Monthly Archives: ஒக்ரோபர் 2006

Children employed as Campaign Workers in TN Local Elections

Dinamani.com – TamilNadu Page

பாடப் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் கட்சிக் கொடிகள்: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறார்கள்!

மதுரை, அக். 9: குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதே லட்சியம் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கோஷம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் குழந்தைகள் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிவதை எக்கட்சியும் கண்டுகொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு பணம் கொடுத்து ஆள்களை ஏற்றிவரும் அரசியல் கட்சிகள், தற்போது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தினக்கூலி அடிப்படையில் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.

காலையில் பள்ளி செல்வதற்கு முன்பும், மாலையில் பள்ளி முடிந்த பின்னர் இரவு 9 மணிவரையும் வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ரூ.30 முதல் 70 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதுதவிர, இடையிடையே டீ, பிஸ்கட், சாக்லேட் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

சிறார்களைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு குறைந்த அளவே சம்பளம் கொடுத்தால் போதுமானது என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் சிறார்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

மன ரீதியான பாதிப்பு: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைப் பொருத்தவரை உழைப்புச் சுரண்டல் என்ற கருத்து இல்லாவிட்டாலும், வேறு விதமான பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

“குறிப்பாக, தேர்தல் பணியில் வீடுவீடாகச் செல்லும் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் பீடி, சிகரெட், மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர். அதை வாங்கி வருவதற்கும் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றனர்.

இது சிறுவர்கள் மனதில் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்து ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எதிர் அணியினர் பற்றி தகாத வார்த்தைகளால் திட்டுதல், வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றை காணும் சிறுவர்களிடம் உடல், மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது குழந்தைகளை மொட்டிலேயே கருகச் செய்யும் செயல்” என்கின்றனர்.

இந்நிலையில், வீடு, ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 6 மாத சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.10) முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் தேர்தல் பணியில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுப்பது எப்போது?.

‘MGR and every other leader paid money to the Electorate’ – Panruti Ramachandran

Headline News – Maalai Malar

தாத்தா டி.வி. கொடுக்கிறார் பேரன் சம்பாதிக்கிறார்: தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

மதுரை, அக். 9-
முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவரு மான பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரை வந்திருந்தார். அவர் மாலைமலர் நிருப ருக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

இந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட இருக்கிற மாற்றம் பிறர் மரளத்தக்க வகையில் தே.மு.தி.க. வெற்றி பெறும். மதுரை மத்திய தொகுதியை பொறுத்த வரை தே.மு.தி.க. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெறுவது மூலம் தி.மு.க – அ.தி.மு.க.வினரின் நிலையில் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. ஆனால் தே.மு.தி.க. வுக்கு தேர்தல் கமிஷன் மூலம் அங்கீகாரம் தரும் நிலை ஏற்படும்.

விஜயகாந்த் சொல்லி வரும் கருத்துக்கள் விவசாயிகளையும், படித்த இளைஞர்களையும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

நான் 1967-ம் ஆண்டிலிருந்து பல தேர்தல்களை பார்த்து வருகிறேன். எல்லா தேர்தல்களிலும் பணம் விளையாடியது உண்டு. ஆனால் மக்கள் பண அடிப்படையில் வெற்றி தோல்வியை தருவது இல்லை என்பதே எனது அனுபவம் ஆகும்.

கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் தோல்வியை கண்டவர்தான். 1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஜெயலலிதாவும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான். இருக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கி கொள்கிறார்கள். பணம் கொடுப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இருப்பது இல்லை.

கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தும் கொசுவை ஒழிக்க முடிய வில்லை என்று விஜயகாந்த் பேசி வருகிறார். இதற்கும் காரணம் உண்டு. உள்ளாட்சித் துறை கொசு மருந்து வாங்குகிறது. அதில் லஞ்சம் பெற்று கொண்டு நீர்த்து போன மருந்தை வாங்கி தெளிக்கும் போது கொசுவுக்கு சுகமாக இருப்பதால் அது சாவதில்லை.

எனவே மருந்து வாங்குவதில் உள்ள ஊழலை ஒழித்தாலே நம்மை எல்லாம் நோய் வாய்ப் பட வைக்கும் கொசுவை ஒழித்து விடலாம். எதிலும் அக்கரையும், நாணயமும் இருந்தால் வெற்றி முடியும். அந்த அடிப்படையில் விஜயகாந்த் சொல்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தி.மு.க-அ.தி. மு.க.வுக்கு ஒரு பபபப என்ற தாகம் மககளிடையே இருக் கிறது. அதை மூப்பனார் முதல் ரஜினிகாந்த் வரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை. புரட்சி கலைஞர் விஜயகாந்த் துணிந்து தனது சொந்த செலவில் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிடுகிறார். ஆகவே மக்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சர்வேபடி 32 சதவீதம் பேர் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை பிடிக்காதவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் தே.மு.தி.க. பக்கம் வருவதால் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது.

தி.மு.க. அறிவித்து உள்ள திட்டங்கள் ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கும். வறுமையில் இருந்து அவர்களை விடுவிக்காது. 2 ஏக்கர் இலவச நிலம் போன்ற திட்டத்தை கடந்த 1974-ம் ஆண்டு அர்ஜின்டினா நாட்டில் நிறைவேற்றப்பட்டது. இலவச நிலத்தை 10 ஆண்டு களுக்கு விற்கக்கூடாது என்று ஆணையிடப்பட்டு இருந்தது.

தற்போது அங்கு நடத்திய சர்வேயில் நிலம் பெற்றவர்கள் எந்த வகையிலும் முன் னேறாமல் ஏழைகளாகவே உள்ளனர். காரணம் அவர் களுக்கு வேறு வழியில் வருமானம் இல்லாததால் வங்கி எதுவும் கடன் கொடுப்பது இல்லை. இதனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. எனவே இங்கும் இலவச நிலம் பெற்றவர்கள் மேலும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

ஏழைகளின் வறுமையை போக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நல்ல அறிவும் தேவை. எனவே விஜயகாந்த் சொல்வதை போல 25 லட்சம் பேருக்கு டி.வி. கொடுப்பதை விட அவர் களுக்கு வேலை கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். வறுமையும் குறையும்.

இந்த இலவச டி.வி. கொடுப்பதை நினைக்கும்போது, `தாத்தா அரசு செலவில் கலர் டி.வி. தருகிறார். பேரன் கேபிள் இணைப்பு மூலம் வருடத்திற்கு 300 கோடி வரை சம்பாதிக்கிறார்’ என்று தான் சொல்ல தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன் னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் உடன் இருந்தார்.

SNEHA – Invite (Oct. 13)

வெள்ளி மாலை அன்று சென்னை வலைஞர்கள் கலந்துகொண்டு பங்காற்ற நண்பர் அனுப்பிய அழைப்பிதழ்.

மேலும் விவரங்களுக்கு: அதிகாரபூர்வ வலையகம்

தேதி: அக்டோபர் 13
நேரம்: 5:30 மாலை
இடம்: நாரத கான சபா
விஐபி: அன்புமணி ராமதாஸ்


| | |

Gandhi Jeyanthi – Subramaniya Samy – RSS Sonia – Georgia – US Tamilan

பேசும் செய்தி

நன்றி: திண்ணை

Dei mezzi e dei fini -pensando a Parigi e sfidando il ridicolo-1. காந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம் சட்டத்தை மீறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லோக தளம் கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் அசோக் அரோரா கோரிக்கை விடுத்துள்ளார்.

அசோக் அரோராவைத் தொடர்பு கொண்டேன். கொட்டித் தீர்த்தார். “காந்தி இறந்த சோகத்தில் நாடே இருள் கவ்வி, சோகத்தில் கவிந்திருக்கும் தினத்தில், தனியொரு மனிதனுக்கு தண்ணியில்லையெனில் இந்த தேசத்தினை அழித்திடுவோம் என்னும் தாபம் உடையவன் நான். கல்யாணம் என்பது துன்பியல் நிகழ்வு. அங்கு மணமக்கள் வருங்காலத்தை நினைத்து மதுவருந்துவது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஆனால், அந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லையே என்பது எனக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது” என்று உணர்ச்சிவசப்பட்டார்.


splish, splash, i was taking a bath2. திருநாவுக்கரசர்-சுப்பிரமணியசாமி சென்ற சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு ஜெட் ஏர் விமானம் மதுரைக்கு புறப்பட தயாரானது. இதில், சுப்பிரமணியசாமி, சந்திரலேகா உள்ளிட்ட 36 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடிய போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. ஒரு மணி நேர தாமதத்திற்கு பின்பு பாதுகாப்பாக மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

தோண்டித் துருவி விசாரித்துப் பார்த்துவிட்டேன். சுப்பிரமணிய சுவாமி நிச்சயமாக சொல்லிவிட்டார். விமானம் பழுதானதற்கோ, பயணம் தாமதமாகியதற்கோ தான் நிச்சயம் காரணமல்ல என்று பெருந்தன்மையுடன் சுவாமி மறுத்தவுடன், மூன்று நிருபர்கள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.

‘இந்த மாதிரி அசம்பாவிதம் நிகழலாம் என்பதாலேயே நான் அவ்வப்போதுதான் உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன்’ என்று சுப்பிரமணிய சாமி நகர்ந்தார்.


sleepworking3. ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் பங்கேற்க ம.பி. அரசு ஊழியர்களுக்கு அனுமதியை ஆட்சேபித்து கலாமுக்கு சோனியா கடிதம்: ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் பங்கேற்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநில அரசும் இதே போன்ற உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டில் பிறப்பித்தது. காங்கிரஸ் முறையீட்டை அடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்த உத்தரவை குறித்து பிறப்பு சான்றிதழ் பெறக் காத்திருந்த அப்பாவிசாமியிடம் கருத்து சேகரித்தோம்: “அரசு ஊழியர்கள் நடவடிக்கையில் இறங்குவார்களா? அவர்கள் எந்தக் காலத்தில் எதைத்தான் நகர்த்தி இருக்கிறார்கள்! ஒரு புழு, பூச்சி மேலே ஊர்ந்தால் கூட, ஒன்றும் அறியாமல் உறங்கும் அப்பாவிகளுக்கு அனுமதி வழங்குவதால் சேதம் எதுவும் விளையாது. இந்த அனுமதிக்கு எதிராக கடிதம் வரைந்ததற்கு பதிலாக, அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வழங்க சோனியா கடிதம் போட்டிருக்கலாம்”.


4. ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது: ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் உடனடியாக ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலியைத் தொடர்பு கொண்டு பேசினார். ஒட்டுக் கேட்டதில்…

“நீ அவர்களை உடனடியாக ரஷியாவிடம் அனுப்பியிருக்கக் கூடாது. ஐந்து பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்தும் ஒரு மில்லியன் டாலாராவது ப்யூடினிட்மிருந்தும் கறந்த பிறகே அனுப்பித்திருக்க வேண்டும். போனால் போகிறது… கவலைப் படாதே சகோதரா! இன்றே ஒரு புத்தகம் எழுத ஆரம்பி! நானே தலைப்பு எடுத்துக் கொடுக்கிறேன். ‘வேவு ஓநாய்களும் உள்நாட்டு குள்ள நரிகளும்’ என்று பெயர் வைத்துக் கொள். அமெரிக்கா எப்படி உன்னை மிரட்டியது, அப்கேசியா கலகம் எவ்வாறு புஸ்வாணமானது, ரஷியாவின் அணுகுண்டை ஜார்ஜியா எப்படி கண்டுபிடித்தது என்று ஒவ்வொன்றாக எழுது!”

அதற்கு மேல் அவர் சொன்ன திரைக்கதை போரடித்ததால், அமெரிக்கா ஒட்டுக்கேட்காமல் இணைப்பைத் துண்டித்து விட்டது. முழுவதும் தர இயலாமைக்கு வருந்துகிறேன்.


western travelers5. அமெரிக்க விமான நிலையத்தில் தமிழில் செல்பேசியவர் விமானத்தை விட்டு இறக்கிவிடப்பட்டார்: சியாட்டிலில் வசிக்கும் தமிழரை தொடர்பு கொண்டு பேசினோம். அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியான ஸ்பானிஷில் கதைக்காததுதான் ஆதாரமான பிரச்சினை என்றார்.

“திராவிடக் கட்சிகள் ‘ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்’ செய்ததால், பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை தமிழர்கள் இழந்து வருகிறோம். நான் சந்தேகத்திற்குட்பட்டதற்கு மூல காரணமாக தமிழக ஆட்சியாளர்களைக் குற்றஞ்சாட்டுகிறேன். அவர்கள் மட்டும் ஆளாவிட்டால் தூய தமிழில் பேசி, கைதாகிய பிறகும் ஆங்கிலம் கைகொடுக்காமல், சிறையில் இருந்தே கடிதம் தீட்டி காவியம் படைத்திருப்பேன்” என்று உற்சாகமாக முடித்துக் கொண்டார்.


| |

Loyola College Survey: DMK Wins & Rajni or Vijayaganth

Headline News – Maalai Malar

உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா மாணவர்கள் கருத்து கணிப்பு

சென்னை, அக். 6-

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை யொட்டி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டது.

தமிழகம் முழுவதும் `பொது’ பிரிவில் இருந்து `தனி’ பிரிவுக்கு மாற்றப்பட்ட பஞ்சாயத்துக்களில் 25 பஞ்சாயத்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அது போல மதுரை மத்திய தொகுதிக்குப்பட்ட 15 வார்டுகளில், ஒரு வார்டுக்கு தலா 80 பேர் வீதம் 1260 பேரி டம் கருத்து கேட்கப்பட்டது.

சிக்குன் குனியா, விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தி.மு.க. அரசின் நலத் திட் டங்களுக்கு அனைத்து கிரா மங்களிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. அ.தி. மு.க.வை பொருத்த வரை அது கிராமங்களில் இன் னும் வலுவாக உள்ளது. சில கிராமங்களில் மற்ற எல்லா கட்சிகளையும் விட அ.தி. மு.க.வுக்கு அதிக ஆதரவு உள்ளது.

சில கிராமங்களில் விஜய காந்த் கட்சிக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. ஆனால் பல கிராமங்களில் அந்த கட் சிக்கு ஓரிரு இளைஞர்களே உறுப்பினர்களாக உள்ள னர்.

மதுரை மத்திய தொகுதியில் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தி.மு.க. வேட்பாளருக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 22.6 சதவீத வாக்காளர்களே ஆத ரவு தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்தின் தே.மு.தி.க. 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. 45.8 சதவீத ஓட்டு வாங்கி இருந்தது. தி.மு.க.வுக்கு தற்போது 5.4 சதவீத அளவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 38.2 சதவீத ஓட்டு பெற்றிருந்தது. அதில் 15.6 சதவீத ஓட்டுக்கள் மாறுவது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்த் கட்சி கடந்த தேர்தலில் 12.8 சதவீத ஓட்டுக் களை வாங்கி இருந்தது. தற் போது அந்த கட்சிக்கு கூடு தலாக 4.8 சதவீத ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கிராமங்களில் இருந்த பொது தொகுதிகளை தனி தொகுதியாக மாற்றப்பட்டதை மக்கள் எதிர்ப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள் ளது. சுழற்சி முறையால் மக்கள் கசப்புணர்வும், காழ்ப் புணர்வும் அடைந்துள்ளனர். அரசும், அதிகாரிகளும் வேண்டும் என்றே சாதிப் பிரச்சினையை தங்கள் மீது திணித்துள்ளதாக பலரும் நினைக்கிறார்கள்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் கிராமங் களில், “பெரும்பான்மைமக் கள் விருப்பத்துக்கு எதி ராக தேர்தலை அரசு வலுக் கட்டாயமாக திணிக்கிறது” என்ற மன நிலை மக்களிடம் நிலவுகிறது. கீரிப்பட்டியில் பெரும்பான்மை இனத்த வரிடம் கட்சி ரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது.

பாப்பாபட்டியில் இரு குடும்பங்களுக்கு இடையே கவுரவப் போட்டி நிலவுகிறது. நாட்டாமங்கலத்தில் மட்டும் தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு எதுவும் இல்லை என்றாலும் இந்த 3 கிராமங்களிலும் பெரும்பான்மை சமூகத்தை பகைத்து கொண்டு வாழ்க்கை நடத்த இயலாது என்ற உள் பயம் தாழ்த்தப்பட்டவர்களிடம் இருப்பது கருத்து கணிப்பின் போது தெரிந்தது.

ஆய்வுக்குழு பயணம் செய்த கிராமங்களில் சிக்குன் குனியா பரவலாக இருப்பதை கண்டனர். மக்கள் இது பற்றி கூறுகையில்,

“சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்” என்றனர்.

2 ஏக்கர் இலவச நிலம் திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக் கப்பட்டு வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது. விலை வாசி உயர்வால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருப் பதை ஆங்காங்கே காண முடிந்தது.

பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு நிறைய பேர் (16.5) ரஜினியை கூறி உள்ளனர். விஜயகாந்த்துக்கு (10.1) 2-வது இடமே கிடைத்துள்ளது. இந்த தகவல்களை லயோலா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் இன்று நிரு பர்களிடம் வெளியிட்டார்.

‘AIADMK is the root cause for Chikun Kunya’ – Krishnasamy

Dinamani.com – TamilNadu Page

சிக்குன் குனியா பரவுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

சென்னை, அக். 6: சிக்குன் குனியா நோய் தமிழகத்தில் பரவுவதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்து அவர் பேசியது:

தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை தமிழக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார்.

  • கிலோ அரிசி இரண்டு ரூபாய்,
  • விவசாயக் கடன் தள்ளுபடி,
  • இலவச நிலம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
  • திமுக ஆட்சியில்தான் சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஒரு மேம்பாலம் கூட கட்டப்படவில்லை.

    ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2003-ம் ஆண்டு கொசுவை ஒழிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. மாநகராட்சி பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கொசுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கமிட்டி ஒரு நாள் கூட கூட்டப்படவில்லை. ஜெயலலிதா அரசின் குளறுபடியால்தான் கொசு பரவி சிக்குன் கனியா நோய் வந்துவிட்டது.

    இன்றைக்கு திமுக அரசு அதைக் கட்டுப்படுத்தி வருகிறது. கருணாநிதியை யாரும் எளிதில் பார்க்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் பார்க்க முடியாததால்தான் நம் கூட்டணிக்கு வந்துள்ளார்.

    மாநில அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும். அந்த வகையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

  • West Velachery Woes makes them contest the Election

    Dinamani.com – Chennai Page

    மேற்கு வேளச்சேரி பகுதி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் ஒலிக்குமா?

    சென்னை, அக். 6: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 153-வது வார்டில் மேற்கு வேளச்சேரி நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுயேச்சை வேட்பாளராக பாலா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதையடுத்து பிருந்தாவன் நகர் உள்ளிட்ட மேற்கு வேளச்சேரி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒலிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வேளச்சேரியை கிழக்கு வேளச்சேரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதையடுத்து இப்பகுதி மக்கள் நேரடியாக தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர்.

    சென்னை புறநகர்ப் பகுதிகளின் விரிவாக்கம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உருவானது மேற்கு வேளச்சேரி. வேளச்சேரி ஏரியின் ஆயக்கட்டுப் பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உருவாகியுள்ளன. ஏரி அருகில் உள்ளதால் இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என இங்கு குடியேரியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது.

    இப்பகுதி அடைந்து வரும் வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கு வேளச்சேரி 1978-ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    தேர்தலில் போட்டி ஏன்? இணைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அடிப்படை வசதிகள் தொடர்பான எந்த ஒரு திட்டமானாலும் நீதிமன்றம் வரை சென்றுதான் எங்களால் பெற முடிந்தது என மேற்கு வேளச்சேரி குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியது:

    வேளச்சேரியின் மற்ற பகுதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இப்பகுதி தனித் தீவாக உள்ளது. இதற்காக வேளச்சேரி ஏரியின் தெற்கு பக்க கரையை ஒட்டி வேளச்சேரி பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலையும், இங்குள்ள ஏ.ஜி.எஸ். சாலை வழியாக பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தேர்தல் பிரசாரத்துக்காக இங்குவரும் அரசியல் தலைவர்களிடம் இந்த கோரிக்கையை வைக்க இப்பகுதி மக்கள் தவறவில்லை. இந்த இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் அவசியம் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

    காலதாமதம் காரணமாக திட்டத்துக்கான செலவு அதிகரித்ததுடன் இப்பகுதியின் வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமான வேளச்சேரி ஏரியின் கரை உயரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் நலன் கருதி அரசியல் வாதிகள் குறைத்துள்ளனர்.

    ஏரியின் கொள்ளளவு குறைந்ததால் மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் வெள்ள நீரால் இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு மேற்கு வேளச்சேரியின் தேவைகள் குறித்த எங்களின் குரல் மாநகராட்சியில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தோம் என்றார்.

    மேற்கு வேளச்சேரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளச்சேரி பைபாஸ் சாலைக்கு செல்ல நேரடியான சாலை இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது என தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசியல்வாதிகள் உரிய கவனம் செலுத்தாததே இப்பகுதி மக்கள் தேர்தலில் போட்டியிட முக்கியக் காரணம் என்றார் மகாதேவன்.

    20-க்கும் மேற்பட்ட நலச் சங்கங்கள் ஆதரவு: இப்பகுதியில் உள்ள 20-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கங்கள் இம் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலா தெரிவித்தார். இது தவிர இங்குள்ள மூத்த குடிமக்கள் சங்கம், உந்துநர் அறக்கட்டளை, நுகர்வோர் நல அமைப்புகள் ஆகியவையும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன என்றார்.

    சென்னை மாநகராட்சியின் 153-வது வார்டில் மொத்தம் உள்ள 95 ஆயிரம் வாக்காளர்களில் இங்கு மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக இவர்களின் பிரதிநிதிகள் யாரும் அரசியல் கட்சி சார்பில் கூட மாநகராட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேறாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.

    New Jersey Short Film & Documentary Film Festival

    நியூ ஜெர்சி திரைப்படவிழா

    தமிழோவியத்திற்கு நன்றி.

    விடிந்தும் விடியாத அதிகாலை ஐந்து மணிக்கு பாஸ்டனில் இருந்து நியு ஜெர்ஸி நோக்கி பயணம் ஆரம்பித்தது. சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் பார்ப்பதற்கான ஆர்வம் இருந்த அளவு சூரியன் உதயமாகும் கருக்கல் காலத்தை ரசிப்பதற்கும் ஒதுக்கலாம்.

    பல காலமாக பாஸ்டனில் இருந்தாலும் முதல் முறையாக பிரக்ஞை‘ ரவி சங்கரை சந்தித்தது இந்த விழாவின் ஹைலைட். போக ஐந்து மணி நேரம், திரும்பி வர ஐந்து மணி நேரம். அனேகமாக இந்த மாதிரி பயணங்களில் ‘அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு’ என்று குத்துப் பாடல்களையும், ‘அந்தாக்சரி’ போன்ற சின்னபுள்ள விளையாட்டுகளையும், ‘போலீஸ் மாமா தெரிகிறானா’ என்னும் கண்ணாமூச்சியும் நடத்துவது எம் வழக்கம்.

    ‘பிரக்ஞை’ ரவி ஷங்கர் இந்த பழக்கத்தை மாற்றினார். கொஞ்சம் நினைவலை, நிறைய ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியச் சூழல், கருத்தியல் மோதல்களின் நியாயங்கள் என்று அலுக்காமல் பரவலாக பேசினார். சிந்தனையை முடுக்கி, கற்பித்துக் கொண்ட நியாயங்களை அசைத்து, தேங்கிப் போன மூளையை தூசி தட்டி, அறிவைத் தூண்டிய தர்க்கமுறை தெளிவுகள்.

    மார்க்சிஸம், சமூகவியல், மானுடவியல், இயங்கியல், இயக்க மறுப்பு வாதத்தின் பிழையான சொல்லாக்கம், என்று இஸங்களும் உண்டு. சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா என்று நாடுகளும் களத்தில் இடம்பெற்றது. இஸ்லாமிய கள ஆய்வு, ‘பிரக்ஞை’ பத்திரிகைக்கான நேர்காணல்கள், சம்பத் கதைகள், ஆ. இரா. வெங்கடாசலபதி கட்டுரைகள், எஸ்.வி.ராஜதுரை என்று நேம் ட்ராப்பிங் கலந்த சர்ச்சைகள் அலசப்பட்டது. உளவியலுக்கும் மார்க்சுக்கும் உள்ள முரண், கம்யூனிசத்திற்கும் காபிடலிஸத்திற்கும் உள்ள பல ஒற்றுமைகள் என்று பரந்த தளங்களின் கருத்துக்களின் கோர்வைகளும் முன்வைக்கப்பட்டன.

    பொம்மைக் கடைக்குள் நுழையும் என்னுடைய குழந்தைக்கு தந்தையின் பட்ஜெட் எவ்வளவு என்று அறிந்து வைத்திருக்கும். இருந்தாலும், தூண்டிலாக வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொம்மைகளையும் ஆற அமர ரசித்து விளையாடுவாள். கடைசியாக, அலுத்து மிதமிஞ்சிய திருப்தி கிடைத்தவுடன், ஒரேயொரு விளையாட்டுப் பெட்டியை மட்டும் வாங்கச் சொல்லுவாள். அதே போல், மொத்தமாக பல்சுவை ஆக்கங்களையும், தன்னுடைய ஐம்பதாண்டுக்கும் அதிகமான ஆய்வறிவை இலகுவாக வழங்கினாலும், எங்களின் பொக்கீடறிந்து, சிந்திக்கவேண்டிய takeaways-ஐ எங்களுக்குள் விட்ட, மிக மிக சுவாரசியமான பத்து மணி நேரம்.

    இனி ஆவணப்படங்கள் குறித்த சிறு எண்ணவோட்டங்கள்:

    1. சர் சி வி ராமன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

    நான் சென்றபோது ஆரம்பித்திருந்தது. தன்னம்பிக்கை சிவி ராமனின் முகத்தில் மிளிர்கிறது. வெளிநாடுகளில் தங்கி பத்தோடு பதினொன்றாக ஆகாமல், தாயகம் திரும்பி பளிச்சிட்டதை சிறப்பாக வெளிக் கொணர்ந்திருந்தார். தனியாக ஆராய்ச்சி மையம் துவக்கியது, பலரையும் ஊக்கமூட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.

    கிருஷ்ணனின் பங்கு போன்ற பரபரப்பான விஷயங்களை ஒதுக்கியிருந்தார்.

    படத்தில் கவர்ந்த காட்சி: இரவு உணவு உண்ட பின் அனைவரும் இளைப்பாறும் தருணத்தில் இராமனின் நண்பர், அவரின் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்யச் சொல்கிறார். ‘அதில் என்னுடைய ஈகோ இருக்கிறது. அவிழ்த்தால் தலைக்கனம் வெளியே வந்துவிடும்’ என்று நகைச்சுவையும் சமயோசியதமாகவும் ராமன் பதிலளிக்கிறார்.


    2. எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

    ‘இன்னும் இருபதாண்டுகளில் பசி, பட்டினியால் இந்தியாவே காலி’ என்று உலகம் உச்சரித்ததை மாற்றிக் காட்டியவர். பசுமைப் புரட்சியில் முக்கிய தூணாக இருந்தவரின் வாழ்க்கையை அறிய முடிகிறது.

    3. அப்துல் கலாம் (இயக்கம் : பி தனபால்)

    தாத்தா தன்னுடைய பேரனுக்கு கலாமின் கதையை சொல்வதாக அமைத்திருக்கிறார்கள். ஷோபனாவும் ஆவனப்படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார். (செய்தி :: சிக்குன் குனியா தாக்கி நடிகை ஷோபனா அவதி)

    அப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்வதை படம் பிடித்திருந்தார்கள். சிறுவர்களைப் பெரிதும் கவர்ந்த படம் என்பதாலோ என்னவோ, விழாவிற்கு வந்திருந்த பெரியவர்களைக் கவருமாறு காட்சியோட்டம் அமையவில்லை.

    மதிய உணவு மெனு மனதை மயக்கியது. அவியல், உருளைக் கறி, மாங்காய் ஊறுகாய், ஜிலேபி, பிஸிபேளா பாத், பகாளா பாத் என்று வயிறார உண்டோம். உண்ட மயக்கம் கூடாது என்பதற்காக ஃபில்டர் காபியுடன் எழுத்தாளர்களின் வாழ்க்கை சித்திரங்களை பார்க்க ஆரம்பித்தோம்.

    4. இந்திரா பார்த்தசாரதி (இயக்கம் : ரவி சுப்பிரமணியன்)

    இ.பா. வாழ்ந்த இடங்களுக்கு சென்று படம் பிடித்திருந்தார்கள். புதுச்சேரியில் காலங்கழித்த பகுதிகள், நாடக அரங்கில் இ.பா. ஆகிய இரண்டும் பெரும்பாலான பங்கு வகித்தது. வெளி ரங்கராஜன், நா முத்துசாமி, பிரபஞ்சன், வெங்கட் சாமிநாதன், ஞானி, என்று பிரபலங்களும் இ.பா.வின் சிஷ்யர்களும் தங்கள் கருத்துக்களை சுருக்கமாக வெளிப்படுத்தி, இ.பா. குறித்த சித்திரத்தை முழுமை செய்தனர்.

    5. அசோகமித்திரன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

    ‘Finding Neverland’ திரைப்படத்தில் பீட்டர் பான் பிறந்த கதையை விவரிப்பது போல் ஹைதராபாத் நகரமும் பதினெட்டாவது அட்சரக் கோடும் உருவான கதை, குறும்படத்தை ஆக்கிரமித்திருந்தது. எழுத்தாளர்களுக்கே உரித்தான, துண்டுக் காகிதத்திலும் நெடுங்கதைகளை அடித்தல் திருத்தல்களுடன் எழுதும் பழக்கத்தினை வெளிக்கொணர்ந்தார். சா. கந்தசாமி, வாஸந்தி என்று பொருத்தமானவர்களைத் தேடிப் பிடித்து பேட்டிகளை இணைத்திருந்தார்.

    ‘தான் கண்ட காட்சிகளையும் மனிதர்களையும் எழுதி முடிக்க இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும்’ என்று அ.மி. சொன்னதை வைத்தது, வெகு சிறப்பான முத்தாய்ப்பு.

    6. ஜெயகாந்தன் (இயக்கம் : சா கந்தசாமி)

    ஜெயகாந்தனின் திரைப்படங்களில் இருந்து சில காட்சிகள் இடம்பெற்றது. அவரின் புகழ்பெற்ற படைப்புகளில் இருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டது. அவர் உலவிய பிரதேசங்களில் மீள் உலா நடத்தப்பட்டது. பிரமிக்க வைக்கும் மனிதரைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டுமாறு அமைக்கப்பட்டிருந்தாலும், படக்கோர்வையிலும் விஷயப்பரப்பிலும் போதாமையை வெளிப்படுத்திய ஆக்கம்.

    7. ஊருக்கு நூறு பேர் (இயக்கம் : பி லெனின்)

    விருதுப்படங்களுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்களுடன் கூடிய புனைவுப் படம். திரைப்படத்திற்கு சிறப்பான முன்னோட்டத்தை கே.எம். சுந்தரம் வழங்கினார். படத்தின் பிறகு நடந்த கலந்துரையாடலில் சிந்தனை வட்ட அமைப்பாளர் முருகானந்தம், ஜெயகாந்தனின் குறுநாவலில் இருந்து, திரையாக்கம் மாறுபட்டிருந்த சிற்சில இடங்களை சுட்டினார்.

    பத்திரிகையாளராக நடித்த அர்ச்சனாவிற்கு வசனம் இல்லாவிட்டாலும், இயல்பாக சிறப்பாக நடித்திருந்தார். மரண தண்டனையா, மன்னிப்பா? என்னும் விவாதத்தை எழுப்புகிற திரைப்படம். தூக்குப் போடுவது சரியா தப்பா, என்பதில் இருந்து ஆங்காங்கே வழுவி, கம்யூனிசம், மார்க்சிசம், ஆளும் வர்க்கம் என்று தத்துவங்களில் போராடியது கவனத்தை சிதறடித்தது.

    மாலதி ரங்கராஜனின் விமர்சனம்: The Hindu : “Oorukku Nooru Paer”

    தியோடார் பாஸ்கரனின் விமர்சனம்: The Hindu : A language of visuals

    விழா நிகழ்வின் இறுதியில் எடுத்த சில படங்கள்


    | | | |

    Oil bath for Mosquitoes – Vijayganth Speech

    Headline News – Maalai Malar

    தி.மு.க-அ.தி.மு.க.வுக்கு தமிழகம் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு

    திண்டுக்கல், அக். 5-
    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். திண்டுக்கல்லில் நேற்று பிரசாரம் செய்த அவர் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை நான் தொடங்கினேன். கட்சி ஆரம் பித்ததும் நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கூட்டணி மக்களோடு மட்டும் தான் என்று சொன்னேன். அதன்படி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. மக்களோடு மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலை சந்தித் தேன்.

    இப்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதே போல்தான் நடந்து கொள்கிறேன். சட்டசபையில் 30 லட்சம் பேருக்கு டி.வி. கொடுப் போம் என்று சொன்னார்கள். வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு டி.வி. தரப் படும் என்றனர். டி.வி.க்கான மின்சார செலவும் இலவசம் என்றனர். டி.வி. கொடுத்தால் கேபிள் இணைப்பு கொடுப்பது யார் என்று கேட்டேன். பதில் இல்லை. வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் கேபிள் இணைப்புக்கு ரூ.100 எப்படி கொடுப்பார்கள். 30 லட்சம் குடும்பத்துக்கு டி.வி. கொடுப்ப தாக சொன்னவர்கள் 30 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்களா நான் என்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தேன். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந் தையின் பெயரில் ரூ.10 ஆயிரம் பாங்கியில் டெபாசிட் செய்வேன் என்றேன்.

    இந்தத்தொகை அந்தக் குழந்தை திருமண வயதை அடையும்போது ரூ.1 லட்சமாக வரும். வீட்டுக்கு ஒரு பசு மாடு, ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றேன். தே.மு.தி.க.வின் திட்டங்களை பார்த்து தான் 2 ஏக்கர் நிலம், இலவச கலர் டி.வி. போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    கொசு காலையில் கடித்தால் காலரா, மதியம் கடித் தால் மலேரியா, இரவு கடித்தால் யானைக்கால் நோய் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கடித்தால் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் வருகிறது.

    நாங்கள் கொசு மருந்து அடிக்கிறோம் என்கிறார்கள். அது கொசுக்களுக்கு எண்ணை தேய்த்து குளிப்பது போல இருக்கிறது. சிக்குன் குனியா நோய் வந்ததால் பணக்காரர் கள் தனியார் ஆஸ்பத்திரி களுக்கு செல்கிறார்கள். ஏழைகள் எங்கு செல்வார்கள் சுகாதாரத்துறையை பற்றி தி.மு.க. தலைவர் பேசவே மாட்டேன் என்கிறார்.

    திண்டுக்கல்லிலும் நகராட்சி உள்ளது. ஒவ்வொரு முறையும் கொசு மருந்து தெளித்ததாக கணக்கு எழுதி வைப்பார்கள். ஆனால் அதை செய்திருப் பார்களாப என்றால் இல்லை. அரசு ஆஸ்பத்திரியின் சுவரை தொட்டு பார்த்தாலே லஞ்சம். ஒரே லஞ்சம் தான்.

    கீழே படுத்தாலும், கட்டிலில் படுத்தாலும், மாத்திரை கேட்டாலும் காசு கேட்கிறார்கள். இதை விட பெரிய கொடுமை என்ன குழந்தை பிறந்திருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்குக் கூட ரூ.100 லஞ்சம் கொடுக்கவேண்டும்.

    எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் இவர்களால் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தமிழ்நாடு தி.மு.க-அ.தி.மு.க.வுக்கும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா?

    காரைக்குடிக்கு நான் சினிமா படப்பிடிப்புக்கு சென்றிருந்தேன். அப்போது தாய்மார்கள் என்னை சந்தித்தனர். அவர்களிடம் கடந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்ப என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உங்களுக்குத்தான் ஓட்டு போட நினைத்திருந்தோம். ஆனால் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணம் கொடுத்தனர். வறுமை காரணமாக பணம் பெற்றுக் கொண்டு ஓட்டை மாற்றி போட்டு விட்டோம் என்றனர்.

    50 ஆண்டுகளாக மக்களின் வறுமையை காரணம் காட்டி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகிறீர்களே. அந்த மக்களின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்ப இந்த முறையும் ஓட்டுக்காக காசு கொடுப்பார்கள். தீபாவளி பண்டிகை வருவதால் செலவுக்கு காசு தேவைப்படும். எனவே பணத்தை வாங்கி கொண்டு ஓட்டை மட்டும் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு போடுங்கள். எனக்கு பண ஆசை கிடையாது. கட்சி தொண்டர்களுக்கு மரியாதை வேண்டும் என்பதற்காக எனது சொந்தக் கட்டிடத்தை கட்சி அலுவலகமாக மாற்றி இருக் கிறேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் கடந்த தேர்தலிலேயே 5 சீட்டுகள் மட்டும் வாங்கி கொண்டு ரூ.70 கோடி பெற்றிருப்பேன். சினிமாவில் மட்டும் நான் கருத்து சொல்லவில்லை. மக்களுக்காக வாழ்கிறேன். மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன்.

    உலகில் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை. போகும்போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை. எனது கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களை நான் வன்முறையில் ஈடுபட அனுமதிப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு தாயும் தன் மகனை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக பார்க்க வேண்டும் என்று கனவு காண் கிறார்கள். அவர்களை நான் ரவுடிகளாக மாற்ற விரும்ப வில்லை.

  • தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கல்வி,
  • கொசுக்களை ஒழிப்பேன்,
  • அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சத்தை ஒழிப்பேன்.
    இம் மூன்றையும் செய்து காட்டிட தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஆதரவு தாருங் கள்.

    இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. திண்டுக்கல் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ரவிக்குமார், பொருளாளர், பால சுப்பிரமணியம், திண்டுக்கல் நகர செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க நிர்வாகி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Karunanidhi’s Interview – Chikun Kuniya, MDMK Alliance

    Headline News – Maalai Malar

    கே: சிக்குக்குனியா நோயால் இறந்தவர் குடும்பத்தினருக்கு கேரள அரசு நிதி உதவி வழங்குகிறது. அதுபோல தமிழகத்திலும் வழங்கப்படுமா?

    ப: தமிழகத்தில் சிக்குன் குனியா நோயால் யாரும் இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. அப்படி சிக்குன்குனியா நோயால் இறந்தவர்கள் என்று உங்களிடம் பெயர் பட்டியல் இருந்தால் அதை கொடுங்கள். உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.

    கே: ஏராளமான இலவச திட்டங்கள் அறிவித்துள் ளீர்கள். இதற்கான நிதி நிலை போதுமானதாக உள்ளதா?

    ப: இலவச திட்டங்கள் தொடர நிச்சயம் நிதி நிலை இடம் கொடுக்கும். வாரந்தோறும் நிதித்துறை செயலாளர், நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்து பேசி நிதி ஆதாரங்களை கணக்கிடுகிறேன். வரவு- செலவு கணக்கிடப்பட்டு நிதி பெருக்கும்வாய்ப்பும் கணக்கிடப்பட்டு வருகிறது.

    இந்த பணியை தவறாமல் செய்து வருகிறேன். இதற்கான கோப்புகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன்.

    கே: மேயர், நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வதால் குழப்பமான சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளதே?

    ப: கடந்த 4 ஆண்டுகளில் இதை நாம் நேரடியாக பார்த்தோம். மேயர், நகராட்சி தலைவர்கள் ஒரு கட்சியில் இருக்க, கவுன்சிலர்கள் வேறு கட்சியில் இருப்பதால் எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாமல் அடிதடி, ரகளை ஏற்பட்டது. எனவேதான் இந்த தேர்தலில் இந்தமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    எப்படி முதல்-அமைச்சரை தேர்வு செய்கிறோமோ அப்படியே மேயர், நகராட்சி தலைவர்களையும் தேர்வு செய்வோம்.

    கே: இதனால் கவுன்சிலர்களிடம் குதிரை பேரம் அதிகரிக்குமே?

    ப: குதிரைபேரத்தை தடுக்க மனிதன் மிருகமாக மாறாத பட்சத்தில் இதை தடுத்து விடலாம்.

    கே: வடமாவட்டங்களை போன்று தென்மாவட்டங் களில் தொழிற்சாலைகள் கொண்டுவரப்படுமா?

    ப: தென் மாவட்ட மக்கள் ஊக்கம் அளித்து ஆதரவு கொடுக்க வேண்டும். இங்கும் தொழில்கள் தொடங்க முயற்சி செய்து வருகிறோம்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வந்ததுபோல ம.தி.மு.க.வும் உங்கள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

    ப: யாராவது வந்தால் ஏற்றுக்கொள்வோம். ம.தி.மு.க. வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    முழுவதும் படிக்க :: மாலைமலர்