நேற்று நடந்த கூட்டணிக் கூட்டத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள முடிவுகள்: (தினமணி)
1. கூட்டணிக் கட்சிகள் தத்தம் வேண்டுதல்களை பிப்ரவரி 15க்குள் திமுகவிடம் சமர்ப்பிப்பார்கள்.
2. அதன்பின்னர் மார்ச் 2 வரை திமுக பிரதிநிதிகள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். Informal-ஆக.
3. மார்ச் 2க்குள் முடிவு எடுக்கப்படும். மார்ச் 3-5 திருச்சியில் திமுக மாநில மாநாடு நடக்கும். அங்கு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றி பொதுமேடையில் அறிவிக்கப்படும்.
ஆக மார்ச் 5ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று தெரிகிறது. இன்னமும் 20 நாள்கள்தான் பாக்கி!
அதிமுக பக்கம் இப்பொழுதைக்கு யாரும் வெளிப்படையாகச் சாய்வதாகத் தெரிவதில்லை!










