மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை


தினகரன் :: ராய்ப்பூர், ஏப். 28 – ராய்ப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது தேர்வில் காப்பி அடிப்பவர்களை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட – பறக்கும் படையினர் ஒரு வகுப்பிலிருந்த 35 பெண்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பரிசோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தார்களாம். ஒரு மணிநேரம் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கேடு கெட்ட செயல் சட்டீஸ்கர் மாநிலம் உமாரிய என்ற ஊரில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் ராஜேஷ் முனத் தெரிவித்தார்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.