Monthly Archives: மே 2005

Vairamuthu, Bharathiraja, Ilaiyaraja – Tamil Thira…

Vairamuthu, Bharathiraja, Ilaiyaraja – Tamil Thirai TV Opening Celebrations Posted by Hello

Thamizh Thirai TV Channel 

Thamizh Thirai TV Channel Posted by Hello

RK Selvamani 

RK Selvamani Posted by Hello

வாசகர் டிஷ்யூம்

பதில் சொல்லுங்கள் பாரதிராஜா – ரவிபாபு

Vairamuthu, Bharathiraja, Ilaiyaraja - Tamil Thirai TV Opening Celebrationsஇயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாக்காரர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை கடுமையாகச் சாடியிருந்தார். தமிழ் மீது அவருக்கிருக்கும் பற்றை நினைத்தால் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்த்திரை சேனலைப் பார்க்கும்போது, ‘படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

தமிழ்த்திரை சேனலில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளின் பெயர்களைப் பார்ப்போமா… ‘ரெடி ஜூட், செட் தோசை, மைக்செட், ஸிக் ஸாக் ஸூம், நான்ஸ்டாப் நான்சென்ஸ், டாப் டக்கர்’ இப்படிப் போகிறது பட்டியல்.

Thamizh Thirai TV Channelபாரதிராஜா சார்… இதெல்லாம் தமிழ் பெயர்களா… இல்லை, உங்கள் கோபமெல்லாம் சினிமாவில் ஆங்கிலப் பெயர் வைப்பதில் மட்டும்தானா?


குத்திக் கிழிக்காதீர்கள் – ஏ.எம்.ஆனந்தன்

மைக் கிடைத்தால் போதும்… எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். கடந்த வாரம் ரேடியோ மிர்ச்சி எஃப்.எம் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி. நேயர்களிடம் லூசுத்தனமான கேள்வி கேட்பதும் அதற்கு நேயர்கள் மொக்கையான பதிலைச் சொல்வதும் தான் அந்த நிகழ்ச்சியின் ஸ்டைல்.

அன்று நிகழ்ச்சி துவங்கியதும் Radio Jockeyயான சுசித்ரா கேட்ட கேள்வி, ‘இன்ஜினீயரிங் படிச்சிட்டு சில வருஷமா வேலை இல்லாம இருக்குற இளைஞர்களுக்கு எதனால வேலை கிடைக்கலை? அதுக்கு அவங்க என்ன பண்ணலாம்?’ என்பதுதான். நானும் ஒரு இன்ஜினீயர் என்பதாலும் எனக்கும் இன்னும் ஸ்திரமான வேலை கிடைக்கவில்லை என்பதாலும் ஆர்வமாக நிகழ்ச்சிக்குக் காது கொடுத்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் சுசித்ரா அடித்த கமென்ட்களும் நிகழ்ச்சியில் பேசிய நேயர்கள் பேசிய பேச்சுக்களும் என்னை நோகடித்து விட்டன.

தனியார் கலைக் கல்லூரியில் படிப்பதாகச் சொன்ன ஓர் இளம்பெண், ‘வேலை இல்லாத இன்ஜினீயரிங் பட்டதாரிகள் படிக்கும்போது பலான படம் பார்த்து வெட்டியாக பொழுது போக்குவார்கள்’ என்று சொன்னதோடு, ‘வேலை கிடைக்கலைன்னா அவங்க மெரீனாவில் சுண்டல் விற்கலாம், வீடு வீடாக பேப்பர் போடலாம்’ என்றெல்லாம் யோசனை சொன்னார்.

உடனே சுசித்ராவும், ‘அடடே… அருமையான யோசனை!’ என்று பாராட்டினார். எனக்கு வந்த கோபத்தில் ரேடியோவைத் தூக்கிப் போட்டு உடைக்கலாம் போல இருந்தது. ஆனால் என் காசுதானே வீணாகப் போகும். ரேடியோவை அணைத்து விட்டு உருப்படியான வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

ரேடியோ, டி.வி. ஆசாமிகளே… முடிந்தால் இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள். இல்லையா… நீங்கள் எப்போதும்போல, ‘சாப்டாச்சா… என்ன படம் பாத்தீங்க… இட்லிக்கு தொட்டுக்க காரச்சட்னி சிறந்ததா… எண்ணெய் பொடி சிறந்ததா’னு பட்டிமன்றம் நடத்துங்க. எங்களை மாதிரி ஆளுகளைக் குத்திக் கிழிச்சு சந்தோஷப்படாதீங்க!

நன்றி: Junior vikatan

கல்கி

kalkiweekly.com:: கலை விமரிசனத்தில் நான் கையாளும் முறையைப் பற்றி இங்கு சிறிது சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ, சங்கீதக் கச்சேரியையோ பற்றி எழுத விரும்புகிறவன், இரண்டு முறையில் அவற்றைப் பார்க்க வேண்டும். ஒரு பூந்தோட்டத்துக்கு நாம் போகிறோமென்று வைத்துக்கொள்ளலாம். அதை எப்படிப் பார்க்கிறோம்? முதலிலே சற்று தூர இருந்து தோட்டம் முழுவதையும் ஒருங்கே பார்த்து அனுபவிக்கிறோம். பிறகு தோட்டத்திற்குள் புகுந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு பூவாகப் பார்த்து இன்புறுகிறோம்.

புத்தக விமர்சனங்கள், நாடக விமர்சனங்களைக் கையாள வேண்டிய முறையும் இதுதான். முதலில் முழுமையாகப் பார்த்து, “மொத்தத்தில் இது நன்றாயிருக்கிறதா? இலக்கிய வளர்ச்சிக்கோ, கலை வளர்ச்சிக்கோ உதவி செய்யக் கூடியதா?” என்று தீர்மானிக்க வேண்டும். முழுமையாகப் பார்க்கையில் நன்றாயிருந்தால், அதனுடைய உள் விவரங்களில் உள்ள குறைகளைப் பிரமாதப்படுத்த வேண்டியதில்லை; குறைகளை நிவர்த்திக்கும் நோக்கத்துடன் அவற்றை எடுத்துக் காட்டினால் போதும்.

முமுமையாகப் பார்க்கும்போது, “பயனற்றது” “கலை வளர்ச்சிக்குத் தீங்கு பயப்பது” என்று தோன்றினால், அதைப் பற்றி எழுதும் முறையே வேறு. அசோக வனத்தை அழிப்பதில் அனுமார் கையாண்ட முறைதான் அதற்குச் சரி. “இங்கே ஒரு செடி நன்றாயிருக்கிறதே” ‘அங்கே ஒரு பூ நன்றாயிருக்கிறதே!” என்று யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்த ‘முழுமை நோக்கம்’ எவ்வளவு அவசியம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். மிகச் சிறந்த புத்தகம் ஒன்றை நீங்கள் படிக்கிறீர்கள். அதனுடைய இலக்கியச் சுவையை நினைத்து நினைத்து மகிழ்கிறீர்கள். உங்களுடைய நண்பர் ஒருவருக்கு அதைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறீர்கள். அவர் படித்து விட்டு வருகிறார். “புத்தகம் எப்படியிருந்தது?” என்று கேட்கிறீர்கள். “முப்பத்தேழாம் பக்கம் இருபத்து நாலாவது வரியில் ஓர் அச்சுப்பிழை இருந்ததே… அதைக் கவனித்தீர்களா?” என்று கேட்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? “பகவானே, இவ்வளவு அற்புதமான புத்தகத்தில் இவருக்கு ஓர் அச்சுப் பிழையைத்தானா அனுபவிக்கத் தெரிந்தது” என்று நினைத்து அனுதாபப்படுவீர்கள் அல்லவா?

அதற்குப் பதிலாக அவர், “புத்தகம் மிக நன்றாயிருக்கிறது; எத்தனை தடவை வாசித்தாலும் அலுக்காது. ஆனால் அச்சுப் பிழை ரொம்ப இருக்கிறது. நல்ல பதிப்பு ஒன்றை யாராவது வெளியிடக்கூடாதா?” என்றால், நீங்களும் சேர்ந்து ‘ஆமாம்’ போடுவீர்கள்.

இன்னொரு உதாரணம் : ‘மாலி’ ஒரு சித்திரம் வரைகிறார். அதில் வரும் மனிதர்களின் மனநிலைமையை அற்புதமாய் முகபாவத்தில் சித்திரித்துக் காட்டியிருக்கிறார். அவர்களைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வருகிறது. எல்லாம் எங்கேயோ பார்த்த முகங்களாகத் தோன்றுகின்றன. நண்பரிடம் காட்டுகிறீர்கள். அவர் உற்றுப் பார்த்துவிட்டு, “ஆமாம்! இந்த ‘மாலி’ நாற்காலியே பார்த்ததில்லையோ?’ பின் சட்டம் இல்லாமல் நாற்காலி போட்டிருக்கிறாரே! நாற்காலி எப்படி நிற்கும்?” என்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்?

ஆகவே, இலக்கியம், நாடகம் ஆகியவைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்லுமுன், அவற்றை முழுமையாகப் பார்த்துச் சிந்தித்து முடிவு செய்தல் இன்றியமையாதது.

ரண்டக்க ரண்டக்க

நெட்டில் கிடைத்த கேள்வி. கீழ்க்காணும் வார்த்தைகளுக்குள் என்ன ஒற்றுமை சொல்லுங்க பார்க்கலாம்…

back & draw
club & moor
diet & cite
even & edit
life & emit
memo & lair
nigh & pact
with & ward

கூகிள் போங்கடிக்காமல், ஆழமா யோசிச்சு விடையைக் கண்டுபிடித்துத் தர வேண்டுகிறேன்.

விடை அறிந்தவர்களுக்கு:
இதே மாதிரி பொருத்தமான வார்த்தை வினாவைத் தமிழில் கொடுக்க முடியுமா என்று முயற்சியுங்களேன்.

அது ஒரு கனாக் காலம்

இசை: இளையராஜா
இயக்குநர்: பாலு மகேந்திரா

‘நீங்கள் கேட்டவை’ போன்ற படங்கள் பாடல்களுக்காகவே ஓடியது அந்தக் காலம். இந்தப் படத்தில் நடிகர்களையும் தன்னையும் மட்டுமே நம்பி பாலு மகேந்திரா களமிறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது.

அந்த நாள் ஞாபகம் :: விஜய் யேசுதாஸ், ஷ்ரேயா கோஸல் – 1.5 / 4
முதல்முறையாக ஷ்ரேயா கோஸலுக்கு பதிலாக வேறு யாரையாவது பாட விட்டிருக்கலாமோ என்று தோன்ற வைக்கும் பாடல். சாதனா சர்கம் மாதிரி தேவையில்லாத இடங்களில் இழுத்து விடுகிறார்.

என்னடா நெனச்சே :: ரஞ்சித், விஜய் யேசுதாஸ் – 1 / 4
அச்சச்சோ… கொஞ்ச நாள் கழித்து ராஜாவின் டப்பாங்குத்து. தனுஷின் ஆராதனைப் பாடல். பாடகரை மாற்றியிருந்தால் சோபித்திருக்கலாம்.

காட்டு வழி கால்நடையா :: இளையராஜா – 2 / 4
ராஜாவின் கோட்டையான தத்துவ தனிப்பாடல். பாடலாசிரியர் வலு சேர்க்காதது முதல் வருத்தம். இன்னும் எத்தனை நாள்தான் இப்படி சோகமாகப் பாட வேண்டுமோ என்பது போன்ற அலுப்பு தெரிவது இரண்டாவது வருத்தம். முடிவில் ஓரணா மிட்டாய் போல ஒரு அசட்டு தித்திப்பு.

கிளி தட்டு கிளி :: பவதாரிணி, ஜோதி – 3 / 4
பவதாரிணி க்ராஜுவேட் ஆகியிருக்கிறார். இரண்டு தடவைக் கேட்டதில் படத்தில் மிகவும் பிடித்த பாடலாகத் தோன்றுகிறது. ராஜாவின் முத்திரை இசையோடு மெல்லிய வரிகளில் அசத்துகிறார்கள்.

உன்னாலே தூக்கம் :: ரஞ்சித், மாலதி – 2 / 4
தனுஷ் ப்ரியாமணியுடன் மங்கலான விளக்கொலியில் கசமுசா செய்யும் பாடல். மாலதி நிறையவே அசத்தி வாசித்திருக்கிறார்.

ராஜா அரசோச்சியது எண்பதுகளில். பாலு மகேந்திராவும் இளையராஜாவும் என்றாலே எதிர்பார்ப்புகள் இறக்கை கட்டி பறக்கும். அதுவெல்லாம் ஒரு கனாக் காலம்.

விகடனின் நேரடிப் பதிவு

பா.ராஜநாராயணன் & இரா.முத்துநாகு

“எங்க கிட்ட கூலி வேலை பாக்கிறவங்க எங்களையே ஆள முடியுமா? ஆனா பாவம், அவங்களையும் சொல்லிக் குத்தமில்லே. எங்க நிலத்துல பாடுபட்டு, நாலு காசு சம்பாதிச்சிட்டிருந்த பாவப் பட்ட சனங்க பொழப்புல அரசாங்கம் மண்ணை அள்ளிப் போட்டுருச்சு. அதான் உண்மை!”
ராஜாக்கிளித் தேவர், கீரிப்பட்டி

இந்த தேர்தல்ல, ‘அழகுமல! நீதாம்ப்பு தலைவரு. என்ன, புரியுதுல்ல? இந்தா!’னு ஒரு மூடை அரிசி குடுத்தாங்க எசமானருங்க. கூடவே ஆயிரம் ரூவா குடுத்து, ‘நல்ல துணிமணி வாங்கிக்கப்பா’ன் னாங்க. அவங்க சொன்னபடி தேர்தல்ல நின்னேன். செயிக்கவெச்சாங்க. அப்புறம் ஊர்வலமா போய் ராசினாமா செஞ்சு புட்டேன். இதுல நான் வேற என்னத்தச் சொல்ல?”
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று, உடனே ராஜினாமா செய்த அழகுமலை

“அன்னிக்கு மதிய நேரம்… தேவர் ஐயா வூட்டு மாடியில நெல்லு காயப் போட்டுக்கிட்டு இருந்தேன். திடீர்னு மழை வந்துச்சு. மழை வருதேனு யோசிக்கிற நேரத்துல, தடால்னு ஒரு இடி என் தலையிலேயே விழுந்துச்சு. மயங்கி விழுந்துட்டேன். தேவர் ஐயாதான் ஓடிவந்து காப்பாத்துனாரு. பஞ்சாயத் துத் தலைவரா நான் ஆனதுல உள்ள குத்தம்தான் இதுனு புரிஞ்சுபோச்சு! ‘பொழைச் சதே பெரிசு’னு மறுநாளே ராசினாமா செஞ்சுட்டேன்!”
தனிக்கொடி (பாப்பாப்பட்டி)

“இதாங்க இங்க நடக்குது. இவன் தலையில இடி விழுந் துச்சா… சரினு அடுத்த தேர்த லுக்கு ஆளைத் தேடினோம். ஒரு பய சிக்கலே. கடைசியா, அழகர்னு ஒருத்தனைப் பிடிச்சு, அவனுக்குக் காசு பணமெல்லாம் கொடுத்து, துணிமணி கொடுத்து, நிக்கச் சொல்லி, செயிக்கவும் வெச்சோம். ஆனா, அவன் தலைவரான பத்தாவது நாள் ஜுரம் வந்து செத்துப் போனான். இவங்கள்ல யாரும் தலைவராகுறது அந்த ஒச்சாண் டம்மனுக்கே புடிக்கலீங்க. நான் வேற என்னத்தச் சொல்ல?”
செல்லக்கண்ணுத் தேவர்

“ஊரைவிட்டு விலக்கி இருந்தாங்களே, அந்தப் பதினஞ்சு குடும்பங்கள் யார், யார்?” என்று விசாரித்தால், “வேணாம்யா! நீங்க இங்கே நிக்கிற நேரம்கூட எங்களுக்கு ஆபத்துதான். நீங்க போன பொறவு, ‘பத்திரிகைக்காரங்க கிட்ட என்ன சொன்னே?’னு ஆளாளுக்கு வந்து கேப்பாங்க. இந்தப் பஞ்சாயத்தை ஆளணும்னு எங்க யாருக்கும் ஆசையில்லே. எங்களை நிம்மதியா வாழ விட்டாப் போதும்!” என்று ஒட்டு மொத்தமாகக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

வானத்தை வில்லாக வளைப்பவர்கள்

ஜூனியர் விகடன்:: “உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த நடிகர்கள், ‘எங்களிடத்தில் பணம் இல்லை. அதனால் சொன்னபடி நிதி வழங்கமுடியவில்லை’ என பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு பாதிக்கப்பட்ட பெற்றோரின் சார்பில் உதவித் தொகை வழங்கி நோகடிப்போம்”

‘அக்னிப் பூக்கள்’ அறக்கட்டளை (கும்பகோண பள்ளிக்கூட தீ விபத்துத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் அமைப்பு)


வாய்ச்சொல் வீரர்:

வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான்

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

குமுதம்.காம்

விஜயகாந்த்

நா.கதிர்வேலன் :: சிலபேர் நீங்க அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்னன்னு கேட்கிறாங்க. இதைத்தான் ஆறேழு வருஷமாக நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். மனசுக்குள்ளே போராட்டம். இப்போ இந்த நடிகர் சங்கத்தலைவர் வாய்ப்பு வருதுன்னா அதுல நம்மால என்ன பண்ணமுடியும்னு யோசிப்பேன். சங்கத்துக்கு நிறைய கடன் இருந்துச்சு, அடைச்சோம். இன்னும் சில முக்கியமான விஷயங்கள் முடிக்கப்படாமல் இருக்கு. ஒவ்வொண்ணா சரிபண்ணணும். இப்படித்தான் ஜனங்கள் எங்கே போனாலும் தருகிற ஆதரவையும், அன்பையும் ஏத்துக்கிட்டு என்ன செய்யறது! அவர்களுக்கு நாம் திருப்பிச் செலுத்தவேண்டியது என்ன? ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணணும். ஜனங்களுக்கு நல்லது செய்யலை என்றாலும் கெடுதல் பண்ணிடவே கூடாது. கொஞ்ச நாளைக்கு முன்னால் மவுண்ட்ரோட்டில் பெரிய அளவில் மறியல் நடந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சின்ன வார்டு தேர்தல். ஏழெட்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விட்டது. மக்களுக்கு எவ்வளவு துயரம்! கேள்வி கேட்க யாரும் இல்லை. ஸ்கூலுக்குப் போறவங்க, இண்டர்வியூ போக அவசரப்படுகிறவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. அரசியல்கட்சிக்கு அது முக்கியமே இல்லை. வெட்கங்கெட்டுப்போய் நாமும் எந்தக்கேள்வியும் கேட்காமல் விடுகிறோம்.

நமக்கு கஷ்டங்களைத் தாங்கிப் பழகிவிட்டது. ஏழெட்டு மணிநேரம் பொதுமக்கள் துயரப்படவேண்டியதின் அவசியம் என்ன? எனக்கு ஜனங்கள் பெரிசா வசதி வாய்ப்போடு வாழந்து செழிக்கணும் என்ற விருப்பமெல்லாம் அதிகம் இல்லை. அவங்க பாதுகாப்பாக இருக்கணும், சவுகரியமாக இருக்கணும், நிம்மதியாக இருக்கணும் இதுதான் என் விரும்பம்னு சொல்லத் தோணுது. சேவை செய்யணும் என்ற எண்ணம் ஒரு நடிகனுக்கு வரக்கூடாதா?

நன்றி: குமுதம்


பிரமோத் மகாஜன்

சோலை :: ‘‘டெல்லியில் தி.மு.க. அமைச்சர் ஒருவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் வந்தார். அவரது இல்லத் திருமண அழைப்பிதழை எனக்குத் தந்தார். தி.மு.க. அமைச்சருக்கு அவர் தரவில்லை. ஏன் என்று கேட்டேன்.

‘தி.மு.க. அமைச்சரும் நானும் உயிருக்கு உயிரான நண்பர்கள்தான். அவருக்குப் பத்திரிகை கொடுத்து அந்தத் தகவல் எமது கழகத்தலைமைக்குத் தெரிந்தால் எம்.பி. பதவியே பறிபோய் விடும்’ என்றார்.

அதிர்ச்சியால் உறைந்து போனேன்.

அமிர்தசரசிலிருந்து லாகூருக்கு பஸ் விடலாம். ரெயில் விடலாம். ஆனால் போயஸ் தோட்டத்திலிருந்து கோபாலபுரத்திற்கோ அங்கிருந்து போயஸ் தோட்டத்திற்கோ சைக்கிள் ரிக்ஷாகூட விடமுடியாது. இந்தக் கலாசாரத்திலிருந்து பி.ஜே.பி. விடுபட வேண்டும்’’ என்றார் பிரமோத் மகாஜன்.
—-
இஞ்சி எப்படி இருக்கும் என்று ஒருவன் கேட்டானாம். இது தெரியாதா? எலுமிச்சம்பழம் போல் தித்திப்பாக இருக்கும் என்றானாம் இன்னொருவன். இப்படித்தான் பி.ஜே.பி.யை கிராமத்து மக்கள் புரிந்திருக்கிறார்கள்.

நன்றி: ரிப்போர்ட்டர்