Category Archives: Uncategorized

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்கே. செல்வப்பெர…

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்
கே. செல்வப்பெருமாள்
‘உலகமயம்’ இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலகமக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘உலக சமூக மாமன்றம்’ போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல்
‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனி°ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.
ஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.
இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.
இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் “நிலச்சீர்திருத்தம்” ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.
உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப் பட்ட நாடு சோசலிச சோவியத்யூனியன்தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ‘நிலச் சீர்திருத்தம்’ என்பது உலகளவில் ‘அரசியல் கோஷமாக’ உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.
உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.
உலக விவசாயிகளின் நிலை
உலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.
இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது ‘நிலம்’. குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகி°தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.
அதே சமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக் கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்
உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் – விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக – அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.
வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்
1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (ஆளுகூ-ஆடிஎiஅநவேடி னடிளகூசயயெடாயனடிசநள சுரசயளை ளுநஅ கூநசசய in ஞடிசவரபரநளந – டுயனேடநளள றுடிசமநசள ஆடிஎநஅநவே) 1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எ°.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப் பதித்திருக்கிறது.
2003ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் “கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு” பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.
நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.
பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000த்துக்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.
விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எ°.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் – வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு “எழுத்தறிவு இயக்கத்தை” தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 – 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.
இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம் பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.
சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எ°.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எ°.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நன்பர் என்றும் எம்.எ°.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.
பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் – பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.
நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதை
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் – பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவே°. உலக எண்ணெய் வளத்தில் 5வது இடத்தை வகிப்பது வெனிசுலா.
வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவே° ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
1999இல் ஆட்சிக்கு வந்த சாவே° “நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு” என்று அறிவித்தார். “விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம்” என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவே°.
அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவே° அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர். 1960களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.
ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.
கிராமத்திற்கு திரும்புவோம்!
சாவே° ஆட்சிக்கு வந்ததும் “கிராமத்திற்கு திரும்புவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எ°டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவே°.
சாவே° ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை.
2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.
வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்
கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், “நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம்” என்று புகழ்ந்துரைத்துள்ளார்.
நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதை
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சே குவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனைகொண்ட ஈவோ மொரேல்° தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஈவோ மொரோல்° மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவே°, மொரோல்° கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.
இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமை யாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாச மானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டா° என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டா° என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.
சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.
பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்
பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி “பொலிவியன் நிலமற்றோர் இயக்கம்” இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.
இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.
அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.
மொரேல்° அரசு “நிலச்சீர்திருத்த நடவடிக்கையை” நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் “நில பாதுகாப்பு கமிட்டி” அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.
மொரேல்° அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான “சோசலிசத்தை நோக்கி” (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ – ஆடிஎiஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்
இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. “பசுமைப்புரட்சி கண்ட இந்தியா” என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார். பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏன் இந்த நிலைமை?
இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா…) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.
1987இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது. அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. “பணப் பயிர்” (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.
மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.
இறக்குமதியாகும் உணவு தானியம்
தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆ°திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (றுகூடீ) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய – உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.
கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.
வங்கப் பஞ்சம் படிப்பினை!
பிரிட்டிஷ் இந்தியாவில் 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:
“அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை துவக்கப்பட்டது.”
மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் – இந்திய அரசு
10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் – நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம்.
“ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!”
வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப – துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.
மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி – பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.
தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம்
பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.
தமிழகத்தில் நில விநியோகம்
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க் சி°ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.
மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய – தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
“தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.”
அதே போல்,
“தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை”
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும். காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 °டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 °டாண்டர்டு ஏக்கராக மாற்றப் பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிர°டுகள், தர்ம °தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் ‘உச்சரம்பா, மிச்ச வரம்பா’ என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.
நிலம் – உணவு – வேலைக்கான இயக்கம்
ஜூன் 8 – 10, 2006 நடந்து முடிந்த மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆக°ட் மாதத்தில் உணவு – நிலம் – வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் – கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.
“நிலச்சீர்திருத்தம்” உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சி°ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.

தகவல் ஆதாரம்

http://www.landaction.org
http://en.wikipedia.org/wiki/Landless_Workers%27_Movement
http://www.pbs.org/frontlineworld/rough/2005/12/brazil_cutting.html#
http://news.bbc.co.uk/1/hi/world/americas/4550855.stm
http://www.zmag.org/weluser.htm
http://www.venezuelanalysis.com

Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org

நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு – 1974.

Bojinka

Guardian Unlimited | Special reports | Timeline: Aircraft terror plot

இந்தியா கோக்கில் நச்சுப்பொருள் இருப்பது போல் லண்டனில் இருந்து கிளம்பும் விமானங்களில் அனேக நீராகாரங்களுக்கு தடை. திரவங்களில் வெடிப்பொருள் கலந்து நியு யார்க், வாஷிங்டன் (டிசி), லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மேல் பறக்கும் விமானங்களை வெடிக்க வைப்பது திட்டம். இருபத்தி நால்வரை கைது செய்திருக்கிறார்கள்.

தாய்ப்பாலை சுவைத்துக் காட்டி எடுத்து செல்ல வேண்டும். பிறிதொருவருக்கு நஞ்சு கொண்டு சென்றாலும், நாம் மருந்தை உட்கொண்டால் மட்டுமே உள்ளே அனுமதி.

  • அரங்கேறியிருந்தால், 9/11 போல் அலங்காரமாக 8/11 என்று நாமகரணமிட்டு மலர்க்கொத்து இட்டிருக்கலாம்.
  • சென்ற மாதமாக இருந்தால் ‘தேன்கூடு – தமிழோவியம்’ போட்டிக்கு ‘மரணம்’ என்று தலைப்பிட்டு செய்திக் கட்டுரை இட்டிருக்கலாம்.
  • பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணிக்கும்போது உணவுக்கு முன்பும், உணவருந்தும் போதும், உண்டு களைத்த பின்பும், அனுசரணையாக ‘என்ன சரக்கு அடிக்கறீங்க’ என்று எத்தனை தர்மபத்தினிகளையும் அப்பிராணி அசமஞ்சங்களையும் படுத்தினார்களோ? அவர்களின் சாபம்தான் ஏவுகணையாக திருப்பி அடித்திருக்கிறது. (BBC NEWS | Science/Nature | Q&A: Liquid explosives)
  • உட்கொண்டாலும் எந்தவித உபாதையும் செய்யாமல்; ஆனால் வெடிக்கத் தகுந்த திரவங்களை இன்னும் ‘குழந்தை உணவாக’ ஃபார்முலா கண்டுபிடிக்காத ‘அறிவியலாளர்கள் முட்டாள்கள்’ என்று அல்-க்வெய்தா அறிவித்திருக்காது. (CNN.com – No lotion, long lines in U.S. airports – Aug 10, 2006)
  • இஸ்ரேல், வளைகுடா பக்கம் எண்ணெய் இருப்பதால் பிரச்சினை. அந்த எண்ணெய் கபளீகரம் செய்ய பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா போட்டி போடுவதால் அங்கும் ஆபத்து. அவ்வப்போது தோன்றும் பஞ்சாப், காஷ்மீரை கணக்கில் எடுக்காவிட்டால் இந்தியாதான் சுகநிவாஸ்.
  • நவம்பர் தேர்தல், புஷ்ஷின் கட்டுக்கதை சூழ்ச்சி, ஈரானுக்கு எதிரான ஆயத்தம், ஹிஸ்பொல்லாவை தவிடு பொடியாக்க, லமாண்ட்டை மட்டம்தட்ட (படிக்க: அமெரிக்க செனட் தேர்தல் – சிறு குறிப்பு – சுந்தரவடிவேல்) என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப நிலைமையின் தீவிரத்தை வாதம் புரிந்து நீர்க்க வைக்க ஆரம்பித்துவிடலாம். War Room – Salon.com
  • இந்த பதிவின் தலைப்பை தேடுபவர்களுக்காக: The plot, codenamed Bojinka — a play on the Serbo-Croatian word for explosion — by its Pakistani planners (TIME.com: Was the Airline Plot a Rerun? — Page 1)
  • விமானங்களில் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல், அமெரிக்க/லண்டன் நகரங்களில் வசிக்காமல், நிறைய நேரம் இருந்து, மேலும் விதவிதமான எண்ணப்பகிர்வுகளைப் படிக்க விரும்பினால்: Slashdot | BBC Reports UK-U.S. Terror Plot Foiled


    | |

  • Madhani should be released – Human rights activists

    Dinamani.com – TamilNadu Page

    மதானியை விடுதலை செய்ய மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    சென்னை, ஆக. 11: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி 1998-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (புதுவை) தலைவர் கே. சுகுமாரன், கவிஞர்கள் அப்துல் ரகுமான், குட்டி ரேவதி உள்ளிட்ட 42 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி சர்க்கரை நோய், மூட்டுவலி, முதுகுத் தண்டு பாதிப்பு போன்ற நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது எடை தற்போது 54 கிலோ ஆகக் குறைந்துவிட்டது.

    அவரது தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி கேரளத்தில் மக்கள் செல்வாக்குடன் தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். வன்முறையைத் தூண்டும் கட்சி அல்ல.

    சிறையில் கூட அவருக்குச் சிகிச்சை அளிக்க இயலவில்லை என்று கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூறிவிட்டது. இந்நிலையில் அவருக்கு சிறைக்கு வெளியே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

    மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழக அரசுக்கு கடந்த ஆட்சியின்போது எழுதியுள்ளார். கேரள முதல்வர் அச்சுதானந்தனனும் மதானியை விடுவிக்கும்படி முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கேரளத்தில் உள்ள கட்சிகள் அவருக்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    எனவே, மதானியைத் தமிழக அரசு ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Withdrawl of the lawsuits against Ponmudi, Stalin

    Dinamani.com – TamilNadu Page

    ஸ்டாலின், பொன்முடி மீதான வழக்கு வாபஸ்

    சென்னை, ஆக. 11: போலீஸôரைத் தாக்க முயன்றதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்பட 16 பேர் மீது அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

    சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அக்கல்லூரிக்குச் சென்று மாணவிகளிடம் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    மாணவிகளைப் போராடத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்காக அவரைக் கைது செய்ய வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸôர் சென்றனர். அப்போது அவர்களை தாக்க முயன்றதாக ஸ்டாலின், பொன்முடி உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இவ்வழக்கை வாபஸ் பெறுவதாக அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்ற நீதிபதி வேலு, வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தார்.

    Kanyakumari Fishermen Quarrels

    Dinamani.com – TamilNadu Page

    விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் மோதலில் 26 மீனவர்கள் கைது

    கன்னியாகுமரி, ஆக. 11: கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் மோதல் தொடர்பாக, 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை சிறைப் பிடித்ததாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சொர்ணபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், ரெஜிஸ், கிரேசியான், சந்தியாதி ராயா, சந்திரகுமார், பிரதபாத் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மோதல் தொடர்பாக சேரியா முட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 26 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    Dinamani.com – TamilNadu Page

    சின்னமுட்டம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

    கன்னியாகுமரி, ஆக. 11: கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம், (சேரியா) முட்டம் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, கோவளம் பகுதிகளைச் சேர்ந்த 2 விசைப் படகுகளை சேரியாமுட்டம் மீனவர்கள் செவ்வாய்கிழமை கடலில் மூழ்கடித்தனராம்.

    இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, புதன்கிழமை சின்னமுட்டம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால், சின்னமுட்டம் மீனவர்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை புதன்கிழமை தொடர்ந்து 3 மணி நேரம் சிறைப்பிடித்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    மேலும், அங்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க நெல்லை சரக டி.ஐ.ஜி மாகாளி கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளார். குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயராமன் தலைமையில் 250-திற்கும் மேற்பட்ட போலீஸôர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், வியாழக்கிழமையும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் துறைமுத்தில் 350 விசைப் படகுகளும் படகுத் துறை தங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கேட்ட போது, இருதரப்பு மீனவர்களையும் அழைத்து, விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்படும் என்றார் அவர்.

    விசைப்படகு சங்க அவசரக் கூட்டம்: கன்னியாகுமரி விசைப் படகுகள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • சேரியா முட்டம் கடல் பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட விசைப் படகுகளில் ஒன்று முற்றிலும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு காணாமல் போயுள்ளது. இந்த இரு விசைப் படகுகளுக்கும் அரசு உடனடியாக முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
  • நிரந்தரமாக சுமுகமான முறையில் மீன்பிடித் தொழில் செய்யும் வகையில், ரோந்துப் படகுகள் முழு நேர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
  • செயல்பாடற்ற நிலையில் உள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநர் அலுவலகத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி, 3 “நாட்டிக்கல் மைல்’ (கடல்மைல்) தொலைவில் மீன்பிடிக்க, போயா போட்டு எல்லை வரையறுக்கப்பட்டு செயல் வடிவம் பெறவேண்டும்.
  • இரு விசைப் படகுகளுக்குமான நஷ்ட ஈட்டை பெற்றுத் தருவதோடு, இயல்பு நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்களின் நகலை உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய வளாகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பங்குத் தந்தை லியோன் கென்சன் தலைமை வகித்தார்.

  • Laloo speaks out on Reservation issue – Reply to Ramadoss

    Dinamani.com – Headlines Page

    யாருடைய சான்றிதழும் தேவையில்லை: ராமதாஸýக்கு லாலு பதில்

    புது தில்லி, ஆக. 11: “யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவையில்லை’ என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார் ரயில்வே அமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ்.

    லாலு பிரசாதை செவ்வாய்க்கிழமை சந்தித்தார் ராமதாஸ். அப்போது, இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவசரப்படக்கூடாது என்றும், படிப்படியாக அமல்படுத்த அரசு முடிவெடுத்தால் அதற்கு ஆதரவு கொடுப்போம் என்றும் லாலு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “இட ஒதுக்கீடு விவகாரத்தில் லாலு பின்வாங்கப் பார்க்கிறார்’ என்று கடுமையாகச் சாடினார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய லாலு,

    “யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. எந்த ஒரு இயக்கத்துக்காகவும் தியாகி பட்டம் வாங்க வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை’

    “இட ஒதுக்கீடு தேவை என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் அதில் சில பிரச்சினைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அது கல்விக்குப் பொருந்துமா என்று எனக்குத் தெரியாது’ என்றார். “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை விரைவில் சுமுகமாக முடிப்போம். ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம்’ என்றார் அவர்.

    TK-TO Contest: #32 – #44 : Snap Reviews

    1. மழை: தாய் – உறவுகள்பிரதீப்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 1 / 4

      நாலு வரியில் நறுக்குன்னு முடியுமே அதுவா
      வார்த்தைக்கோலங்களில் சமூக அவலம் வைத்திருக்குமே அதுவா
      வரிக்கு மேலே வரி போர்த்தியிருக்குமே அதுவா
      சீர்திருத்தமாக நினைத்து சிந்தனை தெளிக்குமே அதுவா
      ஒரு நிமிடம் படித்துவிட்டு ஓசி பதிவு போடுமே அதுவா
      பட்டியல் போட்டு ப்ளஸ் வாக்கு கோருமே அதுவா
      தன்னோட கவிதைக்கு மட்டும் நாலு போடுமே அதுவா

      யாருடைய கவிதைங்க இது?

      எளிமைக்காக +1.

    2. எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு…அபுல் கலாம் ஆசாத்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 2 / 4

      நீ
      மோர்ப் பானை போர்த்திய முதுமக்கள் தாழி

      செந்தில் குமரன் (குமரன் எண்ணம்): விட்டிலுக்கும் மெழுகு வெளிச்சத்திற்கும் உள்ள உறவா? மனிதர் புரிந்து கொள்ள இது மனித உறவு இல்லை என்று நினைக்கிறேன்.

    3. உறவுகள்ராசுக்குட்டி

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 3.25 / 4

      கவிதைக்கான எல்லா பயத்துடனும் படிக்க ஆரம்பிக்கிறேன். மகளின் சொல்லாடல் ‘அட…’ சொல்லும் எதுகை மோனை + நிகழ்வுகளின் எண்ண அணிவகுப்பு. முடிவில் டச்சோ டச். தலை மூன்றில் இடம்பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    4. பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சிசுரேஷ்

      (சிறுகதை) மதிப்பெண் – 3.25 / 4

      ஒருவனாவது என்னை அடையாளம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவனை எனக்குத் தெரியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும்.

      “எங்கே இருந்தாலும் நல்லா இரு. காசை செலவழிக்காதே. நல்லா சிக்கனமா சேத்து வையி. அப்போதான் நாளைக்கு என் நிலைமை வராது. புள்ளைங்கள நம்பாம இருக்கலாம்”

      நான் மௌனம் காத்தேன். என்ன விஷயம் என்று சரிவரத் தெரியாத வெளியாள் வேறென்ன செய்ய முடியும்?

      பாந்தமான உரையாடல்கள். போட்டியென்று வந்துவிட்டால் பெனாத்தலார் சிங்கம். மே 2006 என வெற்றி மேல் வெற்றி கண்டவர். அழகாய் இருக்கிறது. பயமாய் உள்ளது.

    5. எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்குமதுரா

      (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

      எப்படிக் கசக்கிப் பிழிந்து அடித்துத் துவைத்து பார்த்தாலும் ஒரு சாயமும் கரையவில்லையே நம் உறவைப் பற்றிய நினைவுகளில்! மனம் அவ்வளவு பெரிய புளுகு மூட்டையா?

      “நான் என் பையனை நன்றாகத் தானே வளர்த்தேன்; எதில் விட்டு விட்டேன்; வீட்டு வேலைகள் எல்லாம் அவன் அக்காக்களைப் போல செய்ய வைத்து தானே வளர்த்தேன்”

      நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது போல், உங்கள் மகன் உங்களிடம் தனியாகப் பேசுவதே இல்லை என்பதை கவனித்த போது வருத்தமாக இருந்தது!

      சில உறவுகள் ஒதுங்கி இருப்பதே பிற உறவுகளுக்கு மரியாதை.

      தடாலடியான ஆரம்பம் உள்ளிழுக்கிறது. அதே உணர்ச்சி வேகம் பிசிறு தட்டாமல் தொடர்கிறார். நல்ல சிறுகதையின் அடையாளம் ‘சொந்தக் கதையா?’ கேள்வியை மிரட்சியுடன் தொண்டைகுழியில் ஊசலாட வைப்பது. ‘ஆச்சரியமான உறவின் உன்னத உணர்வுகளை’ உணரவும் வைக்கிறார்.

    6. உறவுகள் ஒடிந்த பறவைகள் !!!demigod

      (சிறுகதை) மதிப்பெண் – 2 / 4

      கோயிலும் குளமும் இருந்தா போதுமா? மொபைல் போன் வேலை செய்ய ஒரு டவர் போடக்கூடாது?

      அலட்டல் இல்லை. என் இளவயது குமுதம் கதை போன்ற நடை. எப்படி முடியப் போகிறது என்று அனுமாணிக்க விட்டே ஆரம்பிக்கிறார். கிராமத்துடன் ஆன உறவை இன்னும் கொஞ்சம் ஊடாட விட்டிருக்கலாம்.

    7. இன்றும்கப்பி பய

      (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

      கப்பி பய மீது இருந்த எதிர்பார்ப்பா? அல்லது ‘பிரா’வை உள்ளிழுத்து கற்பு காக்கும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வகை ஸ்பரிசக் காதல் காட்சிகளா? பெரும் ஏமாற்றம்.

    8. பேசலாம்: செக்ஸ் இல்லாத கதைவா மணிகண்டன்

      (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

      ஜெஸிலா: ஜனரஞ்சக புத்தகத்தில் வரும் கதைப் போல் இருக்கிறது.

      அத்தைப் பாட்டி சொல்வாங்களே… அது போன்ற விவரணை + மதிப்பீடு. கிசுகிசு நெடி. உறவுகளில் உணர்வுகளைக் காணவில்லை.

    9. பொருனைக்கரையிலே: அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும்மானு (yezhisai)

      (சொந்தக்கதை) மதிப்பெண் – 1.5 / 4

      எனக்கு இரண்டு மாமியார்கள்.
      அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
      இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.

      எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)

      உள்ளொன்று மறைக்காத எழுத்து.

    10. பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள்மானு (yezhisai)

      (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

      ஏதோ எனக்கு தெரியாத கேரக்டருங்களை (ஃபீமேல் கைண்ட் குறித்து) சொல்றாங்க.

      கவிதையாக எழுதவில்லை என்பதால் +1. நிஜ சம்பவம் என்பதால் +1. நகாசு இடவில்லை என்பதால் +1.

      மினுக்கிடவில்லை என்பதால் -1. இது போன்ற தெரிந்த நிகழ்வுகளை வித்தியாசமாக சொல்லவில்லை என்பதால் -1.

    11. சென்னைக் கச்சேரி: தீவுகள்தேவ்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 0.5 / 4

      சில சந்தேகங்கள்:

      • கூட்டமாய் தான் (அல்லது) கூட்டமாகத்தான் ?
      • தனித் தனித் தீவுகளாய் (அல்லது) தனித் தனி தீவுகளாய்
      • கரையேரி
      • எங்கேங்கோ
      • நம் உறவுகள்… என்று முடிகிறது. எந்த உறவு என்றே சொல்லவில்லையே :ஓ!

    12. நிகழ்வுகள்: உறவு என்பதால்சிவமுருகன் நீலமேகம்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 0.5 / 4

      ஸ்டீரியோடைப்களை் தொடுக்கிறார். எழுத்துப்பிழைகள் உண்டு (சிலிர்பதில்லை, பெணென்பதால், பெணென்று, ஏற்கமாட்டரே, தவிற்பதில்லை).

    13. பனி விழுதுகள்… 2தொட்டராய ஸ்வாமி

      (புதுக்கவிதை)கள்

      மூன்று எழுதியிருக்கிறார்:

      1. தன்னலதாயின் உறவுகளில்…. :: கருத்துக்காக – 0 / 4
      2. தாய்மடி வாசம் :: நான்கடிக் கவிதையில் பிழைகள் மலிந்திருப்பதால்: 0.5 / 4
      3. அப்பா.. :: 1.5 / 4

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |

    Pets – Cat Experiences

    நல்ல கதையைப் படித்தவுடன், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு யோசனை செய்யத் தோன்றும். வலையில் கதை படித்தால், குளம்பி அருந்தவோ, அலுவல் வேலையை தொடரவோ வைக்கும். சிமுலேசனின் பூனைக்குட்டிகள் கதையை படித்தவுடன் என்னுடைய பூனை மஹாத்மியங்கள் எழுத வைத்தது.

    கரப்பான் பூச்சியை சாப்பிடும் என்றுதான் எனக்கு பூனை அறிமுகம் ஆனது. கரப்புகளுக்கு பாகுபாடு தெரியாது. குத்திட்டு உட்கார்ந்து மோட்டுவளையை அண்ணாந்து நோக்கி எண்ணிக்கை போடும் இடத்திலும் மீசையை ஆட்டும். ஸ்லோக புஸ்தகங்களிலும் குடியிருக்கும்.

    அஃபிஷியலாக வீட்டுக்குள் நுழைய, ஜூ.வி.யில் உலாவிய கிளுகிளு ராத்திரி ரவுண்ட-அப் போகும் ஆந்தையாருக்கும் சினிமா கிசுகிசுக்கும் மிஸ்டர் மியாவுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், கரப்புகள் இரவு நேரங்களில் சமீபத்திய Barnyard: The Original Party Animals திரைப்படம் போல் என்ன குசுகுசுக்குமோ? பாத்ரூமில் அரட்டை கச்சேரி நடந்தேறும். பயம் கலந்த அறுவருப்புடன் விளக்கைப் போட்டு, ஐக்கிய கரப்புகள் சபை கூட்டத்தை கலைப்பேன்.

    கிளி பறந்து வந்து தோளில் உட்கார்ந்தால் அழகு. இரு தோளில் உட்கார கரப்புகளுக்குள் பறக்கும் போட்டி நடந்தால்? வேற்று கிரகவாசிகள் தங்கும் ‘Men in Black’ தோற்றங்களுடன், கனவில் ‘War of the Worlds’ பூதாகரத்துடன் மிரட்டியதால், பூனையார் தருவிக்கப்பட்டார்.

    தம்பி, தங்கை இல்லாதவனுக்கு அடக்கி ஆள, சொன்னதை அடியொற்ற, தோற்றத்தில் சிறிய தோழி கிடைத்தது. கிட்டத்தட்ட ‘Meet the Parents’ மிஸ்டர் ஜின்க்ஸ் (Mr. Jinx) பழக்கவழக்கம். வேறு யாராவது வேடிக்கை பார்த்தால் மலஜலம் கழிக்காது. கதவை சார்த்திக் கொள்ளாத வருத்தத்துடன் காலைக்கடனை கரெக்டாக முடிக்க வேண்டிய இடத்தில் புத்திசாலித்தனமாக முடிக்கும்.

    எது உடைந்தாலும், எவ்வளவு சிதிலமடைந்தாலும் தூக்கிப் போடாமல் பாதுகாப்பது, மத்தியவர்க்க குடும்பங்களின் முக்கிய அடையாளம். அமெரிக்காவில் பூப்பூக்கும் காலத்திற்கு ஒரு முறை, இலையுதிர் காலத்திற்கு இன்னொரு முறை என்று ‘காராஜ் ஸேல்’ (Garage sale) போட்டு பழையன கழிதலை நிறைவேற்றுகிறார்கள். அவ்வாறு புதியன புகாத எங்கள் வீட்டு சிதிலமடைந்த கிணற்றுக் கம்பியில் தவறி தண்ணீருக்குள் விழுந்தார் ‘பூனை’.

    நாமகரணமிடாத பூனைகள்தான் எனக்குப் பழக்கம். அமெரிக்கா வந்தவுடன் ஆர்வக் கோளாறினாலும், தனிமை வாட்டியதாலும், வாடகை வீடாக இருந்தாலும் செல்லப் பிராணி வளர்க்க அனுமதி இருந்ததனாலும், இரு ‘அனாதரவான பூனைகளுக்கு அடைக்கலம் கொடுப்போர் தேவை’ அறிவிப்பில் தடுக்கி விழுந்ததனாலும், ஒரே சமயத்தில் இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு பூனையையும் இன்னொன்றையும் வேறுபடுத்த பெயர் வைத்தே ஆக வேண்டிய கட்டாயம்.

    காதலியின் பெயரை குழந்தைக்கு வைத்து அழகு பார்ப்பது சினிமா தாத்பர்யம். வீட்டுக்கு அடிக்கடி வருகை புரியும் நண்பனின் காதலியின் பெயரை, பூனைக்கு சூட்டுவது, தமிழ் சினிமா ரசிகனின் அடையாளம். தோழனின் சந்தியா (படிக்க: சவுண்ட் பார்ட்டி: நிஜமல்ல, கதை-3!) நினைவாக ‘சாண்டி’ ஆனாள்.

    செல்லங்களுக்கான உணவு மூன்று வகைப்படும்:
    * உயர் உயர் உயர் உணவு
    * உயர் உயர் உணவு
    * மிச்சம் மீதி கழிசடை.

    நான் தயாரித்த தக்காளி ரசம், முழு மிளகுடன் நெய்முந்திரி கூடிய வெண்பொங்கல் வகையறா ருசிக்காததால், வாரந்தோறும் வாங்கும் மளிகைப் பட்டியலில் உயர் உயர் உணவு கூடிக் கொண்டது.

    சென்னையில் காற்றோட்டமாக குப்பைத் தொட்டி, மரஞ்செடி பக்கம் ஒதுங்கிய தங்களின் ஒன்று விட்ட அண்ணாக்கள் போல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி தங்கள் ரகசியத்தைப் பதுக்க ‘சிறப்பு மலமணல்’ அமைக்க வேண்டும். ஒரு முறை சென்ற பிறகு ‘சொர்க்கம் என்பது நமக்கு புத்தம்புதிய மலமணல்தான்’ என்று விடாப்பிடியாக ‘மியாவ் மியாவ்’ தொண்டை கிழிய, மாற்ற வைக்கும். மலஜல மணல் மாற்றுவது, குழந்தைக்கு டயாபர் மாற்றுவதற்கு முன்னோட்டமாக அமையும்.

    மேற்கத்திய உலகில் பிராணி வளர்ப்பது நச்சுப்பிடித்த வேலை. உரிமம் பெற வேண்டும். கருத்தடை முடிக்க வேண்டும். நகம் வெட்ட வெண்டும்; மீறி எழும் நக அரிப்புக்கு ஏற்ற உபகரணங்களை வீட்டிற்கு வாங்க வேண்டும். முடியை சீராக்க வேண்டும்; அதையும் தாண்டி உதிரும் ரோமங்களை சுத்தமாக்க பொறுமை வேண்டும். பல்வலி, மூட்டு டாக்டர், வயதானவை, குண்டு உடம்பு என்று சிறப்பு மருத்துவ வசதி கவனிக்க வேண்டும். நான் நீள் விடுமுறையில் பதினைந்து நாள் பயணித்தாலும் பூனையை ஒழுங்காக பராமரிக்கா விட்டால், எஸ்.பி.சி.ஏ முதல் அனிமல் ப்ளானெட் டிவி வரை ஜீவகாருண்யம் இல்லாமல் முட்டிக்கு முட்டி தட்டி விடுவார்கள்.

    குடும்பம் குட்டி என்று ஆன பிறகு, தற்போது ‘பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே, பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே’ என்று எம்.எஸ் ராஜேஸ்வரியின் குரலில் களத்தூர் கமல் பாடும்போது நெஞ்சம் குறுகுறுப்பதில்லை.


    | |

    Opinions, Suggestions, Advices – Horsebuyer

    ராசுக்குட்டிக்கு ஒரு பாக்யராஜ் வகை பதில்:

    —-தேன்கூடு போட்டிக்கு படைப்பவர் பெயரே போடக்கூடாதுன்னு… இந்த கருத்துக் கணிப்பெல்லாம் பரவாயில்லயா—-

    எனக்கு ரொம்பப் பிடித்த கதை ஒன்று :-D)

    http://flickr.com/photos/lowfive/98058065/பக்கத்து ஊர் சந்தைக்கு குதிரை வாங்க அப்பாவும் மகனும் போறாங்க. நிறைய குதிரை வந்திருக்கிறது. தங்கள் பொக்கீடுக்கு ஏற்ற குதிரையை வாங்கி, தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    வருகிற வழியில் ‘பஹேலி’ படத்தில் வருமே… அந்த மாதிரி ஒரு குக்கிராமம்; பஞ்சாயத்து கூடும் மரநிழல். அதன் அடியில் இருவர் பேசிக் கொள்கிறார்கள்.

    ‘என்னங்க… காசு கொடுத்து வாங்கிட்டீங்க இல்ல? சவாரி செய்வதற்குத்தானே குதிரை இருக்கு… எதுக்கு ரெண்டு பேரும் நடந்து போறீங்க? பெரியவர் உட்கார்ந்து வரலாமில்ல!’

    நல்ல யோசனையாக தென்பட, அப்பா குதிரை மேல் ஏறிக் கொள்கிறார்.

    அடுத்த ‘வானத்தைப் போல’ குக்கிராமம். இன்னொரு மரத்தடி. இரண்டு வழிப்போக்கர்கள்.

    ‘அநியாயத்தப் பாருடா! கொளுத்தற வெயிலில் சின்னப் பையனை நடக்க விட்டு வேடிக்கை பார்த்துண்டே, பெருசு போடற ஆட்டத்தப் பார்த்தியாடா?’

    அப்பாவுக்கு சுருக்கென்று மனம் நோகிறது. சடாரென்று குதிரையை விட்டு குதித்து, அவர்களின் கண் முன்னாலேயே, பையனை ஏற்றிவிட்டு, பயணத்தைத் தொடர்கிறார்.

    இன்னொரு குறுக்கு சந்து. பிறிதிரண்டு பொழுதுபோகாதவர்கள்.

    ‘இதப்பாருடா… குதிரையை வாங்க தெரிஞ்சிருக்கு. அது எப்படி பயன்படும் என்று கூட அறியாதவங்களா இருக்காங்க. ஜம்முன்னு ரெண்டு பேரும் ஏறிக் கொண்டு, ஊருக்கு போய்சேருவதை விட்டுட்டு, ஒருத்தர் அன்ன நடை நடக்கிறார்.’

    சரிதானே என்று மின்னல் வெட்ட, அப்பாவும் ஏறிக்கொள்கிறார்.

    அடுத்த முக்கு. டீக்கடை பெஞ்சு. வேறொரு அலசல்வாதிகள்.

    ‘அய்யோ பாவம்… எனக்கு மட்டும் மனேகா காந்தி ஃபோன் நம்பர் கிடைச்சா உடனே சொல்லிடுவேன். வாயில்லா ஜீவண்டா அது. இரண்டு தடிமாடுங்களும் புஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சு முட்ட குதிரையை நோகடிக்கறத பார்த்தா ஆத்தாமையா இருக்குடா. காசு கொடுத்து வாங்கிய பணத்திமிர். நல்லது செய்ய வேண்டாம். இந்த மாதிரி கொடுமையை பார்க்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்’

    மிரண்டு போகிறார்கள் இருவரும். அப்பா முடிவெடுக்கிறார். குதிரையின் முன்னங்கால்களைத் தானும், பின்னங்கால்களை மகனும் தாங்குவது. தாங்களே புத்தம்புதிய உச்சசிரவஸ் குதிரையை தலைமேல் தூக்குகிறார்கள். குதிரை மிரண்டு போய், நாலுகாலில் ஓடியே போய்விட்டது.

    http://flickr.com/photos/lowfive/98058065/

    இந்தக் கதையில் நான் இந்த சந்துதோறும் கருத்து சொல்லும் சாதி 😉 அப்பா/மகன் மாதிரி பங்குபெறுவோர் குழம்பாத வரைக்கும் சந்தோசமே ;-))


    | |

    Raksha Bandhan

    அன்பிற்கினிய சகோதரிகளுக்கு ரசிகனின் ராக்கி வாழ்த்துகள்!

    பொக்கீடு பிரச்சினையாலும், பாலிவுட் அறிமுகம் இல்லாததாலும், கண்ணாடி உடைந்து போனதாலும், பாண்ட்வித் பிரச்சினையாலும், முகவரி கண்டுபிடிப்பு சிரமங்களினாலும், யாருக்கு அனுப்பலாம் என்று குழப்பத்தில் உள்ளேன்…

    சகோதரர்களே உதவுங்கள் 🙂

    1. ரெய்மா சென்

    2. இஷா கோபிகர், சுஷ்மிதா ஸென், நிஷா கோத்தாரி, அனுஷ்ரி தத்தா, ப்ரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா

    3. கத்ரீனா கய்ஃப்


    | |