹி… ஹி…’ என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. (நண்பர் பிகேயெஸ் சொன்ன பகிடி நினைவுக்கு வருகிறது: ‘மனைவி வீட்டில் இருந்தால் ‘புத்தம் சரணம் கச்சாமி எழுதுவாய்’ ஊருக்குப் போயிட்டால் மரையா ஷரபோவா படம் போடுவாய்‘).

காசி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நிர்மலா லஸ்ஸி சாப்பிட கதையையும் லஸ்ஸி உண்டாகும் விதங்களையும் வர்ணித்தவுடன் வட நாட்டு லஸ்ஸி ருசிக்கும் ஆர்வம் மீண்டும் எழுகிறது.

கொஞ்ச நேரத்தில் ரஜினி ராம்கியும் வந்து சேருகிறார். காரசாரமான அரசியலுக்கு பேச்சு தாவுகிறது. வெங்கடேஷ் தன்னுடைய கணிப்புகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார். எல்லோரும் வாய்பிளந்து கேட்கிறோம். தொகுதி மோதல்கள், கூட்டணி ஆட்சி, ஸ்டாலின் கருணாநிதி முதல்வர் ஆருடங்கள், மூன்றாவது அணி, தேதிமுக, திண்டிவனத்தார் என்று சகலத்தையும் ஐகாரஸும் ராம்கியும் வெங்கடேஷுடன் விவாதிக்கிறோம்.

யார் ஒட்டுக் கேட்டு வெங்கடேஷின் வண்டியை ரிப்பேர் செய்தார்களோ… விடை பெறும் நேரத்தில் வெங்கடேஷின் வண்டி நகர மறுக்கிறது. கில்லியைக் குறித்து ஐகாரஸுடன் சில நிமிடம் பேசி விட்டு, அடுத்த முறை விட்டுப் போனவர்களையும் சந்தித்தவர்களையும் இன்னும் நிறைவாக சந்திக்கும் எண்ணத்துடன் கிளம்பினேன்.


| |

திமுக தேர்தல் அறிக்கை

2 ரூபாய்க்கு அரிசி: திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். அதில் விவசாயிகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29, 2006: சென்னை:

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • காலியாக உளள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
  • மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
  • கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.
  • வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.
  • ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
  • சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • நிலமற்ற ஏழை விவசாயிகளுககு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

    courtesy: Thatstamil

    Idlyvadai

  • India Trip – Varanasi

    காசி, சாரநாத், அலஹாபாத் என்று புனிதப் பயணம் சென்று வந்ததில் இருந்து சில புகைப்படங்கள். புகைப்படத்தை க்ளிக்கினால், இன்னும் பெரிய படம் தெரியும்.

    1. வாரநாசியில் மூன்று மசூதிகள் இருப்பதாக ஓடக்காரர் + நகர விவரிப்பாளர் (Guide) சொன்னார்.

    ஒன்று பா.ஜ.க. மெல்லுவதற்கு வசதியாக, காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் நிறைவான போலீஸ்காரர்களுடனும், குறைவான பாதுகாப்புடனும், அடுத்த இனக்கலவரத்தை எப்போது வேண்டுமானாலும் கொடுக்க சர்வ வல்லமையுடனும் விளங்குகிறது.

    இந்த ஷாட்டில் வேறொரு மிகப் பெரிய மசூதி.

    2. ‘லைவ் ரிலே‘வாக ‘டெட் சலோ‘ என்று இறந்தவர்களின் உடலை (சில சமயம்) அப்படியே கங்கையில் அனுப்புகிறார்கள். மற்றவர்கள் ஹரிச்சந்திரா காட், மணிகர்ணிகா காட் என்னும் கங்கைக் கரையிலேயே எரியூட்டப்பட்டு, கரைக்கப்படுகிறார்கள்.

    இறுதிச்சடங்கு நடக்கும் ‘கட்டங்களும்’ கறைகளைப் போக்கவல்ல & அவசியம் குளிக்கவேண்டிய புனிதக் கரைகள்.

    3. பீட்ஸா புகழ் ‘பைஸா நகரத்து சாய்ந்த கோபுரம்’ போல் மக்களின் பாவங்களைப் போக்கி போக்கி, சாய்ந்து போன கங்கைக் கரை கோவில் கோபுரம்.

    4. ‘பாரதி‘யும் சாகேத் ‘ஹே ராமு‘ம் இன்ன பிறரும் ஸ்நானம் செய்த தளம்.

    பாசி பிடித்த படிக்கட்டுகள். நிம்மதி தேடும் வெள்ளைக்காரர்கள். ஆள் பிடிக்கும் படகுக்காரர்கள். கம்பி தோறும் பிச்சைக்காரர்கள். காலைக்கடன் கழிக்கும் உள்ளூர்வாசிகள். சூரியக்குளியல் மிதக்கும் எருமைகள். துணி அழுக்கைத் துவைக்கும் தோட்டிகள். அசுத்த நீருக்கும் தீர்த்தக்கரை பாவியாவதற்கும் பயந்து ப்ரோஷணம் மட்டுமே செய்துகொள்பவர்கள். பான் பராக் கொப்பளிக்கும் ஓடக்காரன். அஸ்தி கரைக்கும் துக்கம் கொண்டவர்கள். கௌபீனத்துடன் படிக்கட்டில் காட்சிகளை ரசிப்பவர்கள்.

    தஷாஷ்வமேத் காட் – ஆயிரம் குதிரைகளைக் கொன்(டு)று அசுவமேத யாகம் செய்த கங்கைக் கரை.

    5. தினசரி மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை கங்கைக் கரையில் பஜனையும் கங்கா ஆரத்தியும் நடந்தேறுகிறது. நயாகரா அருவியில் இரவு விளக்குகள் பல்வண்ணத்தில் நீர்வீழ்ச்சியை ரம்மியமாக்கும். அதே போல், இரவு நேர நதிக்கரை ஆராதனைகள் (பார்வையாள பக்திமான்களும்தான்) கங்கை ஹாரத்தியை ரசிக்க சொல்கிறார்கள்.

    சென்னை பீச் சுண்டல் போல் சூடான டீ கிடைக்கிறது. கங்கையில் விளக்கு அனுப்ப சொல்கிறார்கள். இரவு நீச்சல் நிம்மதியானது என்றால்; கங்கை தீரத்தின் வெளிச்சத்தை, காலையில் குற்றங்களைப் போக்கிக் கொண்ட நதியின் கும்மிருட்டு நடுவில் இருந்து பார்க்கலாம்.

    (பயணமும் படமும் தொடரும்)


    | |

    திமுக சந்திக்கும் கடைசி தேர்தல்: ஜெ

    அதிமுகவின் பரம்பரை எதிரியான திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இது. வரும் காலங்களில் தேர்தல் களத்தில் திமுகவை சந்திக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கோரி 11,420 விண்ணப்பங்கள் வந்தன. இத்தனை விண்ணப்பங்கள் வந்தும் கூட என்னையும் சேர்த்து 182 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிந்தது.

    அதிமுக வரலாற்றிலேயே அதிக தொகுதிகளில் முதல் முறையாக தற்போது போட்டியிடுகிறோம். இருப்பினும் 182 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிந்தது.

    இதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தகுதி அற்றவர்கள் எனக் கூறி விட முடியாது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கும் நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும்.

    ஒவ்வொரு தொகுதியிலும் தகுதி படைத்த பலர் இருந்தாலும் கூட ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியும். எனவே மற்றவர்கள் மனம் வருந்தக் கூடாது, மனம் தளரக் கூடாது.

    வருகிற தேர்தலில் போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான். அதிமுகவின் பரம்பரை எதிரி திமுக மட்டுமே. அரசியல் ரீதியாக நாங்கள் எதிரியாகப் பார்ப்பது திமுகவை மட்டுமே.

    எனவே பரம்பரை எதிரியான திமுகவை, அதிமுக கடைசியாக சந்திக்கும் தேர்தல் இதுதான். வருகிற தேர்தல்களில் பரம்பரை எதிரியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.

    வரும் தேர்தலில் ஜனநாயக மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் ஆதரவுடன், 234 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

    அதிமுக தேர்தல் அறிக்கை: ஜெயலலிதா வெளியிட்டார்
    5லட்சம் பேருக்கு வேலை

    அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுவோம் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. சென்னை பெருநகரில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி செலவில் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அக்கட்சி உறுதியளித்துள்ளது.

    தமிழகத்தில் தொழில்வளத்தை மேம் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

    தமிழகத்திற்கான தேர்தல் அறிக்கை 114 பக்கங்களை கொண்டுள்ளது. 38 அம்சங்களை கொண்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக அரசு செய்துள்ள சாதனைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
    தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கை யின் முக்கிய அம்சங்கள் வருமாறு: பள்ளிகளில் வசூலிக்கப்படும் சிறப்பு கல்விக் கட்டணம் ரத்து செய்யப் பட்டு, அந்த தொகையை பள்ளிக் கூடங்களுக்கு அரசே மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து பள்ளிகளிலும் கணினி பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சுய தொழில் பயிற்சி அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வினை ரத்து செய்து இயற்றப் பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஐ.ஐ.டி.க்கு இணையாக உலகத்தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும். கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். விளையாட்டுகளில் திறமையாக உள்ளவர்களை ஊக்குவிக்க மாவட்ட தலைநகரங்களில் அனைத்து வசதி களுடன் விளையாட்டு அகாடெமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழை உயர்தனி செம்மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தப் படும். மத்திய அரசு மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள அந்தந்த மாநில மொழியையே பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழ் உள்ளிட்ட 19 தேசிய மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வலியுறுத்தப்படும்.

    இந்தி பேசாத மாநிலங்கள் இந்தி பேசும் மாநிலங்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமே தொடர்பு மொழி என்ற கொள்கை உறுதிப்பட வேண்டும். மாநில அரசு அலுவலகங்கள், கீழ் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழ் முழு அளவில் பயன்படுத்தப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் உணவு பதப்படும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். 150 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படும். சென்னை பெருநகர எல்லையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் திட்டம் செயல் படுத்தப்படும். இரண்டு புதிய பல் மருத்துவக் கல்லூரிகளும், 21 புதிய செவிலியர் கல்லூரிகளும் துவக்கப்படும்.

    தமிழகத்தின் தொழில் வளத்தை மேல்மேலும் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு, அதிகார பிரதிநிதித்துவ அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுத் தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாடு பிற்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் படி சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கச்சத்தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் மத்திய அரசு பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்மொழிக்காக வாழ்ந்த, வாழ்கின்ற அறிஞர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்களின் படைப்புகள் போற்றி பாதுகாக்கப்படும்.

    அயல்நாட்டு இந்திய வம்சாவளி தமிழர்களின் தொழில்முனைவோர் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப் படும். மத்திய அரசின் அரிசி கொள்முதல் விலையேற்றத்தையும், அரிசி அளவு குறைப்பையும் கடுமையாக எதிர்ப்பதுடன், தொடர்ந்து பொது விநியோக முறையில் அதே குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும்.

    மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சார்பில் அதிக அளவில் நியாய விலைக் கடைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிறு வணிகர்களின் நலன் காக்க அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

    ஆட்சியில் தூய்மை; நிர்வாகத்தில் திறமையான, நேர்மையான அணுகுமுறை; நீதி, நிர்வாகத்தில் நடு நிலைமையும், புனித தன்மையும் மிக்க செயல்பாடுகள்; வளமும் வற்றாத நலமும் மிக்க வாழ்க்கைத் தரம்; அமைதியும், பாதுகாப்பும் மிக்க பொது வாழ்க்கை ஆகியவை அதிமுகவின் கோட்பாடுகள். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Courtesy: Maalaisudar
    Thatstamil

    அதிமுக வேட்பாளர் பட்டியல்

    அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
    போட்டியிடும் 182 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆண்டிப்பட்டியிலேயே போட்டியிடுகிறார். நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மாஜி மந்திரி செங்கோட்டையனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் கோபிச்செட்டிப் பாளையத்தில் போட்டியிடுகிறார்.

    அதே போல பாஜகவில் இருந்து தாவி வந்து சீட் எதிர்பார்த்துக் காத்திருந்த நாடக காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கும் சீட் தரப்பட்டுள்ளது. அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த ஜெயலலிதாவின் பள்ளித் தோழியும் வக்பு வாரியத் தலைவியுமான பதர் சயீதுக்கு திருவல்லிக்கேணி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    அமைச்சர்களில் ஜெயக்குமார், வளர்மதி, உடலை 180 டிகிரி வரை ‘வளைந்து’ கும்பிடு போடுவதில் வல்லவரான பாண்டுரங்கன், விஜயலட்சுமி பழனிச்சாமி, ஜெயராமன், சண்முகம் உள்ளிட்டோருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது.

    சசிகலாநடராஜன் கோஷ்டிக்கு நெருக்கமான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு கலசப்பாக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம்:

    ஆண்டிப்பட்டி ஜெ. ஜெயலலிதா

    ராயபுரம் ஜெயக்குமார்

    ராதாகிருஷ்ணன் நகர் சேகர் பாபு

    பூங்கா நகர் சீனிவாசன்

    புரசைவாக்கம் வெங்கடேஷ் பாபு

    தியாகராய நகர் கலைராஜன்

    ஆயிரம் விளக்கு ஆதிராஜாராம்

    திருவல்லிக்கேணி பதர் சையீத்

    மயிலாப்பூர் எஸ்.வி.சேகர்

    சைதாப்பேட்டை செந்தமிழன்

    கும்மிடிப்பூண்டி விஜயக்குமார்

    பொன்னேரி (தனி) பலராமன்

    திருவொற்றியூர் மூர்த்தி

    ஆலந்தூர் பா.வளர்மதி

    திருப்போரூர் (தனி) மா.தனபால்

    செங்கல்பட்டு ஆறுமுகம்

    மதுராந்தகம் அப்பாதுரை

    அச்சரப்பாக்கம் (தனி) சரஸ்வதி முத்துக்கிருஷ்ணன்

    உத்திரமேரூர் சோமசுந்தரம்

    காஞ்சிபுரம் மைதிலி திருநாவுக்கரசு

    திருவள்ளூர் ரமணா

    திருத்தணி ஹரி

    பள்ளிப்பட்டு நரசிம்மன்

    அரக்கோணம் (தனி) சு.ரவி

    சோளிங்கர் கோபால்

    ராணிப்பேட்டை பெல் தமிழரசன்

    ஆற்காடு சந்திரன்

    காட்பாடி நாராயணன்

    குடியாத்தம் பழனி

    பேரணாம்பட்டு (தனி) சந்திரா சேட்டு

    நாட்ராம்பள்ளி சுப்பிரமணி

    தண்டாரம்பட்டு ராமச்சந்திரன்

    திருவண்ணாமலை பவன்குமார்

    கலசப்பாக்கம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    போளூர் வேடியப்பன்

    அணைக்கட்டு பாண்டுரங்கன்

    ஆரணி சந்தானம்

    செய்யாறு பாவை ரவிச்சந்திரன்

    வந்தவாசி (தனி) சக்ரபாணி

    பெரணமல்லூர் அன்பழகன்

    (மேலும் வரும்)

    மேல்மலையனூர் தமிழ்மொழி

    திண்டிவனம் சி.வி.சண்முகம்

    வானூர் (தனி) கணபதி

    கண்டமங்கலம (தனி) சுப்பிரமணியன்

    விழுப்புரம் பசுபதி

    திருநாவலூர் குமரகுரு

    கடலூர் குமார்

    பண்ருட்டி ராஜேந்திரன்

    புவனகிரி செல்வி ராமஜெயம்

    சிதம்பரம் அருண்மொழித் தேவன்

    விருத்தாச்சலம் காசிநாதன்

    ரிஷிவந்தியம் ஆதிநாராயணன்

    சின்னசேலம் ப.மோகன்

    சங்கராபுரம் பெ.சன்னியாசி

    ஓசூர் சம்பங்கி ராமையா

    பெண்ணாகரம் எஸ்.ஆர்.வெற்றிவேல்

    காவேரிப்பட்டனம் கே.பி.முனுசாமி

    கிருஷ்ணகிரி வி.கோவிந்தராஜ்

    பர்கூர் எம்.தம்பிதுரை

    மொரப்பூர் கே.சிங்காரம்

    பாலக்கோடு கே.பி.அன்பழகன்

    மேட்டூர் கே.கந்தசாமி

    ஓமலூர் சி.கிருஷ்ணன்

    ஏற்காடு (தனி) ஜெ.அலமேலு

    சேலம் 1 எல்.ரவிச்சந்திரன்

    சேலம் 2 ஆர்.சுரேஷ்குமார்.

    வீரபாண்டி விஜயலட்சுமி பழனிச்சாமி

    பனைமரத்துப்பட்டி ஆர்.இளங்கோவன்

    ஆத்தூர் மஞ்சினி ஏ.கே.¬முருகேசன்.

    தலைவாசல் (தனி) ப.இளங்கோவன்

    ராசிபுரம் பி.ஆர்.சுந்தரம்

    சேந்தமங்கலம் (தனி) பூ.சந்திரன்

    நாமக்கல் (தனி) ஆர்.சாரதா.

    திருச்செங்கோடு பி.தங்கமணி

    சங்ககிரி (தனி) எஸ்.சாந்தாமணி

    எடப்பாடி கே.பழனிச்சாமி

    மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்

    அவினாசி (தனி) ஆர்.பிரேமா

    கோவை மேற்கு தா.மலரவன்

    கோவை கிழக்கு வி.கோபாலகிருஷ்ணன்.

    பேரூர் கே.பி.ராஜு

    கிணத்துக்கடவு செ.தாமோதரன்

    பொள்ளாச்சி பொள்ளாச்சி ஜெயராமன்

    உடுமலைப்பேட்டை சண்முகவேல்

    தாராபுரம் (தனி) சிவகாமி வின்சென்ட்

    பொங்கலூர் பி.வி.தாமோதரன்

    பல்லடம் செ.ம. வேலுச்சாமி

    காங்கேயம் என்.எம்.எஸ்.பழனிச்சாமி

    மொடக்குறிச்சி பி.சி.ராமசாமி

    பெருந்துறை சி.பொன்னுத்துரை

    ஈரோடு இ.ஆர்.சிவக்குமார்

    பவானி கே.சி.கருப்பண்ணன்

    அந்தியூர் (தனி) செல்வி துரைசாமி

    கோபிச்செட்டிப்பாளையம் கே.ஏ.செங்கோட்டையன்

    பவானி சாகர் சிந்து ரவிச்சந்திரன்

    குன்னூர் (தனி) எம்.செல்வராஜ்

    உதகமண்டலம் கே.என்.தொரை

    கூடலூர் ஏ.மில்லர்

    பழனி (தனி) ஆர்.தமிழரசி

    ஒட்டன்சத்திரம் கே.பி.நல்லசாமி

    பெரியகுளம் ஓ.பன்னீர் செல்வம்

    தேனி ஆர்.டி.கணேசன்

    போடி நாயக்கனூர் எம்.பரமசிவம்

    சேடப்பட்டி சி.துரைராஜ்

    உசிலம்பட்டி ஐ.மகேந்திரன்

    நிலக்கோட்டை (தனி) தேன்மொழி

    திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ்

    மதுரை மேற்கு எஸ்.வி.சண்முகம்

    மதுரை மத்தி கா.காளிமுத்து

    சமயநல்லூர் (தனி) பி.லட்சுமி

    மேலூர் ஆர்.சாமி

    நத்தம் விஸ்வநாதன்

    ஆத்தூர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

    வேடசந்தூர் ச.பழனிச்சாமி

    கரூர் வி.செந்தில் பாலாஜி

    கிருஷ்ணராயபுரம் (தனி) சசிகலா ரவி

    மருங்காபுரி செ.சின்னச்சாமி

    குளித்தலை பாப்பா சுந்தரம்

    உப்பிலியாபுரம் (தனி) பெ.முத்துச்சாமி

    முசிறி டி.பி.பூனாட்சி

    லால்குடி டி.ராஜாராம்

    பெரம்பலூர் (தனி) டாக்டர் சுந்தரம்

    வரகூர் (தனி) மா.சந்திரகாசி

    அரியலூர் ம.ரவிச்சந்திரன்

    ஆண்டிமடம் என்.கே.பன்னீர்செல்வம்

    ஜெயங்கொண்டம் கே.ராஜேந்திரன்

    ஸ்ரீரங்கம் பரஞ்சோதி

    திருச்சி 2 என்.மரியம் பிச்சை

    பூம்புகார் எஸ்.பவுன்ராஜ்

    குத்தாலம் எஸ்.ராஜேந்திரன்

    நன்னிலம் (தனி) க.அறிவானந்தம்

    திருவாரூர் (தனி) தங்கமணி

    நாகப்பட்டனம் கே.ஏ.ஜெயபால்

    வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன்

    திருத்துறைப்பூண்டி (தனி) ஏ.உமாதேவி

    மன்னார்குடி ஆர்.காமராஜ்

    பேராவூரணி வீரகபிலன்

    ஓரத்தநாடு வைத்தியலிங்கம்

    திருவோணம் தங்கமுத்து

    தஞ்சாவூர் ரெங்கசாமி

    திருவையாறு துரை கோவிந்தராஜன்

    பாபநாசம் துரைக்கண்ணு

    வலங்கைமான் (தனி) இளமதி சுப்பிரமணியன்

    கும்பகோணம் ராம. ராமநாதன்

    திருவிடைமருதூர் பாரதி மோகன்

    திருமயம் ராதாகிருஷ்ணன்

    கொளத்தூர் (தனி) ந.சுப்பிரமணியன்

    புதுக்கோட்டை நெடுஞ்செழியன்

    ஆலங்குடி வெங்கடாச்சலம்

    அறந்தாங்கி பி.எம்.பெரியசாமி

    திருப்பத்தூர் உமாதேவன்

    காரைக்குடி செல்லையா

    திருவாடானை ஆணிமுத்து

    இளையாங்குடி அய்யாச்சாமி

    மானாமதுரை (தனி) குணசேகரன்

    பரமக்குடி (தனி) டாக்டர் சுந்தரராஜ்

    கடலாடி சத்தியமூர்த்தி

    முதுகுளத்தூர் காளிமுத்து

    அருப்புக்கோட்டை முருகன்

    சாத்தூர் சொக்கேஸ்வரன்

    ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகமூர்த்தி

    ராஜபாளையம் (தனி) சந்திரா

    விளாத்திகுளம் சின்னப்பன்

    ஒட்டப்பிடாரம் (தனி) பெ.மோகன்

    கோவில்பட்டி எல்.ராதாகிருஷ்ணன்

    சங்கரன்கோவில் (தனி) சொ.கருப்பசாமி

    கடையநல்லூர் அயூப்

    ஆலங்குளம் வி.பி.ஈஸ்வரன்

    திருநெல்வேலி நயினார் நாகேந்திரன்

    சேரன்மாதேவி மனோஜ் பாண்டியன்

    அம்பாச¬த்திரம் முருகையா பாண்டியன்

    நாங்குனேரி சூரியகுமார்

    ராதாபுரம் ஞான புனித.

    திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன்

    ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி.சண்முகநாதன்

    தூத்துக்குடி டேனியல் ராஜ்

    கன்னியாகுமரி தளவாய் சுந்தரம்

    குளச்சல் கே.டி.பச்சைமால்

    பத்மநாபபுரம் கே.பி.ராஜேந்திர பிரசாத்

    திருவட்டார் பி.சி.என்.திலக் குமார்

    விளவங்கோடு எப். பிராங்க்ளின்

    கிள்ளியூர் டாக்டர் குமாரதாஸ்

    Courtesy: Thatstamil

    சத்தியமூர்த்தி பவன் அடிதடி

    இட்லிவடை பதிவு, ஜெயா டிவி விடியோ பிட்

    கடந்த சில தினங்களாக காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியை மிக மோசமாக வெளிக்காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த 48 இடங்கள் மிக அதிகம் என்று தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைவருமே எண்ணும்போது காங்கிரஸ் கு(தொ)ண்டர்களுக்குமட்டும் வேறு எண்ணங்கள். காங்கிரஸ் வெற்றுப் பெருங்காய டப்பா என்பது அவர்களுக்கு ஏனோ புரியவில்லை.

    வீரப்ப மொய்லி உருவ பொம்மை எரிப்பில் தொடங்கி, மாநிலமெங்கும் ஆங்காங்கே எதிர்ப்புகள் என்றாகி கடைசியில் கூட்டமாக சத்தியமூர்த்தி பவனில் அடித்துக்கொண்டுள்ளனர் காங்கிரஸ்வாதிகள்.

    எகப்பட்ட உள்கோஷ்டி. காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் தொண்டர்களால் கூட்டணிக் கட்சிக்கு ஏதாவது ஆதாயம் உண்டா என்று கூட்டணிக் கட்சிகள் யோசித்துப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக உழைக்கும். அங்கும்கூட காங்கிரசின் உள்கோஷ்டிப் பூசலால் வாக்குகள் சிதறும். காங்கிரஸ் போட்டியிடாத பிற தொகுதிகளிலோ கேட்கவே வேண்டாம்.

    திமுக தலைவர் கருணாநிதி சொன்னதுபோல கூட்டணியும் வேண்டும்; அதே சமயம் விட்டுக்கொடுக்காமல் வேண்டுய தொகுதிகளும் வேண்டும் என்றால் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோலத்தான் உள்ளது!

    பிற கட்சிகளில் ஓரளவுக்குக் கோபம் இருந்தாலும் காங்கிரஸ் அளவுக்கு வெளியே தெரியவில்லை.

    தேர்தல் செய்திகள்

    * தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும்.

    * சுமார் 100 தொகுதிகளில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடும்.

    * சுமார் 50 தொகுதிகளில் பால் தாக்கரே(?)யின் சிவசேனா போட்டியிடும்.

    * இதுவரையில் அதிகாரபூர்வமாக எந்தப் பெரிய கட்சியின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை. Unofficial மதிமுகவின் பட்டியல் ஒன்று இட்லிவடை பதிவில் உள்ளது (மாலைச்சுடர் வழியாக).