Monthly Archives: ஜூலை 2005

ஞாநி

‘ஓ’ பக்கங்கள் ::

புதுக் கவிதைக்கு அடுத்தபடியாக, தமிழில் பிரமாண்டமாக வளர்ந்து வரும் துறை, குறும்படத்துறை. ஒரு அஞ்சல் அட்டை இருந்தால் போதும், புதுக்கவிதை எழுதிவிட முடியும் என்று ‘கவிஞர்’கள் நம்புவது போலவே, ஒரு ஹேண்டிகேம் கிடைத்தால் போதும், குறும்படம் செய்துவிடலாம் என்று நினைக்கும் ‘இயக்குநர்கள்’ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஹேண்டிகேம் மூலம் தொழில் நுட்பம் எளிமையாக மாறியதும், தமிழகத்தில் கடந்த ஐந்தே ஆண்டுகளில் சுமார் 30 கல்லூரிகளில் விஸ்.காம், மாஸ்.காம் பட்டப் படிப்புகள் அறிமுகமானதும் இந்த ‘இயக்குநர்கள்’ எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கின்றன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நமக்கு மின்சாரம் தருவது மட்டுமன்றி, வேறு அக்கறைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. அரசாங்க நிறுவனம் ஒன்று, ஒரு பெரிய புத்தகக் கண்காட்சியையும், சிறுகதைப் போட்டியையும் நடத்துவது நெய்வேலியில் மட்டும்தான். இந்த ஆண்டு முதல் குறும்படப் போட்டியும் நடத்துகிறார்கள். அதற்கு வந்த 76 குறும்படங்களையும் இரண்டு நாட்களில் பார்த்து, பரிசுக்குரியதைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலையைச் செய்து முடித்தபோது, புதுக்கவிதை சந்தித்த அதே பிரச்னைகளைக் குறும்படங்களும் சந்திப்பது தெரிந்தது.

மொழி மீது ஆளுமை இல்லாமலே கவிதை எழுத முற்படுவது போல, கேமரா, ஸ்க்ரிப்ட் பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமலே குறும் படம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எப்படி பல மோசமான புதுக்கவிதைகளில்கூட ஓரிரு வரிகளில் பளிச் என்று சில சிந்தனைப் பொறிகள் தெறிக்குமோ, அது போல அலுப்பூட்டும் குறும்படங்களிலும் சின்னச் சின்ன பளிச்சுகள் இருக்கத்தான் செய்கின்றன.

குறும்படங்களை எடுப்பவர்களில் இன்று பல வகையினர் இருக்கிறார்கள்.

1. மாணவர்கள்: எய்ட்ஸ், போதைப் பழக்கம், வரதட்சணைக் கொடுமை பற்றியெல்லாம் படம் எடுத்தால் எங்கேயாவது, ஏதாவது அவார்டு கிடைத்துவிடும் என்ற மூட நம்பிக்கை இவர்களில் பலருக்கு இருக்கிறது. மீதிப் பேர் விளம்பரப் படம் எடுப்பதற்கான பயிற்சி மாதிரி ‘காக்க காக்க’ கட்டிங்கில் படம் எடுக்கிறார்கள்.

2. தங்களைக் ‘கலைஞர்’கள், ‘இலக்கியவாதி’கள் என்று நம்புகிறவர்கள்: தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்று நினைக்கும் இளைஞர்கள், அந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்த கதை செய்து எடுக்கும் படங்களில், மிகையான, செயற்கையான நடிப்புடன் கூடவே, அவர்களின் அப்பாவித்தனமான ஆர்வமும் தெரிகிறது. 1950-கள், 60-களில் வெளி யான பட பாணியிலேயே இன்னமும் கதை, வசனம், பாடல்கள் எழுதும் ‘இலக்கியவாதி’களை இந்தக் குறும் படங்களில் நிறையவே சந்திக்கலாம்.

3. சமூக அக்கறையுடைய இளைஞர்கள்: ஓர் அசலான பிரச்னையை ஆவணப்படுத்தும் ஆர்வத்துடன் படம் எடுக்கும் இவர்களில் பலருக்கு எளிமையான தொழில்நுட்பமே எதிரியாகிவிட்டது. ஹேண்டிகேமில் ஆட்டோ ஃபோகஸில் போட்டுப் படம் எடுக்கும்போது, யாரைப் பேட்டி எடுக்கிறாரோ அவர் முகம் கறுப்பாகவும், பின்னால் இருக்கும் பிரகாசமான வானம் பளிச்சென்றும் இருப்பதால் ஏற்படும் நெருடல்கள் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆடியோ துல்லியமாகப் பதிவாகியிருக்கிறதா என்பதையும் கவனிப்பதில்லை. விளைவு, நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட மோச மான படங்களாக இவை ஆகிவிடு கின்றன. இந்த வகைப் படங்களைப் பெருக்குவதில் தொண்டு நிறுவனங் களின் தொண்டு கணிசமாக இருக்கிறது.

4. விசிட்டிங் கார்டு இயக்குநர்கள்: பிரமாண்டமான வர்த்தக சினிமாவில் கால் பதிக்க விரும்பும் இளைஞர்கள், உதவி இயக்குநராகச் சேர விரும்புவோர், சேர்ந்திருப்போர் என்று பலர், குறும்படத்தை ஒரு விசிட்டிங் கார்டு போலக் கருதுகிறார்கள். இவர்களில் பலரின் படங்களில் கமர்ஷியல் படத்துக்கான அம்சங்களும் இருப்ப தில்லை; மாற்றுப் படங்களுக்கான தேடலும் இருப்பதில்லை. இரண்டுக்கும் நடுவில் எங்கோ சிக்கிக்கொள்கின்றன.

இந்த வகைகளில் சேராமல் சினிமா, சமூகம் இரண்டின் மீதும் அக்கறையுடனும், இரண்டைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் உழைப்புடனும் குறும்படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், குறும்படப் போட்டிக்கு வந்த 76-ல் அப்படிப்பட்ட படங்களாக ஐந்தாறு தேறுவதுகூட கடினமாகத்தான் இருக்கிறது.

குறும்படங்கள் எடுப்பவர்களுக்குச் சில அடிப்படைகளைக் கற்பிக்கும் பயிற்சிப் பட்டறைகள் தேவை. இவற்றையும் சரியானவர்கள் செய்யா விட்டால் ஆபத்தாகிவிடும். எனவே, நேர்மையான படைப்பாளிகளைக் கொண்டு பயிற்சி முகாம்கள் நடத்தலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் குறும்பட விழா நடத்தலாம். சினிமாக் கொட்டகைகளில் சனி, ஞாயிறுகளில் காலை 8 முதல் 10 மணி வரை குறும்படங்களைப் போட்டுக் காட்ட லாம். டி.வி. சேனல்களில் தினசரி இரவில் ஒரு அரை மணி நேரம் குறும்படங்களை ஒளிபரப்பலாம். எல்லா ‘லாமு’ம் நிறைவேறினால், குறும் படத் துறையில் சுய உதவிக் குழுக்களுக்கு நிகரான புரட்சி ஏற்படும்.

சென்ற பத்து

1. கறுப்பு வெள்ளி
2. தமிழ்ப்பதிவுகள்
3. குறும்படம்
4. பதில்
5. ஜமீலா
6. ஆதிபராசக்தி
7. பி.எம்.கே.
8. அமெரிக்க அரசியல்
9. ரஜினி சகாப்தமா
10. டாலர் தேசம்

வலைப்பதிவு தேவைகள்

நாளொரு பதிவும் பொழுதொரு குறிப்புமாக தமிழில் வலைப்பூக்கள் இரண்டாண்டுகளைத் தாண்டி விட்ட இந்தக் காலகட்டத்தில் சில புதிய சேவை தேவைகளின் பட்டியல்:

1. குறியீடு – Tagging

தலைப்பை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கவர்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம். படம் மட்டுமே கொண்டு பதிவு போடலாம். ஆனால், அனைத்தையும் ஒரேயொரு வார்த்தையால் விளக்க வேண்டும். பதிவைப் படிப்பவர்களும் குறியீடு (tag) செய்யலாம். அல்லது ஒலி-பதிவாக இருந்தால் கேட்பவர்களும் குறியீட்டை கொடுக்கலாம். அதன் பிறகு தமிழ்மணம் போன்ற வலைமனைகளில் ஃப்ளிக்கரைப் போல் புகழ் பெற்ற தமிழ் குறியீடுகளை எளிமையாகத் தொகுக்கலாம்.

சுருக்கமாக ‘சேது’ என்று இன்று தேடினால் சேது சமுத்திரத் திட்டமும், நான்காண்டுகள் முன்பு தேடியிருந்தால் ‘சேது’ திரைப்படமும் தெரியவரும். அதுவே சேது கல்லூரியை குறித்து எவராவது பதிந்திருந்தால் ‘நுழைவுத் தேர்வு’ என்னும் குறியீட்டின் கீழ் கிடைக்கும்.

2. கருத்தோடை – Attention Stream

தமிழ்மணம்.காம் அனைத்துத் தமிழ் பதிவுகளையும் தொகுத்து ஒரே பக்கத்தில் கொடுக்கிறது. அதே போல், ஒரே குறியீடுகளில் வந்திருக்கும் அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து ஒரே பக்கத்தில் கொடுப்பதற்கு ‘கருத்தோடை’ (Attention Stream) பயன்படுகிறது.

அன்னியன் திரைப்படம் குறித்து புகைப்படங்கள், வம்புகள், விளாசல்கள், விமர்சனங்கள், எதிர்பார்ப்புகள், தகவல்கள் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் கவனிக்கக் கொடுப்பதன் மூலம், படம் குறித்த மொத்த பார்வை கிடைக்கும். இதே போல் ‘திருவாசகம்’ வெளியீடு பற்றிய பலதரப்பட்ட கருத்துக்களை படிக்கும்போது வலையின் பரந்த பார்வைகள் அனைத்தும் வாசிக்க, கேட்க, பார்க்க முடியும்.

3. மதிப்பு அமைப்பு – Reputation Systems

‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என்பது தமிழ்ப் பதிவுகளில் புதிதாக நுழைபவருக்கு ஏற்படுவது இயல்பு. மேலும் சிலர் ‘கஜினி’ என்று பதில் போடுபவர்தான் ‘தோசை’ என்று பதிய ஆரம்பித்திருக்கிறார் என்று எழுதுவார்கள். புகழ் பெற்ற ‘ஈ-பே’ சந்தையில் வாங்குபவர்களும், விற்பவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ‘அமேசானில்’ பொருள் விற்பவர், இதுவரை நம்பகமாக செயல்பட்டிருக்கிறாரா என்று தெரிந்து கொண்ட பிறகு, பழைய சாமானைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் வலைப்பதிவுகளிலும் இதே போன்ற ‘மதிப்பு அமைப்பு’களின் (Reputation Systems) தேவை அதிகரித்திருக்கிறது. புத்தக விமர்சனம் எழுதுவதில் இவர் வல்லுநர்; ஆனால் சமையல் குறிப்புகளைக் கொடுத்தால் நம்ப வேண்டாம் என்று ஒருவரை மதிப்பிடலாம்.

4. The Long Tail

‘சந்திரமுகி’ போன்ற ரஜினி படங்கள் பெறும் கவனிப்பை ‘ஜமீலா’ போன்ற நல்ல படைப்புகள் பெறுவதில்லை. Wired இதழின் க்ரிஸ் ஆண்டெர்ஸன் இதை ‘நீண்ட வால்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

குறும்படத் தயாரிப்பாளருக்கு படத்தை விநியோகிப்பதில் பிரச்சினை. புதிய இசையமைப்பாளருக்கு, ரசிகர்களிடம் ஆல்பத்தைக் கொண்டுபோவது கஷ்டமாக இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் மூலம் பார்ப்பதற்கரிய திரைப்படங்களை பார்க்கலாம். அமேசான் மூலம் கிடைப்பதற்கரிய புத்தகங்களை சகாய விலையில் பெற முடிகிறது.

தமிழிலும் இதே போன்ற முத்துக்களை சாஸ்வதமாகப் பிராபல்யபடுத்தும் முயற்சிகள் தேவை.

– பாலாஜி
பாஸ்டன்

Jump for Joy – Venus Williams wins Wimbledon 

Jump for Joy – Venus Williams wins Wimbledon Posted by Picasa

Venus Williams wins Wimbledon (Sharapova Match) 

Venus Williams wins Wimbledon (Sharapova Match) Posted by Picasa

Venus Williams wins Wimbledon 

Venus Williams wins Wimbledon Posted by Picasa

வெற்றி

Venus Williams wins Wimbledon (Sharapova Match)

Venus Williams wins WimbledonJump for Joy - Venus Williams wins Wimbledon

நன்றி: விம்பிள்டன்.ஆர்க்

கல்கி

அரசியல்வாதிகள் இழுக்கும் ஆதாயத் தேர்

அசம்பாவிதம் ஏதுமின்றி கண்டதேவி சுவர்ணமூர்த்தீசுவரர் தேர்த் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அதனை அமைதியாக நடத்திக் காட்டிய சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் உரியன.

தலித்துகள் இந்தத் திருவிழாவில் தேரிழுக்கக் கூடாது என்ற சமூக சீர்கேட்டை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டியிருந்தது என்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல. இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஜாதி ஆதிக்க உணர்வு நீடிப்பது கேவலமே. எனினும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக உருமாறி, அடிதடியிலும் உயிரிழப்பிலும்கூட முடிவடைந்த இந்தத் தேர்த் திருவிழா, இவ்வாண்டு அமைதியாக நடந்துள்ளது. தலித்துகளையும் அரவணைத்து, திருவிழாவை அமைதியாக நடத்தும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை, மாவட்ட நிர்வாகம் பொறுப்புணர்வோடு சிறப்பாக நிறைவேற்றியுமிருக்கிறது. இரு ஜாதியினரிடையே அன்பையோ, நட்பையோ, மனிதாபிமானத்தையோ சட்டத்தால் வலியுறுத்தி வளர்த்துவிட முடியாது. சட்டம் ஆணைதான்போட முடியும். அன்பும் அங்கீகாரமும் இல்லாத சூழலில், அந்த ஆணையைச் செயல்படுத்துவது மிகவும் கஷ்டம். பொது மக்களின் உணர்வுகள் கொந்தளிக்கக்கூடிய இதுபோன்ற சமயங்களில், வன்முறையையும் உயிர்ச்சேதத்தையும் தவிர்ப்பதற்காக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது;

வன்முறையைத் தூண்டக்கூடிய சிலரைத் தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்து, தாற்காலிகமாகச் சிறை வைக்கிறது. இந்த அடிப்படையில்தான் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனும், கண்டதேவி தேர்த் திருவிழாவுக்குப் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதை அவர்கள் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர். நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளனர்.

கிருஷ்ணசாமியும் திருமாவளவனும், தங்கள் தொண்டர்களுடன் கண்டதேவிக்குப் படையெடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்..? தொண்டர்களின் உற்சாகம் கட்டுமீறியிருக்கக்கூடும். நீதிமன்ற ஆணையைக் கூட, தலைவர்களின் தனிப்பட்ட சாதனையாக்கி முழங்கியிருப்பார்கள்.

அத்தலைவர்கள், தங்களுக்கேயுரிய உணர்ச்சிகளைத் தூண்டும் பாணியில் பேசி, மக்களை உசுப்பிவிடும் சூழல் உருவாகியிருக்கும். இதைக் கண்டு தலித் அல்லாதார் அச்சமுற்றோ, ஆவேசமுற்றோ வன்முறையைக் கிளப்ப வழி பிறந்திருக்கும். இத்தலைவர்கள் அதிகம் பேசாமலேயிருந்திருந்தால்கூட, அவர்களுடைய வருகையே கோப-தாபங்களைத் தூண்டியிருக்கும்.

இதெல்லாம் எதுவுமின்றி, கோயில் நிர்வாகமே ‘அனைத்து ஹிந்துக்களும் தேர் இழுக்கலாம்’ என்று அறிவித்து, கணிசமான தலித்துகளின் பங்கேற்புடன் ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறது.

ஆனால் திருமாவளவனுக்கும் கிருஷ்ணசாமிக்கும்தான் இந்த நல்ல காரியத்தால் திருப்தி இல்லை! தாங்கள் அனுமதிக்கப்படாததை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் உள்நோக்கம் ஏதுமின்றி, சமூக நோக்கில் மட்டுமே அவர்கள் கண்டதேவிக்குச் செல்ல விரும்பியிருந்தால், தமிழக முதல்வரை நேரடியாகத் தொடர்பு கொண்டு காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, மக்களையும் சூழ்நிலையையும் தயார்ப்படுத்திவிட்டுப் போய்வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல், ஏதோ யுத்தத்துக்கு வியூகம் வகுப்பதுபோல், ரகசியத் திட்டம் தீட்டிப் புறப்படப் பார்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசும் மனம் வைத்திருந்தால், இவ்விரு தலைவர்களையும் கைது செய்யாமலே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். முன்கூட்டியே தகவல் தெரிந்ததால்தான் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். தகவல் அறிந்ததுமே முதல்வர் ஜெயலலிதா இரு தலைவர்களையும் அழைத்து, கண்டதேவி செல்லும் முயற்சியைக் கைவிடும்படி கூறியிருக்கலாம். அல்லது “எனது அமைச்சர் ஒருவரையும் அனுப்புகிறேன்; மூவருமாகச் சென்று திரும்புங்கள். ஆனால் தொண்டர் படையோ, உணர்ச்சி தூண்டும் பேச்சோ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கலாம். அப்போது அவர்களால் மறுத்திருக்க முடியாது. மறுத்திருந்தால், அவர்களுக்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், முதல்வர் இப்படி கௌரவமாக நடந்து கொள்ளவில்லை. கைது செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்.

பேதங்களைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிற அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு அப்போதுதான் முடிவுக்கு வரும். ஊர் கூடித்தான் ஆன்மிகத் தேர் இழுக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் ஆதாயத் தேராக அது மாறிவிடக்கூடாது.

சோலை

Kumudam REPORTER ::

காலத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியின் செயல் தலைவி.

முன்னர் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தார். லக்னோவில் தந்தை பெரியாருக்கு சிலை வைக்க முயன்றார். மேட்டுக்குடியினர் சீற்றம் கொண்டனர். போர்க்கோலம் பூண்டனர். பெரியாருக்கு சிலை வைக்கும் அளவிற்கு, அவர் பிராமண எதிர்ப்பில் ஈட்டி முனையாக இருந்தார்.

பிராமண சமுதாயத்திற்கும் பி.ஜே.பி.க்கும் அவர் சூட்டிய பெயர் மனுவாதிகள் என்பதாகும். அதாவது பிறப்பால் நால்வருணத் தத்துவத்தைச் செயல்படுத்துகிறவர்கள் என்று பொருள். அவர்களை எதிர்த்துப் போராடுவதற்குத்தான் பகுஜன் சமாஜ் கட்சியை கன்ஷிராம் தொடங்கினார். மேட்டுக்குடியினருக்கு மேலே தலித் மக்களை வானவில்லில் குடியேற்றி வாழ்வளிப்போம் என்று பிரகடனம் செய்தனர்.

சமுதாயத்தின் இருண்ட குகைக்குள் பயணம் செய்த தலித் மக்களுக்கு அந்தக் கட்சி விடிவெள்ளியாக மினுமினுத்தது. எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பிராமணர்கள்தான் என்ற போதத்தை அவர்கள் நம்பினர். பிராமண எதிர்ப்பில் பிறந்த பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் மாவட்டந்தோறும் மாநாடு நடத்தியது. பின்னர் மாநில மாநாட்டையும் மங்களகரமாக நடத்திவிட்டது. என்ன மாநாடு? பிராமணர் மாநாடுதான்.

தலை வணங்காத் தலைவி என்று கருதப்பட்ட அந்த அம்மணி, மாநில மாநாட்டில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்கின. பூரணகும்ப மரியாதைதான். நன்றாகவே தலை வணங்கினார். பிராமணர்களுக்கு சந்தனத் திலகமிட்டார். தலித் மக்கள் அடக்கப்பட்டவர்களாம். பிராமண மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாம். இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாம். இவர்களுடைய அணிதான் தமது லட்சியம் என்று மாயாவதி அறிவித்தார்.

முன்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு இந்த மூன்று சமுதாயங்களும் பின்னணியாக இருந்தன. அந்தப் பழைய நினைப்பில் இப்போது தலித், இஸ்லாமிய, பிராமணர் கூட்டணிக்கு முயல்கிறார். மாநில மக்கள் தொகையில் தலித்துகள் 21 சதவிகிதம்; பிராமணர் 20 சதவிகிதம்; இஸ்லாமியர் 15 சதவிகிதமாக உள்ளனர்.

அரசியலில் எட்டு அடிக்குள் எந்த மாளிகையும் எழுப்ப முடியாது. தலித் வாக்கு வங்கியை மட்டும் நம்பி சிம்மாசனத்திற்குச் செல்ல முடியாது என்பதனை அவர் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவிகிதத்தினர் பிராமணர்கள்தான். அவர்களைக் காங்கிரஸ் கைவிட்டது! அந்தச் சமுதாயத்தின் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் கண்டு கொள்ளவில்லை.

1991-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இப்போது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் அன்றைக்கு ஒரே தொகுதியில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ் இன்று 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1991-ம் ஆண்டு சட்டமன்றத்திற்கு 221 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இன்று 80 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அன்றைக்கு 12 தொகுதிகளை வென்ற பகுஜன் சமாஜ் இன்று 98 தொகுதிகளில் வென்றது.

பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? மூன்றுமுறை ஆட்சி அமைத்தது. முதல்வராக ஒரு பிராமணருக்குக் கூட முடி சூட்டியதில்லை. மாநில பி.ஜே.பி. தலைவராக ஒரு பிராமணர்கூட வீற்றிருந்ததில்லை. ஆனால், அந்தச் சமுதாயம்தான் பி.ஜே.பி.யின் அடித்தளமாக இருந்தது.

பிராமண சமுதாயத்தில் பி.ஜே.பி. இழந்து வரும் செல்வாக்கை பகுஜன் சமாஜ் கட்சி சுவீகரிக்க விரும்புகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் கட்சி 25 சதவிகித வாக்குகள் பெற்றது. இப்போது மேல் தட்டினர், நடுத்தர மக்களின் வாக்கு வங்கியில் குறி வைக்கிறது. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, நேற்று வரை சண்டை போட்ட மேல் நிலைச் சமுதாயத்தின் பொற்பாதங்களில் விழலாம் என்று முடிவு செய்துவிட்டது. எனவே, பிராமணர் மாநாடுகளை நடத்துகிறது.

அந்தச் சமுதாயத்தைக் கந்தகச் சொற்களால் விமர்சித்தே வளர்ந்த பகுஜன் கட்சியை பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதிகாரத்திற்கு வந்ததும் மீண்டும் மாயாவதி மனுவாதத் தத்துவம் பேசினால் என்ன செய்வது? கண்களில் கனவுகளைத் தேக்கி இருப்பவர்கள் இப்படி கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் ஊர் மணக்கும் அந்தர்பல்டிகள், உலகம் அறிந்ததுதான். ஒவ்வொரு தேர்தலிலும் மதவாத பி.ஜே.பி.யோடு மல்லுக்கட்டும். ஊது உலையில் சூடேற்றப்பட்ட நெருப்புக்கனிகள்தான் விமர்சனங்கள். தேர்தல் தீர்ப்பு வெளியானதும் அரியணைக்காக அந்த மனுவாதக் கட்சியுடன் பேரம் பேசும். கூட்டணி காணும். முதல் இரண்டரை ஆண்டுகள் மாயாவதியே முதல்வர் என்று உடன்பாடு காணும். இப்படி பி.ஜே.பி.யின் முதுகில் ஏறி மாயாவதி இரண்டு முறை முதல்வரானார். இதனை ஜனநாயகத்தின் அதிசயம் என்று வாஜ்பாய் கூட இசை பாடினார்.

ஆனால் அந்த இரு முறையும் பி.ஜே.பி. ஆட்சிப் பீடம் ஏற அம்மணி அனுமதிக்கவில்லை. கொட்டிக் கவிழ்த்துவிட்டார். பி.ஜே.பி.யின் கனவு கங்கையில் வெள்ளப் பெருக்கே ஏற்படவில்லை.

அதே பாடத்தை இன்றைக்கு பிராமண சமுதாயத்திற்கும் மாயாவதி படித்துக் காட்டலாம் அல்லவா? எனவே உதவிக்குப் போகும் கரங்கள் சொர்க்கத்தையும் எதிர்பார்க்க வேண்டும். சூன்யத்தையும் எதிர்நோக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஜாதிக் கட்சிகளுக்குத்தான் அங்கே சலங்கை கட்டியிருக்கிறார்கள். யாதவர்-ராஜபுத்திரர் இஸ்லாமியர் என்று ஓர் அணியை உருவாக்க முலாயம் சிங் முயல்கிறார். எனவே தாமும் ஜாதிக் கூட்டணியை உருவாக்க மாயாவதி முனைகிறார்.

பிராமண சமுதாயத்திற்கு நைலான் வலை விரிக்கின்ற வேலையை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். 2002-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 பிராமணர்களுக்குத் தேர்தல் டிக்கெட் தந்தார். எட்டுப் பேர்தான் வெற்றி பெற்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு பேரை நிறுத்தினார். பிரிஜேஷ் பதக் என்ற ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

மாயாவதி முதல்வராக இருந்த போது சதீஷ் மிஸ்ரா என்ற பிராமணர், அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தார். அவரை ராஜ்ய சபைக்கு அனுப்பியிருக்கிறார். அக்கிரகாரத்து நந்தவனங்களில் பட்டாம்பூச்சிகள் பிடிப்பதில் அவர் வல்லவர்.

இடைப்பட்ட காலத்தில் தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இனம் புரியாத மோதல் இருந்ததாம். இப்போது இந்த இரண்டு சமூகங்களுக்கிடையே மாயாவதி மகிமையால் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டதாம். பிரதான அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட பிராமண சமுதாயம், இனி தலை நிமிர்ந்து நிற்கும் என்கிறார் இந்த மிஸ்ரா.

வெளவால்கள் குடியிருக்கும் வீட்டிற்குப் போனால் நாமும் தலைகீழாகத் தொங்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பிராமண சமுதாயத்திற்கும் அவர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

மாவட்டந்தோறும் சகோதரத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைவரும் துணைத் தலைவரும் பிராமண சமுதாயத்தினர். செயலாளர் சேரியில் பிறந்தவர். சமூக நல்லிணக்கத்திற்கு இதுதான் சரியான வழி என்கிறார் மாயாவதி.

இப்போது அந்தச் சமுதாயத்தின் மீது அவருக்கு அழுத்தமான நம்பிக்கை பிறந்திருக்கிறது. காரணம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய கட்சியை முலாயம் சிங் உடைத்தார். தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விலை போயினர். ஆனால் ஒரு பிராமண எம்.எல்.ஏ.கூட சோரம் போகவில்லை. அதன் பின்னர் தான் அந்தச் சமுதாயத்தை முழுமையாகக் கவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பி.ஜே.பி.யில் உள்ள மூத்த தலைவர்கள் பலருக்குக்கூட இப்போது சிந்தனை மாறியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் நம்பிக்கையான அரசியல் அரங்கம் என்றால் அதன் பின்னே அணிவகுக்கத் தயாராகிறார்கள். அந்த அளவிற்கு மாயாவதி நடத்திய பிராமண மாநாடுகள் உத்தரப் பிரதேசத்தையே உலுக்கி எடுத்திருக்கின்றன.

வாஜ்பாய் கூறியது போல இது ஜனநாயக அதிசயமா? அல்லது பொம்மலாட்டமா? என்பது மீண்டும். அம்மணி முதல்வரான பின்னர்தான் தெரியும்.

சுகுமாரன்

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம் ::

திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது. க.நா.சு. தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை ‘சாமி’ கொள்முதலுக்காக வெளியூர் போயிருந்தார்.அந்த தினத்தில் சந்திக்க முடியாமல் அடுத்தமுறைதான் அவரைச் சந்திக்க வாய்த்தது. சுந்தர ராமசாமிக்கு க.நா.சுவிடம் பயமும் சங்கோஜமுமிருந்தது போலவே அந்த அந்த இளைஞனுக்கும் இருந்தது. அவன் சந்திக்க விரும்பி சந்தித்த எழுத்தாளர் அந்த தயக்கத்தையும் சங்கோஜத்தையும் போக்கினார். அதன் பின்னர் அந்தச் சந்திப்புகள் சில ஆண்டுகள் வலுவாகத் தொடர்ந்தன.

க.நா.சு. பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைக் குறிப்புகள் முதன்மையாக எனக்குத் தரும் உணர்வு இந்த நெகிழ்ச்சிதான். இந்த சந்தர்ப்பத்தில் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உரிமை பாராட்டவோ ஒப்பிடவோ அல்ல. எழுத்துலகில் பிரவேசிப்பவனின் மோகங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்ற பொது வியப்பைப் பகிர்ந்துகொள்ளவே.

எழுத்தாளனை அவனது எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதுதான் பிரதானம் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிச்சரடாக அவனுடைய வாழ்க்கையை அறிந்திருப்பதும் அவசியம் என்ற இன்னொரு தரப்பும் எழுகிறது. வாழ்வின் மீதான விசாரணையுணர்வே எழுத்து என்ற எளிய அடிப்படையை வரையறுத்துக் கொள்ளும்போது இந்த இரண்டு அம்சங்களும் சமமான மதிப்புக்கொள்கின்றன. எழுத்தை அறிவது அதன் நுட்பங்களைப் புரிந்துகொள்வது அதை வாழ்வனுபமாக ஏற்றுக்கொள்வது ஒரு செயல். அதை மேலும் விரிவானதாக, ஆழமானதாக மாற்றிக்கொள்ள எழுத்தாளனின் வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துவைத்திருப்பது உதவியாக இருக்கலாம். பிரதி போதும். ஆசிரியன் வேண்டாம் என்று கறாராகத் தீர்மானிக்கிற போக்கில் பிரதியைப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் ஏதோ ஓர் அம்சம் குறைவுபடுவதாகக் கருதுகிறேன்.