Monthly Archives: ஜூன் 2005

India Today on Tamil Blogs – Sadasivam (scanned by…

India Today on Tamil Blogs – Sadasivam (scanned by Badri) – I Posted by Hello

அடையாளம்

பிபிசியைப் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ் நாடு என்றவுடன் நினைவுக்கு வந்த பத்து வார்த்தைகள்

1. சேலை
2. வேட்டி
3. சினிமா
4. கோவில்
5. வாழை இலை
6. திண்ணை
7. தாலி
8. பஸ்
9. குடிசை (ஃப்ளாட்?)
10. தினமணி (தி ஹிந்து?)

அச்சன் அலகு

66.3 மில்லியன் – அமெரிக்காவில் அப்பாக்களின் எண்ணிக்கை.

26.5 மில்லியன் – பதினெட்டை எட்டாத குழந்தையை உடையவர்களின் எண்ணிக்கை.

393,000 – துணையின்றி தனியாக குழந்தைகளை வளர்ப்பவர்கள் (1970-இல்)

2.3 மில்லியன் – துணையின்றி தனியாக குழந்தைகளை வளர்ப்பவர்கள் (2003-இல்)

98,000 – வீட்டிலிருந்து கொண்டு (பதினைந்து வயதுக்குள்ளான) குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் தந்தையர்கள்.

மறுப்புக்கூற்று – ஆனந்த் சங்கரன்

எதற்காக இந்த அசட்டு அடைக்குறிப்பு

அடைக்குறிப்புகளை எழுதிய பொருளை மெருகேற்ற அல்லது அதன் பொருளை உணர்த்த உபயோகம் செய்யலாம்.

ஆனால் பலர் அதை தவறான முறையில் பின்குறிப்பு போல் உபயோகம் செய்கின்றனர். குறிப்பாக வெகுகாலமாக இணையத்தில் உள்ளவர்களே எழுதுகிறார்கள். இது ஒரு தவறான பழக்கமாகும்.

உங்கள் எழுத்தை மேம்படுத்த நினைத்தால் அடைகுறிப்பை குப்பை போல் உபயோகம் செய்வதை நிறுத்துங்கள்.

உதாரணம் ..

முளையை கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றேன் (ஆமாம் பெருசா மூளை இருக்குன்னு நினைப்பா)

நான் இந்த வார எழுத போவது என்னவென்றால் (இவன் எழுதலைனு யாரு அழுதா)

இப்படி பல உண்டு.

நீங்கள் பின்குறிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் எழுதுங்கள் நாங்கள் படிக்கிறோம். உங்களை யாரும் இந்த ஒரு கட்டுரையை வைத்து மதிப்பீடு செய்யமாட்டார்கள். உங்களின் எழுத்தை பலவற்றை படித்து பின்னர் இந்த ஆள் இப்படி என்று மதிப்பீடு செய்யலாம்? அதை இது போன்ற அசட்டு அடைகுறிப்பால் மாற்ற முயலாதீர்கள்.

Master Card by Wasserman in Boston Globe 

Master Card by Wasserman in Boston Globe Posted by Hello

சின்னா

கேகே, அனுராதா ஸ்ரீராம்

பெண்: காலங்காத்தால
இம்சை பண்ணாதே

ஆண்: கலங்க கலங்க
உன் கதி கலங்க

பெண்: வேணாம் வேணாம்
விடுடா

ஆண்: அப்ப
மதியம் நேரம்
கரெக்டா

பெண்: வேணாம் வேணாம்
விடுடா

ஆண்: அப்ப
சாயுங்காலம்
கரெக்டா

வேணாம் வேணாம்
மத்த நேரம் வேணாம்
ராத்திரி
எதுக்கு இருக்கு?

காலையிலே குளிச்சு
கோலம் போடணும்
நீ புள்ளி
வைக்கும் நேரத்தில
இம்சை பண்ணாத

புள்ளி வைக்கும்போது
நீ முன்னழகில
என்னை
புல்லரிக்க வச்சு நீ
இம்சை பண்ணாத

வாங்கி வெச்ச
பாலெடுத்து
காபி போடணும்
பால்
பொங்கி வரும் நேரத்தில
இம்சை பண்ணாத

பாலைக் காய்ச்சும்போது
நீ பின்னழகில
என்னை
சுண்ட சுண்டக் காட்டி
இம்சை பண்ணாத
ஆட்டி வச்ச மாவெடுத்து
தோசை ஊத்தும் நேரத்தில்
உனக்கிந்த குறும்பெதுக்கு?


வட்ட வட்ட தோசைகள
சுடும்போதில
என்ன வட்டம்போட வைக்குதடி
இன் இடுப்பு

ஊற வச்ச துணிக்கு
சோப்புப் போடணும்
நீ
சோப்பு போடும் நேரத்தில்
இம்சை பண்ணாத

இடுப்பில சேலைய
தூக்கி செருகி
துணி கும்முகின்ற
அசைவுகளில்
இம்சை பண்ணாத

உலை வைக்கணும்
நீ
மார்கெட்டுக்குப் போகும் போது
இம்சை பண்ணாத

மார்க்கெட்டுக்கு
கிளம்பற நேரம் பார்த்து
நீ முந்தானையை சரி பண்ணி
இம்சை பண்ணாத

எத்தனையோ
எத்தனையோ
வேலை இருக்கு
ஆம்பளைக்கு
ஒரு வேலைதான் இருக்கு

ஒரு வேலை மட்டும்தான்
என்று சொன்னாலும்
அடீ
அதுக்குள்ள பலப்பல
வேலை இருக்கு

(இந்தப் பாடல் வரிகளில் ஒரேயொரு தவறு மட்டும் இருக்கிறது. பாடலைக் கேட்டுவிட்டு திருத்துங்கள். கேட்காமலும் திருத்தலாம்?!)

துக்ளக்

Q&A - Jinnah Comment rebuke by Advani - Thuglaq Cartoion

Jinnah Comment rebuke by Advani - Thuglaq Cartoon

நன்றி: Yahoo! Groups : Thuglak

Q&A – Jinnah Comment rebuke by Advani – Thuglaq Ca…

Q&A – Jinnah Comment rebuke by Advani – Thuglaq Cartoion Posted by Hello

Jinnah Comment rebuke by Advani – Thuglaq Cartoon …

Jinnah Comment rebuke by Advani – Thuglaq Cartoon Posted by Hello

கருணாநிதி

‘மெட்டி ஒலி’ பாராட்டு விழா :: மெட்டி ஒலியை பார்த்தேன் என்று இங்கு எல்லோரும் சொன்னார்கள். மெட்டி ஒலி ஒளிபரப்பாகும் நேரம் எனக்கு ஒத்துக் கொள்ளாத நேரம். அந்த நேரத்தில்தான் அரசியல், இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பேன்.

ஆனாலும் மெட்டி ஒலி ஒளி பரப்பான 810 நாட்களில் 400 நாட்களாவது நான் கண்டு ரசித்திருக்கிறேன். பாதியளவு இந்த தொடரை பார்த்து ரசித்ததிலேயே மெட்டி ஒலி பாராட்ட தகுதி வாய்ந்த தொடர்தான் என்பேன்.

இங்கே மனோரமா பேசும் போது, பழைய கால நிகழ்ச்சிகளை தொடர்ந்து பேசி, என்னையும் அந்தக் காலத்துக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் சேர்ந்து நடித்த உதயசூரியன் கட்சி பிரசார நாடகத்தில் காங்கிரஸ் காரனாக நடிக்கும் என்னை தி.மு.க. வுக்கு அவர்தான் அழைத்து வருவதாக குறிப்பிட்டார். இதைப் பார்த்த சிலர், நாடகம் என்று கருதாமல் மனோரமாதான் என்னை தி.மு.க.வுக்கு அழைத்து வந்ததாக கருதக்கூடும். அப்படி நடந்திருந்தால் எனக்கு எவ்வளவோ தொல்லைகள் விட்டுப் போயிருக்கும்.

மெட்டி ஒலியில் ஒரே நிலையில் (ஷாட்டில்) காட்சிகள் படமாக்கப்பட்டது சாதனை என்றார்கள். டி.வி.யில் இதுதான் முதல் முறை என்றார்கள். நான் வசனம் எழுதிய ராஜா ராணி படத்தில் 850 அடி நீள காட்சியை ஒரே ஷாட்டில் நடிகர் சிவாஜி கணேசன் வசனம் பேசி நடித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக அம்மையப்பன் படத்திற்கு டைரக்டர் பீம்சிங் கேட்டுக்கொண்டதற்கிணங்க இதுபோல வசனம் எழுதியிருந்தேன். வேறொரு நடிகர் அதைப் பேசுவதாக இருந்தது, முடியாமல் போனதால் அதை சிவாஜிக்கு கொடுத்திருக் கிறார்கள். சிவாஜி உடனே, கலைஞர் இன்னொரு நடிகருக்கு எழுதிய வசனத்தை நான் பேச மாட் டேன்’ என்று கூறி விட்டார். உடனே நான் அப்போதே எழுதிக் கொடுத்த வசனத்தைத்தான் ஒரே ஷாட்டில் சிவாஜி பேசி நடித்தார். இப்படியாக அன்றைக்கு சிவாஜியின் கோபத்தை தணித்தேன்.

இப்போது மெட்டி ஒலியில் நடித்த பெரியவர் பற்றி நாடு முழுக்க பேசப்படுகிறது. மாமியார் கேரக்டர் பற்றியும் பேசுகிறார்கள். வீடு கெடுவதற்கு மாமியாரும், நாடு கெடுவ தற்கு சாமியாரும் காரணம். நான் எல்லா மாமியாரையும், சாமியாரையும் சொல்லவில்லை.

இந்த தொடரில் கெட்ட மாமியாராக இருந்து ஒரு சோக நிகழ்ச்சியின் மூலம் திருந்துகிற நல்ல மாமியாராகி விடுகிறார். இந்த தொடர் முழுவதும் ஒரு குடும்ப கதை. பாரதத்தில் வருகிற பல சிறுகதைகளை ஒன்றாக பார்த்தது போன்ற உணர்வு வருகிறது. 5 பெண்கள் பற்றிய கதை. பாரதத்திலும் 5 பேர் தான் வருகிறார்கள்.

மெட்டி ஒலி வரவேற்பு பலகையில் 12 உருவங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். இங்கேயும் 12 பேர் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பன்னிரெண்டை யாரும் அலட்சியம் செய்யாதீர்கள்.

கலைஞரின் பேச்சு வழக்கம் போல் ரசிக்கத்தக்கதாகவும் விஷயங்கள் நிறைந்ததாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருந்தது. ‘எச்சில் வசனம்’ என்று சிவாஜி தூக்கியெறிந்ததை சவாலாக எடுத்துக் கொண்டு, ராவோடு ராவாக புதிய வசனம் எழுதிக் கொடுத்தது; பெரும்பாலான உரையை ‘குறிப்பு’களைப் பார்க்காமலேயே உரையாற்றியது; அந்தக்காலத்தில் எழுதியதை இன்றும் நினைவு கூர்ந்தது; இந்த வயதிலும் மொழி பிழறாமல் அசத்தலாக உச்சரித்தது;

மேற்கத்திய உலகைப் போல் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் நேரடி விவாதம் வைத்தால், தேர்தல்களில் அதிமுக ஜெயிக்கவே முடியாது!
-பாலாஜி