Monthly Archives: மே 2005

ராமகிருஷ்ணா

‘காதல் கோட்டை’ கூட்டணியில் இன்னொரு படம் என்று சொல்லி விளம்பரம் செய்து வந்தார்கள். அகத்தியனும் சிவசக்தி மூவி மேக்கர்ஸும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

பணக்கார முதலாளி ஜெய் ஆகாஷ். தகப்பன் பெயர் தெரியாமல் அயல்நாட்டில் வளர்த்த அம்மா சரண்யாவிடம் ஓவர் பாசமாய் பொழிகிறார். அம்மா தவறி விழுந்ததால் தவறிப்போனபின், அவரின் கட்டளைப்படி கிராமத்திற்கு செல்கிறார். அப்பா விஜயகுமாரை கண்டுபிடிக்கிறார். ஸ்ரீதேவிகாவுடன் காதல். ஆட்டக்காரியாக இன்னொரு நாயகி வாணி வந்து போகிறார்.

ஹீரோயின் ஸ்ரீதேவிகா விகல்பமில்லாத பாசங்காட்டுகிறார். ஜெய் ஆகாஷும் இயல்பாக நடித்திருக்கிறார். இளமையான அலட்டல் இல்லாத நாயகன்.

முத்துக்காளையும் சார்லியும் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளை ஏற்கனவே சன் டிவியில் ரசித்திருந்ததால், மீண்டும் பாராட்ட முடியவில்லை. படத்தின் நகைச்சுவை தவிர நயமிக்கதாக இரண்டு இடம் இருக்கிறது.

* கிராமத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு மனனம் செய்வதற்குப் பயன்படும் வித்தைகளை சொல்லி, காதல் பாடலுக்கு அழைத்துச் செல்லும் இடம்.

கொக்குச்சி கொக்கு
ரெட்டசிலாக்கு
மூக்கு சிலந்தி
நாகுவா வர்ணம்
ஐயப்பஞ்சோறு
ஆறுமுகத் தாளம்
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி

பாடலை கேட்கப் போனால், பாடியவர்கள் கார்த்திக் ராஜாவும் சாதனா சர்கமும்! சாதனா சர்கம்தான் தெளிவாக கிராமத்துத் தமிழில் உச்சரித்திருக்கிறாரா அல்லது ஒக்கச்சி எல்லாம் கொக்கச்சி ஆகிப் போனதா என்று அறியமுடியாத ஆனால் வித்தியாசமான பாடல்.

* தட்டான் தாழப் பறந்தால் மழை வரும், இன்னும் ஏதோ ஒன்று காணப்பட்டால் அடை மழை, எப்பொழுது சிதறல், எப்பொழுது புயல் என்று சராமாரியாய் அடுக்கும் வசனங்களும் வானிலை ஆய்வாளர்களை விட துல்லிதமாக கணிக்கும் வித்தையை சொல்லியது.

சில புகைப்படங்கள்

ஊடகச் செல்லம்

ஃப்ரென்ச் ஓபன் முதல் சுற்றிலேயே சானியா மிர்ஸா தோற்றிருக்கிறார்.

வழக்கம் போல் ஜெயித்தவரின் புகழ் பட்டியலோடுதான் செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள். முன்பாவது ‘கிட்டத்தட்ட #1’ வில்லியம்ஸிடம்தான் தோற்றுப் போனார் என்று சமாதானப்பட்டுக் கொண்டோம். இப்பொழுது முப்பதாம் இடத்தில் இருந்தாலும் ‘சிறந்தவர்… வல்லவர்…’ என்று மோதிரக் கையால் குட்டுப்பட்டதாய் ரிப்போர்ட் கொடுக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவிடமோ தெற்கு ஆப்பிரிக்காவிடமோ (கிரிக்கெட்டில்) தோற்றால் பரவாயில்லை. ஒலிம்பிக்ஸில் ஒக வெண்கலம் கிடைத்தால் போதும். ஹாக்கியில் கால்-இறுதிக்கு தகுதிப் பெற்றாலே போதும். கை நிறைய சம்பளம் கிடைத்தால் போதும் என்னும் நடுத்தர வர்க்கம் (இன்னும் இப்படி ஒன்று இருக்கிறதா?) சித்தாந்தம் இப்பொழுது விளையாட்டில் மேலோங்கி நிற்கிறது.

அழகாக இருக்கிறார். விகடனில் எழுதியிருந்தது போல் ‘வாளிப்பான தக்காளி’ என்று மனசுக்குள் சப்புக் கொட்ட நிறையவர்கள் உண்டு. அவர்களுக்கான குட்டிகுரா முகப்பூச்சுகளும், குளிர் சாதன விளம்பரங்களிலும் தோன்றிக் கொண்டே இருக்கலாம்.

லியாண்டர் பேயஸின் வழக்கம் போல் இரட்டையர் ஆட்டத்தில் இறுதிச் சுற்று வரை தத்தித் தடுமாறி வந்து கொண்டேயிருந்தால் டப்புக்குக் குறைச்சல் இருக்காது. இப்படியே செட்டில் ஆகிவிடலாம் என்னும் எண்ணத்தை ஊக்கப் படுத்தாவிட்டால் நல்லது.

அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் சமயத்தில் சர்ச்சையை கிளப்பிய ‘நைகி’ விளம்பரம்:

வெள்ளியை வெல்வது என்பது தங்கத்தைத் தட்டிச் செல்லாததற்கான சப்பைக்கட்டு.

(“You don’t win silver, you lose gold” and
“If you are not here to win a medal, you are a tourist”?)

இந்திய அணிக்கு புதிய கேப்டன்

tamiloviam.com::

சமீபத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக கிரெக் சாப்பெல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜான் ரைட்டுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அணியில் சில மாற்றங்கள் வர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமும் சேப்பலும் விரும்பினார்கள். இந்த எண்ணத்தை செய்ல்படுத்தும் முதல் படியாக பிரையன் லாரா (Brian Lara) இந்தியாவுக்கு வரவழைக்கப் படுகிறார். அமர்நாத்தைப் போலவே டெண்டுல்கரும் லாராவின் வருகையை வரவேற்றுள்ளார்.

சமீப காலமாகவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு, லாராவின் இருப்பு தர்மசங்கடத்தைக் கொடுத்து வந்தது. லாரா இருந்தால் மோசமாகவும்; அணியில் லாரா ஆடாவிட்டால், மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக் கனிகளையும் பறித்து வந்து கொண்டிருந்தது.

தெற்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜார்ஜ்டவுன் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 543 ஓட்டங்களை மேற்கிந்திய அணிவீரர்கள் குவித்தார்கள். இந்தப் பந்தயத்தில் லாரா ஆடவில்லை. மேற்கிந்திய ஆட்டக்காரர்களில் இருவர் இரட்டை சதம் அடித்து அபாரமாக ஆடியிருந்தார்கள். இதைத் தொடர்ந்த இரு ஆட்டங்களிலும் லாரா இருந்தார். ஆனால், மொத்தத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே ஐம்பதைத் தொட்டிருந்தார்கள். ரிட்லி ஜேகப்ஸ் போன்ற சக வீரர்களும் லாராவைக் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கிந்திய அணி தோற்றுப்போன் ஆட்டங்களை கணக்குப் போட்டு பார்த்தால் — லாரா ஆடிய ஐந்து ஆட்டங்களில் மூன்று போட்டிகளில் அவரின் அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதே சமயம் லாரா அணியில் இல்லாவிட்டால், நான்கு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே புறமுதுகிட்டிருக்கிறார்கள்.

‘இது போன்ற தோல்வியை அதிகம் ஈட்டித் தரும் அம்சம் முக்கியமானதாக இந்திய நிர்வாகம் கருதியிருக்கலாம். மேலும், வெளிநாட்டு வீரரை அணியில் சேர்ப்பதனால், சொந்த நாட்டில் சரக்கிலாததை பறை சாற்றலாம். கோச் மட்டும் இறக்குமதியல்ல, அணியே அன்னியம்தான் என்னும் கொள்கையை நிலை நிறுத்த லாரா உதவுவார்.’ என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியை கேட்ட முன்னாள் உலக அழகி லாரா தத்தா, பிரையனை நேரில் சென்று பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ‘என்னுடைய பெயர் கொண்ட ஒருவர் இந்தியாவில் இல்லாதது வருத்தமாக இருந்தது. இப்பொழுது இந்திய அணியிலேயே இடம்பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. அவருடன் கூடிய சீக்கிரமே சினிமாவில் நடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது செல்பேசி விளம்பரத்திலாவது தோன்ற வேண்டும்.’ என்றார்.

கங்குலியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘என்னை விட மோசமான அணித் தலைவரை இதை விட எளிதாகக் கண்டிபிடிக்க முடியாது. என்னுடைய கேப்டன்சி மீண்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க இது வழிவகுக்கலாம்’ என்று நெருங்கிய நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து இந்திய அணி தேர்வாளர்கள் அடுத்த வாரம் பெங்களூரில் சந்திக்கப் போகிறார்கள். அப்பொழுது பாகிஸ்தானின் அப்துல் ரஸ்ஸாக், மேட்ச் பிக்ஸிங்கிலும் முன் அனுபவமுள்ள தெற்கு ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் போன்றோரை பரிசீலிக்கப் போவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் பேசிக் கொள்கிறார்கள்.

– பாஸ்டன் பாலாஜி

நமது நம்பிக்கை – மே 05

நமது நம்பிக்கை::

* வென்றவர் வாழ்க்கை நாச்சிமுத்து கவுண்டர்
இன்று அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என்று அழைக்கப்படும் தொழிலதிபர், 50 ஆண்டுகளுக்கு முன் அஆப மகாலிங்கம் என்றுதான் அறியப்பட்டார். அஆப என்பது ஆனைமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்

* களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்
ஒருவருக்கு நாலணா என்று தொடங்கிய சந்தா, சிறிது சிறிதாக வளர்ந்து மாதம் ஒன்றுக்கு ரூபாய் இருபது என வளர்ந்துவிட்டது. பலர் இப்போது சின்னாவைப் பார்த்துப் பேச, அறிவுரை கேட்க வர ஆரம்பித்து விட்டார்கள். கடைக்குப் புறப்பட்டுப் போனபோது எதிர்த்தாற்போல் சோணை வந்தான்.

* ஆளப்பிறந்தவன் நீ
நீங்கள் விரும்பிய வண்ணம் செயலாற்றுங்கள்.அலுவலகம், தொழிற்சாலை, வணிக மையம் என பல்வேறு களங்களில் நம் அன்றாடப் பணிகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாம் செயலாற்றுகிறோம்

* மலைக்க வைக்கும் மனித சக்தி
வேர்த்திடு முடலில் வெள்ளம் திரட்டி
விளைச்சலை உழுதவன் மனிதன்!
ஆர்த்திடு மாயிரம் இயந்திரம் ஓட்டி
ஆலைகள் கண்டவன் மனிதன்!

* ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!
தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம்.

* சந்தைப் படுத்துவோம் சாதனை குவிப்போம்
பப்ளிசிட்டி அன்ட் புரமோஷன் என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களும் அடிக்கடி நாம் பயன்படுத்தும் சொற்கள்

* பாலகுமாரன் நேர்காணல்
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக்கொண்டிருக்கின்றனர். நமது நம்பிக்கை வாசகர்களுடன் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார் திரு. பாலகுமாரன்.

* புதுக்கணக்கு
மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு
மனிதா தொடங்கு புதுக்கணக்கு;
விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும்
வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு;

* காப்பீட்டு முகவர்களே கவனியுங்கள்
காலத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடாமல் படைப்பாற்றல் திறனால் காலத்தையே தமது போக்கிற்கு மாற்றியமைத்து வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு

* சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?
நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள்.

* பொதுவாச் சொல்றேன்
ஒரு விஷயம் கண்ணுக்குத் தெளிவாத் தெரியாத போது, பார்வையிலே இருக்கிறகுறைபாட்டுக்கு ஏற்றமாதிரி மூக்குக் கண்ணாடி போட்டக்கறோம். ரொம்ப ரொம்பச் சின்ன விஷயங்களை, பூதக்கண்ணாடி வைச்சுப் பார்க்கறோம்

* எது உள்ளுணர்வு? எது சந்தேகம்?
எந்த ஒரு சிந்தனையாளரைக் கேளுங்கள் உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்++ என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள்

* புதிய பயணத்தின் பெருமை மிக்கஆரம்பம்
நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் பி.எஸ்.ஆர். சாரீஸ் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை தொடர் பயிலரங்குகளின் தொடக்க விழா கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.

* உனக்கும் கீழே உள்ளவர் கோடி
சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், தீர்வு பிறந்து விடும்

* மாணவ மனசு! கோடை விடுமுறை
ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் இருவருமே ஏங்கித் தவிக்கிற விஷயமாக, எப்போது வரும் என காத்திருக்கும் ஒன்றாக, பலமாத காலங்களுக்கு முன்பே திட்டமிடுகிற விஷயமாக, குடும்பத்தின் அனைவருமே கொண்டாடி மகிழுகிற தருணமாக இருந்து வந்தது

காலச்சுவடு – மே 2005

Kalachuvadu ::

* சிறுகதை: சாயம் போன வானம்
உருக்காண்டிதான் தகவல் சொன்னான். நம் தோட்டத்தில் யார் செத்தாலும் அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியவரும். உங்களைப் பற்றிச் சொல்லும்போது ஒன்றும் உணர்ச்சி இல்லை. ஏதோ பத்திரிகைச் செய்தி மாதிரி சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டான். வேறு யாராவது செத்திருந்தால் உச்சுக் கொட்டி வருத்தப்படுவான்.

* முரண்படும் மொழிபெயர்ப்புகள்
தவறான, முரண்பட்ட மொழிபெயர்ப்புகள் மூலநூல் படைப்பாளியின் படைப்புத் திறனை அங்கஹீ(கீ)னப்படுத்தி அவரைப் பற்றிக் குறைத்து மதிப்பிடும் விமரிசன சூழல் தோன்றுவதற்கு வழிவகை செய்துவிடும் அபாயம் உள்ளது.

* ஹாலிவுட் திரைப்படங்கள் சொல்லாத அரசியல்
வழமையாகவே ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்புகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமாகவும் அமெரிக்க விசுவாசத்தை ஊறவைப்பதாகவும் அமெரிக்காவின் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவதாகவுமே அமைந்துவருகின்றன.

* வாசகர் முற்றம்: படைப்பாளிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்

* குமுதம் தீராநதியின் இதழியல் திருட்டு
தனது பணியாளர் ஒருவர், காலச்சுவடுக்கு எதிரான, தனிப்பட்ட, வெறுப்பு சார்ந்த இலக்கிய அரசியல் நடத்துவதற்காக குமுதம் குழும இதழ்களைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதித்துவரும் குமுதம் நிர்வாகத்தின் இயலாமை பல முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.

* கருத்தரங்கு: புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
‘கடவு’ இலக்கிய அமைப்பும் ‘காலச்சுவடு அறக்கட்டளை’யும் இணைந்து மதுரையில் ‘புது யுகத்தில் தமிழ் நாவல்கள்’ என்ற கருத்தரங்கை நடத்தின. ஒரு வசதி கருதிக் கடந்த ஐந்தாண்டுகளில் (2000ஆம் முதல் 2004 முடிய) ஒருவர் எழுதிய ஒரு நாவல் மட்டும் என்கிற வரையறையுடன் நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

* அற்றைத் திங்கள்: கி. ராஜநாராயணன்
‘அற்றைத் திங்கள்’ என்னும் இத்தொடர் நிகழ்வுகளின் கால அவசியம் குறித்தும் அதன் மூலம் விரிவடையப்போகும் வாசகர் – படைப்பாளி உறவு பற்றியும் காலச்சுவடு ஆசிரியர் கண்ணனின் சுருக்கமான உரைக்குப் பின் கி.ரா. பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் சாரம் இது.

* கேரளமும் கண்ணகியும்
சிலப்பதிகாரம் கொண்டாடும் கண்ணகி வழிபாடு கேரளத்தில் இன்றும் விளங்கிவருகிறது. பல நாட்டுக் கதைப் பாடல்களும் மரபுகளும் வழங்கிவருகின்றன. கோயில்கள் போக மலைப் பகுதிகளில் பழங்குடிகளிடமும் அது தொடர்பான வழிபாடுகளும் காணப்படுகின்ற செய்தி ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

* இலங்கையின் கலைச் சூழல் குறித்த தீவிர வாசிப்பு
இலங்கையின் கலை, அதன் வரலாறு, கலைஞர்கள், நிகழ்வுகள் முதலியவற்றை ஆழமான, தீவிரமான பார்வையுடன் அலசும் முயற்சியாக வெளிவருகிறது அழ்ற்ப்ஹக்ஷ என்னும் ஆறுமாத இதழ்.

* விவாதம்: வகாபியிசம்: சில விளக்கங்கள்

* திறந்த வெளி: ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் கதை

* அஞ்சலி: சால் பெல்லோ (1915 – 2005)
அமெரிக்க யூத எழுத்தாளர்களில் ஐசாக் பாஷெவிஸ் சிங்கருக்கு நிகரான இடத்தைப் பெற்றது மட்டுமல்லாது நோபல் பரிசையும் பெற்றுச் சிறப்படைந்தவர் சால் பெல்லோ.

* அஞ்சலி: ஆலன் டண்டிஸ் (1934-2005)
கடந்த 30 ஆண்டுகளாக அனைத்துலக நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தில் தலைசிறந்த ஆய்வாளர் அவர் என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வர். உண்மையில் அவர் தனித்தன்மை வாய்ந்த ஆய்வாளர்; கல்வியாளர்; மனிதாபிமானி; ஒரு மறுமலர்ச்சியாளர்.

* அஞ்சலி: சி.டி. நரசிம்மையா (1920-2005)
தெலுங்கரான சி.டி. நரசிம்மையா மைசூரிலிருந்து உலகெங்கும் உள்ள அனைத்து இந்திய எழுத்தாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கினார்.

* அஞ்சலி: ஜெமினி கணேசன் (1920 – 2005)
சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர். இதைக் குறிப்பிட்டு, ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார்.

* அஞ்சலி: ஓ.வி. விஜயன் (1930-2005)
மலையாள நாவலின் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றில் மிக முக்கியமான இரண்டோ மூன்றோ எழுத்தாளர்களில் ஒருவர் ஓ.வி. விஜயன். ‘கஸôக்கின் இதிகாசம்’, ‘தர்மபுராணம்’ ஆகியவை உள்பட விஜயனின் படைப்புகள் மலையாளத்தில் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் போக்கையே மாற்றின.

* அஞ்சலி: ஆதி. குமணன் (1950 – 2005)
ஆதி. குமணன் உண்மை, நேர்மை, நியாயம் என்ற கொள்கைகளில் மிகப் பிடிவாதமாக இருந்தவர் என்பதால் பத்திரிகைப் பணியில் சிறந்தார் என்பதைவிட அவரிடம் இருந்த மனிதாபிமானமே அவரை எப்போதும் உயர்த்திக்காட்டியது.

* எழில்வரதன்: குலைவுகளின் சித்திரங்கள்
எந்த இதழிலும் பிரசுரம் காணாத பதினைந்து சிறுகதைகள் கொண்ட ‘ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு’ என்னும் முதல் தொகுப்பின் மூலம் வாசகர்களின் கவனத்தில் உடனடியாகப் பதிந்த புதிய இளந்தலைமுறைப் படைப்பாளி எழில்வரதன்.

* பிள்ளை கெடுத்தாள் விளையும் சந்தேகங்களைக் கொண்டாடும் எழுத்து முறையும்
கதைக்குள் ஓடும் காலம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு. அந்த நூற்றாண்டைச் சரியாக வாசித்தவர்கள் இந்தப் பிரதி கிறித்தவ மதத்திற்கு மாறிய அன்றைய தாழ்ந்த சாதியான ஒரு நாடார் பெண்ணின் கதை என்பதை எளிதாகப் புரிந்துகொள்வர்.

* பசித்த மானிடம்: நினைவுக் கிடங்கிலிருந்து வெளிச்சத்திற்கு
வாழ்க்கை யதார்த்தங்களை கரிச்சான் குஞ்சுவின் கலைப் பார்வை அணுகும் விதமே இந்நாவலை வேறுபடுத்திக் காட்டுகிறது. யதார்த்தத்தை ஒப்பனைகளற்ற அடையாளங்களுடன் முன்வைப்பதே அவருக்கு உவப்பானதாக இருக்கிறது.

* கவிதைகள்

* தேவதச்சன் கவிதைகள்: காணுலகும் வியனுலகும்
சொற்களுக்கு நாம் பொதுவில் புனைந்துகொண்டுள்ள அர்த்தங்களைக் கடந்து செல்கிறபோது நாம் நுழைந்துவிடக்கூடிய நமக்குப் பரிச்சயமில்லாத அர்த்தப் பரப்பில் இந்தக் கவிதைகள் புழங்குகின்றன. எனவே அநேகக் கவிதைகளும் நூறு சதவிகித வாசக கவனத்தைக் கோருபவை.

* நேர்காணல்: அமினாட்டா ஃபோர்னா
நாவல் எழுதும்போது அதன் அடிவானம் தெரிவதில்லை. அது எங்கே போகிறதோ அதன் பின்னால் போய் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். சிறுகதை அப்படி இல்லை. எங்கே போய் முடிய வேண்டும் என்று ஓர் ஊகம் இருக்கும். ஆகவே எது மிகச் சுருக்கமான பாதையோ அதைப் பிடித்துப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.

* இரண்டாவது அம்மா

* தலையங்கம்: இளகும் எல்லைகள்
இந்திய – பாகிஸ்தான் உறவில் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. கிரிக்கெட் தோல்வியை மறக்கடிக்கச் செய்வதாக இருந்தது மன்மோகன் சிங் – முஷரஃப் சந்திப்பு. வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள ஸ்ரீநகர் – முசாபராபாத் பேருந்துப் போக்குவரத்து இரு நாடுகளின் அரசியல் உறுதியை எடுத்துக்காட்டியது.

* தாழ்த்தப்பட்டோரும் மொழிப் போரும்
சாதி முகத்தை மறைத்துக்கொள்வதற்கான முகமூடியாகத் ‘தமிழன்’ என்ற அடையாளம் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. மறுபுறம் சாதியைக் கடப்பதற்கான வழிமுறையாகத் ‘தமிழன்’ என்ற அடையாளம் இன்னொரு தரப்பினரால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.

அமுதசுரபி – மே 05

Amudhasurabi::

* மைய-மாநில உறவு
இந்த மைய-மாநில உறவு என்பதை அரசியல் விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நமது அரசியல் சட்டத்தில் மைய அரசுக்கு என்ன உரிமைகள், கடமைகள் என்று உள்ளனவோ, அம்மாதிரியே மாநில அரசுக்கும் என்ன உரிமைகள் கடமைகள் உள்ளன என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

* வையவன் கதைகள்
வையவனின் கதைகள் மனிதப் பிறவியின் மகத்துவத்தை அழகுற வெளிக்காட்டுகின்றன. அன்றாடம் நிகழும் சில சாதாரண நிகழ்ச்சி களின் வாயிலாக வாழ்க்கையில் சில சிக்கலான பிரச்சினைகளையும், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் விளக்கித் தெளிவாக்குகின்றன. ஆசிரியரின் விரிந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கும் இக்கதைகள். உயிர்களுக் கிடையே அமைந்த உன்னதமான உறவுகளை யும், உணர்வுகளையும் நல்ல முறையிலே வெளிப்படுத்துகின்றன.

* படிக்கக் கிடைத்தவை – 2
சாதி வெறி எங்கு யாரிடம் இருக்கிறது என்பதை அரசியல் வாதிகள் கண்டு கொள்வதில்லை. அதைப் பிரச்சினையாக்கிவிட்டால், வாக்குகள் பறிபோகும். அதைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக்கி, கண்டுக்காமல் இருப்பதுதான் சரி என்பது எல்லாக் கட்சிகளின் சொல்லப்படாத மெüன உடன்படிக்கை. ஆனால் தலித் எழுத்துகள், இப்படித் தப்புவதில்லை. அவர்கள்தான் தாம் வாழும் அனுபவத்தை கொள்கைப் பூச்சில்லாமல் எழுதுகிறார்கள்.

* கவிதாயினி சுகந்தி சுப்ரமணியன்
மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்…. என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.

* மூன்று கோடிப் பேர் தேவை – எல் அண்டு டி
உண்மையில் சிறியதோ, பெரியதோ எந்தக் கட்டுமானப் பணி நடக்கும்போது தலைமைப் பொறியாளர்களும் மேற்பார்வையிடும் அதிகாரிகளும் மட்டும் வல்லுநர்களாக இருந்தால் போதாது. களப் பணியாளர்களான கொத்தனார், கம்பி கட்டுபவர், மின்சாரப் பணியாளர்கள் இப்படி எல்லோருமே தாம் செய்யும் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல முறையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால்தான் பணி செவ்வனே நடைபெற்று நீண்ட காலம் பயனுறும் வகையில் அமையும்.

* கவிதை வெளி
முகுந்த் நாகராஜன், சுஜாதா விஜயராகவன், வைகைச் செல்வி, ச. பிரியா, ஆனைமலை, அண்ணாகண்ணன், நரன், வெண்ணிலாப்ரியன்

* வாசனை எண்ணெய்க்கு வளமான எதிர்காலம்
இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் “வெட்டிவேர்’ தைலம் வடிக்கப்படுகிறது. மல்லி, மருதாணி, சந்தன மரம், சிட்ரோ நெல்லா, பச்சோலி போன்றவற்றிலிருந்தும் தைலம் வடிக் கின்றனர். சுமார் 200 வகை வாசனைத் தைலங்கள் பெருமளவிலும் ஏறக்குறைய 800 வகை ஓரளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

* மரத்தூள் ஓவியங்கள் – செய்முறைக் கட்டுரை
எல்லா மரத்தூளையும் சாக் பவுடருடன் சேர்த்து, பெவிகாலுடன் குழைத்தால் இந்தக் கலவை உறுதியாகும். சற்றே சொரசொரப்பான எந்தப் பொருள்கள் மேலும் ஒட்டி, டிசைன் செய்ய அருமையாக வரும். எளிய முறை கொண்ட இரட்டைக் கிளிகளைச் செய்ய தேவைப்படும் பொருள்களை எழுதி, வழிமுறைகளையும் குறிப்பிடுகிறேன். இதே தொழில்நுட்பம் மீதிப் படங்களுக்கும் பொருந்தும்.

* தெய்வீக உடல் :- 2
மனித உடலும் புதிய உருமாற்றத்திற்கான ரசவாதத்திற்கு உள்ளாகும். முன்பு விலங்கு நிலையிலிருந்து நிமிர்ந்து நின்று சிந்திக்கும் மனித வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக்கொண்டது போல், மனித உடல் இப்போது புதிய சக்திகளை வளர்த்துக்கொண்டு ஆன்மீக சக்தியையும் அதிமன உணர்வையும் வெளியிடும் தகுதியைப் பெறவேண்டும்.

* தமிழில் கலப்பு!!???
பிற மொழிகளின் ஆதிக்கத்தினின்றும் தமிழைப் பாதுகாக்கும் வேட்கை, இன்று நேற்று அல்ல, முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் வலுவாக எழுந்தது. ஆக்கபூர்வ மாக வெளிப்பட்ட அவ்வுணர்வை மறை மலையடிகள் போன்ற தமிழறிஞர்கள் போற்றி வளர்த்தனர். தமிழகமெங்கும் தூய தமிழ்மணம் கமழச் செய்தனர்.

* நான் என்ன சொல்லட்டும்?
சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து அவ்வளவு முக்கியமா? ஒரே மணி நேரத்தில், பெரியம்மா, பெரியப்பா முன்னால் பல்லைக் காட்டிக்கொண்டு சேவகம் செய்யும் முகம் அப்படியே மாறிவிட்டதே என்ற ஆச்சரியத்துடன், அப்பா, அம்மாவையே பார்த்தவாறு என்னையறியாமல் தலையை ஆட்டினேன்.

* நூல் நயம்
ஆன்மிக வினா விடை : சுவாமி கமலாத்மானந்தர் 3 பாகம்
ஊரும் திரிபும் இழிவும்!: தொகுநர்- அ.சி. சின்னப்பாத்தமிழர்
ஜே. ஆர். டி. டாடா – வாழ்க்கை வரலாறு: அறந்தை மணியன்
மெய்ப்பொருள் ஞானம் : துருவன்

* பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்
இந்தப் பாப்பரசர் சென்ற இடங்களிலெல்லாம், நிலத்தில் வீழ்ந்து, அந்நாட்டு மண்ணை முத்தமிட்டு, தன்னை, தனது அன்பைக் காட்டி நின்ற உத்தம மனிதர். மாற்ற முடியாத “பாக்கின்சன்’ நோய் வந்த பின், நிலத்தில் வீழ்ந்து, முத்தமிட முடியாத காரணத்தால், தான் போன நாடுகளின் மண்ணை, பிரம்புக் கூடையில் கொண்டு வரச் சொல்லி, அந்த மண்ணை முத்தமிட்டு, அந்த மண்ணின் மீது, தன் ஆசீர்வாதமிட்டு, இந்தப் பூமியின் காலடியில் நாம் அனைவரும் ஒரே குலம் என்று கூறித் தன் அன்பைக் கொடுத்தார். அன்பினால் உலகத்தை ஆளலாம் என்ற நல்ல தத்துவத்தை வாழ்ந்து காட்டியவர் இந்த அற்புத மனிதரே!

* நிறங்களால் எழுதிய கவிதைகள்
பச்சை வண்ணத்தின் எல்லாவகைப் பிரிவுகளிலும் அடங்கக்கூடிய கோடுகளால் ஆன பின்னணியில் தலை கவிழ்ந்திருக்கும் நங்கை ஒருத்தியின் சித்திரம், வசீகரமாக உள்ளது. நங்கையும் பச்சை வண்ணத்தில் காட்சியளிக்கிறாள். அவள் கூந்தல் நாலா பக்கமும் பறந்தபடி இருக்கிறது. நாலாபக்கமும் சுழன்று சுழன்று அலைபாயும் கூந்தல் கோடுகள் விரிந்த பின்னணியில் எங்கெங்கும் படர்ந்து நெளிவதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

* சவாலே சமாளி
என் பயணச்சீட்டும் அதிலேயே இருந்ததால் சங்கிலியைப் பிடித்திழுத்தும் வண்டி வெகுதூரம் வந்துவிட்டது. பணப்பை எங்குபோய் விழுந்ததோ தெரியாது. ஒரு நிமிடம் தவித்து போய் விட்டேன். பிறகு பயணச் சீட்டுப் பரிசோதகர் சமாதானம் கூறி, கவலைப்படாதீர்கள் என்றார்.

* தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா?
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியையே தமிழர் பயனுறுத்த வேண்டும் என்ற கொள்கையற்ற சூழ்நிலையில், பிறமொழிகளை வாழ்வுடன் இணைக்காமல் தமிழர் வாழ்வு முழுமை பெறாது என்ற பிறழ்ச்சிச் சிந்தனையாளரின் உள்ளீடுகள் சமூகத்தின் நச்சு வேராகியதால், தமிழைப் பாடமாகப் படித்தோர் தாழ்நிலையினர் என்ற கருத்துருவாக்கம்.

* வேலை தேடாதீர்கள் வேலை கொடுங்கள்
1960கள் வரை பட்டதாரிகள் குறைவாக இருந்தனர். எனவே பட்டப் படிப்பு முடித்த உடனேயே அவர்களுக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்து வந்தது. 1970களில் இது மாறியது. நிறையப் பேர் பட்டப் படிப்புப் படித்தனர். பட்டமேற்படிப்பும் படித்தனர். அப்போது பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாத நிலை. அச்சமயம் மத்திய, மாநில அரசுகளே அதிகபட்சமாக வேலைகளைக் கொடுத்து வந்தனர். மிகக் குறைந்த அளவிலேயே தொழில் துறை வளர்ச்சி இருந்துவந்தது.

* சிறிய தூண்டில் பெரிய மீன் : 2
நாம் போடும் திட்டம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அது பலன்களைப் பலமடங்கு அதிகமாகத் தர வேண்டும். ஓட்டப் பந்தய மைதானம். வண்ண வண்ண ஜிகினா கால்சட்டைகள். மேலே முண்டா பனியன். அவையும் வெவ்வேறு நிறங்களில். பல எண்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. ஓடத் தயாராய்க் குனிந்து ஒரு கால் முன் நீட்டிக் கவனமாய் வீரர்கள் இருக்கிறார்கள். போட்டியினை நடத்துபவர், “டுப்’ என்று சுடுகிறார். அனைவரும் உடனே ஓடத் தொடங்குகிறார்கள். ஓட்டம், பேய் ஓட்டம். இலக்கு, வெற்றிக் கோட்டை, ரிப்பனை நெஞ்சால் முட்ட வேண்டும்.

* வெற்றித் திருமகள் : அஞ்சலி அரோரா
வெற்றிக்கு, உடல் ஊனம் தடையேயில்லை என்று சொல்லும் அஞ்சலி அரோரா, பதினைந்து வயது வரை உலகைச் சாதாரணமாய்த்தான் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள், வைரஸ் காய்ச்சலில் கண் பார்வை பாதிக்கப்பட்டது. தாயும் தமக்கையும் உதவத் தன், குறைகளை ஏற்றுக்கொண்டார், தன் முன்பு வைக்கப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளப் புறப்பட்டார்

* ஒரு வாக்குமூலம்
காரணப் பெயர் கொண்டவன் கிருஷ்ணன் என்று ஊரிலே சொல்வதைக் கேட்டிருக்கிறான். அவன் பெற்றோர் இருவரும் சிறைச்சாலையில் இருந்தபோது பிறந்தவன் என்பதால், கிருஷ்ணன் என்பது, பொருத்தமான பெயர். சிறைச்சாலை சென்றது விடுதலை போராட்டத்தில் அல்ல. திருவிழா நடைபெற்ற ஊரில் ஒரு குழந்தையின் கழுத்துச் சங்கிலி சம்பந்தப் பட்ட தண்டனைதான்.

* மார்க்கெட்டிங் துறையில் பெருகும் வேலை வாய்ப்புகள்
இன்று சந்தையாக்கம் குறித்த பல்வேறு தகவல்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் மட்டுமே ஒரு நிறுவனம் இயங்கிய காலம் மாறி, தேசிய அளவிலும் உலகளாவிய அளவிலும் நிறுவனத்தின் இயக்கங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஒவ்வோர் இடத்திற்கும் தகுந்தவாறு தனது நடவடிக்கைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் விலை அடிப்படையில் மட்டும் பொருட்கள் தமக்குள் போட்டியிட்ட நிலையும் மாறி, பொருளின் இதர தன்மைகளை வாடிக்கை யாளர்கள் நோக்கத் தொடங்கியுள்ளனர்.

* பாடகி : வாமன கதை
இவளின் மனச் சோர்வைப் பார்த்து எனக்கு வியப்பாய் இருந்தது. கர்னாடக சங்கீதத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவள், வசுதா. சின்ன வயதில் கற்றுக் கொண்டும் இருக்கிறாள். பிறகு படிப்பு, வேலை என்று வழக்கமான காரணங்களால் தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால் சங்கீதம் கேட்காமல் அவளால் இயங்க முடியாது

* கலையுலகில் பொன்விழாவை நோக்கி மூன்றெழுத்து மன்னர்கள்
தமிழ் நாடக வரலாற்றில் மூன்றெழுத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக அண்மையில் பொன்விழா தாண்டி, மூன்று ஆண்டுகள் முடித்த ம.அ.அ. (யுனைட்டட் அமேச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்)யின் முத்திரை, தமிழ் நாட்டு ரசிகர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்த ஒன்று. இதன் நிறுவனர் ஒய்.ஜி.பி. (மூன்றெழுத்து)யின் குடும்பம், ஒரு மாபெரும் கலைக்குடும்பம்; இலக்கியக் குடும்பம்; கல்வி வளர்ச்சிக் குடும்பம். மூன்றெழுத்து மன்னர்களில் இன்னொருவர், ஏ.ஆர்.எஸ். என்று அறியப்படும் ஏ.ஆர். சீனிவாசன். பணிநிமித்தமாக அமால்க மேஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியான நல்ங்ங்க் – ஹ – ழ்ஹஹ் நிறுவனத்தின் மேலாளராக இவர், பல ஆண்டுகளாக உழைத்தாலும் நாடக, திரையுலக, சின்னத் திரையுலகங்களில் ஏ.ஆர்.எஸ். என்று சொன்னாலே எழுந்து நிற்கும் அளவுக்கு மதிப்பு ஈட்டியவர்.

* வேண்டும், சமுதாய அக்கறை
சரி. படிப்பு, பயிற்சி, பட்டறிவு… ஆகியவற்றைப் பெற்று விட்டீர்கள். சுயதொழில் புரிய முடிவு எடுத்துவிட்டீர்கள். தொடக்கத்தில் நட்டத்தை ஏற்கும் மனப்பக்குவம், விடா முயற்சி, தன்னம்பிக்கை, நாணயம் ஆகிய பண்புகளையும் கொண்டுள்ளீர்கள். வாருங்கள். நீங்கள் எந்தத் தொழிலிலும் கால்பதிக்கலாம். ஆனால், சற்றே சிந்தியுங்கள்.

ஃபையரிங் ஸ்பாட்

கே. தெய்வசிகாமணி

சமீபத்தில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ‘உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினார், டாக்டர் ஆர். ஸ்ரீதரன்.

எழுத்தாளர் சுஜாதா, கார்ட்டூனிஸ்ட் மதன், டைரக்டர் ரா. பார்த்திபன் ஆகியோர் வந்திருந்தனர்; வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

‘மனிதமே புனிதம்’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்த பார்த்திபன், ஜோக்ஸ் என்ற பெயரில் பேசியதில் அநாகரிகம் மேலோங்கி இருந்தது.

இதோ சாம்பிளுக்கு ஒன்று…

“த்ரிஷா ஒரு டாக்டரிடம் சென்று கேட்டாராம் – ‘டாக்டர், டாக்டர், என் மேனி அழகுக்கு சோப்புப் போட்டுக் குளிப்பதா, ஷாம்பூ போட்டுக் குளிப்பதா?’ என்று. அதற்கு டாக்டர் சொன்னாராம், ‘முதல்ல நீ தாழ்ப்பாள் போட்டுக் குளி.’ “

இது சினிமா சம்பந்தப்பட்ட விழா அல்ல. ஆஸ்துமா பற்றிய நிகழ்ச்சியில், சம்பந்தமே இல்லாத த்ரிஷாவைப் பற்றி, அவர் இல்லாத இடத்தில், தரக்குறைவாக ஜோக் அடிப்பதைத் தவிர, பார்த்திபனுக்கு கிரியேட்டிவ் ஐடியாவே கிடைக்கவில்லையா?

மதன் கூட இதே நிகழ்ச்சியில் மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். ஆனாலும் யார் மனமும் புண்படும்படி பேசவில்லை, தன்னைத்தானே கிண்டலடித்துக் கொண்டு பேசினார். அதில் கண்ணியமும், நாகரிகமும் மிளிர்ந்தன. ஆனால் பார்த்திபன் பேச்சு? மனித நேய மன்றம் நடத்திவரும் பார்த்திபனா இப்படி?

நன்றி: Kumudam Reporter

US Political World MAP 

US Political World MAP Posted by Hello

The word according to USA 

The word according to USA Posted by Hello

Neat Bag 

Neat Bag Posted by Hello