தமிழகத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டமங்கலம், கொட்டகாச்சியேந்தல் உள்ளாட்சித் தேர்தல் நிலவரம்
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம், கடந்த இரண்டு வாரமாக திருவிழா போல கோலகலமாக நடைபெற்று வருகின்றது. ஆனால் மதுரை ஒட்டிய பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காச்சியேந்தல், நாட்டமங்கலம் போன்ற கிராமப் பஞ்சாயத்துகளில், தேர்தல் பிரச்சாரத்தின் சுவடே தெரியவில்லை.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து தலைவர்களை தேர்வு செய்ய தமிழக அரசு கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒன்று தேர்தலில் யாரும் போட்டியிடுவதில்லை, அல்லது ஊரின் சார்பில் யாராவது தாழ்த்தப்பட்டவரை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்து, பதவியேற்கவும் செய்து விட்டு, மறு விநாடியே ராஜினாமா செய்ய வைக்கும் நிலைமை நீடிக்கிறது.
இந்த நான்கு ஊர்களுக்கு தற்போதும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக கீரிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஊரின் சார்பில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஊரின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகின்றார்.
ஆனால் இதனை உள்ளூர் மக்கள் ஏற்க மறுக்கின்றனர். இவ்வாறு நிலவும் சூழ்நிலையில், இப்பகுதிகளுக்கு சென்ற பிபிசியின் செய்தியாளர் எல்.ஆர்.ஜெகதீசன், இந்த ஊர்களின் தேர்தல் நிலவரம் குறித்து தயாரித்துள்ள பெட்டகத்தினை பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான செய்தியரங்கத்தில் கேட்கலாம்.











athu enga area enga jathi makkal athigam atunala atha reciervela irunthu eduka vendum.