Category Archives: Blogs

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

ஓல்ட் இஸ் கோல்ட்… புதிதாக சேர்க்கப்பட்ட குறிச்சொற்களுடன்

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.

கருத்துக் கோ(ர்)வலர்

“நாளென் செய்யும் கோளென் செய்யும்
என்னை நாடி வந்த வேலையும்தான் என் செய்யும்
தமிழ்மணமும் தேன்கூடும் திரட்டியும் ப்ளாகரும் வோர்ட்ப்ரெசும்
பிறப்பும் எழவும் காக்கன்போக்கன் மறுமொழியும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடுனே”
என்று நவீன அருணகிரிநாதர் பாடியதற்கு ஒப்ப பதியும் வலைப்பதிவர்களில் சிலர்..

பரிந்துரைகள் + பின்னர் பார்த்த பதிவுகள், சேர்க்கப்படும்.

வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்

தமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஏன்?

  • ஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)
  • தினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்!
  • பதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.

மாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.

நிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.

  1. தமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)
  2. ஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது
  3. குமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்
  4. தமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்

ஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.

‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது? நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.

குமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா? அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.

மொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

Prejudiced generalizations: Gangs, drugs, violence & suicides

(வாய்ப்புக்கும் இடமளித்தமைக்கும்) நன்றி: தமிழ் உலா – என்றென்றும் அன்புடன்், பாலா

தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை

கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.

1995- இல் ‘ஆசை’ படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து ‘சத்தம் போடாதே’வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்…

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.

அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.

இதை மறைக்க இணையம் உதவுகிறது. ‘அந்த நாள் ஞாபகம்’ என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.

அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா… நோ; செய்திகள் – நோ…நோ; அரசியல் – மூச்!

இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.

பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.

மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.

இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி உடைகிறது?

சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe – 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.

பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.

இவற்றைப் பார்த்து புலம்பி ‘எங்கே நிம்மதி? ஏது நீதி?’ என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.

அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:

1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் – அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.

2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.

3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். ‘மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.’ இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.

இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.

மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.

இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:

அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.

தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.

ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.

சுட்டிசாரி

நடைபாதையில் செல்பவர் பாதசாரி.

கம்யூனிசம் பேசினால் இடதுசாரி.

விஜய்காந்த் வலதுசாரி.

என்பது போல் சுட்டி கொடுக்கும் வலைஞர்கள் சுட்டிசாரிகள். 

வலப்பக்க உரல்கள் என்றவுடன் நினைவிலாடுபவர் பத்ரி. இவர் இப்போது ரொம்ப சிக்கனமாகி விட்டார். இன்ட்ரெஸ்டிங்காக எதுவுமில்லை.

இன்றைய அளவில் அசுரன் பதிவுதான் ‘வலைப்பதிவில் சுட்டிகள்’ என்று தோன்றியவுடன் பயன் தருமாறு அமைந்திருக்கிறது. மார்க்ஸியம், கூகிள் ரீடர், தத்துவம், வரலாறு, தோழமை தளங்கள் என்று முழுமையான வீச்சு.

அதே மாதிரி மென் நூல்கள், பல்கலை சுட்டிகள் இன்ன பிற என்று பயனுள்ள தோரணம் கட்டுகிறார் கேயாரெஸ்.

இந்தப் பதிவு எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் கோவி கண்ணன். ‘அடிக்கடி நுழைவது‘ என்று அடைமொழியுடன் விளிப்பது கவனத்தை ஈர்த்தது.

அதே போல் நாமகரணங்களுடன் உண்மைத்தமிழனும் அறிமுகம் தருகிறார்.

முபாரக் ‘கைகாட்டி மரங்கள்‘ என்று கவிபட அழைக்கிறார்.வலைவீச்சு என்கிறார் சன்னாசி.

நண்பர்கள் என்று ப்ளாக்மெயிலில் இறங்கிவிடுகிறார் செல்வன்.

சிந்தனையாளர்கள் என்று பட்டம் தருபவர் தமிழ்மணி.

இடது, வலது பாகுபாடில்லாமல் மோகந்தாஸும், ‘முதுகு சொறிதல்‘ என்று துதியுடன் தாதாக்களுக்கு மாமூல் வைக்கிறார்.

என்னுடைய தாத்தா கால பதிவில் வைத்திருக்கும் வகைப்படுத்தல் தலைப்புக்காக விளக்கங்கள் கொடுத்து கண்டிப்புகள் பெற்று, உவகை அடைய வத்திருக்கின்றன.

பூக்கிரியை மட்டும் இனிஷியல் போட்டு மற்றவர்களை தனிமையில் தொடுக்கிறார் அய்யனார்.

இந்த மாதிரி காரணப்பெயர் இட்டிருந்த பிரகாஷ் சுருக்கெழுத்துக்கு மாறிவிட்டார். இன்னும் மாறாதவர் மூக்கு சுந்தர்.

தான் எழுதியதை ஒழுங்கமைத்து தொகுத்துத் தருகிறார் எம்.எஸ்வி  முத்து. அதே போல் முழுநேர சந்தைப்படுத்தலில் இறங்கிய இன்னொருவர் வெட்டிப்பயல்.

தேடுபவர்கள் விரும்புவதை கூகிலே அசருமாறு வைத்திருக்கிறார் பிகேபி.

எல்லோரும் பிரதியுபகாரம் செய்வது போல் திரட்டிகளை கை காட்டுகிறார் பெட்டை.

இணைப்புகளில் வித்தியாசமானவற்றை வைத்திருப்பதன் மூலம் கவர்கிறார் கல்வெட்டு.

வோர்ட்ப்ரெஸ்.காமின் சாத்தியக்கூறுகளை புலப்படுத்துகிறார் சேவியர்.

தான் எழுதிய நுட்பங்களை முன்னிறுத்துகிறார் ஜெகத்.

பட்டறையை இன்றும் மறக்காதவர் விக்கி. சற்றுமுன் போட்டியை அகலாமல் வைத்திருப்பவர் ஆசிப்.

விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கிறார் சர்வேசன்.

கிட்டத்தட்ட ‘சைடுபார் முன்னேற்ற கழகம்‘ தொடங்க ஐ.எஸ்.ஓ சான்றிதழ் தரப்பட்டியல்களுடன் கூடியதாக ஹரன்பிரசன்னாவயும் இட்லி-வடையையும் சொல்லலாம்.

மின்மடல் வேண்டுபவர்கள், அஞ்சலில் பிரதியெடுக்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு ஏதுவாக நோ நான்சென்ஸ் சுட்டி சாரி ஜமாலன்.

கடைசியாக, எட்டப்பனாக எட்டாத சுட்டிகளை தட்ட வைக்கும் நோக்கில் இயங்கும் வலைச்சரம்எனது பதிவு இடம்பெற்றிருக்கிறதா‘ என்று ஆர்வத்துடன் நோக்கவைக்கிறது.

என்ன வேணா பட்டை போடுங்க…

பாட்டை மட்டும் போட்டு படுத்தாதீங்க! என்று சரணமடைவதுதான் என் பல்லவி.

எல்லாம் கருத்தாக்கல் மயம்

உலகப்பொதுமறை:
1. இது சிதம்பர ரகசியம் எல்லாம் இல்லை. மென்பொருள் துறையில் வேலை செய்யும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
தமிழ் சசி / Tamil SASI (ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ?)


நாட்டாமை & சட்டம் என் கையில்:
2. திரட்டிகள் வெறும் பதிவு, பின்னூட்டம் திரட்டுவது என்று மற்ற திரட்டிகள் போலில்லாமல் ஒரு வலைப்பதிவு சமூகமாக இருந்து வருகின்றது, நட்சத்திரம், பூங்கா, சுடர் விளையாட்டு என தமிழ் வலைப்பதிவர்களின் பங்கேற்ப்பை ஊக்குவிக்கின்றது, information காலத்தை தாண்டி இப்போது(ம்) நாம் Participatipon (participation) காலத்தில் இருக்கிறோம்.

OPML என்பது ஒரு திரட்டியின் சொத்து.

தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு.
குழலி (OPML பகிர்வு, ip , திரட்டி அரசியல், டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கரின் டெக்னிக்கல் தவறுகள் மற்றும் இன்ன பிற…)


உன்னால் முடியும் தம்பி:
3. ஒரு பதிவரின் பதிவைத் திரட்ட அவரின் அனுமதி தேவையில்லை என்பது எனது ஆணித்தரமான கருத்து.

இணையம் இயங்குவதற்கே இது தான் அடிப்படை. சுதந்திரம் விரும்பும் பதிவர்கள் முதலில் வலைப்பதிவில் எழுதவே கூடாது.
ரவிசங்கர் (பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி தேவையா?)


தில்வாலே துல்லானியா லே ஜாயேங்கே வசனம் மாதிரி படிக்கவும்:பெரிய பெரிய திரட்டிகளில் இப்படி சின்னச் சின்ன முடக்கல் எல்லாம் சகஜமப்பா’
(“It’s alright Senorita, Bade Bade Deshon Mein, Aisi Choti Choti Baatein Hoti Rahti Hain.“)

4. தமிழ்மணம் வழங்கி செயல் இழந்தாலோ தளப் பராமரிப்பு வேலைகளுக்காகத் தளத்தைத் தமிழ்மணம் தற்காலிகமாக முடக்கி வைத்தாலோ, அது தமிழ்மணக் கருவிப்பட்டைச் சேவையைப் பெறும் 2000+ பதிவுகளையும் சேர்த்து முடக்கும். முடக்கும் என்றால் தமிழ்மணம் வழமைக்குத் திரும்பும் வரை 2000+ பதிவுகளின் ஒரு பக்கத்தையும் யாரும் திறக்கவும் படிக்கவும் முடியாது. அல்லது, பக்கம் திறக்கப்பட மிக மிகத் தாமதம் ஆகலாம்.
ரவிசங்கர் (தமிழ்மணம் – Defective by design !)


ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக் கொண்டு பாரணைய முடிச்சுக்குங்க
5. தமிழ்மணத்தில் இடுகைகளை இணைத்தால் தானே இந்த பிரச்சினை? இடுகைகளை இணைக்காமல் விட்டால் பிரச்சினையிருக்காதே. எப்படியும் ‘நிறுவனப்படுத்தப்பட்ட திரட்டிகளுக்கு’ எதிரான உங்களுக்கு உங்கள் இடுகைகளை அத்தகைய திரட்டிகளில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்காதென்றே
நினைக்கிறேன். அவ்விதத்தில், உங்கள் இடுகைகள் திரட்டிகளின் பிடிகளில் சிக்காமல் உங்கள் சுதந்திரமும் காப்பாற்றப்படும்; படம் தோன்ற வாய்ப்பில்லாமல் உங்கள் பிரைவேசியும் காப்பாற்றப்படும் அல்லவா? அதைவிட, திரட்டிகளிலிருந்து உங்க பதிவுகளை முழுமையாக நீக்கச்சொல்லிக் கேட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மாதிரி ஆகிவிடுமே!
மு. சுந்தரமூர்த்தி (தமிழ்மணத்துக்கு பகிரங்க மடல் :))


ஆலோசனை எப்பவுமே அடுத்தவருக்குத்தான்; பூங்காவுக்கல்ல!
6. எளிமையாக எழுதுதல் என்பது முதிர்ந்த எழுத்தின் அடையாளம். (என்றால்)
Thangamani


உதாரணங்கள், ஒப்புமைகள், எடுத்துக்காட்டுகள் எல்லாம் ஒரு வழிப்பாதை
7.இந்தியாவில் குடும்பம் குட்டியோடு வாழ்ந்து கொண்டு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் இது போன்ற கேள்விகள் கேட்பவர்களில் பலருண்டு. அவர்களை பார்த்து “இந்தியாவில் இருப்பதுதானே ப்ரச்னை. இந்தியாவை விட்டு வெளியேறி சுபிட்சமாக இருக்கலாமே” என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது.
முகமூடி8. you have the cake and eat it too. That is fine. But the strange thing is you want chew the cake and spit it on their face.
மு. சுந்தரமூர்த்தி

9. மு.மூ.வின் புத்திசாலித்தனமான உதாரணத்தை (அது குழந்தைத்தனமானதாக இருப்பினும்)நீங்கள் ரசிப்பதும் விசித்திரமாக உள்ளது.
மு. சுந்தரமூர்த்தி


நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும்
10. ஒரு வேண்டுகோள் விடுவித்தால் அதனை சரி செய்யப்பார்க்கனும், இல்லைனா, எதுக்கு இங்கே வரேனு கேட்டா எப்படி?
இலவச உணவு வழங்கினாலும் அதில் புழு இருந்தால் கேள்வி கேட்பார்கள். ஓசி சோறு அதில என்ன கேள்வினு கேட்க முடியாது.
வவ்வால்


நன்றி சொல்ல எனக்கு… வார்த்தையில்லை எனக்கு… நாந்தான் மறுகறேன்
11. இன்னும் இதில் உள்ள சிலர் அவர்கள் பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டால் அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே வெளியிடுவர்கள், அப்படியே வெளியிட்டாலும் அதுகுறித்து கண்டுக்கொள்ள கூட மாட்டார்கள். அதாவது ஒரு பதிலும் கூற மாட்டார்கள். குறைந்த பட்சம் நன்றி தெரிவிக்கும் நாகரீகம் கூட இல்லாதவர்கள். இவர்கள் எல்லாம் விருது குழு என்று சொன்னால் … எப்படி.
வவ்வால்


கடவுளிடம் வேண்டுகோள் வைக்கலாம்; உண்டியலில் காசு போடலாம். நியாயமா என்றால் கண்ணைக் குத்திடும் உம்மாச்சி
12. தமிழ்மண சேவை என்பது ஒன்று இப்படி இருக்க வேண்டும், இல்லை அப்படி இருக்க வேண்டும், இதைவிட்டு வேறு எப்படி இருக்க முடியும் என்று கேள்வி கேட்க நீங்கள் எந்த அத்தாரிட்டியை வைத்திருக்கிறீர்கள்? ஏன் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்க முடியாதா? இன்னின்னவாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனைகள் சொல்வது வேறு! இப்படி எப்படி இருக்கப் போயிற்று என்று எதிர்கேள்வி கேட்பது வேறு!
செல்வராஜ் (R.Selvaraj)


(படிக்கப் படிக்க முத்துக்கள் சேர்க்கப்படும்)


இதெல்லாம் படிக்கும் போது என் மகள் பக்கத்தில் இருந்து கொண்டு கேட்ட கேள்வி:
‘ஏம்ப்பா எங்கே பார்த்தாலும் ஒரே ஆச்சரியக்குறியா இருக்கு?

Dedicated to Bloggers

எல்லோரின் சிந்தனையும் சங்கமிக்கும் அதிசயப் பொழுது:

optimists_pessimists_mister_boffo_think_alike.jpg

நன்றி: Mr. Boffo Archives


எப்பொழுது நிறுத்துவது என்ற்றறியா மடந்தைநிலை:

stop_being_fun_comics_hagar_the_horrible.gif

நன்றி: Arts & Living: Comics (washingtonpost.com)


வலைப்பதிவு: சிறுகுறிப்பு வரைக:

pearls_before_swine_blog_definition_comics_cartoons.gif

நன்றி: Arts & Living: Comics (washingtonpost.com)

இணைய ரேகிங் – 13 வயது பெண் தற்கொலை

47 வயதான பெரியவர் இணையத்தில் 16- ஆக வேஷம் கட்டியிருக்கிறார். மைஸ்பேஸ்.காமில் குடிபுகுந்து 13 வயதான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நட்புடன் பழக ஆரம்பித்திருக்கிறார்.

‘வீட்டில் தொலைபேசி இல்லை’ என்று பொய் சொல்லிவிட்டு, வலை மூலமாக மட்டுமே அறிமுகத்தை வளர்த்திருக்கிறார்.

திடீரென்று ஒரு நாள் மோசமாகப் பேச ஆரம்பித்து அவளை புண்படுத்த, மனம் வெதும்பியதில் அவள் தூக்கு மாட்டி இறந்து விட்டாள்.

இந்த குற்றத்திற்கு காரணமான கிழவருக்கு என்ன தண்டனை?

எதுவுமே இல்லை!

அமெரிக்காவில் இன்னும் அதற்கான சட்டம் இல்லை என்பதால் கடந்த வாரத்தில் புது சட்டம் இயற்றப்பட்டது: ‘500 டாலர் அபராதமும் 90 நாள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக தரப்படும்’.

இணையத்தின் தாக்கங்களில் இருந்து தாக்குப் பிடிக்க நிரம்ப மனோதிடம் வேண்டும்!

செய்தி: A Hoax Turned Fatal Draws Anger but No Charges – New York Times

பி.கு.: கல்லூரி மாணவர்களிடையே ரொம்ப புகழ்பெற்ற கடுப்பேற்றும் சொற்றொடர்களில் ஒன்று: ‘உன்னைப் பெத்ததற்கு உங்க அப்பா, அம்மா, நைட் ஷோ போயிருக்கலாம்டா!’ சென்னை 600028- இல் கூட இந்த வசனம் வரும். நேரில் சொல்லும்போது கலாய்த்தல் மாதிரி பொருள் தரும். குறுந்தகவலாகவோ மின்னஞ்சலாகவோ வந்தால் வெறுப்பைத் தூண்டலாமோ!?

2007 -Year in Review

இந்த வருடத்தின் நாயகர் யார்? எது பெரிதும் விவாதிக்கப்பட்டது? எது அதனினும் விரிவாக கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்? கண்டுபிடிப்பு, விஞ்ஞானம், வித்தியாசமான முயற்சி ஏதாவது? முக்கிய சம்பவம், சோக நிகழ்வு, ஜல்ஸா விஷயம்??

பருந்து பார்வை:

ஜனவரி:

வலைப்பதிவுகளில்:

  1. பொங்கல் படங்கள்: போக்கிரி – பருத்தி வீரன் – தாமிரபரணி – சண்டக்கோழி – ஆழ்வார்
  2. ப்ளாக்ஸ்பாட் ப்ளாகரின் புதிய வடிவம்
  3. அப்துல்கலாம் தலைமுடி – அப்சல் – பால்தாக்கரே
  4. கலைஞரும் சாயி பாபாவும் சந்திப்பு
  5. அயோத்தியா மண்டபம் – சுஜாதா – குமுதம் – சாதியக்குரல்!
  6. சென்னை புத்தகக் கண்காட்சி
  7. ஷில்பா ஷெட்டி – பிக் பிரதர் – இனவெறி – நிறப்பிரிகை
  8. துக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங்
  9. ஆஸ்கார்
  10. குரு – மணி ரத்னம்
  11. வீராசாமி – அரட்டை அரங்கம் – டி ராஜேந்தர்
  12. பெரியார் படப்பாடல்கள்
  13. முத்தமிழ்க் குழுமக் கொண்டாட்டங்கள்
  14. கில்லி – 365
  15. தமிழ்மணம் விவாதக்களம் » விவாதம் ஆரம்பிக்கிறது

செய்திகளில்:

  1. வங்கதேச தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா
  2. இலங்கையில் கட்சித் தாவல்
  3. சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் தொடரும் மோதல்கள்
  4. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு
  5. கோரஸ் நிறுவனத்தை டாடா வாங்கியது
  6. சென்னை ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது
  7. இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஓ.பி. நய்யார் காலமானார்
  8. அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம்
  9. பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரா திட்டம்
  10. ம.பி. மாநில பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் அமல்
  11. ஆர்எஸ்எஸ் அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி பெங்களூர் வன்முறை – மரணங்கள்
  12. தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்
  13. உல்ஃபா தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர் பிகார் மாநில மக்கள்
  14. காளிமுத்து- தமிழ்குடிமகன் மகன்களுக்கு அ.தி.மு.க.வில் பதவி
  15. நொய்டா நிதாரி – சிறுமிகளை வன்புணர்ந்து கொலை

கொசுறு: சும்மா டைம் பாஸ் மச்சி…..: “ஹைல.. ஹைல… அடி ஆரியமாலா!”

————————————————————————————————————-

ஃபெப்ரவரி:

வலைப்பதிவுகளில்:

  1. கல்யாண் – சாகரன் – தேன்கூடு: அஞ்சலி
  2. கனிமொழியின் சென்னை சங்கமம்
  3. தேன்கூடு சுடர் – தொடர் பதிவுகள்
  4. தமிழ்மணம் பின்னூட்ட உயர் எல்லை – 30
  5. தக்காளி – வெங்காயம் – உருளை: சர்வேசனின் புகைப்பட போட்டி
  6. தமிழ் சினிமாவில் பெண்களின் இழிநிலை
  7. தமிழ் x மலையாளம் x சம்ஸ்கிருதம்
  8. விவேகானந்தா கல்லூரி பிரச்னை
  9. அர்ஜென்டீனா – க்வாட்டரோச்சி – போஃபர்ஸ் – சோனியா – காங்.
  10. மைக்ரோசாஃப்ட் விஸ்டா
  11. சூப்பர் பவ்ல் 41
  12. சிம்பு – நயந்தாரா
  13. மொழி – கார்ப்பரேட் (ஹிந்தி) – பொறி – பச்சைக்கிளி முத்துச்சரம் – விமர்சனம் – திரைப்படங்கள்
  14. ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு கனடா இயல் விருது
  15. அமெரிக்க தமிழ் சங்கங்கள்: தைப் பொங்கல் கொண்டாட்டம் & விழாக்கள்
  16. தினகரன் – நெ.1 தமிழ் நாளிதழ்
  17. தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறியது
  18. வலைப்பூ ➜ வலைச்சரம்
  19. கடல்கன்னி ஆரம்பம்
  20. மாற்று துவக்கம்

செய்திகளில்:

  1. ‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு
  2. மத்திய பொக்கீடு தாக்கல்
  3. ரயில்வே பட்ஜெட்
  4. மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி
  5. விவசாயி தற்கொலைகள்
  6. நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை
  7. கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு – மூன்று அதிமுக-வினருக்கு மரண தண்டனை
  8. பஞ்சாப், உத்தராஞ்சல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது
  9. மணிப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ்
  10. மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசு x ஈநாடு பத்திரிகை – முதல்வர் ராஜசேகர ரெட்டி x ராமோஜி ராவ்
  11. முலாயம் சிங் யாதவ் ஆட்சி – உத்தர பிரதேசம்
  12. இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல்
  13. பழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு
  14. நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை – 800
  15. இராக்கில் இருந்து டென்மார்க் படைகளை திரும்ப பெறுகிறது
  16. பாகிஸ்தானில் பெண் அமைச்சர் சுட்டுக்கொலை
  17. இத்தாலிய பிரதமர் ரொமானொ ப்ரோடி ராஜினாமா
  18. தமிழகம் – மீனவர் – படகு – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு – காவல்துறை
  19. சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் மேயர் – வாக்குப்பதிவில் வன்முறை & கள்ள ஓட்டு
  20. சிவசேனை -பாஜக கூட்டணியிடம் மீண்டும் மும்பை மாநகராட்சி
  21. தேசிய விளையாட்டு போட்டி
  22. தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் – இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

————————————————————————————————————-

நேரம் + மூடு இருந்தால் தொடரும் 🙂 

மார்ச்:

வலைப்பதிவுகளில்:

  1. கிரிக்கெட் உலகக் கோப்பை
  2. இணைய குசும்பனின் கடைசி இடுகை
  3. சுப்புடு காலமானார்

செய்திகளில்:

————————————————————————————————————-

ஏப்ரல்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

மே:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

ஜூன்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

ஜூலை:

வலைப்பதிவுகளில்:

  1. ஹாரிப்பாட்டர்

செய்திகளில்:

————————————————————————————————————-

ஆகஸ்ட்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

செப்:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

அக்.:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

நவ.:

வலைப்பதிவுகளில்:

செய்திகளில்:

————————————————————————————————————-

டிச.:

இனிமேல்தான்!?

————————————————————————————————————-

முந்தைய பதிவு: 2006 – E-Tamil Person of the Year « Snap Judgment

அலைவரிசை பயணங்கள்

கிட்டத்தட்ட ஓராண்டு முன்பு கில்லிக்காக எழுதியது.

நான் ஒரு பழைய கார் வைத்திருந்தேன்.

அமெரிக்கா வந்த புதிது. வங்கிக் கணக்கில் மாதத்துக்கு இரண்டு முறை சம்பளம் போடுவார்கள். பதினைந்தாம் தேதியும் ஒன்றாம் தேதியும் விடிந்தவுடன் கொண்டாட்டம். பத்தாம் தேதியிலிருந்தும் இருபத்தைந்தாம் தேதியிலிருந்தும் திண்டாட்டம். அந்த மாதிரி நிலையில்தான் நியு யார்க் மாநிலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மலையுச்சியில் கன்சல்டண்ட்டாக புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இயற்கை கொஞ்சும் இடமாக இருந்ததாலும், இருட்டில் வளைவுகள் எதுவும் விளங்காததாலும், பாடிகாட்டாக பாடல் அலறும். என்னிடம் இருந்த கைக்காசுக்கு, காஸெட் பாடும் கார் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு கலர் – ஆக்ஸிலேட்டர் அமுத்தினால் ஓட வேண்டும். ப்ரேக் போட்டால் பிடிக்க வேண்டும். எனக்கு பிடித்திருப்பது முக்கியமல்ல.

நண்பர்களைப் பார்க்க ஐநூறு மைல் ஹைவே ஓட்டினாலும் பண்பலையில் பாடல் ஒலிக்கும். பின்னிரவில் வேலை முடித்து பசி கிறக்கத்தில் கீழிறங்கினாலும் அமெரிக்க கீதம் கூவும்.

கோபமாக இருந்தால் ஹெவி மெட்டல். கோயிலுக்குப் போனால் மேஸ்ட்ரோ. காலையில் பாப். மாலையில் ஜாஸ் என்று வழக்கப் படுத்திக் கொண்டேன் எல்லா எஃப்.எம்.களையும்.

பாத்ரூமில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் புருஷன் பாடினதில் ஆரம்பித்து ஆப்பிரிக்காவில் இருந்து நாடோடியாகப் பஞ்சம் பிழைக்க வந்த க்ரூப் வரை கிட்டத்தட்ட அனைத்து பாடல்களும் கேட்கக் கிடைத்தது. நிக்கோல் ரிச்சி ஜட்டி போடுவதில்லை என்று மட்டும் அறிந்திருந்த அறியாப் பிள்ளைக்கு, அவரின் அப்பன் அமோகமாக கலக்குவார் என்று அகர முதல் எழுத்தெல்லாம் அறியக் கிடைத்தது. ‘அகிலா அகிலா’ என்று தேவா போட்டது ‘பஃப்லோ சோல்ஜர்’ என்பார்கள். அந்த மாதிரி ஸ்ரீதேவி பாட்டு இங்கே இருக்கு என்று அளக்க, அளப்பரிய வாய்ப்புக் கிடைத்தது.

அப்பொழுது ஒரு நத்தார் தினம் வந்தது. அன்றைய விடுமுறையை கும்மாளமிட தேசி மக்கள் வந்து க்ரீன் கார்ட் பெறுவது, கம்பெனி மாறுவது, காண்ட்ராக்டை உடைப்பது, லைசென்ஸ் வாங்குவது, நைட்க்ளப் செல்வது, சனியிரவு பெண் பிடிப்பது என்று வாழ்க்கைத் தேடல்களை பேசிக் களைத்தவுடன், என்னுடைய பாடல் தொகுப்பை ஒலிக்க விட்டேன்.

நோ டவுட், சன்ஷைன், கார்டிகன்ஸ், செலீன் டியான், பார்பீ என்று கவர்ச்சியான மெட்டு இருக்கும். சில சமயம் பாடல் கூட புரியும்.

பாடல்கள் எப்படி என்னைக் கவர்ந்தது?

திரும்பத் திரும்பப் பல முறை கேட்டாலும், அலுக்காத ட்யூன். அதுதான் என்னை உள்ளே இழுக்கிறது. பன்னிரெண்டு டாலர் காசு கொடுத்து சிடி வாங்க வைப்பது. அதற்குப் பிறகு கொஞ்சம் கவர்ச்சியான வார்த்தைக் கோர்ப்பு. வரிகளில் வைரம் மின்னுவது எல்லாம் முக்கால்வாசி நேரம் விளங்குவதில்லை.

கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இணையப் பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

வேலையில் போரடித்தால் தமிழ்மணம். இரண்டு மணி நேர கம்பைல் ஆரம்பித்தால் ப்ளாக்லைன்ஸ். ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் என்றால் தேன்கூடு. இரவு நேர சப்போர்ட் மாரடித்தல் என்றால் கிஞ்சா.

பாஞ்சாலிக்குக் கண்ணன் சேலை கொடுத்த மாதிரி வண்ணவண்ணமாய் முடியவே முடியாத வலைப்பதிவுகள். துச்சாதனனாய் துகிலுரிக்கப் பார்த்தேன். வேர்த்து, விறுவிறுத்து, துரியோதனன் ஐகாரஸ் கட்டளைக்குட்பட்டு, அடிமுடி அறியவொண்ணா முழுமைக்கு முயற்சித்தேன்.

ஸ்பானிஷ் பாடல்கள் என்றொரு உலகம். கஜல் இன்னொரு கடல். வளைகுடா சங்கீதம் சொக்கியிழுத்துக் கட்டிப்போட்டு விடும் அண்டம். அமெரிக்கா சங்கீதத்தின் பல பாடல்களை கேட்டு, அவ்வளவுதான் என்று மருகி சொக்கித் திளைத்து, அதில் இவை சிறந்தது என்று அன்று நினைத்திருந்தேன். அதே போல், அனைத்துப் பதிவுகளையும் படித்து அவற்றில் இவை சிறந்தது என்று கில்லியில் இட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே எனக்கு நிறைவையும் மனமகிழ்வையும் தந்தாலும் முழுமையானது அல்ல.

எட்டிய மட்டும் நீந்தி, கிடைத்த காட்சிகளைப் படம்பிடித்து, தண்ணீர்க் கோலங்கள் இம்புட்டுதான் என்பது போலவே இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடத்தின் கவர்ந்த பதிவுகளுக்கொரு பதிவு.

சமீபத்தில் பெண்டாமீடியா எடுத்த பாண்டவாஸ் அனிமேசன் படம் பார்த்தேன். மிக மோசமான படம். துள்ளித் துள்ளி நீ ஓடம்மா என்று திரைக்கதை பாய்ந்தோடியது. குழந்தைகளைக் கவரும் ஸ்பெசல் எஃபக்ட்ஸ் பெரிதாக, காட்சிக்கு காட்சி வராமல், அவர்களின் கவனத்தை நோகடித்தது. துரி, தேவ் என்று செல்லமாக அழைத்தார்கள்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் இரண்டு வருடமாய் டிவியில் வந்த சோப்ரா பாரதத்தை, இரண்டு மணியில் மஹாபாரதமாக்கி இருந்தார்கள். அதற்காகவே பாராட்டலாம். அதற்கு மட்டுமே பாராட்டலாம்.

அந்தப் படம் மாதிரி கடந்த வருடத்தின் அலைவரிசைப் பயணங்கள்:

ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி மாதம். சுரேஷ் கண்ணன் இலக்கியவாதி (பிச்சைப்பாத்திரம்: பாலாவும் என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பகுதியும்). பத்ரியோ பதிப்பாளி (பத்ரியின் வலைப்பதிவுகள் – நான் வாங்கிய புத்தகங்கள்).

நாராயண் மருதநாயகம் பற்றி கமலுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதங்களும் இலக்கியம்தானே என்கிறார் செல்வராஜ் (என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ் » Blog Archive » பழைய கடிதம் ஒன்று). ‘அழகி’ படத்தின் மூலம் வாழ்க்கை இலக்கணத்தைப் பார்க்கிறார் தமிழ்தேனீ (வண்ணக்குழப்பம்: மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை).

சுந்தரமூர்த்தி Looking for Comedy in the Muslim World என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தூரப் பார்வை பார்த்தார். நிலவு நண்பன் நீங்கள் இன்னும் பார்க்காத ‘யதார்த்தம்’ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுகிறார். அதிகம் அறியாத படங்களைப் பகிரும் சன்னாசி Palindromesஐ திருப்பிப் போடுகிறார். இயக்குநர் அருண் வைத்யநாதன் திரைப்படமே எடுத்து வெளியிடுகிறார் (Agara thoorigai » Blog Archive » ‘தனியொரு மனிதனுக்கு’ குறும்படம்)

நபகோவின் லோலிடாவை செல்வன் வாசக அனுபவமாக்குகிறார். ஈழ நூல்களை இணையத்தில் காண நூலகம் துவங்குகிறது. (“ம்…” – விட்டு விடுதலையாகிநிற்போம்…!). அருந்ததி ராயின் கட்டுரைத் தொகுப்பை ஜெயந்தி சங்கர் விமர்சிக்கிறார். (வல்லமை தாராயோ: the algebra of infinite justice (நூல் அறிமுகம்))

டிவியில் தங்கவேட்டையை பின்னூட்ட வேட்டையாளர் இலவச கொத்தனார் கவனிக்கிறார் (இலவசம்: தகதகதகதக தங்கவேட்டை). ரங்கா அண்டங்காக்கைகளையும் பனிக்கரடிகளையும் பார்க்கிறார். (இதர எண்ணங்கள்: கறுப்பும் – வெளுப்பும்)

இண்டிப்ளாகீஸ் தேர்தல் குறித்து தருமி அலசினார் (தருமி » 123. Election Analysis…). லண்டன் பயணங்களில் நம்மையும் டிக்கெட் செலவு வைக்காமல் கூட்டிப் போகிறார் இரா முருகன் (vembanattu-k-kaayal: எடின்பரோ குறிப்புகள் – 5).

இன்னும் குட்டி ரேவதி எஸ்.ராமகிருஷ்ணன், வைகோ அணி மாறல், திருமா பாமக விடுதல், துபாயின் ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் ராஷித் பின் மக்தூம் மரணம், ரங் தே பஸந்தி, கோல்டன் க்ளோப் என்று செய்திக் குறிப்புகள் திரும்பிய சுட்டியெல்லாம் படிக்கக் கிடைத்தாலும் நேர்மையான சொந்தக் கதையை எளிமையாக எழுதியிருக்கும் அருள்குமார் பதிவு நெஞ்சில் நிற்கிறது (நான் பேச நினைப்பதெல்லாம்: “தீம்தரிகிட” – வாக்குப்பதிவு)

நான்தான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேனே! நான் அகலக்கால் வர்க்கம். ‘ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்று சுருக்காமல், நூறாயிரம் விதமாக விவரிப்பதை ரசிப்பவன். ரசிப்பவர்களில் திளைப்பவன். எத்தனை சம்பளம் வந்தாலும் அதிகம் இரண்டணா செலவு வைக்கும் பாலையாவின் கோபத்திற்கு ஆளாகுபவன்.

மற்ற மாதங்களுக்கும் மிச்ச சுட்டிகளுக்கும் ப்ரேமலதாவின் (Kombai) பரிந்துரைக்கேற்ப ஓல்ட் இஸ் கோல்ட் (கில்லி – Gilli » OIG)-இல் சந்திக்கிறேன்.

இனிய சுட்டிகளும் அமைதியானப் பூக்களும் நிறைந்த வலைப்பூ ஆண்டாக 2007 அமைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Blogger repeats itself.