செய்தித் தொகுப்பு
உணவுப்பொருள், உரம், மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான அரசின் மானியம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து தற்பொழுது ரூ. 80,000 கோடியினை அடைந்துள்ளது. 1:4 ஆகக் காணப்படும் பொதுமுதலீட்டிற்கும், மானியத்திற்கும் இடையேயான விகித அளவினை 4:1 என அரசு மாற்றியமைக்கும்பட்சத்தில், இந்திய வேளாண்மையில் காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படலாம்.
வர்த்தக ரீதியாக மதிப்புடைய பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள் மற்றும் மீன்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் 45 சதவிகிதமாகக் காணப்படினும், இவற்றின் சந்தையாக்கல், அதிக அளவு சந்தை சார் ஆபத்துகளைப் பன்னாட்டு அளவில் எதிர்கொள்கின்றன. ஆனால் அரசின் வேளாண் தொடர்பான கொள்கைகள் அனைத்தும் அடிப்படை உணவு தானியங்களைச் சுற்றியே செயல்படுவது வேதனைக்குரியது.
இது சாம்பிள்: Actions speak louder than words./The pen is mightier than the sword.










