Category Archives: Uncategorized

சில புத்தகங்கள்

சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்

1. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
2. எப்போதும் வாழும் கோடை – மனுஷ்யபுத்திரன்
3. பண்பாட்டு அசைவுகள் – தொ பரமசிவன்
4. தலித்திய விமர்சன கட்டுரைகள் – ராஜ்கௌதமன்
5. உண்மை சார்ந்த உரையாடல் – காலச்சுவடு பேட்டிகள்
6. விவாதங்கள் சர்ச்சைகள் – வெ.சா.
7. இன்றைய நாடக முயற்சிகள் – வெங்கட் சாமிநாதன்
8. என் பார்வையில் – சில கதைகளும் சில நாவல்களும் :: வெங்கட் சாமிநாதன்
9. என் பார்வையில் – சில கவிதைகள் :: வெங்கட் சாமிநாதன்
10. சில இலக்கிய ஆளுமைகள் :: வெங்கட் சாமிநாதன்
11. அலை புரளும் வாழ்க்கை :: பெ.அய்யனார்
12. கடக்க முடியாத நிழல் :: ரவிக்குமார்
13. கறுக்கும் மருதாணி :: கனிமொழி
14. அடங்க மறு :: தொல். திருமாவளவன்
15. தமிழில் நாடகப்பதிவுகள் :: அண்ணாமலை
16. இடிபாடுகளுக்கிடையில் :: வெளி ரங்கராஜன்
17. வன்முறை வாழ்க்கை :: கண்ணன்
18. கண்ணில் தெரியுது வானம்
19. ஆளுமைகள் மதிப்பீடுகள் (1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு) :: சுந்தர ராமசாமி
20. ஜெயமோகன் குறுநாவல்கள்
21. ஜெயமோகன் சிறுகதைகள்
22. தீராத பசி கொண்ட விலங்கு :: பாவண்ணன்
23. யாருக்கு யார் எழுதுவது :: இசைஞானி இளையராஜா
24. இது ராஜபாட்டை அல்ல :: சிவகுமார்
25. தென்பரை முதல் வெண்மணி வரை :: அப்பணசாமி
26. லாசரா படைப்புலகம் :: அபி
27. கிரா படைப்புலகம் :: ரமேஷ் – பிரேம்
28. உடைந்த மனோரதங்கள் (கு. ப. ரா. படைப்புலகம்) :: பெருமாள்முருகன்
29. பா.செயப்பிரகாசம் படைப்புலகம் :: களந்தை பீர்முகமது
30. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு. செல்லப்பா படைப்புலகம்) :: பெருமாள்முருகன்
31. காகங்கள் :: சுந்தர ராமசாமி
32. காக்டெயில் :: சுதேசமித்திரன்
33. கணையாழி களஞ்சியம் – 4
34. மௌனியின் கதைகள்
35. சட்டப்பேரவையில் தேவர் பற்றிய வழக்கு
36. கொதிப்பு உயர்ந்து வரும் :: ரவிக்குமார்
37. மிகை நாடும் கலை
38. உள்ளுணர்வின் தடத்தில் :: ஜெயமோகன்
39. பதிவுகள் :: அ யேசுராசா கட்டுரைகள்
40. கடலாடி :: நரசய்யா
41. தெய்வம் தெளிமின் :: கவிதாசரண்
42. சாதாரணன் :: நரசய்யா
43. சென்னை கானா :: வை ராமகிருஷ்ணன்
44. நதிமூலம் :: மணா
45. மணலின் கதை :: மனுஷ்யபுத்திரன்
46. எம் தமிழர் செய்த படம் :: தியடோர் பாஸ்கரன்
47. சொல்லில் நனையும் காலம் :: எஸ் வி ராஜதுரை
48. கிராமம் நகரம் மாநகரம் :: நா முத்துக்குமார்
49. இந்துத்துவத்தின் இருள்வெளிகள் :: அ மார்க்ஸ்
50. சொல்வதால் வழ்கிறேன் :: அ மார்க்ஸ்
51. ஆ மாதவன் கதைகள்
52: நெரிக்கட்டு :: அழகியபெரியவன்
53. ஒளி நிழல் உலகம் :: அ ராமசாமி
54. வானகமே இளவெயிலே மரச்செறிவே :: சுந்தர ராமசாமி
55. என் வீட்டின் வரைபடம் :: ஜே பி சாணக்யா
56. ஒளிவிலகல் :: யுவன் சந்திரசேகர்
57. மீஸான் கற்கள் :: புனத்தில் குஞ்ஞப்துல்லா (தமிழில்: குளச்சல் மு யூசுப்)
58. துயரமும் துயர நிமித்தமும் :: பெருமாள் முருகன்
59. வடக்கந்தரையில் அம்மாவின் பரம்பரை வீடு :: ஷாராஜ்
60. கோபுரம்தாங்கி :: சுதேசமித்திரன்

Burnt Out சேப்பல்

உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக ஆகிக் கொண்டிருக்கிறதா?

புகழ்பெற்ற காமெடியன் டேவ் சாப்பலுக்கு (Dave Chappelle) ஆகிப் போயிருக்கிறது. நான் தவறவிடாமல் பார்க்க நினைக்கும் நிகழ்ச்சிகளில் காமெடி செண்ட்ரலில் வரும் சேப்பல்ஸ் ஷோ-வும் ஒன்று.

அமெரிக்காவில் இருக்கும் இனபேதங்கள், கறுப்பர்களை இளக்காரம் செய்யும் மனப்பான்மை, ஏழைகளின் நிலை, போதைக்கு அடிமையாதல் என்று பேச பயப்படும் விஷயங்களை கிண்டலாக முன்வைப்பவர். மூன்று வருடங்களுக்கு முன்பு, ஆர்ப்பாட்டமில்லாமல் சாதாரணமாகத் தொடங்கிய நிகழ்ச்சி. ஆரம்பித்த சில வாரங்களிலேயே பரவலாகப் பேசப்பட்டு, இளசுகளிடையே மவுசு கூடிப் போனது.

செயின்ஃபெல்ட்‘, ‘ஃப்ரெண்ட்ஸ்‘ போல் இல்லாமல் சேப்பலே முழுக்க முழுக்க சொந்தமாக எழுதி, இயக்கி, தயாரித்து வந்தார்.

தயாரிப்பாளர்களின் வாயில் எச்சிலூறும் ஆசை, பார்வையாளர்களின் அடுத்து எப்படி கலக்கப் போகிறார் என்னும் அதீத ஏற்றிவிடல், எல்லாவற்றையும் சொந்தமாக செய்தால்தான் நிகழ்ச்சியின் தரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்னும் கணிப்பு, எல்லாம் சேர்ந்து அவரை மனநலக் காப்பகத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது.

‘உங்ககிட்டேயிருந்து இதை எதிர்பார்க்கலை’, ‘நீங்களா இப்படி எழுதினது’, ‘அவர் படைப்பு என்றால் இப்படி இருக்காது’ என்று ஏற்றிவிட்டுப் பார்த்திருக்கிறேன். படைப்பாளியை அதீதமாக, நேரடியாக பாதித்ததை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்.

‘ஆளவந்தானி’ல் மொட்டை கமலுக்கும் தொடை காட்டும் மனீஷாவும் – அருகில் இருக்கும் போது வரும் வசனம்: ‘மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடலமா?!

அந்த மாதிரி ஒரு காமெண்ட்:

சுவையான வலைப்பதிவும் சேப்பல்ஸ் ஷோ மாதிரிதான் 😉

இதை எழுதாதீங்க… அதைப் போஸ்ட் போடாதீங்க… என்னும் நல்லெண்ண சித்தாந்தங்கள் இலவசமாய் நிறைய கிடைக்கும்.

செய்தி: நியு யார்க் டைம்ஸ் | CNN.com

சின்மயி

திரைப்பட பிண்ணணி பாடகி சின்மயி வலைப்பதிய ஆரம்பித்திருக்கிறார். அன்னியன் முன்னோட்டத்தை இவரும் வாய் பிளந்து பாராட்டுகிறார். (அன்னியன் Daredevil-இன் உல்டா என்னும் வதந்தியும் இணையத்தில் உலாவுகிறது.)

‘சுகுமாரி’தான் என்னுடைய #1. ‘அண்டாங்காக்கா’வும் பிடித்திருக்கிறது. ராக் துர்காவும் சுத்த சாவேரியும் எனக்கு விருப்பமிக்கதாக ஆகிப் போயிருக்கிறது.

வாங்க… வாங்க! (நன்றி: சாம்பார் மாஃபியா & இட்லி சட்னி)

சின்மயி பாடிய பாடல்களில் என்னுடைய நினைவில் நிற்பவை:

ஒரு தெய்வம் தந்த பூவே – கன்னத்தில் முத்தமிட்டால்
கிறுக்கா கிறுக்கா – விசில்
பூந்தேனா – ஈரநிலம்
என்ன இது – நள தமயந்தி
ப்ளீஸ் சார் – பாய்ஸ்
பிரிவெல்லாம் பிரிவல்ல – சூரி
என்னுயிர் தோழியே – கண்களால் கைது செய்
ஒப்பணகார வீதியிலே – கிரி
எங்கு பிறந்தது – விஷ்வதுளசி
காதலிக்கும் ஆசையில்லை – செல்லமே
சின்ன சின்ன – கண்ணாடிப் பூக்கள்
சில் சில் – அறிந்தும் அறியாமலும்

ஞாபகம் வருதே

தினம் ஒரு திரைப்பாடல் :: thaai sollum uRavai from kanaa kaNdEn

தாய் சொல்லும் உறவை வைத்தே
உலகம் சொந்தம்
தாயுள்ள வரையில்தானே
கிராமம் சொந்தம்

பதினேழு வயசு வரைக்கும்
நீ வாழும் வாழ்க்கைதானே
பாலூத்தும் காலம் வரைக்கும்
கூட வரும்

கடலோர உப்பங்கழியும்
காதோடும் பேசும் அலையும்
ஐநூறு மைல் போனாலும்
தேடி வரும்

கிராமம் தன் மடியில் கட்டி
வளர்த்தது உன்னை
கிராமத்த மடியில கட்டி
போவது என்ன?

சாதி தாண்டியே நட்பும் உறவும்
மலர்ந்தது அங்கே
சமையாத பெண்கள் பார்த்து
மயங்கியது அங்கே

உப்பு மேட்டிலே ஆடி முடித்து
சாய்ந்ததும் அங்கே
ஆகாயம் இழுத்துப் போர்த்தி
தூங்கியது அங்கே

கையோடு அள்ளிய தண்ணி
விரலோடு கசிவது போல
கண்ணோடு நினைவுகள் எல்லாம்
கசிகிறதே

நெல்லிக்காய் அடியில் உள்ள
தித்திப்பாக
வறுமையின் கீழ் லட்சியம் ஒண்ணு
வந்தது அங்கே

தூக்குவாளி தலையில் மாட்டி
கிரீடம் என்றாய்

சொந்த செலவில் சூரியன் வாங்க
ஆசை கொண்டாய்

சொந்த உறவுகள் இலைகளைப் போலே
உதிர்ந்திடக் கண்டாய்
வந்த உறவுகள் வளர்பிறை ஆக
வளர்ந்திடக் கண்டாய்

மனங்கொண்ட கனவுகள் எல்லாம்
மண்பாதைச் சில்லுகளாக
மறுவாழ்வின் வெற்றியைத் தேடி ஓடுகிறாய்

இன்னும் இருபது

சுரேஷ் கொடுத்ததைத் பின் தொடர்ந்து….

மணி ரத்னம்
மௌன ராகம் (1)
அஞ்சலி (2)
ரோஜா (3)
இருவர் (4)
அலைபாயுதே (5)
கன்னத்தில் முத்தமிட்டால் (6)

கமல்
குணா (7)
நாயகன் (8)
குருதிப்புனல் (9)
மகாநதி (10)

ஆறிலிருந்து அறுபது வரை
திருவிளையாடல் (11)
தில்லானா மோகனாம்பாள் (12)

கே பாலச்சந்தர்
தண்ணீர் தண்ணீர் (13)
சிந்து பைரவி (14)
புதுப்புது அர்த்தங்கள் (15)
வானமே எல்லை (16)

பார்த்திபன்
புதிய பாதை (17)
ஹவுஸ் புல் (18)

பாலு மகேந்திரா
மூன்றாம் பிறை (19)
வீடு (20)

பாரதிராஜா
பதினாறு வயதினிலே (21)
மண்வாசனை (22)
வேதம் புதிது (23)
முதல் மரியாதை (24)
கருத்தம்மா (25)
கடல் பூக்கள் (26)

மகேந்திரன்
முள்ளும் மலரும் (27)

பாக்யராஜ்
மௌன கீதங்கள் (28)

நவீனர்கள்
கேளடி கண்மணி (29)
விடுகதை (30)
இந்தியன் (31)
சேது (32)
குட்டி (33)
இயற்கை (34)
காதல் (35)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (36)

எனக்குத் தோன்றியவை

அந்தக் காலம்
சபாபதி (37)
ஔவையார் (38)
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி (39)

இரு துருவங்கள்
மலைக் கள்ளன் (40)
தூக்கு தூக்கி (41)
உத்தமபுத்திரன் (42)
அம்பிகாபதி (43)
பராசக்தி (44)
திரும்பிப் பார் (45)
அந்த நாள் (46)
குலேபகாவலி (47)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (48)

நெஞ்சில் நிறைந்தவை
கண் சிவந்தால் மண் சிவக்கும் (49)
உதிரிப்பூக்கள் (50)
அழியாத கோலங்கள் (51)
மெட்டி (52)
வண்ண வண்ணப் பூக்கள் (53)
பசி (54)
எச்சில் இரவுகள் (55)
பணம் பெண் பாசம் (56)
சுவரில்லாத சித்திரங்கள் (57)
ரோசாப்பூ ரவிக்கைகாரி (58)
அவள் அப்படித்தான் (59)
வறுமையின் நிறம் சிவப்பு (60)
கன்னிப் பருவத்திலே (61)
விதி (62)
சிறை (63)
கிளிஞ்சல்கள் (64)
ஆசை (65)

ரிலாக்ஸ்
தில்லுமுல்லு (66)
மைக்கேல் மதன காமராஜன் (67)
பொய்க்கால் குதிரைகள் (68)
மழலைப் பட்டாளம் (69)
ஜெகன்மோகினி (70)
பட்டணத்தில் பூதம் (71)

அசத்தறாங்க
தூள் (72)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (73)
முதல்வன் (74)
ஜெண்டில்மேன் (75)
அண்ணாமலை (76)
விக்ரம் (77)
கில்லி (78)
வேலைக்காரன் (79)
சகலகலா வல்லவன் (80)

மைக்ரோசாஃப்ட் லீன்க்ஸ்

A Microsoft-Red Hat warming trend? | CNET News.com: ரெட் ஹாட் நிறுவனத்தின் தலைவர் மாத்யூ ஸுலிக்கும் (Matthew J. Szulik) மைக்ரோசாஃப்டின் நிறுவனர் ஸ்டீவ் பால்மரும் (Steve Ballmer) நியு யார்க்கில் (McCormick & Schmick) ரகசியமாய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

ஸெனிக்ஸ் போயே போச்சு…
மைக்ரோசாஃப்ட் லீனக்ஸ் வரப்போகிறதா?
அல்லது ரெட் ஹாட் ஸ்வாஹா ஆகிறதா?
குறைந்தபட்சம் ஐரோப்பிய கெடுபிடிகளில் இருந்து தப்பிக்கும் வழியையாவது கேட்ஸ் கண்டுபிடித்து இருப்பார்!?

வார பலன்

வாரபலன் ஜூலை 17, 2003 :: மத்தளராயன்

காலச்சுவடு ஜூலை – ஆகஸ்ட் 2003 இதழில் அரவிந்தன் எழுதிய ‘இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது?’ படித்தேன்.

‘ஜெயகாந்தன் கதைகளை முன் வைத்து’ என்று அவர் தொடங்குவது ‘ஜெயகாந்தன் கதைகளை முன்வைத்து அவர் மீது நிகழ்த்தும் தடியடிப் பிரயோகம் ‘ என்பதன் தலைப்புச் சுருக்கம்.

‘அவருடைய கதைகள் பற்றித் தீவிர இலக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இதழ் ஒன்றில் விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் ஒன்றும் கிடையாது’ என்று ஆரம்பிக்கிறார் அரவிந்தன் கெத்தாக.

சரி சார், அப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்க்கப் போங்க. நாங்க எங்க வேலையைப் பார்க்கப் போகிறோம். காலச்சுவடு அதன் வேலையைப் பார்க்கட்டும். ஜெயகாந்தன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

அட, ஒரு பேச்சுக்குச் சொன்னாப் போயிடறதா? ஜெயகாந்தனை இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடலாம் வாங்க.

அரவிந்தன் நம்மை வாசலில் நிறுத்தி விட்டுச் சிடுசிடுத்தபடி பிரம்போடு விமர்சன வகுப்புக்குள் நுழைகிறார்.

‘கதை முழுவதும் இரைச்சல்’, ‘மிகு உணர்ச்சி’, ‘ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம்’

மனுஷன் மகா கோபமாக இருக்கிறார். ஜெயகாந்தனை பெஞ்சில் எழுந்து நிற்கச் சொல்லி விரட்டுகிறார்.

முதல் விளாசு – ‘ஜெயகாந்தனின் முதல் கதையிலேயே அவர் ஏ தென்றலே என்கிறார். படிக்க எனக்கு மிகவும் கூச்சம் ஏற்படுகிறது’.

ஜெயகாந்தன், ஏன் இப்படிக் கஷடப் படுத்துகிறீர்கள்? அடிக்கத்தானே விமர்சகர்? அவர் இப்படிக் கூசிக் குறுகி நிற்கலாமா? ‘இது என் முதல் நாவல்’ என்று ‘ஒரு புளியமரத்தின் கதை’ முன்னுரையில் எழுதியதுபோல் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்திருந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் வருமா? உமக்கு ஏன் புத்தி கெட்டுப் போனது?

(வெகுஜனப் பத்திரிகையான கல்கியில் வெகுஜன எழுத்தாளரான குட்டிகிருஷ்ணன் – கி.ராஜேந்திரன் -இருபத்தைந்து வருடம் முன்னால் இதுதான் புளியமரம் என்று அறிமுகப் படுத்தாமல் இருந்தால் எனக்கும் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும், புன்னை மரத்துக்கும் புளிய மரத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்காது. குட்டிகிருஷ்ணனுக்கு நன்றி சொன்னால் அரவிந்தன் என் தலையில் ஓங்கிக் குட்டுவார்).

ஜெயகாந்தன் கதைகளில் அடிக்கடி ஆவும் ஓவும் போட்டுக் கொண்டிருந்தால் எப்படித் தாங்குவது என்று இன்னொரு முறை பிரம்பை ஓங்கி விட்டு, கை வலிக்கிறதே என்று அலறுகிறார் அரவிந்தன்.

சுஜாதா ஒரு தடவை தயங்கித் தயங்கிச் சொன்னாரே – ‘ஓ’வை ஜெ.கே ஒரு கதையில் கொஞ்சம் போல் பயன்படுத்தியிருக்கிறார் என்று. அது இல்லையா விஷயம்? அவர் போட்ட மீதி ‘ஓ’வை எல்லாம் நான் ஏன் பார்க்காமல் போனேன்? ஓ ஜெயகாந்தன், ஓய் ஜெயகாந்தன், அடிக்க வாகாக உள்ளங்கையை இப்படி நீட்டுமய்யா. பெஞ்சில் நின்றால் குனியக் கூடாதா என்ன? இனிமேல் ஓ போடாமல் கதை எழுதுவேன் என்று நூறு முறை இம்போசிஷன் எழுதும்.

பாக்கியராஜ் படம் மாதிரிக் கதை எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று அடுத்த அடி. பாக்கியராஜ் இங்கே எங்கே வந்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. அப்புறம் அரவிந்தன் கை முருங்கைக் காய் பறிக்கப் போயிருக்குமா என்ன? உங்களுக்கும் ரெண்டு சாத்து. ஆமா.

‘வாசகர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் என்ற ஜெயகாந்தனது துடிப்பு கடைசி வரை ஓய்ந்ததாகத் தெரியவில்லை’

அரவிந்தனின் இந்தக் ‘கடைசி வரை’யை இன்னொரு தடவை அவசரமாகப் படித்து, காலச்சுவடைத் தொப்பென்று போட்டு விட்டு ஓடியே போய் இந்து பத்திரிகையைத் தேடினேன். ஸ்போர்ட்ஸ் பேஜில் ஓபிச்சுவரியை வரி விடாமல் படித்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். நலம். நலமே.

ஜெயகாந்தன் கதைகளை இது வரை விமர்சித்தவர்கள் (அதாவது பாராட்டியவர்கள்) அரவிந்தனின் கண்ணில் அடுத்துப் படுகிறார்கள். ஒரு குறுஞ்சிரிப்போடு அவர்கள் பக்கத்தில் போக, முன்வரிசையில் பாவம், நடுங்கியபடி நவபாரதி. (ஆமா, தோத்தாத்திரி எங்கே? அரவிந்தனின் பிரம்புக்குப் பயந்து ஆப்செண்டா?)

நவபாரதிக்குதான் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் என்று எத்தனை வித அர்ச்சனை! ‘ஆராதகர் நவபாரதி’, ‘உபாசகர் நவபாரதி’, ‘ஜெயகாந்தனின் பிரம்மாண்டத்தைக் கண்டு மூர்ச்சை போட்டு விழுந்த நவபாரதி’.

அது யார் பொன்னீலனா? ‘தமிழ் நாட்டுப் பண்பாட்டுத் தளத்தை ஜெயகாந்தன் கதைபோல் ஆரோக்கியமாக உலுக்கிய இன்னொரு சிறுகதையை நான் இன்றுவரை அறியவில்லை’ என்கிறாரா அவர்?

அரவிந்தன் ஒரு வினாடி பொன்னீலனின் கண்களைப் பார்க்கிறார். மனுஷன் சாமி வந்த மாதிரி நிற்கிறார், பார் என்று நம்மிடம் சைகை செய்கிறார். பொன்னீலன் புல்லரிக்கிறதாக அவர் புறங்கையைப் பார்த்து விட்டுத் தீர்மானமாகச் சொல்கிறார்.

இந்த நவபாரதியின், இந்தப் பொன்னீலனின் மிரட்டலையும் மீறி ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தில் நுழைந்தாராம் அரவிந்தன். கேட்கவே ரத்தம் கொதிக்கிறது. மூர்ச்சை போட்டவரும், புல்லரித்துப் போய் நிற்கிறவரும் அப்படியே படுத்தும், புறங்கையைச் சொரிந்து கொண்டும் கிடக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு இப்படி அரவிந்தனை மிரட்டுகிறார்கள்?

சரி, இந்த மிரட்டலையும் மீறித் துணிவோடு அந்த அடலேறு அக்கினிப் பிரவேசத்துக்குள் போய்ப் பார்த்தால் அம்மா பெண்ணுக்குத் தலையில் தண்ணீரை விட்டுக் கொண்டிருக்கிறாள். அம்புட்டுத்தானா என்று ஏமாற்றம் அரவிந்தனுக்கு. ஜெயகாந்தன் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால், புத்தகம் வாங்கிய காசுக்கு அவருக்குத் திருப்தி கிடைத்திருக்கும் :

1) ஸ்ரீவேணுகோபாலன் எச்சமாகத் தொடர்ந்து எழுதியது போல் அந்த கங்காவைத் தலையில் நெருப்பு வைத்துக் கொல்லலாம். குறைந்த பட்சம் அவள் தலையில் வென்னீரையாவது ஊற்றியிருக்கலாம். அரவிந்தனுக்கு ஜலதோஷம் பிடித்து அடுக்கடுக்காக இப்படித் தும்மல் வராது.

2) கங்காவும் அவள் அம்மாவும் காலச்சுவடு பத்திரிகையைப் புரட்டி, அரவிந்தனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் ‘விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே விழும் வெளியைச் சாத்தியப்படுத்தும் காரணிகளையும் அவற்றின் ஊற்றுக்கண்களையும் இனம் காண முயலும் பிரக்ஞைக்கு ஒற்றைப் பரிமாண போதனைகளால் எந்தப் பலனும் இருக்காது’ என்பதன் அர்த்தம் என்ன என்பதை விவாதித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதாகவோ, சேர்ந்து கையெழுத்துப் போட்டு காலச்சுவடுக்கு வாசகர் கடிதம் எழுதுவதாகவோ முடிக்கலாம்.

3) சூடாக ஒரு கப் காப்பி சாப்பிட்டுப் படுத்துக் கொள்ளப் போகவைத்திருக்கலாம்.

‘நல்ல’ எழுத்தைப் படித்த திருப்தியும் வேண்டும். தீவிர எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் ஆழ்ந்த தொந்தரவிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும் என்று உள்ளூர விரும்புகிறவர்களுக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று ‘பல் எனாமல் பாதுகாப்புக்கும், ஈறுகளின் உறுதிக்குமான பற்பசை கோல்கேட்’ என வாயசைவுக்கு வார்த்தை ஒட்டாமல் சொல்லும் டி.வி விளம்பர பல் டாக்டர் போல் சொல்கிறார் அரவிந்தன். அரவிந்தன் குரல் அவருடைய சொந்தக்குரல் தானா என்று நான் கேட்கமாட்டேன்.

கோபால் பல்பொடி ஒண்ணு கொடுப்பா. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றதாமே?

நன்றி: திண்ணையில் மத்தளராயன் படைப்புகள்

அயோத்தியாவும் ஷாக்-கும்

சனிக்கிழமைகளில் சௌகரியமான இரவு பதினோரு மணிக்கு விடுமுறைக் கொண்டாட்டமாக திரைப்படங்களைப் போட்டு வருகிறார்கள் சன் டிவி. இதனால் ‘சென்ற வார உலகம்‘ நின்று போனதும், பூத் / ஷாக் / ராஸ் ஆகியவற்றை விட பயமுறுத்தலான ‘காதல் எஃப்.எம்‘ போன்ற படங்களும் கிடைத்தாலும், மீண்டும் ‘சதி லீலாவதி’, மீண்டும் ‘ஆளவந்தான்’, முதன் முறையாக ‘அயோத்தியா’ போன்றவைகளும் கிடைக்கிறது.

சதி லீலாவதி‘ வாஞ்சையான படம். உள்ளே இருக்கும் அரக்கன் எட்டிப் பார்த்தால் ரமேஷ் அரவிந்த் போலத் தெரியலாம். வாடர் டேங்க் அடியில் நடந்த கசமுசாவை அகஸ்மாத்தாக கிண்டலடித்துக் கொள்ளும் பால்ய காலத் தோழி; தப்பிக்க சான்ஸ் கிடைத்தால் தவறு செய்ய நினைக்கும் ஹீரோ; குடும்பத்துடன் விடுமுறை அடிக்க நினைக்கும் மாமனார். இளையராஜாவின் ‘மகராஜனோடு ராணி வந்து சேரும்’ பாடலும், பாலு மகேந்திராவின் கனவு போன்ற காட்சிகளும், பாடற்காட்சியென்றால் ரெஸ்ட்ரூம் போக நினைப்பவர்களையும் விமர்சனத்திற்கு குறிப்பு எடுத்துக் கொள்பவர்களையும் ப்ரேக் போடவைக்கும்.

ஆளவந்தான்‘ இலக்கிய செறிவான மிடில் மேகஸின் போல் இருக்கிறது. முதல் புரட்டலில் கொஞ்சம் அயர்ச்சியைத் தந்தது. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தபோது ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தியது. இரண்டு வருடம் கழித்து மீள் பார்த்தபோதும், விறுவிறுப்புடன் சென்றது. நந்து என்பவனை குரங்குக்கு ஒப்பீடாக முன்னிறுத்தி அறிமுகம். ரவீணா டாண்டனுடன் சிட்-காம் போன்ற மெல்லிய புன்னகையை வரவைத்துக் கொண்டேயிருக்கும் நகைச்சுவை. (வசனம்: கமல்) சுவற்றில் மனீஷா போஸ்டரை தேய்த்துவிட்டு விடைபெறுதல். முண்டத்தைப் பேசவைத்துப் பார்க்கும் எள்ளல். கல்யாணமாவதற்கு முன்பே கர்ப்பம் என்பதை லைட்டாக எடுத்துக் கொள்ளும் சிட்டி அப்பா சரத்பாபு. சிறிது நேரமே வந்து போகும் மனீஷா முதல் வித்தியாசமான வியாதியுடன் வரும் மாமா வரை பொருத்தமான கேரக்டரைஸைஷன். சந்திரமுகியில் டாடா இண்டிகாம் போல், கோல்ட் வின்னர் பலூன் க்ளைமாக்ஸில் குதித்தது தவிர, ‘சண்டான்ஸ்’ விருதுகளுக்கு எற்ற படம்.

அஜீத்தின் கடந்த மூன்று வருடப் படங்கள் கொடுத்த ஏமாற்றம் மாதிரி இல்லாமல் ‘அயோத்தியா‘ மெலிதான ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ‘நீ எந்த ஊர்’ என்று முகவரி இல்லாத நடிகர்களைக் கொண்டு, சமீபத்திய தலைவலியான ‘திருப்பாச்சி’களை விட — திருப்தியும் லாஜிக்கும் மெஸேஜும் மசாலாவும் கலந்த படம்.

இந்து சி.ஈ.ஓ.வும் முஸ்லீம் சி.ஓ.ஓ.வும் பிஸினஸ் பார்டனர்கள். அவர்களிடம் வேலை பார்த்து தில்லுமுல்லாடும் மணிவண்ணன் இருவருக்குமிடையே பூச்சி மருந்தை விதைத்து, கொசு வலையை நெய்கிறார். பிரிகிறார்கள். இருவரின் மனைவியரிடையே நட்பு தொடர்கிறது. ஒருவரின் பிள்ளைப்பேற்றில் ஆபத்து என்பதை அறிந்து, தமிழ் சினிமா கோட்பாடுகளின்படி, குழந்தைகள் இடம்மாறி வளர்கிறார்கள். இருவரும் வளர்ந்தபிறகு, எதிர் கேம்ப் முறைப் பெண்களை, மதம் விட்டு மதம் மாறாமல் காதலிக்கிறார்கள்.

மணிவண்ணனின் சத்யராஜ் ஸ்டைல் நக்கல், ‘மெட்டி ஒலி’/டும் டும் டும் டெல்லி குமாரின் அமரிக்கையான மதராஸா ஆசிரியர் தோற்றம், வில்லத்தனத்தால் பைத்தியக்காரராகும் இளவரசு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாலைந்து வருடம் முன்பு எல்லா படங்களிலும் தலையை காட்டிக் கொண்டிருந்த மணிவண்ணன், ஏன் இப்போது வருடத்துக்கு ஓரிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்!?

போரடிக்காத திரைக்கதை, நம்பக் கூடிய காட்சியமைப்பு, ஒத்துக் கொள்ளக் கூடிய, ஆனால் எதிர்பார்க்கவைக்கும் முடிவு என்று எல்லாம் பளிச் பளிச். ஸ்டார் வேல்யூ இல்லாவிட்டாலும் இரு (அறிமுக?) நாயக நாயகிகளும் அலட்டாமல் தோன்றியிருந்தார்கள். பாட்டுக்கள் எதுவுமே பெரிதாக ரசிக்கும்படி இல்லாததுதான் ஒரே குறை.

ரஜினி நடித்திருந்தால் ஓடியிருக்கும். குறைந்தபட்சம் ரகஸியாவோ மும்தாஜோ ஆட்டம் போட்டிருந்தால் கூட விகடனில் இடம்பிடித்திருக்கும்.

தனியார் பொறியியல் கல்லூரிகள்

அண்ணா பல்கலை. வெளியிட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரப் பட்டியல்

முப்பத்தொன்று – அறுபது

அறுபத்து மூன்று – தொண்ணூற்றி நான்கு

95 – 111

நன்றி: நெவர் எண்டிங் ட்ரீம்ஸ்

குறிப்பு கொடுங்க சார்

இந்தப் படத்துக்கு பொருத்தமான கிண்டல் குறிப்பு கொடுங்கள் பார்க்கலாம்.

எனக்குத் தோன்றியது:

‘புஷ் கை குலுக்க மறுத்ததால், இந்த ஏற்பாடு – ப்யூடின்

‘இப்போதைக்கு வட்டிக்கு பதிலாக இந்த வோல்கா காரை வச்சிக்கறேன்புஷ்