பெப்சி, கோக-கோலாவுக்கு நான் நற்சான்று தரவில்லை: அமைச்சர் அன்புமணி
புது தில்லி, ஆக. 24: “பெப்சி, கோக-கோலா மென்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நான் நற்சான்று வழங்கவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் நானும் கூட்டு சேர்ந்து, சான்று வழங்கியதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது மான நஷ்ட வழக்கு போடப் போகிறேன்’ என்று தில்லியில் புதன்கிழமை இரவு எச்சரித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 214 மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தோம். மேலும் 500 மாதிரிகளை எடுக்கச் சொல்லியிருக்கிறோம்.
பூச்சிமருந்துக் கழிவு இருப்பதாகக் கூறிய அறிவியல்-சுற்றுச்சூழலுக்கான மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயணனையும், மத்திய சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனைக்கு அழைத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புள்ள பிற செய்திகள்:
1. TODAY’S EDITORIAL: Karma cola- The Times of India
2. No clean chit to cola giants: Ramadoss- The Times of India
3. Financial Express – CSE report on colas wrong: Health Ministry










