Category Archives: Uncategorized

Talkative & Unspeakable

பாடுபொருளும் பேசாப்பொருளும்

நண்பர்களுடன் தேநீர் விருந்து; வலைவாசிகளுடன் மறுமொழி அரட்டை; உறவினர்களுடன் மணமண்டபத்தில் வட்ட்மேஜை; அலுவலில் மதிய உணவு விவாதம்.

உரையாடுவதற்கு ஏற்ற தலைப்புகள்:

  1. வானிலை
  2. போக்குவரத்து
  3. தொழில் நுட்பம்
  4. அரசியல் கலக்காத மனமகிழ் சினிமா
  5. விளையாட்டு
  6. தகவல் செய்தி
  7. பொழுதுபோக்கு கேளிக்கை
  8. மேலோட்டமான சொந்தக்கதை விசாரிப்பு
  9. வீடு/கார்/கணினி ஆலோசனை
  10. சமையற்குறிப்பு

நெருங்கியவர்கள் இல்லாத பொதுவில், பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன், எந்த எழுவாய்களை எழாமல் தவிர்க்கிறேன் என்று யோசித்த பட்டியல்:

  1. காமம் – Trailing Technology: Sex Work in a Traditional City (வழி)
  2. மாதவிடாய் – தோழி.காம் – கனிமொழி :: ஆணியப் பழமைவாதிகளுக்குக் கூடுதல் ஆயுதம்: மாதவிடாய் – வேண்டும் இன்னொரு ஆலயப் பிரவேசம்
  3. பொருளாதாரம் – கடன், சம்பளம், பங்கு வருவாய், முதலீட்டு சாதனம்
  4. சொந்தக் கதை – மனங்குன்றிய தருணம், வெட்கி தலைகுனிந்தவை, நாணும் நிகழ்வு,
  5. சுடுசொல்
  6. எதிர்மறை விமர்சனம் – தனிப்பட்ட நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவது, பாதிப்பினால் உருவான கருத்துக்களை விவாதிப்பது, சர்ச்சைக்குரியவர்களை சர்ச்சைக்குள்ளாமல் விட்டுத்தள்ளுவது.
  7. மருத்துவ நோய் – சுகவீனம்
  8. குறை சுட்டல் – குற்றம் பார்க்கின் உறவுகள் இல்லை ;-))
  9. இதற்கு மேல் சொல்ல கூச்சமாக இருக்கிறது. பேசாப்பொருள் எப்படி எழுத வரும்?

| |

Thenkoodu & Tamiloviam : Contest Entry – Quick Takes

தேன்கூடு-தமிழோவியம் நடத்தும் ‘உறவுகள்‘ போட்டியில் பங்குபெற எண்ணம். என்னுடைய இடுகையை போதிய அளவு படிக்கவைக்க வேண்டும். மற்ற பங்காளிகளை விமர்சிப்பதன் மூலம் ‘நீ என்ன கிழிச்சுட்டே’ என்று படிக்க வைக்கலாம். எதிரிகள் குறைவதாகவும் வருத்தம். அதற்காக சிறு விமர்சனங்களும், மதிப்பெண்களும்

*நவீன விக்ரமாதித்தனும் வைரஸ் வேதாளமும்! (அல்லது) மானங்கெட்ட உறவுகள்!!!! – luckylook

(சிறுகதை) மதிப்பெண் 1 / 4

சுவாரசியமான ஆரம்பம். குறிப்பால் எவரையாவது சொல்கிறாரா என்று யோசனை வருகிறது. நேற்று சொன்ன ‘அழகாய் இ.ப.இ.’ திரைப்படம் போல் இரண்டாவது பாதி படு சோகை. புத்திசாலித்தனமான முடிவு இருக்கும் என்று எதிர்பார்ப்பில் dejavu.

*பொன்னியின் செல்லம்மா …! – கோவி.கண்ணன்

(சிறுகதை) மதிப்பெண் 2.5 / 4

என்னுடைய வாக்கு நிச்சயம் உண்டு. சீரான, பாதை விலகாத நடை. ஒன்றக்கூடிய சம்பவங்கள். மிதமான உரையாடல். முடிவில் பளிச். அதீத உணர்ச்சி சித்தரிப்புகளைத் தவிர்த்தல். நன்றாக வந்திருக்கிறது.

*உறவுகள் – நிர்மல்

(சிறுகதை) மதிப்பெண் 0.5 / 4

பள்ளியில் முயற்சி செய்திருப்பதற்காக grace mark போடுவார்கள். மோசமான தமிழ்ப்படம் பார்த்த நிறைவு.

*சுகம் – nirmal

(புதுக்கவிதை) மதிப்பெண் 1.5 / 4

கவிதை படிக்க எளிது. சிறுகதையைப் போல் விபரீத உறவை சுட்டுகிறதா என்பது வாசகரின் எட்டுதலுக்கு உட்பட்டது.

*உறவுகள் – SK

(வசன கவிதை) மதிப்பெண் 1 / 4

பொங்கல் வாழ்த்துப்பா மாதிரி வந்திருக்கிறது. சொற்பொழிவுத் தாக்கம். சூடான தேநீர் இல்லாவிட்டால், வார்த்தை சிலம்பத்தை பாதியிலேயே கடந்து செல்லும் அபாயம் உண்டு. எழுத்துப்பிழைகள் உண்டு. (நேரேயே?)

வன்மம் வைத்து எனக்கு கத்தியை தீட்டுங்கள் தோழர்களே :-D)

மறுப்புக்கூறு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து இடுகைகளையும் விமர்சிக்க இயலாமல் போகலாம். காரணம் #1: நேரமின்மை; #2: அயர்ச்சி; #3: எதிர் விமர்சனங்களை சந்திக்க திராணியின்மை; #4: சமர்த்துப் போதாமை


| |

Celebrity == Tamil Bloggers

இளவஞ்சி :: எம்மூஞ்சியும் ஒலக மொகரைகளும்… என்று ஆரம்பித்தார். அவர் வழியே சென்று MyHeritage face recognition – Find the Celebrity in You என்று மேய்ந்ததில்…

  1. சிகையலங்காரம் ஒத்திருப்பதால், முகத்திலும் இசைவிருப்பதாக கருதியிருக்கலாம். நேற்றும் இடம் பெற்றவர்.
  2. பத்து தடவை நான்கரையைத் தொட்டிருக்கும் இவருக்கு வயது தெரியாத பிரச்சினை கிடையாது.
  3. ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்று எஸ்.பி.பி.யை பாட வைத்து விடுவாரோ!
  4. டிவி முதற்கொண்டு எல்லாப் பக்கமும் இருப்பவர். ஆனால், இப்பொழுது காண்பது அரிதாகி விட்டது.
  5. நேற்றும் இடம் பெற்றவர். விசாலமான நெற்றி ஒற்றுமை இருக்கிறது. ஸ்பேசியும் அமெரிக்கா வாசம்தான்.
  6. சுஜாதாவின் குட்டி; அல்லி அர்ஜுனா, நெத்தியடி, சாமி, எல்லாம் சென்னை தியேட்டரில் ரசித்தவர், இப்பொழுது மேற்கத்திய விமர்சனமாக வீசிக் கொண்டிருக்கிறார்.
  7. பசிக்குதே… ரொம்ப நாளா நளபாகம் செய்யாமல் தவிக்க விட்டிருக்கிறாரே
  8. காந்தியை ஓரங்கட்டியவர்
  9. கழுகு புகைப்படத்தை ஜூவி போடுவதில்லை. மலை போன்ற வலையில் இருந்து சுவாரசியங்களைக் கொடுக்கும் இவரோ சமீபத்தில்தான் புகைப்படம் மாற்றினார்.
  10. பொன்ஸ் பதிவிலும் இடம் பிடிக்காதவர்.
  11. ஆயிரங்கால் மண்டபத்தில் கிளி ஜோசியம் பார்த்து ரூபிக் க்யூப் விடையை புகைப்படத்தில் காண்பித்தாலும் என்னால் முடிக்க முடியவில்லை.
  12. நேற்றும் இடம் பெற்றவர். 33%-க்கு பதில் 16.67%.

| |

WordPress Top Blogs of the Day

தினமணி, பிபிசி போன்ற சுட்ட செய்திக் கட்டுரைகளை சேமிப்பதற்காக வோர்ட்ப்ரெஸ்.காம் தளத்திற்குள் நுழைந்தவுடன், அன்றைக்கு எந்த வலைப்பதிவு மிக அதிக வருகையாளர்களைப் பெற்றது, எந்தப் பதிவு ஆர்வமாகப் படிக்கப்பட்டது என்று தலை ஐந்து பட்டியலிடுவார்கள். கடந்த சில நாள்களாக எப்பொழுதும் தமிழ் மட்டுமே காணக் கிடைக்கிறது!

Top WordPress.com blogs today

  1. அங்கிங்கெனாதபடி
  2. ஒரு பார்வை
  3. demigod
  4. கவிதைச் சாலை

Fastest Growing WordPress.com blogs

  1. demigod
  2. கவிதைச் சாலை
  3. அங்கிங்கெனாதபடி
  4. ஒரு பார்வை
  5. கோம்பை

வாழ்த்துகள்.

Movies: Mini Reviews, Ultra small reflections

சினிமாவாய் பார்க்கிறேன் விமர்சனம்தான் வரவில்லை

  1. லொலிடா (Lolita): சின்ன வயதில் மேட்டர் எங்கே இருக்கும் என்பதற்காக நோடிய படம். அமிதாப் நடிக்கப் போவதாக சன்னாசி பயமுறுத்த மீண்டும் பார்ப்பதற்காக எடுத்தேன். நபகோவ் கதையை (நான்) படித்திருந்தால், படத்தை இன்னும் ரசிக்க முடிந்திருக்கலாம்.

    A normal man, given a group photograph of school girls and asked to point out the loveliest one, will not necessarily choose the nymphet among them.

  2. இகிரு: Ikiru குறித்து மிக அழகாக பலர் எழுதி இருக்கிறார்கள். இறுதிக் காட்சி 12 Angry Men போல் வளர்ந்தது. Autumn Spring போல் பல எண்ணங்களை தளிரவிட்ட படம்.

  3. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது: நிலவுவெளி சிவராமன் கருத்துடன் ஒத்துப் போகிறேன். பினாத்தல்கள்: சினிமா ரசிகர்களில் ஒரு கோயிஞ்சாமி போல் முரளியின் காபிரைட் சொல்லாத காதலை இரண்டாம் பாதில் உபயோகப்படுத்தி சொதப்பாமல் இருந்திருந்தால் மிக நல்ல நகைச்சுவைப்படமாக வந்திருக்க வேண்டியது என்று சபிக்குமளவு ஒழுங்காக சென்ற படத்தை பிற்பகுதியில் படுத்தி எடுத்தார்கள். கொஞ்சம் Addicted to Love வாசம். ஆனால், அது ரம்மியமான ரகளை.
  4. The Life and Death of Peter Sellers (2004): விவரணப் படம் எடுத்தால் கூட மனிதர்களின் குணாதிசயங்களை இலகுவாக திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். வாழ்க்கையில் பெரிய நிலையை அடைய எடுக்கும் முயற்சிகள்; பெற்றோரின் வளர்ப்பு விதங்கள்; இல்லற எதிர்பார்ப்பு… ஸ்டான்லி க்யூப்ரிக் இப்படிப்பட்ட ஆளா?

    Peter Sellers: Can’t I have your support?
    Anne Sellers: You’ve always had my support. It’s my patience


| |

Tamil Bloggers’ Faces – Identify

உன் கண்
உன்னை ஏமாற்றினால்…

நம்மிடையே முகத்தைக் காட்டி உலாவும் வலைப்பதிவர்களில் சிலரின் கண்கள். தன்னை அறிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்.

  1. இசைஞானி
  2. தேவா பிரியர்
  3. கல்யாணமாம் கல்யாணம்
  4. அக்கம் பக்கம் பார்க்காதீங்க… பின்னாடி பார்த்தாலே போதும்
  5. கவிஞர்களுக்கு பிடித்த பாடுபொருள்
  6. பதிப்பகத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்
  7. உம் கொட்டுங்க… ஒரு U போடுங்க…
  8. அறிமுகத்தில் ‘வலைப்பகுதிகளை உருவாக்கி, “எழுதித்தள்ளாமல்”, யோசித்து எழுதுபவன்’ என்றவர்.
  9. மண்ணின் மணம் மாறி மினசோட்டா வந்தாலும் சொந்த ஊரை மறவாதவர்.
  10. ஒரு க்ரூப்பாகத்தான் துவக்கியிருக்காங்க
  11. தந்தை என்று செல்லமாய் சதாய்க்கப்படுபவர்
  12. அவர் தந்தை என்றால், இவர் படைக்கும் கடவுள்
  13. டவுட் வந்தால் இவரிடம் தெளியலாம்
  14. அண்மையில் இவர் படித்த புத்தகங்கள் :
    1. நட்புக்காலம் – அறிவுமதி
    2. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ரூ.10000 ரூ.100000000000 ஆன கதை – என்.சொக்கன்
    3. பாலகாண்டம் – நா.முத்துக்குமார்
    4. தெருப்புழுதி – எம்.ஏ.இளஞ்செல்வன்
  15. இப்பொழுதெல்லாம் இவரைப் பார்த்தால் ‘யானை வரும் பின்னே; மணியோசை…’ புதுமொழி தோன்றுகிறது.
  16. குஷ்பு படம் கிடைக்குங்களா?
  17. குசும்பு செய்தாலும் மனதில் விகல்பம் இல்லாத நல்லவர்; வல்லவர்.


| |

Colorful Rices: Red (hot) like this Lady?

Dinamani.com – TamilNadu Page

பெண் அதிகாரியின் அழகை வர்ணித்த அமைச்சரின் “அட்வைஸ்’ தேவையில்லை: ஜெ

சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறிய ஒவ்வொரு தகவலுக்கும் அமைச்சர்கள் குறுக்கீடு செய்து பதில் அளித்தனர். இதற்கு பேரவைத் தலைவரைப் பார்த்து அமைச்சர்கள் அதிகம் குறுக்கீடு செய்வதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அப்போது பேசிய உணவுத் துறை அமைச்சர் வேலு, இதே சட்டப் பேரவையில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் குறுக்கீடு செய்யாத அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதை இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதா பின்பற்றலாமே என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, “பெண் அதிகாரியை வர்ணித்த அமைச்சரின் அட்வைஸ் எனக்குத் தேவையில்லை’ என்றார்.

அமைச்சர் அன்பழகன்:

ரேஷன் அரிசி கருப்பு நிறத்திலும் சில சிவப்பு நிறத்திலும் உள்ளதாகக் கூறப்பட்டதற்கு அமைச்சர், சில மாநிலங்களிலிருந்து வரும் அரிசி அவரைப் போல கருப்பாக இருக்கிறது என்றும், சில மாநிலத்திலிருந்து வரும் அரிசி பெண் அதிகாரியைப்போல சிவப்பாக இருக்கிறது என்றும் உவமையாகச் சொன்னாரே அன்றி அது வர்ணனை அல்ல. வர்ணிக்கும் வயதில் அவர் இல்லை.

Find the Faces

கண்கள் இங்கே
முகம் எங்கே?

புகழ்பெற்றவர்களின் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்

  1. இந்த பதிவிற்கு விக்னேஷுக்குத்தான் (தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » கண்ணோடு காண்பது யார்??) நன்றியை நவில வேண்டும்

  2. ஆரம்பத்திலேயே சோதனையா?

  3. இவருக்கெல்லாம் எந்த துப்புமே வேண்டாமே…

  4. அக்மார்க் குமுதம் போட்டிகள் இப்படித்தான் இருக்கும்

  5. பழைய நினைப்புதான் பேராண்டி

  6. கண்களை எங்கே பார்க்கிறாங்க

  7. திருப்பதியில் சிலை இருக்கிறதாமே?

  8. நேதாஜியிடம் தோற்றவர்

  9. ஒன்றாவது கஷ்டமாக இருக்க வேண்டாமா?

  10. ஒன்றாவது எளிதாக இருக்க வேண்டாமா?

  11. தாஜ் மஹால் தேவையில்லை


| |

Classic Arts – PAK’s Appreciation Series (1)

மேற்கத்திய ஓவியங்கள்- ஒரு எளிய அறிமுகம்
பி. ஏ. கிருஷ்ணன்
I

ஓவியம் என்றால் என்ன?
மூன்று பரிமாணங்களில் பார்த்ததை (சமயங்களில் பரிமாணங்களைக் கடந்து நினைத்ததை அல்லது உணர்ந்ததை) இரு பரிமாணங்களில் மரம், துணி, சுவர், காகிதம் போன்ற பரப்புகளில் வரைவது. வரைந்தது நம்மை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே ஒரு ஓவியம் காலத்தை வென்றதா இல்லையா என்பதை வரையறுக்கிறது. காலத்தின் கைகளிலிருந்து மீட்கப் பட்ட கணக்கில்லாத ஓவியங்கள் உலகெங்கும் அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. இவற்றை கடந்து நாள்தோறும் பலர் செல்கிறார்கள். னால் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட எல்லா ஓவியங்களும் காலத்தை வென்றதாக அடையாளப் படுத்தப் படவில்லை. அழியாது இருப்பதே வெற்றியாகி விட முடியாது. மிகச் சில ஓவியங்களே தலைமுறை தலைமுறைகளாக திரும்பத் திரும்பக் கவனிக்கப் படுகின்றன. திரும்பத் திரும்ப பொருள் கோள் (interpretation) செய்யப் படுகின்றன. இந்த மிகச் சிலவற்றில் ஒரு சிலவற்றை பற்றியும் இவற்றை வரைந்த ஓவியர்களைப் பற்றியும் இந்தத் தொடர் பேச இருக்கிறது.

பேசு முன் சிலவற்றைத் தெளிவு படுத்தி விடுகிறேன். நான் ஒரு ஓவியன் அல்ல. ஒரு திறனாய்வாளனும் அல்ல. நான் பார்த்து பிரமித்தவன். மனிதனால் இத்தனை உச்சங்களை எட்ட முடியுமா என்று மலைத்தவன். உச்சங்களை எட்டிய கலைஞர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகளைப் பற்றியும் ஓரளவு படித்தவன். படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்தத் தொடர். தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள இந்தத் தொடர் சிறிது உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

II

சென்ற வருடம் பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்திற்கு நண்பர் பாலாஜியோடு சென்றிருந்தேன். பல ஓவியங்களைப் பார்த்து பார்த்து கண்கள் பஞ்சடைவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. பசி வேறு. உணவகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டே நடக்கும் போது மிகத் தொலைவில் ஒளி பாய்ச்சப் பட்ட ஓவியம் ஒன்று தெரிந்தது. என்னை அறியாமலே சொன்னேன், ‘பாலாஜி, அது ஜான் ஸிங்கில்டன் காப்லியின் ஓவியம். வாட்ஸனும் சுறாமீனும் என்பது ஓவியத்தின் தலைப்பு என்று நினைக்கிறேன்’. பாலாஜி அருகே சென்று பார்த்தார். நான் சொன்னது சரிதான் என்று உறுதி செய்தார்.

எனக்கே ஒன்றும் புரியவில்லை.

காப்லியின் இந்த ஓவியத்தின் பிரதியைப் நான் பார்த்து ஒரு நாற்பது வருடங்களாவது இருக்கும். என்னுடைய தந்தையின் நண்பர் கோபால பிள்ளை எனக்கு மேற்கத்திய ஓவியங்களை அறிமுகம் செய்தவர். அவர் எனக்குப் பார்க்கக் கொடுத்த புத்தங்களில் ஒன்று “Great Painters and Great Paintings”. Reader’s Digest வெளியீடு. அந்தப் புத்தகத்தில் பேசப் பட்ட பல ஓவியர்களையும் அவர்கள் வரைந்த ஓவியங்களின் பெயர்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். எழுதப் பட்ட பெயர்களில் காப்லியின் இந்த ஓவியமும் ஒன்று. எழுதும் போது படித்தது நினைவில் ஒட்டிக் கொண்டு நாற்பது வருடங்கள் கழித்து உதிர்ந்திருக்கிறது. இத்தகைய உதிர்வுகள் காலம் காலமாக நடந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உதிர்வுகளுக்காகவே ஓவியர்கள் தங்கள் வாழ்நாட்கள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காப்லியின் இந்த ஓவியத்தின் ஈர்ப்புத் தன்மையின் காரணம் என்ன? சுறாமீனின் திறந்த, கூரிய பற்கள் நிறைந்த வாயும் அதனிடமிருந்து தப்ப வழியின்றி மல்லாந்து மிதக்கும் சிறுவனும் என்னுள்ளே இத்தனை ண்டுகள் இருந்திருக்கிறார்கள். யார் இந்தச் சிறுவன்? தில்லிக்கு வந்ததும் இந்த ஓவியத்தைப் பற்றிப் படித்துப் பார்த்தேன். 1749 ம் ண்டு க்யூபாவிற்கு அருகே நடந்த சம்பவம் இது. கரையருகே நீச்சலடித்துக் கொண்டிருந்த வாட்ஸன் என்ற சிறுவனை சுறாமீன் ஒன்று தாக்கியது. அந்தத் தருணத்தை ஓவியமாக காப்லி வடித்திருக்கிறார்.

சுறா வாட்ஸனை மூன்று முறை தாக்கியது. இந்தப் ஓவியம் மூன்றாவது தாக்குதலுக்கு முந்திய தருணத்தை சித்தரிக்கிறது. சுறாமீனின் வாயில் மெல்லிய சிவப்பு; சிறுவனின் முகத்தில் உறைந்த பயம்; அவனைக் கையைப் பிடித்து தூக்குபவர்களின் முகங்களில் இறுக்கம், கவலை அதிர்ச்சி; சுறாவைத் தாக்குபவரின் வேகம்; இவை எல்லாவற்றையும் ஓவியத்தில் கொணர காப்லியால் முடிந்திருக்கிறது. சிறுவன் காப்பாற்றப் பட்டானா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இந்த ஓவியம் நம்மைத் துடிக்க வைக்கிறது.

சிறுவன் தனது வலது காலைச் சுறாவிற்குக் கொடுக்க நேர்ந்தது. னால் பிழைத்துக் கொண்டான். பின்னால் பெரும் வணிகனாக உயர்ந்து லண்டன் நகரத்து மேயராக ன வாட்ஸன் தன் கதையை காப்லியிடம் சொல்லி அவர் வரைந்த ஓவியம் இது. இந்த ஓவியத்தின் மீது காப்லிக்கு மிகப் பெருமை. அதனால் அதை இன்னொரு முறை வரைந்து தன்னுடைய ஸ்டூடியோவிலேயே வைத்துக் கொண்டிருந்தார். இந்த ஓவியம்தான் பாஸ்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

III

மனிதன் எழுதுவதற்கு வெகுகாலம் முன்பே வரைய ரம்பித்து விட்டான். மேற்கத்திய ஓவியங்களின் கதை ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் உள்ள குகை ஓவியங்களிலிருந்து ரம்பிக்கிறது. இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு முந்தியவை. மஞ்சட் காவி (ochre) கரி போன்றவைகளைக் கொண்டு வரைந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டு குகை ஒன்றில் இத்தகைய ஓவியங்கள் முதன் முதலாகக் கண்டு பிடிக்கப் பட்ட போது விமரிசகர்கள் இவற்றை போலிகள் என்று நிராகரித்து விட்டார்கள். பழைய கற்கால மனிதன் இத்தகைய ஓவியங்களை வரைந்திருக்க முடியும் என்று அவர்கள் நம்பத் தயராக இல்லை. இன்று உலகெங்கும் பழைய கற்கால மனிதனின் கலைத் திறனுக்குச் சான்றாக பல குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு விட்டன.

இந்த ஓவியங்களில் எனக்கு மிகப் பிடித்தது லாஸ்கோ (Lascaux) குகை ஓவியங்கள். இந்த பிரெஞ்ச் ஓவியங்கள் 1940ம் ண்டு நான்கு சிறுவர்களால் கண்டு பிடிக்கப் பட்டன. லாஸ்கோ காட்டில் ஒரு பைன் மரம் இருந்த இடத்தின் கீழே ஒரு குறுகிய வழி இருப்பதை இவர்கள் பார்த்தார்கள். அந்த வழியாக இறங்கி ஒரு குகையை வந்தடைந்தார்கள். இந்தக் குகையின் சுவர்களில்தான் பல மிருங்களின் உருவங்கள் -எருதுகள், பசுக்கள் குதிரைகள், மான்கள் போன்றவைகளின் – தீட்டப் பட்டிருந்தன. மனிதனும் மிகச் சில கோடுகளால் தானும் தீட்டப் பட்டு விட்டேன் என்று அறிவித்துக் கொண்டிருந்தான். இந்த குகையை சென்றடைவது மிகக் கடினமாக இருந்ததால் இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் வருடங்கள் தாக்குப் பிடித்து விட்டன. னால் 1940ல் இருந்து 1955 வரை இந்த ஓவியங்களைப் பார்க்க ஏகப் பட்ட கூட்டம். மனிதன் கொண்டு வந்த கரியமிலக் காற்று பதினைந்தே வருடங்களில் ஓவியங்களை ஒரு கை பார்த்து விட்டது. இனி மனிதர்கள் குகைக்குள் வந்தால் மிஞ்சுவது மனிதர்கள் மட்டுமே என்பதை பிரஞ்சு அரசு உணர்ந்து இந்தக் குகைக்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதித்தது. ஓவியங்களின் பிரதிகள் லாஸ்கோவிலேயே இன்னொரு குகை நிர்மாணிக்கப் பட்டு அதன் சுவர்களில் வரையப் பட்டன. இந்தப் பிரதிகளைத் தான் இன்று நாம் பார்க்க முடியும்.

இந்த ஓவியங்களில் புகழ் பெற்றது ‘காயமுண்ட எருதால் தாக்கப் படும் மனிதன்’ என்ற ஓவியம். இருண்ட குகையில் கல் விளக்கில் மிருகக் கொழுப்பை (அல்லது எலும்பு மஜ்ஜையை)எரித்து வெளிச்சம் வர வழைத்து வரையப் பட்ட ஓவியம் இது. சிலிர்த்துக் கொண்டு, வாலைச் சுழற்றிக் கொண்டு மனிதனைக் குறி வைத்துக் கொண்டு பாயத் தயாராக நிற்கிறது எருது. ஒரு மிருகத்தின் இயக்கத்தை இவ்வளவு துல்லியமாக சித்தரித்த இவன் நிச்சயமாக ஒரு மகத்தான கலைஞன். மனிதனை அவன் இத்தனை துல்லியமாக வரைவதற்குத் தகுதியானவனாக நினைக்கவில்லை. னாலும் அவனைக் குறியிடும் கோடுகள் அவனுடைய பேரச்சத்தையும், அவன் கால்கள் இடறுவதையும் வியக்கத் தக்க வகையில் நம் முன்னால் கொண்டு வந்து விடுகின்றன. மனிதனுக்குக் கீழே ஒரு பறவை. ஒரு கோலின் மீது நிற்கிறது.

இவ்வளவு உழைத்து யாருமே வர முடியாத ஓர் இடத்தில் இருபது அடிக்கும் மேற்பட்ட துவாரத்தின் அடியில் இந்த ஓவியங்களைத் தீட்டியதின் காரணம் என்ன? சில விமரிசகர்கள் இப்படி இயற்கையாக மிருகங்களின் உருவங்களைத் தீட்டினால் மனிதன் அவைகளின் பலத்தையும் திடத்தையும் தான் அடைய முடியும் என்று நினைத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். சிலர் இவை பூசாரிகளால் மந்திர வேலைகளுக்காக வரையப் பட்டிருக்கலாம் என நினைக்கிறார்கள். மற்றும் சிலர் நரம்புசார் உளவியல் முறையில் இந்த ஓவியங்களை ராய்ந்து கிறக்கம் தரும் விதைகளையோ அல்லது இலைகளையோ உண்டதனால் மனதில் தோன்றும் வடிவங்களை ஓவியங்களாக வடிக்கும் முயற்சியாக இவை இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். நமக்கு இந்தகைய ராய்ச்சிகள் தேவையில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்கும் கலைக்கும் உள்ள உறவு பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு மேற்பட்டது என்று நினைப்பதே நமக்கு நிறைவைத் தந்து விடுகிறது. இந்த நிறைவு காலங்களையும் நாடுகளையும் மொழிகளையும் கடந்தது.

IV

இவ்வாறு இருண்ட குகைகளில் துவங்கிய ஓவியக்கலையின் வரலாற்றின் அடுத்த குறிப்பிடத் தக்க காலம் எகிப்தில் தொடங்குகிறது. அன்றைய எகிப்தியர் வாழ்க்கை மரணத்திற்கு அப்புறமும் வாழப்படுகிறது என நம்பினார்கள். அது வாழப் படும் இடமும் உலகமும் வேறு. அவ்வளவுதான். அவர்கள் இறந்தவர்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்று நிர்மாணித்த பல கலைச் சின்னங்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்கள் மிகவும் விரும்பியவை கட்டிடக் கலையும் சிற்பக் கலையும்தான். ஓவியங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். னால் ஓவியங்களை வரைவதற்கு அதிகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவர்கள் கல்லறைச் சுவர்களை அழகு செய்வதற்கு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பணக்கார எகிப்தியர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களிலும் ஓவியங்களை வரையச் செய்தனர். னால் அவற்றில் தப்பியவை மிகச் சிலவே.

எகிப்திய ஓவியங்களில் பெரும்பாலானவை Fresco Secco என்ற முறையில் வரையப் பட்டிருக்கின்றன. இந்த முறையில் ஓவியம் தண்ணீரில் கலந்த வண்ணக் கலவை கொண்டு சுண்ணாம்பு பூசி நன்றாக உலர்ந்த சுவரில் தீட்டப் படுகிறது.

எகிப்தியர்கள் மனிதர்களை வரைந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களையும் டைகளையும் மிகச் சிறப்பாக வரைந்தார்கள். எகிப்திய ஓவியக் கண்கள் நம்மை எப்போதும் நேராகப் பார்க்கின்றன-முகங்கள் பக்கவாட்டில் வரையப் பட்டிருந்த போதிலும். இந்த ஓவியங்கள் காட்சியின் ‘உயிர்’ என்று எதை நினைக்கின்றனவோ அதை வலியுறுத்துகின்றன. உதாரணமாக ‘அழுகின்ற பெண்கள்’ என்ற ஓவியத்தில் அதன் உயிர் பெண்களின் கண்ணீர். எனவே ஓவியத்தில் இருக்கும் எல்லாப் பெண்கள் கண்களிலிருந்தும் மூன்று அல்லது நான்கு தாரைகளில் கண்ணீர் வெளிவந்து அவர்கள் கன்னங்களில் மூன்று அல்லது ஐந்து துளிகளாக இறங்குகிறது.

எகிப்தியர்கள் பறவைகளையும் மிருகங்களையும் வரைந்திருக்கும் விதம் அசதாரணமானது. நெபாமன் கல்லறையில் வரையப் பட்டிருக்கும் பறவை வேட்டைக் காட்சியில் வேட்டையாடும் மனிதனும் அவனது மனைவியும் மகளும் விரைத்து நிற்பது போல நமக்குத் தோன்றுகிறது. னால் அதே ஓவியத்தில் பாய்ந்து பறவையைப் பிடிக்க முயலும் பூனை உயிருள்ளது. பறவைகளும் வண்ணத்துப் பூச்சியும் பறப்பது என்றால் என்ன என்பதை மூவாயிரம்ண்டுகளுக்குப் பின்னும் நமக்கு விளக்குபவை.

பி. ஏ. கிருஷ்ணன்

The paintings are available in the following sites:
1. Lascoux
2. Watson and the shark
3. Fowling Scene


| |

Name the Novel & the Author

புகழ் பெற்ற நாவல்களின் கடைசி பத்திகள். (ஒரு மாறுதலுக்காகத்தான் 🙂 இந்த ஐந்துடன் இந்தப் பதிவுத்தொடர் நிறைவுறுகிறது. மறுமொழிந்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

#1. ஜானின் கடுகடுப்பான பார்வை இன்னும் அதிக கடுகடுப்பாக மாறியது. ஒரு செத்த முகத்தின் தோலின் தடிப்பு அவன் முகத்தில் ஏறியது. பல சிலந்திகள் அதில் கூடு கட்டி ஊர்ந்தபடி இருந்தன உடைந்த கதவுகளுக்கிடையில் பலரின் பழமைப் பற்று எலியாய் ஊர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தப்பி ஓடும் மனிதர்களின் அவசரங்கள் கூட அவர்களின் மனதிலிருந்து வெளியில் தப்பி வந்து அடிபட்ட தவளைகள் போல் பின்னங்கால்கள் இழுபட நகர்ந்து நிழலுக்குள் பாதுகாப்பாய்ப் போனதைக் காணப் பரிதாபமாக இருந்தது.

பலரது கடைசி அபயக்குரல் இன்னும் சுவர்களில் ஒட்டியபடி சப்தமெழுப்பிக் கொண்டிருக்கையில், மனிதர்களின் முகங்களிலிருந்து வழியும் அவர்களின் புராதனக் கனவுகளை மிகக் கவனமாக உற்றுப் பார்த்தபடி பால், நடுங்கும் தம் கரங்களில் ஒரு புத்தகத்தைப் பிடித்தபடி நடந்தான். நிமிர்ந்து நின்ற போது, அவனுடைய கண்கள், உடைந்த தொடைகளையும், தரைப் புழுதியில் குப்புறக் கிடந்த மனித மனங்களின் ஆசைகள் என்ற குப்பைக் கூளங்களையும் பார்த்தன. இதழ்களில் லேசாக நகை தோன்றி மறைந்தது.

மீண்டும் இரவு வந்த மறுநாளில் புராதனக் குடிப் பெருமை காயங்களுடன் மறுபடி மறுபடி த்ரையில் விழுந்தது. அப்போது பாலின் முகத்தில் வேதனையுணர்வுகளின் வேர் ஓட, அவன் மனக் குகைக்குள் மறதியும், வௌவால்களும், துப்பாக்கிகளின் மருந்து நெடியும் எழுந்து சஞ்சாரமிட்டன. சிநேகபுரத்தின் புராதனக்குடியினர் கூடும் ஊர் சத்திரத்தின் இடிந்த மணிக் கூண்டில் ஏறி நின்று ஊரைப் பார்த்தான் பால்.

புராதன வார்த்தைகளையும் கதைகளையும் நேசித்த மனிதர்களும் அவர்களுடன் கடந்த காலங்களும் தூரத்தில் செத்துப் போய்க் கிடந்தன. அக்காட்சி, பாலின் மனதில் கொடூர நினைவுகளை எழுப்பின. ஆனாலும் எதிர்காலத்தின் குமாரனான பால் அதற்காய் பச்சாதாபப்படவில்லை.

அப்போது அவ்வூரை விட்டு அதன் எல்லையை நோக்கிச் சிலுவையுடன் புறப்பட்ட வெள்ளைக் கொடி மனிதர்கள் ஊர்வலமாக செல்கையில் அவனைக் கவனித்தனர். அவர்கள் ஏனோ அவனைத் திரும்பிப் பார்த்ததை அவன் தூரத்தில் மணிக்கூண்டில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

நேயர்களே, இக்கதையை ஒருவர் படித்தாலும், படித்ததைக் கேட்டாலும், ஒருவர் படிக்க இன்னொருவர் கேட்டாலும், நவக்கிரகங்களின் கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள். அந்த அளவு பழமை கொண்டிருக்கிறது இக்கதை. இத்தகைய பழமை ஞாபகங்களில் சிக்கிய * * * கதை, இங்ஙனம் முற்றும்.


#2. அருகே கோவில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு ‘இங்கே வா’ என்று குறிஞ்சி ஆண்ட்வனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறித் தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்குமுன் போய் நின்றாள் அவள்.

அர்ச்சகர் கற்பூர சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய்சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச்சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. ‘துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா’ என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? “அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது” என்று பித்துப் பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.

“பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!”

….

வழியின் இருபுறமும் வெள்ளம் போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறுகொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.


#3. 2. எனது பாத்திரங்களிலேயே மிக அதிகமாக எனது சாயலைக் கொண்டு உருவானவன் செல்லப்பா. எனக்கும் பிரியமானவன்.

1. விசுவம்?

2. செல்லப்பாவைப் போலவே விசுவமும் எனது சில அம்சங்களைக் கொண்டு படைக்கப்பட்டவன் தான். நான் ஒரு ‘இரண்டு கட்சி’ ஆசாமி. எனக்கு உணர்ச்சிகளின் நுட்பமான, எளிதில் பிடிபடாத, நெளிவு சுளிவுகள் எப்படி இஷ்டமோ அப்படியே அறிவுபூர்வமான சர்ச்சையும் ஆய்வும் இஷ்டம். இது ஒரு முரண்பாடு என்றால் இதன் இரு எல்லைகளின் பிரதிபலிப்புகளே செல்லப்பாவும் விசுவமும். செல்லப்பா உணர்ச்சியே வடிவானவன். விசுவம் அறிவே வடிவானவன். இது ஒரு தோராயமான விளக்கம்தான், யாரும் முழுதும் உணர்ச்சிப் பிண்டமும் இல்லை, முழுதும் அறிவுச்சுடருமில்லை.

1. அப்படியானால் பத்ரி man of action?

2. ஆமாம், செயல் வீரன். அறிவும் உணர்ச்சியும், (உடனடி பாதிப்புகளை ஏற்படுத்துகிற) செயலும் ஓரிடத்தில் இணைந்திருப்பதில்லையென்பதே வாழ்க்கையின் irony?

1. ஸோ, இந்த irony ‘* *’ ஆதாரச் சரடா?

2. இல்லை, முழுதும் அப்படியில்லை. நாவலில் ஒரு நம்பிக்கைச் சரடு இழையோடுகிறது. அதே சமயத்தில் அது எளிமைப்படுத்தப்பட்ட வகையினதாக இல்லாமல் இன்றைய தலைமுறையினர் அரவணைத்துக் கொள்ளும் விதமாக அமைக்க முயன்றிருக்கிறேன்… இந்தத் தன்மை – credibility – ரொம்ப முக்கியம். இன்றைய சூழ்நிலையில் தர்மம் அதர்மத்தை வென்று விடுவதாக நாவலில் எழுதுதல் ஒரு வெகுளித்தனம், அல்லது போலித்தனம்; சிலர் அந்தரங்க ஈடுபாடின்றி சிரார்த்தமும் சந்தியாவந்தனமும் செய்வது போல (இத்தகையவர்களை இந்நாவல் மெல்லிய புன்னகையுடன் சீண்டுகிறது) வாழ்க்கையின் தர்மத்தையும் நாவலின் தர்மத்தையும் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள். நாவலின் தர்மம் கலையுடன் இலக்கிய நேர்மையுடன், தொடர்புடையது. இந்நாவலின் moral centre எனப்படுகிற தார்மீக மையம் பாஸிடிவ்வாகவே இருப்பதை நுட்பமான வாசகன் புரிந்துகொள்வான்; ஆக்க பூர்வமான கவலையையும் (சமூக) சிரத்தையும் பொறுப்புகளையும் கிளர்ந்தெழச் செய்யும் வண்ணம் அதன் ஒட்டு மொத்தமான கட்டமைப்பு அமைந்துள்ளதை உணர்வான்.
…..
இயற்கை என்பதே சாந்தத்தின், ஸத்வ குணங்களின் குறியீடாக…

1. ஆமாம். செல்லப்பா இவ்விதத்தில் ஒரு நவீன போதிஸத்துவன். தத்தம் ‘தனித்துவங்களை’ முடமாக்கிக் கொண்டு ஒரே திசையில் தத்தித் தத்திச் செல்லும் மனிதர்களிடையே…

2. (தொண்டையைக் கனைத்துக் கொண்டு) கடைசியாக, எனக்கு அதிருப்தியளித்த ஒரு விஷயம் பற்றி. செல்லப்பாவின் அம்மாவின் மரணம்… அது அவசியந்தானா?

1. அவள் தன் மருமகளை புதிய தலைமுறைப் பெண்மை பற்றிய ஒரு கொச்சையான ‘பூர்ண விடுதலை’ பிம்பத்தில் பொருத்தி, அந்த பிம்பத்துடன் ஓட்டி போட முயலுகிறாள். ஆனால், ஒரு முக்கிய கட்டத்தில் தான் கடைசியில் தன் அம்மா, பாட்டி ஆகியவர்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்பதை உணருகிறாள். இது அவளைச் சிதற அடித்து விடுகிறது… moment of truth.

2. நாமெல்லாருமே, ஒரு விதத்தில், சரியோ தவறோ, வெவ்வேறு உருவகங்களின் கைதிகள்தான்; இல்லையா?

1. வெவ்வேறு ‘வேடங்களின்’ கைதிகள். அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலவாணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரிகளை’ உச்சாடனம் செய்து கொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள், ஆண்ன் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ – அல்லது இந்தப் பிம்பளுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள் – என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityயின், ஒரு alienationனின், கைதிகள். இத்தகைய பல கைதிகளையே ‘* *’ அறிமுகம் செய்கிறது.


#4. அன்று சாவடிக்குப்பம் ஒரே குதூகலமாயிருந்தது. “சாஸ்திரி ஐயாவும் சாருவும் திரும்பி வந்துட்டாங்க” என்னும் செய்தி சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய தினமே பஜனை ஆரம்பித்துவிட வேண்டுமென்று நல்லான் வற்புறுத்தினான். சாயங்காலம் பஜனை ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் ஜனங்கள் ஏராளமாக வந்து கூடி விட்டார்கள். குப்பத்து ஜனங்கள் மாத்திரம்ன்றி, வ்க்கீல் ஆபத்சகாயமய்யர், சாருவின் பழைய வாத்தியாரம்மா முதலியோரும் வந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாயிருந்தபடியால், குப்பத்துத் தெருவில் திறந்த வெளியிலேயே பஜனை நடத்த வேண்டியதாயிற்று.

ஆனால், அன்று பஜனையில் சம்பு சாஸ்திரியினால் பாடவே முடியவில்லை. உணர்ச்சி மிகுதியால் அவருக்குத் தொண்டையை அடிக்கடி அடைத்துக் கொண்டது. மற்றவர்கள்தான் பாடினார்கள். காந்தி மகானுக்குப் பிரியமான கீதம் என்று பிரசித்தமான “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டைச் சம்பு சாஸ்திரி பஜனையில் அடிக்கடி பாடுவதுண்டு. அதை மற்றவர்களுக்கும் கற்பித்திருந்தார். அந்தக் கீதம் இன்று பஜனையில் பாடப்பட்டபோது, சாஸ்திரி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

“எவன் பிறருடைய துக்கத்தை தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்துவிட்டு அதைப்பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.

“எவன் உலகில் பிறந்தோர் அனைவரையும் வணங்குவானோ, யாரையும் நிந்தனை செய்யமாட்டானோ, மனோவாக்குக் காயங்களைப் பரிசுத்தமாக வைத்துக் கொண்டிருப்பானோ, அப்படிப்பட்டவனுடைய தாயே தன்யையாவாள்.

“எவன் (விரோதியையும் நண்பனும்) சமதிருஷ்டியுடன் நோக்குவானோ, எவன் பரஸ்திரீயைத் தன் தாயாகக் கருதுவானோ, எவன் தன் நாவால் ஒரு போதும் பொய் பேச மாட்டானோ, எவன் பிறருடைய பொருளைக் கையால் தொடவும் மாட்டானோ, அவனே வைஷ்ணவன்.

“எவனை மோகமோ மாயையோ அண்டாதோ, எவனுடைய மனத்தில் திடவைராக்கியம் குடிகொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தைக் கேட்டதுமே அதில் ஆழ்ந்து மெய்மறந்து விடுவானோ, அவனுடைய சரீரம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் இருப்பிடமாகும்.

“எவன் லோபமும் கபடமும் இல்லாதானோ, எவன் காமத்தையும் குரோதத்தையும் விட்டொழித்தவனோ, அப்படிப்பட்ட உத்தமனைத் தரிசிப்பவனது எழுபத்தொரு தலைமுறையும் கரையேறிவிடும்”

இந்தக் கீதத்தைக் கேட்டு வருகையில் சம்பு சாஸ்திரிக்கு இன்றுதான் அதனுடைய உண்மையான பொருளைத் தாம் உணர்வதாகத் தோன்றியது. ‘ஆகா! இந்தப் பாட்டில் சொல்லியபடி உண்மை வைஷ்ணவனாக நாம் என்று ஆகப் போகிறோம்? இந்த ஜன்மத்தில் அத்தகைய பேற்றை நாம் அடைவோமா! அம்பிகே! தாயே! இந்தக் கீதத்தில் வர்ணித்திருக்கும் குணங்களில் நூறில் ஒரு பங்காவது எனக்கு அருளமாட்டாயா?’ என்று தமது இருதய அந்தரங்கத்தில் பிரார்த்தனை செய்தார்.


#5. கடலைத் தாத்தா தேர்தலில் அமோக வெற்றிய்டைந்தார்.

முதல் நாள் அவர் நகரசபைக் கூட்டத்திற்குச் சென்ற காட்சியைப் பெண்கள் எல்லோரும் வாசல் திண்ணையில் நின்றபடி பார்த்து ரசித்தனர். குழந்தைகள் சிமிண்ட் ரோடு வரையிலும் சென்று வழியனுப்பித்துவிட்டு வந்தன.

அன்று கிழவர் போட்டுக் கொண்டு சென்ற புதுச்சொக்காயும் புதுவேட்டியும் ஒரு வார காலத்தில் அழுக்காகிவிட்டன. அவற்றை இரவோடு இரவாகத் தோய்த்துப் போட்டு மறுநாள் காலையில் அவற்றையே மீண்டும் அணிந்துகொண்டு நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார்.

தேர்தல் மூலம் அவர் கையில் மிஞ்சிய காசு ஒன்றிரண்டு மாதங்களிலேயே கரைந்துபோய் விட்டது. ஆனால் அந்த ஒன்றிரண்டு மாதங்களில் அவரும் சரி, அவருடைய குடும்பத்தினரும் சரி, வாழ்க்கையை செம்மையாக அனுபவித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்நாட்களில் அவருடைய பேரக் குழந்தைகள் நல்ல நேர்த்தியான உடை அணிந்திருந்தனர். பையன் அன்றாடம் மீன் சந்தைக்குப் போய்வந்தான். கைக்குழந்தைகளை உத்தேசித்து இரண்டு ஆடுகள் வாங்கப்பட்டன. வீட்டிற்கு அவசியமான பாத்திரங்களும் வாங்கப்பட்டன. கிழவர் பீடியை மறந்து சுருட்டுக் குடித்தார்.

வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!

அவருடைய புதுச் சொக்காய் அன்றாடம் துவைத்துக் துவைத்துப் போட்டுக் கொண்டதாலோ என்னமோ வெகுவிரைவில் நைந்து விட்டது. இரட்டை வேஷ்டியிலும் பொட்டுப்பொட்டாகத் துவாரங்கள். வீட்டுச் செலவுக்காகச் சில பாத்திரங்கள் அடகு வைக்கப்பட்டன. நகரசபைக் கூட்டம் முடிந்து கிழவர் வீட்டுக்கு வருகிறபோது குழந்தைகளின் பசி அழுகை அவர் காதை அடைத்தது.

ஒருநாள் காலை கிழவர் தன்னுடைய பழைய மிட்டாய்ப் பெட்டியைக் கண்டெடுத்து அதைத் தூசி போக நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்தார்.

மறுநாள் காலை சட்டை அணியாத வெற்றுடம்புடனும், இடது கையில் மணியுடனும், முண்டாசு சுற்றிய தலைமீது மிட்டாய்ப் பெட்டியுடனும் அவர் குர்ரான் பள்ளிக்கூட வாசலை அடைந்த போது, ‘கடலைத் தாத்தா வந்துட்டாரு டோய்!’ என்று கத்திக் கொண்டே குழந்தைகள் அவரை வட்டமாக சூழந்து கொண்டன.

கடலைத் தாத்தா குழந்தைகள் முகத்தையெல்லாம் பார்த்து வெறித்தார். அவர் முகம் மலர்ந்தது. அவர் கண்கள் கலங்கின.

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |