Monthly Archives: ஏப்ரல் 2006

Karunanidhi Interview in Anandha Vikadan

ஆனந்த விகடன்கலைஞரின் பேட்டி :

‘‘ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சிம்ரன் தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார். பாக்யராஜ் திடீரென தி.மு.க&வில் இணைகிறார். சினிமா கவர்ச்சி இல்லாமல் தமிழக அரசியல் இயங்க முடியாதா?’’

‘‘சிம்ரன் எங்கு பிறந்தார், வளர்ந்தார் என்பது பிரச்னை இல்லை. ஆனால், அவருக்குத் தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? அவர் வந்து திடீரென்று ஒரு கட்சிக்கு ஆதரவு திரட்டினால், அதற்குப் பெயர்தான் சினிமா கவர்ச்சி!

ஆனால், பாக்யராஜ் சினிமாக் காரர் மட்டுமல்ல. நல்ல சிந்தனை யாளர். பத்திரிகையாளர். அவரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல் கட்சிகளை நன்கு அறிந்தவர்.

சினிமாக்காரர்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருப்பது உண்மைதான். வழக் கறிஞர், மருத்துவர், பொறியாளர் என எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வரும்போது சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது. அதற்காக, பாக்யராஜும் சிம்ரனும் ஒன்றா என்ன?’’

‘‘வாய்ப்பு வழங்கப்பட்டவர்களிலும் தி.மு.க-வின் பழைய முகங்களே அதிகம் தெரிகிறார்கள். உதாரணமாக, சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் என ஒரே குடும்பத்தில் இருவருக்கும் சீட் வழங்கி இருக்கிறீர்களே?’’

‘‘தி.மு.க. போட்டியிடும் மொத்த இடங்களில் 88 இடங்களுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறோம். இதற்கு மேல் புதியவர்களை எப்படி வரவேற்பது? வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் அவருடைய மகன் ராஜாவுக்கும் சீட் வழங்கியிருப்பது விதிவிலக்கு. அவர்கள் அப்பா, மகன் என்பதால் அல்ல; வெற்றி வாய்ப்புள்ள கழக வேட்பாளர்கள் என்பதை மனதில்கொண்டே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.’’

முழுவதும் விகடன்.காமில் கிடைக்கிறது.

Election Songs – Nakkeeran

நக்கீரன்பட்டையை கிளப்பும் பாடல்கள்!

தேர்தல் களம் ஹீட்டாகிக்கொண்டிருக்கிறது. அதே நேரம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பாடல்களும் ஹிட் அகி வருகின்றன. சோடாத் தண்ணியை குடிச்சிட்டு தொண்டைத் தண்ணி வத்த பேசுவது ஒரு பக்கம் ஆருந்தாலும்… தங்கள் எதிரிகளைக் குறிவைத்து பிரத்யேகமாக எழுதப்பட்ட பாடல்களைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர் தேர்தல் களத்தில்.

யார், யாருக்கு எத்தனை சீட்? உளவுத்துறை சர்வே முடிவு!

ஏப்ரல் 5ந் தேதியிருருந்து 10ந் தேதிவரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில்
தி.மு.க.வுக்கு 100,
காங்கிரசுக்கு 33,
பா.ம.க.வுக்கு 24,
சி.பி.எம். 9,
சி.பி.ஐ. 8,
மு.லீக். 2
176 தொகுதிகளும்

அ.தி.மு.க.வுக்கு 50,
ம.தி.மு.க.வுக்கு 5,
சிறுத்தைகளுக்கு 3
58 தொகுதிகளும் கிடைக்கும்

Meera Jasmine Campaigns for ADMK?

Ms J Jayalalitha is my rolemodel both in films and outside the industry.- Meera jasmin

சி.மு. பாலசுப்ரமணியன், எஸ். ப்ரேம்நாத், ஆர். முத்துக்குமரன் கைவண்ணத்தில் அதிமுக தொண்டர்களினால் உருவாகிய தளத்தில் ‘மேற்கோள்’ காட்டியிருக்கிறார்கள். (வழி: தினமணி – இணையதளத்திலும் தேர்தல் பிரசாரம் : வி. கிருஷ்ணமூர்த்தி)

Ambedkar Brithday – Dinamani

போற்றுதல் பொருட்டு… :: ஆதவன் தீட்சண்யா

வழக்கம்போலவே தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே சில விழாக்கள் நடைபெறும். மற்றபடி பொதுவாக சில தலைவர்கள் தாங்களாகவே நேரடியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பர். சிலர் தம் சார்பாக யாரையாவது அனுப்பி வைப்பர். ஒருவேளை இது தேர்தல் காலமாக இருப்பதால் மாலைகளின் தடிமன் மற்றும் எண்ணிக்கைகள் கூடும் வாய்ப்புள்ளது.

எப்படியாயினும், அம்பேத்கர் என்கிற உருவம் இன்று அரசியல் களத்தில் ஒதுக்கி வைக்கப்படுவதாயில்லை. அது பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கட்சிகளின் பதாகைகளில் மிகுந்த பெருந்தன்மையோடும் சகஜ மனோபாவத்தோடும் அவர் படம் இடம் பெற்றுள்ளது. அதாவது தன்னை சாதிய உணர்விலிருந்து விடுபட்டவராகக் காட்டிக்கொள்ள விரும்பும் தலித் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் அம்பேத்கர் என்கிற உருவம் அப்படியானதொரு அங்கீகார முத்திரையாக மாறியிருக்கிறது.

உண்மையில் அம்பேத்கர் தனக்கான அங்கீகாரத்திற்காக வாழ்நாளில் எதுவொன்றையும் செய்தாரில்லை. தனது உழைப்பையும் அறிவையும் தனக்குக் கிடைத்த அதிகாரங்களையும் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் மனிதஜீவிகளுக்குள் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குமே பயன்படுத்தினார். ஆனால் இன்று அவரைக் கொண்டாடுபவர்கள், அவர் பெயரால் இயங்கும் அமைப்புகள் பெரும்பாலானவற்றுக்கும் அவரது உருவம்தான் தேவைப்படுகிறதேயன்றி அவரது சிந்தனைகளல்ல.

பன்முகப்பட்ட ஆளுமையும் செயல்திறமும் கொண்டு விளங்கியவர். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் இருக்கின்ற சாதியத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

கல்வியும் தகுதியும் திறமையும் உள்ள யாரையும் இச்சமூகம் கொண்டாடும் என்னும் பசப்பலான வாதங்களின் பின்னே பதுங்கியிருக்கும் போலித்தனங்களையும் சாதி உளவியலையும் அவரது வாழ்க்கையே அம்பலப்படுத்துகிறது. அவரளவுக்கு படித்தவர்கள் நம் நாட்டில் இன்றளவும்கூட வேறெவரும் இல்லை. இருந்தும் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக, பெருமைமிக்க நமது முன்னோடிகளில் ஒருவராக, மாபெரும் கல்வியாளராக, வரலாற்றாய்வாளராக, சட்ட வல்லுநராக, ஒடுக்குமுறைக்கு எதிரான போராளியாகக் கொண்டாடுவதைத் தடுப்பது எது?

நகரமயமாக்கமும் கல்வியும் நவீனத் தொழில்நுட்பமும் சாதியத்தைப் பொருள்படுத்துவதில்லை என்றும் எனவே அம்பேத்கரின் குற்றச்சாட்டுகளும் வாதங்களும் இன்று பொருந்தாது என்றும்கூட வாதிக்கப்படுகிறது. ஒரு தலித் சத்துணவு ஊழியர் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்குத் தமது குழந்தைகளை அனுமதிக்காத கிராமத்தாருக்கும், வால்மீகி சாதிப் பெண்களை வீட்டு வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுக்கிற தில்லிக்காரருக்கும் வாய்த்திருப்பது ஒரே மனநிலைதான். அது தீட்டு குறித்த அச்சமும் தலித்துகள் குறித்த இழிவான பார்வையும்தான்.

உண்மையில் நகரத்திற்கென்று ஒரு சொந்த முகம் கிடையாது. சாதியத்தால் ஊரென்றும் சேரியென்றும் பிளவுண்டு, ஏற்றத்தாழ்வு என்பதை இயல்பானதொரு மதிப்பீடாகப் பயின்று வாழும் கிராமங்களிலிருந்து தனது சொந்த சாதி சார்ந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், மொழி, பெருமிதங்களோடு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டவர்களின் தொகுப்பாகத்தான் நமது நகரங்கள் உள்ளன.

தற்காலத்தில் ஒரு பஸ்ஸில் பயணிப்பது அல்லது திரையரங்கில் படம் பார்ப்பதைப் போலவே குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஒரு தொழிலகத்திலோ அலுவலகத்திலோ கூடுவதற்கும் சாதி ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படுவதில்லை. ஆனால் அவ்விடத்திலும் அவர் தன் சாதியைத் துறக்க வேண்டியவராயில்லை. அவ்விடத்தில் அவர் வெளிப்படுத்தும் அதிகபட்ச சமத்துவ குணம் என்னவென்றால் தனது சக ஊழியர்கள் இன்னின்ன சாதியராகத்தான் இருக்க வேண்டும் என்று கோராமல் இருப்பதுதான். அந்த அலுவல் நடக்கும் போதும் முடிந்தபின்னும் வீடு திரும்பிய நிலையிலும்கூட அவர் தனது சுயசாதி சார்ந்த எதுவொன்றையும் இழப்பதில்லை. வெளியிடத்தில் அவர் தீண்டாமையைக் கடைப்பிடிக்காதவராகத்தான் இருக்கிறாரேயொழிய சாதியைக் கைவிட்டவராக அல்ல. தவிரவும் சமூகம் என்பது குடும்பம் என்கிற சிற்றலகுகளின் தொகுப்புதானே? அந்தக் குடும்பங்கள் சாதியின் அடிப்படையில்தானே கட்டமைக்கப்படுகிறது… குடும்பத்திற்குள் – தனிமனித வாழ்வில் சாதியத்தின் இருப்பு நீடிக்கிறவரை சமூகத்திலும் சாதி நீடிக்கவே செய்யும்.

அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் ஆட்சியோ ஒரு தலைவனோ வாய்க்கும்போது வலுவான சட்டங்களின் மூலமாகக்கூட சிலவகையான ஒடுக்குமுறைகளை ஒழித்துவிட முடியும்.

சாதிரீதியான ஒடுக்குமுறைக்கும் மீறியதாய் பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது. சாதியைத் தவிர இழப்பதற்கு ஏதுமற்ற தலித்துக்கும் கூட இங்கே இழப்பதற்கு அவரது ஆணாதிக்க மனோபாவம் மிச்சமிருக்கிறது. சமத்துவமின்மையின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துக் களம் கண்ட மகத்தான போராளியான அம்பேத்கரின் சிந்தனை வெளிச்சத்தில் சாதி கடந்த, ஆண் பெண் பேதம் கடந்த மனிதநிலைக்கு மேலெழும்புவதற்கு நாம் யோசிக்கலாம். ஒருவேளை அதுதான் அவர் பிறந்ததற்கும் வாழ்ந்ததற்குமான அர்த்தம் பொதிந்த நமது போற்றுதலாயிருக்கக்கூடும்.

(அம்பேத்கரின் பிறந்தநாள்)


| |

Thirumavalan Interview : Dinakaran

நன்றி: தினகரன்

Attention Grabbed News

சமீபத்தில் என் சிந்தனையை உசுப்பேற்றிய அல்லது அடர்த்தியான விஷயகனம் நிரம்பிய அல்லது ‘டக்கரா யோசிக்கறியே கண்ணு’ என்று ‘அட’ போடவைத்த சில ஆங்கில செய்திக் கோர்வைகள்:

  • நியு யார்க் டைம்ஸ்: இந்தியாவில் நடைபெறும் மாவோப் போராட்டங்கள் குறித்த பதிவு.
  • நியு யார்க் டைம்ஸ்: www.zunafish.com பண்டமாற்றுக்கு குக்கூரல் இடுகிறது.
  • ஹெரால்ட் ட்ரிப்யூன்: வலைப்பதிவு மூலமாக நாலு காசு சம்பாதிக்க வழி காட்டுறாங்க.
  • கார்டியன் புத்தக அறிமுகம்: Are Women Human? எழுதிய Catharine MacKinnon உடன் பேட்டி.
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: அக்னி நட்சத்திரத்துக்கும் சுற்றுச்சூழல் வெப்பமாவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்று சொன்னால் அறிவியலாளர்களுக்கு ஆப்படிக்கப்படுகிறது.
  • அராபிய செய்திகள்: சவூதியில் உள்ளாடைகளை விற்பதற்கு இனி பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிறார்கள்.
  • நியு யார்க் டைம்ஸ்: நான் விரும்பிப் பார்க்கும் ‘வெஸ்ட் விங்’ முடிவுக்கு வருகிறது.
  • சூழலியல் தூய்மை: மகிழுந்தில் இருந்தும் நச்சுப்பொருட்கள் என்னவென்று தெரியுமா?
  • ஆன்லைன் வாய்ஸ்: எழுத்தாளர் சுஜாதாவுடன் செவ்வி.
  • எம்.ஐ.டி. vs கலிஃபோர்னியா பல்கலை: திருட்டு படவா என்று சொல்லலாமா? (கல்லூரிகள் பெண்களைக் கவர்வதில்தான் சண்டை வரும்; இவர்கள் கவர்ச்சியில்லாத பீரங்கியை அல்லவா கடத்துகிறார்கள்.)

    | |

  • Pudupettai Banner Causes Traffic Woes

    முன்னுமொரு காலத்தில் லேஸி கீக் இப்படியெல்லாம் அருமையான புகைப்படங்களை தன் வலைப்பதிவில் இடுவார். சென்னையில் வசித்தாலும், எப்படி இவரால் மட்டும் பல்லவன் விரையும் சென்னை சாலைகளில் படம் எடுக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவேன்.

    இப்பொழுதுதானே புரிகிறது…

    இப்படி டிராஃபிக்கில் நின்று கொண்டிருந்தால், வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி விட்டுக் கூட நிழற்பட ஓவியராகலாம்!

    Traffic Congestion in Madras with Pudupettai movie banner as Backdrop

    வெளியான தினசரி: தினமலர்


    | |

    Me, Myself, Balaji

    சமீபத்தில் நண்பர்களுக்கு அறிமுகமாக நான் எழுதிகொண்டது:

    நான் பாலாஜி. அமெரிக்காவில் பாஸ்டன் பக்கம் வசிப்பதாலும் இணையத்தில் நிறைய பாலாஜிகள் இருந்ததாலும் புனைப்பெயர் வைக்க கற்பனைப் பஞ்சத்தினாலும் ‘பாஸ்டன்’ பாலாஜி என்று அழைக்கப் படுகிறேன்.

    பள்ளிக் கூட பருவத்தில் வீடு நிறைய புத்தகங்களாக இருக்கும். அம்மா ஆர். பொன்னம்மாள் ஓர் எழுத்தாளர். ஆன்மிகம், குழந்தை இலக்கியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். என்னுடைய அம்மாவைக் குறித்து விரிவான அறிமுகம் தொகுக்க ஆரம்பித்து, பாதியில் தொக்கி நிற்கிறது. தற்போதும் காமகோடி, கோகுலம், ஞான ஆலயம் போன்ற பத்திரிகைகளிலும் வானதி, திருமகள் போன்ற பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களிலும் செயல்பட்டு வருகிறார்.

    அவர்கள் உந்துதலில் +2 வரை கண்டதும் படிக்க முடிந்தது. சில சமயம் அமுதசுரபி; கணையாழி; மஞ்சரி; பல சமயம் விகடன்; குமுதம்; திசைகள்; தவறவிடாமல் புஷ்பா தங்கதுரை; சுஜாதா; ப.கோ.பி.; ராஜேஷ்குமார். எப்பொழுதாவது லஷ்மி; சிவசங்கரி; கல்கி.

    கல்லூரியில் படிப்பும் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே வாசிக்க கிடைத்த வடக்கு இந்தியா. என்றாலும் படைப்பார்வத்தில் பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதினேன். அவற்றில் சில தமிழோவியம் வெளியிட்டது:
    கங்கை இல்லாத காசி | சுய சாசனம்

    ஐந்து வருடம் முன்பு இரா. முருகனால் நடத்தப்படும் ராயர் காபி கிளப் சேர்ந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுதப் பழகினேன். அதன்பின் திண்ணை, வலைப்பதிவு, மரத்தடி, தமிழோவியம் போன்ற வலையகங்களில் தொடர்ந்து (பெரும்பாலும்) கட்டுரைகள், சில சமயம் புனைகதைகள் எழுதி வருகிறேன்.


    சமீபத்தில் தினமொரு வலைப்பதிவாக அறிமுகம் செய்யும் தேன்கூடு கொடுத்த அறிமுகம்:

    பாஸ்டன் பாலாஜி [பாபா] (என்கிற) பாலாஜி சுப்ரா, ஒரே சமயத்தில் பல குதிரைகளில் பயணம் செய்பவர்! தனது வலைப்பதிவில் தினம் ஏதாவது ஒன்று புதிதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் நபர்களில் ஒருவர். தமிழ் இணையத்தில் எங்காவது ஏதாவது தீப்பொறி கிளம்பினால், அதைக் குறித்து மறைமுகமான நையாண்டிக் கட்டுரையோ அல்லது கணிப்போ இவரது வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கும்.

    இவரது வலைப்பதிவில் குமுதம் ரேஞ்ச் பதிவுகளும் இடம் பெறும்; இலக்கிய சர்சைகளும் இடம் பெறும். ஏகப்பட்ட தகவல்கள், தொடுப்புகள் என்று கொடுத்திருப்பார். இத்தனை தகவல்களை இவர் எங்கிருந்து திரட்டுகிறார் என்பதில் பலருக்கு பிரம்மிப்பு. இணையம் மற்றும் வலைப்பதிவுகள் குறித்து பாஸ்டன் பாலாஜியால் எழுதப்படும் கட்டுரைகள், கவனத்தினை ஈர்ப்பவை.

    இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலைப்பதிந்து வரும் பாஸ்டன் பாலாஜி, குழுமங்களிலும், தமிழோவியம், திசைகள் போன்ற பல இணைய இதழ்களிலும் பரவலாக எழுதி வருபவர். இலக்கிய ஆர்வலர். வலைப்பதிவாளர்களை உற்சாகப்படுத்தும் சகா. படித்தில் பிடித்ததை சொல்லத் தயங்காதவர். கில்லி – யில் ஒரு ஆட்டக்காரர்.தமிழோவியம் ஆசிரியர் குழுவிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    விளம்பரம் இத்துடன் முடிகிறது; வழக்கமான ஜல்லிகள் தொடரும்.

    | |

    Erode DMK Campaign in Hindi – Dinamalar

    Thinamalar

    நன்றி: http://www.dinamalar.com/

    விஜய்காந்த் குறித்து அறிவுமதி

    Arivumathi on Vijaiganth Politics

    நன்றி: தமிழ் முரசு