பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத மாணவிகள்: பிகார் முதலிடம்
புதுதில்லி, ஆக.15: பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காத மாணவிகள் எண்ணிக்கையில்
#1. பிகார்
#2. மேற்கு வங்கம்
உள்ளது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பாத்மி திங்கள்கிழமை தெரிவித்தார். இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலமான பதிலில் அவர் கூறினார்.
2004-ம் ஆண்டு செப்.30-ம் தேதி வரை நாட்டில் 581 மாவட்டங்களில் 9,292 அரசு தொடக்கப் பள்ளிகளில் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்று கல்வி திட்டம் மற்றும் நிர்வாகத்துகான தேசிய நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. 1,21,728 தொடக்கப் பள்ளிகளில் தலா ஓர் ஆசிரியர் மட்டுமே இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.










