“திராவிடர்களின் தலைவன் என்பதே பெருமை’
சேலம், அக். 12: “தமிழகத்தின் முதல்வர் என்பதைவிட, திராவிடர்களின் தலைவன்- வழிகாட்டி என்பதே எனக்குப் பெருமை’ என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சேலத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:
பட்டம், பதவிக்காக நாங்கள் திராவிடர் கழகத்திலும், திமுக-விலும் சேரவில்லை. எப்படியாவது அதிகாரத்தைப் பெற வேண்டும் என்றும் நினைக்கவில்லை.
ஏற்றுக் கொண்ட கொள்கை அடிப்படையில் செயல்பட்டோம். முதலமைச்சர் என்பதைவிட திராவிடர் என்று கூறிக் கொள்வதில்தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் திராவிடர்களுக்கு தனி சரித்திரம் உண்டு. ஆனால் இப்போது யார் யாரையோ திராவிடன் என்று குறிப்பிடுகின்றனர்.
திராவிடன் என்றால் மூடநம்பிக்கை, ஜாதி, மனுதர்மத்தை எதிர்ப்பவன்.
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். மானத்தோடு வாழ வேண்டும் என்ற உணர்வோடு செயல்படுபவன். அந்த உணர்வைத்தான் திராவிட இயக்கங்கள் ஊட்டி வளர்த்து வருகின்றன.
அவ்விதத்தில் என்னை திராவிடர்களின் தலைவன்- வழிகாட்டி என்று கூறுவதே மகிழ்ச்சியளிக்கிறது.
எதிர்கால தலைமுறையினர் மானத்தோடு, நல்ல சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கங்கள் பாடுபடுகின்றன. அதற்கு நீங்களும் ஆதரவளிக்க வேண்டும்.
திராவிடர் இயக்கத்தினர் தியாகத் திருவிளக்குகள். உங்கள் வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி அந்த இயக்கங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கருணாநிதி.











//திராவிடர் இயக்கத்தினர் தியாகத் திருவிளக்குகள். //
சபாஷ், கலைஞர் மாதிரி கூசாம ரீல் உடறதுக்கு இனிமே யாராவது பிறந்து தான் வரணும்.