எந்த கருத்துக் கணிப்பு நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது?


1. சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுப்பது குறித்து?

அ) நீதிமன்றங்களை அவமதிக்கும் செயல்
ஆ) மக்களுக்காகத்தானே சட்டம்?
இ) சட்டத்தை மீறுபவர்களுக்கு இடனடி பலன்
ஈ) அரசின் மெத்தனத்தை நிவர்த்திக்கும் குறியீடு
உ) ‘சட்டம் என் கையில்’ என்று கமல் படம் வந்துச்சே?

தொடர்புள்ள செய்தி

2. பொருளீட்ட நாடு விட்டு நாடு செல்வது

அ) குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்தால் சரி
ஆ) மொத்தமாக வெளிநாட்டில் தங்கினாலும் ஒகேதான்
இ) தாய்நாட்டுக்கு பணியாற்றாமல், அயல்நாட்டில் வசிப்பது தவறு
ஈ) தமிழ்நாட்டை விட்டு வயநாட்டுக்கு செல்வதைக் கேக்கறீங்களா?

தொடர்புள்ள செய்தி

3. சேலம் இருவுள் வாயில் கோட்டம் போராட்டம் குறித்து…

அ) மாநில அமைச்சர் இதுபோல் மத்திய அரசை எதிர்க்கக் கூடாது
ஆ) காந்தி பிறந்த மண்ணில் அறப்போராட்டங்கள் அவசியம்
இ) பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
ஈ) இந்திய தேசியத்தில் தமிழ்நாட்டில் அமைந்தாலும், கேரளாவில் இருந்தாலும் வித்தியாசம் கிடையாது.
உ) வள்ளுவர் கோட்டம் சென்னையில்தானே இருக்கு?

தொடர்புள்ள செய்தி

4. ஆர்குட் தளத்தில் போலி மாயாவதி

அ) போலிகளை களையெடுக்கவேண்டும்
ஆ) இதெல்லாம் கட்டுப்படுத்த முடியாது
இ) போலி முலாயம், போலி ராகுல் துவக்குவதுதான் சரியான வழி
ஈ) நான் ஃபேஸ்புக் விசிறி
உ) இது தேர்தலில் மண்ணக் கவ்விய எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி

தொடர்புள்ள செய்தி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.