A Mini Intro to Dravidam & Periyarism in Tamil Nadu


திராவிடர் – திராவிடம் :: கா கருமலையப்பன்
புதிய பார்வை – ஏப்ரல் 16-30, 2007

  • சமூகரீதியாக பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நீதிக்கட்சி பெற்றுத் தந்தது.
  • கோயில்களுக்குக் குறிப்பிட்ட இனத்துப் பெண்களை பொட்டுக் கட்டி விட்டு தேவதாசி முறை என்கிற பெயரில் கட்டாய விபச்சாரம் செய்ததை நீதிக்கட்சி போராடித் தடை செய்தது.
  • 1928ஆம் ஆண்டு கோயில் நுழைவு உரிமைக்காக போராடத் தொடங்கி இன்று கருவறை நுழைவு வரைப் போராடி உரிமை பெற்றுத் தந்தது.
  • பஞ்சமர்களுக்குப் பேருந்தில் இடமில்லை – சூத்திரனுக்கு உணவகத்தில் இடமில்லை என்கிற அயோக்கியத்தனத்தை அடியோடு வீழ்த்தி எல்லோரும் எங்கும் செல்லும்படி சமத்துவம் பெற்றுத் தந்தது.
  • ராஜாஜி 1938-இல் இந்தியைத் திணித்தபோது வெகுண்டெழுந்து பெரியார் ஹிந்தியை விரட்டியடித்தது.
  • அதே இராஜகோபாலாச்சாரி தமிழர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் ஒரே நாளில் 3000 பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிட்டு குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தபோது, பார்ப்பன மனுதர்ம கல்வித் திட்டத்தைத் தடுத்து நிறுத்திட எரிமலையாய் கொதித்தெழுந்த பெரியார், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வைத்தது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.