Monthly Archives: மார்ச் 2005

தோல்விகள் – ஆண் – செல்வி

நன்றி: குமுதம்.காம்

கமல் — இரா. ரவிஷங்கர்

தமிழ் சினிமாவில் சில பரீட்சார்த்தமான முயற்சிகளை அவ்வப்போது மேற்கொள்கிறீர்கள். அந்த முயற்சிகள் மக்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாத சூழ்நிலையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

‘‘எதனால் எனக்கு சோகம் வரப்போகிறது? ‘என் கடமை’ முடிந்து எம்.ஜி.ஆருக்கு வராத சோகம், ‘உத்தமப் புத்திரன்’ முடிந்து சிவாஜி சாருக்கு வராத சோகம், ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’, ‘தாழம்பூ’ முடிந்து எம்.ஜி.ஆருக்கு வராத சோகம் எனக்கு ஏன் வரப்போகிறது. கமல்ஹாசனுக்கு ஏன் வரவேண்டும்?

‘பாசம்’ ஒரு நல்ல படம். காட்சிகள் _ கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். எம்.ஜி.ஆர் இறந்து போகிற மாதிரியாகக் காட்டியதால் படம் ஓடவில்லை என்றார்கள். படம் ஓடாததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். ஒரேயரு காரணத்தினால் எந்தப் படமும் ஓடாமல் போகாது.

அபார்ஷன் ஆனால் தாய்க்கு வருத்தம் இருக்காதா? பிறந்த குழந்தை இறந்து போனால் தாய்க்கு வருத்தம் இருக்காதா? அந்த வருத்தம் கலைஞனுக்கும் இருக்கலாம். அதுக்காக அந்த தாயை மலடாக விட முடியுமா? அடுத்து ஒரு காதல் வரும். அடுத்து ஒரு இரவு வரும். அடுத்து ஒரு கனிவு வரும். கணவருடன் இருக்கும் போது கரு வளரும். மறுபடியும் குழந்தை பிறக்கும்.

எங்கம்மாவை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஆனால் நான்குதான் தேறின. இரண்டாவது குழந்தை இறந்துபோனது. அவர்கள் அதோடு நிறுத்தவில்லை. கமல்ஹாசன் வரை பார்த்துவிட்டுத்தான் போனார்கள்.”

உங்களுடைய படங்களில் எவ்வளவு சீரியஸான கதையாக இருந்தாலும் சரி, காமெடியான கதையாக இருந்தாலும் கிளர்ச்சியூட்டக் கூடிய காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறதே? என்ன காரணம்?

‘‘நான் யாரைச் சொல்வேன். வாத்ஸ்யாயனரைச் சொல்வேனா. தி. ஜானகிராமனைச் சொல்வேனா. இந்திரா பார்த்தசாரதியை, சுஜாதாவை, ஜெயகாந்தனை, புஷ்பா தங்கதுரை இவர்களைச் சொல்வேனா சிவாஜியே ‘புதிய பறவையில்’ எச்சப்படுத்திவிட்டு வாயைத் துடைத்து கொள்வாரே அவரைச் சொல்வேனா. இல்லை, எம்.ஜி.ஆரைச் சொல்வேனா, ஜெமினி மாமாவைச் சொல்வேனா. நான் என்ன பண்ணுவேன் என்று நீங்களே சொல்லுங்கள்.

இதுபோக ஆங்கிலப் படங்கள் வேறு பார்க்கிறேன். மலையாளப் படத்தில் இருந்து டிரெய்ன் ஆகி வந்தவன் நான். அந்த யதார்த்தமும், நேர்மையும் இருக்கத்தான் செய்யும். அதில் இடக்கரடக்கல் சொல்வதில் அர்த்தமில்லை. இப்போது நான் சொல்வதே அடக்கி வாசிப்பதுதான்.”

சொந்த வாழ்க்கை குறித்து…

வீடு நன்றாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போகலாம். உள்ளே கொஞ்சம் தெரிந்தால், கூடத்தில் நான் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தால், சரி கொஞ்சம் சந்தோஷமான வீடு என்று தெரிந்து கொள்ளலாம். பூ, கால் தெரிந்தால் அன்று மட்டும் எல்லோரையும் வீட்டிற்குள்ளே விடுவார்கள். யாரும் தடை சொல்ல மாட்டார்கள். காரணம் ஒரு பிணம் கிடக்கும். அந்த நிலைமை இன்னும் வரவில்லை. அதனால வாசலோடு வந்து போய்விடலாம்.”


கே. பாக்யராஜ் : திரைக்கதையில வித்தியாசமாகக் காட்டலாம் என்பதற்கு ஒரு சீன். ஒரு வீட்டுல நாலஞ்சு குழந்தைங்க. வீட்டுல இருக்கிற ஒரு பொருளையும் விடாம போட்டு உடைச்சு விளையாடிக்கிட்டு இருப்பாங்க. வீட்டுக்குள்ளே வர்ற பாண்டியராஜன், ‘டேய் பசங்களா பார்த்துப்பா _ கை, கால்ல அடிபட்டுடாம’ன்னு சொல்வார். குழந்தைங்க பண்ற சேட்டைகளை கண்டிக்காம, அவங்களுக்கு ஒண்ணும் ஆகிட கூடாதுங்கிறதுலதான் அவர் கவனம் இருக்கும். ‘என்னடா மனுஷன் இப்படி இருக்கானே’ன்னு நாம நினைக்கும் போதுதான், ஒரு அம்மா வந்து, ‘ராஜாவை அவங்கப்பா கூப்பிடுறாரு’ன்னு சொல்வாங்க. இதே மாதிரி ஒவ்வொரு குழந்தைகளையும், அக்கம் பக்கத்து வீட்டுல உள்ளவங்க கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க. கடைசியில புருஷன், பெண்டாட்டி மட்டும் இருப்பாங்க. நமக்குன்னு குழந்தை இல்லையேன்னு மனைவி கண் கலங்குவாள். உடனே புருஷன், ‘உனக்கு நான் குழந்தை. எனக்கு நீ குழந்தை’ன்னு சொல்லி ஆறுதல் படுத்துவான்.

இதை கதையில… அந்த தம்பதிக்கு திருமணமாகி அஞ்சு வருஷமா குழந்தை இல்லைன்னு மூணு வரியில சிம்பிளாக எழுதிடுவாங்க. ஆனால் சினிமாவுல காட்டும்போது, சுவாரஸ்யமாக, உருக்கமாக சொல்ற மாதிரி சீன் வைக்கணும். இதுதான் திரைக்கதை.

‘மௌன கீதம்’ படத்துல எல்லோரும் எதிர்பார்க்கிற, நினைச்ச விஷயத்தைதான் காட்சியாக வச்சிருந்தேன். சரிதாவின் குழந்தையை ஒருத்தன் கடத்தி வச்சிருக்கிறதா போன் பண்ணுவான். ‘இந்த ஹோட்டலுக்கு நீ மட்டும் தனியாக வரணும்’னு சரிதாகிட்ட சொல்வான். சரிதாவும் அந்த இடத்துக்குத் தனியாகப் போவாங்க. இதைப் பார்க்கும் போதே, அந்தப் பொண்ணு தனியாக போறா… அவன் அவளை கற்பழிச்சிடுவான்னு நினைப்பாங்க. அதுக்கேத்த மாதிரி, சரிதா ஹோட்டல் ரூமுக்குள்ளே நுழைஞ்சதுமே கதவைப் பூட்டிடுவான். அவன் நம்மை கெடுக்கப் போறான்னு நினைச்சுக்கிட்டு, அந்தப் பொண்ணு ஒரு பாட்டிலை உடைச்சு பிடிச்சுக்குவாள். ‘நீ நெருங்கினால் என்னை நானே குத்திக்குவேன், இல்ல உன்னை குத்திடுவேன்’னு சொல்வாள். பல படங்களைப் பார்த்த பழக்கதோஷத்துல அடடா அடுத்து கற்பழிப்புதான் நடக்கப் போகுதுன்னு நமக்கு நினைக்கத் தோணும். இதே மூடுக்கு இந்தக் காட்சியைக் கொண்டுபோயிட்டு சின்னதா ட்விஸ்ட் வச்சிருப்பேன்.

அந்தப் பொண்ணு கையில பாட்டிலோடு மிரட்டும்போது, அவன் எதையும் கண்டுக்காம சிரிச்சபடியே தலையைக் கலைச்சு விட்டுக்குவான். இன் பண்ணின சட்டையை வெளியே எடுத்துவிடுவான். சட்டை பட்டன்களை கழற்றி விட்டுடுவான். அதைப் பார்க்கும்போது, ஒரு கற்பழிப்பு நடந்தால் எப்படி ஒரு சூழ்நிலை இருக்குமோ அதைக் கொண்டு வந்துடுவான். உடனே கூலாக, ‘நீ வந்து ரெண்டு நிமிஷத்துக்கும் மேலே ஆயிடுச்சு. ‘இந்தக் கோலத்துல நான் வெளியே போனாலே போதும். கற்பழிப்புதான் நடந்திருக்கும்னு யூகிச்சுப்பாங்க. அதனால நான் உன்னை ஒண்ணுமே பண்ணப் போறது இல்ல’ன்னு வெளியே போயிடுவான். இதுதான் இந்தக் காட்சியில புதுசு.


ஸ்னேஹா: ‘‘எம்.ஜி.ஆர். சார் மாதிரி ஆகணும்னு ஆசை. இன்னும் சொல்லணும்னா நான் ‘பொம்பளை எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படறேன். பொதுவாக ஜெயலலிதா மேடம் மாதிரியாகணும் என்ற ஆசையும் இருக்கு. அரசியல் திறமையை மட்டும் சொல்லலை. நிலையான மனநிலை, தெளிவான நடவடிக்கைன்னு கஷ்டமான சூழ்நிலைகளிலும் மிகத் தைரியமாக செயல்படுறாங்க. எவ்வளவு பிரச்னைகளை எதிர் கொண்டாலும் ரொம்ப நார்மலா இருக்காங்களே இது எப்படின்னு ஆச்சர்யப்படுவேன்.”

Rajinikanth with Nayan Dhaara & Jothikaa – P Vasu’…

Rajinikanth with Nayan Dhaara & Jothikaa – P Vasu’s Chandramuki
 Posted by Hello

Soma Valliappan 

Soma Valliappan Posted by Hello

Badri Seshadri 

Badri Seshadri Posted by Hello

Rajninikanth – P Vaasu’s Chandramukhi  

Rajninikanth – P Vaasu’s Chandramukhi
 Posted by Hello

(c) Vikadan – What Reliance Infocomm did to Long D…

(c) Vikadan – What Reliance Infocomm did to Long Distance Phone Connections from US/Canada to India? Posted by Hello

இலக்கிய எழுத்து

இணையத்தில் இலக்கியம் இருக்கிறது என்றும் இல்லை என்றும் எல்லோருக்கும் ஆளாளுக்கு எழுதுகிறோம். இல்லை என்போரிர்ன் வாதங்களைத் தகர்க்க, வலைப்பதிவுகளில் இலக்கியம் படைக்க ஆசையா? கீழ்க்கண்ட மூன்று வரிசைகளைப் பார்க்கவும்…

வரிசை 1 வரிசை 2 வரிசை 3
தட்டை ஊடகம் சாமானியன்
வரையறை இலக்கியம் பாமரன்
உணர்ச்சி தமிழ் ஊடுருவல்
கிளர்ச்சி தழும்பு மொழி
இலக்கு மொழிபெயர்ப்பு குரல்
தீவிரம் பெண்கள் கவிதை
நிதர்சனம் சமூகம் அறியாமை
குலைவு வரலாறு புலமை
குரல் நூல் மர்க்ஸியம்
மதச்சார்பின்மை படைப்பு அணுகுமுறை
தார்மிகம் பிம்பம் கட்டுரையாளர்

இவற்றை எப்படி வேண்டுமானாலும் கோர்த்து, ஒவ்வொரு வரிகளிலும் எங்காவது இடம்பிடிக்க வைக்கவும். காட்டாக முதல் வரிசையில் இருந்து ‘வரையறை’, இரண்டாவதில் இருந்து ‘பெண்கள்’, மூன்றாவதில் இருந்து ‘கவிதை’. நடுநடுவே ‘இல்’, எதிர்மறைவினைகளைத் தூவுதலும் அவசியம்.

க்வாலிடி இலக்கியம் ரெடி.

நினைத்ததை நடத்தும் ஆளுங்கட்சி

ஜனநாயகத்துக்கு அழகல்ல

நீரஜா சௌத்ரி : தமிழில்: ஆர்.நடராஜன்: பொது மக்கள் கருத்து என்பது பெரும்பாலும் சிறிய விஷயங்களைச் சுற்றித்தான் சுழல்கிறது. வெளியுறவுச் செயலரை எப்போது ராஜீவ் காந்தி பகிரங்கமாக பணி நீக்கம் செய்தாரோ அப்போதிருந்துதான் விஷயங்கள் தவறாகப் போகத் தொடங்கின. அது ஒரு சின்ன சம்பவம்தான் என்றாலும் அது அதிகார மமதை என்ற அற்ப குணத்தை வெளிப்படுத்தியதால் மக்கள் அதை எதிர்த்தனர். அதற்குப் பிறகுதான் போபர்ஸ் வந்தது.

சிபு சோரனை முதல்வர் பதவியில் அமர்த்திய ஜார்க்கண்ட் ஆளுநரின் நடவடிக்கை சின்ன விஷயமாகத் தோன்றினாலும், அது வெளிப்படுத்திய மனப்போக்கு மக்களின் ஆட்சேபத்துக்கு வழி கோலியது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதற்கு அதிக இடங்களைக் கொண்ட தனிப் பெரும் கட்சியை (பாஜக) அல்லது தனிப் பெரும் கூட்டணியை (தேஜகூ) அழைக்க வேண்டும் என்ற கோட்பாட்டை சயீத் சிப்தே ராஸி பின்பற்றவில்லை. 81 உறுப்பினர் கொண்ட பேரவையில் தங்களுக்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி 5 சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜக அவர் முன் அணிவகுத்துக் காட்டியதையும் அவர் புறக்கணித்துவிட்டார். யாரை விரும்புகிறாரோ அவரை பதவியில் அமர்த்த ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு என்றாலும் அது கடிவாளமற்ற அதிகாரம் அல்ல.

கோவாவைப் பின்தொடர்ந்து உடனே ஜார்க்கண்ட் நிகழ்ச்சிகள் நடந்தது இரண்டாவது காரணம். அங்கு பாரிக்கர் அரசைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் அதற்கு போதிய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லாததால் அந்த நடவடிக்கை அரைகுறையாக முடிந்தது. கோவா சட்டப் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த பேரவைத் தலைவர் மோசமாக நடந்துகொண்டார். இதனால் ஆளுநர் பேரவையைக் கலைத்தார். ஆனால் திடீரென காங்கிரஸின் பிரதாப் சிங் ரானேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க மனோகர் பாரிக்கருக்கு 2 நாள் மட்டுமே அவகாசம் தந்த அவர் ரானேவுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்தார்.

1970-80 களின் காங்கிரஸை இது நினைவுபடுத்தியது. பெரிய கட்சி என்ற தோரணையில் செயல்படும் காங்கிரஸ் மீண்டும் உருவாகிறதோ என்ற அச்சத்தை இது காங்கிரஸின் பிராந்திய கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு விரும்புவதை மற்ற மாநிலங்களின் ஆளுநர்களைச் செய்ய வைக்கும்போது, பிகாரிலும் ஏன் அதைச் செய்ய வைக்கக் கூடாது என்று வாதாடும் ஆவேச லாலு பிரசாத்தை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கு ஆட்சியமைக்க ராப்ரி தேவி உரிமை கோரியிருக்கிறார்.

படுதோல்வியில் முடிந்த இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் மிகவும் கவலைக்குரிய அம்சம், இவை வெளிப்படுத்தும் மனநிலைதான்.

கர்நாடக இசையும் பேனா மையில் காவியும்

நன்றி: Thinnai – Weekly Tamil Magazine


நேர்காணல் : வசந்த் — இகாரஸ் பிரகாஷ்: கர்நாடக இசை பற்றி விமர்சனம் எழுத, கர்நாடக இசை பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். இசை என்று மட்டுமல்ல. மற்ற எந்தத் துறைக்கும் இது பொருந்தும். ஆனால், சினிமாவில் இந்த இலக்கணம் கடைபிடிக்கப்படாது. கடந்த பத்தாண்டுகளில் தாங்கள் பார்த்த திரைப்படங்கள், தங்களுடைய புரிதல் நிலைகள் ஆகியவற்றை வைத்துத்தானே, திரைப்படங்களை மதிப்பீடு செய்கிறார்கள்? குறிப்பாக வெகுசன ஊடகங்களில். இவர்கள் போன்றவர்களால் தான் நல்ல திரைப்படங்களுக்கான இரசனை இன்னும் மேம்படாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். ரசிகர்கள், தங்களுடைய புரிதலைத் தாண்டி இன்னும் ஒருசில படிகள் மேலே ஏறி வரவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். பிற மொழிப்படம் என்றால் அது ஆலிவுட் படங்கள் மட்டுமல்ல. இத்தாலிய , ஈரானிய, ஐரோப்பிய திரைப்படங்கள் எத்தனையோ இருக்கின்றது. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா புத்தக வெளியீட்டு விழாவில், ஒரு இயக்குனர் மேடையில் பேசுகின்றார், “எங்களுக்கு எங்கஊர் குலதெய்வமே போதும், உலக சினிமாவெல்லாம் வேண்டாம் ” என்று.


குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன — நெருப்புநிலவன்: ஜெயமோகன் குமுதத்தில் தொடர் எழுதப் போகிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மு.கருணாநிதி அவர்கள் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது, அவரை விமர்சிப்பதற்கு அந்தத் தொடரின் தலைப்பை வைத்துக் கார்ட்டூன் போட்டுச் சீண்டியது குமுதம். அரசியலில் முதிர்ச்சியும், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வதில் பக்குவமும் பெற்ற கருணாநிதி அவர்கள் குமுதத்தில் எழுதி வந்தத் தொடரையே நிறுத்தி விட்டார். ஜெயலலிதா அவர்கள் குமுதத்தில் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றியும் குமுதம் ஏதோ விமர்சிக்க, அவரும் அவர் தொண்டர்கள் வர்ணிக்கிற தாய்மையின் முதிர்ச்சியுடன் தொடரை நிறுத்திவிட்டு வேறு வார இதழில் எழுதினார்.

எனவே, பிரபலமானவர்களை எழுத வைக்கும்போதெல்லாம், “நான் யாருக்கும் பயந்த ஆள் கிடையாது தெரியுமா” என்று உதார் விடுகிற முகமாகக் குமுதம் இத்தகையக் காரியங்களைச் செய்வதுண்டு. இப்படிச் செய்ய வேண்டிய ஈகோவின் உந்துதலோ வர்த்தக உத்திகளோ குமுதத்துக்கு இருக்கிறது என்று சொல்லலாம். இதைப் பத்திரிகைக்கேயுரிய தைரியம், சுதந்திரம் என்றெல்லாம் அவசரப்பட்டுப் பாராட்டி விடமுடியாது. குமுதத்தின் சமூக பிரக்ஞை கோடம்பாக்கத்துச் சுந்தரிகளின் முன்னழகுடனும், இடையழகுடனும், பின்னழகுடனும் நிறைவுற்று விடுவது ஆண்டாண்டு காலமாக அறியப்பட்ட ரகசியம்தானே.

ஜெயமோகனுக்குக் கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவம் ஜெயமோகனைப் பிடிக்காதவர்களுக்கு நிச்சயம் எரிச்சலூட்டும். ஜெயமோகனாவது சீண்டலைப் பொருட்படுத்தாமல், தொடரைக் குமுதத்தில் தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்பார்ப்போம். என்ன ஜெயமோகன் சம்பாதித்து வைத்திருக்கிற எதிரிகள் அவர் தொடரை எழுதமால் போனால், அவருக்கு முதிர்ச்சியில்லை என்று சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். எழுதினாலோ, “அரசு அப்படிச் சொல்லியும் குமுதத்தில் வெட்கம் கெட்டு எழுதியதன் மூலம் தன் பேனாவில் கலந்திருப்பது காவி நிறம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார்” என்று முற்போக்குக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவார்கள். எப்படியும் ஜெயமோகனுக்குத் திட்டுதான்.

ஒரு படைப்பாளி என்ன கொள்கை வைத்திருக்கிறார், எந்தக் கட்சி சார்பு கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் படைப்பைப் படிக்கும்போது கவனத்தில் யாரும் கொள்வாரென்றால், அது படிப்பவரின் குறையே. ஓர் படைப்பாளியை அவர் சொல்கிற கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவா இல்லையா என்பதைவிட, படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமை, வீச்சு, கலைத்திறன் என்று பிறவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடுவது சரியான காரியமாக இருக்கும். அந்தக் காரணத்தினாலேயே, ஜெயகாந்தன் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடையவராகவும், பின்னாளில் காங்கிரஸ் கட்சி சார்புடையவராகவும் ஆகியிருந்தபோதிலும், இலக்கிய விமர்சகர்கள் யாரும் அவர் பேனாவில் சிவப்பு மையோ, காவி-வெள்ளை-பச்சை கலந்த மையோ வழிவது பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. அரசியல் ஆர்வமுடைய – எல்லாவற்றிலும் தங்கள் கொள்கைகள் இல்லாவிட்டால் நிராகரித்துவிடுகிற – கத்துக்குட்டிகள் அப்படி ஏதும் கத்தியிருக்கலாம்.

me balaji 

me balaji Posted by Hello