தி.மு.க.வுக்கு எதிராக திடீர் சுவரொட்டிகள்: மத்திய தொகுதியில் பரபரப்பு தி.மு.க.வுக்கு எதிராக திடீர் சுவரொட்டிகள்
மதுரை, அக். 2-
அகில இந்திய தேவர் பேரவை தலைமையகம் என்ற பெயரில் மதுரை மத்திய தொகுதி முழுவதும் தி.மு.க.விற்கு எதிரான பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டியில், தி.மு.க. ஆட்சியில் மூக்கையா தேவரின் பாப்பாபட்டியும், 2006-ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் பசும்பொன் கிராமமும், பூலித்தேவரின் நெற்கட்டும் செவல் கிராமமும் தனி தொகுதியாக்கப்பட்டன. கடந்த 1996-ம் ஆண்டும், 2006-ம் ஆண்டும் முக்குலத்தோர் எவரும் கலெக்டராக நியமிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் தேவர் பேரவை தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.










