மக்களவைக்காக புதிய தொலைக்காட்சி
பொதுமக்களுக்கும், மக்களவைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்காகவும், அவை நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் “மக்களவைச் சேனல்’ என்ற புதிய தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் திங்கள்கிழமை துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் இதன் ஒளிபரப்பு துவங்கியது.
இது குறித்து மக்களவைத்தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியதாவது:
இத் தொலைக்காட்சி மூலம் மக்களவை ஒரு புதிய அத்யாயத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் அவையின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியும். உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இத்தொலைக்காட்சி வெற்றி பெறும்
என்றார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கப்பட்ட 24 மணிநேர தொலைக்காட்சி இது.
இதில் ஒளிபரப்பாக உள்ளன.










