Category Archives: Uncategorized

S Ve Sekar talks on ‘EVR Periyar Movie’ & Mylapore

Dinamani.com – TamilNadu Page

மனைவிக்கு நன்றி கூறி கன்னிப் பேச்சைத் தொடங்கினார் எஸ்.வி.சேகர்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசினார்.

பெரியார் படம்: சத்யராஜ் நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு ரூ. 95 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. முதல்வர், கதை வசனகர்த்தாவாக இருந்து திரைப்படத்துறை பற்றித் தெரிந்தவர். அந்த படத்தை ரூ. 70 லட்சம் செலவில் தயாரிக்க முடியும். ரூ. 95 லட்சம் நிதி உதவி கொடுப்பதால் படத்தின் உரிமையை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தனி நபருக்கு நிதி உதவி செய்வது சரியல்ல. இதுபோன்று மூதறிஞர் ராஜாஜி, ஆலய பிரவேசம் செய்ய போராடிய வைத்தியநாத அய்யர் ஆகியோரது வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்படுமா? என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

மெட்ரோ ரயில் வேண்டாம்: சென்னையைப் பொறுத்தவரை மெட்ரோ ரயிலை விட மோனோ ரயில் திட்டம்தான் சிறந்தது என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அதைச் செயல்படுத்த வேண்டும்.

மாநகராட்சி கழிப்பிடங்களில் ரூ. 2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கும் நிலையில் ரூ. 8 தேவைப்படுகிறது. ரூ. 2-க்கு அரிசி வாங்கி சாப்பிட்டுவிட்டு கழிப்பிடம் செல்ல ரூ. 8 செலவு செய்ய வேண்டியதிருக்கும். எனவே, இலவச கழிப்பிடம் தேவை.

மயிலாப்பூர் தெப்பக் குளத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் “போர்’ மூலம் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். மந்தைவெளியில் புதிதாக துணை மின்நிலையம் அமைக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்து விளம்பரப் படுத்தவேண்டும் என்றார் எஸ்.வி. சேகர்.

Indian Parliament’s New TV

Dinamani.com – Headlines Page

மக்களவைக்காக புதிய தொலைக்காட்சி

பொதுமக்களுக்கும், மக்களவைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காகவும், அவை நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் “மக்களவைச் சேனல்’ என்ற புதிய தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் திங்கள்கிழமை துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் இதன் ஒளிபரப்பு துவங்கியது.

இது குறித்து மக்களவைத்தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியதாவது:

இத் தொலைக்காட்சி மூலம் மக்களவை ஒரு புதிய அத்யாயத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் அவையின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும். உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இத்தொலைக்காட்சி வெற்றி பெறும்

என்றார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கப்பட்ட 24 மணிநேர தொலைக்காட்சி இது.

  • உங்கள் எம்பி-யை தெரிந்து கொள்ளுங்கள்,
  • அவைத்தலைவரின் விமர்சனம்,
  • இந்த வாரப்பிரச்சினை,
  • கிராமத்துக்குரல் மற்றும்
  • தேசிய பாரம்பரியம்,
  • கலாச்சாரம் தொடர்பான நிகழ்ச்சிகள்
    இதில் ஒளிபரப்பாக உள்ளன.
  • Mine is a Dravidian Party – Vijayaganth

    Former DMK mla joins Vijaykanth’s party

    எங்கள் கட்சி திராவிட கட்சி: விஜய்காந்த்

    நான் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்ததில்லை, சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைத்ததில்லை, கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைத்ததில்லை. இவையெல்லாம் என்னைத் தேடி வந்தவை

    என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

    விழுப்புரம் மாவட்டம் முகையூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ஏஜி.சம்பத் தலைமையில் மாவட்ட பாமக முன்னாள் தலைவர் குரு ஜெயக்குமார், மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்குமார் மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கடசிகளை சேர்ந்த 1,000 பேர் தேமுதிகவில் இணைந்தனர்.

    புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய விஜயகாந்த் பேசியதாவது:

    திமுக தலைவர் கருணாநிதி நம்மை திராவிட கட்சியில்லை என்று சொல்லியிருக்கிறார். நாம் வளர்ந்து வரும் கட்சி. நம்மை அவர் விமர்சனம் செய்திருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அந்த அளவுக்கு நாம் வளர்ந்திருகிறோம்.

    இது 3வது தலைமுறை. நாம் திராவிட கட்சியா, இல்லையா என்பதை மக்கள் உணர்த்துவார்கள். நாம் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இல்லை.

    திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு கன்னடம் உள்பட 7 மொழி பேசுபவர்கள் சேர்ந்தது. இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் தான். நம்மைப் பார்த்து இப்படி ஒரு கருத்தை அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மீது நான் ஒரு மரியாதை வைத்திருக்கிறேன்.

    தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், விவசாய கடன் தள்ளுபடி தவிர மற்ற அனைத்துமே தேமுதிக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது தான். இதில் ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் என்ன இருக்கிறது என்று கேட்டேன்.

    இதை சொன்னதற்காகவும், ஏஜி சம்பத் நமது கட்சியில் இணையப் போவதை உளவுப்பிரிவு போலீஸ் மூலம் தெரிந்து கொண்டும் தான் என்னை விமர்சித்திருக்கிறார்.

    உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் வரியில்லாத பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். வரி எப்படி போடாமல் இருக்க முடியம். பெட்ரோல், டீசல் விலை உயராது என்று சொல்லிக் கொண்டே உயர்த்துவது இல்லையா, அதுபோல வரியையும் நிச்சயம் போடுவார்கள்.

    சட்டசபை தேர்தலில் 8.5 சதவீதம் ஒட்டு பெற்றிருக்கிறோம். அதனால் நம்மை வளர விட்டு விடாதீர்கள் என்று கூறி வருகிறார்கள். எல்லோரும் தனியாக நில்லுங்கள். உங்களது சக்தியை காட்டிவிட்டு கூட்டு வையுங்கள்.

    என்னுடைய மண்டபத்தை இடிப்பதாக பயம் காட்டுகிறார்கள். தாராளமாக இடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். போனால் போகிறது, இன்னொரு முறை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் கட்சியை மட்டும் அழிக்க விடமாட்டேன்.

    ஒரு குழியில் சிறுவன் விழுந்துவிட்டான், அவனை காப்பாற்ற 2 நாட்களாக போராடினார்கள் என்று அவனை மீட்டவர்களை பாராட்டுகிறார்களே. அந்த குழியை மூடாதவர்களை கைது செய்தார்களா?

    நான் சினிமாவுக்கு வில்லனாகத்தான் வந்தேன். கதாநாயகனாக வருவேன் என்று நினைக்கவில்லை. சொந்தப்படம் எடுப்பேன் என்று நினைக்கவில்லை. நடிகர் சங்க கடனை அடைப்பேன் என்று நினைக்கவில்லை. கட்சி தொடங்குவேன் என்றும், தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. அதெல்லாம் என்னைத் தேடி வந்தது.

    நமது கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படும். நமது தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டில் அறிவித்ததே நமக்கு கிடைத்த வெற்றி தான். ஏன் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய கியாஸ் அடுப்பு பற்றி பட்ஜெட்டில் கூறவில்லை.

    எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தான் மக்களுக்கு நேரடியாக நன்மைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எனவே உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும்.

    நாம் வளர்ந்து கொண்டே இருந்தால் தான் ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் பயந்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்றார் விஜய்காந்த்.

    Terror training camps in Theni forest?

    Terror training camps in Theni forest?

    தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி?

    கோவையில் ஆரூண் பாஷா, மாலிக் பாஷா, ரவி என்கிற திப்பு சுல்தான், போலோ சங்கர் என்கிற அத்தக் கூர் ரகுமான், சம்சுதீன் ஆகிய 5 தீவிரவாதிகள் வெடி குண்டுகளுடன் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கைதான 5 போரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குண்டுகளுடன் கைதானவர்களிடம் இருந்து சில இந்து மத தலைவர்களின் வீட்டு முகவரி, போட்டோ, அவர்கள் வந்து செல்லும் பாதைகளின் வரைபடங்கள், கோவையில் குண்டு வைக்க தேர்வு செய்த இடங்கள் அனைத்தும் இடம் பெற்று இருந்த சிடிகள், டெலிபோன் எண் அடங்கிய டைரி, வெடி மருந்துகள், பைப் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாதிகள் பல்வோறு குழுக்களாக பிரிந்து கோவை, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊடுருவி இருப்பதாகத் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் கேரளாவில் ஆயுத பயற்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொடுத்த தகவலையடுத்து கோவையில் மேலும் 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, சேலம் போன்ற பகுதிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    கைதான தீவிரவாதிகளுக்கு மனித நீதி பாசறை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைவர் மறுத்து விட்டார். நாங்கள் மத கல்வி பயிற்சி மட்டுமே அளிக்கிறோம் என்றார்.

    ஆனாலும் தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அனைத்து ரயில்களுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும் 2 இமாம் அலி கூட்டாளிகள் கைது:
    பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளியான சுல்தான் முகம்மது மதுரையில் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டார். இமாம் அலியை போலீஸாரிடம் காட்டிக் கொடுத்த இப்ராகிம் என்பவரைக் கொலை செய்வதற்காக அவர் வந்தபோது பிடிபட்டார்.

    இந்த நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இப்ராகிம். அவரும், சுல்தானை கொல்வதற்காக திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மூலம் மதுரையில் பெரிய அசம்பாவிதத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.

    இப்ராகிம் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

    Govt. will look into Chidambaram temple Issue – TN CM

    Webulagam : Govt. will look into Chidambaram temple Issue – TN CM!

    சிதம்பரம் கோயிலில் திருவாசகம் : கருணாநிதி பதில்

    சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட தமிழ் பக்தி பாக்களை இசைக்க சட்ட ரீதியாக என்ன தடை உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

    தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வேல்முருகன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாட முடியவில்லை. தமிழுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலையை தடுத்த நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி,

    “சிதம்பரத்தை பொறுத்தவரை அங்குள்ள தீட்சிதர்கள் ஆதிக்கத்தில்தான் நடராஜர் இருப்பதாகவும், அதை மீறி யாரும் எதையும் செய்ய முடியாது என்று ஐதீக கருத்து அழுத்தம் திருத்தமாக இருப்பதாகக் கூறி தேவாரம் பாடிய ஒரு தமிழரை வெளியேற்றியுள்ளார்கள்.

    அந்த சட்டப் பிரச்சனை என்ன என்பதை மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை பற்றி ஆராய்ந்து ஆவன செய்யப்படும்.

    இந்து ஆலயச் சுவர்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு உண்மையான தமிழர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களுக்கு கொந்தளிப்புதான் ஏற்படும். தமிழ் இவ்வளவு இலக்காரமாகப் போய்விட்டதா? தமிழ் உணர்வு அடிப்படையில் இந்த அரசின் சார்பாக இனி எந்த ஆலயத்திலும் தமிழிலும் அர்ச்சனை என்று எழுதப்படமாட்டாது. ஏற்கனவே எழுதப்பட்டிருந்தாலும் அவை அழிக்கப்படும்”

    என்று கூறினார்.

    Siruthavoor Encroachment by Jayalalitha

    BBCTamil.com

    தலித்துகள் நிலத்தில் முன்னாள் முதல்வர் தங்கியிருந்த பங்களா: சர்ச்சை வலுக்கிறது

    தமிழக தலைநகர் சென்னையை அடுத்த சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தங்கி வந்த சொகுசு பங்களாவின் ஒரு பகுதி, 1967 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது.

    ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது அவருடைய தோழி சசிகலாவின் ஆட்களால், இந்த நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், அந்த நிலத்தை தமிழக அரசு மீட்டு, மீண்டும் தலித்துகளுக்கே வழங்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களும், அவர்களின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் பல்வேறுவகையான போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் பற்றி சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு கருணாநிதி அறிவித்தார்.

    இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, சிறுதாவூரில் தானும், தனது தோழி சசிகலாவும் தங்கியுள்ள பங்களா தங்களுக்குச் சொந்தமானதல்ல என்றும், வாடைக்குத்தான் அந்த பங்களாவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

    சிறுதாவூரில் பங்களா வாடகைக்கு விடப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், அந்த பங்களா தன் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், அந்த பங்களா கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பான சர்ச்சை ஏதேனும் இருந்தால், அதை அந்த பங்களாவுக்கு சொந்தக்காரரிடம் தான் கேட்கவேண்டும் என்றும், ஜெயலலிதா கூறினார்.

    இது தொடர்பாக தன் மீது அவதூறு பரப்பி, தன் மீது பழி போடவும், தனது நற்பெயரை களங்கப்படுத்தவும் இந்த பொய்யான குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் இதை தாம் சட்டரீதியாக சந்தித்து உண்மையை நிலை நாட்டப்போவதாகவும் அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட கருணாநிதி, சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவோ, சசிகலாவோ உரிமையாளர் இல்லை என்றால் அதன் உண்மையான உரிமையாளர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

    குறிப்பாக சிறுதாவூர் பங்களாவுக்கு உண்மையான உரிமையாளருக்கும், ஜெயலலிதா, சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? அந்த பங்களாவுக்கான வாடகையை யார் கொடுத்தது? என்று அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

    கருணாநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தனக்குச் சம்பந்தம் இல்லாத சிறுதாவூர் பங்களா குறித்து கேள்வி கேட்கும் கருணாநிதி, அவர் பெயரிலும் அவரது சொந்த, பந்தங்களின் பெயரிலும் இருக்கும் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளளர்.

    சிறுதாவூர் பங்களாவுக்கான வாடகையை தாமே தமது சொந்த பணத்தில் கொடுத்ததாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, இந்த விவகாரத்தில் முழு உண்மைகளையும் வெளியில் கொண்டு வரும் பொருட்டு, தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    புதிய தமிழகம் உள்ளிட்ட சில தலித் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம் அஇஅதிமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் இது தொடர்பில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

    தமிழக அரசால் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மற்றும் இன்னாள் முதல்வரின் குடும்ப சொத்துகணக்கு எவ்வளவு என்கிற விவாதமாக திசைமாறிச் செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    Train, Sun, Big Dig, Wiki

    கிழிமுறி உதிர் ஏடல்கள்

    சன் டிவியில் ‘லஷ்மி’ ஆரம்பித்திருக்கிறது. ஹிந்தி சூப்பர்மேன் ‘கிர்ரிஷ்’ போல் மதங்கொண்ட யானையை நிறுத்தாமல், அறிவியல்பூர்வமாகக் கையாண்டதாக காண்பித்தார்கள். குஷ்புவை சின்னத்திரையில் ‘குங்குமம்’ சீரியல் மூலம் அறிமுகப்படுத்திய சுஜாதா விஜயகுமார் தயாரிப்பு. தற்போதைய வேலையை விட பெரிய வேலை கிடைத்தால், நிறைய சம்பளத்துக்கு ஜாகை மாறுவது போல் ‘செல்வி’ சீரியலை இயக்கி வந்த சுந்தர் கே விஜயன் இங்கே குதித்து விட்டார்.

    தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் ஆரம்பம் விறுவிறுப்பாய் இருக்கும். புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆவார்கள். அவசரம் காட்டாத நிதானமாக படப்பிடிப்பு. தொழில் சிரத்தையோடு கூடிய பயம். புதுமுக எழுத்தாளராக தேவிபாலா இல்லாவிட்டாலும், டி.ஆர்.பி. ரேட்டிங் குதிரையில் முந்த வேண்டிய அவசியம்.

    ரஜினி குதிரையைப் பற்றி சொன்னவுடன், எந்த ஒப்புமைக்கும் ரேக்ளா ரேஸ் நினைவுக்கு வருகிறது. ‘எனக்குப் பிடித்த பாடலில்’ ராஜப்பா வந்திருந்தார். முதல் பாடல்: ‘பொதுவாக என் மனசு தங்கம்

    ‘பிறந்த ஊருக்கு புகழைத் தேடு
    வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
    நாலு பேருக்கு நன்மை செஞ்சா’

    துள்ளல்

    சாந்தோம் பள்ளிக்கும் செயிண்ட் பீட்ஸ் பள்ளிக்கும், சென்னையில் எப்போதும் போட்டி நிலவும். பக்கத்து பேட்டை செயிண்ட் ஆண்டனி முதல் லேடி சிவசாமி வரை பாதுகாத்து வீட்டில் சேர்த்து விடுவதில் ஆரம்பித்து, ஷூட்டிங் நடப்பது வரை எதிரும் புதிரும் அக்னி நட்சத்திரங்கள். ‘அன்புள்ள ரஜினிகாந்த்‘ ரஜினி அங்கிள் எடுத்தது எங்க ஏரியா என்றால், ‘படிக்காதவ’னின் ‘ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி’யில் வருவது செயிண்ட் பீட்ஸ். அந்தப் பள்ளியில் படித்தவர்கள் ரஜினியை முதுகில் குத்தியவர்கள் (ரஜினியின் தம்பி வீட்டோடு மாப்பிள்ளை ஆக சென்று விடுவார்) என்று சண்டைக்கு சென்றோம்.

    இரவு வீட்டுக்குத் திரும்பும் இரயிலில் மீண்டும் ஏசி ரிப்பேர். இந்தியாவாக இருந்தால், ‘இது மட்டும் அமெரிக்காவாக இருந்தால்’ என்று புலம்பி தீர்த்திருக்கலாம். பாஸ்டனிலும் ஊழல் அதிகம். பாலம் கட்டுவதில் காசு பார்ப்பது போல் பில்லியன் டாலர் சாலை அமைப்பதில் சரிவர முடிக்காமல், கட்டி முடித்த சில வருடங்களுக்குள் மழைத் தண்ணீர் உள்புகுவதும், ஆங்காங்கே இடிந்து விழுவதுமாக லஞ்சத்தைக் காட்டிக் கொடுக்கிறது. விசாரணை கமிஷன் போட்டிருப்பதாக செய்தித்தாள் தலைப்பு. ‘நான் பொறுப்பில்லை’ என்று கவர்னருக்கு நிற்கும் இருவரும் பொதுவாக ஒருவரை நோக்கி குற்றஞ்சாட்டுகிறார்கள். அரசியல்வாதிகள் எங்கும் கூட்டுக் களவாணிகள் என்னும் அக்மார்க் நடுத்தர வர்க்க ஓட்டம் வருகிறது.

    காசு வாங்கியும் குளிர்சாதனத்தை பழுது பார்க்காத கருமி ஊர். தூக்கம் வரவில்லை. மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனை, என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசி பகை வளர்த்து விரோதிகளை வளர்ப்பதுதான் நான் இணையத்தில் மறுமொழியாக செய்து வருகிறேனோ என்று இருவுள் வாயில் பயணத்தில் யோசித்து வந்தேன். அதன் பிறகு, வலையின் மூலம் புதிய நண்பர்களை சந்தித்தோம். அவர்களுடன் தானே மோதி வருகிறோம். நிஜ உலகத்தில் இருக்கின்ற பிற தொடர்புகளுக்கு எதுவும் பாதகமில்லையே என்று தேற்றிக் கொண்டேன்.

    மாலன் முன்பொரு கட்டுரையில் என்னைக் குறித்து எழுதியிருந்தது போல், எந்த ஏடலுக்கும் ஒரு மாற்றுப் பார்வை வைத்துக் கொண்டு விவாதிக்கும் அன்பர் என்னும் பிம்பத்துக்குள் விழாமல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது.

    ‘தேவர் மகனை’ மீண்டும் பார்க்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்கு நடக்கும் உரையாடலில், ‘போயிடறேன்பா’ என்று தப்பிக்க பார்க்கும் கமலைப் பார்த்து சிவாஜி, ‘அய்யா, விதைச்சவன் என்னிக்காவது மரம் வளர்ந்து பயனை அனுபவிக்கிறானா? எங்க பாட்டன் வெதைச்சத நான் பழமா சாப்பிடறேன்… இங்கே நெல் விளைவிச்சு, உன்னை லண்டனில் படிக்க வச்சதுக்கு எதுக்காக?’ என்பார்.

    ரொம்ப யோசிக்காமல் தோன்றியதில் விக்கிப்பீடியா என்பது விதை. உடனடியாக பலன் கிடைக்காது. ஆனால், சிந்தாமல் சிதறாமல், பூத்துக் குலுங்கும் தோட்டம்.

    தகவல் உதவி: சீரியலுக்கு வருகிறார் மீனா :: மு.மணி:


    | |

    Israel vs Lebanon with Hezobollah, Syria, Iran et al

    இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு சோதனைச் சாவடி தேவைப்பட்டது. ஸ்பெயினில் நடந்த உரிமைப் போராட்டத்தில் ஜெர்மனியின் புஜபலத்தைக் காட்டி சோதித்து, இரண்டாம் உலகப் போருக்கு கால்கோளிட்டார். ஈரானுக்கும் தன்னுடைய இராணுவ மிடுக்கை பரிசோதிக்க ஆசை. ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் அப்பாவிகளைக் கொன்று தளவாடங்களை production environment-இல் விட்டுப் பார்த்திருக்கிறார்.

    ஈரானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எதுவும் ஜி-8 மாநாட்டில் எடுக்கக் கூடாது; என்ன வழி என்று யோசித்தது ஈரான். அடியாள் ஹெசபொல்லாவை அழைத்து கண்ணீர்ப் புகை குண்டுகள் போல் இஸ்ரேலிய படைவீரர்களைக் கைப்பிடித்தது.

    இஸ்ரேலில் இராணுவத்தில் சேருவது இந்தியாவைப் போல் விருப்பப் பாடம் அல்ல. தமிழ்நாட்டில் தமிழ் போல் கட்டாயப் பாடம். வயதுக்கு வந்தவுடன் வாக்களிக்கிறார்களோ, இல்லையோ, இராணுவத்தில் பணிபுரிய வேண்டும். ஏழை உயிர்தானே… போனால் போகிறது என்று பொதுஜனம் விட்டேத்தியாய் விடாமல், செய்தித்தாள் படித்து விட்டு எல்லையில் இருவர் இறப்பு என்று புறந்தள்ளாமல், ‘நம்மில் ஒருவர்’ என்று ஒவ்வொரு இஸ்ரேலியும், நமக்கும் இந்த மாதிரி நிலை வந்திருக்கலாமே (வரலாமே) என்று எண்ணும் சமூகம்.

    இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா குரல் கொடுக்கும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது. லெபனானும், பாலஸ்தீனமும் தேர்தல் நடத்தும் சுதந்திர நாடுகளாக இருப்பது தான் அமெரிக்காவையும் அதன் தலைவர் புஷ்ஷின் ‘எங்கெங்கு காணினும் சுதந்திர நாடடா’ கொள்கையையும் அசைத்துப் பார்க்கும் என்றும் நம்புகிறது. ஈராக் போருக்கு கூறப்படும் காரணங்கள் இந்த இரட்டை நிலையினால் உலக அரங்கில் தவிடு பொடியாகியுள்ளது.

    2000-த்தில் லெபனான் ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விலக்கியவுடன், ஜனநாயக முறையில் போராளிக் குழுவான ஹெசபொல்லா தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகும் லெபனான் இராணுவம், லெபனான் எல்லையருகே நிறுத்தப்பட முடியவில்லை. சிரியாவின் ஆதிக்கம் பன்மடங்கு அதிகரித்தது. லெபனானின் பிரதம மந்திரியே ஹெசபொல்லாவை ‘எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெசபோல்லா, தயவு செய்து தங்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிட வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்குமளவு கையாலாகதவராக தன்னை நிலைநிறுத்தி (ப்ரொஜெக்ட்) செய்து கொள்கிறார்.

    கோலன் ஹைட்ஸின் ஷாபா ஃபார்ம்ஸ் தொடர்பாக சிரியா இன்னும் கோபத்தில் இருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்குப் பின் தேர்தலில் வென்று அரியணை ஏறிய பிறகும், ஹமாஸின் நடவடிக்கைகளில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை. இரகசியமாக பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாய், இஸ்ரேலுக்குள் கன்னம் போடுவது, குண்டு வெடிப்பது என்று ஹமாசும்; பாலஸ்தீனத்துக்கு நியாயமாக சேரவேண்டிய அவர்களின் வரிப்பணத்தைக் கொடுக்காமல் அடாவடி செய்வது, அன்றாடம் வேலை செய்தவர்களை உள்ளே நுழைய விடாமல் தினக்கூலியில் கைவைப்பது என்று இஸ்ரேலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

    இது நவீன போர்களின் காலம். ஈராக் போரில் சதாம் தலைமை இல்லாவிட்டாலும், அந்த நாட்டு இராணுவமே பொதுமக்களை பாதுகாக்க நினைத்தாலும், கெரில்லா போரில், அமெரிக்காத் தோற்றுப் போய் பல ஆண்டுகள் கடந்து விட்டது. (ஈராக் – அமெரிக்க போர் குறித்து இந்த வருட ஆரம்பத்தில் எழுதிய ரிப்போர்ட்)

    கடவுளின் கட்சிக்கு கிட்டத்தட்ட 6,000 வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை அழிப்பது இஸ்ரேலுக்குப் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், தப்பித்துப் போவது ஒரு சிலரேயானாலும், ஈராக்கை போல் புதிய போராளிகளை நியமிப்பது, குடும்பத்தை இழந்தவர்களுக்கு தூபம் போட்டு தீவிரவாதி ஆக்குவது, கொரில்லா யுத்தத்தைத் முன்னெடுத்து செல்வது போன்றவற்றை சளைக்காமல் தொடர்வார்கள்.

  • ஈரானின் தற்போதைய பிரதம மந்திரி Mahmoud Ahmadinejad-இன் ‘நாஸி அடக்குமுறையே கிடையாது. யூதர்கள் பம்மாத்து செய்கிறார்கள்’ என்று பொதுவில் பேசி, சிரியாவின் மூலமாக ஹெசபொல்லாவைத் தூண்டி விட்டு – செய்யும் அரசியலையும்;
  • ஹமாஸ் வளர்வதால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அடங்கிப் போகும் சாத்தியக் கூற்றில், ரஷியாவை மீண்டும் ஆதிக்க சக்தியாக்கும் ப்யூடினின் திட்டத்தையும்;
  • மீசையில் மண் ஒட்டியதைத் தட்டிவிட இஸ்ரேல் தலைவர் Ehmud Olmert, ‘தானும் அடித்து ஆட வல்லவன்’ என்று நிரூபிக்கும் ஆண்மை பிரஸ்தாபிப்பையும்; சேர்த்துப் பார்க்காமல், ‘இஸ்ரேலின் தற்காப்பு/பயங்கரவாதம்’ என்று பொதுமையாக்க இயலாது.

    இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் தொலைதூரப் பார்வை இருக்கிறதா, வெற்றி பெறுமா என்பதைத்தான் – ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் இரானும், நிரந்த்ரப் பகை பாராட்டும் சிரியாவும், விஷயமே தெரியாமல் தாக்கிக் கொண்டிருக்கும் ஹிசபொல்லாவும் ஆராய வேண்டும். அமெரிக்காவைத் தாக்காத வரைக்கும் உலகம் எக்கேடு கெட்டுப் போனாலும் அமெரிக்காவுக்கு கவலையில்லை. இரானிய் பிரதமருக்கும் இதே எண்ணம்தான். ஈரானை நேரடியாக பிறர் தாக்க முடியுமா, எப்படி தற்காத்துக் கொள்ள முடியும் என்று சோதனைச்சாலையாக லெபனானைப் பயன்படுத்துகிறார்.

    ஹெசபொல்லா என்னும் அண்டை வீட்டார் சொற்படி நடக்கும் முரட்டு குழந்தையைக் கட்டுப் படுத்த முடியாததால், லெபனான் தன்னுடைய வீட்டையே பாழாக்கிக் கொண்டிருக்கிறது.

    இந்த விவகாரம் குறித்து கிலோபைட் குவித்துக் கொண்டே போகலாம். நான் ஒத்துப் போகும், லாஜிக் உடைய எண்ணப் பதிவுகளை படிக்க கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வது சாலச் சிறந்தது:

  • New conflicts in an old war in the Middle East – The Boston Globe
  • Guardian Unlimited | Special reports | On the brink of chaos
  • Guardian Unlimited | Special reports | The war gets wider and worse

    இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்குமான பிரச்சினை குறித்து கீழ்க்கண்ட பதிவுகள் படிக்க கிடைத்தது:

    1. தமிழ் சசி

    2. ஸ்ரீகாந்த் மீனாக்ஷி

    3. முத்து (தமிழினி)

    4. வஜ்ரா ஷங்கர்

    இஸ்ரேலும் அதன் சுற்றுப்புறமும் தொடர்பான என்னுடைய முந்தைய பதிவுகள்:
    1. தி சிரியன் ப்ரைட் (திசைகள்)

    2. யாஸர் அராஃபத் (தமிழோவியம்)

    3. சண்டக்கோழி அமெரிக்கா :: Why We Fight (தமிழோவியம்)

    தொடர்பான தகவல்கள்:

  • Guardian Unlimited | Special reports | What the papers said
  • Fighting on Two Fronts
  • Welcome to World War Three — or as the neocons call it, World War Four
  • Dar Al Hayat – When is Terrorism Not Considered as Terrorism (Ayoon Wa Azan) :: (லெபனான் சார்பு கருத்தாக்கம்)
  • Israel’s Invasion, Syria’s WarNew York Times
  • மத்திய கிழக்குப் பகுதியை நன்கு அறிந்த ஏழு வல்லுநர்களின் எண்ணக்கோர்வை
  • Watching, blogging … bombing

    கார்டியன் நாளிதழ் :: Interactive guides
    இஸ்ரேலின் சரித்திரம் | ஜூன் 2006: காஸா நுழைவு | அஹ்மத் யாஸின் | ஜெனின் போர் | இஸ்ரேலும் லெபனானும் | ஹெசபொல்லா – லெபனான் : தற்கால நிகழ்வுகள்

    சமீபத்திய நிகழ்வுகள் – வரிசைப்படி
    1999 | 2000 | 2001 (1) | 2001 (2) | 2002 (1) | 2002 (2) | 2002 (3) | 2002 (4), 2003 | 2004 | 2005


    | |

  • Sivaji Statue Opening Vizha

    சிவாஜி சிலைத் திறப்பு சன் தொலைக்காட்சியில் தொகுத்திருந்தார்கள். கவர்ந்த சில தருணங்கள்.

  • பங்குப் பெற்றோரின் பெரும்பாலானவர்களின் ஆடை வெள்ளை நிற சட்டை, வேட்டி. எங்கெங்கு காணினும் வெளுப்புதான்.
  • எல்லோரும் சோகமே உருவாய் குடிமுழுகிப் போனது போல் இருந்தார்கள். சாதனையாளரை கௌரவிக்கும் விழாவில் சந்தோஷமாகப் பட்டுப் புடைவையில் இருந்தவர் லதா ரஜினிகாந்த்.
  • சிவாஜியின் மனைவி கமலா மேடையேறாததற்கு பிரபு காரணம் சொன்னார். அண்ணன் இராம்குமார் முதல் வரிசையிலோ, அரங்கில் பேசாததற்கோ என்ன காரணம் என்று விளங்கவில்லை.
  • ‘சந்திரமுகி’யில் ஜோதிகா பேய் போல் கண்களை உருட்டுவதற்கு சிவாஜியின் நடிப்பு உதவியிருக்கிறது. பாரதியாக சிவாஜி கனவு காணும் ‘கை கொடுத்த தெய்வம்‘ படத்தின் ‘சிந்து நதியின் மிசை’ கை கொடுத்ததாக பி. வாசு சொல்லியிருக்கிறார். ஓவர் ஆக்சனுக்கு வஞ்சப் புகழ்ச்சி அணி.
  • பேச்சுக்களில் சாதாரணமாக கமல் தான் நிமிர்ந்து உட்கார வைப்பார். இன்று அது கேயெஸ் ரவிக்குமாருக்கு மட்டுமே சொந்தம். வெளிப்படையான எதார்த்தமான் பேச்சு. ‘படையப்பா’வில் ரிகர்சல் எடுக்கும்போது உரத்த உச்சரிப்பு அதிகமாகப் பட்டிருக்கிறது. நேரில் சொல்லவும் பயமாய் இருந்திருக்கிறது. டேக் எடுக்கப் போவதற்கு முன்

    ‘அண்ணே… ஒரு வாட்டி என் காதோடு வசனத்தை மட்டும் சொல்லிடுங்களேன்!’

    சொல்லி முடித்தவுடன்…

    ‘இதை விட அதிகமாய் ஒரு இன்ச் கூட வேணாங்க’

    என்று சொல்லி விட்டு, இடத்தை விட்டு ஓடி, கேமிராவிற்கு அருகில் சென்று ‘ஸ்டார்ட்’ சொல்லி மறைகிறார்.

    சிம்மக்குரலோனை இயக்குவது எவ்வளவு நகாசான வேலை என்பதையும், நடிப்பைக் கறக்கும் இயக்குநரின் சிரமத்தையும் அலாதியாய் சொன்னார்.

  • சிவாஜியிடம் இருந்து நேரந்தவறாமையையும், ‘இயக்குநர் சொல்வதை இம்மியளவும் மாறாமல் அப்படியே நடப்பதையும்’ கற்றுக் கொண்டதாக விஜய் பகிர்ந்தார்.
  • சிவாஜியின் வரலாற்றில் துவக்கமும் (பராசக்தி சக்சஸ்) கலைஞரால் தான்; சுபம் போட்டு முடிப்பதும் (மெரீனா சிலை) கலைஞரால் தான் என்றார் பாக்கியராஜ்.
  • தமிழன் ஒவ்வொருவரிடமும் நால்வரின், நாலு தமிழர்கள் மட்டுமே தாக்கமாக இருக்கும் என்றார் வைரமுத்து:

    1. கருணாநிதி;
    2. எம். ஜி. ஆர்.;
    3. சிவாஜி &
    4. கண்ணதாசன்.

    தனக்குப் பொருத்தமானதை ‘என் தாழ்மையான கருத்து’ என்பது புத்திசாலியின் எழுத்து. தனக்கு உவந்ததை ‘உலகத்தின் கருத்து’ என்று genralize செய்வது புத்திசாலியின் மேடைப் பேச்சு.

  • கலைஞரைக் குறித்த விழாவா, சிவஜி சிலைத் திறப்புக்கான விழாவா என்று பேசிய ஒவ்வொருவரும் ஐயப்பட வைத்தாலும், விஜயகாந்த் சிவாஜியைத் தவிர்த்து கருணாநிதி துதியோடுப் பேச்சை முடித்துக் கொண்டார்.
  • கருத்துக் கேட்ட பலரும் சிவாஜியின் பிடித்த படப்பட்டியல் கொடுத்தார்கள். இது எனக்கு டக்கென்று வந்த படங்களின் பெயர்கள்:

    * பலே பாண்டியா,
    * சபாஷ் மீனா,
    * தேவர் மகன்,
    * திருமலை ரகசியம்,
    * தூக்கு தூக்கி,
    * உத்தம புத்திரன்,
    * திருவிளையாடல்,
    * பராசக்தி,
    * திரும்பிப் பார்,
    * கப்பலோட்டிய தமிழன்,
    * விடுதலை

  • ரஜினியின் பேச்சு சிகரம் வைத்தாற் போல் சிறப்பாக வந்தது. எழுதி வைத்துக் கொண்டு படிக்காமல், குட்டிக் கதை, சுவாரசியமான மேற்கோள்கள் என்று இயல்பாய், ஆளுமையோடு வெளிவந்தது. மேடையிலேயே விஜயகாந்த்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி, தன்னுடைய அரசியல் திறமையையும் ஓரளவு காட்டிக் கொண்டார். ‘அரசியல் ஒரு குதிரை; சினிமா ஒரு குதிரை’ என்று ஆரம்பித்து குதிரைப் பந்தயமாக வருணித்து அலுக்காதமாதிரி பேசினார்.
  • பாண்டிச்சேரியில் பெப்ரவரி 12 சிவாஜியின் சிலையைத் திறந்திருக்கிறார்கள். சிவாஜி குடும்பத்தில் ஒருவரான கமல், நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணும் டாக்டர் கலைஞர், எல்லாராலும் பங்கேற்க இயலவில்லை.

    | |

  • Tamil Nadu Budget 2006-07

    Webulagam : Tamil Nadu Budget 2006-07 salient features!

    தமிழக அரசு நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்
    2006-07 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் தமிழக சட்டப் பேரவையில் இன்று சமர்ப்பித்தார்.

    “தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
    கரும்பொருள் யாதொன்று மில்”

    தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற பொருளுடைய குறளைக் கூறி நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு :

    மதிப்பு கூட்டு வரி :

    · 2007 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மதிப்பு கூட்டு வரி நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் குறைவாக விற்பனை உள்ள சிறு வணிக நிறுவனங்களுக்கு விலக்கு.

    வரி விலக்குகள் :

    · பருப்பு, பயறு வகைகள், சமையல் எண்ணெய் மீதான வரி ரத்து. வருவாய் இழப்பு ரூ.110 கோடி.

    · தேயிலை மீதான விற்பனை வரி 50 விழுக்காடு குறைப்பு.

    · சிட்டா நூலிற்கு முழு வரி விலக்கு.

    · எரி சாம்பலுக்கு விற்பனை வரி விலக்கு.

    · தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட உரிமம் அளிக்கப்பட்ட மென்பொருட்களுக்கு விற்பனை வரி விலக்கு.

    · சாம்பிராணிக்கு மீண்டும் விற்பனை வரி விலக்கு.

    · அத்தாட்சி செய்யப்படாத அடகு, அடமான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை செலுத்துவதில் இருந்து விலக்கு.

    ஒட்டுமொத்த நிதிநிலை :

    · 2006-07 – வருவாய் ரூ.38,731 கோடி.
    · 2006-07 – செலவு ரூ.39,860 கோடி.
    · வருவாய் பற்றாக்குறை ரூ.1,129 கோடி.
    · நடப்பு நிதியாண்டின் கடன்களும், முன் பணங்களும் உள்ளிட்ட மூலதனச் செலவு ரூ.6,102 கோடி.
    · ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.7,231 கோடி.
    · 2005-06 ஆண்டு திருத்திய மதிப்பீடுகளின் படி ரூ.56,094 கோடி அளவிற்கு கடன் உள்ளது. இதற்கு ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய வட்டி ரூ.446 கோடி.

    விவசாயிகள் நலன் :
    · கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெற்ற கடன்கள் ரூ.6,866 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்ததால் நபார்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.1,668 கோடியில் இந்த நிதியாண்டில் ரூ.438 கோடி செலுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · கூட்டுறவு வங்கிகளுக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்திற்காக இந்த ஆண்டில் மட்டும் ரூ.1,435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · நடப்பு குறுவை சாகுபடி காலத்தில் இருந்து கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு தற்பொழுதுள்ள 9 விழுக்காடு வட்டி விகிதம் 7 விழுக்காடாக குறைக்கப்படும். இதனால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்.

    · தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த உணவு உற்பத்தி 95 லட்சம் மெட்ரிக் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2005-06 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் தொடர்புடைய இனங்களுக்கு ரூ.854.41 கோடியாக இருந்த மொத்த ஒதுக்கீடு 2006-07 நிதியாண்டில் ரூ.977.98 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    · விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இடைத்தரகர் இன்றி குறைந்த விலையில் நுகர்வோர் காய்கறிகளை பெறவும் உருவாக்கப்பட்ட 103 உழவர் சந்தைகளும் மீண்டும் திறம்பட செயல்படும்.

    · விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு விரயம் இன்றியும், உரிய விலை கிடைக்கும் வகையிலும் உலகத் தரம் வாய்ந்த சேகரிப்பு மையங்கள், குளிர்விக்கும் சாதனங்கள், தரம் பிரிப்பு, பதப்படுத்துதல் மற்றும் மின்னணு ஏல முறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய 3 வணிக மையங்கள் (கூநசஅiயேட ஆயசமநவள) சென்னை, கோவை, மதுரை ஆகிய பெருநகரங்களில் அமைக்கப்படும்.

    · கோவை மாட்டம் பல்லடத்தில் வெங்காயத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்திற்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சைப் பழங்களுக்கும் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன் கூடிய விற்பனை கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

    · தரிசு நிலங்களில் முந்திரி சாகுபடியை ஊக்குவித்து ஏற்றுமதியை அதிகப்படுத்த கடலூர், தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய முந்திரி விளை நில ஏற்றுமதி மண்டலத்தின் பணிகள், முந்திரி விவசாயிகளுக்கு மேலும் பயன்தரக்கூடிய வகையில் செம்மைப் படுத்தப்படும்.

    · உயிரி எரிபொருள் (எத்தனால்) பெட்ரோலிற்கு மாற்றாகவும், பயோ டீசல், டீசலிற்கு மாற்றாகவும் பயன்படுகிறது. முதல் கட்டமாக பெட்ரோலுடன் எத்தனால் உயிரி எரிபொருளை 5 விழுக்காடு கட்டாயமாகக் கலந்து பயன்படுத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, அத்தனை சக்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்க்கரைச் சோளம், சர்க்கரைக் கிழங்கு மூலமும் எத்தனால் தயாரிக்கலாம் என்பதனால் இவைகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும்.

    · ஜெட்ரோப்பா எனப்படும் காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயோ டீசலாக, டீசலிற்கு மாற்றாக பயன்படும் என்பதால் தரிசு நிலங்களில் காட்டாமணக்கு விளைவிக்க ஊக்குவிக்கப்படும்.

    · அரசு புறம்பபோக்கு தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேம்படுத்தி நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் வழங்கப்படும்.

    · அதே நேரத்தில் மொத்தமாக தரிசு நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயக் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்நிலங்களை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றித் தரவேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டால், அரசு செலவில் மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றி அவர்களிடமே திருப்பி அளிக்கப்படும்.

    · விவசாய தொழிலாளர் நல வாரியம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு விவசாயத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவுள்ள சலுகைகள் (தனி செய்தியாக அளிக்கப்பட்டுள்ளது).

    கால்நடை வளர்ப்பு :
    · கோழி மற்றும் முட்டை உற்பத்தியில் தமிழகம் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வகையில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பறவைகளினால் ஏற்படும் நோய் குறித்த ஆய்வுக் கூடம் அமைக்கப்படுவதுடன், நாகப்பட்டினம், கரூர், விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கால்நடை நோய்கள் குறித்த நுண்ணறிவுப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

    பாசன மேம்பாடு

    பொது விநியோகத் திட்டம் :

    · பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் 1950 கோடி உணவு மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை கடத்தி கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும்.

    உள்துறை :

    · காவலர்கள் குறை தீர்க்க 3வது காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.

    · காவல்துறையை நவீனமயமாக்க ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.23 கோடி மதிப்பீட்டில் சிறப்வு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வாங்கப்படும்.

    · வாகன ஓட்டிகள் குடி போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், ஓட்டுநர் உரிமத்தையே ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நீதித்துறை :
    · உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கான தனியாக ஒரு கட்டடம் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கட்டப்படும்.

    · மண முறிவு வழக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்க, குடும்ப நல நீதிமன்றங்கள் ஒவ்வொன்றிலும் இரு முழு நேர ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர்.

    · சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்குத் தேவையான 350 பணியிடங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படும்.

    · நீதி நிர்வாகத்திற்காக இந்த நிதியாண்டில் ரூ.212.9 கோடி ஒதுக்கப்படும்.

    பள்ளிக் கல்வி :
    · அனைத்துப் பள்ளிகளிலும் இந்த ஆண்டிலேயே முதலாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக கற்பிப்பது தொடங்கும். இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக 10 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

    · அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய சுமார் 45,987 ஆசிரியர்களுக்கு 01.06.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கப்படும். இனி வரும் காலங்களிலும் ஆசிரியர் காலியிடப் பணியிடங்கள் காலமுறை ஊதிய அடிப்படையிலேயே நிரப்பப்படும்.

    · தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டமும், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.

    · 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்துச் செல்லும் போதே மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள், வாழ்விடச் சான்றிதழ்கள், குடும்ப வருமானச் சான்றிதழ்கள் ஆகியன வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

    · பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.5,438.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · மத்திய அரசு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள அனைவருக்கும் கல்வித் திட்டம் ரூ.723.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதற்காக மாநில அரசின் பங்காக ரூ.180.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    உயர் கல்வி :
    · பொது நுழைவுத் தேர்வை 2007-08 ஆம் ஆண்டு முதல் அகற்றிட கல்வியாளர்கள் கொண்ட குழு.

    · அரசு பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சுயநிதி அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் பாடப் பிரிவுகளையும் பொதுவகை கட்டணம் செலுத்தும் பாடப் பிரிவுகளாக மாற்றுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    · அண்ணா பல்கலைக் கழகத்தைப் போன்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் திருச்சியிலும், கோவையிலும் நிறுவப்படும்.

    · பின் தங்கிய பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காக கோவை மாவட்டம் வால்பாறையிலும், சேலம் மாவட்டம் மேட்டூரிலும் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

    · மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள கல்வியியல் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

    · ஊரகப் பகுதிகளில் பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், உடல் இயக்க மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

    · சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திராவிட இயக்க ஆய்வு மையம் நிறுவப்படும்.

    மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் :
    · வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிலும், வரும் ஆண்டிலும் 9,000 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இதற்காக ரு.13.13 கோடி ஒதுக்கீடு.

    · 235 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவச் சாதனங்களுக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்படும். 14 மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு 198 அவசர ஊர்திகள் வழங்கப்படும். 32 அரசு மருத்துவமனைகள் 24 மணி நேர அவசர மற்றும் சிசு கவனிப்பு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

    · தமிழகத்தில் உள்ள 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் செமி ஆட்டோ அனலைசர் கருவிகள் ரூ.17 கோடி செலவில் வழங்கப்படும்.

    · திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, வேலூர் அரசு மருத்துவமனைகளில் ரூ.23.95 கோடி செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கப்படும்.

    · சென்னை பொது மருத்துவமனையில் ரூ.5.5 கோடி செலவில் அதி நவீன 64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேனர் அமைக்கப்படும்.

    · மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதற்கு இணங்க விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்.

    தொழில் வளர்ச்சி

    தகவல் தொழில்நுட்பம் :
    · சென்னை தரமணியில் 2வது டைடல் பூங்கா அமைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    · தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்வது குறித்து அரசிற்கு பரிந்துரைகள் அளிக்க இத்துறையின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநிலத் தகவல் தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும்.

    · முதற்கட்டமாக 30,000 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்க இந்த நிதியாண்டில் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · சிறு தொழில்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாடு :
    · சாலை பராமரிப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.804 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்களுக்கான மூலதன ஒதுக்கீடுகளுக்கென ரூ.2,461 கோடி என்ற உயர் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · மதுரை மாநகரப் பகுதியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மதுரை ஆரச்சாலையின் 2வது கட்டப் பணிகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    · திருப்பூர் நகரத்தின் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.70 கோடி மதிப்பீட்டில் அந்நகரத்தின் வட்டச்சாலை மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்படும்.

    மின் சக்தி :
    · இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,011 மெகா வாட்டாகும். இந்த ஆண்டில் 749 மெகா வாட் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தித் திறன் நிறுவப்பட்டு மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 10,760 மெகா வாட்டாக உயரும்.

    · ஊரகப் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதை உறதி செய்ய தமிழ்நாடு மின் வாரியம் இந்த நிதியாண்டில் ரூ.195.54 கோடி மதிப்பீட்டில் மின் பகிர்மான திட்டங்களை மேற்கொள்ளும்.

    · ஊரகப் பகுதிகளில் 25 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 2,706 புதிய மின் பகிர்வு மின் அழுத்தமாற்றிகள் நிறுவப்படும். 24 துணை மின் நிலையங்களின் மின் அழுத்தமாற்றிகளின் திறன் அதிகரிக்கப்படும்.

    · சுயநிதி திட்டத்தின் கீழ் சிறப்புத் தொகை கட்டி மின் இணைப்பு பெற்ற 2,40,000 விவசாய மின் இணைப்புகளுக்கும் இனி இலவச மின்சாரம் வழங்கப்படும்.

    போக்குவரத்து :

    · நடப்பாண்டில் 1,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    · 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    · திருப்பெரும்புதூரில் ராஜீவ் காந்தி விமானவியல் உயர் கல்வி மற்றும் விமான ஓட்டிகள் பயிற்சிக் கழகம் அமைக்கப்படும்.

    சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டம் | குடி நீர் வழங்கல்

    சுனாமி சீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் :
    · சுனாமி சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கென இந்த ஆண்டில் மேலும் ரூ.100 கோடி செலவிடப்படும்.

    முதியோர் மற்றும் ஆதரவற்றோர் நலன் :
    · முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு மாதற்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.200ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.407.06 கோடி ஒதுக்கீடு.

    · கடும் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும்.

    · மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 நிலைகளைப் பெறக்கூடிய கண் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குவதுடன் அவர்களுடைய உயர் கல்விச் செலவையும் அரசே ஏற்கும்.

    நெசவாளர் நலன் | மீனவர் நலன் | ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன் | இலங்கைத் தமிழர்