Monthly Archives: மே 2005

பாவண்ணன் – திண்ணை

நேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும்
வளவ.துரையன்: பாவண்ணனின் “நூறுசுற்றுக் கோட்டை” – நூல் அறிமுகம்

இந்நூல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. “வண்ணமும் வாழ்வும்” என்னும் முதல் பகுதியில் கன்னடமொழியல் நவீனத்துவம் படர்ந்தபிறகு எழுதப்பட்ட கதைகளில் நவீனத்துவத்தின் நிறம் சரியாகப் புலப்படும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கதைகள் உள்ளன. மூன்று தலைமுறைக்கு முந்தைய மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் சிறுகதை முதல் இருபத்தைந்து வயது இளைஞனுடைய சிறுகதைவரை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. “ஆறுகளின் தடங்கள்” என்னும் இரண்டாம் பகுதியில் மூத்த கன்னடப் படைப்பாளிகளின் சுயசரிதையிலிருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்துக்கொடுக்கப்பட்டுள்ளன. “அணையாத சுடர்கள்” என்னும் மூன்றாம் பகுதியில் மறைந்துபோன முக்கிய கன்னடப் படைப்பாளிகள்பற்றி பாவண்ணனே தனிப்பட்ட வகையில் எழுதிய அஞ்சலிக் குறிப்புகள் அடங்கியுள்ளன.

புராணப்பின்னணியில்ஆமைந்த மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் “குசேலரின் கொள்ளுப்பேரன்” மனிதமன ஆழத்தை அறிய முயலும் கதை. குசேலர் வறுமையில் வாடியவர். கிருஷ்ணனுடைய உதவியால் வறுமை அகன்ற வாழ்வை அடைந்தவர். குசேலருக்கு அச்செல்வத்தில் நாட்டமில்லை. குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்துவிடுகிறார். அடுத்தடுத்த தலைமுறைகள் அச்செல்வத்தில் திளைக்கிறார்கள். இப்போது புதிதாக முளைத்த மூன்றாம் தலைமுறைக்கு தன் பழமை வறுமை சார்ந்து மதிப்பிடப்படுவதில் விருப்பமில்லை. புதிய புனைவொன்றை உருவாக்குகிறது. புனைவினால் பழமைக்கு வேறு நிறம் கொடுக்கப்படுகிறது. மனத்தின் விசித்திரம் இது. கதையை வாசித்து முடித்ததும் நம் கண்ணில் காணப்படும் நிறங்களில் உண்மை எத்தனைப் பங்கு புனைவு எத்தனைப் பங்கு என்று அலசத் தோன்றுகிறது. மானுட சரித்திரம் முழுக்க இப்படிப்பட்ட புனைவுகளால் உருவான ஒன்றுதானா என்கிற கேள்வி உருவாக்கும் மலைப்பும் கூச்சமும் கொஞ்சநஞ்சமல்ல.

யு.ஆர்.அனந்தமூர்த்தியின் “சூரியனின் குதிரை” சிறுகதை மிக நல்ல அனுபவத்தைத் தரக்கூடியது. சூரியனின் குதிரை என்னும் தலைப்பு புராணம் அல்லது அறிவியல் சார்ந்த ஒரு கதையை எதிர்பார்க்கத் து£ண்டுகிறது. இறுதியில்தான் அத்தலைப்பு ஒரு சாதாரண புழுவைக் குறிப்பிடக்கூடிய ஒரு கன்னடப்படிமம் என்று கண்டடைகிறோம். கதையில் இடம்பெறும் வெங்கட் ஜோயிஸ் அக்கம்பக்கத்தார், ஊரார், நண்பர்கள், மனைவி, மகன் என எல்லாராலும் சாதாரணமாக, பிழைக்கத் தெரியாதவனாக, சாமர்த்தியமற்றவனாக, ஒரு புழுவைப்போல மதிக்கப்படுபவன். மற்றவர்கள் தலைக்கு எண்ணெய் மஸாஜ் செய்து மகிழ்ச்சியடையக்கூடியஆந்தச் சாதாரணன் இறுதியில் சூரிய ஒளியில் தளரிலைமீது நௌ¤கிற ஒரு புழுவைக்கண்டு ஆனந்தப் புன்னகை கொள்கிறான். ஒரு புழு இன்னொரு புழுவைப் பார்த்துச் சிரிப்பதான சித்திரம் நம் கண்முன் விரிகிறது.

(நூறு சுற்றுக் கோட்டை – தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : பாவண்ணன். வெளியீடு: அகரம். விலை. ரூ 110. பக்கங்கள் 216)


அன்பினால் ஆன உலகம்
க.நாகராசன் :: பாவண்ணனின் “தீராத பசிகொண்ட விலங்கு” – நூல் அறிமுகம்

உங்கள் மனத்தில் பிடித்தவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா அல்லது பிடிக்காதவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா என்னும் எளிமையான கேள்வியைக்கொண்ட முன்னுரையோடு பாவண்ணனின் “தீராத பசிகொண்ட விலங்கு” தொடங்குகிறது. வணிகமயமான இன்றைய மானுட வாழ்க்கை அனுபவங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்துபார்க்கும்போது பிடிக்காதவர்களின் நினைவுகள்தாம் அதிகமிருக்குமோ என எண்ணத் து£ண்டுகிறது. இதை விவரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாரதக்கதையான கண்ணன்-சகுனி-மாயக்கண்ணாடி கதை முக்கியமானது. கேள்வியின் அடுத்த பகுதிக்கு விடையாகச் சொல்லப்பட்ட “தொடர்ந்து கொட்டிவரும் தேளை விடாமல் காப்பாற்றும் பெரியவரின் கதை” அன்பினால் ஆன உலகத்துக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் பார்த்துப் பழகிய தனக்குப் பிடித்தமானவர்களின் நினைவுகளை படைப்பாளர் 22 கட்டுரைகளாக இத்தொகுதியில் விவரித்துள்ளார்.

வெவ்வேறு கடல்களைப்பற்றிய பாவண்ணனின் வர்ணனைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.

தரங்கம்பாடி கடல் = மிகப்பெரிய முற்றத்தைக்கொண்ட வீடு

விசாகப்பட்டணம்கடல் = கைவிலங்கை அகற்றச்சொல்லி அலறித் துடிக்கும் பைத்தியம்

பேகல் கடல்= முஷ்டி உயர்த்தி ஆர்ப்பரிக்கும் இளைஞனின் குரல் ஒலிக்கும் இடம்

கார்வார் கடல்= கதைபேசி கைகோர்த்து நடப்பதுபோல குது£கலம் கொப்பளித்து நிற்பது

திருவனந்தபுரம் சங்குமுகக்கடல் = கலகலவென்று சிரித்தபடியும் கைவீசியபடியும் துள்ளித்துள்ளி ஓடுகிற இளம்பெண்களின் கூட்டத்தைப்போன்ற இனிய இரைச்சலைக்கொண்டது.

(தீராத பசிகொண்ட விலங்கு – பாவண்ணன். புதுமைப்பித்தன் பதிப்பகம். விலை.ரூ50)

நன்றி: திண்ணை

டிவியிலும் துள்ளுகிறது இளமை

இன்றைய சன் டிவி படம் ‘துள்ளுவதோ இளமை‘. படம் படு சைவமாக காண்பித்தார்கள். இந்த மாதிரி மெஸேஜ் படத்தையா ‘ஏ’ குத்தி, மலையாளப் பட ரேஞ்சுக்கு முத்திரை மோசடித்து, ஷெரினுக்கு கவர்ச்சி நடிகை அந்தஸ்தை கொடுத்தார்கள் என்று வினா எழுப்பும் அளவு வெட்டியிருந்தார்கள்.

அந்தப் படத்தையும் இரண்டாம் பகுதியில் உம்மென்று பார்க்க வைத்த மும்பை எக்ஸ்பிரசும் தலைவர் தமிழில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனையோடு பார்த்த ஸ்வதேஷும் பிறகொரு நாள் போஸ்ட்டின் விஷயங்கள்.

சன் டிவியின் அசல் ‘துள்ளுவதோ இளமை’யாக கோலங்கள் சீரியல் இருந்ததாம். தேவயானியின் சகோதரனாக வருபவரும் அபியுடன் கூட வேலை பார்க்கும் தீபா வெங்கட்டும் சம்பந்தப்பட்ட அஃபிஷியல் ட்ரிப்பின் அந்தரங்கக் காட்சிகள் ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ என்பது போல் நெடுந்தொடர்களின் லஷ்மண் ரேகாவைத் தாண்டி பல மீட்டர்கள் ஓடியதாம்.

சீரியல்தானே ஓடுது… என்று குழந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பதறியடித்து ரிமோட்டைத் தேடி சேனலை மாற்றியிருக்கிறார்கள்.

நான் ‘கோலங்கள்’ பார்க்காததற்காக நிம்மதிப் பெருமுச்சு விட்டுக் கொண்டாலும், தீபா வெங்கட்டின் குறிப்பிட்ட காட்சிகளைத் தவறவிட்டு விட்டோமோ என்று ஏக்கப் பெருமூச்சு வந்ததாக, இல்லத்தரசி சந்தேகப்பட்டார்.

விகடன் பத்திரிகைதான் மாறிப் போனது என்றால், விகடன் தயாரிப்பும் தாராளமாயமாக்கலை நன்றாகவே செய்கிறது!? ஒரு வாரம் முன்பே முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள், கபர்தார் எல்லாம் கொடுத்து மிரட்டினால் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடியிருக்குமே…

குறிப்பிட்ட கோலங்களை எவராவது பார்த்திருந்தால், மெய்யாலுமாகவே எல்லைகள் வரம்பு மீறியதா அல்லது சாதாரண டாடா உப்பு கூட பெறாத மேட்டரா என்று தெளிவுபடுத்துங்கள்.

பி.குறிப்பு: பேவரிட் அன்னியன் பாடலை சுழற்சியில் ஓடவிட்டுக் கொண்டேயிருப்பது போல், இப்பொழுதெல்லாம் ‘மெட்டி ஒலி’ மீண்டும் மீண்டும் அரைத்த மாவை புளிக்க வைப்பதால், முன்னாள் சித்தி, சமீபத்திய அண்ணாமலை, என்றும் ராதிகாவின் புதிய மொந்தை ‘செல்வி’யே தேவலை.

தமிழ்த்திணை

TamilThinai.com:

பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகளைக் கொண்ட ஆய்விதழ். தமிழாய்வுகள் பகுதி தமிழ் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும்.
சுபாஷினி

நூல் அறிமுகம் (பகுதியில் இருந்து…)

அறிவியல் தமிழ் – முனைவர் கு. அண்ணாதுரை
ஒருமை – பன்மை – முனைவர் கி. சேம்பியன்
வடு – முனைவர் பிரியகுமாரன்
க் ச் த் ப் மிகுதலும் மிகாமையும் – முனைவர் கி. சேம்பியன்
இன்றைய தமிழ் நாடகச் சூழல் – முனைவர் கே.ஏ.குணசேகரன்
இந்துத்துவம் எதிர் அரசியல் – முனைவர் த.சேயராமன்
எரிவாய் காவேரி – புலவர் க. முருகேசன்
பாரதி ஓர் இசைக் களஞ்சியம் – முனைவர் இரா. கலைவாணி
சங்கப் பாக்களில் தொல்குடிக் கூறுகள் – இரா. முருகன்
இவர்களோடு நான் – இரா. சுப்பராயலு

சில புத்தகங்கள்

சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்

1. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
2. எப்போதும் வாழும் கோடை – மனுஷ்யபுத்திரன்
3. பண்பாட்டு அசைவுகள் – தொ பரமசிவன்
4. தலித்திய விமர்சன கட்டுரைகள் – ராஜ்கௌதமன்
5. உண்மை சார்ந்த உரையாடல் – காலச்சுவடு பேட்டிகள்
6. விவாதங்கள் சர்ச்சைகள் – வெ.சா.
7. இன்றைய நாடக முயற்சிகள் – வெங்கட் சாமிநாதன்
8. என் பார்வையில் – சில கதைகளும் சில நாவல்களும் :: வெங்கட் சாமிநாதன்
9. என் பார்வையில் – சில கவிதைகள் :: வெங்கட் சாமிநாதன்
10. சில இலக்கிய ஆளுமைகள் :: வெங்கட் சாமிநாதன்
11. அலை புரளும் வாழ்க்கை :: பெ.அய்யனார்
12. கடக்க முடியாத நிழல் :: ரவிக்குமார்
13. கறுக்கும் மருதாணி :: கனிமொழி
14. அடங்க மறு :: தொல். திருமாவளவன்
15. தமிழில் நாடகப்பதிவுகள் :: அண்ணாமலை
16. இடிபாடுகளுக்கிடையில் :: வெளி ரங்கராஜன்
17. வன்முறை வாழ்க்கை :: கண்ணன்
18. கண்ணில் தெரியுது வானம்
19. ஆளுமைகள் மதிப்பீடுகள் (1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு) :: சுந்தர ராமசாமி
20. ஜெயமோகன் குறுநாவல்கள்
21. ஜெயமோகன் சிறுகதைகள்
22. தீராத பசி கொண்ட விலங்கு :: பாவண்ணன்
23. யாருக்கு யார் எழுதுவது :: இசைஞானி இளையராஜா
24. இது ராஜபாட்டை அல்ல :: சிவகுமார்
25. தென்பரை முதல் வெண்மணி வரை :: அப்பணசாமி
26. லாசரா படைப்புலகம் :: அபி
27. கிரா படைப்புலகம் :: ரமேஷ் – பிரேம்
28. உடைந்த மனோரதங்கள் (கு. ப. ரா. படைப்புலகம்) :: பெருமாள்முருகன்
29. பா.செயப்பிரகாசம் படைப்புலகம் :: களந்தை பீர்முகமது
30. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு. செல்லப்பா படைப்புலகம்) :: பெருமாள்முருகன்
31. காகங்கள் :: சுந்தர ராமசாமி
32. காக்டெயில் :: சுதேசமித்திரன்
33. கணையாழி களஞ்சியம் – 4
34. மௌனியின் கதைகள்
35. சட்டப்பேரவையில் தேவர் பற்றிய வழக்கு
36. கொதிப்பு உயர்ந்து வரும் :: ரவிக்குமார்
37. மிகை நாடும் கலை
38. உள்ளுணர்வின் தடத்தில் :: ஜெயமோகன்
39. பதிவுகள் :: அ யேசுராசா கட்டுரைகள்
40. கடலாடி :: நரசய்யா
41. தெய்வம் தெளிமின் :: கவிதாசரண்
42. சாதாரணன் :: நரசய்யா
43. சென்னை கானா :: வை ராமகிருஷ்ணன்
44. நதிமூலம் :: மணா
45. மணலின் கதை :: மனுஷ்யபுத்திரன்
46. எம் தமிழர் செய்த படம் :: தியடோர் பாஸ்கரன்
47. சொல்லில் நனையும் காலம் :: எஸ் வி ராஜதுரை
48. கிராமம் நகரம் மாநகரம் :: நா முத்துக்குமார்
49. இந்துத்துவத்தின் இருள்வெளிகள் :: அ மார்க்ஸ்
50. சொல்வதால் வழ்கிறேன் :: அ மார்க்ஸ்
51. ஆ மாதவன் கதைகள்
52: நெரிக்கட்டு :: அழகியபெரியவன்
53. ஒளி நிழல் உலகம் :: அ ராமசாமி
54. வானகமே இளவெயிலே மரச்செறிவே :: சுந்தர ராமசாமி
55. என் வீட்டின் வரைபடம் :: ஜே பி சாணக்யா
56. ஒளிவிலகல் :: யுவன் சந்திரசேகர்
57. மீஸான் கற்கள் :: புனத்தில் குஞ்ஞப்துல்லா (தமிழில்: குளச்சல் மு யூசுப்)
58. துயரமும் துயர நிமித்தமும் :: பெருமாள் முருகன்
59. வடக்கந்தரையில் அம்மாவின் பரம்பரை வீடு :: ஷாராஜ்
60. கோபுரம்தாங்கி :: சுதேசமித்திரன்

Burnt Out சேப்பல்

உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக ஆகிக் கொண்டிருக்கிறதா?

புகழ்பெற்ற காமெடியன் டேவ் சாப்பலுக்கு (Dave Chappelle) ஆகிப் போயிருக்கிறது. நான் தவறவிடாமல் பார்க்க நினைக்கும் நிகழ்ச்சிகளில் காமெடி செண்ட்ரலில் வரும் சேப்பல்ஸ் ஷோ-வும் ஒன்று.

அமெரிக்காவில் இருக்கும் இனபேதங்கள், கறுப்பர்களை இளக்காரம் செய்யும் மனப்பான்மை, ஏழைகளின் நிலை, போதைக்கு அடிமையாதல் என்று பேச பயப்படும் விஷயங்களை கிண்டலாக முன்வைப்பவர். மூன்று வருடங்களுக்கு முன்பு, ஆர்ப்பாட்டமில்லாமல் சாதாரணமாகத் தொடங்கிய நிகழ்ச்சி. ஆரம்பித்த சில வாரங்களிலேயே பரவலாகப் பேசப்பட்டு, இளசுகளிடையே மவுசு கூடிப் போனது.

செயின்ஃபெல்ட்‘, ‘ஃப்ரெண்ட்ஸ்‘ போல் இல்லாமல் சேப்பலே முழுக்க முழுக்க சொந்தமாக எழுதி, இயக்கி, தயாரித்து வந்தார்.

தயாரிப்பாளர்களின் வாயில் எச்சிலூறும் ஆசை, பார்வையாளர்களின் அடுத்து எப்படி கலக்கப் போகிறார் என்னும் அதீத ஏற்றிவிடல், எல்லாவற்றையும் சொந்தமாக செய்தால்தான் நிகழ்ச்சியின் தரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்னும் கணிப்பு, எல்லாம் சேர்ந்து அவரை மனநலக் காப்பகத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது.

‘உங்ககிட்டேயிருந்து இதை எதிர்பார்க்கலை’, ‘நீங்களா இப்படி எழுதினது’, ‘அவர் படைப்பு என்றால் இப்படி இருக்காது’ என்று ஏற்றிவிட்டுப் பார்த்திருக்கிறேன். படைப்பாளியை அதீதமாக, நேரடியாக பாதித்ததை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்.

‘ஆளவந்தானி’ல் மொட்டை கமலுக்கும் தொடை காட்டும் மனீஷாவும் – அருகில் இருக்கும் போது வரும் வசனம்: ‘மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடலமா?!

அந்த மாதிரி ஒரு காமெண்ட்:

சுவையான வலைப்பதிவும் சேப்பல்ஸ் ஷோ மாதிரிதான் 😉

இதை எழுதாதீங்க… அதைப் போஸ்ட் போடாதீங்க… என்னும் நல்லெண்ண சித்தாந்தங்கள் இலவசமாய் நிறைய கிடைக்கும்.

செய்தி: நியு யார்க் டைம்ஸ் | CNN.com

சின்மயி

திரைப்பட பிண்ணணி பாடகி சின்மயி வலைப்பதிய ஆரம்பித்திருக்கிறார். அன்னியன் முன்னோட்டத்தை இவரும் வாய் பிளந்து பாராட்டுகிறார். (அன்னியன் Daredevil-இன் உல்டா என்னும் வதந்தியும் இணையத்தில் உலாவுகிறது.)

‘சுகுமாரி’தான் என்னுடைய #1. ‘அண்டாங்காக்கா’வும் பிடித்திருக்கிறது. ராக் துர்காவும் சுத்த சாவேரியும் எனக்கு விருப்பமிக்கதாக ஆகிப் போயிருக்கிறது.

வாங்க… வாங்க! (நன்றி: சாம்பார் மாஃபியா & இட்லி சட்னி)

சின்மயி பாடிய பாடல்களில் என்னுடைய நினைவில் நிற்பவை:

ஒரு தெய்வம் தந்த பூவே – கன்னத்தில் முத்தமிட்டால்
கிறுக்கா கிறுக்கா – விசில்
பூந்தேனா – ஈரநிலம்
என்ன இது – நள தமயந்தி
ப்ளீஸ் சார் – பாய்ஸ்
பிரிவெல்லாம் பிரிவல்ல – சூரி
என்னுயிர் தோழியே – கண்களால் கைது செய்
ஒப்பணகார வீதியிலே – கிரி
எங்கு பிறந்தது – விஷ்வதுளசி
காதலிக்கும் ஆசையில்லை – செல்லமே
சின்ன சின்ன – கண்ணாடிப் பூக்கள்
சில் சில் – அறிந்தும் அறியாமலும்

ஞாபகம் வருதே

தினம் ஒரு திரைப்பாடல் :: thaai sollum uRavai from kanaa kaNdEn

தாய் சொல்லும் உறவை வைத்தே
உலகம் சொந்தம்
தாயுள்ள வரையில்தானே
கிராமம் சொந்தம்

பதினேழு வயசு வரைக்கும்
நீ வாழும் வாழ்க்கைதானே
பாலூத்தும் காலம் வரைக்கும்
கூட வரும்

கடலோர உப்பங்கழியும்
காதோடும் பேசும் அலையும்
ஐநூறு மைல் போனாலும்
தேடி வரும்

கிராமம் தன் மடியில் கட்டி
வளர்த்தது உன்னை
கிராமத்த மடியில கட்டி
போவது என்ன?

சாதி தாண்டியே நட்பும் உறவும்
மலர்ந்தது அங்கே
சமையாத பெண்கள் பார்த்து
மயங்கியது அங்கே

உப்பு மேட்டிலே ஆடி முடித்து
சாய்ந்ததும் அங்கே
ஆகாயம் இழுத்துப் போர்த்தி
தூங்கியது அங்கே

கையோடு அள்ளிய தண்ணி
விரலோடு கசிவது போல
கண்ணோடு நினைவுகள் எல்லாம்
கசிகிறதே

நெல்லிக்காய் அடியில் உள்ள
தித்திப்பாக
வறுமையின் கீழ் லட்சியம் ஒண்ணு
வந்தது அங்கே

தூக்குவாளி தலையில் மாட்டி
கிரீடம் என்றாய்

சொந்த செலவில் சூரியன் வாங்க
ஆசை கொண்டாய்

சொந்த உறவுகள் இலைகளைப் போலே
உதிர்ந்திடக் கண்டாய்
வந்த உறவுகள் வளர்பிறை ஆக
வளர்ந்திடக் கண்டாய்

மனங்கொண்ட கனவுகள் எல்லாம்
மண்பாதைச் சில்லுகளாக
மறுவாழ்வின் வெற்றியைத் தேடி ஓடுகிறாய்

இன்னும் இருபது

சுரேஷ் கொடுத்ததைத் பின் தொடர்ந்து….

மணி ரத்னம்
மௌன ராகம் (1)
அஞ்சலி (2)
ரோஜா (3)
இருவர் (4)
அலைபாயுதே (5)
கன்னத்தில் முத்தமிட்டால் (6)

கமல்
குணா (7)
நாயகன் (8)
குருதிப்புனல் (9)
மகாநதி (10)

ஆறிலிருந்து அறுபது வரை
திருவிளையாடல் (11)
தில்லானா மோகனாம்பாள் (12)

கே பாலச்சந்தர்
தண்ணீர் தண்ணீர் (13)
சிந்து பைரவி (14)
புதுப்புது அர்த்தங்கள் (15)
வானமே எல்லை (16)

பார்த்திபன்
புதிய பாதை (17)
ஹவுஸ் புல் (18)

பாலு மகேந்திரா
மூன்றாம் பிறை (19)
வீடு (20)

பாரதிராஜா
பதினாறு வயதினிலே (21)
மண்வாசனை (22)
வேதம் புதிது (23)
முதல் மரியாதை (24)
கருத்தம்மா (25)
கடல் பூக்கள் (26)

மகேந்திரன்
முள்ளும் மலரும் (27)

பாக்யராஜ்
மௌன கீதங்கள் (28)

நவீனர்கள்
கேளடி கண்மணி (29)
விடுகதை (30)
இந்தியன் (31)
சேது (32)
குட்டி (33)
இயற்கை (34)
காதல் (35)
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (36)

எனக்குத் தோன்றியவை

அந்தக் காலம்
சபாபதி (37)
ஔவையார் (38)
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி (39)

இரு துருவங்கள்
மலைக் கள்ளன் (40)
தூக்கு தூக்கி (41)
உத்தமபுத்திரன் (42)
அம்பிகாபதி (43)
பராசக்தி (44)
திரும்பிப் பார் (45)
அந்த நாள் (46)
குலேபகாவலி (47)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (48)

நெஞ்சில் நிறைந்தவை
கண் சிவந்தால் மண் சிவக்கும் (49)
உதிரிப்பூக்கள் (50)
அழியாத கோலங்கள் (51)
மெட்டி (52)
வண்ண வண்ணப் பூக்கள் (53)
பசி (54)
எச்சில் இரவுகள் (55)
பணம் பெண் பாசம் (56)
சுவரில்லாத சித்திரங்கள் (57)
ரோசாப்பூ ரவிக்கைகாரி (58)
அவள் அப்படித்தான் (59)
வறுமையின் நிறம் சிவப்பு (60)
கன்னிப் பருவத்திலே (61)
விதி (62)
சிறை (63)
கிளிஞ்சல்கள் (64)
ஆசை (65)

ரிலாக்ஸ்
தில்லுமுல்லு (66)
மைக்கேல் மதன காமராஜன் (67)
பொய்க்கால் குதிரைகள் (68)
மழலைப் பட்டாளம் (69)
ஜெகன்மோகினி (70)
பட்டணத்தில் பூதம் (71)

அசத்தறாங்க
தூள் (72)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (73)
முதல்வன் (74)
ஜெண்டில்மேன் (75)
அண்ணாமலை (76)
விக்ரம் (77)
கில்லி (78)
வேலைக்காரன் (79)
சகலகலா வல்லவன் (80)

மைக்ரோசாஃப்ட் லீன்க்ஸ்

A Microsoft-Red Hat warming trend? | CNET News.com: ரெட் ஹாட் நிறுவனத்தின் தலைவர் மாத்யூ ஸுலிக்கும் (Matthew J. Szulik) மைக்ரோசாஃப்டின் நிறுவனர் ஸ்டீவ் பால்மரும் (Steve Ballmer) நியு யார்க்கில் (McCormick & Schmick) ரகசியமாய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

ஸெனிக்ஸ் போயே போச்சு…
மைக்ரோசாஃப்ட் லீனக்ஸ் வரப்போகிறதா?
அல்லது ரெட் ஹாட் ஸ்வாஹா ஆகிறதா?
குறைந்தபட்சம் ஐரோப்பிய கெடுபிடிகளில் இருந்து தப்பிக்கும் வழியையாவது கேட்ஸ் கண்டுபிடித்து இருப்பார்!?

வார பலன்

வாரபலன் ஜூலை 17, 2003 :: மத்தளராயன்

காலச்சுவடு ஜூலை – ஆகஸ்ட் 2003 இதழில் அரவிந்தன் எழுதிய ‘இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது?’ படித்தேன்.

‘ஜெயகாந்தன் கதைகளை முன் வைத்து’ என்று அவர் தொடங்குவது ‘ஜெயகாந்தன் கதைகளை முன்வைத்து அவர் மீது நிகழ்த்தும் தடியடிப் பிரயோகம் ‘ என்பதன் தலைப்புச் சுருக்கம்.

‘அவருடைய கதைகள் பற்றித் தீவிர இலக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இதழ் ஒன்றில் விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் ஒன்றும் கிடையாது’ என்று ஆரம்பிக்கிறார் அரவிந்தன் கெத்தாக.

சரி சார், அப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்க்கப் போங்க. நாங்க எங்க வேலையைப் பார்க்கப் போகிறோம். காலச்சுவடு அதன் வேலையைப் பார்க்கட்டும். ஜெயகாந்தன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

அட, ஒரு பேச்சுக்குச் சொன்னாப் போயிடறதா? ஜெயகாந்தனை இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடலாம் வாங்க.

அரவிந்தன் நம்மை வாசலில் நிறுத்தி விட்டுச் சிடுசிடுத்தபடி பிரம்போடு விமர்சன வகுப்புக்குள் நுழைகிறார்.

‘கதை முழுவதும் இரைச்சல்’, ‘மிகு உணர்ச்சி’, ‘ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம்’

மனுஷன் மகா கோபமாக இருக்கிறார். ஜெயகாந்தனை பெஞ்சில் எழுந்து நிற்கச் சொல்லி விரட்டுகிறார்.

முதல் விளாசு – ‘ஜெயகாந்தனின் முதல் கதையிலேயே அவர் ஏ தென்றலே என்கிறார். படிக்க எனக்கு மிகவும் கூச்சம் ஏற்படுகிறது’.

ஜெயகாந்தன், ஏன் இப்படிக் கஷடப் படுத்துகிறீர்கள்? அடிக்கத்தானே விமர்சகர்? அவர் இப்படிக் கூசிக் குறுகி நிற்கலாமா? ‘இது என் முதல் நாவல்’ என்று ‘ஒரு புளியமரத்தின் கதை’ முன்னுரையில் எழுதியதுபோல் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்திருந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் வருமா? உமக்கு ஏன் புத்தி கெட்டுப் போனது?

(வெகுஜனப் பத்திரிகையான கல்கியில் வெகுஜன எழுத்தாளரான குட்டிகிருஷ்ணன் – கி.ராஜேந்திரன் -இருபத்தைந்து வருடம் முன்னால் இதுதான் புளியமரம் என்று அறிமுகப் படுத்தாமல் இருந்தால் எனக்கும் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும், புன்னை மரத்துக்கும் புளிய மரத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்காது. குட்டிகிருஷ்ணனுக்கு நன்றி சொன்னால் அரவிந்தன் என் தலையில் ஓங்கிக் குட்டுவார்).

ஜெயகாந்தன் கதைகளில் அடிக்கடி ஆவும் ஓவும் போட்டுக் கொண்டிருந்தால் எப்படித் தாங்குவது என்று இன்னொரு முறை பிரம்பை ஓங்கி விட்டு, கை வலிக்கிறதே என்று அலறுகிறார் அரவிந்தன்.

சுஜாதா ஒரு தடவை தயங்கித் தயங்கிச் சொன்னாரே – ‘ஓ’வை ஜெ.கே ஒரு கதையில் கொஞ்சம் போல் பயன்படுத்தியிருக்கிறார் என்று. அது இல்லையா விஷயம்? அவர் போட்ட மீதி ‘ஓ’வை எல்லாம் நான் ஏன் பார்க்காமல் போனேன்? ஓ ஜெயகாந்தன், ஓய் ஜெயகாந்தன், அடிக்க வாகாக உள்ளங்கையை இப்படி நீட்டுமய்யா. பெஞ்சில் நின்றால் குனியக் கூடாதா என்ன? இனிமேல் ஓ போடாமல் கதை எழுதுவேன் என்று நூறு முறை இம்போசிஷன் எழுதும்.

பாக்கியராஜ் படம் மாதிரிக் கதை எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று அடுத்த அடி. பாக்கியராஜ் இங்கே எங்கே வந்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. அப்புறம் அரவிந்தன் கை முருங்கைக் காய் பறிக்கப் போயிருக்குமா என்ன? உங்களுக்கும் ரெண்டு சாத்து. ஆமா.

‘வாசகர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் என்ற ஜெயகாந்தனது துடிப்பு கடைசி வரை ஓய்ந்ததாகத் தெரியவில்லை’

அரவிந்தனின் இந்தக் ‘கடைசி வரை’யை இன்னொரு தடவை அவசரமாகப் படித்து, காலச்சுவடைத் தொப்பென்று போட்டு விட்டு ஓடியே போய் இந்து பத்திரிகையைத் தேடினேன். ஸ்போர்ட்ஸ் பேஜில் ஓபிச்சுவரியை வரி விடாமல் படித்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். நலம். நலமே.

ஜெயகாந்தன் கதைகளை இது வரை விமர்சித்தவர்கள் (அதாவது பாராட்டியவர்கள்) அரவிந்தனின் கண்ணில் அடுத்துப் படுகிறார்கள். ஒரு குறுஞ்சிரிப்போடு அவர்கள் பக்கத்தில் போக, முன்வரிசையில் பாவம், நடுங்கியபடி நவபாரதி. (ஆமா, தோத்தாத்திரி எங்கே? அரவிந்தனின் பிரம்புக்குப் பயந்து ஆப்செண்டா?)

நவபாரதிக்குதான் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் என்று எத்தனை வித அர்ச்சனை! ‘ஆராதகர் நவபாரதி’, ‘உபாசகர் நவபாரதி’, ‘ஜெயகாந்தனின் பிரம்மாண்டத்தைக் கண்டு மூர்ச்சை போட்டு விழுந்த நவபாரதி’.

அது யார் பொன்னீலனா? ‘தமிழ் நாட்டுப் பண்பாட்டுத் தளத்தை ஜெயகாந்தன் கதைபோல் ஆரோக்கியமாக உலுக்கிய இன்னொரு சிறுகதையை நான் இன்றுவரை அறியவில்லை’ என்கிறாரா அவர்?

அரவிந்தன் ஒரு வினாடி பொன்னீலனின் கண்களைப் பார்க்கிறார். மனுஷன் சாமி வந்த மாதிரி நிற்கிறார், பார் என்று நம்மிடம் சைகை செய்கிறார். பொன்னீலன் புல்லரிக்கிறதாக அவர் புறங்கையைப் பார்த்து விட்டுத் தீர்மானமாகச் சொல்கிறார்.

இந்த நவபாரதியின், இந்தப் பொன்னீலனின் மிரட்டலையும் மீறி ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தில் நுழைந்தாராம் அரவிந்தன். கேட்கவே ரத்தம் கொதிக்கிறது. மூர்ச்சை போட்டவரும், புல்லரித்துப் போய் நிற்கிறவரும் அப்படியே படுத்தும், புறங்கையைச் சொரிந்து கொண்டும் கிடக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு இப்படி அரவிந்தனை மிரட்டுகிறார்கள்?

சரி, இந்த மிரட்டலையும் மீறித் துணிவோடு அந்த அடலேறு அக்கினிப் பிரவேசத்துக்குள் போய்ப் பார்த்தால் அம்மா பெண்ணுக்குத் தலையில் தண்ணீரை விட்டுக் கொண்டிருக்கிறாள். அம்புட்டுத்தானா என்று ஏமாற்றம் அரவிந்தனுக்கு. ஜெயகாந்தன் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால், புத்தகம் வாங்கிய காசுக்கு அவருக்குத் திருப்தி கிடைத்திருக்கும் :

1) ஸ்ரீவேணுகோபாலன் எச்சமாகத் தொடர்ந்து எழுதியது போல் அந்த கங்காவைத் தலையில் நெருப்பு வைத்துக் கொல்லலாம். குறைந்த பட்சம் அவள் தலையில் வென்னீரையாவது ஊற்றியிருக்கலாம். அரவிந்தனுக்கு ஜலதோஷம் பிடித்து அடுக்கடுக்காக இப்படித் தும்மல் வராது.

2) கங்காவும் அவள் அம்மாவும் காலச்சுவடு பத்திரிகையைப் புரட்டி, அரவிந்தனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் ‘விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே விழும் வெளியைச் சாத்தியப்படுத்தும் காரணிகளையும் அவற்றின் ஊற்றுக்கண்களையும் இனம் காண முயலும் பிரக்ஞைக்கு ஒற்றைப் பரிமாண போதனைகளால் எந்தப் பலனும் இருக்காது’ என்பதன் அர்த்தம் என்ன என்பதை விவாதித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதாகவோ, சேர்ந்து கையெழுத்துப் போட்டு காலச்சுவடுக்கு வாசகர் கடிதம் எழுதுவதாகவோ முடிக்கலாம்.

3) சூடாக ஒரு கப் காப்பி சாப்பிட்டுப் படுத்துக் கொள்ளப் போகவைத்திருக்கலாம்.

‘நல்ல’ எழுத்தைப் படித்த திருப்தியும் வேண்டும். தீவிர எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் ஆழ்ந்த தொந்தரவிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும் என்று உள்ளூர விரும்புகிறவர்களுக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று ‘பல் எனாமல் பாதுகாப்புக்கும், ஈறுகளின் உறுதிக்குமான பற்பசை கோல்கேட்’ என வாயசைவுக்கு வார்த்தை ஒட்டாமல் சொல்லும் டி.வி விளம்பர பல் டாக்டர் போல் சொல்கிறார் அரவிந்தன். அரவிந்தன் குரல் அவருடைய சொந்தக்குரல் தானா என்று நான் கேட்கமாட்டேன்.

கோபால் பல்பொடி ஒண்ணு கொடுப்பா. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றதாமே?

நன்றி: திண்ணையில் மத்தளராயன் படைப்புகள்