Category Archives: Uncategorized

தமிழோசையில் திருமா

திருமாவளவன் செவ்வி

கேள்விகள் சில:

  • ஒரு காலத்திலே, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்திலே மிகப் பெரிய விழிப்புணர்வு, ஒரு வேகம், உணர்வுபூர்வமான ஆதரவு இருந்தது. ஆனால், கடந்த கால சம்பவங்களுக்குப் பிறகு தமிழகத்திலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு என்ன மாதிரியான அணுகுமுறை இருக்கிறது? மக்களிடையே என்ன மாதிரியான உணர்வுகள் இருக்கின்றன? அரசியல் கட்சிகளிடையே என்ன மாதிரியான நிலைப்பாடு இருக்கிறது?
  • எந்த காரணத்தினால் விடுதலைப் புலிகளுக்கு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு, வெளிப்படையாக ஆதரவு தரவேண்டிய நிலை ஏன்?
  • பொடா சட்டம் மட்டுமே தமிழக மக்களை (விடுதலைப் புலிகளை விட்டு) விலக்கி வைப்பதாக நினைக்கிறீர்களா? அது தவிர கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிகழ்ந்த சில நிகழ்வுகள் கூட பொதுமக்களை விலகிச் செல்ல வைக்க கூடும் என்று கருதலாம் அல்லவா?
  • வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?
  • கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ் தேசியம் என்பது திராவிடக் கட்சிகளின் போராட்டமாக இருக்கிறது. தமிழ் தேசியத்துக்குள் தலித் மக்களைக் கொண்டு வந்தார்களா என்ற கேள்வி இருக்கிறது. தமிழ் தேசியம் என்பது தலித் மக்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறதா? விடுதலை சிறுத்தைகள் தமிழ் தேசியம் பேசுவதன் அர்த்தம் என்ன?
  • 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ஜ.க. என்னும் ஹிந்து வலதுசாரி கட்சியுடன் அரசியல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வது உங்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றவில்லை. சித்தாந்தரீதியில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸின் அரசியல் அங்கமாகக் கருதப்படும் பாரதீய ஜனதா கட்சியுடன், உங்களைப் போன்ற கட்சிகள் ஒரே அணியில் எப்படி இருக்க முடியும்?

    திருமாவளவனின் பதில்கள்


    | |

  • சனி #8

    #1: மறுப்புக்கூற்று(கள்): இந்தப் பதிவை படிப்பதால் கூட்டல் கழித்தல் மேலான நம்பிக்கைகள் மூடமாகலாம். உங்கள் உடைந்த ஸ்கேலைக் கொண்டு ரிச்டர், சனியை சுற்றியிருக்கும் தூசு வட்டம் ஆகியவற்றை அடிக்க நேரிடலாம்.

    #2.

    Yarl.com :: எண் சோதிடம்: இந்திய எண் சோதிடர்கள் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு கோளை ஒதுக்கி பலன் சொல்கிறார்கள்.

    1 – ஞாயிறு,
    2 – கேது,
    3 – குரு,
    4 – இராகு,
    5 – புதன்,
    6 – சுக்கிரன் (வெள்ளி )
    7 – சந்திரன்,
    8 – சனி,
    9 – செவ்வாய்

    #3.

    #4.

    திருப்பாவை: சில விளக்கங்கள் – ஹரி கிருஷ்ணன் – (maraththadi.com): “பேர்த்து என்ற சொல்லுக்கு ‘மறுபடியும்’ என்று ஒரு பொருள் வரும். பேர்த்தும். ‘பின்னைப் பழம்பொருட்கும் பேர்த்துமப் பெற்றியனே’ என்று திருவாசகம் சொல்லும். இங்கே இருக்கும் ‘பேர்த்து’ வேறு. பெயர்த்து என்பதன் வழக்கு வடிவம். கலோக்கியல். ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்திற்கு அசைவது பெயர்தல். இடப் பெயர்ச்சி. குரு பெயர்ச்சி, சனி….. இத்யாதி.”

    #5. 24. தமிழச் சாதி :: சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் – மதுரை திட்டம்:
    …..
    விதியே தமிழச் சாதியை எவ்வகை
    விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
    ஏனெனில்
    சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்

    திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
    ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
    எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
    கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
    முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்

    சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
    உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
    சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
    உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
    கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
    …..

    #6. ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள்

    தோஷம்: சனி தோஷம்
    பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
    என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை வாங்கித் தர வேண்டும்.

    #7.

    ஔவையார்:
    ஆத்திசூடி – உயிர்மெய் வருக்கம் :: 16. சனி நீராடு.

    #8. உலகத்தை அதிக அளவு நாசமாக்கிய பூகம்பங்கள்

    அ) பாகிஸ்தான் (அக்ட். 8, 2005) – 80,000 இறப்பு
    ஆ) இந்தோனேஷியா (டிச. 26 [2+6 ==8], 2004 – 280,000 (சுனாமியும் கூட வந்தது)
    இ) தென்கிழக்கு ஈரான் (டிச. 26, 2003) – 26,200 இறப்பு
    ஈ) இந்தியா (ஜன. 26, 2001) – 20,000 இறப்பு
    உ) துருக்கி (ஆக. 17 [1+7 == 8], 1999 – 17,000 இறப்பு
    ஊ) நார்த்ரிட்ஜ், கலிஃபோர்னியா (ஜன. 17, 1994) – 60 இறப்பு (இருபது முதல் நாற்பது பில்லியன் வரையிலான சேதங்கள்)


    | |

    திருப்பூர் கிருஷ்ணன்

    எனது குறிப்பேடு :: அமுதசுரபி – Sify.com

    சீரும் சிறப்பும்

    தினமணி கதிரில் நா.பா. ஆசிரியராக இருந்த காலம். திடீரென்று என்னை அழைத்தார் நா.பா. அன்று வந்த ஒரு தபாலைக் கையில் கொடுத்தார். “என்ன அழகாக இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் பாருங்கள்!” என்று அதில் எழுதப்பட்டிருந்த வெண்பாவைக் காண்பித்துக் கொண்டாடினார். (இப்போது அமுதசுரபியில் வெண்பாப் போட்டி தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது கதிரில் வெண்பாப் போட்டி நடந்து கொண்டிருந்தது.)

    மரபுக் கவிதையில் நா.பா.வைக் கவர்வது கடினம். அவரே ஒரு பண்டிதர். சுலபத்தில் எதையும் ஏற்கமாட்டார். நா.பா. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான சில முற்போக்குச் சிந்தனைகளை சுதேச மித்திரனில் ‘பண்டித. நா. பார்த்தசாரதி‘ என்ற பெயரில் எழுதியதுண்டு. அப்போது அதை எதிர்த்தவர்கள் “பண்டிதனா பார்த்தசாரதி?” என்று கேட்டு எதிர்த்ததாக சுதேசமித்திரன் சீனிவாசன் என்னிடம் சொன்னதுண்டு.

    நா.பா. ஒரு வெண்பாவின் அழகில் சொக்குவது என்பது சாமானியமல்ல. “ஒவ்வொரு சீரும் எவ்வளவு அழகாக வந்து விழுந்திருக்கிறது பாருங்கள்! இந்த வெண்பாவை இதை எழுதிய எழுத்தாளரின் புகைப்படத்துடன் வெளியிடுங்கள்!” என்று கூறினார் நா.பா. ஓவியர் தாமரை லேஅவுட் செய்ய நா.பா. விரும்பியபடியே அந்த வெண்பா அதை எழுதியவரின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது.

    “வேண்டாம் வரதட்சிணை”‘ என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

    பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
    முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
    ‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
    வேண்டாம் வரதட்சிணை!


    “நூறு மலர்களின் பெயர்களைக் கடகடவென்று மேடையில் ஒப்பிப்பீர்களே? இப்போதும் அந்த நூறு மலர்களும் ஞாபகமிருக்கிறதா?” கலகலவென மகிழ்ச்சியோடு சிரித்த சிவகுமார், “மனசுக்குள்ளேயே நிரந்தரமாய் மணம் வீசும் மலர்கள். அவை மனத்தை விட்டு எப்படிப் போகும்!” என்றார். அன்றுகண்ட மேனிக்கு அழிவில்லாத அதே இளமை, உற்சாகம், சுறுசுறுப்பு. நெறியோடு வாழ்வதால் விளைந்த தெளிவும் மலர்ச்சியும் அவர் முகத்திலும் பேச்சிலும்.


    சில எழுத்தாளர்கள் இப்படித்தான்

    கடுகடுவென்று இருக்கும் சில எழுத்தாளர்களைப் பார்க்கும்போது இரக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களிடம் அன்பு காட்டக்கூடத் தெரியாத இவர்கள் எழுதி என்ன செய்யப் போகிறார்கள் என்ற அலுப்பும் தோன்றுகிறது. சில எழுத்தாளர்களின் தற்பெருமையோ தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளரைச் சந்தித்தேன். கால்மணி நேரம் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். நான் ஊம் கொட்டு வதைக் கூட நிறுத்திவிட்டேன். என் முகத்தில் அலுப்பின் ரேகைகளைப் படித்துவிட்ட அந்த எழுத்தாளர் என்ன சொன்னார் தெரியுமா? “கால்மணி நேரமாக என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அலுப்பாகத் தான் இருக்கும். சரி. இனி ஒரு கால்மணி நேரம் நீங்கள் என்னைப் பற்றிப் பேசுங்கள்!”

    நன்றி: சிஃபி.காம்


    | |

    நவராத்திரி ப்ராகென்ஸ்டெய்ன்

    பாட்டு பாடு அல்லது வேஷம் கட்டு
    Navaraathri Golu
    அன்று சென்றதும் அதே சுண்டலுக்காக

    (சச்சச்சா)

    Halloween Kitty & Frankenstein
    இங்கு வந்ததும் இதே மிட்டாய்களுக்காக

    எங்கு போனாலும் ஒரே பாடல்
    Trick or Treat

    Halloween Kitty & Frankenstein 

    Halloween Kitty & Frankenstein Posted by Picasa

    Navaraathri Golu 

    Navaraathri Golu Posted by Picasa

    Happy Diwali 

    Happy Diwali Posted by Picasa

    தீபாவளி வாழ்த்துகள்

    ஏபிசிடிக்கு சொன்ன தீபாவளி/தஸரா கதை

    http://www.flickr.com/photos/40954626@N00/

    Russian Ice Sculptures

    Happy Diwali


    | |

    முதல்வன்

    ஒரு நாள் முதன் மந்திரியாக இருந்து பார்‘ என்பதுதான் tagline-ஆக தோன்றுகிறது.

    எளிமையாக்குவதில் இயக்குநர் ஷங்கரை, மணி ரத்னத்தால் கூட விஞ்ச முடியாது. ‘தளபதி’ ரஜினியை விட ‘சிவாஜி’ பாஸ் நிஜத்தை பிரதிபலிப்பார் என்று எண்ணுகிறேன்.

    பஸ் ஸ்டாப்பை விட்டு பேருந்து கொஞ்சம் தள்ளி நிறுத்தப்படும். இறங்க வேண்டியவர்கள் சடுதியில் விடுபட்டவுடன், டபுள் விசிலில் வேகம் பிடிக்கும்போது, ரன்னிங்கில் கல்லூரி மாணவர்கள் ஏறிவிடுவார்கள்.

    ஏறும்போது தவறி விழுந்திருந்தால், நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் சம்பளமில்லா விடுப்பு முதல் தேவையில்லாத ஊடக கவனிப்பு வரை எல்லாமும் அரங்கேறி அவர்கள் வாழ்க்கை தலைவலியாகும். அந்தக் கடுப்பை, பரிட்சைக்கு நேரமான மாணவர்களிடம் காட்டுவார்கள். சாதாரண கிண்டல், கைகலப்பாக மாறி விடும்.

    யூனியன் சகாக்கள், தொழிலாளியை மதிக்காதவர்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணுகிறார்கள். பல்லவன் பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்படும். மாநகர ஒண்டு குடித்தனத்தில் ஆட்டோ, ரிக்ஷா, பைக் என்று போர்ஷன்கள் நிரம்பிய ரோடு ஸ்தம்பித்துப் போய் விடுகிறது.

    திருமண முகூர்த்தத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கிறாள் மணப்பெண். ஆம்புலன்ஸுக்கு நகர இடமில்லை. வேலைக்கான நேர்காணலுக்கு செல்ல முடியாமல் வாழ்க்கையையே இழக்கிறான். பிள்ளைத்தாச்சி முதல் பேட்டை ராப் உடன் பயணிக்கும் கடைசிப் பயணம் வரை எல்லாமே ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மூலஸ்தானமான, கல்லூரித் தேர்வுக்கு தாமதமான மாணவன் அடிபட்டு அனாதையாக விழுந்து கிடக்கிறான்.

    சென்னை போலீஸ் கமிஷனர் வருகிறார். மந்திரியை தொலைபேசியில் அணுகுகிறார். அரசு ஊழியரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத வழவழா அரசியல். மிகப் பெரிய ஓட்டு வங்கியான மாணவர் சமூகத்தையும் விரோதிக்க விரும்பவில்லை. ‘வேடிக்கை பார்’ என்று மேலிடக் கட்டளை.

    ஹாண்ட்ஸ்-ஆன் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான கமிஷனர், இன்ஸ்பெக்டரை விட்டு மாநகரப் பேருந்துகளை அப்புறப்படுத்த செயலில் இறங்குகிறார். தண்டவாளத்துக்குத் தலையை கொடுத்த தமிழன், உணர்ச்சி பொங்க டயருக்கு தலையை நீட்டுகிறான். சாதி பிரச்சினையாக விசுவரூபம எடுக்கிறது.

    சென்னையே செக்மேட் ஆன சதுரங்க ஆட்டமாக செய்வதறியாது திகைக்கிறது. கவலையில்லாமல் குறுக்கெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் ஐயங்கார், வட்ட மேஜை மாநாடு போட்டு முடிவெடுக்க முடியாத அரசாங்கம், குழு உணர்வு மிதமிஞ்சிப் போன அமைப்புகள், நோக்கத்தை மறந்து ஈகோவை கொடி பிடிக்கும் மனங்கள், பொதுஜனங்களின் சிக்கல்கள் என்று சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் பதிவாக்கப்பட்டிருக்கிறது.

    கட்டளை கேட்டு அடிபணிந்து நிறைவேற்றி கொண்டிராமல், தனி அலுவலருக்கு சுதந்திரமான பணியுரிமை வழங்கியிருந்தால் எளிதில் தீர்க்கப்பட்டிருக்கக் கூடிய பிரச்சினை. காலதாமதத்திற்கு பயந்து வரம்பு மீறிய மாணவரையும், சுமையான பேருந்தை நிறுத்தாமல் ஓட்டியவரையும் கைது செய்து, வதந்தியை கட்டுக்குள் வைத்திருந்தால், இவ்வளவு பெரிய சிக்கலாக உருமாறியிருக்காது என்று இப்போது தோன்றுகிறது.

    அரசியல்வாதிக்கோ சாதிச் சங்கத்தின் சார்பு வேண்டும். தீப்பொறி மாணவ சமுதாயத்துக்கு தோழனாக பாவ்லா கட்டவேண்டும். கட்சிப் பொருளாதாரத்தைக் காக்கும் தொழிலதிபர்களும் வேண்டும். அமைப்பு சார்ந்த தொழிலாள தொண்டர்களும் வேண்டும். ஆட்சி பீடத்தின் நான்கு கால்களாக இவர்களை சொல்லும் சுஜாதாவின் வசனம்.

    இன்றும் இவ்வாறான நிலைமையைக் கையாளுவதற்கு தமிழக காவல்துறை எவ்வளவு தூரம் தயார் நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. காலாகாலத்துக்கும் பொருத்தமான காட்சியைக் கொண்டு வருவதில் சுஜாதா+ஷங்கர் சமர்த்தர்கள்.


    | |

    Grand Canyon to Get Glass Bridge Fear of heights? …

    Grand Canyon to Get Glass Bridge
    Fear of heights? This is definitely no place for you.
    The all-glass, balcony-like “Skywalk”–shown in an illustration released this week–will extend over the edge of the Grand Canyon, 4,000 feet (1,200 meters) above the Colorado River.
    “The Skywalk will be an attraction unlike any other in the world,” said Sheri Yellowhawk, CEO of the Grand Canyon Resort Corporation. The company is building the bridge in the Hualapai Indian Reservation on the south rim of the canyon.
    The Skywalk is scheduled to open to the public in January 2006 as part of a new resort on the reservation. The resort, known as Grand Canyon West, is to include a re-created Indian village and a restaurant perched on the edge of the canyon. Tourism is the reservation’s biggest source of income.
    Grand Canyon West will be on the western edge of Grand Canyon National Park, about 120 miles (about 200 kilometers) from Las Vegas. But perhaps not even the Las Vegas Strip’s over-the-top attractions will be a match for this glass-bottom walkway over the world’s biggest gorge.
     Posted by Picasa