Category Archives: Uncategorized

Map: Where the blasts happened 

Map: Where the blasts happened Posted by Picasa

Read & Stirred

நன்றி: ஜெகத் | காலச்சுவடு | தமிழ் சிஃபி

அசோகமித்திரன்: “சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள், அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன. இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன.

ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது. தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல. ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகளையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை, கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை. ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது. அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந்திருக்க வழியில்லை.”


ஜேஜே சில குறிப்புகள் வயசு 25 – சுகுமாரன்: “புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் ‘திட்டமிட்ட சதி’யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது.

ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது.

சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.


நூற்றாண்டு நாயகர் ம.பொ.சி. :: வெங்கட் சாமிநாதன்

சற்று முன் தான் ஆர்.கே நாராயணன் நூறாண்டு நினைவு தமிழ்நாட்டில் அல்ல, கர்நாடகத்தில் கொண்டாடப்படுவது பற்றிப் பேசினேன். கன்னடம் பேசிய ஈ.வே.ராவை தமிழர்கள்தான் பெரியாராகக் கொண்டாடுகிறார்கள்.

அடுத்து 1906 மனிதர் சிட்டி. அடுத்து இன்னொருவரும் இருப்பது நமது நினைவுக்கு வரக் காரணம் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் (Pro-Vice Chancellor) எம்.ஏ.எம். ராமசாமி அவர்களும் ம.பொ.சிவஞான கிராமணியாரின் நூற்றாண்டு நினைவைக் கொண்டாடிய செய்தியைப் பத்திரிகையில் படித்தது தான்.

எனக்கு இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம் சரிவரத் தெரிவதில்லை. ஒரு இடத்தில் உள்ள சம்பிரதாயம் இன்னொரு இடத்தில் வழங்குவதில்லை. தமிழ்நாட்டின் சம்பிரதாயங்கள், அதிலும் அரசியல் பொது மேடை சம்பிரதாயங்கள் விளங்குவதில்லை. இதில் யாருக்கு யார் நினைவுப் பரிசு தருவது என்பதில் எனக்குக் குழப்பம் அதிகம். சாதாரணமாக அரசு தான் நினைவு விழா நாயகரின் நினைவில் ஏதும் செய்யும், விழாக் குழுவினருக்கு உதவும், ஆதரவளிக்கும் என்று நினைப்பேன். இங்கு தலைகீழாக இருக்கிறது. அல்லது என் நினைப்புகள்தான் தலைகீழோ என்னவோ.

எப்படியாயினும், இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாவிட்டால், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த, ஒரு பெரிய மனிதரை நினைவுகொண்டு கௌரவித்துள்ளது பெரிய விஷயம்.

வெற்றுப் பேச்சாளர் இல்லை. பேச்சும் சிந்தனையும், வாழும் வாழ்வும் ஒன்றாக இருந்தது அவர் வாழ்வு. இதை எத்தனை பேர் நம்ப முடியும் இன்று? ஒரு பைசா சம்பளமில்லாத ஒரு கிராமத்துப் பஞ்சாயத்துத் தேர்தலுக்கு லட்சக் கணக்கில் போட்டியாளரிடம் பேரம் பேசும் அரசியல் இன்று. இந்தக் கலாச்சாரம், நாடு முழுதும் பரவியிருக்கிறது. எத்தனை முறை சென்றார் என்பது இப்போது கணக்கில் இல்லை. சிறையில் மின் விசிறி இல்லை, கரப்பும் தேளும் என்று கூச்சலிட்டார்கள் இன்றைய நமது தலைவர்கள் பலர் அன்று. ம.பொ.சியோ மற்றவர்களோ ஏதும் குறை சொன்னதாக அன்று கேள்வி இல்லை. அது வேறு கலாச்சாரம்.

‘என் போராட்டம்’, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ போன்ற நூல்கள் தமிழ் சரித்திரத்தில் இன்னும் விரிவாகப் பேசப்படாத, (இனி பேசப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சரித்திரம் வேறு விதமாக கற்பித்து எழுதப்படத் தொடங்கிவிட்டது என்பது என் கவலை), பேசப்பட மாட்டாதோ என்று இருக்கும் இந்நாளில், அந்தப் புத்தகங்கள் திரும்பப் படிக்கக் கிடைக்க வேண்டும். நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழ் அரசுக் கழகம் அவர் தொடங்கியது, தேசீயம் பேசும் காங்கிரஸ் தமிழையும் தமிழ்நாட்டையும் புறமொதுக்கப் பார்த்திருந்து விடுமோ என்ற அச்சத்தில் பிறந்தது. தேசீயத்தில் தமிழ் அடையாளம் கரைந்துபடாமல் இருப்பதில் அவருக்குக் கவலை அதிகம். தமிழைச் சொல்லி தேசீயத்தை மறுத்த அரசியல் அல்ல அவரது.

அகில இந்தியப் பின்னணியில் தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் இந்து மதச் சீர்திருத்த புருஷர்களாக, 19ஆம் நூற்றாண்டின் அரசியல், பண்பாட்டுச் சூழலில், இந்து மதம் தன்னை அர்த்தமுள்ளதாக, புதுப்பித்துக் கொள்ளும் ஒரு பரந்த அலையின் பின்னணியில் ராமலிங்க ஸ்வாமிகளின் வாழ்க்கையையும் அவரது உபதேசங்களையும் பார்த்தார். 19ஆம் நூற்றாண்டுக்கு மட்டுமல்ல, அதன் இன்றைய அர்த்தங்களையும் பொருத்தத்தையும் காந்தியடிகளின் தோற்றத்தையும் வாழ்க்கையும் உறவுபடுத்திப் பார்த்தார்.

திராவிட இயக்கச் சிந்தனையாளர்களான, இலக்குவனார், சாமி சிதம்பரனார் போன்றோரெல்லாம் அந்நாளில் சிலப்பதிகாரம் பற்றிப் பெருமையாகப் பேசி எழுதி அவையெல்லாம் ‘விடுதலை’ பத்திரிகையில் வெளிவரும். அதே சமயம் சிலப்பதிகாரம் பற்றியும் பொதுவாகத் தமிழ்ப் படிப்பு அறிவு வளர்ச்சிக்கு உதவாதது பற்றியும் ‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்வார்களா?’ என்றெல்லாம் பெரியார் கருத்துகளும் வெளிவரும். இலக்குவனாரோ, சாமி சிதம்பரனாரோ அல்லது கழகத் தமிழ் அறிஞர்களோ பெரியாரோடு வாதம் புரிந்ததில்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பேசிச் செல்வார்கள். பெரியார் கருத்துகள் மறுபுறம் வெளிவந்துகொண்டிருக்கும்.

ஆனால், ம.பொ.சி. அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார். தான் நடத்தி வந்த தமிழ் முரசு பத்திரிகையில் வெகு விரிவாக “கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்” என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். கடைசியில் இதுவும் அதுபாட்டுக்கு அது என்றுதான் ஆயிற்று. அது ம.பொ.சியின் குற்றமல்ல. தமிழ்ப் பண்பு. பதில் சொல்லத் தெரியாவிட்டால், முடியாவிட்டால், கண்டுக்காமல் இருந்து விடுவது தமிழ்நாட்டுப் பண்பு. அப்படித்தான் வாழவேண்டாததெல்லாம், வாழத் தகுதியற்றவெல்லாம், வாழ்வு பெறுகின்றன. யாரும் யாரோடும் மோதுவதில்லை. மோதினாலும் கண்டுக்காமல் ஒதுங்கிவிடுவது சாலவும் நன்று.

அப்படி ஒதுங்கி நல்ல பிள்ளையாகிவிடக் கூடாது காங்கிரஸ் என்ற காரணத்தால்தான், ம.பொ.சி ஆந்திரா பிரிந்த போது சென்னையையும் திருத்தணியையும் தமிழ்நாடு இழந்துவிடாதிருக்கப் போராடினார். கேரளம் உருவானபோதும், பீர்மேடு, தேவிகுளம் சம்பந்தமாகவும் போராடினார். அவர் இருந்திருந்தால், கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்த்திருக்க முடிந்திராது என்றுதான் நினைக்கிறேன்.

இன்று விதி விலக்குகள் என்று ஒரு கக்கனையும் நல்லகண்ணுவையும் பார்ப்பது போல. சாகித்ய அகாடமி பரிசு அவருக்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு இல்லாமலேயே, வள்ளலார் கண்ட ஒருமைப் பாடு’ ஒரு நல்ல புத்தகம். திரும்பத் திரும்ப அச்சில் வரவேண்டிய புத்தகம்.

இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ” விருது அளித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரானார். தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவரானார்.


பிஏ கிருஷ்ணனின் அற்றைத் திங்கள்மிகையற்ற உரையும் அலுப்பற்ற அந்தியும் :: கே.என். செந்தில்

பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது அதை பைண்ட் செய்தவருடைய கருணையால் கல்கி இதழின் கடைசிப் பக்கங்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றன. அந்தப் பக்கங்களில்தான் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதில் தொடங்கிய கிருஷ்ணனின் வாசிப்புப் பயணம் பிறகு எழுத்துப் பயணமாக வளர்ந்தது.

கிருஷ்ணனின் குடும்பத்திற்குப் பல துறைகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு முக்கியமான காரியத்திற்காக அவரது தாத்தாவைச் சந்தித்திருக்கிறார். அவரது இல்லத்தில் காமராசர் தங்கியிருக்கிறார். கிருஷ்ணனின் எழுத்து முயற்சியை ஆசிரியர் மூலம் அறிந்த ஜீவா அவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ஓஅந்த முயற்சியை ஜீவா படிக்கவில்லை என்று நினைக்கிறேன். படித்திருந்தால் அந்தப் பாராட்டும் கிடைக்காமலே போயிருக்கும்!ஔ என்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனது உரையின் பெரும்பகுதி முன்னாள் அசாம் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவைப் பற்றியே இருந்தது (காலச்சுவடில் அவருக்கு ஒரு அஞ்சலியையும் எழுதியிருக்கிறார் கிருஷ்ணன்).


சங்கேத அக்காதமி விருது

பரிந்துரைகள் – 1
யவனிகா ஸ்ரீராம் கௌபாய் விருது
மு. ராமசாமி ஓமக்குச்சி விருது
மாலதி மைத்ரி கொல்லிப்பாவை விருது
கலாப்ரியா எம்.ஜி.ஆர். கவிஞர் விருது
தேவதச்சன் சொல்லேருழவன் விருது
பாலைநிலவன் காஸனோவா விருது
அப்பாஸ் ‘உல்லாச புருஷ்’ விருது
நா. முத்துக்குமார் ‘பற பற’ விருது
தேவதேவன் இயற்கைத் திலகம் விருது
க. பஞ்சாங்கம் ஸ்தீரி பார்ட் விருது
காவ்யா சண்முகசுந்தரம் செம்பதிப்பர் விருது
வெளிரங்கராஜன் தங்கமான ராசா விருது
அ. மார்க்ஸ் ‘கௌரவம்’ பாரிஸ்டர் ரஜினிகாந்த் விருது
மணா ஔவை விருது
சூத்ரதாரி பாலசம்பந்தர் விருது
மருதா பாலகுருசாமி
ந. முருகேச பாண்டியன்
மீரா அடிப்பொடி விருது

பரிந்துரைகள் – 2
க. மோகனரங்கன் முன்னுரை முனுசாமி விருது
ந. முருகேச பாண்டியன் கருத்து கந்தசாமி விருது
லஷ்மி மணிவண்ணன் பார் புகழும் மனிதர் விருது
ஜெயமோகன் காவியக் கண்டன் விருது
யுவன் சந்திரசேகர் கிருபானந்த வாரியார் விருது
சுஜாதா இலக்கியக் கடத்தல் விருது


கைமண் அளவு: என் வாசிப்பில் ஜெயமோகன் – 1

காடு நாவலை வீட்டிற்கு எடுத்துவந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் (லங்காதகனம் கதையில் எந்த வேஷக்குறையும் இல்லாமல் ஆட வரும் ஆசானைப்போல)

காடு என் ஆவலைத் தூண்டிய பிறகு வாசித்தது ரப்பர் நாவல். ஜெயமோகனின் முதல் நாவலான இது காடு போலவே குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியை (திருவட்டார், திர்பரப்பு, குலசேகரம்..) களமாகக் கொண்டது.

டார்த்தீனியம். இந்த கதையைப் படிக்கும் எவருமே பாதிப்படையாமல் இருக்கமுடியாது என்பது என் எண்ணம். மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழும் ஒரு சிறுக் குடும்பம் அந்த குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் ஒரு விடுபட இயலாத இச்சையின் (obsession) காரணமாக எப்படி சிதிலமடைந்து சின்னாபின்னமாகிறது என்பது தான் கரு.

மிகவும் கவர்ந்த இன்னொரு கதை “பிரம்ம சங்க்யா” நம்பூதிரியைப் பற்றிய ஜகன் மித்யை என்ற சிறுகதை. நீட்சே, ஐன்ஸ்டீன், ஜடத்தையும் காலத்தையும் இணைக்கும் சமன்பாடுகள், சுழற்சித் தத்துவம் போன்ற விஷயங்கள் கதையில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றில் பயிற்சியில்லாதவர்கள் கூடப் ஆர்வத்தோடு வாசிக்கும் வகையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை மாடன் மோட்சம். ஒருபக்கம் மதமாற்றங்களினாலும் இன்னொரு பக்கம் சமஸ்கிருதமயமாக்கலாலும் அடித்தட்டு மக்களின் சிறுதெய்வ வழிபாடு அழிந்து வருவதாகச் சித்தரிக்கும் கதை. ஜெயமோகன் ஒரு இந்துத்துவாதி அல்ல என்று நிறுவ முனைவோர் இன்றளவும் சுட்டிக்காட்டும் கதை இதுதான்.

சுந்தர ராமசாமியின் சில கதைகளில் காணப்படும் அங்கதம் ஜெயமோகன் எழுத்தில் பொதுவாக காணமுடிவதில்லை. ஆனால் மடம் என்ற குறுநாவல் இதற்கு சற்று விதிவிலக்கு எனலாம். மாட்டு வைத்திய புத்தகம் ஒன்றைப் படித்து “ஞானம்” பெற்ற ஒரு பனையேறி சாமியாரைப் பற்றிய கதை. சாமியார் மிகப்பெரிய ஞானி என நம்பும் கனபாடிகள், சாமியார் மறைந்த பிறகு அவர் ஞானம் பெறக்காரணமான ஆதார நூல் எது என்றுத் தேடி அலைகிறார். சாமியாரின் பூர்வாசிரம மனைவியான கிழவிக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து அவளிடமிருந்து ஆதார நூல் பற்றிய ரகசியத்தை அறிய கனபாடிகள் முயல்வதும், அவருடைய கேள்விகளுக்கு கிழவியின் பதில்களும் (“என்னெளவ படிச்சானோ? எந்த அம்மெதாலி அறுத்தானோ?”) அந்த தேடலின் பின் உள்ள அபத்தத்தை வெளிப்படுத்துகின்றன. படுகை, லங்காதகனம், மண், கிளிக்காலம் போன்ற வேறு சில சிறுகதைகளும் மறக்கமுடியாதவை.

ஜெயமோகன் (அவரே “ஆழிசூள் உலகு” நாவலின் விமரிசனத்தில் குரூஸ் சாக்ரடாஸ் என்ற எழுத்தாளருக்குச் சொன்னது போல்) அவரால் மட்டுமே எழுத சாத்தியமான தென் திருவிதாங்கூர் மக்களின் தனித்தன்மையுடைய வாழ்க்கை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றி நிறைய எழுதவேண்டும். (நினைவுக்கு வரும் சினிமா பாடல்: “அக்கம் பக்கம் பாரையா, சின்ன ராசா! ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா!”)

“மற்றவர்களை தன்னைப் பற்றி இழிவாக எண்ணவைத்து அதில் சுகம் அடைபவர்கள் இருக்கிறார்கள். தான் உண்மையிலேயே இழிவானவன் அல்ல. அது ஒரு தோற்றம் மட்டுமே என்று ரகசியமாக அறிவதிலிருந்தே அந்த சுகம் வருகிறது”.

நல்லவேளை வைரமுத்து, அப்துல் ரகுமான் போல ஜெயமோகன் தி.மு.க ஆதரவாளராக இல்லை. இருந்திருந்தால் கழக மேடைகளில் “தென்னாட்டு தாஸ்தாவெஸ்கி அண்ணன் ஜெயமோகன் அவர்களே!” என்ற விளியை நாம் கேட்கவேண்டியிருந்திருக்கும்.


| |

South Indian Film Chamber Elections

தேர்தலில் நிற்கிறார் மும்தாஜ் – Sify.com

தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தல் என்றால் சும்மாவா? அதில் அரசியல் இல்லாமலா இருக்கும்? அந்தத் தேர்தலில் நடிகைகள் மும்தாஜ், விந்தியா, ஸ்ரீப்ரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தல், ஜூலை 30ஆம் தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்குச் சரத்குமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 4 அன்று தொடங்கியது. முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாவது நாளான ஜூலை 5 அன்று செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நடிகைகள் மும்தாஜ், விந்தியா, ஸ்ரீப்ரியா, நடிகர்கள் முரளி, அலெக்ஸ் உட்பட 15 பேர், நடிகர் சங்கத்துக்கு வந்து மனு தாக்கல் செய்தனர்.

நடிகைகள் சிம்ரன், மனோரமா, குஷ்பு ஆகியோரும் போட்டியிட உள்ளதாக பேசப்படுகிறது.

Thalaiyangam | Kalachuvadu

தலையங்கம் :: காலச்சுவடுமீண்டும் ஜூலை ’83

இலங்கையில் ஏற்பட்டிருந்த தற்காலிக அமைதி தகர்ந்துவருகிறது. அமைதி என்பது போருக்கான தயாரிப்பு என்பதிலிருந்து போருக்கான ஒத்திகை என்ற கட்டத்துக்குள் நுழைந்துவிட்டது. இந்தக் குழப்ப நிலைக்கு இலங்கை அரசு, புலிகள் என இரு தரப்பினருமே காரணம் என்று பேச வைத்திருப்பதும்கூட இலங்கை அரசுக்கு வெற்றிதான். அப்பாவி மக்களின் சடலங்களைக் கொண்டு அங்கு ஆடப்படும் அரசியல் சதுரங்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது எவருக்கும் தெரியாது.

கடந்த பத்தாண்டுகளில் மாறிவந்துள்ள சர்வதேச அரசியல் சூழலில், உலகின் மூலை முடுக்குகளும்கூட வல்லரசியத்தின் செயற்கைக்கோள் துழாவலுக்கு ஆளாகிவருகின்றன. இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைப் போலவே, சண்டைகளின் பின்னணியிலும் வேற்று முகங்களின் நிழல்கள் உள்ளன. இது இந்தியாவுக்குத் தெரியாத ரகசியமல்ல. இலங்கையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் இந்தியாவுக்குச் சொல்லப்பட்டேவருகின்றன. அமைதிப் படையை அனுப்பிய காலத்தில் இருந்தது போல வெளிப்படையான தலையீட்டுக்கு இந்தியா தயாராக இல்லை எனினும் வேறு விதங்களில் அது இலங்கையைக் கவனித்தேவருகிறது.

ஈழத் தமிழ்ச் சமூகம் சர்வதேச அளவில் இப்போது மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். யுத்தத்தின் தாக்கத்தை எப்படித் தமிழர்கள் எல்லோரும் உணர்கிறார்களோ அப்படிப் புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் தடையைப் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரும் உணரத் தொடங்கியுள்ளார். உலகமய மாதலால் பெருகிவரும் நிறவெறி மனோபாவத்தால் ஏற்கனவே சிவில் சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகிவந்த அவர்கள், தற்போது அரசு இயந்திரங்களின் கண்காணிப்பு, விசாரணை முதலான தொந்தரவுகளையும் சந்தித்தாக வேண்டும்.

ஆக, இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது உலகோடு பிணைக்கப்பட்டே இருக்கிறது. அது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பற்றிக் கூறவே வேண்டாம். இந்தப் பிரச்சினையை மிகவும் உணர்ச்சிகரமாக அணுகும் தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமின்றி மனிதாபிமானத்தோடு பார்க்கிற சாதாரணக் குடிமக்களும் இந்தப் பிரச்சினையில் அக்கறையோடுதான் உள்ளனர். இலங்கையில் வெடிக்கும் யுத்தம் இங்கே அகதிகளைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதனாலோ தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறது என்பதனாலோ மட்டுமல்ல, ஈழத் தமிழர் மீதான அக்கறைக்கு இன்னும் ஆழமான காரணங்கள் இங்கே இருக்கின்றன. மொழிக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பில் நாம் அந்தக் காரணங்களைக் கண்டுபிடிக்கக்கூடும். புவியியல் எல்லைகளைத் தாண்டி மொழி செயல்படும் விதத்தை அரசு எந்திரங்களால் புரிந்துகொள்ள முடியாது.

“மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு” எனக் கூறிவந்த தமிழக முதலமைச்சர் இப்போது “இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்திட வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூட்டணிக் கட்சிகளைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்கு வந்திருப்பது நல்ல அறிகுறி.

நார்வே குழுவினரும் இலங்கை அரசின் பிரதிநிதிகளும் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து மைய அரசின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிச் செல்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தச் சலுகை வழங்கப்படவில்லை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான அவர்களையும் ‘தடை செய்யப்பட்டவர்க’ளாக பாவிப்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. பல்வேறு மேலை நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று உண்மை நிலையை நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ளும் வேளையில் இந்தியாவிலிருந்து அப்படியொரு குழுவை அனுப்பலாம் என்ற யோசனையும் நியாயமானதே. இவற்றைத் தமிழக அரசு மைய அரசிடம் வற்புறுத்த வேண்டும். அது மட்டுமின்றி இலங்கை அரசுக்கு இந்தியா செய்துவரும் நேரடியான, மறைமுகமான உதவிகள் இலங்கையின் யுத்த எந்திரத்துக்கு எண்ணெய் போடுவதாகவே இருக்கிறது என்பதையும் தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.

தமிழ் மக்கள்மீதான இலங்கை அரசின் நடவடிக்கைகளில் யுத்தத்தின் தன்மையைவிட இனவாதத்தின் தன்மையே தூக்கலாகத் தெரிகிறது. பேசாலையில் தேவாலயத்துக்குள் நடத்தப்பட்ட படுகொலைகள், பள்ளிமுனை என்ற மீனவக் கிராமத்தை முற்றாக எரித்து ஆடப்பட்ட வெறியாட்டம் முதலானவற்றில் ராணுவப் போக்கைவிட இனவெறியே வெளிப்படப் பார்க்கிறோம். படையினரின் ரத்தத்தில் ஜூலை 83இன் நினைவுகள் துடித்துக்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் யுக்தி ஒடுக்குமுறையாளர்களுக்குப் பழகிப்போன ஒன்று. இன்று அந்த யுக்திக்கு ஈழத் தமிழர்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குற்றவாளிகளாக்கிக் கூண்டில் நிறுத்த ஒரு பெரும் கூட்டமே வேலை செய்கிறது.

ஈழப் பிரச்சினைக்காகக் குரல் கொடுப்பதைத் தனியுடைமையாக வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு சிலரின் அரசியல் சாதுர்யமற்ற அணுகுமுறை மாநில, மத்திய அரசுகளின் நிலைபாடுகளைத் தீர்மானிப்பது எவருக்கும் நல்லதல்ல. மற்றவர்களைக் குறைகூறுவதன் மூலம் தம்மைத்தாமே முதுகில் தட்டிக்கொள்ளும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளைத் தாண்டி ஈழப் பிரச்சினை மீது அக்கறை கொண்டோ ர் தமது குரலைப் பதிவு செய்ய வேண்டிய நேரம் இது.

Close to Home – FDA & Pharmaceuticals

மருந்து வாங்கப் போனேன்
கொற்றவை வாங்கி வந்தேன்

என்பது போல் முக்கிய தகவல்களையும் தொடர்புள்ள உப விளைவுகளையும், உள் நுழைய முடியா மொழியில், நுணுக்கி நுணுக்கி, பெரிய துண்டு சீட்டு கொடுப்பவர்களையும்; அந்த விவரங்களைப் புரிந்து கொள்ளாமல் வழக்குத் தொடுப்பவர்களையும் நக்கலடிக்கும் கருத்துப்படம்.

Close to Home

நன்றி: Close to Home


| |

Chechen politician seeking independence through terrorism

ஷமீல் பஸயேவ் (Shamil Basayev) மரணம்
ஜனவரி 14, 1965 – ஜூலை 10, 2006

செசன்யா விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த, ருசியாவின் ஒஸாமா பின் லாடென் என் வர்ணிக்கப்பட்ட, பெஸ்லான் குழந்தைகளை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டது முதல் பல செயல் திட்டங்களை ஒருங்கிணைத்த ஷமில் மரணமடைந்தார். ஒரு தீவிரவாதி (அல்லது போராளி) down.

தொடர்புள்ள செய்திக் கோர்வைகள்:

  • லண்டன் டைம்ஸ்
  • ஜீ செய்திகள்
  • பிபிசி
  • கார்டியன் (லண்டன்)
  • ரஷியாவின் ப்ராவ்தா

    | |

  • Two Stories

    நல்ல எழுத்தைப் படிக்கும்போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

    பட பட வென்று அடித்துக் கொண்டு பறக்கும் ஹம்மிங் பறவையை விவரித்து, நாவலில் படித்து முடித்தும் உட்காராத கதாபத்திரங்கள் போல் மறையாமல், துண்டு விரித்து வேலி கட்டி ஃப்ளாட் போடுகிறது.

    செய்திகள் எவ்வாறு முக்கியம் என்று அலசும் இளம் நிருபரின் ராக்கால லாப்ஸ்டர் ஷிஃப்ட் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்தது.

    முதல் கட்டுரை – கவிதை போல் மிகையின்றி செதுக்கிய வரிகள் என்றால்; முகத்தில் அறையும் எட்டாம் பக்க மூலையின் 150 வார்த்தைகள் எவ்வாறு செதுக்கப் படுகிறது என்று அமரிக்கையாக விவரிக்கும் இரண்டாம் கட்டுரை – கானாங்குருவி கண்ணி.

    மொழிபெயர்க்க தூண்டும் இரண்டு பத்திகள். அருமை என்று சொல்வது இனி அருமை என்பதற்கான அளவுகோலாக்குவது போல் மனதை சென்றடையும் எழுத்து:

    1. The Lobster Shift – Columbia Journalism Review September/October 2005: By Julia F. Heming:

    Covering the news in a city that never sleeps – The scanner announces a fire on Park Avenue. I look at Veronika expectantly. She shakes her head. “I used to get excited when I heard something like ‘shots fired,’” she says. “But first they have to be confirmed, then they have to be aimed at somebody, then they have to hit somebody, then they have to hit them somewhere important. You learn to decipher with a sense of what’s going to make the paper.”

    2. Brian Doyle’s “Joyas Voladores”: So much held in a heart in a day, an hour, a moment. We are utterly open with no one, in the end — not mother and father, not wife or husband, not lover, not child, not friend. We open windows to each but we live alone in the house of the heart. Perhaps we must. Perhaps we could not bear to be so naked, for fear of a constantly harrowed heart.


    | |

    Strategy for upliftment vs Possible execution plan

    Dinamani.com – Editorial Page

    எளியோருக்காகத் திட்டமிடுதல் :: ஆர். கண்ணன்
    வளரும் நாடுகளைப் பொறுத்த அளவில் ஏழை மக்களை எவ்வாறு அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பது என்பதும் அதற்கான வழிமுறைகளை வகுப்பதும் 21-ம் நூற்றாண்டிலும் தொடரும் மிகப்பெரிய சவால்களாக அமைந்துள்ளன. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்த அளவில் எழுத்தறிவின்மை, வேலையின்மை, வறுமை, சரிவிகித உணவின்மை, ஆரோக்கிய வாழ்வின்மை, வாழ்விடமின்மை போன்றவையே மக்களை ஏழ்மை, அதிகாரமின்மை, வளமின்மை எனும் நிலைக்கு உட்படுத்துகின்றன.

    உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள் (வளமான நாடுகளின் அரசாங்கங்கள் உட்பட) சந்திக்கின்ற பிரச்சினைகள் குறித்து உலக வங்கியைச் சேர்ந்த பெனிலோப் புரூக் மற்றும் வார்ரிக் ஸ்மித் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமானவையாகும்.

    உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், நீர், சுகாதார வசதி, தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதோடு மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனும் அவர்களின் கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. உலகில் ஏறத்தாழ 2 பில்லியன் (200 கோடி) மக்கள் சுற்றுப்புறச் சுகாதார வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையிலுள்ள மக்கள் மின்சார வசதியின்றி இருக்கின்றனர். ஒரு பில்லியன் மக்கள் (100 கோடி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றியும் உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தொலைபேசியைப் பயன்படுத்தாதவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலைக்கு இருவகைக் காரணங்கள் உள்ளன. உலகின் ஒருசில இடங்களில் இந்த வசதிகள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்விடங்களிலோ அல்லது அருகாமையிலோ இல்லாதிருத்தல்; வேறு சில இடங்களில் இந்த வசதிகள் இருப்பினும் ஏழை மக்களிடம் இவற்றைப் பெறுவதற்கான பொருளாதார வசதி இல்லாதிருத்தல் என இந்த இரண்டையும் முக்கியக் காரணங்களாகத் தெரிவிக்கும், இக்கட்டுரையாளர்கள், திட்டமிடுதலில் உள்ள குறைபாடுகளையும் சுட்டுகிறார்கள்.

    இறுதியாக கோட்பாடு எனும் தளத்திலிருந்து நடைமுறைச் சாத்தியம் எனும் நிலைக்கு வருவதற்கென ஐந்து உபாயங்களைக் கூறியுள்ளனர். அவை:

    1. திட்டமிடுதலில் பங்கேற்பாளர்கள் (Stakeholders) குழுக்களை அமைத்தல் மற்றும் அவர்களின் ஆலோசனை பெறுதல்.

    2. பயனாளிகள், பங்கேற்பாளர்கள் இவர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல்.

    3. உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்வடிவு மற்றும் அவற்றின் வழிமுறைகள் இவற்றில் தேவைக்கேற்ப நுணுக்கமான மாறுதல்களைச் செய்தல்.

    4. தனியார்மயமாகும் தருணங்களில் மறுசீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதலில் கவனம் செலுத்துதல்.

    ஏறத்தாழ ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியமைப்பு ஆகியவற்றின் கருத்துகளும்கூட மேற்கூறப்பட்ட கருத்துகளை ஒட்டியே அமைந்துள்ளன. நகர்ப்புறச் சேவைகள் அனைத்தையும் அரசு நிறுவனங்கள் மட்டுமோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாத்திரமோ ஆற்றிட இயலாது என்று உணர்ந்த உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள் இப்போது நிறுவனச் சீர்திருத்தங்களில் (Institutional reforms) தனியார் அமைப்புகளைப் பங்கேற்கும்படிச் செய்துள்ளன என்கின்றது ஆசிய வங்கியின் அறிக்கை. சுலப் இண்டர்நேஷனல் எனும் இந்தியாவைச் சேர்ந்த தனியார் சேவை அமைப்பு, சூழல் பாதுகாப்பில் அடைந்த வெற்றியை இவ்வறிக்கை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. அரசாங்கங்கள், மேம்பாட்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய இவை மட்டுமே, ஏழ்மையை அகற்றிட இயலாது என்று சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியமைப்பின் அறிக்கையும் கூறுகிறது. ஏழை மக்களின் வாழ்விடங்களில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அந்த மக்களின் திறமைகளையும் பயன்படுத்திச் செயல்படும்போது ஏழ்மையிலிருந்து மக்களை மீட்க இயலும் என்கிறது இந்த அறிக்கை.

    அனைத்திற்கும் மேலாக அரசாங்கங்களின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாதிருப்பதற்குரிய காரணங்களை ஆராய்ந்தால், முக்கியமான காரணமாக அமைவது மக்களைத் தகவல் சென்றடையாதிருப்பதேயாகும். விந்தையான ஒரு செய்தி என்னவென்றால் தகவல்புரட்சி நடைபெற்றுவிட்டதாகக் கூறப்படும் இந்த யுகத்தில் தகவல் இடைவெளி (Information gap) குறைக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் மக்களிடையே கலந்துரையாடல் இடைவெளி (interaction gap) அதிகரித்துவிட்டது. இதனால்தானோ என்னவோ நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும் கூட முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வர முடியாமல் போகிறது.

    இன்றைய யுகத்தில் பணம் படைத்தவர்கள், ஏழைகள் என்ற பாகுபாட்டைக் காட்டிலும் தகவல் பெறுபவர்கள், தகவல் பெறாதவர்கள் (அல்லது பெற இயலாதவர்கள்) ஆகியோருக்கிடையே உள்ள இடைவெளிதான் சமூகப் பொருளாதார மேம்பாட்டை எதிர்காலத்தில் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக அமையக்கூடும்.

    (கட்டுரையாளர்: இயக்குநர், யுஜிசி கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21).

    Dinamani Stories of the Day

    மும்பையில் சிவசேனைத் தொண்டர்கள் கலவரம்: பஸ்ஸுக்குத் தீவைப்பு; சாலைமறியல்: தாதர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் மனைவி மறைந்த மீனாதாயின் சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். தாதரில் உடல்பயிற்சி நிலையம் அருகே உள்ள கோயிலில் விநாயகர், ஹனுமன் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டதாக பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே கூறினார்.

    ‘இந்தியாவுக்கு எதிராக புலிகள் எப்போதும் செயல்பட்டது இல்லை’- திருமாவளவன் பேச்சு: இந்திய அரசு நினைத்தால் 3 நாள்களில் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். சிங்கள ஆட்சியாளர்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்தியாவின் கடல் எல்லையையும், இலங்கையில் திரிகோணமலை பகுதியில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமித்துவிடாமலும் பாதுகாப்பது விடுதலைப் புலிகள் தான்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி தேரோட்டம் முடிந்தது: தேர் வடம் பிடிக்கச் சென்ற இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை நாட்டார்கள் தேரை தொடவிடாமல் தடுத்தனர். அதேபோல, தேர்வடம் பிடிக்கச் சென்ற சிறுமருதூரைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் ராஜா (22) உள்பட 5 தலித்துகளை நாட்டார்கள் தேர்வடம் பிடிக்கவிடாமல் அடித்துவிரட்டினர். இதில் ராஜாவின் சட்டை கிழிந்தது.

    பங்காரு லட்சுமணன் தனிச் செயலர் அப்ரூவராகிறார்: தெஹல்கா இணையதள லஞ்சவிவகார வழக்கில் சிக்கிய பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணனின் தனிச் செயலர் சத்தியமூர்த்தி அப்ரூவராக ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லஞ்சப் பணத்தை தனக்காக வாங்கவில்லை என்றும் பாஜகவின் நிதிக்காகவே வாங்கமுற்பட்டதாகவும் விசாரணையில் பங்காரு லட்சுமணன் தெரிவித்தார்.

    வேலூர் சிறையில் முருகன், நளினி 15-வது நாளாக உண்ணாவிரதம்: முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்திரா (எ) மேகராவுக்கு மத்திய அரசு உடனடியாக விசா வழங்கக்கோரி ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன் (ஜூன்-25) ஞாயிற்றுக்கிழமையிலிருந்தும், நளினி திங்கள்கிழமையிலிருந்தும் (ஜூன்-26) தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இருவரும் தண்ணீர் மட்டும் குடித்து வந்தனர். சோர்வடைந்ததால் முருகன், நளினி ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை குளூகோஸ் ஏற்ற சிறைத் துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர்.


    | |

    Top Five book Choices from OpinionJournal

    1. ஐந்து சிறந்த குறுநாவல்
    2. ஆபிரகாம் லிங்கன், Gettysburg, சிவில் போராட்ட களம்
    3. (தற்கால) தீவிரவாத போராளி வழிமுறை
    4. சட்டத்துறையைப் பின்னணியாகக் கொண்ட நெடுங்கதை
    5. இருக்கை நுனிக்குக் கொண்டு வரும் கிரிமினல் நாவல்
    6. இராணுவத்தைக் குறித்த தலை ஐந்து புத்தகம்
    7. ஆங்கில மொழியின் ஆதிகாலமும் பயன்பாடும் குறித்த பட்டியல்
    8. தோட்டக்கலை
    9. தொழில் தர்மங்களும் வர்த்தக ரகசியங்களும்
    10. நான்கு முறை ஜனாதிபதியான ஃப்ரான்க்ளின் டி ரூஸ்வெல்ட்


    | |