காலச்சுவடு – மே 2005


Kalachuvadu ::

* சிறுகதை: சாயம் போன வானம்
உருக்காண்டிதான் தகவல் சொன்னான். நம் தோட்டத்தில் யார் செத்தாலும் அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியவரும். உங்களைப் பற்றிச் சொல்லும்போது ஒன்றும் உணர்ச்சி இல்லை. ஏதோ பத்திரிகைச் செய்தி மாதிரி சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டான். வேறு யாராவது செத்திருந்தால் உச்சுக் கொட்டி வருத்தப்படுவான்.

* முரண்படும் மொழிபெயர்ப்புகள்
தவறான, முரண்பட்ட மொழிபெயர்ப்புகள் மூலநூல் படைப்பாளியின் படைப்புத் திறனை அங்கஹீ(கீ)னப்படுத்தி அவரைப் பற்றிக் குறைத்து மதிப்பிடும் விமரிசன சூழல் தோன்றுவதற்கு வழிவகை செய்துவிடும் அபாயம் உள்ளது.

* ஹாலிவுட் திரைப்படங்கள் சொல்லாத அரசியல்
வழமையாகவே ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்புகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமாகவும் அமெரிக்க விசுவாசத்தை ஊறவைப்பதாகவும் அமெரிக்காவின் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவதாகவுமே அமைந்துவருகின்றன.

* வாசகர் முற்றம்: படைப்பாளிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்

* குமுதம் தீராநதியின் இதழியல் திருட்டு
தனது பணியாளர் ஒருவர், காலச்சுவடுக்கு எதிரான, தனிப்பட்ட, வெறுப்பு சார்ந்த இலக்கிய அரசியல் நடத்துவதற்காக குமுதம் குழும இதழ்களைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதித்துவரும் குமுதம் நிர்வாகத்தின் இயலாமை பல முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.

* கருத்தரங்கு: புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
‘கடவு’ இலக்கிய அமைப்பும் ‘காலச்சுவடு அறக்கட்டளை’யும் இணைந்து மதுரையில் ‘புது யுகத்தில் தமிழ் நாவல்கள்’ என்ற கருத்தரங்கை நடத்தின. ஒரு வசதி கருதிக் கடந்த ஐந்தாண்டுகளில் (2000ஆம் முதல் 2004 முடிய) ஒருவர் எழுதிய ஒரு நாவல் மட்டும் என்கிற வரையறையுடன் நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

* அற்றைத் திங்கள்: கி. ராஜநாராயணன்
‘அற்றைத் திங்கள்’ என்னும் இத்தொடர் நிகழ்வுகளின் கால அவசியம் குறித்தும் அதன் மூலம் விரிவடையப்போகும் வாசகர் – படைப்பாளி உறவு பற்றியும் காலச்சுவடு ஆசிரியர் கண்ணனின் சுருக்கமான உரைக்குப் பின் கி.ரா. பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் சாரம் இது.

* கேரளமும் கண்ணகியும்
சிலப்பதிகாரம் கொண்டாடும் கண்ணகி வழிபாடு கேரளத்தில் இன்றும் விளங்கிவருகிறது. பல நாட்டுக் கதைப் பாடல்களும் மரபுகளும் வழங்கிவருகின்றன. கோயில்கள் போக மலைப் பகுதிகளில் பழங்குடிகளிடமும் அது தொடர்பான வழிபாடுகளும் காணப்படுகின்ற செய்தி ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

* இலங்கையின் கலைச் சூழல் குறித்த தீவிர வாசிப்பு
இலங்கையின் கலை, அதன் வரலாறு, கலைஞர்கள், நிகழ்வுகள் முதலியவற்றை ஆழமான, தீவிரமான பார்வையுடன் அலசும் முயற்சியாக வெளிவருகிறது அழ்ற்ப்ஹக்ஷ என்னும் ஆறுமாத இதழ்.

* விவாதம்: வகாபியிசம்: சில விளக்கங்கள்

* திறந்த வெளி: ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் கதை

* அஞ்சலி: சால் பெல்லோ (1915 – 2005)
அமெரிக்க யூத எழுத்தாளர்களில் ஐசாக் பாஷெவிஸ் சிங்கருக்கு நிகரான இடத்தைப் பெற்றது மட்டுமல்லாது நோபல் பரிசையும் பெற்றுச் சிறப்படைந்தவர் சால் பெல்லோ.

* அஞ்சலி: ஆலன் டண்டிஸ் (1934-2005)
கடந்த 30 ஆண்டுகளாக அனைத்துலக நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தில் தலைசிறந்த ஆய்வாளர் அவர் என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வர். உண்மையில் அவர் தனித்தன்மை வாய்ந்த ஆய்வாளர்; கல்வியாளர்; மனிதாபிமானி; ஒரு மறுமலர்ச்சியாளர்.

* அஞ்சலி: சி.டி. நரசிம்மையா (1920-2005)
தெலுங்கரான சி.டி. நரசிம்மையா மைசூரிலிருந்து உலகெங்கும் உள்ள அனைத்து இந்திய எழுத்தாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கினார்.

* அஞ்சலி: ஜெமினி கணேசன் (1920 – 2005)
சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர். இதைக் குறிப்பிட்டு, ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார்.

* அஞ்சலி: ஓ.வி. விஜயன் (1930-2005)
மலையாள நாவலின் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றில் மிக முக்கியமான இரண்டோ மூன்றோ எழுத்தாளர்களில் ஒருவர் ஓ.வி. விஜயன். ‘கஸôக்கின் இதிகாசம்’, ‘தர்மபுராணம்’ ஆகியவை உள்பட விஜயனின் படைப்புகள் மலையாளத்தில் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் போக்கையே மாற்றின.

* அஞ்சலி: ஆதி. குமணன் (1950 – 2005)
ஆதி. குமணன் உண்மை, நேர்மை, நியாயம் என்ற கொள்கைகளில் மிகப் பிடிவாதமாக இருந்தவர் என்பதால் பத்திரிகைப் பணியில் சிறந்தார் என்பதைவிட அவரிடம் இருந்த மனிதாபிமானமே அவரை எப்போதும் உயர்த்திக்காட்டியது.

* எழில்வரதன்: குலைவுகளின் சித்திரங்கள்
எந்த இதழிலும் பிரசுரம் காணாத பதினைந்து சிறுகதைகள் கொண்ட ‘ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு’ என்னும் முதல் தொகுப்பின் மூலம் வாசகர்களின் கவனத்தில் உடனடியாகப் பதிந்த புதிய இளந்தலைமுறைப் படைப்பாளி எழில்வரதன்.

* பிள்ளை கெடுத்தாள் விளையும் சந்தேகங்களைக் கொண்டாடும் எழுத்து முறையும்
கதைக்குள் ஓடும் காலம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு. அந்த நூற்றாண்டைச் சரியாக வாசித்தவர்கள் இந்தப் பிரதி கிறித்தவ மதத்திற்கு மாறிய அன்றைய தாழ்ந்த சாதியான ஒரு நாடார் பெண்ணின் கதை என்பதை எளிதாகப் புரிந்துகொள்வர்.

* பசித்த மானிடம்: நினைவுக் கிடங்கிலிருந்து வெளிச்சத்திற்கு
வாழ்க்கை யதார்த்தங்களை கரிச்சான் குஞ்சுவின் கலைப் பார்வை அணுகும் விதமே இந்நாவலை வேறுபடுத்திக் காட்டுகிறது. யதார்த்தத்தை ஒப்பனைகளற்ற அடையாளங்களுடன் முன்வைப்பதே அவருக்கு உவப்பானதாக இருக்கிறது.

* கவிதைகள்

* தேவதச்சன் கவிதைகள்: காணுலகும் வியனுலகும்
சொற்களுக்கு நாம் பொதுவில் புனைந்துகொண்டுள்ள அர்த்தங்களைக் கடந்து செல்கிறபோது நாம் நுழைந்துவிடக்கூடிய நமக்குப் பரிச்சயமில்லாத அர்த்தப் பரப்பில் இந்தக் கவிதைகள் புழங்குகின்றன. எனவே அநேகக் கவிதைகளும் நூறு சதவிகித வாசக கவனத்தைக் கோருபவை.

* நேர்காணல்: அமினாட்டா ஃபோர்னா
நாவல் எழுதும்போது அதன் அடிவானம் தெரிவதில்லை. அது எங்கே போகிறதோ அதன் பின்னால் போய் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். சிறுகதை அப்படி இல்லை. எங்கே போய் முடிய வேண்டும் என்று ஓர் ஊகம் இருக்கும். ஆகவே எது மிகச் சுருக்கமான பாதையோ அதைப் பிடித்துப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.

* இரண்டாவது அம்மா

* தலையங்கம்: இளகும் எல்லைகள்
இந்திய – பாகிஸ்தான் உறவில் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. கிரிக்கெட் தோல்வியை மறக்கடிக்கச் செய்வதாக இருந்தது மன்மோகன் சிங் – முஷரஃப் சந்திப்பு. வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள ஸ்ரீநகர் – முசாபராபாத் பேருந்துப் போக்குவரத்து இரு நாடுகளின் அரசியல் உறுதியை எடுத்துக்காட்டியது.

* தாழ்த்தப்பட்டோரும் மொழிப் போரும்
சாதி முகத்தை மறைத்துக்கொள்வதற்கான முகமூடியாகத் ‘தமிழன்’ என்ற அடையாளம் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. மறுபுறம் சாதியைக் கடப்பதற்கான வழிமுறையாகத் ‘தமிழன்’ என்ற அடையாளம் இன்னொரு தரப்பினரால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.