அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது.
நாளை அனைவரின் கவனமும் ஜனநாயக் கட்சியின் மீது தான் இருக்கும். ஒபாமாவா ? ஹில்லரியா என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. ஒபாமா டெக்சாஸ், ஒகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றால், ஹில்லரி போட்டியில் இருந்த விலகக் கூடும். ஹில்லரி வெற்றி பெற்றாலோ, அல்லது இருவரும் சரிசமமான வெற்றியை பெற்றாலோ, இந்த போட்டி ஆகஸ்ட் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஜனநாயக கட்சியில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்ற கேள்விக்கு மிகச் சூடான விவாதம் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களில் நடந்து வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களான ஹில்லரி, ஒபாமா ஆகிய இருவருமே மிகச் சிறந்த வேட்பாளர்கள். இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாகவே உள்ளது. இந்த இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வி, எனக்கும் உண்டு. நான் அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை உள்ளவன் அல்ல. என்றாலும் உலகின் மிக முக்கியமான ஒரு நாட்டின் தேர்தல், பல நாடுகளின் மீது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு நாட்டின் தலைமை எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதிலே எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு பார்வையாளனாக நான் கவனித்தவற்றை பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மேலும் வாசிக்க – http://blog.tamilsasi.com/2008/03/us-elections-hillary-obama.html











