Daily Archives: ஒக்ரோபர் 5, 2006

New Jersey Short Film & Documentary Film Festival

நியூ ஜெர்சி திரைப்படவிழா

தமிழோவியத்திற்கு நன்றி.

விடிந்தும் விடியாத அதிகாலை ஐந்து மணிக்கு பாஸ்டனில் இருந்து நியு ஜெர்ஸி நோக்கி பயணம் ஆரம்பித்தது. சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் பார்ப்பதற்கான ஆர்வம் இருந்த அளவு சூரியன் உதயமாகும் கருக்கல் காலத்தை ரசிப்பதற்கும் ஒதுக்கலாம்.

பல காலமாக பாஸ்டனில் இருந்தாலும் முதல் முறையாக பிரக்ஞை‘ ரவி சங்கரை சந்தித்தது இந்த விழாவின் ஹைலைட். போக ஐந்து மணி நேரம், திரும்பி வர ஐந்து மணி நேரம். அனேகமாக இந்த மாதிரி பயணங்களில் ‘அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு’ என்று குத்துப் பாடல்களையும், ‘அந்தாக்சரி’ போன்ற சின்னபுள்ள விளையாட்டுகளையும், ‘போலீஸ் மாமா தெரிகிறானா’ என்னும் கண்ணாமூச்சியும் நடத்துவது எம் வழக்கம்.

‘பிரக்ஞை’ ரவி ஷங்கர் இந்த பழக்கத்தை மாற்றினார். கொஞ்சம் நினைவலை, நிறைய ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியச் சூழல், கருத்தியல் மோதல்களின் நியாயங்கள் என்று அலுக்காமல் பரவலாக பேசினார். சிந்தனையை முடுக்கி, கற்பித்துக் கொண்ட நியாயங்களை அசைத்து, தேங்கிப் போன மூளையை தூசி தட்டி, அறிவைத் தூண்டிய தர்க்கமுறை தெளிவுகள்.

மார்க்சிஸம், சமூகவியல், மானுடவியல், இயங்கியல், இயக்க மறுப்பு வாதத்தின் பிழையான சொல்லாக்கம், என்று இஸங்களும் உண்டு. சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா என்று நாடுகளும் களத்தில் இடம்பெற்றது. இஸ்லாமிய கள ஆய்வு, ‘பிரக்ஞை’ பத்திரிகைக்கான நேர்காணல்கள், சம்பத் கதைகள், ஆ. இரா. வெங்கடாசலபதி கட்டுரைகள், எஸ்.வி.ராஜதுரை என்று நேம் ட்ராப்பிங் கலந்த சர்ச்சைகள் அலசப்பட்டது. உளவியலுக்கும் மார்க்சுக்கும் உள்ள முரண், கம்யூனிசத்திற்கும் காபிடலிஸத்திற்கும் உள்ள பல ஒற்றுமைகள் என்று பரந்த தளங்களின் கருத்துக்களின் கோர்வைகளும் முன்வைக்கப்பட்டன.

பொம்மைக் கடைக்குள் நுழையும் என்னுடைய குழந்தைக்கு தந்தையின் பட்ஜெட் எவ்வளவு என்று அறிந்து வைத்திருக்கும். இருந்தாலும், தூண்டிலாக வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொம்மைகளையும் ஆற அமர ரசித்து விளையாடுவாள். கடைசியாக, அலுத்து மிதமிஞ்சிய திருப்தி கிடைத்தவுடன், ஒரேயொரு விளையாட்டுப் பெட்டியை மட்டும் வாங்கச் சொல்லுவாள். அதே போல், மொத்தமாக பல்சுவை ஆக்கங்களையும், தன்னுடைய ஐம்பதாண்டுக்கும் அதிகமான ஆய்வறிவை இலகுவாக வழங்கினாலும், எங்களின் பொக்கீடறிந்து, சிந்திக்கவேண்டிய takeaways-ஐ எங்களுக்குள் விட்ட, மிக மிக சுவாரசியமான பத்து மணி நேரம்.

இனி ஆவணப்படங்கள் குறித்த சிறு எண்ணவோட்டங்கள்:

1. சர் சி வி ராமன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

நான் சென்றபோது ஆரம்பித்திருந்தது. தன்னம்பிக்கை சிவி ராமனின் முகத்தில் மிளிர்கிறது. வெளிநாடுகளில் தங்கி பத்தோடு பதினொன்றாக ஆகாமல், தாயகம் திரும்பி பளிச்சிட்டதை சிறப்பாக வெளிக் கொணர்ந்திருந்தார். தனியாக ஆராய்ச்சி மையம் துவக்கியது, பலரையும் ஊக்கமூட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.

கிருஷ்ணனின் பங்கு போன்ற பரபரப்பான விஷயங்களை ஒதுக்கியிருந்தார்.

படத்தில் கவர்ந்த காட்சி: இரவு உணவு உண்ட பின் அனைவரும் இளைப்பாறும் தருணத்தில் இராமனின் நண்பர், அவரின் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்யச் சொல்கிறார். ‘அதில் என்னுடைய ஈகோ இருக்கிறது. அவிழ்த்தால் தலைக்கனம் வெளியே வந்துவிடும்’ என்று நகைச்சுவையும் சமயோசியதமாகவும் ராமன் பதிலளிக்கிறார்.


2. எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

‘இன்னும் இருபதாண்டுகளில் பசி, பட்டினியால் இந்தியாவே காலி’ என்று உலகம் உச்சரித்ததை மாற்றிக் காட்டியவர். பசுமைப் புரட்சியில் முக்கிய தூணாக இருந்தவரின் வாழ்க்கையை அறிய முடிகிறது.

3. அப்துல் கலாம் (இயக்கம் : பி தனபால்)

தாத்தா தன்னுடைய பேரனுக்கு கலாமின் கதையை சொல்வதாக அமைத்திருக்கிறார்கள். ஷோபனாவும் ஆவனப்படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார். (செய்தி :: சிக்குன் குனியா தாக்கி நடிகை ஷோபனா அவதி)

அப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்வதை படம் பிடித்திருந்தார்கள். சிறுவர்களைப் பெரிதும் கவர்ந்த படம் என்பதாலோ என்னவோ, விழாவிற்கு வந்திருந்த பெரியவர்களைக் கவருமாறு காட்சியோட்டம் அமையவில்லை.

மதிய உணவு மெனு மனதை மயக்கியது. அவியல், உருளைக் கறி, மாங்காய் ஊறுகாய், ஜிலேபி, பிஸிபேளா பாத், பகாளா பாத் என்று வயிறார உண்டோம். உண்ட மயக்கம் கூடாது என்பதற்காக ஃபில்டர் காபியுடன் எழுத்தாளர்களின் வாழ்க்கை சித்திரங்களை பார்க்க ஆரம்பித்தோம்.

4. இந்திரா பார்த்தசாரதி (இயக்கம் : ரவி சுப்பிரமணியன்)

இ.பா. வாழ்ந்த இடங்களுக்கு சென்று படம் பிடித்திருந்தார்கள். புதுச்சேரியில் காலங்கழித்த பகுதிகள், நாடக அரங்கில் இ.பா. ஆகிய இரண்டும் பெரும்பாலான பங்கு வகித்தது. வெளி ரங்கராஜன், நா முத்துசாமி, பிரபஞ்சன், வெங்கட் சாமிநாதன், ஞானி, என்று பிரபலங்களும் இ.பா.வின் சிஷ்யர்களும் தங்கள் கருத்துக்களை சுருக்கமாக வெளிப்படுத்தி, இ.பா. குறித்த சித்திரத்தை முழுமை செய்தனர்.

5. அசோகமித்திரன் (இயக்கம் : அம்ஷன் குமார்)

‘Finding Neverland’ திரைப்படத்தில் பீட்டர் பான் பிறந்த கதையை விவரிப்பது போல் ஹைதராபாத் நகரமும் பதினெட்டாவது அட்சரக் கோடும் உருவான கதை, குறும்படத்தை ஆக்கிரமித்திருந்தது. எழுத்தாளர்களுக்கே உரித்தான, துண்டுக் காகிதத்திலும் நெடுங்கதைகளை அடித்தல் திருத்தல்களுடன் எழுதும் பழக்கத்தினை வெளிக்கொணர்ந்தார். சா. கந்தசாமி, வாஸந்தி என்று பொருத்தமானவர்களைத் தேடிப் பிடித்து பேட்டிகளை இணைத்திருந்தார்.

‘தான் கண்ட காட்சிகளையும் மனிதர்களையும் எழுதி முடிக்க இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும்’ என்று அ.மி. சொன்னதை வைத்தது, வெகு சிறப்பான முத்தாய்ப்பு.

6. ஜெயகாந்தன் (இயக்கம் : சா கந்தசாமி)

ஜெயகாந்தனின் திரைப்படங்களில் இருந்து சில காட்சிகள் இடம்பெற்றது. அவரின் புகழ்பெற்ற படைப்புகளில் இருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டது. அவர் உலவிய பிரதேசங்களில் மீள் உலா நடத்தப்பட்டது. பிரமிக்க வைக்கும் மனிதரைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டுமாறு அமைக்கப்பட்டிருந்தாலும், படக்கோர்வையிலும் விஷயப்பரப்பிலும் போதாமையை வெளிப்படுத்திய ஆக்கம்.

7. ஊருக்கு நூறு பேர் (இயக்கம் : பி லெனின்)

விருதுப்படங்களுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்களுடன் கூடிய புனைவுப் படம். திரைப்படத்திற்கு சிறப்பான முன்னோட்டத்தை கே.எம். சுந்தரம் வழங்கினார். படத்தின் பிறகு நடந்த கலந்துரையாடலில் சிந்தனை வட்ட அமைப்பாளர் முருகானந்தம், ஜெயகாந்தனின் குறுநாவலில் இருந்து, திரையாக்கம் மாறுபட்டிருந்த சிற்சில இடங்களை சுட்டினார்.

பத்திரிகையாளராக நடித்த அர்ச்சனாவிற்கு வசனம் இல்லாவிட்டாலும், இயல்பாக சிறப்பாக நடித்திருந்தார். மரண தண்டனையா, மன்னிப்பா? என்னும் விவாதத்தை எழுப்புகிற திரைப்படம். தூக்குப் போடுவது சரியா தப்பா, என்பதில் இருந்து ஆங்காங்கே வழுவி, கம்யூனிசம், மார்க்சிசம், ஆளும் வர்க்கம் என்று தத்துவங்களில் போராடியது கவனத்தை சிதறடித்தது.

மாலதி ரங்கராஜனின் விமர்சனம்: The Hindu : “Oorukku Nooru Paer”

தியோடார் பாஸ்கரனின் விமர்சனம்: The Hindu : A language of visuals

விழா நிகழ்வின் இறுதியில் எடுத்த சில படங்கள்


| | | |

Oil bath for Mosquitoes – Vijayganth Speech

Headline News – Maalai Malar

தி.மு.க-அ.தி.மு.க.வுக்கு தமிழகம் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு

திண்டுக்கல், அக். 5-
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். திண்டுக்கல்லில் நேற்று பிரசாரம் செய்த அவர் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை நான் தொடங்கினேன். கட்சி ஆரம் பித்ததும் நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கூட்டணி மக்களோடு மட்டும் தான் என்று சொன்னேன். அதன்படி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. மக்களோடு மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலை சந்தித் தேன்.

இப்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதே போல்தான் நடந்து கொள்கிறேன். சட்டசபையில் 30 லட்சம் பேருக்கு டி.வி. கொடுப் போம் என்று சொன்னார்கள். வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு டி.வி. தரப் படும் என்றனர். டி.வி.க்கான மின்சார செலவும் இலவசம் என்றனர். டி.வி. கொடுத்தால் கேபிள் இணைப்பு கொடுப்பது யார் என்று கேட்டேன். பதில் இல்லை. வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் கேபிள் இணைப்புக்கு ரூ.100 எப்படி கொடுப்பார்கள். 30 லட்சம் குடும்பத்துக்கு டி.வி. கொடுப்ப தாக சொன்னவர்கள் 30 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்களா நான் என்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தேன். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந் தையின் பெயரில் ரூ.10 ஆயிரம் பாங்கியில் டெபாசிட் செய்வேன் என்றேன்.

இந்தத்தொகை அந்தக் குழந்தை திருமண வயதை அடையும்போது ரூ.1 லட்சமாக வரும். வீட்டுக்கு ஒரு பசு மாடு, ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றேன். தே.மு.தி.க.வின் திட்டங்களை பார்த்து தான் 2 ஏக்கர் நிலம், இலவச கலர் டி.வி. போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

கொசு காலையில் கடித்தால் காலரா, மதியம் கடித் தால் மலேரியா, இரவு கடித்தால் யானைக்கால் நோய் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கடித்தால் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் வருகிறது.

நாங்கள் கொசு மருந்து அடிக்கிறோம் என்கிறார்கள். அது கொசுக்களுக்கு எண்ணை தேய்த்து குளிப்பது போல இருக்கிறது. சிக்குன் குனியா நோய் வந்ததால் பணக்காரர் கள் தனியார் ஆஸ்பத்திரி களுக்கு செல்கிறார்கள். ஏழைகள் எங்கு செல்வார்கள் சுகாதாரத்துறையை பற்றி தி.மு.க. தலைவர் பேசவே மாட்டேன் என்கிறார்.

திண்டுக்கல்லிலும் நகராட்சி உள்ளது. ஒவ்வொரு முறையும் கொசு மருந்து தெளித்ததாக கணக்கு எழுதி வைப்பார்கள். ஆனால் அதை செய்திருப் பார்களாப என்றால் இல்லை. அரசு ஆஸ்பத்திரியின் சுவரை தொட்டு பார்த்தாலே லஞ்சம். ஒரே லஞ்சம் தான்.

கீழே படுத்தாலும், கட்டிலில் படுத்தாலும், மாத்திரை கேட்டாலும் காசு கேட்கிறார்கள். இதை விட பெரிய கொடுமை என்ன குழந்தை பிறந்திருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்குக் கூட ரூ.100 லஞ்சம் கொடுக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் இவர்களால் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தமிழ்நாடு தி.மு.க-அ.தி.மு.க.வுக்கும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா?

காரைக்குடிக்கு நான் சினிமா படப்பிடிப்புக்கு சென்றிருந்தேன். அப்போது தாய்மார்கள் என்னை சந்தித்தனர். அவர்களிடம் கடந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்ப என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உங்களுக்குத்தான் ஓட்டு போட நினைத்திருந்தோம். ஆனால் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணம் கொடுத்தனர். வறுமை காரணமாக பணம் பெற்றுக் கொண்டு ஓட்டை மாற்றி போட்டு விட்டோம் என்றனர்.

50 ஆண்டுகளாக மக்களின் வறுமையை காரணம் காட்டி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகிறீர்களே. அந்த மக்களின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்ப இந்த முறையும் ஓட்டுக்காக காசு கொடுப்பார்கள். தீபாவளி பண்டிகை வருவதால் செலவுக்கு காசு தேவைப்படும். எனவே பணத்தை வாங்கி கொண்டு ஓட்டை மட்டும் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு போடுங்கள். எனக்கு பண ஆசை கிடையாது. கட்சி தொண்டர்களுக்கு மரியாதை வேண்டும் என்பதற்காக எனது சொந்தக் கட்டிடத்தை கட்சி அலுவலகமாக மாற்றி இருக் கிறேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் கடந்த தேர்தலிலேயே 5 சீட்டுகள் மட்டும் வாங்கி கொண்டு ரூ.70 கோடி பெற்றிருப்பேன். சினிமாவில் மட்டும் நான் கருத்து சொல்லவில்லை. மக்களுக்காக வாழ்கிறேன். மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன்.

உலகில் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை. போகும்போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை. எனது கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களை நான் வன்முறையில் ஈடுபட அனுமதிப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு தாயும் தன் மகனை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக பார்க்க வேண்டும் என்று கனவு காண் கிறார்கள். அவர்களை நான் ரவுடிகளாக மாற்ற விரும்ப வில்லை.

  • தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கல்வி,
  • கொசுக்களை ஒழிப்பேன்,
  • அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சத்தை ஒழிப்பேன்.
    இம் மூன்றையும் செய்து காட்டிட தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஆதரவு தாருங் கள்.

    இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. திண்டுக்கல் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ரவிக்குமார், பொருளாளர், பால சுப்பிரமணியம், திண்டுக்கல் நகர செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க நிர்வாகி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Karunanidhi’s Interview – Chikun Kuniya, MDMK Alliance

    Headline News – Maalai Malar

    கே: சிக்குக்குனியா நோயால் இறந்தவர் குடும்பத்தினருக்கு கேரள அரசு நிதி உதவி வழங்குகிறது. அதுபோல தமிழகத்திலும் வழங்கப்படுமா?

    ப: தமிழகத்தில் சிக்குன் குனியா நோயால் யாரும் இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. அப்படி சிக்குன்குனியா நோயால் இறந்தவர்கள் என்று உங்களிடம் பெயர் பட்டியல் இருந்தால் அதை கொடுங்கள். உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.

    கே: ஏராளமான இலவச திட்டங்கள் அறிவித்துள் ளீர்கள். இதற்கான நிதி நிலை போதுமானதாக உள்ளதா?

    ப: இலவச திட்டங்கள் தொடர நிச்சயம் நிதி நிலை இடம் கொடுக்கும். வாரந்தோறும் நிதித்துறை செயலாளர், நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்து பேசி நிதி ஆதாரங்களை கணக்கிடுகிறேன். வரவு- செலவு கணக்கிடப்பட்டு நிதி பெருக்கும்வாய்ப்பும் கணக்கிடப்பட்டு வருகிறது.

    இந்த பணியை தவறாமல் செய்து வருகிறேன். இதற்கான கோப்புகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன்.

    கே: மேயர், நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வதால் குழப்பமான சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளதே?

    ப: கடந்த 4 ஆண்டுகளில் இதை நாம் நேரடியாக பார்த்தோம். மேயர், நகராட்சி தலைவர்கள் ஒரு கட்சியில் இருக்க, கவுன்சிலர்கள் வேறு கட்சியில் இருப்பதால் எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாமல் அடிதடி, ரகளை ஏற்பட்டது. எனவேதான் இந்த தேர்தலில் இந்தமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    எப்படி முதல்-அமைச்சரை தேர்வு செய்கிறோமோ அப்படியே மேயர், நகராட்சி தலைவர்களையும் தேர்வு செய்வோம்.

    கே: இதனால் கவுன்சிலர்களிடம் குதிரை பேரம் அதிகரிக்குமே?

    ப: குதிரைபேரத்தை தடுக்க மனிதன் மிருகமாக மாறாத பட்சத்தில் இதை தடுத்து விடலாம்.

    கே: வடமாவட்டங்களை போன்று தென்மாவட்டங் களில் தொழிற்சாலைகள் கொண்டுவரப்படுமா?

    ப: தென் மாவட்ட மக்கள் ஊக்கம் அளித்து ஆதரவு கொடுக்க வேண்டும். இங்கும் தொழில்கள் தொடங்க முயற்சி செய்து வருகிறோம்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வந்ததுபோல ம.தி.மு.க.வும் உங்கள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

    ப: யாராவது வந்தால் ஏற்றுக்கொள்வோம். ம.தி.மு.க. வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    முழுவதும் படிக்க :: மாலைமலர்

    Telugu & Tamil Superstars mentioned in Boston Newspaper

    அதிகாலை என்று சொல்ல முடியாது. அலுவலுக்கு விரையும் காலை என்று சொல்லலாம். இலவசமாக கிடைக்கும் பாஸ்டன் மெட்ரோ (Metropoint) எடுத்துக் கொண்டேன். குளிர் எட்டிப் பார்க்க ஆரம்பித்ததால், இழுத்துப் போர்த்தியிருக்கும் அமெரிக்க மாமிகள். மக்களை கவனிப்பதுதான் பொழுதுபோக்கு என்றாலும் நாளிதழையும் புரட்டினேன்.


    GOLIMAAR
    முதலில் கண்ணில் பட்டவர்: YouTube – கோலிமார்

    While Bollywood cinema may be a foreign concept to some, this clip is sure to convince you of its inventive brilliance. Just kidding. It’s a total rip off of Michael Jackson’s “Thriller” but therein lies the beauty. “Golimaar,” with the Wal-mart version of Jackson’s original costume and a slew of less convincing spooks, dances his way into your heart with slick Hindi moves and a killer Casio beat.

    சிரஞ்சீவியும் ராதாவும் ஆடும் தெலுங்குப் பாடல். இணையத்தினால் உலகம் சுருங்குகிறது என்பதற்கு காட்டாக பாஸ்டன் பேப்பரில் தெலுங்கு சூப்பர்ஸ்டாரை வாரியிருந்தார்கள்.

    LITTLE SUPERSTAR
    நடுநிலை தவறாமல், பக்கத்திலேயே சூப்பர்ஸ்டார் படத்தையும் சுட்டியிருக்கிறார்கள்: YouTube – Little Superstar

    But don’t get us wrong, Bollywood has managed to produce a one-of-a-kind “Little Superstar” of its own. Catch what couldn’t possibly be an actual child (perhaps this is a Gary Coleman/Andy Milonakis sort of thing?) do the worm and some other sweet moves so smooth that he puts most full-grown adults to shame. Plus, these moves while his lazy friend presses stop and start on the boombox.

    ரஜினியை ‘சோம்பேறி’ என்று வர்ணித்ததை கண்டித்து பெட்டிஷன் போட வேண்டும். வாருங்கள்! கண்டனக் கடிதம் எழுதுவோம்!!

    யூ ட்யூப்பில் ‘லிட்டில் சூப்பர்ஸ்டார்’ குறித்த கிங்ஸ்லியின் (சென்ற வாரத்து) பதிவு: The Little Superstar Goes Ginormous by Kingsley 2.0


    | |